சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
ஊழிக்காலம் - 9 | அடுத்த நூற்றாண்டின் பெட்ரோலியம் இதுதான்! ஏன் தெரியுமா? நாராயணி சுப்ரமணியன் ஊழிக்காலம் - 9 | அடுத்த நூற்றாண்டின் பெட்ரோலியம் இதுதான்! ஏன் தெரியுமா? தண்ணீர் தினசரி சில நூறு லிட்டர் தண்ணீர் கிடைத்தால் மட்டுமே நமது அன்றாட வேலைகளை ஒழுங்காக முடிக்க முடியும். 2010ல் ஐக்கிய நாடுகள் சபை, "சுத்தமான குடிநீர் என்பது அடிப்படை மனித உரிமை" என்று அறிவித்தது. ஆனால் அந்த அடிப்படை உரிமைக்கே அச்சுறுத்தலாக வந்துவிட்டது காலநிலை மாற்றம். 88 கோடிக்கும் மேற்பட்ட உலக மக்களுக்கு வீட்டிலிருந்து குறைந்தது ஆறு கிலோமீட்டர் பயணித்தால் மட்டுமே நீர் கிடைக்கும். சுத்தமான குடிநீர் கிடைக்காததால் தொற்றுநோயில் இறப…
-
- 0 replies
- 565 views
-
-
தகிக்கும் பூமியைக் குளிர்விக்க 17 ரில்லியன் மரங்கள் நடவேண்டும் : புதிய ஆய்வில் தகவல்! தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் அவசியம் என்பது தொடர்பாக புதிய ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூமி ஒரு நிரந்தர கோடைக்காலத்திற்கு தயாராகி வருகின்ற நிலையில், அலாஸ்காவின் வெப்பநிலை நியூயோர்க்கை விட அதிகம் என அமெரிக்கர்கள் கூறுகின்றனர். இதனிடையே, புதுடெல்லியில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை நெருங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில் வெப்பம் கடுமையாக அதிகரிக்கும் என MIT பல்கலைக்கழகம் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதெற்கெல்லாம் தீர்வாக…
-
- 1 reply
- 749 views
-
-
மண்பானை தொழில்நுட்பமும் குளிரூட்டலும் புது டெல்லியில் உள்ள ஒரு ஆரம்ப நிறுவனம் எமது முன்னோர்கள் அறிமுகப்படுத்திய மண்பானை தொழில்நுட்பம் ஊடாக குளிரூட்டலை அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஆண்ட ஸ்டூடியோ என்பது இந்த நிறுவனத்தின் பெயர். 14 பாகை செல்ஸியஸ் அளவிற்கு இதனால் வெப்பம் குறைவடையும் என இந்த நிறுவனம் கூறுகின்றது. பல, செலவு குறைவான முறைகளை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றது. ஆனால், நீரையும் இதற்கு பயன்படுத்துகின்றது. ஆனால், நீரை பாவிக்காமல் காற்று உள்வாங்கப்பப்படுவதாலும் வெப்பம் குறைக்கப்படும். இது, வழமையான மின்சாரத்தை பாவித்து உருவாக்கப்படும் குளிரூட்டலை போன்று வினைத்திறன் கொண்டதாக இருக்காது. ஆனால், சூழலை பாதிக்கும் பல மூலப்பொருட்கள் தவிர்க்கப்படு…
-
- 0 replies
- 369 views
-
-
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் அரிய வகை கடல் ‘ஆலா பறவை’ March 27, 2025 10:55 am இராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையையும். இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் ஆறு அரிய வகை கடல் ஆலா பறவை இனங்களின் மிகப் பெரிய இனப்பெருக்க தளம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் ரவீந்திரன், பறவை ஆய்வாளர்கள் பைஜு, மைத்ரி, பேராசிரியர் ரவிச்சந்திரன், உயிரியலாளர் மார்சல் இணைந்த குழுவினர், ராமநாதபுர வனத்துறையின் வன உயிரின பிரிவுடன் இணைந்து தங்களின் தொடர் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர். இது குறித்த ஆய்வறிக்கை ‘journal of threatened taxa’ வில் வெளியாகி உள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுக…
-
- 3 replies
- 377 views
-
-
அமெரிக்காவின் மரணப் பள்ளத்தாக்கில் இதுவரை 'பூமியின் அதிகபட்ச' வெப்பநிலை பதிவு REUTERS அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மரணப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 130 டிகிரி ஃபாரன்ஹீட் (54.4 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மரணப் பள்ளத்தாக்கின் ஃபர்னேஸ் க்ரீக் எனும் இடத்தில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுவரை பூமியில் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலையில் இதுவே அதிகபட்சமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் சூழலில் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள…
