பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
உலகையே மிரண்டு போக வைத்த தமிழனின் புராதன கால விலங்கு..!! இன்று வரை எந்த ஆய்வாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்..!! நம்மில் எத்தனைப் பேருக்கு யாளி என்றால் என்னவென்று தெரியும்.? யாளிகள் தென்னிந்தியாவில் உள்ள கோவில் சிற்பங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணமும். அதன் தோற்றம் சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை “சிம்ம யாளி” என்றும், ஆட்டுத்தலை கொண்டதை “மகர யாளி” என்றும், யானை முகத்தை “யானை யாளி” என்றும் அழைக்கிறார…
-
- 4 replies
- 2.2k views
-
-
2000 ஆண்டுகள் பழைமையான சங்க காலக் கோட்டைகளில் பொப்பண்ண கோட்டை மிக முக்கியமானது தமிழால் இணைவோம் படத்தில் நீங்கள் பார்ப்பது ''கூகிள் மப்'' மூலம் பிடிக்கபட்ட புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள பொப்பண்ண கோட்டையின் புகைப்படம். படத்தில் தெரிகின்ற அந்த வட்டப் பகுதிதான் பொப்பண்ண கோட்டை.பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்டது.2000 ஆண்டுகள் பழைமையான சங்க காலக் கோட்டைகளில் பொப்பண்ண கோட்டை மிக முக்கியமானது. படத்தில் தெரிகின்ற அந்த வட்ட வடிவிலான மண் கோட்டையானது 50 அடி உயரமும் 50 அடி அகலமும் கொண்டதாகும். இந்த அகலமான மண் கோட்டை மீதுதான் செங்கல்லால் ஆன நெடுமதில்(சுவர் ) முன்பு அமைந்திருந்தது. காலப் போக்கில் இயற்கையின் சீற்றங்களாலும், புதுக்கோட்டை மக்களின் கட்டுமான தேவைக்காகவும் அந்த மதில்…
-
- 0 replies
- 772 views
-
-
கப்பல் கட்டுங்கலையில் ஈழத்து தமிழர்கள் தமிழர்களின் கப்பல் கட்டுங்கலை சம்பந்தமாக எனது கண்ணில் பட்ட தகவல்களை உங்களுடன் பகிரலாம் என நினைக்கின்றேன் ஈழத்து தமிழர்கள் அன்றைய கால கட்டத்தில் மூன்று கப்பலைக் கட்டினார்கள் அவைகளாவன , 01 அன்னபூரணி : இந்தக் கப்பல் வல்வெட்டித்துறையில் 1930ம் ஆண்டளவில் கட்டப்பட்டது. இது "நாகப்ப செட்டியாருக்காக சுந்தர மேஸ்திரியாரின் அனுபவ அறிவின் முதிர்ச்சியின் முயற்சியினால் " கட்டப்பட்டது. அடிப்படையில் அன்னபூரணி ஒரு பாய்கப்பல் ஆகும். வேம்பு, இலுப்பை மரங்களைக் கொண்டு எம்மவர் கப்பல் கட்டும் கலையைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. இதன் நீளம் 89 - 133 அடிகள் , அகலம் 19 அடி . இக் கப்பலில் புவிப்படம், திசையறிகருவி, ஆழமானி ஆகியவை மட்டுமே இருந்தன. …
-
- 7 replies
- 3.5k views
-
-
இந்த ஆண்டு தமிழர்களின் வரலாற்றில் மிகத் துயரமான ஆண்டு. 51,000 அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட ஆண்டு. உலகமும் அதாவது முற்போக்கான உலகமும், இயற்கையும், ஏன் அன்றாடம் நாம் வண்ங்கும் இறைவனும் தமிழனை கைவிடப்பட்ட ஆண்டு. தீபாவளி தமிழனின் பண்டிகையே கிடையாது என்பது யாவரும் அறிந்த விடயம் - தமிழ்நாட்டில் உள்ள தமிழரைத் தவிர்த்து - நானும் அவர்களில் ஒருவன், சென்ற ஆண்டு வரை. ஈழத்தமிழர்கள் பகட்டுக்கு அதாவது ஈழம் தவிர்த்து வாழும் நாடுகளில் தமிழக தொலைக்காட்சிகளை பார்த்து கெட்டுப் போய், பார்ப்பான்களும் கோவில்களும் வியாபாரிகளும் விரித்தவலையில் விழுந்துள்ளனர். இதில் வெட்க கேடு என்ன என்றால் இந்த துயரமான ஆண்டிலும் இந்த ஆரிய பாரம்பரிய தீபாவளியை கொண்டாடுவது. உங்கள் விருப்பத…
