Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீவுகளில் ஒன்றே கச்சை தீவு. இத் தீவு கச்சை வடிவம் கொண்டதனால் கச்சை தீவு என்ற பெயர் வரலாயிற்று. இத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்.இத் தீவானது யாழ்பாணத்திலிருந்து 70 கி.மீ லிலும்,நெடுந் தீவிலிருந்து 28 கி.மீ லிலும்,இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ லிலும்,தலைமன்னாரிலிருந்து 25 கி.மீ லிலும் அமைந்துள்ளது.இராமேஸ்வரத்திலிருந்து கச்சை தீவுக்கு விசைப்படகு பயணம் 2 மணி நேரமே! இத் தீவானது, 79° 41’ நெடுங்கோட்டிலும், 9° 14’ அகலக்கோட்டிலும் அமைந்துள்ளது.இத் தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும்.உட்பகுதியில் வெண்மணல் திட்டுக்களும்,ஆங்காங்கே …

  2. திருவள்ளுவர் எப்போது பிறந்தார்? இன்று திருவள்ளுவர் தினம் என்று தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் கிமு 31-ம் ஆண்டில் பிறந்ததாகவும் (கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகளுக்கு முன்), 60 ஆண்டு சுழற்சி முறையிலான ஆண்டு முறை தமிழருக்கு ஏற்புடையதன்று என்பதால் தொடர்ச்சியான ஓர் ஆண்டு முறை வேண்டும் என்றும் பல தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி முடிவெடுத்ததாகவும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். தில்லைக்குமரன் எழுதியுள்ள இந்தக் கட்டுரை ( http://siragu.com/?p=1574 ) இதன் பின்னணியை விவரிக்கும். தை முதல் நாள்தான் ஆண்டின் முதல் நாளாக இருக்கவேண்டும்; ஏனெனில் அது solstice-க்கு அருகில் உள்ள நாள் என்பது அறிஞர் கூற்று. சோல்ஸ்டைஸ் என்பது கதிரவன் கடக அல்லது மகரக் கோட்டுக்கு நேர் மே…

    • 5 replies
    • 3.6k views
  3. சோ ராமசாமி பரப்பும் அவதூறுகள்! by Suvanapriyan (http://suvanappiriyan.blogspot.com) கேள்வி : பௌத்த - சமண சமயங்களை இந்து மதம் வீழ்த்தியதற்கும், இஸ்லாம் கிறித்தவ சமயங்கள் இந்து மதத்தை வீழ்த்துவதற்கும் என்ன வித்தியாசம்? சோ பதில் : இந்து மதம் - பௌத்த, சமண மதங்களை வாதம் செய்து வீழ்த்தியது. இஸ்லாம்,கிறிஸ்தவ சமயங்கள் மதமாற்றம் செய்து இந்து மதத்தை வீழ்த்துகின்றன. துக்ளக் - 26.10.2005 மக்களை மடையர்களாக கருதி மனம் போன படி கருத்துக் கூறி உண்மைகளை உருக்குலைத்து, பொய்மைகளைப் புகழேணியில் ஏற்றலாம் என்பது சோ கண்டு வரும் சொப்பனம். பௌத்த சமண சமயங்களை இந்து மதம் வாதத்தால் வீழ்த்தியது என்பது உண்மையின் கலப்பு ஒரு சதவீதம் கூட இல்லாத இமாலயப் பொய். எவரும் சொல்லத் துணியாத…

  4. யார் இந்த ஆபிரகாம் பண்டிதர்? தமிழிசை சாகித்தியங்களின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்ற முத்துத் தாண்டவர் முதலிய மூவரைப் போல, தமிழிசை இலக்கணத்தைத் தெளிவுபடுத்துவதற்கென வாய்த்த வல்லுநர்கள் மூவர். கருணாமிர்த சாகரம் எழுதிய ஆபிரகாம் பண்டிதர், யாழ் நூல் எழுதிய விபுலாநந்தர், சிலப்பதிகார இசை நுணுக்கம் எழுதிய டாக்டர் எஸ். ராமநாதன் ஆகியோர்தான் அந்த மூவர். “தமிழக முழுமைக்கும் உதவிய நற்பெரும் மருத்துவர்; கடல் போன்ற கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூல் எழுதியவர்; வீணை வித்தகர்; அறிஞர் போற்றிய இசை ஆராய்ச்சி அன்பர்; பெரும்புலவர்களைப் புரிந்து பேணிய வள்ளல்; இசை மாநாடுகள் இனிது நடத்தியவர்; பரோடா இந்திய இசை மாநாட்டில் 24 சுருதி பற்றிச் சொற் பெருக்கு ஆற்றிய ஆய்வாளர்; சுருளிமலைத்…