-
- 5 replies
- 593 views
-
-
உலக வெப்பமயமாதலுக்கு பசுவின் கோமியமே காரணம்? உலக வெப்பமயமாதலுக்கு பசுவின் கோமியத்தில் இருந்து வெளியாகும் நைட்ரஸ் ஒக்ஸைட் வாயுவே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொலம்பியாவைச் சேர்ந்த வெப்பமண்டல வேளாண்மைக்கான சர்வதேச மையம் இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளது. கொலம்பியா, ஆர்ஜன்டினா, பிரேசில், நிகராகுவா, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் நிறைவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மருத்துவப் பயன்களைத் தருவதாகக் கூறப்படும் பசுவின் சிறுநீர் (கோமியம்) வெப்பமயமாதலுக்கான காரணியாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 637 views
-
-
பருவநிலை மாற்றம்: தீவிர வெப்பநிலையால் ஆண்டுதோறும் அதிகரிக்கும் ஆபத்து - பிபிசி ஆய்வு பெக்கி டேல் மற்றும் நாஸ்ஸோஸ் ஸ்டீலியானூ தரவுகள் ஆய்வு செய்தியாளர்கள் 14 செப்டெம்பர் 2021, 05:40 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1980களில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் பூமி 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டும் போது, அந்தந்த ஆண்டுகளில் மிகவும் அதிகமான வெப்பம் பதிவான நாட்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக பிபிசி ஆய்வு கண்டறிந்துள்ளது. அந்த வெப்பநிலை முன்பை விட மேலதிக இடங்களில் உண்டாவதாகவும் அந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் 50 டிகிரி வெப்பநிலையை கடந்த நாட்களி…
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
யூனிஸ் புயல் அச்சம்: மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்! பல தசாப்தங்களில் மிக மோசமான புயல்களில் ஒன்றான யூனிஸ் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால், மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லண்டன், தென்கிழக்கு மற்றும் இங்கிலாந்தின் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கும் வகையில் இரண்டாவது அரிய சிவப்பு வானிலை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஒரு சிவப்பு எச்சரிக்கை, அதாவது பறக்கும் குப்பைகளால் உயிருக்கு ஆபத்து உள்ளது. தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸின் சில பகுதிகளை உள்ளடக்கும் வகையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும், வேல்ஸில் உள்ள அனை…
-
- 0 replies
- 215 views
-
-
ஈக்வேடாரில் புதியவகை ஹம்மிங் பேர்ட் (தேன்சிட்டு) ஒன்று சர்வதேச பறவையியலாளர் குழு ஒன்றால் காணப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP அந்த பறவைக்கு ஒரியோட்ரோகிலஸ் சைனோலெமஸ் அல்லது நீல கழுத்து ஹில்ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு அங்குல நீளத்திற்கு கரு நீல கழுத்து இருப்பதும் இதற்கொரு காரணம். 'பல்லுயிர் பெருக்கம்' ஈக்வேடாரரில் பல்லுயிர் பெருக்கம் சிறப்பாக உள்ளது. இந்நாட்டில் மட்டும் 132 வகை 'ஹம்மிங் பேர்ட்'கள் உள்ளன. படத்தின் காப்புரிமைAFP புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நீல கழுத்து ஹில்ஸ்டார்கள் மொத்தமே சுமார் 300 தான் உள்ளதாக கூறும் பறவையியல்யாளர்கள், இந்த இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக கூறுகின்றனர். ஈக்வேடார், வெனிசுவேலா, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நா…
-
- 0 replies
- 336 views
-
-
