Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கொஞ்ச நேரம் நம் கனடிய பாராளுமன்றில் அப்படி என்ன தான் நடக்கிறது எனப் பார்த்தால் மெய் சிலிர்த்து விடுவீர்கள். அவ்வளவு நகைச்சுவையான விவாதங்கள் அவ்வப்போது நடைபெறும், சமீப காலமாகவே அமெரிக்காவின் தொலைக்காட்சி நிலையமொன்றில் ஆத்மா இல்லாமல் உலவும் உடல்கள் மனிதர்களைத் தாக்குவது போலவும் , இதனால் அமெரிக்க செய்தி ஒலிபரப்புத் துறையே சேதமடைந்தது போன்ற யூகங்களையும் வெளியிட்டது அமெரிக்க ஊடகங்கள் சில. இதனை மையமாக வைத்து அமெரிக்காவிலிருந்து ஆவிகள் கனடா வராமல் தடுக்க எல்லைப் பாதுகாப்பில் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பெயர்டிடம் என்.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் பட் மார்ட்டின் கேட்க அவை முழுவதும் சிரிப்பொலி தான். அதற்கு ஜான் பெயர்ட் என்ன பதில்…

  2. அமெரிக்காவில் ஒரு பூனை ஹாலிவுட் பிரபலங்களை விட பல மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளது. ஆச்சரியமாக இருக்கின்றதா?? அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த தபதா பன்டென்சன் என்பவர், ஹோட்டலில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகின்றார். அவர் வளர்ச்சி குறைபாடுள்ள பூனை ஒன்றை தத்தெடுத்தார். டார்டர் சாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பூனையை வீடியோ எடுத்து அவர் யூ டியூப்பில் 2012ம் ஆண்டு வெளியிட்டார். அதில் இருந்து அந்த பூனை மிகவும் பிரபலம் ஆகிவிட்டது. பார்க்க உர்ரென முகத்தை வைத்து இருப்பது போன்று தெரியம் அந்த பூனை விளம்பரங்கள், புத்தகங்கள், ஏன் ஒரு படத்தில் கூட நடித்துவிட்டது. Grumpy Cat's Worst Christmas Ever என்ற இந்த ஹாலிவுட் படம் வெளியான போது அதிகளவில் டுவிட் செய்யப்பட்டதாம். …

  3. நடிப்பில் மட்டுமல்லாது, எட்டு முறை தி‌ருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஹாலிவுட்டின் குயின் என்று வர்ணிக்கப்படும் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. அமெரிக்க-பிரிட்டிஷ் தம்பதியரான பிரான்சிஸ் லென் டெய்லருக்கும், சாராவுக்கும் 1932ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி மகளாக பிறந்தவர் எலிசபெத் டெய்லர். 1942ம் ஆண்டு முதல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய எலிசபெத், "நேஷனல் வெல்வெட்", "கிளியோபேட்ரா", "பட்டர்பீல்ட் 8" உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 12 வயதில் அவர் நடித்த நேஷனல் வெல்வெட் என்ற படம் அவருக்கு மிகப் பெரிய அந்தஸ்தைத் தேடிக் கொடுத்தது. கிளியோபாட்ரா படம் எலிசபெத்தை புகழேணியின் உச்சியில் அமர வைத்தது. ஹாலிவுட்டின் புகழ் பெற்ற கலைஞர்கள் …

    • 10 replies
    • 1.3k views
  4. ஹாலோவின் திருவிழாவையொட்டி இங்கிலாந்து நாட்டிலுள்ள எஸ்செக்ஸ் பகுதியில் விதவிதமான பூசணிக்காய்கள் தயார் நிலையில் உள்ளன. கெட்ட ஆவிகளை விரட்டியடிக்கும் திருவிழாவாக கருதப்படும் ஹாலோவின் எனும் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது பல்வேறு வகையான மாறுவேட போட்டிகளில் கலந்துகொள்வது, மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது உள்ளிட்ட நிகழ்வுகளில் மக்கள் ஈடுபடுவர். இவ்விழாவிற்காக பல்வேறு அளவுகளில் பூசணிக்காய்கள் தற்போது தயார் ஆகிவருகின்றன. கடந்த ஆண்டு ஹாலோவினின்போது சாம்பல் நிற கிரவுன் பிரின்ஸ் பூசணிக்காய் ட்ரெண்டிங்காக இருந்தது. இந்த ஆண்டு வண்ணம் தீட்டப்பட்ட பூசணிக்காய் ட்ரெண்டிங்காக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. …

