பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
ஈழத்துக் கடலோரக்கிராமத்துப் பேச்சு வழக்கு அடை - கரைவலை வள்ளம் மண் புட்டிக்கு இழுக்கப்படும் பொழுது வள்ளத்தின் அடியில் உள்ள எரா இலகுவாகச் சறுக்கி வழுக்கிக் கொண்டு வருவதற்காக வைக்கப்படும். ஓர் ஒழுங்கு முறையில் அடுக்கப்பட்ட மரக்குற்றிகள் அடை எனப்படும். அறும்புக்காலம் - கடலில் மீன் பிடிபடுதல் மிக மிகக் குறைவாக உள்ள காலம் அம்பறக்கூடு - பனம் மட்டையை வளைத்து, குறுக்காகக் கம்புகள் கட்டி, கிடுகினால் வேயப்பட்ட சிறுதுண்டுக் கூரை அத்தாங்கு - "பை" போன்ற அமைப்புள்ள நூல் வலையின் வாய்ப்பகுதியில், காட்டுத்தடியை வட்டமாக வளைத்துக் கட்டுவர். இதனால் ஆழங்குறைந்த நீர் நிலைகளில், நிலத்தில் வாரி இறால் பிடிப்பர். சில இடங்களில் அவ்வளையம் இரும்பினாலும் செய்யப்படும் ஆனைச்ச…
-
- 5 replies
- 1.3k views
-
-
“ஆடவர் தோளிலும் கா, அரிவையர் நாவிலும் கா” (மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்) January 29, 2022 மட்டக்களப்பு மாநில மண்வாசனைச் சொற்கள் – 01 ‘கா‘ * இலங்கைத் தமிழர்களின் மரபுவழித் தாயகமாகக் கருதப்படும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல வழிகளிலும் தனித்துவமான சமூக- பொருளாதார- கலை-இலக்கிய- சமய-பண்பாட்டுக் கூறுகளை ‘மட்டக்களப்பு மாநிலம்’ கொண்டிருக்கிறது. * அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய பிரதேசங்களை விட மட்டக்களப்பு மாநிலத்தில் மட்டுமே வழங்குகின்ற மட்டக்களப்புப் பிரதேச வழக்காற்றுச் சொற்கள் பலவுள்ளன. அச்சொற்களையே மண்வாசனைச் சொற்கள் என அழைக்கின்றோம். * இங்கே மட்டக்களப்பு மாநிலம் என அழைக்கப்பட…
-
- 2 replies
- 1.3k views
-
-
எந்த ஒரு மனிதனும் தன் தாய் அரவணைப்பிலே இருக்க, வளரவே விரும்புவான்.ஆனால் இது தமிழர்கள் விடயத்தில் முரண்படுவது ஏன்! இன்று அநேக தமிழர்கள் தன் "தாய்" மொழியை விடுத்து மாற்றான் மொழியை அரவணைக்கிறார்கள். அதையே அதிகமாக பேச விரும்புகிறார்கள்.அப்படி பேசுவதன் மூலம் தன்னை அருகில் இருப்பவர்களை விட சற்று உயர்த்தி காட்ட முற்படுகிறார்கள்! 2000 ம் ஆண்டுகளுக்குக்கு பிறகு இன்று இலங்கையிலே தமிழர்கள் மத்தியில் ஆங்கில மோகம் தலை விரித்தாடுகிறது. ஆங்கில மொழி மூல கல்வி பாடசாலைகளிலே புகுத்தப்பட்டுள்ளது. அநேகமான மாணவர்களும் அதையே விரும்பி நுழைகிறார்கள். இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணம். பக்கத்து வீட்டுக்காரி பிள்ளை ஆங்கில மொழியில் கல்வி கற்கிறதாம் என்பதற்காக தன் பிள்ளையையும்…
-
- 6 replies
- 1.3k views
-
-
பிற மொழிப்பெயர்கள் > #தமிழ் ப் பெயர்கள் 1 டிரேடரஸ் (Traders)=> வணிக மையம் 2 கார்ப்பரேஷன் (corporation) => நிறுவனம் 3 ஏஜென்சி (Agency) => முகவாண்மை 4 சென்டர் (Centre /Center) => மையம், நிலையம் 5 எம்போரியம் (Emporium) => விற்பனையகம் 6 ஸ்டோரஸ் (Stores) => பண்டகசாலை 7 ஷாப் (Shop)=> கடை, அங்காடி 8 அண்கோ (And Co / & Co) ( & Company) => குழுமம் 9 ஷோரூம் (Showroom) => காட்சியகம், எழிலங்காடி 10 ஜெனரல் ஸ்டோரஸ் (General Stores) => பல்பொருள் அங்காடி 11 டிராவல் ஏஜென்சி (Travel Agency)=> சுற்றுலா முகவாண்மையகம் 12 டிராவலஸ் (Travelers) => போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம் 13 எலக்டிரிகலஸ் (Electricals) => மின்பொருள் பண்டகசா…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஏ.ஜே.என்றொரு மனிதன்! -மு.பொ.- * ஏ.ஜே. இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பு நூல்கள் என தொகைக் கணகில் பார்க்கையில் சிறியதாயினும் மகத்தானது... ஒரு முறை நான், யாழ்ப்பாணத்தில் ஏ.ஜே.யோடு பலதையும் பற்றிக் கதைத்தவாறு றோட்டில் நடந்துகொண்டிருந்த போது பின்வருமாறு கேட்டேன். "நீங்கள் ஏன் சிறுகதை, நாவல் போன்ற ஆக்க இலக்கியங்கள் எழுதுவதில் அக்கறைகாட்டுவதில்லை?" இதைக் கேட்டதும் அவர் ஒருதரம் என்னைப்பார்த்து லேசாக சிரித்துவிட்டு இப்படிச் சொன்னார். "I Know My Limit And limitations' ( எனக்கு எனது எல்லைகளையும் போதாமைகளையும் நன்கு தெரியும்) அவர் மிகக் குறைந்த சொற்களைப் பாவித்து, மிக நுட்பமான முறையில் அளித்த பதில் என்னை வியப்புற வைத்தது. இன்று கவிஞர்கள், சிற…
-
- 4 replies
- 1.3k views
-
-
திருப்பதி : இந்தோனேசிய கரன்சியில், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.முழு முதற்கடவுளான விநாயகருக்கு, நம் நாட்டில் மட்டுமின்றி, இந்தோனேசிய நாட்டிலும் மதிப்பு அளிக்கப்படுகிறது. அந்நாடு வெளியிட்டுள்ள, 20 ஆயிரம் ரூப்பியா நோட்டில், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.அத்துடன், அந்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் கல்விக்கு வித்திட்ட செம்மல், கிஹாஜர் தேவாந்தரானி உருவமும், மறுபுறம் கல்வி நிறுவன படமும் இடம் பெற்றுள்ளன. இந்தோனேசியாவில், 1.7 சதவீத இந்துக்களே வசிக்கின்றனர்; அதிலும், அங்குள்ள பாலி தீவில் தான், அதிக இந்துக்கள் வசிக்கின்றனர்.இந்த கரன்சி நோட்டை, ஆந்திர மாநிலம், அமலாபுரம் எஸ்.பி.ஐ., அதிகாரி ரவிசுப்ரமணியம் சேகரித்து வைத்துள்ளார். http://www.dina…
-
- 7 replies
- 1.3k views
-
-
‘Establishing Tamil University is a shot against National Integration’ என்று சீறினார் இந்திரா காந்தி. ‘No Madam, I am telling you as a congressman it is not’ என்று மறுத்துப் பேச நேர்ந்தது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் திரு. வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள், தமிழ் பல்கலைக்கழகத்தின் அடிமனை உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளைத் திட்டமிடும்போது பெருந்தச்சன் திருவாளர் கணபதியார் அவர்களிடம் கூறிய செய்தி இது. திருவாளர் கணபதியார் மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் முதல்வராகவும், அன்றைய தொழில் நுட்பக் கல்வித்துறையில் மிகவும் செல்வாக்குப்பெற்ற மரபு வழிப்பட்ட கட்டடக்கலை வல்லுநர் ஆகவும் இருந்த படியால், திட்டமிடுவோர் மனங்கொள்ள வேண்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
இசை, ஆன்மிகம், கல்விப் பணி, இதழியல் துறை என்று பல்வேறு தளங்களில் பரிமளித்தவர் விபுலாநந்தர் பழந்தமிழரின் இசை நுட்பங்களைப் பற்றி விரிவாகப் பேசும் ‘யாழ்நூல்’ எனும் ஆய்வு நூலை எழுதியவர் இலங்கையைச் சேர்ந்த விபுலாநந்தர். இந்நூல் மூலமாகவே தமிழ் இலக்கிய உலகில் பெரும் புகழ்பெற்றவர். எனினும், இந்த அடையாளத்தைத் தாண்டி அவர் சாதித்தது நிறைய. அவரைப் பற்றிய முழுமையான அறிமுகம் தமிழ்ச் சூழலில் இல்லை என்றே சொல்லலாம். இதழாசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், ஆராய்ச்சியாளராகவும் தொடர்ந்து இயங்கியவர். இலங்கையில் பல்வேறு பள்ளிகளை உருவாக்கி மாணவர்களின் கல்விக்கண் திறந்த கல்வியாளராகவும், பேராசிரியராகவும் மிகச்சிறந்த துறவியாகவும் விளங்கியவர். 1892-ல் இலங்கையில் மட்டக்களப்பை…