  5. கப்பல் கட்டுங்கலையில் ஈழத்து தமிழர்கள் தமிழர்களின் கப்பல் கட்டுங்கலை சம்பந்தமாக எனது கண்ணில் பட்ட தகவல்களை உங்களுடன் பகிரலாம் என நினைக்கின்றேன் ஈழத்து தமிழர்கள் அன்றைய கால கட்டத்தில் மூன்று கப்பலைக் கட்டினார்கள் அவைகளாவன , 01 அன்னபூரணி : இந்தக் கப்பல் வல்வெட்டித்துறையில் 1930ம் ஆண்டளவில் கட்டப்பட்டது. இது "நாகப்ப செட்டியாருக்காக சுந்தர மேஸ்திரியாரின் அனுபவ அறிவின் முதிர்ச்சியின் முயற்சியினால் " கட்டப்பட்டது. அடிப்படையில் அன்னபூரணி ஒரு பாய்கப்பல் ஆகும். வேம்பு, இலுப்பை மரங்களைக் கொண்டு எம்மவர் கப்பல் கட்டும் கலையைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. இதன் நீளம் 89 - 133 அடிகள் , அகலம் 19 அடி . இக் கப்பலில் புவிப்படம், திசையறிகருவி, ஆழமானி ஆகியவை மட்டுமே இருந்தன. …

    • 7 replies
    • 3.5k views
  6. சீனாவின் தமிழ்க் கல்வெட்டு கடாரத்தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி JayBee இந்தக் கல்வெட்டு சீனாவில் கண்டெடுக்கப்பட்டது. கேண்ட்டன் என்னும் நகரம் தென்சீனாவின் மிக முக்கியமான பட்டினம். அது பெருந்துறைமுகமாகவும் மாநகரமாகவும் வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கியது. உலகின் பல நாடுகளுடன் கேண்ட்டன் தொடர்புகொண்டிருந்தது. இந்தக் கல்வெட்டு கேண்ட்டன் நகருக்கும் வடக்கே 500 மைல் தூரத்தில் உள்ள ச்சுவான் ச்சௌ என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ச்சுவான் ச்சௌ என்பதும் ஒரு முக்கிய துறைமுகப்பட்டினமாக ஒரு காலத்தில் விளங்கியது. தமிழகத்துக்குச் சீ…

    • 2 replies
    • 3.5k views
  7. "உலகிலுள்ள மற்ற சமுதாயங்கள் போல தமிழ்ச் சமுதாயமும் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாறவேண்டும் "--பெரியார் தனித் தனிக் குழுமங்களாக அலைந்து திரிந்த ஆதிமனிதன் ஒருநிலைப்பட்டு, கற்காலம், இரும்புக்காலம், செம்புக் காலம், நவீனம் என வளர்ச்சியடைந்தபோது அவனுக்கு இயற்கையின் சக்தி சூட்சுமங்கள் புரியத்தொடங்கின. இதன் அடிப்படையிலேயே தெய்வ வழிபாடுகளையும் அதன் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே சிறுதெய்வ வழிபாடு அல்லது பெருந்தெய்வ வழிபாடு என்று உதிரிகளாகப் பிரித்துவிட முடியாது. சிவனும் பிள்ளையாரும் முருகனும் பெருந்தெய்வங்கள் அல்ல. அதேபோல 'இன்று" கருப்பனும் மாடனும் காமாட்சியும் சிறுதெய்வங்களாகவும் இல்லை. அவற்றின் பேரில் கண் முன்னே நிகழும் ஒரு உயிர்…

  8. சீனாவில் தமிழ்க் கல்வெட்டுகள் சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 மைல்கள் வடக்கே உள்ள சூவன் செள என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்தத் துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகஙகளிலும் தங்கி பிறகு வியட்னாம் சென்று அங்கிருந்து சீன நாட்டை அடைந்துள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து நேரடியாக சீனாவிற்குக் கடல் மார்க்கமாகச் செல்ல வேண்டுமானால் வங்காள விரி குடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாக தென் சீனக் கடலை அடை யலாம். மலேசிய தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்தப்…

