சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
சுற்றுச்சூழல் ,பருவநிலை மாற்றம் குறித்து ஐநா,சபை நடத்திய மிக நீளமான பேச்சுவார்த்தைகள் எந்த வித உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தன. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் நீண்ட நேரம் நீடித்த பேச்சுகளால் சலிப்படைந்து கார்பன் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன. அடுத்த ஆண்டு கிளாஸ்கோவில் ஐநா.சபையின் பருவநிலை தொடர்பான மாநாடு நடைபெறும்.அதற்குள் அனைத்து நாடுகளும் கார்பன் அமிலத்தை குறைப்பதற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐநா.சபை கேட்டுக் கொண்டுள்ளது. https://www.polimernews.com/dnews/93002/ஐநா.சபையின்-பருவநிலைகுறித்தபேச்சுவார்த்தையில்எந்தவித-உடன்பாடும்எட்டப்படாமல்-நிற…
-
- 0 replies
- 274 views
-
-
பட மூலாதாரம்,ESA கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிரான்கி அட்கின்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 22 மே 2024, 08:35 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காலநிலை மாற்றத்தின் விளைவாக கடலில் உள்ள பைட்டோ பிளாங்டன் (phytoplankton) என்னும் உயிரிகளின் பரவலில் சம நிலை குலைந்து, கடல்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நீங்கள் கடலை சித்தரித்து வரையும் போது, ஒளிரும் பசும் நீல நிறத்தில் கடல் நீரை கற்பனை செய்து வண்ணம் தீட்டி இருக்கிறீர்களா? நினைத்து பார்க்க அழகாக தான் இருக்கும், ஆனால் நமது பிரபஞ்சத்தின் பெருங்கடல்களில் சில பகுதிகள் உண்மையில் பசுமை நிறமாக மாறும் சாத்தியங்கள் இருப்பதாக சமீபத்திய…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
லண்டனில் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் ! உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு அந் நாட்டு மக்களின் அன்றாட நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் லண்டனிலும் நாளையதினம் வெப்பநிலை 100 பாகை பர்னைட் ஆக அதிகரிக்குமென அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் இங்கிலாந்தின் அதிகூடிய வெப்பமானது 102 பாகை பர்னைட் ஆக பதிவாகியுள்ளது. இதனை முறியடிக்கும் வகையில் அதிகரித்துவரும் லண்டனின் வெப்பநிலை நாளை 100 பாகை பர்னைட்டை (38 C) எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இங்கிலாந்தில் ஜூலை மாதத்தில் பதிவான 98.1 பாகை பர்னைட் (36.7 C) முறியடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ் வெப்பநிலை அதிகரிப்பு தொடரும் பட்சத்தில் 10…
-
- 27 replies
- 3.3k views
- 2 followers
-
-
சியாரா மற்றும் டென்னிஸ் புயல்களை அடுத்து வருகிறது எலன் புயல் சியாரா மற்றும் டென்னிஸ் புயல்களைத் தொடர்ந்து எலன் புயல் இங்கிலாந்தைத் தாக்கும் என்று லங்காஷயர் லைவ் செய்தித் தளம் தெரிவித்துள்ளது. சியாரா மற்றும் டென்னிஸ் புயல்களால் பிரித்தானியா முழுவதும் பேரழிவு ஏற்பட்ட நிலையில் புதிய புயலான எலன் இங்கிலாந்தைத் தாக்கவுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இங்கிலாந்தில் தீவிரமான வானிலை நிலவிவருகின்றது. முதலில் வீசிய சியாரா புயல் காரணமாக லண்டன் ரெயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வலையமைப்பில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து டென்னிஸ் புயல் லண்டனில் 50 மைல் வேகத்தில் வீசியது. அத்துடன் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்கள் முழுவதும் கடுமையான மழை பெய்தத…
-
- 0 replies
- 302 views
-
-
