செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொசு, உண்ணி போன்ற பிற பூச்சிகளைப் போல் கரப்பான் பூச்சிகள் நோய்களைப் பரப்புவதில்லை. நமது ரத்தத்தைக் குடிப்பதோ, உடலிலுள்ள தோலைச் சாப்பிடுவதோ கிடையாது. கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கரப்பான் பூச்சிகள். நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு அதனுடனான முதல் அனுபவம், மறக்கமுடியாத, கிட்டத்தட்ட மோசமான அனுபவமாகவே இருந்திருக்கும். எனக்கும் அது மோசமாகவே இருந்தது. அப்போது எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கும். வீட்டின் சமையலறையில் இருந்த எதோவொரு பொருளை எடுத்தபோது, அதற்கு…
-
- 0 replies
- 412 views
- 1 follower
-
-
மீண்டும் ஒருமுறை கூட்டுப் பாலியல் வன்முறை நடந்திருக்கிறது. இம்முறை பரிசில் உள்ள ஈபிள் கோபுரத்துக்கு அருகே அமைந்துள்ள பூங்காவில் அது நடந்திருக்கிறது. Marsfeld என்றும் அழைக்கப்படும் Parc Champ de Mars இல், மெக்சிக்கோ நாட்டுச் சுற்றுலாப் பயணி (27) ஒருவரை, சிலர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு ஆண்களைத் தாங்கள் கைது செய்ததாக பொலிஸார் அறிவித்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண், நள்ளிரவு 1 மணியளவில் மது அருந்திவிட்டு பூங்கா வழியாக நடந்து கொண்டிருந்தபோது, ஐந்து பேர் திடீரென அவளைத் தாக்கி, பின்னர் பாலியல் வன்புணர்வு செய்ததாக பாரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்திருக்கிறது. கூட்டுப் பலாத்காரம் …
-
- 0 replies
- 273 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் எப்படி வாழ்வது என்று யூட்யூப் வீடியோக்களை அவர்கள் பார்த்திருந்ததாக அவர்களின் சகோதரி ஜாரா தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். 29 ஜூலை 2023, 08:11 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்திற்கு உட்பட்ட ஸ்பிர்ங்ஸ் பகுதியில் வாழ்ந்த ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு வாழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் புறவாழ்வைக் கைவிட்டு காட்டுக்குள் வாழ முயன்று உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தொலைதூர மலைப் பிரதேசத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
பெண்கள் குளிப்பதை CCTV மற்றும் Drone மூலம் படமெடுக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடையில் உள்ள பொது நீரோடையை மறித்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைச்சர் ஒருவரின் ஆதரவில் இடம்பெறும் மீன் வளர்ப்பு திட்டத்தினை இரா. சாணக்கியன் பார்வையிட்டார். மிகவும் வெக்கக் கேடான விடையம் அங்குள்ளவர்கள் Drone கமரா மூலம் அவ் ஊர் மக்கள் குளிப்பதை வீடியோ வேறு எடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் மக்களால் முன்வைக்கப்பட்டது. காணிக்கொள்ளை, மணல் கொள்ளைகளை தொடர்ந்து இவ்வாறான ஈனமான செயல்களிலும் ஆளும் நாடளுமன்ற உறுப்பினர்களின் கட்சியை சேர்ந்த சகாக்கள் ஈடுபடுவது வெளிச்சத்துக்கு வந்த…
-
- 0 replies
- 129 views
-
-
தந்தை மற்றும் மாமனார் இணைந்து 7 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் : மட்டக்களப்பில் சம்பவம் மட்டக்களப்பில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவரை கைது செய்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தாயார் கடந்த 3 மாத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் தந்தையாருடன் வாழ்ந்து வந்த சிறுமியை 49 வயதுடைய தந்தையும் 52 வயதுடைய மாமனாரும் இணைந்து கூட்டாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கிறனர். இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இருவரையம் எதிர்வரும் 27 ம் திகதி…