சாலையோரம் இருந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டிதள்ளினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன் 5 மரக்கன்றுகளையும் நட்டனர். மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டு வருவால் இயற்கையின் பாதிப்பு இப்போதே உணர முடிகிறது. வெயிலின் தாக்கம், மழையின் அளவு குறைவு போன்ற இயற்கை பாதிப்புகளால் மக்கள் பெருமளவு அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதை தடுக்க மரக்கன்றுகள் நடும் ஆர்வம் ஒருசிலரிடம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் சாலை விரிவாக்கத்திற்காக அரசே மரங்களை வெட்டுவது வேதனை தருகிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராம சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஒரு மரம் நன்றாக வளர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. நேற்று ம…
-
- 0 replies
- 461 views
-
-
உலக சுற்றுச்சூழல் தினம்: ஆர்டிக் பகுதியில் 20,000 டன் எண்ணெய் கசிந்ததால் மாபெரும் அச்சுறுத்தல் AFP இன்று உலக சுற்றுச்சூழல் தினம். இந்த நாளில் இப்படி ஒரு மோசமான செய்தியைப் படிக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆர்டிக் பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் சுமார் 20,000 டன் டீசல் கசிந்ததை அடுத்து அவசரநிலையை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். கடந்த வெள்ளியன்று ரஷ்யாவின் நோரில்ஸ்க் நகரத்துக்கு அருகிலுள்ள மின்னுற்பத்தி நிலையத்தில் இருக்கும் எரிப்பொருள் தொட்டி சேதமடைந்தபோது இந்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மின்னுற்பத்தி நிலையத்தின் இயக்குநர் வியாசெஸ்லாவ் ஸ்டாரோஸ்டின் ஜூலை 31 வரை காவலில் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் மேல் வழக்கு ஏதும் பதிவ…
-
- 0 replies
- 527 views
-
-
நீங்கள் இணையத்தில் படம் பார்ப்பது சுற்றுச்சூழலை பாதிக்குமா? Getty Images உங்களுக்கு பிடித்த தொடரை பார்ப்பது அல்லது உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்பது என்பது தற்போது மிகவும் எளிதாகிவிட்டது. படம், இசை, தொலைக்காட்சித் தொடர் என எவ்வளவு வேண்டுமானாலும் நம்மால் உடனடியாக பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா? இணையத்தில் இருந்து அவற்றை பதிவிறக்கம் செய்ய அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது. மேலும், டிஜிட்டல் சேவைகளை நாம் நம்பியிருப்பது அதிகரித்து வருவதால், இதன் தேவையும் அதிகரிக்கும். இதற்கு தேவையான ஆற்றல் பலவகையில் உற்பத்தியாகிறது. இவற்றில் ஒரு சில வகைகள் மாசு விளைவிக்காதவை. ஆனால், பெரும்பாலும் ஆற்றல் என்பது, கார்பன் சார்ந்த …
-
- 0 replies
- 388 views
-
-
ஒவ்வொரு வாரமும் ஒருவர் கடனட்டை அளவுள்ள பிளாஸ்டிக்கை உட்கொள்கிறார் : புதிய ஆய்வு தகவல்! உலகிலுள்ள ஒவ்வொருவரும், வாரத்துக்கு 5 கிராம் அளவிலான பிளாஸ்டிக்கை உட்கொள்ளவதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அது, ஒரு கடன்பற்று அட்டையை உண்பதற்கு சமம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நிதியமான WWF நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த நியு காசல் பல்கலைக் கழகம் அந்த ஆய்வை நடத்தியது. குடிநீர் மூலமாகவே, மிக அதிகமான பிளாஸ்டிக், மனிதர்களின் உடலில் சேர்கின்றது. அதற்கு அடுத்தபடியாக, shellfish எனப்படும் கிளிஞ்சல் வகைக் கடல் உயிரினங்கள் மூலமாக, பிளாஸ்டிக் மனித வயிற்றுக்குள் செல்கின்றது. அந்தக் கிளிஞ்சல் உயிர்களை…
-
- 0 replies
- 234 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images ஒரு பெருங்கடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பார்க்க மிகப் பெரிய ஆய்வு திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆம், அட்லாண்டிக் பெருங்கடல், அதில் வாழும் உயிரினங்கள், அதிலுள்ள பவளப்பாறைகள் அனைத்தும் நலமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ஐ-அட்லாண்டிக் திட்டம் எனும் ஒரு சர்வதேச ஆய்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடல்தான் இந்த கிரகத்தின் இரண்டாவது பெரிய கடல். பருவநிலை மாற்றமும், பெருங்கடல்களும் ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதி அளிக்கப்பட்ட இந்த திட்டத்தில் முப்பதுக்கும் மே…
-
- 0 replies
- 510 views
-
-
பறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வார்கள் தெரியுமா?