-
- 2 replies
- 995 views
-
-
தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் சிறப்பான இடத்தினைப் பெறும் கொம்புமுறி விளையாட்டு தமிழர் எமது கலை, கலாச்சாரங்கள் மறைந்துவரும் நிலையில். நான் நீண்ட நாட்களாக அறிய ஆவலாக இருந்த விடயம் ஒன்றுக்கு முற்று முழுதான விளக்கம் கிடைத்திருக்கின்றது. அது வேறு ஒன்றுமல்ல. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கொம்புமுறி விளையாட்டு பற்றிய பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. எனது கிராமம்கூட கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற ஒரு கிராமமாகும். இக் கிராமத்திலே கொம்புமுறி விளையாட்டு இடம் பெற்ற இடம் கொம்புச் சந்தி என்று இப்பொழுதும் அழைக்கப்படுகிறது ஆனால் இங்கு இருக்கும் அநேகமானவர்களுக்கு கொம்புமுறி விளையாட்டு என்றாலே என்ன என்று தெரியாது. கலாபூசனம் …
-
- 1 reply
- 2.9k views
-
-
ஈழத்தமிழர்களின் வரலாற்று ஆதாரங்கள் பலவிதங்களால் இல்லது போயின 1. தமிழ் பௌத்தர்கள இருந்ததற்கான வரலாறு சிங்களவர் தமது என உரிமை கோரி அபகரித்துகொண்டனர் 2. இந்து/சைவ சமயம் சார் ஆதாரங்களான புராதன ஆலயங்கள் போர்த்துகேயர், ஒல்லாந்தரால அழிக்கப்பட்டு அம்மூலப்பொருட்கள் கோட்டைகள் கட்ட பயன் பட்டன. அதற்கு இன்றும் உள்ள ஆதாரமாக திருகோணமலை கோட்டைசுவரில் உள்ள முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை எனும் கற்வெட்டு. 3. போர் சூழலால் அழிக்கப்பட்டவை. 4. நாமெ அழித்தவை, அழித்துகொண்டிருப்பவை இதில நாமே அழித்தவை /அழித்துகொண்டிருப்பவை தான் வருத்ததிற்குரியதும் எமது இழி நிலையுமாகும். எம்மிடம் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டடங்கள் தற்போது இல்லதுவிட்டாலும் சில நூற்வருடங்க…
-
- 10 replies
- 2.6k views
-
-
-
- 1 reply
- 510 views
-
-
இலமுரியா கண்டம் ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள். பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர். பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் கும…
-
- 1 reply
- 2k views
-
-
வணக்கம், என்னை போன்றவர்களுக்காக ஒரு உதவி.இலங்கையின் உண்மையானா வரலாறு என்ன? முதலில் வந்து குடியேறியவர்கள் யார்? தெரிந்ததை சொல்லுங்கள், தமிழ் ஆங்கில இணைப்புகள் இருந்தால் தாருங்கள் நன்றி
-
- 20 replies
- 3.9k views
-
-
சிறீ எதிர்ப்புப் போராட்டம் யாழ் இணையத்தள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் 1958 ஆம் ஆண்டுக் கலவரம் மற்றும் தமிழர்களின் சிறீ எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான விளக்கமான செய்திகளை அறிய விரும்புகிறேன். சில நூல்களை நான் படித்து இருக்கிறேன் ஆனால் இது தொடர்பான விளக்கங்கள் அதிகமாக இல்லை. குறிப்பாக சிறீ எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை வகித்த கோப்பாய் வன்னியசிங்கம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி.
