செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
பூச்சிகளை சாப்பிடும் மக்கள்;தெருக்களில் கேட்பாரற்று சடலங்கள் வடகொரியாவின் நிலைமை குறித்து இளம்பெண் தகவல் வடகொரியாவில் கிம் ஜாங் ஆட்சியின் கீழ் அப்பாவி மக்கள் படும் கொடுமைகளை அங்கிருந்து வெளியேறி தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். பதிவு: செப்டம்பர் 05, 2020 14:27 PM கொடுமைகளை அங்கிருந்து வெளியேறி தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். நி்யூயார்க் வடகொரியாவில் பிறந்த யியோன்மி பார்க் என்பவரே தற்போது, தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட கொடுமைகளை வெளிப்படுத்தியதுடன், வடகொரியாவில் வசிக்கும் அப்பாவி மக்களின் நிலையையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார். வடகொரியாவில் அன்றாடம…
-
- 1 reply
- 546 views
-
-
தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு துரைராஜசிங்கம் முடிவு? September 4, 2020 தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு கி.துரைராஜசிங்கம் தீர்மானித்திருப்பதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, தேசியப் பட்டியல் விவகாரம் போன்றவற்றால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்திலும் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையைக் கூட்டி அவரைப் பதவிநீக்கம் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் அவர் பதவியை இராஜினாமா ச…
-
- 1 reply
- 372 views
-
-
கஜேந்திரகுமார் வீட்டில் பணியாற்றிய பெரும்பான்மையின தொழிலாளி உயிரிழப்பு September 3, 2020 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் குறுக்குத் தெருவில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றது. காலியைச் சேர்ந்த இந்துனில (வயது -38) என்ற தொழிலாளியே உயிரிழந்தவராவார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக அமைத்து வரும் வீட்டில் கூரை வேலையில் ஈடுபட காலியிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களில் ஒருவர், நேற்றிரவு 11 மணியளவில் மேல் தளத்துக்குச் சென்றுள்ளார். எனினும் அவர் தவ…
-
- 6 replies
- 832 views
-
-
2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகுளில் Sex எனும் வார்தையை தேடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கையை பின்தள்ளிய எத்தியோப்பியா முதலாம் இடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான், மியன்மார், சிம்பாப்வே, உருகுவே ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில், கூகுளில் ‘செக்ஸ்’ வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் தொடர்ச்சியாக இலங்கை முதலிடத்தில் இருந்தது. 2012ஆம் ஆண்டின் அறிக்கையின் பிரகாரம், இந்த வார்த்தையை தேடிய இடங்களில் மேல் மாகாணத்தின் கொழும்பு, நுகேகொடை, ஹோமாகம ஆகிய நகரங்கள் முன்னிலை வகித்திருந்தன. எனினும், 2020ஆம் ஆண்டில் வடமத்திய மாகாணம் முதலிடத்தை பிட…
-
- 3 replies
- 913 views
-
-
பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து எடுக்கப்பட்ட 4 அடி நீள பாம்பு - இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ மாஸ்கோ:ரஷியாவின் வடக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான தகெஸ்தானில் லெவாஷி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் முற்றத்தில் திறந்தவெளியில் தூங்கினார். காலையில் அவர் கண் விழித்தபோது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப் போன்றும், குமட்டல் உணர்வு ஏற்படுவதைப் போன்றும் உணர்ந்தார். இதையடுத்து அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது வயிற்றுக்குள் பூச்சி போன்ற ஏதோ உயிரினம் புகுந்துள்ளது என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரது வயிற்றினுள் புகுந்த உயிரினம் என்ன என்பதை தெரிந்து வெளியேற்…
-
- 4 replies
- 1.1k views
-
-
Ulf Henricsson இலங்கையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராயிருந்தவர். சுவீடனைச் சேர்ந்தவர். 93-94 காலப்பகுதியில் பொஸ்னியாவில் அமைதிபேண் படைக்குத் தளபதியாயிருந்தவர். To end a civil war நூலின் ஓரிடத்தில் அவர் கூறுகின்றார். “கோத்தபாய நிச்சயமாகப் பேச்சுக்களை விரும்பவில்லை. இறுக்கமான சூழ்நிலைகளின்போது அவர் கோபப்படுவார். கட்டுப்பாடற்றுக் கத்தத் தொடங்குவார். (2006 இன் தொடக்கத்தில் நடந்த சில) நீதித்துறைக்குப் புறம்பான கொலைகளுக்கு அரசே பொறுப்பு என்று நாங்கள் (SLMM - இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு) அறிக்கை வெளியிட்டிருந்தோம். அவர் என்னை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து “அந்த அறிக்கையை நீங்கள் மீளப்பெற வேண்டும்” என்று நேரடியாகக் கேட்டார். “இல்லை. அது எங்களுட…