-
- 4 replies
- 795 views
-
-
பெண்களுக்கு பாதுகாப்பான நாடு கைலாசா - ரஞ்சிதா தகவல் . சென்னை: பிரபல சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, தனக்கென்று தனியாக ஓரு நாட்டை உருவாக்கிக்கொண்டு தனது சீடர்களுடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவரின் முதன்மை சீடரான ரஞ்சிதா குறித்து சோஷியல் மீடியாக்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் கைலாசா என்று ரஞ்சிதா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நித்யாநந்தா சிக்காத சர்ச்சைகளே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சலசலப்பில் சிக்கியிருந்த நித்யாநத்தா சமீபத்தில் கைலாசா என புதியதாக ஒரு நாட்டை உருவாக்கி அதில் குடியேறிவிட்டதாக கூறி வருகிறார். தமிழக காவல்துறை அவரை வலைவீசி தேடி( ?…
-
- 0 replies
- 271 views
-
-
இந்தியா மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்தேவ். இவருடைய மனைவி, சதி. இவர்களுக்கு 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும் 7 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இவர்கள் செல்போன் மூலம் வீடியோக்களைப் பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் வெளியிடக்கூடியவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்காக விலை உயர்ந்த வகையிலான ஐபோனை வாங்க பணம் இல்லாததால் தன்னுடைய ஆண் குழந்தையை விற்றுள்ளனர். அந்தப் பணத்தின் மூலம் ஐபோனை வாங்கியுள்ளனர். இதற்கிடையே, அவர்கள் வீட்டில் அந்தக் குழந்தையைக் காணாது அக்கம்பக்கதினர் விசாரித்து உள்ளனர். அதற்கு பெற்றோர் இருவரும், “குழந்தை உறவினர் வீட்டில் உள்ளது” எனக் கூறியுள்ளனர். குழந்தையை வேறு ஏதாவது செய்திருக்கலாம் எனச் சந்தேகமடைந…
-
- 1 reply
- 251 views
- 1 follower
-
-
வாழ்க்கைச் செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 7 ஆவது இடத்தில் உள்ளது. 139 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இணையத்தளமொன்றினால் இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு மிகவும் குறைந்த நாடாக பாகிஸ்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. வாழ்கைச் செலவு மிகவும் அதிகரித்த நாடாக சுவிட்ஸர்லாந்து பதிவாகியுள்ளது. https://thinakkural.lk/article/265691
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
வல்வெட்டித்துறையில் அடுத்தடுத்து 5 முதலைகள் பிடிபட்டன யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்த நிலையிலேயே நேற்றைய தினம் குறித்த முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஆற்று நீரேரியில் 4 முதலைகளும் கொம்மந்தறை பகுதியில் உள்ள நீர் சகதியில் ஒரு முதலையும் பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1342097
-
- 0 replies
- 280 views
-
-
யாழில் சிலுவையை உடைத்த இளைஞர் கைது! யாழ் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் (புதன்கிழமை) கைதுசெய்துள்ளனர். குறித்த இளைஞர் மது போதையில் இருந்த நிலையிலேயே இவ்வாறு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த பொலிஸார் குறித்த இளைஞரைக் கைது செய்துள்ளதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1341855
-
- 3 replies
- 659 views
-
-
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியும் காதல் மலருமா? என கேட்கும் வகையில் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் இமானுவேலாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடன், திருடன் என கத்தினார். ஆனாலும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார். இந்நிலையில் செல்போனை பறித்த வாலிபர் அதை எடுத்து பார்த்த போது, அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை பார்த்தார். இவ்வளவு அழகான பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டோமே என வருந்திய அவர், இமானுவேலாவை நேரில் சந்தித்து அவர…
