சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
பிரகலாதன் இரணியன் நடிப்பு, முடிவு எதிர்பாராதது.
-
- 0 replies
- 544 views
- 1 follower
-
-
அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிய ஜக்கி..! அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிய ஜக்கி..! -------- தோலுரிக்கும் நக்கீரன்..! ----------- ஜக்கி வாசுதேவ் தனது மனைவியை 1997 இல் கொலை செய்துவிட்டு 'அவள் ஜீவா சமாதி அடைந்துவிட்டாள்' என்று புளுகியதை அம்பலப்படுத்தியது முதல், இன்றுவரையிலான ஜக்கியின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திவரும் நக்கீரன் கோபால் அண்ணன், நேற்று வெளியிட்ட முக்கியமான வீடியோவை எல்லோரும் பாருங்கள், பரப்புங்கள்..! தமிழ்நாட்டின் பொது சமூகம் விழிப்புணர்வு பெற்று, ஒன்றுதிரண்டு தட்டிக்கேட்க முன்வராவிட்டால், ஜக்கிகள், நித்திகள், மகாவிஷ்ணுக்கள் முளைத்துக்கொண்டே இருப்பார்கள். அயோக்கியன் ஜக்கி அமெரிக்காவுக்கு…
-
-
- 2 replies
- 544 views
-
-
அமெரிக்காவில் அன்னா ஜார்விஸ் என்ற ஒரு ஆர்வலரின் முயற்சியால் அன்னையர் தினத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு அன்னையர் தினம் மே 14ஆம் தேதி கொண்டாடப்படும். அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு நாடுகள் வெவ்வேறு தினங்களில் தனித்தனி அன்னையர் தினத்தை கடைப்பிடிக்கின்றன. அந்த வகையில், உலகம் முழுவதும் அன்னையர் தின கொண்டாட்டங்கள் மற்றும் அவை எப்படி வந்தன என்பதை இங்கே பார்க்கலாம். அமெரிக்க அன்னையர் தினம் அமெரிக்காவில் அன்னா ஜார்விஸ் என்ற ஒரு ஆர்வலரின் முயற்சியால் அன்னையர் தினத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்னா 1854 ஆம் ஆண…
-
- 0 replies
- 544 views
- 1 follower
-
-
போராட்ட (அரகல) குழுவினர் நடத்திய கலந்துரையாடலில் கலந்து உரையாற்றிய போது... அரசியல் கைதிகள் விடுதலை என்ற கோஷத்தில் தமிழ் கைதிகளுக்கு முதலிடம் இருக்க வேண்டும் – காலிமுக போராட்டக்காரர்கள் கூட்டத்தில் மனோ கணேசன் காலிமுக போராட்டக்காரர்கள் என்ற முறையில் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்டம், பயங்கரவாத தடை சட்டம், அரசியல் கைதிகள் விடுதலை, மனித உரிமை பேணல், மக்களுக்கு நிவாரணம் ஆகியவற்றை நாம் ஏற்கிறோம். இவை எங்களதும் நீண்டகால கோரிக்கைகள்தான். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல…
-
- 2 replies
- 544 views
-
-
சிங்களம் மாறுமா? “அரசன் அன்று அறுப்பான், தெய்வம் நின்று அறுக்கும்” என்பது தமிழர் வாழ்வியலில் அடிக்கடி பேசப்படும் பழமொழிகளில் ஒன்று. இலங்கை தேசத்தின் இன்றைய நிகழ்வுகளால், இன்று இந்தப் பழமொழி மீண்டும் ஒரு வலம் வந்து கொண்டிருக்கிறது. எங்கள் தமிழ் இனத்தை, எங்கள் குலத்தின் வீரமறவர்களை, அன்று இனவழிப்புச் செய்த அன்றைய இலங்கை அரசனையும், அவர்தம் குடும்பத்தையும், இன்று அந்த அரசனது சிங்கள இனமே, தூஷிப்பதையும் துரத்துவதையும் பார்த்து பார்த்து தமிழர்கள் அகம் மகிழ்வதை யாராலும் மறுக்க முடியாது. இனவிடுதலை என்ற உன்னத நோக்கத்தோடு போராடி, விடுதலை தாகம் அடங்காமலே உயிர் நீத்தவர்களின் சாந்தியடையாத ஆத்மாக்கள் தான், இன்று உயிர் கொண்டெழுந்து…
-
- 0 replies
- 543 views
-
-