    • 5 replies
    • 717 views
  5. ஹிட்லர் - மர்மங்களின் புதையல்! ஹிட்லர் என்ற தனிமனிதனை ஆராய்வது சுவாரசியமானது. காரணம், ஹிட்லரைச் சுற்றி இப்படி பல சர்ச்சைகள் சூழ்ந்திருப்பதால் தான். இந்தக் கட்டுரையை ஆடியோவில் கேட்க 00:00 00:00 வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் Advertisement: 0:15 Close Player 'மகனே. இதுவரை உன் தந்தை யார் என்று ஒருபோதும் உன்னிடத்தில் நான் சொல்லியது இல்லை. மரணப்படுக்கையில் இருக்கும் நான் இன்று ஒரு உண்மையை உனக்கு சொல்கிறேன். எனது இளமை காலத்தில் ஒர…

  6. யாழ் ஜெர்மன்வாசிகளே, உங்கள் நாட்டின் முதுபெரும் புகழ்பெற்ற தலைவர் ஹிட்லர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொள்ளவில்லையாம்..! அவர் தனது 95ம் வயதில் இயற்கையாக மரணமடைந்ததாக செய்திகள் தற்பொழுது உலா வருகின்றது.. பெர்லின்: 2ம் உலகப் போரின் இறுதியில், 1945ம் ஆண்டு பெர்லின் பாதாள அறைக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ஹிட்லர் செத்துப் போனார் என்பதுதான் இதுவரை நாம் வரலாறாக படித்து வந்தது.. ஆனால் ஹிட்லர் சாகவில்லை, தப்பிப் போய் விட்டார்.. 1984ம் ஆண்டு வரை அவர் உயிர் வாழ்ந்தார். தனது 95வது வயதில்தான் இயற்கையாக அவர் மரணமடைந்தார் என்று ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் ஒரு நூலாசிரியர். ஹிட்லர் தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தை பிரேசிலில் கழித்தார் என்று கூ…

  7. இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகள் பயன்படுத்திய பதுங்கு குழி ஒன்று தற்போது சொகுசு ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க்கின் செயின்ட் பாலி மாவட்டத்தில் உள்ள ஹோச்பங்கர் என்ற இடத்தை பதுங்கு குழிகளாக நாஜி படையினர் பயன்படுத்தி வந்தனர். கடந்த 1942ம் ஆண்டு 300 நாட்களில் கட்டப்பட்ட இந்த பிரமாண்டமான பதுங்கு குழி நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தப் பதுங்கு குழி தொலைக்காட்சி நிலையம், பிற வணிக வளாகமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் என் ஹெச் ஹோட்டல் என்ற குழுமம் இந்த இடத்தை வாங்கி அங்கு மிகவும் ஆடம்பரமான ஹோட்டலைக் கட்டி வருகிறது. 136 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் தங்குவ…

    • 0 replies
    • 572 views
  8. கொசோவோ நாட்டில் ஜேர்மனின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லரை போலவே நபர் ஒருவர் வசிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜேர்மனியில் தனது சர்வாதிகார ஆதிக்கத்தை நிலைநாட்டி, உலகையே ஸ்தம்பிக்க வைத்த ஒரு மாபெறும் கொடூர தலைவர் ஹிட்லர். இவரை போலவே கொசோவோ நாட்டில் மிட்ரோவிகா(Mitrovica) நகரில் இமின் ட்ஜினொவ்சி(Emin Djinovci Age-49)என்ற நபர் வசித்து வருகிறார். அந்நாட்டு மக்கள் எல்லோரும் இவரை ‘கொசோவோ ஹிட்லர்’(Kosovo Hitler)என்று அழைக்கிறார்கள். ஏனெனில் இவர் தலை முடி, மீசை, நடை, உடை, பாவனை எல்லாமே ஹிட்லரைப் போலவே செய்துகொண்டு வலம் வருகிறார். கடந்த 1998ம் ஆண்டு ஜேர்மனியிலிருந்து கோசோவோவுக்கு சென்ற இவர், செர்பியாவுடன் நடந்த யுத்தத்தில் பங்கேற்றார். அப்போது போரினால் ஏற்பட்ட பலத…

  9. ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் முதலை உயிரிழப்பு! இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் 84 வயதான முதலை ரஷ்யாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சார்ட்டன் என்று பெயரிடப்பட்ட குறித்த முதலை 1936ஆம் ஆண்டு மிசிசிப்பியில் இருந்து ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் தலைநகர் பெர்லினில் வளர்க்கப்பட்டு வந்த குறித்த முதலை உலகப்போருக்குப் பின் ஹிட்லர் உயிரிழந்ததால் அங்கிருந்து 1946ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும் குறித்த முதலையை ஹிட்லர் வளர்த்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ரஷ்யா கூறிவந்தது. இந்தநிலையில் குறித்த முதலை மொஸ்கோவில் நீண்ட காலமாக வளர்க்கப்பட்டு வந்தது. ஹிட்லர் உயிரிழந்து 75 வ…

  10. (படம் முகநூலில் இருந்து பெறப்பட்டது. செய்தியின் உண்மைத் தன்மைக்கு உறுதியான ஆதாரம் கிட்டவில்லை. கிட்டியதும் இணைக்கப்படும்.)