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர் இசைக்கருவிகள் ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி ஈகரை தமி மிகப் பெரிய பானை வடிவில் உள்ள ஐந்து முகங்கள் கொண்ட இசைக்கருவி ஐமுகமுழவு அல்லது குடமுழா. அடிப்பக்கம் செம்பு (தாமிரம்) அல்லது வெண்கலத்தால் உருவாக்கப்பட்டிருக்கும். மேற்பாகம் தோல் பயன்படுத்தி இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். மான் தோலே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஐமுகமுழவு சக்கரம் இணைக்கப்பட்டு இரும்புச் சட்டங்களினுள் அமைக்கப்பட்டிருக்கும். இடம் விட்டு இடம் நகர்த்திச் செல்ல ஏதுவாக இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (கேரளாவில் மி…
-
- 0 replies
- 488 views
-
-
இசை - அரசியல் - பாட்டு -பேராசிரியர் க. பூரணச்சந்திரன் இசை மொழி கடந்தது 1840-களில் முதன்முதல் தமிழிசை இயக்கம் உருவானபோது, நிறையப்பேர் அதை எதிர்த்தார்கள். அவர்களது `ஆர்க்யுமென்ட்' இது இசைக்கு பாஷை எதற்கு? `ஸ்ருதி மாதா, லய பிதா' (இசைக்கு ஸ்வரங்களே தாய், தாளமே தந்தை). அப்படியிருக்கும்போது தமிழில் பாடினால் என்ன, தெலுங்கில் பாடினால் என்ன, இந்தியில் பாடினால் என்ன? இதற்கு தமிழிசை இயக்கக்காரர்களும், தமிழிசை இயக்கத்தை ஆதரித்த கல்கி, இராஜாஜி போன்றவர்களும் என்னென்ன வாதங்களை எதிராக வைத்தார்கள் என்பதற்குள் நாம் போகவேண்டாம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்போம். சரி, ஐயா, இசைக்கு பாஷை இல்லை என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். அப்படியானால் தெலுங்கில் தான் பாடுவோம் என்று ஏன் அடம…
-
- 0 replies
- 1.4k views
-
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்! -முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி மூன்று நாடுகளும் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் அவற்றுக்கென்று இருபத்தியொரு நாடுகளும் உள்ளன. அதே எண்ணிக்கை உள்ள தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நாடும் சொந்தமானதாக இல்லை. ஐக்கிய நாடுகள் மன்றிலும் தமிழ் நாட்டுக்கென ஒரு நாற்காலியும் இல்லை. இது பற்றி எண்ணி வருந்திக் கொண்டிருப்பவர்கள் நம்மில் பலர். அதற்கான எண்ணங்களை கோடிக்கணக்கில் எண்ணினோம். பேச்சுகளை ஆயிரக்கணக்கில் பேசினோம். கொள்கைகளை நூற்றுக்கணக்கில் வெளியிட்டோம்.…
-
- 0 replies
- 609 views
-
-
இக்கல்வெட்டு யாழ்பாண இராச்சிய மன்னனாகிய சிங்கையாரியனைப் பற்றிக் குறிப்பிடும் தமிழ் கல்வெட்டு ஆக எமது வரலாற்றிலே அளப்பரிய பங்கை வகிக்கின்றது. நல்லூர் இராசதானியின் கிழக்கு எல்லையாகிய நாயன்மார்கட்டுக் கிராமத்திலுள்ள அரசடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள திருக்குளம் ஆழமாக்கிய போது இக்கல்வெட்டுக் கண்டு பிடிக்கப்பட்டு , பின்பு ஆலயத்தில் நீண்டகாலம் வைக்கப்பட்டிருந்தது. இக்கல்வெட்டு பின்னர் யாழ்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் செ. கிருஷ்ணராசாவினது முயற்சியால் யாழ்பாணப் பல்கலைக்கழக நூதன சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. 2 அடி நீளமும், 1.5 அடி அகலமும் கொண்ட இக்கல்வெட்டில் ஐந்து வரிகள் உள்ளன. இதனை வாசித்தோர் கலி 3925 இல் தீர்த்தங்…
-
- 0 replies
- 814 views
-
-
http://www.youtube.com/watch?v=c19t09Zz-0Y&feature=youtu.be விஜய் தொலைக்கட்சியில் "தமிழ்பேச்சு" நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் தமிழில் பிற மொழி கலவாமல் பேசுவதின் அவசியத்தைக் குறித்து ஆற்றிய உரை.
