துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
351 topics in this forum
-
பிறேம் குமார், "கம்பிகளின் மொழி" எனும் கவிதைத் தொகுப்பு மூலம் வல்வையில் கலைஞராக அறிமுகமானவர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி. தற்பொழுது மிகவும் மோசமாக விழுப்புண் அடைந்திருக்கும் நிலையிலும் கூட, தொடர்ந்து கலைஞன் வடிவில் சமூக சேவை தொடர்ந்து முனைபவர், சாதனைகள் செய்யத் துடிப்பவர். திரு. பிறேம் குமார் அகில இலங்கை ரீதியில் துப்பாக்கி சுடும் போட்டியில் முதலாவது இடத்தினை பெற்றிருந்ததும், எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது சாதனைக்கு நிதி உதவி கோரி எம்மூடாக வல்வை மக்களிடமும், புலம் பெயர் வல்வை மக்களிடம் சிறு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதனுடன் சம்பந்தப்ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
2 குழாய்கிணறுகளின் வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டன. அம்மாவின் திவசம் மற்றும் பெரியக்காவின் 75வது பிறந்தநாள் சார்ந்த உதவிகளின் படி 2 குழாய்க்கிணறுகளை செய்வதற்கான காலம் ஆனி என கணிக்கப்பட்டது. அதாவது இதற்கு முன்னர் தண்ணீருக்கான துவாரம் போடும் போது மழைத்தண்ணீர் மேலே நிற்பதால் தண்ணீரை தொடர்ந்து பெற முடியாது போய் விடும் என்பதால் தண்ணீர் கீழிறங்கும்வரை பொறுக்கவேண்டியதாயிற்று. ஆனால் அதற்கிடையில் கொரோனா காரணமாக உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டதால் மேலும் தள்ளிப்போடவேண்டி வந்து விட்டது. ஆனாலும் இனியும் தாமதித்தால் மீண்டும் மழை வந்தால் மீண்டும் ஒரு வருடம் தோண்டமுடியாது போய் விடும் என்பதால் கொரோனா உள்ளிருப்பு காலத்தில…
-
- 11 replies
- 1.7k views
- 1 follower
-
-
எமது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர் தர 92ம்ஆண்டுபுலம்பெயர் பழைய மாணவர்களின் கலந்துரையாடல்களின் பிரகாரம், எமது தாயக தமிழ் சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்களின் தொடர்ச்சியாக: இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்தி வீதத்தினை உயர்த்தும் நோக்கத்தில் கணிதபாடக் கையேடுகளைசுமார் 10000 கணிதபாடச் சித்தியில் இடர்ப்படும் மாணவர்களுக்காக அச்சிட்டு வழங்கும் கைங்கரியத்தில் ‘கல்விக்கான வீதியோட்டம்’ (5km marathon) ஒன்றைநடாத்த உத்தேசித்துள்ளோம். இந்ததமிழ் மாணவர்களின் கற்றலுக்குக் கைகொடுக்கும் பணியில் புலம் பெயர் தமிழர்களின் ஆதரவைப் பெற்றுத் தருவதற்கு எம்முடன் கைகோர்த்து இணையத் தளம் மூலமான ஊடக ஆதரவைவழங்கி உதவுமாறு மிக அன்பாய் வேண்டுகின்றோம். மேலும் …
-
- 1 reply
- 1.7k views
-
-
அன்பான France வாழ் புங்குடுதீவு மக்களே வணக்கம் அண்மையில் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் காலத்தின் தேவை கருதி ஒரு அவசர வேண்டுகோளை France வாழ் புங்குடுதீவு மக்களை நோக்கி விடுத்திருந்தது. அவ்வேண்டுகோள் France வாழ் புங்குடுதீவு மக்களை சென்றடைய அவர்கள் சார்ந்த விழாக்கள் கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரப்படுத்துதல் ஊடாக முயற்ச்சித்தது. அதனைத்தொடர்ந்து எம்மிடம் பதிவிலுள்ள 300 க்கு மேற்பட்ட அங்கத்தவர்களின் விலாசங்கள் மீண்டும் தொலைபேசி அழைப்பினுடாக சரி பார்க்கப்பட்டு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 27-01-2019 இல் ஒரு விசேச கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டு அதன் நிகழ்சி நிரலும் இதனுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் France வாழ் புங்குடுத…