-
- 8 replies
- 948 views
-
-
https://www.bbc.co.uk/news/video_and_audio/must_see/48336239/how-a-new-diet-for-gassy-cows-is-helping-the-environment https://www.bbc.co.uk/news/av/embed/p079s49q/48336239
-
- 1 reply
- 604 views
-
-
பிரான்ஸ்சை மையமிட்டுள்ள குளோரியா புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை! பிரான்ஸில் குளோரியா புயல் காரணமாக, பைரனீஸ்- ஒறியன்டேல்ஸ் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. பைரனீஸ்- ஒறியன்டேல்ஸ் மாவட்டத்தில் தற்போது அடை மழை மற்றும் கடுமையான காற்று வீசி வருவதாக அறியமுடிகின்றது. இதற்கமைய இன்று 80மில்லி மீற்றரிலிருந்து 120மில்லி மீற்றர் வரை மழை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை இந்த கால நிலை மேலும் மோசமான நிலையை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்பெயின் நாட்டில் இதுவரை மூன்று ப…
-
- 0 replies
- 317 views
-
-
குஜராத் கடற்கரையில் தஞ்சம் புகுந்த சிங்கங்கள் - கிர் காட்டிலிருந்து வெளியேறியதன் காரணம் என்ன? ராக்ஸி கக்டேகர் சாரா பிபிசி குஜராத்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒருகாலத்தில் குஜராத் முழுவதும் சிங்கங்கள் பரவியிருந்தன. மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தின் கடலோரப்பகுதிகள், தற்போது 100க்கும் மேற்பட்ட சிங்கங்களின் வாழ்விடமாக திகழ்கிறது. சிங்கங்களின் இயற்கை வாழ்விடம் சுருங்கிவருவதையே இது உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆசிய சிங்கங்களின் ஒரே இயற்கை வாழ்விடமான குஜராத்தின் கிர் வனப்பகுதியில், 2020ஆம் ஆண்டில் சுமார் 4…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
2019 கோடைகால வெப்பத்தால் சுமார் 900 பேர் மரணம் கடந்த கோடை காலத்தில் பிரித்தானியா அனுபவித்த வெப்பத்தின் விளைவாக பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 900 வயோதிபர்கள் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 21 முதல் 28 வரை நிலவிய இரண்டாவது வெப்பக் காலநிலை மிகவும் ஆபத்தானதாக அமைந்திருந்ததாக என்று இங்கிலாந்துக்கான பொதுச் சுகாதார சேவை (PHE) தெரிவித்துள்ளது. கடந்த வருட கோடைகாலத்தின் மிக வெப்பமான நாளாக கேம்பிரிட்ஜில் 38.7 செல்ஸியஸ் வெப்பநிலையுடன் ஜூலை 25 அமைந்திருந்தது. இது பிரித்தானியாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலைக்கான சாதனையை முறியடித்தது. ஜூன் 28 முதல் 30 மற்றும் ஆகஸ்ட் 23 முதல் 29 வரை இரண்டு அதிகளவிலான வெப்ப காலநிலை காணப்பட்டது. மு…
-
- 0 replies
- 225 views
-
-
இயற்கையை காப்போம்🙏 'புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையால் காணப் படும்' என்ற வள்ளுவன் குறளுக்கு ஏற்ப துாய்மை என்பது நமக்கு மிகவும் அவசியம். புறந்துாய்மையான சுற்றுச்சூழல் துாய்மை மிகவும் முக்கியமாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய-, மாநில அரசுகள் பல திட்டங்களை வகுத்து கொடுத்தாலும் அதை முறையாக பின்பற்றுவது சமூகத்தின் கடமை 1976ம் ஆண்டு 42-வது சட்டதிருத்தத்தின்படி மனித கடமைகளின் ஒன்று சுற்றுச்சூழலை பாதுகாப்பது. 'இந்திய குடிமக்கள் அனைவரும் காடுகள், ஏரிகள், கடல்கள், ஆறுகள், வனவிலங்குகள் போன்ற இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும்' என்பது தலையாய கடமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் …
-
- 152 replies
- 27.2k views
- 1 follower
-
-