-
- 8 replies
- 1.4k views
-
-
பொன்னியின் செல்வன் - வரலாற்றுத் தவறு பெரும்பாலான வலைமனை வாசிகள் எப்படியும் ஒருதடவையேனும் பொன்னியின் செல்வனை ரசித்து ருசித்துப்படித்திருப்பீர்கள். வந்தியத்தேவனுடன் கடம்பூர், பழையாறை, அரசிலாற்றங்கரை, ஈழம், தஞ்சை என வலம் வந்திருப்பீர்கள். எத்தனையோ வரலாற்று நாவல்கள் வந்தாலும் பொன்னியின் செல்வன் படிப்பதுபோல் ஒரு உற்சாகம் ஏனைய நாவல்களில் குறைவாகவே இருக்கும். ஒரு வலையில் சுந்தரச்சோழரின் இறுதிக்காலத்தில் என்ன நடந்தது பற்றி அலசி ஆராய்ந்திருந்தார்கள்(அதன் சுட்டியை மறந்துபோனேன்) மதுராந்தகருக்கு என்ன நடந்தது? நந்தினி என்ன ஆனாள்? போன்றவற்றைப் பற்றிப் பலர் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள். பொன்னியின் செல்வனில் அருள்மொழிவர்மன் ஒரு காரியத்தை மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருந்…
-
- 6 replies
- 8.7k views
-
-
மாவீரன் சங்கிலியன் சரித்திர தொடர் ( முன்னுரை ) ‘வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்’ என்பார்கள். என்னைப் பாதியாவது ஆக்கியுள்ளது எனலாம். நிறைய வாசிப்பேன், அதுவே என்னை எழுதவும் தூண்டியது. வலைப்பதிவில் எமது ஆத்ம திருப்திக்காக எதையும் எழுதலாம். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் அது சாத்தியப்படாது. அவற்றில் பிரசுரிக்கக் கூடிய தரத்தை குறித்த ஆக்கங்கள் ஓரளவாவது கொண்டிக்க வேண்டும். அந்தத் தரத்தை கொண்டதாக இது அமையும் என்று நான் கருதுகின்றேன். வாசிக்கும் போதும் அதிகமாக சரித்திர நாவல்களையே விரும்பிப் படிப்பேன். தென் இந்திய நாவலாசிரியர்களினது சரித்திர நாவல்களை வாசிக்கும் போது அது எத்தனை பக்கங்களைக் கொண்டிருந்தாலும் வாசிக்கும் போது சலிப்பே வராது. அந்தளவு அவர்கள் வரலாற்றை கற்பனையுடன் கலந்…
-
- 7 replies
- 2.5k views
-
-
வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் உண்மையா.. கற்பனையா? - Mannar Mannan Interview | PS1 | Ponniyin Selvan பாண்டிய அரச வம்சம் தொடர் ஆட்சி செய்த காலம் உலக வரலாற்றிலேயே மிக அதிகமாம்.
-
- 2 replies
- 738 views
- 1 follower
-
-
இலங்கையின் இரத்தின மாநகரம் என்றழைக்கப்படும் இரத்தினபுரியிலிருந்து 53 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கிறது இறக்குவானை எனும் அழகிய நகரம். சிங்கராஜ வனத்தை எல்லைப்பகுதியாகக் கொண்ட இறக்குவானை அனைத்து மதங்களுக்கும் பொதுவானதோர் இடமாக விளங்குகிறது. நகரத்திலிருந்து பார்க்கும்போது நாலாபக்கமும் தூரத்தே தெரியும் ஆரண்யகத்தின் வனப்பு எம்மை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த காட்டுக்குள் ஒரு சிவன் ஆலயம் இருப்பதாகவும் அது அதிசக்தி வாய்ந்த ஆலயம் என்றும் அப்பகுதி மக்கள் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு. அதனை கண்டறிவதற்காக எமது பயணம் ஆரம்பமானது. 'ஆமாங்க, பழைய காலத்துக் கோயில் ஒன்னு இருக்குது. கங்கொடை என்கிற இடத்த தாண்டி காட்டு வழியா போகனும். யானை உருவத்தில ஓர் ஆல மரம் இருக்கும். அதான் …
-
- 0 replies
- 1.1k views
-
-