-
- 6 replies
- 1.7k views
-
-
எமது ஊரில் பலருக்கும் தெரிந்த எல்லோருக்கும் உதவியாக இருந்த அதிலும் எமது பெற்றோருக்கு நற்பணிகள் பலவும் செய்த ஒருவரும் அவரது குடும்பத்தினரும் கடைசி காலத்தில் சாப்பாட்டுக்கு கஷ்டப்படாமல் வாழட்டும் என்பதற்காக அவர்களுக்கு செலவுக்கு பணத்தை அனுப்புவதை விடுத்து அவர்களின் நிலை அறிந்து அவர்களின் விருப்பு முயற்சி ஆளுமையை கேட்டு கண்டறிந்து உதவுவோம் என்ற நிலைப்பாட்டுக்கு ஏற்ப அங்குள்ள எங்கள் பெரியப்பாவின் பேரன் நேரில் சென்று அவர்கள் அனைவரையும் ஒன்று கூடி பேசி அவர்கள் தமது கடைசி மகளின் வீட்டில் தான் (வன்னியில்) இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்களது ஒருமித்த வேண்டுகோளுக்கு இணங்க அவர்களது கடைசி மகளது வீட்டிலேயே அவர்களது நீண்ட நாள் கனவான கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி தாருங்கள்…
-
- 19 replies
- 1.6k views
-
-
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வெள்ளநிவாரண உதவி வடக்கு மாகாணத்தில் தொடர்ந்த அதிகளவு மழைவீழ்சியினால் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுவாசல்கள் பாதிப்படைந்த நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ளதினை நீங்கள் அறிவீர்கள். அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் களத்தில் நின்று உதவி வரும் IBC தமிழ் ஊடக நிலையத்தினூடாக ருபா மூன்று இலட்சம் (300000) பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் புலன் பெயர் தமிழ் மக்களின் அமைப்புக்கள் இப்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுகின்றோம். http://www.pungudutivu.fr/2018/12/blog-post.html?spref=fb&fbclid=IwAR2JEg54LdD5nPmN_…
-
- 5 replies
- 1.6k views
-
-
சாவின் வாசலில் துடிக்கும் உயிர் காக்க நேசக்கரம் தருவீர். சாவின் நாளை எப்போதும் சந்திக்கத் தயாராகினாள் அக்கா. தன்னை மட்டுமே நம்பிய தன்னைத் தவிர யாருமேயில்லாத கணவனைத் தவிக்க விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. ஆனால் இனி உயிர்வாழும் விதியை பணமே தீர்மானிக்கும் நிலமையில் வேறு வழிகள் ஏதுமற்றுப் போனது. ஏழரைலட்ச ரூபாய் கட்டினால் அக்காவின் உயிரை மீளத் தரமுடியுமென்றார்கள் பணத்தை மட்டுமே நேசிக்கும் மனிதத்தை மறந்தவர்கள். அடுத்தவேளை உணவிற்கே யாராவது ஏதாவது கொடுத்தால் மட்டுமே உணவென்று வாழும் அக்காவிடமும் அக்காவின் கணவரிடமும் லட்சங்களைச் சேர்க்கும் வலுவேதுமில்லை. இனி விதியே எல்லாம் அப்படித்தான் அக்கா போனமாதம் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்; திரும்பினாள். தனது வலிகளை அவளையே உலகாய் ந…
-
- 9 replies
- 1.6k views
-
-
France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் + SECDA NGO = சிறு கைத்தொழில் திட்டம் (கிளிநொச்சி) France புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் தாயக மக்களுக்கான 2015க்கான நிதியாக பத்து லட்சம் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டு தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கமைய தைத்திருநாளில் போரினால் பாதிக்கப்பட் பெண்கள் தலமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரச்செயற்திட்டமாக சிறு கைத்தொழில் மாதிரி ஆடை உற்பத்தி நிலைய செயற்திட்டம் ஒன்று செயற்பட இருக்கிறது... இதன் ஒப்பந்தம் மற்றும் மாதிரிகள் விரைவில் இங்கு பதியப்படும்...