-
- 0 replies
- 349 views
-
-
துணைவியை மன்னித்து தனது அழகிகள் குழுவினருடன் இணைந்து கொள்ள தாய்லாந்து மன்னர் உத்தரவு பெர்லின் கொரோனாவுடன் தாய்லாந்து மக்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், அந்த நாட்டு மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் ஜெர்மனியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 20 அழகிகளுடன் குதூகலமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். 68 வயதான மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜேர்மனியில் இருந்து வருகிறார்.கொரோனா நெருக்கடியை அடுத்து ஜெர்மனியின் ஆல்பைன் ரிசார்ட்டில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் மன்னர் தனது ஊழியர்களுடன் தனிமைப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் தாய்லாந்து மன்னரின் தனிப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரியும், மன்னரின் துணைவியுமான 35 வயது சினீனா…
-
- 15 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகர் ரோன் ஜெரேமி, ஒரு 15 வயது சிறுமி உள்பட, மேலும் 13 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் 2004ஆம் ஆண்டு நடைபெற்றன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது 67 வயதாகும் ஜெரேமி 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நான்கு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார் மற்றும் பாலியல் வல்லுறவு செய்தார் என்று ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசப்படத் துறையில் மிகப்பெரிய பிரபலங்களில் ஒருவரான ரோன் ஜெரேமி, 40 ஆண்டுகளில் 1,700க்கும் அதிகமான ஆபாசப் படங்களில் நடித்துள்ளார். இவர் மீதான க…
-
- 0 replies
- 416 views
-
-
காதலை எதிர்த்தமைக்காக தனது தந்தையை விசம் வைத்து கொலை செய்ய முயன்ற 18 வயதான யுவதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கையுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது. மாத்தறை மேலதிக நீதவான் இசுறு நெத்தி குமார முன்னிலையில் யுவதி முற்படுத்தப்பட்டபோது, அவரை 500,000 ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். 18 வயதான யுவதிக்கு காதல் தொடர்பு இருந்தது. இதை தந்தையார் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். அண்மை நாட்களாக தந்தை கடுமையான கண்டிப்புக்களை மேற்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யுவதி, தந்தையை கொல்ல முடிவு செய்திருந்தார். சில தினங்களின் முன்னர் தந்தைக்கு இரவு உணவு தயாரித்த யுவதி, மீன் பொரித்து அதில் மிளகாய் சேர்த்து, அதில் விசம் கலந்து தந்தைக்கு உண்ண கொண்டு வந்துள்ளார். தந்தை உண்ண ஆரம்பித்த…
-
- 9 replies
- 737 views
-
-
ரூ.9 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்த அவலம் போபால், மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் கரையோர மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு நிறைந்த இடத்தில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அவர் நேற்று முன்தினம் ஹோசங்காபாத் மாவட்டத்திற்கும், நேற்று விதிசா பகுதிக்கும் சென்றார். இன்று படகு ஒன்றில் சென்று வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். மத்திய பிரதேசத்தின் சிய…
-
- 0 replies
- 228 views
-
-
தன்னால் வளர்க்கப்பட்ட சிங்கங்களுக்கு இரையான நபர்! August 31, 2020 தென் ஆபிரிக்காவில் வெஸ்ட் மேத்யூசன் (West Mathewson) என்பவர் தன்னால் வளர்க்கப்பட்ட சிங்கங்களுக்கு இரையான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. லிம்போபோ மாகாணத்தைச் சேர்ந்த குறித்த நபர் அப்பகுதியில் ‘லயன் ட்ரீ டொப் லொட்ஜ்‘ (Lion Tree Top Lodge) என்ற விடுதியை நடத்தி வந்துள்ளார். இந் நிலையில் கடந்த புதன் கிழமை அவர் விடுதி வளாகத்துக்குள் சென்ற போது இரு வெள்ளைச் சிங்கங்கள், அவர் மீது எதிர்பாராத விதமாக தாக்கியதாகவும் இதன் காரணமாக மேத்யூசன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தினையடுத்து குறித்த சிங்கங்கள் தற்காலிக முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதோடு , அ…
-
- 1 reply
- 378 views
-
-
கோயில் விக்கிரகங்களின் வாயில் இருந்து வடியும் நீர் போன்ற திரவம்! – யாழில் சம்பவம் யாழில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறவுள்ள நிலையில், மூலஸ்தான பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்கள் கருவூலத்திலிருந்து பாலஸ்தாபன மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. இதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான், வைரவர் போன்ற விக்கிரகங்களி…