2020 `ஒரு சுட்டெரித்த ஆண்டு` - வெப்பநிலை அதிகரிப்பும், விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும் பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச வானிலை முகமைகள் 2020ஆம் ஆண்டு ஒரு சுட்டெரித்த ஆண்டாக இருந்தது என்று ஒப்புக் கொண்டன. ஆனால் மிக வெப்பமான இருந்த ஆண்டுகளின் பட்டியலில் 2020 எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதில் அவை வேறுபடுகின்றன. நாசாவின் தரவுகள், 2020ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டைப் போல ஒரு மோசமான கொளுத்தும் ஆண்டாக அமைந்ததாகக் கூறுகிறது. வெப்பநிலை அளவில் இந்த முகமைகள் வேறுபட்டாலும் கடந்த 12 மாதங்கள் ஒரு வெப்பமான தசாப்தத்தின் பகுதி என ஒப்புக் கொள்கின்றன. மேலும் ஐந்து முக்கிய முகமைகள் 2020 ஆம்…
-
- 0 replies
- 808 views
-
-
நீரஜ் பிரியதர்ஷி பிபிசி இந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், NEERAJ PRIYADARSHI / BBC படக்குறிப்பு, தனிஆளாக மண்வெட்டியால் வெட்டி, மூன்று கிலோமீட்டர் நீளமும், 5 அடி அகலமும், மூன்று அடி ஆழமும் கொண்ட ஒரு கால்வாயை லோங்கி உருவாக்கினார். பிஹாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ள கயா மாவட்டத்தின் பங்கேபஜார் வட்டார மக்களின் முக்கிய தொழில் விவசாயம், ஆனால் இங்குள்ள மக்களால் நெல் மற்றும் கோதுமையை பயிரிட முடியவில்லை, ஏனெனில் நீர்ப்பாசன வசதி இல்லை. இதன் காரணமாக இங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி வேறு நகரங்கள…
-
- 4 replies
- 945 views
-
-
காபி கொட்டையில் புதிய வகை கண்டுபிடிப்பு: புவி வெப்ப நிலை அதிகரிக்கும்போது உதவி செய்யும் பட மூலாதாரம், CIRAD பருவநிலை மாற்றத்தால், அதிகரிக்கும் வெப்பத்தால் காபிச்செடிகள் அழியக்கூடும் என்று அஞ்சப்படும் நிலையில், அதிக வெப்பத்தைத் தாங்கி நிற்கும் காட்டுவகை காபிச் செடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அராபிகா காபி போன்றே சுவையுள்ள, ஆனால் வெப்பமான சூழலில் வளரக்கூடிய இந்த செடியின் பெயர் ஸ்டெனோபில்லா. மேற்கு ஆபிரிக்காவிலிருந்து வரும் இந்த வகை காபியை நாம் விரைவில் சுவைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். வெப்பநிலை அதிகரிக்கும் போது, நல்ல காபிச்செடி வளர்வது தொடர்ந்து கடினமாகிவிடும். 2050 …
-
- 0 replies
- 593 views
-
-
பருவநிலை மாற்றம்: உலகத்துக்கு ஆர்க்டிக் ஊதும் அபாய சங்கு 14 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்க்டிக் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ: கோப்புப்படம் ஆர்க்டிக் துருவப்பகுதியில் இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை மணிகளை அடித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் 20 அன்று சைபீரிய நகரமான வெர்கோயன்ஸ்கில் பதிவான இந்த வெப்பநிலையை, உலக வானிலை மையம் செவ்வாய்க்கிழமை சரிபார்த்துள்ளது. இந்த வெப்பநிலை, ஜூன் மாதத்தில் அப்பகுதியில் பதிவாகக்கூடிய தினசரி அதிகபட்ச சர…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
ஆக்டோபஸ்: ஆபத்தான, குறும்புத்தன உயிரினம் பற்றிய 10 தகவல்கள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆக்டோபஸ் மிகவும் விளையாட்டுத்தனமான, குறும்புத்தனமான உயிரினம். அது உங்களை பலவகையில் ஆச்சரியப்படுத்தும். அதன் உடல் முழுவதும் மூளையணுக்கள் உள்ளன. இந்த உயிரினம் பற்றிய சுவாரசியமான பத்து தகவல்களை இதோ: 1. அவை புத்திகூர்மையானவை. அவற்றின் கைகளில்தான் பெரும்பாலான மூளையணுக்கள் உள்ளன பட மூலாதாரம்,GETTY IMAGES ஆக்டோபஸ், தன் உடலில் ஒரு பெரிய நரம்பியல் அமைப்பை கொண்டுள்ளது. அதாவது, சராசரி ஆக்டோபசுக்கு 500 மில்லியன் நியூரான்க…
-
- 0 replies
- 784 views
- 1 follower
-