Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. துப்பாக்கி ஏந்திய இளம்பெண் 2 தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார் - கொண்டாடும் ஆப்கானிஸ்தான் சமூக ஊடகம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் Social Media சமூக ஊடகங்களில் வைரலான துப்பாக்கி ஏந்திய பதின் வயதுப் பெண். ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை கொன்ற இரண்டு தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளிய பதின் வயது பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் பெரிதும் பாராட்டப்படுகிறார். தமது பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு, தமது குடும்பத்தின் ஏகே 47 துப்பாக்கியை கையில் ஏந்திய இந்தப் பெண், இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். இவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் காயமடைந்ததாக கோர் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்…

  2. யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வேட்பாளருமான சி.சிறிதரனின் வாகன சாரதி உள்ளிட்ட மூவர் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரினாலும் தாக்கப்பட்ட பெண்ணொருவர் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாகன சாரதி வேந்தன், உருத்திரபுர அமைப்பாளர் திலக்சன் உள்ளிட்ட மூவரே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். உருத்திரபுரம் பகுதியில் இந்த குழுவினர் தேர்தல் விதிமுறையை மீறி வீட்டு கதவுகளிலும், சுவர்களிலும் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு சென்றுள்ளனர். இதன்போது உருத்திரபுரத்திலுள்ள வீடொன்றின் கேற்ற…

  3. கனடா முழுவதும்.. முகக்கவச, எதிர்ப்புப் பேரணிகள்! கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதில் முகக்கவசங்களின் செயற்திறனைப் பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கட்டாய முகக்கவசக் கொள்கைகளை தீர்மானிக்கும் பேரணிகள் பல கனேடிய நகரங்களில் நடைபெற்றன. வன்கூவர், கல்கரி, சாஸ்கடூன், வின்னிபெக் மற்றும் ஒட்டாவா உள்ளிட்ட நகரங்களில் கூடியிருந்த இந்த பேரணிகள் நடைபெற்றன. பல மாகாணங்களில் கொவிட்-19 தொற்றுகள் மீண்டும் அதிகரிக்க கூடுமென்ற அச்சம் எழுந்துள்ள போதும், எதிர்ப்பாளர்கள் இதற்கு அழைப்பு விடுத்தனர். முகக்கவசம் அணியாமைக்கான பேரணி ‘மார்ச் டு அன்மாஸ்க்’ இயக்கத்திற்கு ஆதரவாக, பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவது தன்னார்வமாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தால் கட்டாய…

  4. காதலியுடன் செல்பி எடுக்க முற்பட்டவர் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழப்பு! நெலுவ, தூவிலி எல்லயில் தனது காதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் அங்குள்ள கல் ஒன்றின் மீது ஏறி ´செல்பி´ எடுக்க முற்பட்ட போது கால் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளவத்த பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ரத்னராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் காதலி கொழும்பில் பிரதான வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/காதலியுடன்-செல்பி-எடுக்க/

    • 2 replies
    • 538 views
  5. அருகிவரும் உயிரினங்களை... பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – பிரதமர் மஹிந்த சட்டவிரோதமான முறையில் மிருகங்கள் வேட்டையாடப்படுவது தொடர்பாக உடனடியாக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பது அரசாங்கதின் பொறுப்பு என்றும் ஆகவே அதற்கான நடவடிக்கைகளையும் செயற்படுத்துமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். நல்லத்தண்ணி பிரதேசத்தில் நேற்று முன்தினம் அரிய வகையிலான 7 வயது நிரம்பத்தக்க புலி மிருக பொறிக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளது. இவ்விடம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுத்தை, புலி கொல்லப்படும் சம்பவம் தொடர்ச்சியாக இடம்ப…