  11. ஹிருனிக்காவை... கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே அவருக்கு எதிராக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ஹிருனிக்காவை-கைது-செய்யு/

  12. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி, ஹிலாரி கிளின்டன் பார்ப்பதற்கு, அமைதியானவராக தெரிந்தாலும், அவருக்குள் ஒரு மிருகம் உறங்கி கொண்டிருப்பது, சமீபத்தில், ரோஜர் ஸ்டோன் மற்றும் ராபட் மாரோ இணைந்து எழுதிய, 'தி கிளின்டன்ஸ் வார் ஆன் விமன்' என்ற புத்தகம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹிலாரி, பயங்கர கோபக்காரர்; கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், ஊழியர்களை அடி, பின்னி எடுத்து விடுவார். இவரது அடி, உதைக்கு, பில் கிளிண்டன் கூட தப்பியது இல்லை என்றும், பலமுறை, கிளின்டனை அறைக்குள் விட்டு, கதவை சாத்தி, கும்மி எடுத்துள்ளதாக இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், மோனிகா லெவின்ஸ்கி விஷயத்தில் கிளின்டன் சிக்கியபோது, ஹிலாரியின் கோபம், உச்சக்கட்டத்தை அடைந்ததாக…

  13. வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ேபாட்டியிடும் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி லெஸ்பியன் என்று ஒரு பிரச்சாரம் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. ஆனால், இதை ஹிலாரி மறுத்துள்ளார். ஹிலாரிக்கும் அவரது உதவியாளரான ஹூமா அபுதினுக்கும் இடையே லெஸ்பியன் உறவு இருப்பதாக வதந்தி பரவியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹிலாரி, என்னைப் பற்றி என்னென்னவோ புரளியை பரப்புகிறார்கள். உண்மையைச் சொன்னால் அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் லெஸ்பியன் என்று சொல்லப்படுவதில் உண்மையும் இல்லை. ஆனால், அப்படிச் சொல்பவர்களை என்னால் கட்டுப்படுத்தவும் முடியாது. எப்போதும் ஹிலாரியுடனேயே இருக்கும் ஹூமா பற்றி பல்வேறு கதைகள் உலா வருகின்றன. அவர் லெபனானைச் சேர்ந்தவர், ஜோர்ட…

  14. ஹெயிட்டியில் ஏற்பட்ட நில அதிர்வில் சிங்கள இராணுவத்தில் பலர் பலியாகியுள்ளனர் அவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலதிக செய்திகள் விரைவில்.... http://tamilskynews.org/index.php?option=com_content&view=article&id=365:-1000-&catid=34:2009-11-28-06-27-40&Itemid=100#JOSC_TOP

  15. ஹெரோயின் பாவித்­து­விட்டு வெளி­நாட்டு பெண்­க­ளுக்கு தமது நிர்­வா­ணத்தை காண்­பித்து கீழ்த்­த­ர­மாக நடந்து கொண்ட 25 வயது நப­ரொ­ரு­வரை பெந் தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெந்­தோட்டை சுற்­றுலா பகு­தி­யி­லுள்ள கடற்­கரைப் பிர­தேத்தில் வெளி­நாட்டு பெண்கள் நட­மா­டும்@­பாது தமது நிர்­வா­ணத்தை காண்­பிப்­ப­தனை வழக்­க­மாகக் கொண்­டுள்ள இந்த நபர் பெந்@­தாட்ட அல­வத்­து­கொட பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ராவார். வெளி­நாட்டுப் பெண்­ணொ­ருவர் பெந்­தொட்ட பொலிஸ் நிலை­யத்தில் எழுத்­து­மூல முறைப்­பாட்­டைய டுத்து மேற்­கொண்ட தேடு­தலில் 2 கிராம் 180 மிலி கிராம் ஹெரோ­யி­னுடன் இந்த நபர் கைது கைது செய்­யப்­பட்டார். சுந்­தேக நபரை பெந்­தொட்ட பொலிஸார் பல­பிட்­டிய நீதவான் நீதி­மன்ற நீதி­பதி எம்.…

  16. ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது! திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை-மட்கோ,மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கதக்க துலாஸ் மதுசங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் …

  17. ஹெலிகொப்டர் சத்தம் கேட்டு ஓரே நேரத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபட்ட 3000 முதலைகள்! அவுஸ்திரேலியாவில் உள்ள முதலைப் பண்ணையில், ஹெலிகொப்டரின் சத்தத்தைக் கேட்டு சுமார் 3000 முதலைகள் ஒரே நேரத்தில் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் அமைந்துள்ள ‘கூரானா’ முதலை பண்ணையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப் பண்ணையில் ஏறத்தாழ 3,000 முதலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் இப்பண்ணைக்கு மேலே கொஞ்சம் தாழ்வாக ஹெலிகொப்டர் ஒன்று பறந்து சென்றுள்ளது. இச்சத்தத்தைக் கேட்ட சிலநொடிகளுக்குள்ளேயே ஆயிரக்கணக்கான முதலைகள் இனச்சேர்க்கையில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. இதனைப் ப…

  18. ஹேற்றியில்(In Haiti) ...........