இஸ்லாமிய தமிழர்களும், சாவக - ஹம்பேயர்களும்: சேரமான் (பாகம் - 1) சவூதி அரேபியாவை தமது தாயகமாக விளித்துக் காலம் காலமாக இஸ்லாமிய தமிழர்களிடையே நயவஞ்சக அரசியல் புரிந்துவரும் இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் முகத்தில் கரிபூசிய சம்பவமாக கடந்த வாரம் சவூதியில் நிகழ்ந்தேறிய ரிசானா என்ற இஸ்லாமிய தமிழ் யுவதியின் தலைதுண்டிப்பு சம்பவம் திகழ்கின்றது. ‘நாங்கள் முஸ்லிம்கள். நாங்கள் தமிழ் மொழியில் பேசினாலும் சவூதி அரேபியாதான் எங்கள் தாயகம். எனவே நாங்கள் தமிழர்கள் அல்ல’: இதுதான் காலம்காலமாக சிங்கள அதிகாரவர்க்கத்திற்கு துணைநின்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இரண்டகம் செய்யும் இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வைக்கும் வாதம். ஆனாலும் சவூதி அரேபியாவில் தமது ஆணிவேரை…
-
- 0 replies
- 2.4k views
-
-
இராமாயண இதிகாசம் - ஆரிய, திராவிடப் போராட்டத்தின் வெளிப்பாடு என்று, தந்தை பெரியார் கூறி வந்தார். அதே கருத்தை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், ஈழத் தமிழர்களிடையே பரப்பி வருகிறது. இக்கருத்தை மய்யமாகக் கொண்டு தமிழ் ஈழத்தில் விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான ‘புலிகளின் குரல்’, ‘இலங்கை மண்’ என்ற தொடர் நாடகத்தை - 53 வாரங்கள் ஞாயிற்றுக் கிழமை தோறும் ஒலிபரப்பியது. கலை இலக்கியவாதியும், பகுத்தறிவாளருமான பொன்.கணேசமூர்த்தி எழுதி இயக்கிய இந்த நாடகத் தொடர், ஈழத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சில பழமை விரும்பிகள், ராமாயணத்தின் பாதுகாவலர்கள் - இதற்கு எதிர்ப்புக் காட்டவும் தயங்கவில்லை. ஆனாலும், தமிழர் பண்பாட்டை சிதைத்த ஆரியத்தை அம்பலப்படுத்திய இந்த நாடகத்தைத் தொடர்ந்து பா…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 1 reply
- 968 views
-
-
மாநாகன் இனமணி 106 https://app.box.com/s/xdohnf42hl2s1nlezoxrfzao8o8a2s04 விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித் திசை தொறும் ஒன்பான் முழநிலம் அகன்று விதிமாண் நாடியின் வட்டம் குயின்று பதும சதுரம் மீமிசை விளங்கி அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே நறுமலர் அல்லது பிறமரம் சொரியாது பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது தேவர் கோன் இட்ட மாமணிப்பீடிகை பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம் (மணிமேகலை - மணிபல்லவத்துயர் உற்ற காதை 44-53) அடிச்சதுரம், அதன் மீது என்பட்டம், அதன் மீது வட்டம் எனும் வடிவமைப்பு வெளிக்கருவின் இயங்குநிலை வடிவம் ஆகும். அத்தகை ஆசனம், அதன் மறுதலையாகப் பயன்பாட்டு நிலையில் பாண்டிய மன்னர்கள் பயன்படுத்திய…
-
- 0 replies
- 553 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன்.க பதவி, பிபிசி தமிழுக்காக 25 பிப்ரவரி 2024, 02:21 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் கடந்த கால வரலாற்றில் சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களைப் போன்றே பல்வேறு சிற்றரசர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி புரிந்திருந்தனர். மக்களுக்கான திட்டங்களை வழங்கி நாட்டின் எல்லைகளை விரிவாக்கி, எதிரிகளிடமிருந்து மக்களை பாதுகாக்கும் பணியினை செய்த அரசர்கள் மட்டுமே வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள், பல்லவர்கள் ஆட்சி காலம் வரலாற்றில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. அவர்களுக்கு இண…
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது! [Monday, 2012-11-12 20:01:38] இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே! நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செமொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 'தமிழ்நாட்டுத் தொல்லியல்…
-
- 2 replies
- 1.1k views
-