Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இன்று ஏப்ரல் 1… உலகம் முழுக்க முட்டாள்களின் தினமாகக் ‘கொண்டாடுகிறார்கள்’… ஆம் மக்கள் தங்களைத் தாங்களே முட்டாள்களாக்கிக் கொண்டு, அதையும் கொண்டாடி மகிழும் நாள் இன்று. எப்போது முட்டாள்கள் தினம் பிறந்தது என்பதை யாரும் உறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. சரித்திரம் முன்னும் பின்னுமாக சில சம்பவங்களைச் சொல்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பல காலம் வரை ஏப்ரல் முதல் நாள்தான் வருடத்தின் முதல் நாளாக இருந்தது. அதன் பின் 16ம் நூற்றாண்டில் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக பின்பற்றத் தொடங்கினர். 1582ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13ம் கிரிகோரி, ஜார்ஜியன் காலண்டர் என்ற புதிய காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு பிறப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. …

  2. கொச்சி: ஏமனில் இருந்து பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டு விமானத்தில் இன்குபேட்டரில் வைத்து இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் இருந்து 4 ஆயிரத்து 600 இந்தியர்களை மத்திய அரசு மீட்டுள்ளது. ஏமனில் வசித்து வந்த ராஜி என்பவர் குறைமாதத்தில் பார்வதி என்ற பெண் குழந்தையை பெற்றார். இந்நிலையில் குழந்தையுடன் ராஜி ஏமனில் உள்ள சனா நகரில் இந்தியர்கள் மீட்கப்படும் இடத்திற்கு வந்தார். அவர்கள் விமானம் மூலம் அண்டை நாடான ஜிபோட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குழந்தைக்கு மஞ்சள்காமாலை, மூச்சு திணறல் பிரச்சனை இருப்பது தெரிந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் குழந்தையை இன்குபேட்டரில் வைத்தனர். பின்னர் குழந்தையை இன்குபேட்டருடன்…

    • 0 replies
    • 386 views
  3. ஏமாற்றமடைந்தார் அமெரிக்க மாப்பிளை. காதலனோடு பெண் தப்பி ஓட்டம் திருமணம் முடிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து கொழும்புக்கு வந்த மாப்பிளை திருமணம் நடைபெறும் அன்று காலை ஏமாற்றமடைந்தார். தமிழர் தாயகப் பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த பெண் ஒருவரை திருணம் முடிப்பதற்கு தாயகத்தின் இன்னுமொரு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு ஏமாற்றமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். குறித்த திருமணத்தை உறவினர் ஒருவர் பேசியுள்ளார் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மணமகனின் பெற்றோர் விரும்பம் தெரிவித்து பெண் வீட்டாருடன் பேசியுள்ளனர். அமெரிக்காவில் முக்கியமான துறையில் (PHD) கலாநிதிப் பட்டம் பெற்ற குறித்த மண மகன் தனது பெண் சகோதர்கள் திருமணம் செய்யும் வரை நீண…

  4. ஏமாற்றிய புறோக்கரால் தாலிகட்டியவுடன் வெளியேறிய யாழ் யுவதி ; தவிக்கும் லண்டன் மாப்பிள்ளை யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் 22 வயதான மாணவிக்கு 31 வயது லண்டன் மாப்பிளை என கலியாணப் புறோக்கர் ஒருவர் ஏமாற்றி திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் மாப்பிளையின் பெற்றோர் இறந்துவிட்டதாகவும் மாப்பிளை லண்டனில் பெரிய பணக்காரனாக உள்ளதாக கூறி மாப்பிளையின் ஜாதகம் பெற்றோருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு யாழில் உள்ள பிரபல வைத்தியர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என தெரிவிக்க பெண்னின் பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டுள்ளார்கள். மாணவியின் பெற்றோர் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனராம். இந்நிலையில் மகள் வெளிநாடு போனால்…

  5. சென்னை:நீண்ட நேரம் சேட்டை செய்த ஜோதிடரை, யானை தூக்கி வீசியது. பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். பட்டாபிராம் அணைக்கட்டுசேரியைச் சேர்ந்தவர், கணேசன், 33; ஜோதிடர். மாலை, மனைவி சரஸ்வதியுடன், பட்டாபிராம் பெருமாள் கோவிலுக்குச் சென்றார். அங்கு, முகலிவாக்கத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட, சுபத்ரா என்ற யானையும் இருந்தது. யானையின் அருகில் செல்வதும், வருவதுமாக கணேசன் இருந்துள்ளார். இதைப் பார்த்த அவரது மனைவி, "யானையை எதுவும் செய்ய வேண்டாம்' என, எச்சரித்துள்ளார்.சிறிது நேரம் கழித்து, போதையில் வந்த கணேசன், மீண்டும் யானையின் வாலைப் பிடித்து இழுப்பது, அதன் முன் ஆட்டம் போடுவது என, சேட்டை செய்துள்ளார்.பாகன் சந்தானம், பலமுறை எச்சரித்தும், கணேசன…