  19. பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆபாசமாக நடனம் ஆடுவது, ஒரு சி.டியில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு தொட்டப்பள்ளாபூர் அருகே நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கர்நாடக ரக்சன வேதிகே தலைவர்கள் மூலம், புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆபாசமாக நடனமாடுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமையன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ, அனைத்து தொலைகாட்சி சேனலிலும் வெளியானதை அடுத்து, சர்ச்சையில் சிக்கியுள்ள எஸ்.ஆர் ரேசார்டின் உரிமையாளர்கள், இச்சம்பவம் சுமார் 4 வருடங்களுக்கு முன்பு நடந்ததாகவும், இதுதொடர்பாக ஏற்க…

  20. வாஷிங்டன்: லாஸ் வேகாஸில் தான் தங்கியிருக்கும் அறையில் விருந்து கொடுத்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இங்கிலாந்து இளவரசர் ஹாரி(27) ஓய்வெடுப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் வேகாஸிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு பார்ட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்து வருகிறார். ஏற்கனவே எம்.ஜி.எம். கிராண்ட் ஹோட்டல் கொடுத்த வெட் ரிபப்ளிக் என்னும் மது விருந்தில் கலந்து கொண்ட அவரை பிகினி அணிந்த இளம் பெண்கள் சூழ்ந்தனர். இந்நிலையில் வேகாஸில் பெரிய ஹோட்டலில் தங்கியுள்ள ஹாரி அங்குள்ள பாருக்கு சென்று இளம் பெண்களை தனது விஐபி அறைக்கு அழைத்துள்ளார். அவர்கள் அறையை அடைந்ததும் அனைவரும் ஆடைகளைக் கழைந்துவிட்டு நிர்வாணமாக ஆட்டம் போட்டுள்…

  21. ஹோண்டுராஸ் நாட்டில் வனப்பகுதியில் நிலதிற்கு அடியில் புதைந்த நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் மஸ்கியூடியா என்ற பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு பழங்கால நகரம் ஒன்று மண்ணுக்குள் புகுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘லிடார்’ என்ற அதிநவீன முறையில் விண்ணில் இருந்து கதிர்வீச்சுகளை பாய்ச்சி அந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 1000வது ஆண்டு முதல் 1400 ஆண்டு வரை இருந்திருக்க வேண்டும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு மண்ணுக்குள் புதைந்த பிரமிடுகளும், அதில் புதைக்கப்பட்டவர்களின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த நகரத்தில் மனிதர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்திருக்கின்றனர் என நிபுணர்கள் தெர…

  22. கர்நாடக மாநிலத்தில் தலைமை மடாதிபதி தற்கொலை செய்த மனவேதனை தாங்காமல், 3 இளைய மடாதிபதிகள் இன்று யாக குண்டம் தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் பழமையான சவ்லி மடம் உள்ளது. இது ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர்களின் மடம். தலைமை மாடதிபதியாக கணேஷ் அவதூத மகாசுவாமி இருந்தார். இளைய மடாதிபதியாக இருந்த ஜீவானந்த சுவாமி கடந்த ஜனவரி மாதம் மடத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாடதிபதி தான் அவரை கொலை செய்துவிட்டார் என்று பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மறுப்பு தெரிவித்தும் பக்தர்கள் ஏற்கவில்லை. இதனால் மனம் உடைந்த தலைமை மடாதிபதி, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு …

  23. ஶ்ரீலங்கா இனப்படுகொலை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கையெழுத்து வேட்டை-லண்டனில்நடந்த விளக்க கலந்துரையாடல் ஶ்ரீலங்கா அரசினை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தினை தீவிரப்படுத்தும் பொருட்டு லண்டன் ஈஸ்தாம் பகுதியில் அணைத்து மக்களும் கலந்துகொண்ட பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது இதில் மெருமளவான மக்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒழுங்குபடுத்திய் இக்கூட்டதில் ஶ்ரீலங்கா அரசின் இனப்படுகொலையை உலக அரங்கில் எடுத்துரைத்து தமிழீழ மக்களுக்கு நீதியை பெற்றுக்கொள்ளும் ஒரு அங்கமாக பத்து லட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டுள்ள கையெழுத்து இயக்கம் தொடர்பிலும் மற்றம் நடந்து முடிந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக…

    • 0 replies
    • 385 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.