-
- 6 replies
- 1.6k views
-
-
ஆடி,ஆவணி,புரட்டாதி கணக்கறிக்கை PDF வடிவில். இந்த இணைப்பில் அழுத்தி கணக்கு விபரங்களை பார்வையிடலாம். நேசக்கரம் தன்னார்வத் தொண்டு அமைப்பின் உதவித் திட்டங்களினால் மூன்றாம் காலாண்டில் பயனடைந்தோரது விபரங்கள் , மற்றும் உதவியோரது விபரங்கள். 1)கல்விகற்கும் பாடசாலை மாணவர்கள் , பயனடைந்தோர் 765 மாணவர்கள். பயனடைந்த பாடசாலைகள் :- கனகபுரம் பாடசாலை (13மாணவர்கள்) , ஊற்றுப்புலம் அ.த.க (220மாணவர்கள்) , கிளிநொச்சி கனிஸ்ரா மகாவித்தியாலம் (6மாணவர்கள்). 239மாணவர்கள் பாடசாலைகள் ஊடாகவும் 136மாணவர்கள் வெளியிலிருந்தும் உதவிகள் பெறுகின்றனர். வழங்கப்பட்ட உதவிகள் கல்வி உபகரணங்கள் உடைகள் சத்துணவு மற்றும் வாழ்வாதார கற்றலுக்கான பண உதவிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன. வவுனியாவில் ஏ.எ…
-
- 6 replies
- 1.6k views
-
-
சமீபத்தில் முகப்புத்தகத்தில் கண்ணுற்ற காணொளி. உடனடியாக நண்பனுடன் தொடர்பு கொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்டேன். முற்றிலும் உண்மை தனிப்பட்ட முறையில் குறித்த வைத்தியரையும் தெரியுமென்பதால் அவரிடமும் உறுதிப்படுத்திக்கொண்டேன். வைத்திய செலவுக்காகும் தொகை மிகப்பெரிதென்பதால் நல்லுள்ளங்களிடம் உதவிவேண்டி நிற்கிறார் இந்த சிறுமி. உதவும் எண்ணம் கொண்டவர்கள் நேரடியாக காணொளியில் இருக்கும் வங்கிக்கணக்கிற்க்கு செலுத்திவிட்டு என்னிடமோ அல்லது அதிலுள்ள வாட்ஸ் ஆப் இலக்கத்திற்கோ அறியத்தந்தால் உங்களுக்கான காணொளியை வெளியிடும் போது அறியத்தர உதவியாக இருக்கும். என்னுடைய உதவித்தொகையை ஏற்கனவே குறிப்பிட்ட கணக்கிற்கு செலுத்தி உறுதிப்படுத்திக்கொண்டும் விட்டேன். நல்லுள்ளங்களுக்கு நன்றிகள் ht…
-
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு நடாத்திய கரப்பந்தாட்டம். 25.05.2013 அன்று மட்டக்களப்பில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பினால் கரப்பந்தாட்டப் போட்டி நடாத்தப்பட்டது. விபுலானந்த விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் :- கடல் மீன்கள் விளையாட்டு கழகம் வாழைச்சேனை விளையாட்டு கழகம் ஆரையம்பதி விளையாட்டு கழகம் கிரான் விளையாட்டு கழகம் கல்லாறு விளையாட்டு கழகம் விபுலானந்த விளையாட்டு கழகம் சிவானந்த விளையாட்டு கழகம் நியூ சவுண்ட் விளையாட்டு கழகம் எவக்ரீன் விளையாட்டு கழகம் லைட் ஹவுஸ் விளையாட்டு கழகம் ஆகிய பத்து விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன. நடுவர்களாக :- ஜெகதீஸ்வரன் விஜயகுமார் சாந்தன் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர். வாழைச்சேனை விளையாட்டு கழ…
-
- 10 replies
- 1.6k views
-
-
போரினால் பாதிக்கப்பட்டு வவுனியா மாவட்டம் ஆனந்த குமாரசுவாமி முகாமில் தங்கியிருந்து புளியங்குளம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் 59 மணவ மாணவியர்களுக்கான பாதணிகளை வழங்கும் திட்டத்திற்காக நேசக்கரம் அமைப்பானது உதவும் மனம்படைத்த புலம்பெயர் தமிழ் உறவுகளிடம் உதவிகள் கோரியிருந்தது. மேற்படி மாணவர்களுக்கான உதவிகளை பல நல்லுள்ளங்கள் முன்வந்து உதவியிருக்கிறார்கள். 28.06.2011அன்று மேற்படி மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது. உதவிகளை முன்வந்து வழங்கிய நல்லிதயங்களுக்கு அம் மாணவர்களின் சார்பாக நேசக்கரம் அமைப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. இத்திட்டத்திற்கான பங்களிப்பு வழங்கியோரின் பெயர் விபரங்கள் கிடைத்த தொகை ஆகிய விபரங்கள் PDFவடிவில் இணைக்கப்பட்டுள்ளது. கீழ் உள்ள…