  9. தமிழர்கள் வாசிக்க வேண்டிய கட்டுரை முந்தைய தி.மு.க ஆட்சியில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஆட்சி செய்யும் அ.தி.மு.க. அரசு மீண்டும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்புத்தாண்டு என மாற்றி விட்ட நிலையில் உண்மையை உரக்க சொல்ல வேண்டு மென்ற நோக்கில் இக்கட்டுரையை பொது அறிவு உலகம் வெளியிடுகிறது. சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே! சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்…

  10. மாமனிதனின் வரலாறு - ஜீவானந்தம் எல்லோரும் சமம்; எல்லோரும் நிகர்; எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று கருதுகிற துடிப்புமிக்க சிறுவன் அவன். எதற்கும் அஞ்சாதவன். நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம், தன்னுடன் பயிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் மாணிக்கத்துடன் மிகுந்த நட்பு கொண்டிருந்தான். அது தீண்டாமை சகதி ஊறியிருந்த காலம் என்பதால், ஆலயப் பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்டு இருந்தது. இதை உணர்ந்திருந்த சிறுவன், தன் நண்பனை தீண்டாமை தாண்டவமாடிய உயர் சாதியினர் வசிக்கும் தெரு வழியாக அங்குள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றான். இதை அறிந்த ஆதிக்க சாதியினர் சிறுவனை அழைத்து…

  11. காதலர் தினம் தமிழர் விழா? 2500 ஆண்டுகளுக்கு முன்பே காதல் விழா கொண்டாடிய தமிழர்கள்! காதலர் தினம் என்றால் மேற்கத்திய திருவிழா என்றுதானே இதுவரை நினைத்துக்கொண்டிருந்தோம்? ஆனால் உண்மை அதுவல்ல. காதலர் தினம் முதன்முதலில் பண்டைய தமிழகத்தில் கொண்டாடப்பட்ட ஒரு திருவிழா. ரோமில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது கி.பி 3ம் நூற்றாண்டில் இருந்துதான். ஆனால் பண்டைத் தமிழகத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு 5ம் நூற்றாண்டுக்கு முன்பே) இந்திர விழா (காதல் விழா, காமன் விழா) என்ற பெயர்களில் காதலர் தினம் கொண்டாடப்பட்டிருந்திருக்கிறது. பூம்புகாருக்கு வர்த்தகம் செய்ய வந்த ரோமானியர்கள் அதை ரோமில் ஏற்படுத்தியிருக்க வேண்டும். தமிழர் - ரோமானியர் வர்த்தகம்: ரோம் மன்னர் அகஸ்டஸ் கா…

  12. ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழரா? ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே – அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா? ”கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர்” (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் – முதல் தொகுதி) என்றும், ”நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு 22.08.1926) என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள…

    • 0 replies
    • 3.5k views
  13. Started by hari,

    வெள்ளைக்காரன் கட்டத் தெரியாம கட்டி சாய்ந்தால் அது உலக அதிசயம் தமிழன் அற்புதமாக கட்டினாலும் அது ஒண்ணுமில்லே - இதுதாண்டா உலக நீதி எது உலக அதிசயம் ********************* உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்ற…

  14. தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து பலியிடுவதற்க்கு அரிகண்டம் என்று பெயர். இது ஒரு விழாப் போல் நடத்தப்படும். நவகண்டம் ‍‍/ அரிகண்டம் கொடுப்பதற்க்கு முன் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம் ‍கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலப் பூண்டு இருப்பார். கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு,தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக் கொண்டு இறப்பார். இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்க்கு பல காரணங்கள் உண்டு. 1.வலிமையான‌ எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்க்கு வாய்ப்பே இல்லை என்ற‌ தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. துர்க்கைக்கு பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் …

    • 4 replies
    • 3.5k views
  15. புதிய தமிழ் கொடி தமிழினத்தை குறிக்கும் கொடியொண்டு உருவாகும் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.. உங்கள் ஆதரவு, வடிவமைப்பு தேவை. - உலகளாவிய ரீதியில் இருக்கும் தற்போதய கொடி தமிழரின் உணர்வுகளை அழிப்பதற்க்காக, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கொடியாகும்.. . . . . உருவாக்கபடும் புதிய கொடி.. உலகளாவியரீதியில் அறிமுகப்படுத்தப்படும்.. உங்கள் வாக்குகளை பச்சை புள்ளி சிவப்பு புள்ளி மூலம் தெரிவு செய்யவும். ஒருவர் ஒண்டுதான் குத்தலாம். யாழ் தளத்தில்தான் அதிக தமிழ் உண்ர்வாளர்களை கான முடிகிறது.. ஆகவே இதுவே சிறந்த தொடக்கம்..... மற்றும் இதை ஊர் புதினம் பகுதியில் தேவை கருதி இனைக்கப்பட்டுள்ளது...இடம் மாற்ற தேவையில்லை. நன்றி பனங்காய்...