சுற்றுசூழல் பாதுகாப்புக்காக குரல் எழுப்பி வரும் சிறுமி கிரெட்டா தன்பர்க், நார்டிக் கவுன்சில் அறிவித்துள்ள ‘சுற்றுசூழல் விருதினை’ நிராகரித்துள்ளார். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி, வெள்ளிக்கிழமைகளில் தனது வகுப்புகளை புறக்கணித்து விட்டு கடந்த 2018ம் ஆண்டு முதல் அந்நாட்டு நாடாளுமன்றம் முன் சுற்றுசூழல் பாதுகாப்புக்காக போராட்டம் நடத்தி வருகிறார். இதன்மூலம் உலக முழுவதும் பிரபலமடைந்த சிறுமிக்கு, ‘சுற்றுசூழல் விருது’ வழங்க 87 நாடுகளை கொண்ட நார்வே கவுன்சில் முன்வந்தது. ஆனால் கவுன்சிலின் முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ள தன்பர்க், விருது மற்றும் பரிசு தொகை சுமார் 36 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்துள்ளார். மேலும் சுற்றுசூழல் இயக்கத்துக்காக விருதுகளை வழங்க…
-
- 0 replies
- 289 views
-
-
-
கடல்வாழ் உயிர்களைக் கொல்லும் பிளாஸ்டிக் - தீர்வுக்கு என்ன வழி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடலில் வாழும் நுண்ணுயிர்கள் முதல் மிகப்பெரிய திமிங்கலம் வரை பிளாஸ்டிக்கை உண்பதை கேள்விப்படுகிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகட்டுப்படுத்தாவிட்டால், கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அடுத்த பத்தாண்டுகளில் மும்மடங்காகும். அதற்குக் காரணம்…
-
- 0 replies
- 499 views
-
-
ஸ்பெயினில் காலநிலை மாற்றம் – பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை! ஸ்பெயின்(Spain) நாட்டுக்குப் பயணிக்க உள்ள சுற்றுலாப்பயணிகளுக்கு இரத்த மழை தொடர்பில் பிரித்தானியா (UK) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் வெப்ப அலை காரணமாக கடுமையான வெயில் நீடித்து வருகிறது. இதனால், சஹாரா பாலைவனத்தில் காணப்படும் தூசுக்கள் ஸ்பெயின் நாட்டின் பல பகுதிகளை மூடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில், தற்போது ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருவதால், இந்த தூசியும் மழையும் கலந்து இரத்த மழை என்னும் சிவப்பு நிற மழை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரத்த மழையினால் வெளிச்சம் குறையும் எ…
-
- 0 replies
- 358 views
-
-
சுமத்ரா காட்டுத் தீ தொடர்ந்தால், சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படலாம் என அச்சம்! இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ தொடர்ந்தால், சிங்கப்பூரிலும் அது தாக்கம் செலுத்தலாம் என்று சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அங்கு மிதமான புகைமூட்டம் ஏற்படலாம் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சுமத்ரா தீவுகளில் சுமார் 380 காட்டுத் தீச் சம்பவங்கள் பதிவானதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. புகைமூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மலாக்கா நீரிணையைக் கடந்து மலேசியாவின் மேற்குப் பகுதிகளில் திரண்டுள்ளது. இந்தநிலையில், அடுத்த சில மணிநேரங்களில் காற்றின் வேகம் மிதமாக இருக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினு…
-
- 1 reply
- 377 views
-
-
காண்டாமிருகத்தை தலைகீழாகத் தொங்கவிட்ட ஆராய்ச்சிக்கு 'நோபல்' பரிசு ஏன்? ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROBIN RADCLIFFE காண்டாமிருகங்களை தலைகீழாக தொங்கவிட்டு, அதன் மூலம் விலங்குகளுக்கு என்ன விளைவு ஏற்படும் என்று சோதிக்கும் ஓர் ஆராய்ச்சிக்கு இந்த ஆண்டின் மாறுபட்ட பரிசு ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகளின் தொப்பைக்கும் நாட்டில் இருக்கும் ஊழலுக்கும் என்ன தொடர்பு, நடைபாதையில் வீசப்பட்ட சூயிங் கம்மில் உள்ள பாக்டீரியா மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் கரப்பான் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களுக்…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் ‘ஜனவரி’ February 8, 2025 12:00 pm உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது. ஆண்டில் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற ஆய்வு நிறுவனம்(C3S) நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி ஜனவரி 2025 உலக வரலாற்றில் மிக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது. 2025 ஜனவரியில் உலக வெப்பநிலையை தணிக்கக் கூடிய ‘லா நினோ’ வளிமண்டலப் போக்கு நிலவினாலும், புவியின் வெப்பநிலை இதுவரை எந்தவொரு ஜனவரி மாதமும் இல்லாத அளவில் பதிவாகியுள்ளது 2025 ஜனவரி மாதத்தில் சராசரி வெப்பநிலை, தொழில்துறை புரட்சிக்கு ம…