-
- 8 replies
- 1.6k views
-
-
எளிதில் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ள எமக்கு உதவுங்கள் – வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் 91 Views வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் கொரோனாப் பெருந் தொற்று தொடர்பான ஒரு பொது வேண்டுகோளை புலம்பெயர் மக்களிடம் வைத்திருந்தார்கள். அது தொடர்பாக அதன் செயலாளர் மகிந்தகுமார் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம். வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தோற்றம். அதன் அங்கத்தவர்கள், செயற்பாடுகள் தொடர்பாக, எமது வாசகர்களுக்கு சுருக்கமாக அறியத் தருவீர்களா? பதில் – எமது வன்னி விழிப்புலனற்றோர் சங்கமானது 22.07.2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போரா…
-
- 1 reply
- 1.6k views
-
-
யூன் 2011 கணக்கறிக்கை யூன் 2011 கணக்கறிக்கை PDF வடிவில் இணைக்கப்படுகிறது. இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையை பாருங்கள். யூன் 2011 கணக்கறிக்கை இம்மாதம் பயன்பெற்ற மாணவர்கள் – 70. இம்மாதம் பயன்பெற்ற குடும்பங்கள் – 10. இம்மாதம் பயன்பெற்ற பெற்றோரை இழந்த பிள்ளைகள் – 9. நேரடிப்பயனாளிகள் தொகை இங்கே சேர்க்கப்படவில்லை. நேரடியாக உதவி வழங்குவோரும் பயனாளிகளும் நேரடித்தொடர்பில் இருக்கிறார்கள். இலங்கை ரூபாவில் அனுப்பப்பட்டுள்ள உதவிகள் எமது தொடர்பிலும் உதவுவோரின் தொடர்பிலும் இருப்போருக்கு உதவும் உறவுகளால் வழங்கப்பட்டுள்ளது. எமக்குத் தொகை தெரியப்படுத்தப்பட்டவர்களின் பெயர்களையும் கணக்கறிக்கையில் சேர்த்துள்ளோம். உதவிய உறவுகள் அனைவருக்கும் எம் இதயம் ந…
-
- 2 replies
- 1.6k views
-
-
01.12.10 கரும்பு - 14.06€ 02.12.10 சுஜி பிரித்தானியா - 33,18€ 02.12.10 தமிழன் கனடா - 72,97€ 03.12.10 அகூதா - 35,05€ 07.12.10 வாசகன் - 156,61€ 07.12.12 சுவி 20,00€ 08.12.10 தமிழன் கனடா - 72,87€ 08.12.10 அகூதா - 27,79€ 08.12.10 இளைஞன் - 30,00€ 12.12.10 காரணிகன் - 95,75€ 12.12.10 kathirs - 106,82€ 18.12.10 தமிழன் கனடா - 351,38€ 16.12.10 இளைஞன் 150,00€ 23.12.10 தமிழன் கனடா 147,38€ 23.12.10 கிருபன் - 50,00€
-
- 11 replies
- 1.6k views
-
-
கனடாவிலிருந்து யாழில் தொழிற்சாலை அமைத்த ஒருவர்
-
- 12 replies
- 1.5k views
-
-
35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரம் தேவை. செங்கலடி பிரதேச செயலர் பிரிவு வந்தாறு மூலை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் 35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி மற்றும் வாழ்வாதார உதவிகள் தேவைப்படுகிறது. கட்டாய நிலப்பறிப்பை தடுக்கும் நோக்கில் இந்தப் பகுதியில் உள்ள தமிழ்ப்பற்றாளர்களினால் உருவாக்கப்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் தற்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட காணிகள் அற்ற 35 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். மேற்படி கிராமத்தில் குடியேறியுள்ள குடும்பங்களுக்கான அடிப்படைத் தேவைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. குடிநீர் வசதிகள் கூட இல்லாத நிலமையில் வாழும் இக்குடும்பங்களுக்கு குளாய்கிணறுகளை அமைத்துக் கொடுப்பதன் மூலம் குடிதண்ணீரை அவர்கள் …
-
- 19 replies
- 1.5k views
-
-