    • 0 replies
    • 600 views
  6. ஏர்-இந்தியா விமானத்தின் விமானி, காக்பிட்டில் அவசரகால ஆக்ஸிஜன் மாஸ்க் ‘அழுக்காக’ வழங்கப்பட்டதை ஏற்க மறுத்துவிட்டதை அடுத்து விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. விமானி புதிய மாஸ்க் கேட்டு உள்ளார். டெல்லியில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று தயாராக இருந்தது. விமானத்தின் காக்பிட்டில் விமானிக்கு அவசரகால ஆக்ஸிஜன் மாஸ்க் ‘அழுக்காக’ வழங்கப்பட்டு உள்ளது. அதனை ஏற்க விமானி மறுத்துவிட்டார். இதனையடுத்து விமானம் அங்கு இருந்து புறப்படுவதற்கு சுமார் 3 மணிநேரம் கால தாமதம் ஆகிஉள்ளது. இதன்காரணமாக அம்மார்க்கமாக பயணம் செய்யும் பிற விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏர் இந்தியா விமானத்தின் அதிகாரி பேசுகையில், காக்பிட்டில் விமானி அழுக…

    • 0 replies
    • 339 views
  7. எனக்கு ஏர் கனடா பிடிப்பதில்லை.... கிழவிகள் தான் சேவையில் இருப்பார்கள். பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவனத்துக்கு உரிய, customer service என்னும் ஒரு ஐடியாவே அவர்களுக்கு இல்லை என்று தோன்றும். இது பல வருடங்களுக்கு முன்னர் போன கசப்பான அனுபவத்தால் உண்டானது. இப்போது BA மட்டும் தான் பாவிப்பது. சரி விசயத்துக்கு வருவோம் மக்களே. பயணி Tiffani Adams என்பவர் கியூபெக் இல் இருந்து, கடந்த 9ம் திகதி டொரோண்டோ பறக்கிறார். வைன் வாங்கி அடிச்சிருப்பா போல கிடக்குது. மனிசி நித்திரையைப்போட்டுது. முழிச்சுப் பார்த்தால், ஒரே இருட்டாக்கிடக்குது. குளிர் வேற போட்டு தாக்குது. முதலில் குழம்பி விட்டார். பிளேன் ஏறினோம், இதென்ன இருடாக்கிடக்குது.... எங்கையாவது விழுந்துட்டுதோ... எழும்புவம்…

    • 14 replies
    • 1.9k views
  8. ஏர்போர்ட்டில் ஆஸ்திரேலிய அதிகாரிகளைப் பதறவைத்த இந்திய மூதாட்டி! `Bombay’ என்ற வார்த்தையைச் சுருக்கி எழுதிய இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டி ஆஸ்திரேலியாவில் பெரும் குழப்பத்தில் சிக்கிவிட்டார். மும்பையைச் சேர்ந்த வெங்கட லட்சுமி தன் மகளைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றார். கடந்த புதன்கிழமை பிரிஸ்பேன் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு லக்கேஜ் சோதனை செய்யும் இடத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். லட்சுமியின் அருகில் நின்றிருந்த பெண் லட்சுமியின் லக்கேஜை வித்தியாசமாகப் பார்த்தார். லட்சுமிக்கு ஒன்றும் விளங்கவில்லை. சிறிது நேரத்தில் ஆஸ்திரேலியா ஃபெடரல் போலீஸார் லட்சுமியை நோக்கி வேகமாக வந்தனர். அவரின் லக்கேஜை கைப்பற்றினர். அந்த…