-
-
- 3 replies
- 482 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் மேய்ன் மாகாணத்தில் உலகெங்கும் உள்ள மக்கள் வியக்கும் வகையில் ஒரு இயற்கை அதிசயம் நிகழ்ந்துள்ளது. அந்த மாகாணத்தில் உள்ள வெஸ்ட்புரூக் நகரின் அருகில், பிரேசம்ஸ்காட் நதியில் சுமார் 91 மீட்டர் அகலமுள்ள, மாபெரும் வட்ட வடிவப் பனித் தகடு உருவாகியுள்ளது. இந்த விசித்திரமான இயற்கை நிகழ்வு, வேற்றுகிரக விண்கலம் அல்லது நிலா போல காட்சியளிக்கிறது. படத்தின் காப்புரிமை City of Westbrook/ FB தண்ணீரின் வெப்பநிலையில் மாறும் போது, அதன் அடியில் ஒரு சுழல் போல உருவாகி, வட்ட வட…
-
- 0 replies
- 588 views
-
-
கனடாவில் பற்றி எரியும் காட்டுத் தீ: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை. கனடாவில் சஸ்கட்சிவான் (Saskatchewan) , மனிடோபா(Manitoba) , பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia), அல்பிரட்டா(Alberta) மற்றும் ஒன்டாரியோ ( Ontario) மாகாணங்களில் பற்றி எரிந்து வரும் காட்டு தீ காரணமாக ஏற்பட்டுள்ள புகை மண்டலம் அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நியூயோர்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதிகளில் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுவதாகவும், இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு மு…
-
- 0 replies
- 208 views
-
-
அறிவியல் அதிசயம்: உலகின் மிக நீளமான தாவரம் - ஒரே விதையிலிருந்து உருவானது டிஃப்பேனி டர்ன்புல் பிபிசி செய்திகள், சிட்னி 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RACHEL AUSTIN அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரைவிட மூன்று மடங்கு அளவில் பெரிய கடற்புல் தாவரம் ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக நீளமான தாவரமாக அறியப்படுகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் இந்த நீளமான கடற்புல் தாவரத்தை மரபணு சோதனை மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த நீளமான கடற்புல் ஒரே தாவரம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒரேயொரு விதையிலிருந்து சுமார் 4,500 …
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
கடந்த 70 ஆண்டுகளில்... இல்லாத அளவுக்கு, இத்தாலியில் கடுமையான வறட்சி! கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், போ ஆற்றை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பகுதிகளில் இத்தாலி அவசரகால நிலையை அறிவித்துள்ளது. எமிலியா-ரோமக்னா, ஃப்ரியூலி வெனிசியா கியுலியா, லோம்பார்டி, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ ஆகிய இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அவசரகால நிதியாக 36.5 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. விவசாய சங்கமான கோல்டிரெட்டியின் கூற்றுப்படி, வறட்சி இத்தாலியின் விவசாய உற்பத்தியில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை அச்சுறுத்துகிறது. பல நகராட்சிகள் ஏற்கனவே குடிநீர் வி…
-
- 0 replies
- 341 views
-
-