-
- 3 replies
- 318 views
- 1 follower
-
-
இலங்கை வந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் நடிகர் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வழியாக வேறு நாட்டிற்கு செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் பல மணி நேரம் செலவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கை வழியாகமாலைதீவிற்குச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. https://athavannews.com/2023/1339529
-
- 19 replies
- 1.8k views
-
-
யாழில் மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள் யாழ்ப்பாணம், அச்சுவேலி, வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத இருவர் மண்ணெண்ணெய் ஊற்றிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது அப்பகுதியிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த இருவரும் அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1341818
-
- 0 replies
- 477 views
-
-
சிறிய தந்தையால் சிறுமி துஷ்பிரயோகம் சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், இரண்டாவது தடவையாக திருமணம் செய்து கொண்டு தனது முதல் தாரத்தின் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அப் பெண்ணின் இரண்டாவது கணவர், 13 வயதான அப்பெண்ணின் மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேல…
-
- 0 replies
- 315 views
-
-
நாய் கூண்டில் நாய்களுடன் 6 பிள்ளைகளை அடைத்து வைத்திருந்த பெற்றோர்! நாய்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் 6 பிள்ளைகளை அடைத்து வைத்து பெற்றோர் சித்திரவதை செய்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், தாம் பெற்ற பிள்ளைகளையே சித்திரவதை செய்த குற்றத்திற்காக டிராவிஸ் டாஸ் (31) மற்றும் அவர் மனைவி அமண்டா ஸ்டாம்பர் (33) ஆகிய இருவரை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். 2 வயது முதல் 11 வயது வரையுள்ள 6 குழந்தைகளுக்கு பெற்றோரான குறித்த இருவரும் தமது பிள்ளைகளை நீண்ட நாட்களாகத் தாக்கி வந்துள்ளதோடு அவர்களுக்கு உணவளிக்காமல் நாய் கூண்டுகளில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வந்துள…
-
- 0 replies
- 164 views
-
-
20 JUL, 2023 | 03:45 PM ஜேர்மனி தலைநகரில் சிங்கமொன்று அலைந்து திரிவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். பேர்ளினின் தென்மேற்கு புறநகர் பகுதியில் பெண்சிங்கமொன்று காணப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள காட்டுப்பகுதியிலிருந்து சிங்கமொன்று மக்கள் குடியிருப்பிற்குள் வந்துள்ளதை காண்பிக்கும் படம் இன்று டுவிட்டரில் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து அதனை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் பொதுமக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு எச்சரித்துள்ளனர். எனினும் உள்ளுர் மிருகக்காட்சி சாலைகளும் சரணாலயங்களும் சிங்கம் எதுவும் தப்பி வெளியேறவில்லை என குறிப்…
-
- 19 replies
- 1.3k views
- 2 followers
-
-