-
- 0 replies
- 1.3k views
-
-
மாவீரர் நினைவுச் சின்னம் கார்த்திகையானது மாவீரர் மாதமாகும். மலரப்போகும் ஈழத்திற்காக தம்முரை வித்தாக்கிய மாவீரரை நினைவுகோரும் வகையில் கனேடியத் தமிழ் இளையோர் காந்தள் மலரிலான பட்டயத்தை வருடாவருடம் வெளியிட்டு வந்துள்ளனர். இப்பட்டயத்தை அணிவதன் மூலம் தமிழர்கள், மாவீரர் தியாகங்களை நினைவு கூருவதுடன் எமது உரிமைப் போராட்டத்தினை மற்றைய இனத்தினர்க்கும் எடுத்துக் கூறிவருகின்றனர். video link: http://www.ziddu.com/download/7387407/maaverer.flv.html எமது மாவீரரின் நினைவுகளை, மகத்தான தியாகங்களை எடுத்துக்கூறும் இப்பட்டயத்தை கார்திகை மாதம் முழுவதும் அணிந்து அவர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழம் நோக்கி விரைவோம். இப்பட்டயத்தை அனைத்து தமிழ் வர்த்தக வி…
-
- 0 replies
- 1.3k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 2-ஆம் பதிவு நாள்: 13.01.2016 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் முதல் முழு நிலவு நாள் கடந்த 09.01.2016-ல் செவ்வனே அமைந்தது. 08.01.2016 விடியற்காலை 06.30-க்கு மெல்லிய கீற்றாகப் பிறை கீழ்வானில் தெரிந்தது. ஆண்டின் 27-ஆம் நாளில் அமைய வேண்டிய முதல் மறைநிலவானது சரியாக 26-ஆம் நாளில் பொருந்தியிருப்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். கடந்த முதல் முழுநிலவு ஒரு நாள் தடுமாறியதன் விளைவே இதுவாகும். 09.01.2016-ன் மறைநிலவை அச்சாகக் கொண்டு அடுத்து வரும் 15-ஆம் நாளில் இரண்டாவது முழுநிலவானது முறைமுற்றியும் நாள் முதிர்ந்தும் தோன்ற வேண்டும். அதாவது 24.01.2016 அன்று தோன்றிட வேண்டும். …
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 17 replies
- 1.3k views
- 1 follower
-
-
யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள வெறியர்களும் இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரீக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்குச் செய்தது. 1981ம் ஆண்டு சூன் மாதம் முதலாம் திகதி இரவு ஒன்பது மணியளவில் தென்கிழக் காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. 97,000க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியைத் தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக்கு அடிப்படையாக அமைந்த காரணி களையும், வரலாற்ற…
-
- 1 reply
- 1.3k views
-
-
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. (தமிழோடு சீன எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு) சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர். தமிழ் நாட்டிலிர…
-
- 2 replies