  6. விசாரணைக்கு தடையாக தரிஷா இருந்திருந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் – நீதிமன்றம் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் நாடகமாடியதாக குற்றம்சாட்டப்படும் வழக்கில் தமது விசாரணையை தடுக்க முயன்றிருந்தால் ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியனுக்கு எதிராக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று இன்று (21) சிஜடிக்கு கொழும்பு பிரதம நீதிபதி லங்கா ஜயரத்ன தெரிவித்துள்ளார். இன்றைய இந்த வழக்கு விசாரணையின் போது ஊடகவியலாளர் தரிஷாவின் லப்டொப் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இதன்போது தரிஷாவின் லப்டொப் ஜூன் 4ம் திகதி சிஐடியால் கைப்பற்றப்பட்டது என்று அவரது சார்பான சட்டத்தரணி சிராஷ் நூர்டீன் மன்றில் தெரிவித்தார். இதனை மறுத்து மன்றுரைத்த சிஐடியினர் ஜூன் பத்தாம் திகதியே லப்டொப்பை கைப்ப…

  7. ஆயுதங்களுடன் நுழைந்து மூளாயில் கொள்ளை யாழ்ப்பாணம் – மூளாய் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று (21) அதிகாலை 1.45 மணியளவில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்க அபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதன்போது சுமார் 16 1/2 பவுன் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாள் மற்றும் கோடரிகளுடன் வீட்டினுள் நுழைந்த 06 பேரே வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/ஆயுதங்களுடன்-நுழைந்து-மூ/

  8. மிளகு விலையை அதிகரிப்பது குறித்து ஆராய்வு வீழ்ச்சியடைந்துள்ள மிளகின் விலையை அதிகரித்து செய்கையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த நாட்களில் சில மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இப்பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வை கண்டறிவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று (20) ஜனாதிபதி தலைமையில் ஆராயப்பட்டது. இதன்போது மிளகு அறுவடைக்கு அதிக விலையை உறுதி செய்வது அனைத்து தீர்மானங்களினதும் இறுதி பெறுபேறாக இருக்க வேண்டும். அனைத்து தீர்மானங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்தி, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் மிளகுக்கு அதிக விலையை பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொள்…

  9. பொலிவியா பாலியல் தொழிலாளர்கள் 'ரெயின்கோட்'களை பயன்படுத்துவது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் GASTON BRITO கொரோனா காரணமாக வேலையிழந்த பொலிவியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள், தங்களையும், வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கையுறை, பிளீச் மற்றும் ரெயின்கோட்களை பயன்படுத்த உள்ளதாக கூறுகின்றனர். கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, பொலிவியாவின் இரவு தொழிலாளர்கள் அமைப்பு இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக நடந்து வருகிறது. உரிமம் பெற்ற விபச்சார விடுதிகளும் அங்கு இயங்கி வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக …

  10. பிள்ளையாரை திருடியவர், சி.சி.டி.வி.யில் வசமாக மாட்டிக்கொண்டார் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கொட்டகலை கொமர்சல் பகுதியில் வீடு ஒன்றில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பிள்ளையார் சிலை ஒன்று கார் ஒன்றில் வந்த இளைஞரால் திருடப்பட்டு மூன்று நிமிடத்தில் மீண்டும் கொண்டு வந்து அங்கு வைக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் முன்புறம் இருந்த பிள்ளையார் சிலையினை காலையில் பார்க்கும் போது, அது இருந்த இடத்திலிருந்து வேறொரு இடத்தில் இருப்பதனை கண்டு வீட்டு உரிமையாளர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.யினை பரிசோதித்துள்ளார். இதன் போது நபரொருவர் சொகுசு கார் ஒன்றில் நேற்று அதிகாலை 5.27 மணியளவில் வந்து …

  11. விபுலானந்தரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு! முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 73வது நினைவு தினம் வவுனியா – கண்டி வீதியில் உள்ள அவரது சிலைக்கு முன்பாக இன்று (19) காலை இடம்பெற்றது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில். அடிகளாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து, விபுலானந்தர் தொடர்பான நினைவு பேருரையினை வவுனியா தமிழ்சங்கத்தின் தலைவர் தமிழருவி சிவகுமாரன் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் இசை, அறிவியல், கலை இலக்கியம் என பல்துறைகளிலும் புலமையாளராக விபுலானந்தர் விளங்கியதாக தெரிவித்தார். …

  12. நாட்டில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகம்” – பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாட்டில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகிறது என்றும், ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும், குற்றம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிஜந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவித்ததாவது: ” கடந்த ஆண்டு மட்டும் 5,292 சிறுவர் வன்புணர்வு சம்பவங்களும், 6 மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்வுட்படுத்தப்பட்டுள்ள அடிப்படையில் 1,642 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள…