தெற்கு ஐரோப்பா நெருப்பின் நடுவே தவிக்கிறது. கிறீஸ் நாட்டின் ரோடோஸ் தீவில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியாமல் கிறீஸ் அரசு திண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆயிரக் கணக்கான உல்லாசப் பயணிகள் தற்போது பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். யேர்மனியில் இருந்து விடுமுறைக்குச் சென்ற பயணிகளைத் திருப்பி அழைத்து வரும் பணியில் TUI விமான சேவை தற்போது ஈடுபட்டிருக்கிறது. திங்கட்கிழமை நான்கு விமானங்கள் இந்த சேவையில் ஈடுபட்டன. இன்றும் அதன் சேவை தொடர்கிறது. மேலும் விடுமுறைக்கு ரோடோஸ்,கோர்பு, ஈபோயே தீவுகளுக்குச் செல்ல இருக்கும் பயணிகள், எந்தவிதக் கட்டணங்களும் இல்லாமல் தங்கள் பயணத்தை இரத்து செய்யலாம் என யேர்மனிய உல்லாசப் பயண நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. அத்துடன் ஸ்பானியா, இத்தாலி, …
-
- 0 replies
- 382 views
-
-
இலங்கையில் அதிகரித்துள்ள பேன் தொல்லை. தென் மாகாணத்திலுள்ள காலி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பாடசாலைகளிலும் பயிலும் மாணவிகளில் 60 வீதமான பேர் பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. தலையில் பேன்கள் அதிகம் காணப்படுவதால் அவர்களின் படிப்பு, தூக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ருஹணு பல்கலைக்கழக இணை சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் மற்றும் காலி மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலக அதிகாரிகள் இணைந்து காலி நகரில் உள்ள நானூற்று இருபத்தைந்து மாணவிகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டதாக சமூக மருத்துவ நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார் . கேள்வித்தாளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, 60வீத மாணவ…
-
- 1 reply
- 422 views
-
-
கேர்ள் பிரண்ட் அல்லது பாய் பிரண்ட் இல்லையே என ஏங்கித் தவிக்கும் சிங்கிள்ஸ் பரிதாபம் கண்டு சகியாத அரசாங்கம், வாடகைக்கு அவர்களை அமர்த்திக்கொள்ள அனுமதி அளித்து வருகிறது. அவை எங்கே என்பதற்கு அப்பால், எதனால் என்பதில் நிறைய விஷயங்கள் பொதிந்திருக்கின்றன. உருப்படியான கேர்ள் பிரண்ட் அல்லது போய் பிரண்ட் அமையாது போவதன் துயரத்தை ’2 கே கிட்ஸ்’ வசம் கேட்டுப்பார்த்தால் தெரியும். ஏறெடுத்து பார்க்காதவர்கள் பாதிப்பேர்; அப்படி பார்த்தாலும், பழகினாலும் பாதியிலே முட்டிக்கொண்டு விலகுவோர் மீதிப்பேர். இங்கே என்றில்லை, உலகமெங்கும் நவயுக இளசுகளின் எதிர்பால் ஈர்ப்பு என்பது சதா அக்கப்போரிலேயே இருக்கிறது. ஜப்பான் தேசமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரே வித்தியாசம்; அங்கே சிங்கிள்ஸ் பரிதாபம் கண்டு…
-
- 6 replies
- 508 views
- 1 follower
-
-
ஐரோப்பிய நாடுகளில் இது சாதாரணம். ஆனால் மலேசியாவில் தண்டனைக்குரிய குற்றம். ஓரினச்சேர்க்கை மலேசியாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று. அதை மீறுவோருக்கு 20 வருடங்கள் அளவிலான சிறைத்தண்டனை அல்லதுகசை அடிகள் வழங்கப்படலாம். பிரித்தானியாவைச் சேர்ந்த ‘1975 இசைக்குழு’ அந்தச் சட்டத்தை இப்பொழுது மீறி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் Good Vibes festival நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின்ஆரம்பத்திலேயே 1975 இசைக்குழுவின் பாடகரான Matty Healy (34), மலேசியாவில் உள்ள LGBTQ ( Lesbian, Gay, Bisexual, Transgendered and Questioning) சட்டத்தைப் பற்றி தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். நிகழ்ச்சியின் நடுவே பாடகர் Healy மேடையில் வைத்து Ross MacDonald (34)ஐ முத்தமிட…
-
- 2 replies
- 316 views
-
-
பட மூலாதாரம்,COLUMBUS ZOO / TWITTER கட்டுரை தகவல் எழுதியவர், கிரேம் பேக்கர் பதவி, பிபிசி நியூஸ் 22 ஜூலை 2023, 14:33 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் ஓஹையோ மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் ஒரு கொரில்லாவை ஆண் என அந்தப் பூங்கா ஊழியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக நம்பிவந்தனர். ஆனால் அந்த கொரில்லா தற்போது ஒரு குட்டியை ஈன்றுள்ளது. கொலம்பஸ் மிருகக்காட்சி சாலையில் சல்லி என்ற இந்த கொரில்லா கடந்த 2019ம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகிறது. இந்த கொரில்லா கடந்த வியாழக்கிழமையன்று ஒரு குட்டியை ஈன்றதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து ஒரு ப்ளாக…