- 1.3k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் 13-ஆம் பதிவு நாள்: 19.10.2015 பெருந்தச்சு நிழல் நாள் காட்டியின்படி இவ்வாண்டின் 10-வது முழு நிலவு கடந்த 27.09.2015 அன்று முறை முற்றாமல் தோன்றியது. கவலையோடு எதிர்பார்த்தபடியும் கடந்த ஆண்டைப் போலவும் அது தோற்றது. 30-ஆம் நாளில் முற்றாமல் 29-ம் நாளில் முற்றிச் சரியாக மாலை 06.15-க்குத் தோன்றியது. அன்று அது ஆடுதலையாகத் தெற்கு நோக்கி விலகிச் சென்ற எல்லையே அந்த வளர்பிறைப் போக்கின் எல்லையாகவும் அமைந்தது. முறையான 30-ஆம் நாளில் மாலை 07.15-க்குத் தோன்றிய நிலவு மங்கலாகவும் சிவந்தும் வடக்கில் நன்றாகத் திரும்பியும் தோன்றியது. (அந்த நாளில் மட்டும் நிலவு தனது இயல்பான தொலைவில் இருந்து 24,000 கி.மீ உலக உருண்டையை நோக்கி நெருங்கி…
-
- 0 replies
- 1.3k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 3-ஆம் பதிவு நாள்: 27.01.2016 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் இரண்டாவது மறை நிலவு தோல்வியுற்றது. வளர்பிறையின் முறை முற்றாமல், நாள் முதிர்வு எய்தாமல், நாளும் கிழமையும் ஒரு சேரப் பொருந்தாமல் 14-ஆம் நாளில் முழு நிலவானது முந்திக் கொண்டு வந்து விட்டது. 23.01.2016 அன்று மாலை 06.15-க்குக் கீழ்வானில் ஒரு பனை உயரத்தில் தோன்றி அன்று இரவு 12.15-க்குத் தலை உச்சியைக் கடந்து விடியும் வரையில் தாக்குப் பிடித்தது. இவை முழுநிலவு நாளுக்கான அறிகுறிகள். ஆனால் அன்றைய நாள் முழுநிலவின் முதல் நாள். முறையாக முழுநிலவு தோன்ற வேண்டிய 15-ஆம் நாளான 24.01.2016 அன்று முன்னி…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழகத்தில் கல்வி கற்கும் உரிமை உலகத் தமிழ் மாணவருக்கு உண்டு - மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிதம்பரத்தில் மேல இரத வீதியில் இன்றும் நடைபெற்று வரும் பள்ளியை, முன்னாள் அமைச்சராக இருந்த வி.வி. சுவாமிநாதன் உள்ளிட்ட, சிறந்த மாணவர் பலரை உருவாக்கிய பள்ளியை, 165 ஆண்டுகளுக்கு முன், யாழ்ப்பாணத்தில் திரட்டிய நிதியைக் கொணர்ந்து தொடங்கியவர் தவத்திரு ஆறுமுக நாவலர். கலைஞர் மு. கருணாநிதிக்குத் திருவாரூரில் தமிழ் கற்பித்த தண்டபாணி தேசிகரின் ஆசிரியரான யாழ்ப்பாணத்து மட்டுவில் க. வேற்பிள்ளை, சிதம்பரத்தில் அப்பள்ளியில் நெடுங்காலம் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். பாண்டித்துரைத் தேவர் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பின்னர், தமிழ் மொழியில் பண்டித, வித்துவான் வகுப்புகளைத் தொடங்…
-
- 3 replies
- 1.3k views
-
-
பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் நூல் வெளியீடும் பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் நூல் வெளியீடும் 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வி.கேதீஸ்வரதாசன் தலைமையில் இடம்பெற்றது. ‘கென்னடி ஓர் பன்முக ஆளுமை’ உள்ளிட்ட இரு நூல்கள் வெளியிடப்பட்டதுடன் பேராசிரியர் ஞாபகார்த்த நினைவுரைகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், முன்னாள் முனைவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ஓய்வு நிலைப்…
-
- 4 replies
- 1.3k views
-
-
பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் தெரியவந்துள்ளது. குடுவைகள் பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கத்தில் வைரக்கண்ணு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மீன்வளர்ப்புக்காக பண்ணைகுட்டைகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நிலத்துக்குள் புதைந்திருந்த பழமையான 2 முதுமக்கள் தாழிகள் மக்கிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாழிகளை ஆய்வு செய்த தொல்பொருள் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் முதுமக்கள் தாழிகள் பற்றி கூறிய சுவாரசியமான தகவல்கள் இதோ... கணிசப்பாக்கத்தில் கிடைத்துள்ள தாழிகளின் மேல் விளிம்புகளுடன் கூடிய மேல்மூடிகள் உள்ளன. மேலும…