  13. தனது படத்தை வேட்பாளர்கள் பயன்படுத்துகின்றனர் – கர்தினால் அனுமதியின்றி சில வேட்பாளர்கள் துண்டு பிரசுரம் மற்றும் சுவரொட்டிகளில் தமது புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தம்மை சந்திக்கவந்த தருணம் தன்னுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://newuthayan.com/தனது-படத்தை-வேட்பாளர்கள்/

  14. வீட்டுப்பாடம் செய்யாததால் 15 வயது மாணவி சிறைக்கு செல்ல அமெரிக்க கோர்ட் தீர்ப்பு வாஷிங்டன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் இணையம் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க - ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த கிரேஸ் என்ற = 15 வயது சிறுமி வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என கூறி கடந்த மே மாதம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார் ஒரு நீதிபதி. இந்த மாணவியின் வழக்கை விசாரித்த ஓக்லாந்து குடும்ப நீதிமன்றம், அந்த மாணவி வீட்டுப்பாடத்தை முடிக்காமல் நன்னடத்தை விதிகளை மீறி இருக்கிறார் என்றும், அவர் மீதுள்ள முந்தைய குற்றச்சாட்டுகளை வைத்து அவர் இந்த சமூகத்திற்கான அச்சுறுத்தல் என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து வெளிப்படையாக எ…

  15. இலையின் மீது அமர்ந்து யோகா செய்யும் பெண்கள்! July 18, 2020 சீனா: யுன்னன் (Yunnan) மாகாணத்தில் வட்டவடிவ லில்லி இலைகளின் மீது பெண்கள் யோகா செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. நீர்நிலை ஒன்றில் 10 அடி விட்டம் கொண்ட அகன்ற இலைகளின் நடுவே பெண்கள் அமர்ந்து யோகாசனம் செய்யும் குறித்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. விக்டோரியா அமேசானிக்கா எனப்படும் தாவரப் பெயருடைய குறித்த லில்லி இலைகள் 50 கிலோ கிராம் எடை கொண்டவர்களையும் தாங்கும் வலிமை உடையன என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ:(மூலம்- New China TV) http://thinakkural.lk/article/55700

  16. தனியார் வீடொன்றில் தங்கியிருந்த யாழ் பல்கலை விஞ்ஞானபீட மாணவர்கள் சிலரிடையே கத்திக்குத்து! யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் தங்கியுள்ள விடுதியில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று நேற்றிரவு(17) 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் சிலர் கூடியிருந்த போது, அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மாணவன் ஒருவர் ஆத்திரமடைந்து மற்றொரு மாணவருக்கு கத்தியால் குத்த முற்பட்டுள்ளார். அதனை அவதானித்த சிங்கள மாணவர் ஒருவர் தடுக்க முற்பட்ட போது அவரது கழுத்தில் கத்திக் குத்து ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியச…

  17. நேரடி ஒளிபரப்பின் போது செய்திவாசிப்பவரின் பல் விழுந்தது டிவி நிருபர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் பெரும்பாலும் நேரடி ஒளிபரப்பின்போது வித்தியாசமான அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். ஆனால் நடக்கும் அனைத்தையும் நிர்வகிப்பது மிகவும் கடினம். மரிச்சா படல்கோ என்ற செய்து தொகுப்பாளர் உக்ரேனிய தொலைக்காட்சி ஒன்றில் செய்தியை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தபோது, அவரது பல் விழுந்து உள்ளது. அந்த நேரத்தில் பெரும்பாலானவர்கள் பீதியடைந்திருக்கலாம் அல்லது சிரிப்பார்கள், படல்கோ ஆனால் பதற்றம் அடையவில்லை அமைதியாக இருந்தார், விழுந்த பல்லை புத்திசாலித்தனமாக பிடித்தார். எதுவும் நடக்கவில்லை என்பது போல அவர் தொடர்ந்து வாசித்தார். https://www.dailythan…