-
- 2 replies
- 461 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த நால்வர் தப்பியோட்டம்: தீவிர தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 4கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம், ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரவிக்கின்றன. தெலுங்கானா மாநிலம்- சார்லபள்ளி சிறையிலுள்ள கைதிகள் 4பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரும், செகந்திராபாத்திலுள்ள காந்தி வைத்தியசாலையிலுள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில்,கைதிகள் 4 பேரும் நேற்று முன்தினம் அதிகாலையில் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறித்த நான்க…
-
- 0 replies
- 236 views
-
-
உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா? பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இது தினசரி கார் பயன்படுத்துவோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் தொகையை கட்டுக்குள் வைத்திருக்க சில உபாயங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம். இந்தியாவில் புதிதாக கார் வாங்குபவர்களும், கார் வைத்திருப்பவர்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்களில் எரிபொருள் சிக்கனம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக காரை வாங்கலாமா? வேண்டாமா? என முடிவு செய்வதில், மைலேஜ் மிக முக்கியமான காரணியாக உள்ளது. ஆனால் இந்திய சாலைகளில் நிலவும் கடு…
-
- 0 replies
- 411 views
-
-
-
- 2 replies
- 890 views
- 1 follower
-
-
வவுனியாவில் பல நாட்களாக காணாமல் போயிருந்த இரு பசுக்கள் இறைச்சிக் கடை ஒன்றுக்கு அருகாமையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வவுனியா – நெளுங்குளம் பகுதியில் ஒருவரது வீட்டில் இருந்து காணாமல் போன பசுக்களை தேடும் நடவடிக்கையினை உரிமையாளர் மேற்கொண்ட போது, இவ்வாறு இரு பசுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த பசுக்களை மீட்டு, இறைச்சி கடையின் விற்பனையாளரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.https://newuthayan.com/காணாமல்-போன-பசுக்கள்-இறை/
-
- 1 reply
- 682 views
-
-
இரகசிய காதலியின் வீட்டில் பால் காய்ச்ச சென்ற குடும்பஸ்தர் தீயில் எரிந்து பலி! மனைவிக்கு தெரியாமல் தன்னுடைய இரகசிய காதலியின் வீட்டில் பால் காய்ச்ச சென்ற குடும்பஸ்தர் மீது தீப்பற்றியதில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மன்னர் பகுதியைச் சேர்ந்த 30 வயது குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை, முள்ளியவளை பகுதியில் பெண் ஒருவரை இரகசியமாக காதலித்து வந்துள்ளார். குறித்த காதலியின் வீட்டில் கடந்த 21ஆம் திகதி பால் காய்ச்ச சென்றுள்ளார். அவருடைய காதலியும் குறித்த குடும்பஸ்தரும் பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது அடுப்புக்கு மேலி…
-
- 15 replies
- 939 views
-
-
தமிழகத்தை சேர்ந்த பெண்ணை கடத்திய வழக்கில் பிரபல மத போதகருக்கு தொடர்பா ...? சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரின் மகள், உயர்படிப்பிற்காக இங்கிலாந்தின் தலைநகரான லண்டனிற்கு சென்றுள்ளார். ஆனால், திடீரென்று அந்த பெண் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி முதல் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, இது குறித்து உடனடியாக சென்னை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் விசாரிப்பதற்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பிக்க, கடந்த 16-ஆம் தேதி முதல் இது தொடர்பான விசாரணை தொடங்கியது. அப்போது அந்த பெண்ணை கடத்தியது வங்கதேசத்தை சேர்ந்த மதபோதகார் நபீஸ் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இவர், ஜாகிர…
-
- 0 replies
- 453 views
-
-
மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21) என்ற இளம் யுவதியின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான தாய் மாமன் நேற்றைய தினம் திங்கட்கிழமை(24) வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மன்னாரில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினர் குறித்த பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர். குறித்த யுவதி கடந்த 11 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில்,அன்றைய தினம் இரவு மன்னார் சௌத்பார் பகுதிக்கு நடந்து சென்றுள்ளர். கொலை செய்யப்பட்ட யுவதி, யுவதியின் சகோதரி , அவரது பெரிய தாயின் மகனின் ம…
-
- 0 replies
- 409 views
-
-
நாம் தூங்கும் போது நம் உடலில் என்ன நடக்கிறது?