  16. ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது.தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம். இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று ஆங்கில மொழி உலக மொழியாக உருவெடுத்துள்ளதால் சமுதாயத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள ஆங்கிலம் தேவை என்றாலும் அவசியம் ஒரு போதும் அடையாளம் ஆகிவிடாது என்பதை உணர வேண்டும். தமிழை முழுமையாக தெரிஉந்து கொண…

  17. உயிர்களின் பாகுபாடு குறித்த சிந்தனை காலந்தோறும் இருந்து வந்துள்ளது.அறிவியல்,ஆன்மீகம் என இருநிலைகளில் நம் சிந்தனை வளர்ச்சி பெற்றுள்ளது.எனினும் இன்னும் நம் கொள்கைகள் தெளிவுடையனவாக இல்லை.இதனை உணர்ந்துதான் இன்றைய விஞ்ஞானிகள் பூமிக்குக் கீழே அணுச்சோதடனை நடத்தி உயிரிகளின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இன்றைய அறிவியல் கொள்கைகள் தொல்காப்பியரின் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.இதனைத் தொல்காப்பித்தின் மரபியல் வழி அறியமுடிகிறது. தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு இன்றைய அறிவியல் கொள்கைகளோடு இயைபு பெற்று அமைவதை இயம்புவதாக இக்கட்டுரை அமைகிறது. தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு தொல்காப்பியர் உயிர்களை வகைப்பாடு செய்யும் போது, “ஒன்றறி வதுவே உற்ற…

  18. தலைவனை மறுத்தல் அகத்திணை மரபா.? தொகையும் பாட்டும் சங்க இலக்கியமென்று தமிழ்க்கூறும் நல்லுலகம் போற்றி வந்தது. தமிழிலக்கயத்தில் சங்கப் பாடல்களை நோக்குமிடத்து அகம், புறம், அகப்புறம் என்று பாகுபாடு செய்துள்ளனர். இது பாடற்பொருளின் தன்மை நோக்கிச் செய்யப்பட்ட பாகுபாடாகும். சங்கப்பாடல்கள் மொத்தம் 2381. இதில் புறப்பாடல்களை விட அகப்பாடல்களே அதிகமானவை. காரணம், பண்டைய தமிழ்ச் சமூகம் களவு, கற்பு என்னும் வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் தந்துள்ளதாகும். இந்நெறியானது களவில் அரும்பி கற்பில் மலர்கிறது. அகவாழ்க்கையில் தலைமக்களாகத் தலைவன், தலைவி, கருதப்பட்டாலும், தோழியின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். அகத்திணையின் உயிர்ப்பண்பாகக் காதலர் தம் மனவொற்றுமை இருக்கும் போது தலைவன…

  19. Started by SINTHANAIYALAN,

    ஆரிய மாயை...! பேராசிரியர் கே.ஏ.மணிக்குமார் அவர்கள் வடித்த "கங்கை சமவெளி ஆரியர் சமுதாயம்" ஆய்வுக் கட்டுரையில் சில தவறுகள் இருக்கலாம், ஆரிய-திராவிட எதிர்ப்பு முறையில் எழதப்பட்டிருக்கலாம், ஆனால் உண்மையில் ஆரியர்கள் அன்னியர்கள் என்பதனை மறுக்க முடியாது. தமிழர் பண்பாடு ஆரியர் வருகைக்கு முன்பே தனித்துவத்துடன் விளங்கியது, பிற்பாடு வந்த ஆரிய அன்னிய படையெடுப்புகளால் தமிழ்மொழியும், தமிழர் பண்பாடும் பாதிப்புக்குள்ளாகி திரிபடைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு என்பதாக சிதைந்தது இன்றும் தமிழர் பண்டிகைகளின் சிறப்புகள் குறுகி வட இந்திய கலாசாரங்கள் தமிழ் மக்களிடையே பரவி வருவதை கண்கூடாக காண முடிகிறது. எனினும் தமிழ்மொழி தன் தனித்தன்மையினால் இன்றும் சிறப்புற்று விளங்குகிறது. …