  18. யாழ்ப்பாண பெண்களுக்கு பொலிஸ் விடுக்கும் அறிவுறுத்தல் யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹால் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைய நாட்களில் வீதிகளில் செல்லும் பெண்களிடம் நகைகள் கொள்ளையிடும் சம்பவம் அதிகளவில் இடம் பெற்று வருகின்றது இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்க…

  19. யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு; சொகுசு கார் தீயில் எரிந்தது! யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (17) மாலை பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனம் தெரியாத வன்முறை கும்பல் ஒன்றே இவ்வாறு பெற்றோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த தாக்குதலில் வீட்டில் தரித்து நின்ற காரிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://newuthayan.com/யாழில்-வீட்டின்-மீது-பெற/

  20. யாழ். பல்கலையின் விரிவுரையாளர் குருபரன் இராஜினாமா செய்தாரா? July 17, 2020 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தமது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அவர் இவ் இராஜினாமா கடிதத்தை இன்றையதினம் அனுப்பி வைத்துள்ளதாகப் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக பேரவை அவரை சட்டத் தொழிலில் ஈடுபடுவதற்குத் தடை விதித்துள்ளமையை காரணமாகக் காட்டியே அவர் பதவி விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்தி…

  21. கொரோனாவில் இருந்து தப்பிக்க தனித்தீவை வாங்கிய பணக்காரர் .! கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க இந்திய மதிப்பில் ரூ 47 கோடியில் அயர்லாந்தில் தனித்தீவு ஒன்றை ஐரோப்பிய பணக்காரர் ஒருவர் வாங்கி உள்ளார். அயர்லாந்து கடற்கரையில் உள்ள ஐரிஷ் நிலப்பரப்பின் தென்மேற்கே 157 ஏக்கரில் அமைந்துள்ள ஹார்ஸ் தீவு, நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்திய ரூபாயில் ரூ. 47 கோடி மதிப்பில் விற்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாட்டை சேர்ந்த ஒருவர், இந்த தீவை விலைக்கு வாங்கியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலில் இருந்து தப்பிக்க, பெரும் பணக்காரர்கள் தனியார் தீவுகளை நாடிய வரும் நிலையில், தற்போது ஒருவர் கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார். …

    • 1 reply
    • 496 views
  22. நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றிய 6 வயது வீரச் சிறுவன் முகத்தில் 90 தையல் அமெரிக்காவில் நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றிய 6 வயதுச் சிறுவன் பற்றிய பதிவு வைரலாகியுள்ளது. பதிவு: ஜூலை 16, 2020 13:00 PM வாஷிங்டன் கடந்த 9-ம் தேதி அன்று அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தின் சயன் நகரில் வசித்து வரும் பிரிட்ஜர் என்ற சிறுவன், தனது தங்கையை ஒரு நாய் கடிக்க வருவதைப் பார்த்து, உடனடியாக முன்னால் பாய்ந்து தடுத்துள்ளார். இதனால் பிரிட்ஜரின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. ஆனாலும், தங்கையை இழுத்துக் கொண்டு வேகமாக ஓடிக் காப்பாற்றியுள்ளார். இதுகுறித்து பிரிட்ஜரின் அத்தை இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவி…

  23. காணாமல்போன ஒன்பது மாணவர்கள் மீட்பு வனப்பகுதியில் காணாமல்போன யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – முத்தையன்கட்டு வனப் பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கிராமவாசிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இன்று (16) காலை அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஆய்வு சுற்றுப் பயணத்துக்காக 9 மாணவர்களை உள்ளடக்கிய குறித்த குழுவானது நேற்றைய தினம் (15) முத்தையன்கட்டு வனப் பகுதிக்கு சென்றிருந்தபோது, வழி தவறி காணாமல்போயிருந்தனர். https://newuthayan.com/காணாமல்போன-ஒன்பது-மாணவர்/

  24. சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தல் இராணுவ வசமாகிறது சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அரச தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் நடந்த கலந்துரையாடலின்போது, இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டதாக போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் வருடம் முதல் இந்த நடவடிக்கை இராணுவத்தினரிடம் ஒப்படைப்படவுள்ளது. வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனத்திடம் வழங்கியுள்ளதால் பெரும் தொகையை செலுத்தப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.