-
- 1 reply
- 644 views
- 1 follower
-
-
இரண்டு வார்த்தைகள் ஒரு 13 வயதுச் சிறுமியைத் தன்னைத் துன்புறுத்துவனிடம் இருந்து காப்பாற்றி இருக்கிறது. கலிபோர்னியாவிலுள்ள Long Beach நகரத்தில், ஒரு சலவை நிலையத்துக்கு முன்னால் நிறுத்தி இருந்த ஒரு காரில், சில நாட்களுக்கு முன்னால்கடத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்ட சிறுமி ஒருத்தி இருந்தாள். அப்பொழுது அவளைக் கடத்தியவன் சலவை நிலையத்தில் இருந்திருக்கிறான். தனியாகக் காரில் இருந்த அந்தச் சிறுமி ஒரு கிழிந்த பேப்பர்த் துண்டில் „Help me“ என்று எழுதி, அதைக் கார் கண்ணாடியில் அழுத்தி வெளியேதெரியும்படி காட்டினாள். அதைப் பார்த்த பாதசாரிகள் உடனடியாகப் பொலிஸுக்கு தகவல் தந்திருக்கிறார்கள். பொலிஸார் கார் தரித்திருந்த இடத்திற்கு வந்த போது, காரினுள் இருந்து சிறுமி Help me என்ற…
-
- 0 replies
- 202 views
-
-
வெட்டிய தலைமுடியுடன் பொலிஸ் நிலையம் சென்ற பெண் : யாழில் பரபரப்பு! குடும்பத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது தலைமுடியினைக் கத்தரித்த சகோதரிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தனது தங்கச் சங்கிலியை ஏமாற்றிக் களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்துள்ளார். இதனையடுத்தே தனது தலைமுடியை கத்தரித்த அக்கா மீது தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் அளவெட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடும்பத்தினருடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார். வீட்டிற்கு வந்தவர், தனது தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலி என்பவற்றை தங்கையி…
-
- 3 replies
- 575 views
-
-
அழகி பட்டத்தை வென்ற திருநங்கை மிஸ் நெதர்லாந்து பட்டத்தை இம்முறை நெதர்லாந்து அழகி ரிக்கி வலேரி கோல் வென்றுள்ளார். ரிக்கி ; ஒரு திருநங்கை மாடல் என்பதால் இந்த கிரீடம் தனித்துவமானது. 22 வயதான ரிக்கி வலேரி, நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டுக்கான உலக அழகி போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளதாகவும், உலக அழகி பட்டத்தை வென்றால், அந்த மகுடத்தை கைப்பற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை பெறுவார் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெற்றியை பெருவதற்கு திருநங்கையாக பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். https://at…
-
- 0 replies
- 247 views
-
-
கனடா, அமெரிக்கா இரண்டையும் இணைக்கும் அம்பாஸ்டர் பாலத்தை பழுது பார்க்கும் வேலையை அவர் செய்து கொண்டிருந்தார். சடுதியாக நிலை தவறி 50 மீற்றர் கீழே இருந்த Detroit ஆற்றில் விழ ஆரம்பித்தார். கனடா ஒன்ராரியோவைச் சேர்ந்த ஸ்பென்சர் கடந்த வாரம் (12.07.2023) பாலத்தைப் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது தனது பிடி தவறியதால் ஆற்றில் விழுந்து விட்டார். இதைக் கவனித்த அஞ்சல் ஊழியர்கள் உடனடியாகத் தங்களது படகை எடுத்துக் கொண்டு விபத்து நடந்த இடத்துக்குப் பயணித்தார்கள். பூங்காவில் இருந்த சுமார் 20 பேர் ஸ்பென்சர் விழுந்த இடத்தை கரையில் இருந்தே சுட்டிக் காட்டியதால், அஞ்சல் ஊழியர்கள் அவர் ஆற்றில் விழுந்த இடத்தை சுலபமாக அடையாளம் கண்டு அவரைக் காப்பாற்றித் தங்கள் படகில் ஏற்றிக் கொண்டார்கள். …
-
- 0 replies
- 279 views
-