  20. யாழ்ப்பாண அரசகுமாரன் பேசுகிறார் !? . தமழில் அல்ல!!? ? யாழ்ப்பாணக்கொடி -------- ---------- வன்னிக்கொடி இயங்குபடம் பார்க Greetings to the People of Sri Lanka and to all people around the world. It gives me great pleasure to invite you to visit my website which elaborates on various aspects of “Jaffna, its Kingdom and my family”. In earlier times Jaffna was known as “Yaalpaanam”. Geographically, the peninsula of Jaffna together with its seven little islands, crowns the island of Sri Lanka. Tamils originated mainly from different parts of southern India. In ancient times, the entire island (Ilankai or Lanka) certainly was dominated by the p…

  21. தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! …

    • 8 replies
    • 3.4k views
  22. சிந்துவெளி நாகரிகம் http://ta.wikipedia.org/s/196[size=1] [size=3] கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.[/size] [size=3] [size=2] சிந்துவெளி [/size] சிந்துவெளி நாகரிகம் (Indus valley civilization), எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்வி…

  23. திராவிட மொழிகள் தென் இந்தியா முழவதும் 19 கோடி அளவிலான மக்களாற்; திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. தற்போதைய கணிப்பின்படி இக்குடும்பத்தினுள் அடங்கும் மொழிகள் 23. அதற்கு மேலும் படடியலில் அடங்காத சில மொழிகள் இருக்கத்தான் செய்கின்றன, உதாரணமாக, நீலகிரி மாவட்டத்திற் பேசப்படும் குறும்பம், பணியம் போன்ற நன்கு அறியப்படா மொழிகள் பட்டியலிற் சேர்க்கப்படவில்லை. ஒரேயொரு மொழியான பிராகுவியைத் தவிர மற்றைய 22 மொழிகளும் இந்தியாவின் தென்பகுதியிலும் கிழக்கு மத்திய பகுதிகளிலுமே பேசப்படுகின்றன. பிராகுவி மொழி ப10கோள ரீதியாக தனிமைப்பட்டு பாகிஸ்தானில் உள்ள கைபப10ர் ஹைதரபாத் மாவட்ட ங்களில் எட்டு இலட்சம் அளவிலான மக்களாற் பேசப்படுகிறது. பிரதான மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய…

  24. ஆசியவியல் நிறுவனத்தின் சார்பில், "ஆசிய பண்பாட்டு வளர்ச்சிக்கு தமிழர்கள் நல்கிய பங்களிப்பு' பற்றிய சர்வதேச கருத்தரங்கு சென்னையில் நடந்தது. சென்னை, தி.நகர் வாணி மகாலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கருத்தரங்கை துவங்கி வைத்து, பிரபல மொழி வரலாற்று ஆய்வாளர்களின் கட்டுரை முடிவுகளிலிருந்து, முக்கிய ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் பேசியதாவது: தமிழர்களின் கடல் கடந்த அயல்நாட்டு தொடர்புகளையும், அத்தொடர்புகளின் சமுதாய வரலாற்று பின்னணிகளையும் விரிவாக ஆராய்ந்து நிலை நாட்டும் விதமாக இந்தக் கருத்தரங்கு அமைந்துள்ளது. இந்திய மொழிகளில் தமிழ் மொழி அளவுக்கு, உலகின் பெரும்பான்மையான தொல் பழங்கால மொழிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மொழியாக வேறு எந்த மொழியும் இ…

    • 27 replies
    • 3.4k views
  25. யாழ்ப்பாண மொழி தமிழின் வட்டார வழக்கா? தனி மொழியா? - 1 Monday, December 29, 2014 கி.மு 500 முதலே இலங்கையில் வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் ஆகிய இருசாராருமே குடியேறத் தொடங்கி இருப்பதை தொல்லியல் சான்றுகள், இலக்கியங்கள் ஆகியவை உறுதி செய்கின்றன. கி.மு. 500-களில் இந்தியாவில் பல மொழிகள் பேச்சு மொழியாக இருந்த போதும், பிராகிருதமும், தமிழுமே எழுத்து மொழியாகவும் வளர்ச்சியடைந்த மொழியாகவும் இருந்து வந்துள்ளது. ஆகவே இலங்கையில் கூட இந்த இரு மொழிகளைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் பலவும் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த கல்வெட்டுக்கள் யாவுமே பௌத்த துறவிகள், அரசர்கள், வணிகர்கள் ஆகியோரைப் பற்றிய தகவல்கள் தருகின்றன. இலங்கையின் அரசர்கள் தமது சமய மொழியாக பிராகிருதத்தையும், வணிக மொழியாக தமிழையும் ஏற்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.