வியாளேந்திரன் கனடா விஜயத்தால் கிடைத்த நன்மைகளில் இதுவும் ஒன்று . From Canada we have raised $46,521 todate. We will reach our target of $50,000 by April and close our 2015/2016 fund raising campaign. SACHA team like thank you all for your contribution, participation and the generosity. We have already donated $18,000 to Thilakavadiyar Girls Home, Srilanka, $13,000 to Vivekananda Girls Hostel, Kallady, Batticaloa & $5,000 to Vocational Training Project in Batticaloa. At Thilakavadiyar Girls Home, project is on hold due to rain and wet conditions. Balance $14,000 to Thilakavadiyar Girls Home will be sent as soon as they complete the work for $18,000 and ready to …
-
- 9 replies
- 1.5k views
-
-
திரு சிறிராசா ரஜிந்தனின் (பேசமுடியாதவர்) வீட்டுத் திட்டப் பணிகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது. வட்டு கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு சிறிராசா ரஜிந்தனுக்கு (பேசமுடியாதவர்) அரசின் வீட்டுத்திட்ட உதவியாக ஆறு இலட்ச ரூபாய் கிடைக்கப்பெற்று அவருடைய குடும்பத்தினரின் முயற்சியோடு ஓரளவு வீடு கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. சமையலறை, மற்றுமோர் அறை ஆகியவற்றை பூரணப்படுத்த வேண்டியுள்ளதோடு, மலசல கூடம் அமைக்க வேண்டி உள்ளது. திரு சிறிராசா ரஜிந்தன் குடும்பத்தினருக்கு முதற்கட்ட உதவி 50000 ரூபா வங்கிக் கணக்கில் வைப்பிட்டுள்ளனர். நண்பர்கள் சிவசங்கர் 30000 ரூபா, ராஜன் 20000 ரூபா நன்கொடை அளித்துள்ளனர். மிக்க நன்றி நட்புகளே. இக்காணொளியை பார்த்து உதவ விரும்புவோர் …
-
-
- 9 replies
- 1.5k views
- 2 followers
-
-
ஆனந்த குமாரசுவாமி முகாம் மாணவர்களுக்கு 100 பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனந்தகுமாரசாமி (மெனிக்பாம் செட்டிகுளம் வவுனியா) நலன்புரி நிலைய பொதுப்பாடசாலை மாணவர்களுக்கு 20.08.2011 அன்று 100பாதணிகள் வழங்கப்பட்டது. கடந்தமாதம் மெனிக்பாம் முகாமில் வதியும் 800மாணவர்களுக்கான பாதணிகள் , சீருடைகள் போன்ற உதவிகளை வேண்டியிருந்தோம். அதன் முதற்கட்டமாக நேசக்கரம் உறவுகளால் வழங்கப்பட்ட உதவியிலிருந்து இவ்வுதவியை 100மாணவர்கள் பாதணிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இம்மாணவர்களுக்கான தங்கள் உதவிகளை வழங்கிய MRS.Angela Sechneidereit (KFD SANKT JOSEPH BOCHUM,GERMANY) அவர்களுக்கும் தனது 50வது பிறந்தநாளை முன்னிட்டு உதவியை வழங்கிய பவானி தர்மகுலசிங்கம் அவர்களுக்கும் பெயர் குறிப்பிடவிரும்ப…
-
- 5 replies
- 1.5k views
-
-
அவனுக்கு இடுப்பின் கீழ் உணர்வற்று போனது 2009 இறுதி யுத்தத்தின் போது. ஒரு போராளியாய் தனது கடைசி நாட்களை களத்தில் செலவளித்த போதில் காலம் முழுவதும் மற்றவர்களுக்கு பாரமாகிவிடுவேனென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. இறுதியாய் இராணுவத்திடம் சரணடைந்தவர்களுடன் அவனும் சரணடைந்தான். தடுப்பு மருத்துவமனையென்று 2011வரையும் அங்குமிங்கும் அலைவு. 