  9. ஏர்போர்ட்டில் அரிய வகை ஆந்தை .Wednesday, 23 January, 2008 11:02 AM . சென்னை, ஜன.23: சென்னை விமான நிலையத்தில் இன்று காலை வெளிநாட்டு ராட்சத ஆந்தை ஒன்று பிடிப்பட்டது. பின்னர் அந்த ஆந்தை பிராணிகள் நல அமைப்பான புளூகிராசிடம் ஒப்படைக்கப்பட்டது. . மீனம்பாக்கம் விமான நிலையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இன்று காலை அரிய வகை ராட்சத ஆந்தை ஒன்று சுற்றித்திரிந்தது. இதனைக்கண்ட விமானப் பயணிகள் அச்சமடைந்தனர். கார்களுக்கு இடையே அங்கும் இங்கும் திரிந்தபடி இருந்த அந்த ஆந்தையை கார் பார்க்கிங் ஊழியர்கள் பிடிக்க முயன்றும் அது அவர்களிடம் சிக்கவில்லை. அப்போது அங்கிருந்த நாய் ஒன்று அந்த ஆந்தையை துரத்தியது. இதனால் வேகமாக ஓடிய அந்த ஆந்தை கார் பார்க்கிங் ஊழியர்களின் அறை…

  10. ஏறலாமா…?? சிறிலங்கன் விமானங்கள் பழையது. April 11, 20158:50 am சிறிலங்கன் விமான சேவையில் காணப்படும் விமானங்கள் அனைத்தும் மிகவும் பழைமையானவை என்று உறுதியாகி இருக்கிறது. சிறிலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான வெலியமுன வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதில் அநாவசியமான முறையில் 2.3 பில்லியன் ரூபாய் பெறுமதியான விமானங்களை அமெரிக்காவில் இருந்து முன்னாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்க இறக்குமதி செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்து. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளித்துள்ள முன்னாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்க, சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்தில் உள்ள அனைத்து விமானங்களும் 12 தொடக்கம் 18 வருடங்கள் பழைமையானவை என்று க…

    • 18 replies
    • 2.1k views
  11. வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள். பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான். வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித சாயல் வருவதற்கு பூமியின் பல பருவமாற்றங்களை மனிதன் தாண்டி பரிணமத்தின்…

  12. அம்ஸ்ரடாம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில் இருந்து தற்செயலாக எடுக்கப்பட்ட வீடியோவே இங்கு நீங்கள் பார்க்கப்போகும் வீடியோவாகும். ஐபோனில் எடுக்கப்பட்டுள்ள இவ் வீடியோவில் எவ்வித கிராபிக்ஸ் வேலைகளும் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அக் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் வானில் வேறு எந்தவித வானிலை அறிகருவிகளும் ஏவப்படவில்லை என்பதையும் விமான நிலையமும் அவ்வூர் விஞ்ஞான ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது. இது ஐஃபோன் கமெராவில் இருக்கக்கூடிய புள்ளி அல்லது விமான கண்ணாடியில் இருக்கக்கூடிய புள்ளி என்று கூறமுடியாது. ( காட்சிகளைப்பாருங்கள் புரியும். ) இங்கு பதிவாகியுள்ள உருவைப்பார்க்கும் போது, பரவலாக வேற்றுக்கிரக வாசிகள் வருவதாகக்கரு…

    • 0 replies
    • 426 views
  13. விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவரங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு. இவரது மகள் சுசீலா (13), அருகில் உள்ள இருஞ்சிறை கிராம அரசுப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இருஞ்சிறையைச் சேர்நத ரவிச்சந்திரன் என்ற வாலிபர் சுசிலாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சுசீலாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந் நிலையில் கர்ப்பமான சுசீலாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் சுசீலாவின் பெற்றோர்கள் அனைத்து இந்திய மாதர் சங்க உதவியை நாடினர். அவர்க…

  14. ஏழாயிரம் தனியார் கார்களுடன் வாழும் ஆடம்பர மனிதன்.! ஹசனல் போல்கியா புருனேயின் தற்போதைய சுல்தான் மற்றும் யாங் டி-பெர்டுவான், அதே போல் புருனே பிரதம மந்திரி ஆவார், அவரே கடைசி முழுமையான மன்னர்களில் ஒருவராக ஆகிறார். அவர் தனது கடையில் 7,000 கார்களை வைத்திருக்கிறார். அவுட் ஹவுஸ் கிழக்கு ஆசியாவில் உள்ள போர்னியோ தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள இறையாண்மை மாநிலம் புருனே. ராயல்டியைத் தவிர, அவர் தனது கேரேஜில் ஏழு ஆயிரம் கார்களின் தொகுப்பைக் கொண்ட உண்மையான அழகான கவர்ச்சியான ஆட்டோமொபைலின் காதலன். அவரது கடையில் கார்களின் முறிவு கீழே: 604 -ரோல்ஸ் ராய்ஸ் 574 -மெர்சிடிஸ் பென்ஸ் 452 -ஃபெராரி 209 -பி.எம்.டபிள்யூ 179 ஜாகுவார் 134 -Coenigsegg’s 2…