-
- 0 replies
- 1.3k views
-
-
"எந்தக் குழந்தையும் நல்லகுழந்தை தான் மண்ணிற் பிறக்கையிலே - அது நல்லது ஆவதும் தீயது ஆவதும் அன்னை வளர்ப்பினிலே - அது அன்னை வளர்ப்பினிலே..." என்கிறது திரையிசைப் பாடல். உண்மை தான். ஆனாலும் தாய் மட்டும் இதற்குப் பாத்திரவாளியல்ல. தந்தையும் தான். நிச்சயமாக குழந்தையிலே எந்தக் கள்ளம் கபடமும் கெட்ட நடத்தையும் பிறக்கும் போது இருப்பதில்லை. அதனால் தான் 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்று கூறப்படுகிறது. குழந்தை பிறந்து வளர்ந்து பிள்ளைப் பருவத்துக்கு வரும் போது தான் ஒன்றில் நல்லதாகிறது, அன்றேல் கெட்டதாகிறது. மண்ணில் பிறக்கும் போது நல்லதாகப் பிறந்த குழந்தை நாளடைவிலே ஏன் தீயதாகிறது? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நல்லதாகப் பிறந்த குழந்தையை நல்லதாகவே வளர்த்து வீட்டுக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
வணக்கம் வாசகர்களே !! கள உறவுகளே !! இத்துடன் இந்த தொடரை நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . உங்கள் ஆதரவிற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள் . நேசமுடன் கோமகன் ************************************************************************** இராவணனும் இராமாயணமும் இராவணன் வரலாற்றில் ஒரு விதமாகவும் இலக்கியத்தில் ஒரு விதமாகவும் எடுத்து காட்டப்படுகின்றான். இலக்கியத்தை ஆக்குகின்ற புலவர் தமது விருப்பு வெறுப்புக்களையும் கொள்கைகளையும் அவ்விலக்கியத்தில் புகுத்திவிடுவது வழக்கம். கற்பனையில் கதாபத்திரங்களை அமைத்து அதில் கருத்துகளை புகுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் வரலாற்றில் நல்ல குண இயல்பு உடைய ஒருவனை இலக்கியத்தில் தீய குண இயல்பு உடையவனாக திரித்து இலக்கியம் ஆக்கும் போதுதான்…
-
- 2 replies
- 1.3k views
-
-
வேருக்கு நீர் வார்த்தவர்கள்: தமிழ்மொழியின் தொன்மையும் மாண்பும்! By வித்துவான் பாலூர் து.கண்ணப்ப முதலியார் தமிழ்மொழி தொன்மையானது என்பது வான்மீக ராமாயணமும், வியாசர் மகாபாரதமும் கூறுமாற்றால் அறியலாம். பாரதத்தில் பாண்டிய நாட்டைப் பற்றிய குறிப்பு வருகிறது. வானரங்களுக்குச் சுக்ரீவன், ""நீங்கள் மலைய மலையின் சிகரத்தில் அகத்தியரைக் காண்பீர்கள். அவர் ஆணை பெற்றுப் பாண்டியர்க்கு உரித்தான கபாடபுரத்தைக் காண்பீர்கள்'' என்று கூறிய குறிப்பு வான்மீக ராமாயணத்தில் வருதல் காண்க. பாண்டியர்களைப் பற்றிய குறிப்பு அந்நூலில் காணப்படுதலின், அவர்களின் மொழியாகிய தமிழின் பழமையும் இதன் வழி அறியவருகிறது. பாண்டியநாடு தமிழ் வளர்த்த நாடு என்பது, ""சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7AppYkc5vL0 வீணைக் கொடியுடைய வேந்தனே Veenai Kodiyudaiya போகர், பதினெண் சித்தர்களில் ஒருவர். அவரே நவபாசானத்தால் பழனி முருகன் சிலையைச் செய்தவர். சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கியவர். சித்த