இங்கிலாந்தில்.... தேசிய வெப்ப சுகாதார அவசரநிலை: பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென எச்சரிக்கை! இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பநிலை உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளதால், இது ‘தேசிய அவசரநிலை’ எச்சரிக்கை அளவைத் தூண்டுகிறது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக வெப்பம் இருக்குமென பிரித்தானிய வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். புயல்களுக்கு முன்னர் இதுபோன்ற எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தாலும், வெப்பம் காரணமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. 40 செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுவ…
-
- 0 replies
- 327 views
-
-
படத்தின் காப்புரிமை Robin Moore, Global Wildlife Conservation Image caption ஜூலியட் - செஹுன்கஸ் தவளை தவளைகளின் பல்வேறு இனங்கள் உள்ளன. டெல்மட்டோபிட்டே குடும்பத்தைச் சேர்ந்த செஹுன்கஸ் தவளையொன்று இந்த இனத்தை சேர்ந்த கடைசி தவளை என நம்பப்படுவதால் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தற்போது தனிமையிலிருந்து அதற்கு விலக்கு கிடைக்கவுள்ளது. ரோமியோ என அறியப்படும் அத்தவளை, பொலிவியாவில் உள்ள நீர் வாழ் உயிரின கண்காட்சியகத்தில் பத்து ஆண்டுகளை தனிமையில் கழித்துள்ளது. தொலைதூர பொலிவியன் மழைக் காடுகளில் ஒரு குழு பயணம் மேற்கொண்டு இந்…
-
- 2 replies
- 906 views
-
-
பருவநிலை மாற்றம்: 50 ஆண்டுகளில் அதீத வெப்பநிலை: 300 கோடி பேரை பாதிக்கும் ஆபத்து மற்றும் பிற செய்திகள் Getty Images முன்னூறு கோடிக்கும் அதிகமானோர் 2070ஆம் ஆண்டில் "தாங்கிக் கொள்ள முடியாத" வெப்பநிலையில் வாழ்வதற்கான சூழல் ஏற்படும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் குறையாவிட்டால் பலர் சராசரியாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாழ நேரிடும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 6000 ஆண்டுகாலமாக மனிதர்களுக்கு பழகிவந்த ஒரு பருவநிலை சூழல் அடியோடு மாறும் என்பதையே இது காட்டுகிறது. இந்தியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கின் சில பகுதிகள், ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 525 views
-
-
ஹேரியட் ஓரெல் பிபிசி உலக சேவை கடந்த சில ஆண்டுகளாக 'வீகன்' ஆணுறைகள் மற்றும் கழிவற்ற கருத்தடை பொருட்கள் தொடர்பான தேடல்கள் இணையத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஈகோ-ஃப்ரெண்ட்லி செக்ஸ் என்றால் என்ன? "சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது என்றால் சிலருக்கு பூமியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத லூப்கள், விளையாட்டு பொருட்கள், படுக்கை விரிப்புகள், ஆணுறைகளைப் பயன்படுத்துவதாகும்," என்கிறார் நைஜீரியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அறிவியலாளர் முனைவர் அடெனிகே அகின்செமொலு. ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 1000 கோடி லேடெக்ஸ் ஆணுறைகள் தயாரிக்கப்படுவதாகவும், அதில் பெரும்பாலானவை திறந்த வெளியில் வீசப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளை சபையின் ம…
-
- 3 replies
- 638 views
-
-
சிட்னியை... தடம்புரட்டிய வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்! அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாக்கிய வெள்ளதால், சிட்னியின் சில பகுதிகளில் நான்கு நாட்களில் சுமார் எட்டு மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்துள்ளது. இந்த வெள்ளத்தால், வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். தற்போதைய அவசரநிலைக்காக கிரேட்டர் சிட்னி முழுவதும் 100க்கும் மேற்பட்ட வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பல முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
-
- 0 replies
- 369 views
-
-