  15. கனடாவைச் சேர்ந்த யோயல் இபார்கன் என்பவர் ஏழு செக்கன்கள் தாமதமான காரணத்தில் 27 மில்லியன் கனேடிய டாலர்களை இழந்துள்ளார். கடந்த தை 23ம் திகதி இரவு கியூபெக்கில் உள்ள கடையொன்றில் 20.59 நிமிடத்திற்கு இரண்டு லாட்டரி சீட்டுக்களை வாங்கியுள்ளார். இவர் வாங்கிய சீட்டுக்களில் ஒன்று பரிசு பெறவில்லை இன்னொரு சீட்டுக்கு 27 மில்லியன் டாலர்கள் பரிசு விழுந்தது. ஆனால் இவருடைய விதி நேரத்துடன் விளையாடியது, காரணம் லாட்டரி விற்பனை முடிய வேண்டிய நேரம் இரவு 21.00 மணி இவருடைய பரிசு விழுந்த லொத்தரின் விற்பனை சேரம் 21.07 என்று பதிவாகியுள்ளது. லொத்தர் விற்பனை கணினி வழியாக தரவேற்றம் செய்யப்பட ஏற்பட்ட ஏழு செக்கன்கள் தாமதம் இந்த இழப்பிற்குக் காரணமாகிவிட்டது. கனடாவின் கியூபெக் மாநில நீதிமன்று பரிசுத் தொ…

  16. குடும்பத்துடன் நாள்களைக் களிக்கும் ஏழு நாள்கள் சவாலின் மூன்றாவது நாளான இன்று, தன் தந்தையுடன் (பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ) மகிழ்வாகப் பொழுதைக் கழித்ததாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, தன்னுடைய பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். “ஒவ்வொரு நாளும் என் தந்தையுடன் கவலையற்ற நேரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பொன்னான சந்தர்ப்பம் எனக்கு இல்லை. ஆனால், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், அந்த தருணங்கள் ஆழமாக பொக்கிஷமாக இருக்கின்றன. இன்று இதுபோன்ற ஒரு நாள், நாங்கள் இருவரும் வழக்கமாக பரபரப்பான கால அட்டவணையிலும், ஓய்வு நேரத்தை மகிழ்வாகக் களிக்க சிறிது நேரம் ஒதுக்கியிருந்தோம். சமூக இடைவௌியைப் பேணி, பொன்னான சந்தர்ப்பந்தைப் பேணிய தருணமிது” என, நாமல் ராஜபக்‌ஷ அக்குறிப்பில் மேலும்…

    • 4 replies
    • 684 views
  17. இத்தாலியின் கோஸ்தா நிறுவனத்துக்குச் சொந்தமான கோஸ்தா விக்டோரியா என்ற சொகுசு பயணிகள் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஏழு அடுக்கு மாடிகளுடன் கப்பலின் மேல் தளத்தில் விளையாட்டரங்கு, நீச்சல் தடாகங்களையுடைய இக் கப்பலையும், கப்பல் பயணிகளையும் வரவேற்பதற்காக துறைமுகங்கள் நெடுஞ்சாலை பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தனா நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு விஜயம் செய்தார். 292.5 மீட்டர் நீளமும், 35.5 மீட்டர் அகலமும், 897 மாலுமிகளையும் கொண்ட இக்கப்பலில் 2680 பயணிகள் பயணிக்க முடியும். 2003ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கோஸ்தா விக்டோரியா சொகுசு கப்பல் உலகிலுள்ள பெரிய சொகுசு கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மிகவும் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய இச்சொகுசு …

  18. மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 12, 14, வயதுடைய இரு சிறுவர்களை நேற்று திங்கட்கிழமை (14.06.2021) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிராமம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை, குறித்த வீட்டின் தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில் குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இரு சிறுவர்கள் வீட்டினுள் புகுந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து, சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து, அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.…

  19. திருப்பதி : திருப்பதி ஏழுமலையானுக்கு நீளமான முடி காணிக்கை செலுத்துபவர்களுக்கு 5 லட்டுகளை இலவசமாக வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்தியாவின் பணக்கார சாமியாக போற்றப்படுபவர் திருமலை ஏழுமலையான். இங்கு வரும் லட்சோப லட்சம் பக்தர்கள் தங்கள் முடியை காணிக்கை செலுத்துகின்றனர். இந்த முடி ஏலம் விடப்படுகிறது. இதன் மூலம் மட்டும் கோவிலுக்கு பல நூறு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் முடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பரிசு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதாவது 31 அங்குலம் நீளம் கொண்ட முடியை காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு 5 லட்டு இலவசமாக வழங்க திருமல…