மருத்துவம் பற்றி போகரால் எழுதப்பட்ட பல நூல்கள் இருக்கின்றன. அவரோ இராவணனை மாபெரும் சித்தனென்றும், சித்த மருத்துவனென்றும் புகழ்ந்ததோடு அவனது நாட்டையும், கோட்டையையும் மட்டுமல்ல அவனது சமாதியையும் கூடக் குறிப்பிட்டுள்ளார். ‘போகர் ஏழாயிரம்’ என்ற நூலில் இராவணனைப் போகர் இராவணனார் என பெருமதிப்புடன் குறிப்பிடுவதைக் கீழுள்ள பாடலில் பாருங்கள். “ கூறுவேன் இலங்கைபதி மார்க்கந்தன்னை கொற்றவனே புலிப்பாணி மைந்தகேளு தேறுபுகழ் நவகண்டந்…
-
- 0 replies
- 1.3k views
-
-
திராவிடர்’ என்பதன் உள்ளடக்கத்தைப் பாருங்கள்! அகராதியில் பொருள் தேடாதீர்! ‘திராவிடர்’ என்ற சொல்லுக்கு, ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்போருக்கு பதிலளித்து மயிலாடுதுறை கழகக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். 11.3.2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு மயிலாடுதுறை சின்னகடைவீதியில் கழகம் சார்பாக தமிழர்களை சுரண்டும் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இர.ரசீத்கான் தலைமையில் நடைபெற்ற இப் பொதுக் கூட்டம்,சமர் பா. குமரனின் இன எழுச்சிப் பாடல்களோடு துவங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழர் உரிமை மீட்பு இயக்கம் இரா. முரளிதரன், சுப்பு மகேசு, ம.தி.மு.க. நக…
-
- 0 replies
- 1.3k views
-
-
தொடரும் மொழிப்போர்... இரா.சிவக்குமார் ஓரினம் தனது அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பல வழிகளிலும் போராடத்தான் வேண்டியிருக்கிறது. நாடு, எல்லை என தனக்கான தன்னாட்சி உரிமையைப் பெறுவதற்கும், அதனை தொடர்ச்சியாகத் தக்க வைப்பதற்குமான கலகங்களும், சச்சரவுகளும் உலகெங்கும் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன. இதில், அவ்வின மொழியின் இருப்பும், முதன்மை பெறுகிறது. "ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அது பேசுகின்ற மொழியை முதலில் அழித்துவிடு" எனும் வல்லாதிக்க சித்தாந்தத்தை எதிர்கொண்ட மொழிகளுள், தனிச்சிறப்பிற்குரிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது தமிழ். மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழியின் மீது நடத்தப்படுகின்ற, அழித்தொழிப்புப் பணியில் தற்போது வரை தப்பிப் பிழைத்திருக்கிறது என்றால…
-
- 0 replies
- 1.3k views
-
-
கணினிப் பயன்பாட்டில் தமிழ் மொழியின் எழுத்துக்களை ஒரே மாதிரியாகப் பயன்படுத்த "TAMIL ALL CHARACTER ENCODING 16" மென்பொருளில் ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் (வடமொழி) கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதை முதலில் கவனிக்காமல் இருந்துவிட்டு, அப்புறம் ஏன் இப்போது பின்வாங்குகிறார் முதல்வர் கருணாநிதி" என்று கேட்கிறது ஒரு குரல்! ஆகா...! முதல்வர் காலம் க்டந்தாவது தமிழ் குறித்து நல்லறிவு பெற்று, எதிர்க்கவேண்டிய வடமொழி எழுத்துகளை எதிர்திருக்கிறாரே என்று களிப்பேருவகை அடைந்தோம்! கருணாநிதி மத்திய அரசுக்கு எழுதிய மடல் ஏகெனவே தமிழ் ஒருங்குறியில் உள்ள, ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் ஐந்து எழுத்துகள் குறித்தவை அல்லவாம். இவைபோல் இன்னும் 26 கிரந்த எழுத்துக்களைத் தமிழ் ஒருங்குறியில் சேர்…
-
- 10 replies
- 1.3k views
-