காலநிலை மாற்றம்: மீட்டுருவாக்கப்பட்ட பவளப்பாறையில் மீன்களின் ஓசை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TIM LAMONT படக்குறிப்பு, ஆராய்ச்சியாளர்கள் ஒலிப்பதிவு கருவியை பவளப்பாறைகளில் பொருத்தி வைத்தார்கள் இந்தோனீசியாவில் மீட்டுருவாக்கப்பட்ட பவளப்பாறைகளை ஆராய்ச்சியாளர்கள் ஒட்டுக்கேட்டனர். அந்த ஒலிப்பதிவுகளில், "கூக்குரல், கரகரப்பொலி, உறுமல்" போன்ற ஓசைகளைக் கேட்டதாகவும் பவளப்பாறைகள் மீண்டு வருவதன் அடையாளமாக இது இருப்பதாகவும் கூறுகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில், அங்கு புதிய பவளப்பாறைகள் மீண்டும் விதைக்கப்பட்டுள்ளன. கடலுக்கு அடியில் தரைத்தளத்தில் பதிவு செய்யக்கூடிய ஒ…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
கொரோனாவால் வெளியான உண்மை.. சீனாவை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள் பெய்ஜிங்: இத்தனை காலமாக உலகிற்கு எவ்வளவு பெரிய தீங்கை சீனா இழைத்து வந்துள்ளது என்பதை செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்கள் தற்போது, அம்பலமாக்கி உள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அல்லாடிக் கொண்டிருக்கிறது. இது முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்துதான் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. இதையடுத்து அந்த பிராந்தியம் முழுக்க சீல் வைக்கப்பட்டு உள்ளே, யாரும் அனுமதிக்கவில்லை. வெளியேயும் யாரையும் விடவில்லை.இந்த நிலையில்தான், தலைநகர் பீஜிங், தொழில்துறை நகரமான ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதையடுத்து, தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகக் கூடிய நச்சுப்புகை மிகமிகக்…
-
- 2 replies
- 741 views
-
-
நாம் கடவுளர்க்குக் தூபம் காட்டும்போது இடும் சாம்பிராணியும்[Frankincense ] மரத்தில் இருந்து வடிந்து காய்ந்த பாற்கட்டியே. ஐயாயிர வருடங்களுக்கு மேலாகச் சாம்பிராணியை மனிதர் பயன்படுத்துகின்றனர். சிலர் குங்கிலியமும் சாம்பிராணியும் ஒன்று என்று கருதுகின்றனர். வெவ்வேறு விதமான மரங்களில் இருந்தே இரண்டும் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து வெவ்வேறு அமிலங்கள் கிடைக்கின்றறன. குங்கிலியத்தில் Stearic acid [C18H36O2] இருக்கிறது. சாம்பிராணியில் Boswellic acid [C30H48O3]இருக்கிறது. அவை பலவைகையான நோய்களை நீக்கின்றன. நம் முன்னோர் பெண்களின் கர்ப்பப்பைக் கட்டிகளையும் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயையும் சாம்பிராணி நீக்குமென்பதை அறிந்திருந்தனர் என்பதற்கு நமது மருத்துவ வாகடங்களே சான்றாகும…
-
- 7 replies
- 2.3k views
-
-
ஆமையின் இறப்புக்கு தீ பிடித்த கப்பலில் காணப்பட்ட இரசாயனங்கள் காரணமா ? ஆராயுமாறு உத்தரவு எம்.எப்.எம்.பஸீர் தெற்கின் உனவட்டுன கடற்கரையில் கரை ஒதுங்கி இருந்த இறந்த ஆமையின் மரணதுக்கு, தீ பரவிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த இரசாயனங்கள் தான் காரணமா என்பதை உறுதி செய்ய, குறித்த ஆமையின் சடலத்தை, தெஹிவளை - அத்திட்டியவில் அமைந்துள்ள வன ஜீவிகள் வைத்திய அலுவலகத்துக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலி மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரன இதற்கான உத்தரவை ஹிக்கடுவ வனஜீவிகள் அலுவலகத்துக்கு பிறப்பித்துள்ளார். உனவட்டுன கடற்கரைக்கு, குறித்த ஆமையின் சடலம், நேற்று முன் தினம் கரை ஒதுங்கியிருந்தது. இது தொடர்பில் ஹிக்கடுவ வன ஜீவி அதி…
-
- 1 reply
- 803 views
-
-
வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் நீரில் தேவையில்லாமல் வீணாகும் நீரின் அளவை குறைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த பிபிசி தமிழின் காணொளித் தொடரின் முதல் பாகம் இது. https://www.bbc.com/tamil/india-48732197
-
- 1 reply
- 950 views
-