2012இல் அவர்களை பராமரித்த மருத்துவமனையும் எல்லோரையும் வீடுகளுக்கு அனுப்பியது. அப்போதுதான் தனது அடுத்த கட்டத்தின் பயங்கரத்தை உணரத் தொடங்கினான். ஊனமில்லாது சுகதேகியாக இருந்திருப்பின் அக்காக்களுக்கும் அவன் இராசகுமாரனாக இருந்திருப்பான். ஆனால் நாட்டுக்காக போனவன் ஊனமாகி வீடு திரும்பிய போது யாரும் அவனை விரும்பியேற்கவில்லை. அன்பை எதிர்பார்த்து போன அக்…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஜீவா அனுப்பிய 175€ இசைக்கலைஞன் - 53,06€ தப்பிலி - 38,89€ ஆகியோரின் பங்களிப்பு இந்த இணைப்பில் http://www.yarl.com/forum3/index.php?showtopic=75836 உதவி கோரியுள்ள குடும்பத்துக்கு அனுப்புகிறேன். தமிழன் (இவர் ஒரு தமிழகத்து உறவு) 66,57 € இந்த இணைப்பில் உள்ள http://www.yarl.com/forum3/index.php?showtopic=75908 குடும்பத்துக்கு மாதாந்த உதவியாக 100கனேடிய டொலர்களை உதவ முன்வந்து முதலாவது கொடுப்பனவை அனுப்பியிருக்கிறார். உரிய குடும்பத்திற்கு வங்கிக்கணக்கு எதுவும் இல்லாமையால் முதல் கட்ட உதவி நேசக்கரம் வங்கியூடாக அனுப்பப்படுகிறது. அடுத்த முறையிலிருந்து இந்த உதவி நேரடியாக தமிழன் அவர்கள் செய்யவுள்ளார். இக்குடும்பம் ஓரளவு வளமைக்குத் திரும்பியதும் அவர்களுக்கான சுயதொழில் வேல…
-
- 5 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்தில் உயிர் வாழப் போராடும் ஓர் சிறுமியின் உயிர் காக்க,கருணையோடு உதவிட முன் வாருங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு! Father - Yoga Mother - Jeyagowri Bank Account number- 8108042022(Commercial Bank) Mobile Number - 0094779672133 யாழ்ப்பாணம் வல்லிபுரம் புலோலி பகுதியினைச் சேர்ந்த,செல்வி.யுலக்சனா யோகா என்னும் பெயருடைய சிறுமி கடந்த 6 வருட காலமாக தொண்டைப்பகுதியில் புற்றுநோய் இருப்பதை உறுதிப்படுத்திய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் அவருக்கு இரண்டுதடவைகள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய்க் கட்டிகளை அகற்றினர். அதன் பின்னர் தொண்டைப்பகுதியில் துவாரம் இட்டு அதனாலேயே சிறுமி சுவாசிப்பதற்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டிருந்தனர்.இந்நிலையில் தொடர்ந்து க…
-
- 9 replies
- 1.4k views
-
-
சுவிஸ்வாழ் இலங்கையரின் மனிதாபிமான செயல்! சுவிஸில் இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாமதேவன் தியாகேந்திரன் என்பவர் தனது சொந்த நிதியில் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணியுடன் 1000 வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் எவருமே முன்னெடுக்காத காரியத்தை இவர் கையில் எடுத்துள்ளார். இதன் முதற்கட்டமாக 60 பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டத்திற்கான காணிகளை யாழ்.கோப்பாயில் வாங்கியுள்ளார். பயனாளிகளைத் தெரிவு செய்து விரைவில் 60 பேருக்கான வீட்டுத்திட்டத்தை வழங்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஏனைய இடங்களில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கான காணிகளை தெரிவுசெய்து வாங்கும் செயற்பாட்டில் இறங்கியு…
-
- 10 replies
- 1.4k views
-
-
200ஏக்கர் நிலத்தில் உருவாகும் மாதிரிக்கிராமம். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக பிரிவக்கு உட்பட்ட காரமுனை பகுதியில் நேசக்கரம் கைவினைப் படைப்பாளிகள் அமைப்பினால் 99வருட குத்தகைக்கு 200ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு சுயதொழில் ஊக்குவிப்புகளை உயர்த்தும் வகையில் மேற்படி காணி பெறப்பட்டுள்ளது. இந் நிலத்தினை மாதிரிக் கிராமமாக உருவாக்கும் எமது முயற்சிக்கு ஆதரவுகளை வேண்டி நிற்கிறோம். பாற்பண்ணை, மீன் வளர்ப்பு, சேனைப்பயிர்ச்செய்கை ,கால்நடை வளர்ப்பு போன்றவைகள் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் பெற்றுக் கொள்வோர் கீழ்வரும் விபரங்களில் பெற்றுக் கொள்ளலாம். Shanthy +49 (0)678…
-
- 1 reply
- 1.4k views
-