  20. இத்தாலியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், வசதியில்லாதவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவில்லாமல் தவிப்போருக்காக புதிய முயற்சியை இத்தாலி மக்கள் கையில் எடுத்துள்ளனர். மனித நேயத்தை போற்றும் வகையில் நேப்பிள்ஸ் நகரில் வீடுதோறும் உணவுக் கூடைகள் தொங்க விடப்பட்டுள்ளன. அந்த கூடைக்குள் இத்தாலியின் பாரம்பரிய உணவான பாஸ்தாவுடன் தக்காளி, எலுமிச்சை போன்ற காய்கறிகளும் கூடையில் இடம்பெறுகின்றன. பசியால் தவித்துக் கொண்டிருப்போர், இந்த கூடையை பயன்படுத்தி பசியாறிச் செல்கின்றனர். இத்தாலி மக்களின் இந்த முயற்சி இணையத்தில் பெரும் வரவற்பை பெற்றுள்ளது. உதவும் விருப்பம்…

  21. நண்பன்’ பட க்ளைமாக்ஸில் அனுயா ஒரு இக்கட்டான சூழலில் பிரசவ வலியில் துடிக்க, மருத்துவரான இலியானா கணினி இணைய இணைப்பின் மூலம் ‘லைவ்’ ஆக வழிமுறைகள் சொல்ல, அதைப் பின்பற்றி அனுயாவுக்கு விஜய் பிரசவம் பார்க்க... வெற்றிகரமாகப் பிறக்கும் குழந்தை! சினிமாவில் நாம் கைதட்டி ரசித்த காட்சி, நிஜத்தில் அமெரிக்காவில் நடந்துள்ளது. நியூஜெர்ஸியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ரிவேரா, அந்த மாதத்திற்கான பரிசோதனைக்காக தான் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் அந்நேரம் ரிவேராவின் டாக்டர் மேனா டெவல்லா வேறொரு மருத்துவமனையில் இருக்க, எதிர்பாராத விதமாக ரிவேராவுக்கு பனிக்குடம் உடைந்தது. வலியில் துடிக்க ஆரம்பித்தார். மருத்துவமனையில் புதிதாகப் பணிக்குச் சேர்ந்திருந்த மெடிக்கல…

    • 1 reply
    • 328 views
  22. Published By: DIGITAL DESK 3 13 FEB, 2024 | 09:58 AM யாசகர் ஒருவர் ஐ போன் ஒன்றை திருடி அதனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் நேற்று (12) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. யாசகம் கேட்டு வந்த முதியவர் ஒருவர் வீடு ஒன்றிலிருந்த பெறுமதி வாய்ந்த ஐ போன் ஒன்றை திருடிச் சென்றுள்ளார். இவ்வாறு திருடிச் சென்ற நபரின் புகைப்படத்தை சி.சி.ரி.வியின் உதவியுடன் முகநூலில் பதிவிட்டதன் பின்னர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் வசமாக சிக்கியுள்ளார். திருடிய கைபேசியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பன செய்த அந்நபர் அந்தப் பணத்தில் மது அருந்திக…

  23. http://tamil.newstig.com/ஐ-லவ்-யு-சொன்னா-தப்பா-வீடி/

  24. அமெரிக்காவில் ஐ-போன் கொடுக்காததால் பெற்ற தாயை 2 முறை விஷம் வைத்து கொல்ல முயன்ற 12 வயது சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த 12 வயது சிறுமி கடந்த மார்ச் 2ம் தேதி பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ரசாயனத்தை காலை உணவில் கலந்து தாய்க்கு கொடுத்துள்ளார். ஆனால் இதை எதார்த்தமாக கண்டுபிடித்த தாய், பாத்திரத்தை சரியாக கழுவாமல் விட்டதுதான் இதற்கு காரணம் என்று நினைத்துள்ளார். எனவே, இதை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து, 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் குடிநீரில் விஷம் கலந்த அந்த சிறுமி மீண்டும் தனது தாயை கொல்ல முயன்ற போதுதான் சொந்த மகளே தன்னை கொலை செய்ய முயன்றது அவருக்கு தெரியவந்தது. இதற்கு ஐ-போனை கொடுக்காதது தான் காரணம் என்பதையும் அறிந்த அவர் இதுகுறித்து காவல் துறையில்…

  25. https://www.facebook.com/podiyan/posts/10153211221278002

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.