-
- 0 replies
- 426 views
-
-
நித்தியின் கைலாசாவும், ரிசர்வ் வங்கியும்! மின்னம்பலம் விநாயகர் சதுர்த்தியான இன்று நித்யானந்தாவால் உருவாக்கப்பட்ட நாடாகக் கூறப்படும் கைலாசாவின் புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. 2010ல் பாலியல் சர்ச்சையில் சிக்கியவர் நித்யானந்தா. தற்போது இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கிறார். அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் ஆயிரக்கணக்கான கி.மீ தொலைவில் இருக்கும் குட்டித் தீவான ஈகுவாடரில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவும் உறுதியான தகவல் அல்ல. தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், 40க்கும் மேற்பட்ட விசாரணைகளில் ஆஜராகாமல் இருந்ததற்காகக் கர்நாடக உயர் நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு கடுமையான கண…
-
- 5 replies
- 927 views
-
-
ரிஷாட் – மன்னார் ஆயர் நேற்று சந்திப்பு! மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் எம்பியுமான ரிஷாட் பதியூதீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (23) மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் முஷர்ரப் முது நபீன் எம்பி, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/ஆயர்/
-
- 0 replies
- 348 views
-
-
நாய்க் கடிக்கு இலக்கான சிறுவனும் பெண்ணும் பலி! நாய் கடிக்கு இலக்கான சிறுவன் (15-வயது) ஒருவனும் தாய் (39-வயது) ஒருவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – சங்கரத்தை, வட்டுக்கோட்டையை சேர்ந்த தவச்செல்வன் தர்சன் என்ற சிறுவன் சில வாரங்களுக்கு முன்னர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளான். எனினும் அது தொடர்பில் சிறுவன் தமது வீட்டில் தெரிவிக்கவோ தடுப்பூசி போடவோ இல்லை. இந்நிலையில் நேற்று (22) இரவு சிறுவன் பதட்டமாகவும் பயமாகவும் உள்ளது என்றும் சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளான். இதேவேளை மன்னார் – தா…
-
- 1 reply
- 587 views
-
-
”என் கணவர் சண்டையே போடாமல் ஓவர் லவ்சாக இருக்கிறார்” : 18 மாதங்களில் டைவர்ஸ் கேட்ட மனைவி.! தன் கணவரின் அளவுக்கதிகமான அன்பை தன்னால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. கடந்த 18 மாதங்களில் ஒருமுறை கூட சண்டைபோடவில்லை என்று ஒரு பெண் விவாகரத்துக் கோரியிருக்கிறார். உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் திருமணமாகி 18 மாதங்களிலேயே விவாகரத்துக் கோரியுள்ளார். விவாகரத்துக்காக சம்பலில் உள்ள ஷரியா நீதிமன்றத்தை அணுகிய அவர் சொன்ன காரணம் நீதிமன்றத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியது. காரணம், அவர் கணவர் தன்னுடன் சண்டை போடுவதில்லை. அளவுக்கதிகமாக நேசிக்கிறார் என்பதுதான் அவருடைய பிரச்னை. இந்தி நாளிதழான டைனிக் ஜாக்ரானின் அறிக்கைப்படி, அந்த பெண்ணுக்கு கணவரின் அதீத அன்பை பொறுத்துக…
-
- 0 replies
- 333 views
-
-
விஷம் அருந்திய ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல் தலைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி! ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) விஷம் அருந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை 44 வயதான அலெக்ஸி நவல்னி, சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு சென்ற விமானத்தில் பயணித்தார். இதன்போது, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து நவல்னியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘விஷம் அருந்தியதால் மயக்கமடைந்த நவல்னி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித…
-
- 0 replies
- 291 views
-