ஈலோன் மஸ்க்கிற்கு எதிராக ‘விஷ மாத்திரை’ முறையை பயன்படுத்தும் ட்விட்டர் - காரணம் என்ன? 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ட்விட்டர் நிறுவனத்தை சுமார் 43 பில்லியன் டாலர்களுக்கு வாங்க விருப்பம் தெரிவித்து, தொழிலதிபர் ஈலோன் மஸ்க் அறிவித்த அடுத்த நாளே, அதற்கான எதிர்வினையை ஆற்றியுள்ளது ட்விட்டர் நிறுவனம். அதாவது, விஷ மாத்திரை (Poison Pill) என்று அழைக்கப்படும் ஒரு மேலாண்மைக் கொள்கையைப் பயன்படுத்தியிருக்கிறது. இதன்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒருவர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடியாது. இந்த நகர்வின் மூலம், ஒரு பங்குதாரர் அதிகபட்சம் 15% பங்குகளை மட்டுமே வாங்க முடியும். இதன் மூல…
-
- 2 replies
- 543 views
- 1 follower
-
-
எனது வயதில் உள்ள இசை ரசிகர்கள் நான் சொல்லும் திரைப்பட பாடல் வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியும் 1....இளையராஜா வருவதற்கு முன் ஒரு பாடல் ஓடக்கூடிய நேரம் இரண்டரை நிமிடங்களாக இருந்தது. வெகு அபூர்வமான பாடல்கள் ஐந்து நிமிடம் ஓடும். இசைத்தட்டு இருந்த காலங்களில் பாதி பாடல் ஒரு பக்கத்தில் ஒலி பரப்பாகி பிறகு இரண்டாவது பக்கத்தை திருப்பி மீதி பாதியை கேட்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. காலப்போக்கில் ஒரே பக்கத்தில் ஆறு பாடல்கள் பத்து பாடல்கள் என பதிவாகி வந்தன ஆக" இளையராஜா வருவதற்கு முன்பு வரை ஒரு பாடலின் சராசரி நீளம் 2 1/2 நிமிடங்கள் அல்லது மூன்று நிமிடங்கள். இளையராஜா வந்த பிறகு தான் ஒரு பாடலை நாலு நிமிடங்கள் நாலரை நிமிடங்கள் என்று மாற்றினார் மாற்றினார். இது ராஜா செய்த மிக முக்கியமான மா…
-
- 1 reply
- 543 views
-
-
கன்னிக்கால் சொந்தத்தில ஒரு கலியாண வீடு , சோடிச்சிட்டு படுக்கேக்க விடியப்பிறம் ரெண்டு மணி ஆகீட்டுது . அப்பிடியே பந்தலுக்க போட்ட நாலு இரும்புக் கதிரையை ஒண்ட விட்டு ஒண்டு வளம் மாறி அடுக்கீட்டு ( உருண்டு விழாம இருக்க) படுத்தது தான் தெரியும் . திடீரெண்டு குளிர்ற மாதிரி இருக்க காலை உள்ளுக்க இழுத்து முழங்காலை மடக்கிக்கொண்டு, கழுத்து வரை சோட்ஸ்க்கு மேல கட்டின சாரத்தால போத்துப் படுக்க , “ விநாயகனே வினை தீர்ப்பவனே “ எண்டு சந்திரன் சவுண்ட் எண்டு எழுதின குழாய்க்கால சீர்காழி பாடத் தொடங்கீட்டார். ஊரில எல்லா நல்லது கெட்டதில சந்திரன் இருப்பார். நல்ல காரியங்களுக்கு குடுக்கிற பந்தலை செத்த வீட்டுக்கு சந்திரன் குடுக்கிறேல்லை . பந்தல், சோடனை , கதிரை, amplifier ஓட ரெண்டு speaker எண்…
-
- 2 replies
- 540 views
-
-
பொங்கலுக்கு முந்தைய நாள் இரவு, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். நேரம் 9.45 மணி, ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு இன்னும் 15 நிமிடங்கள். பேருந்துகள் கிடைக்குமா என்பது பெரிய கவலையாகி விட்டது. எனக்கு 20 அடி தொலைவில் ஒரு மனிதன் ஆட்டோக்களை நிறுத்த முயன்று கொண்டே இருந்தான். நின்ற ஆட்டோக்களும் அவனை ஏற்றிக் கொள்ளாமல் நகர்ந்தன, பேருந்து வருவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை, சரி, ஆட்டோவில் போகலாம் என்று முடிவு செய்து ஒரு ஆட்டோவை நிறுத்தினேன். "கோயம்பேடு போக வேண்டும்", ஆட்டோக்காரர் ஒரு கணம் யோசித்து விட்டு "200 ரூபாய் குடுங்க சார்" என்றார். சாதாரண நாட்களிலேயே 300 ரூபாய் கேட்பார்கள், இந்த ஊரடங்கு இரவில் அவர் கேட்டது நிய…
-
- 0 replies
- 540 views
-
-
Sangarasigamany Bhahi sSdpreootn8r0tiM818i36tef A:mu07d yhgei0 17laas1093a9iY8a7au · …
-
- 0 replies
- 540 views
-
-
கடந்த 300 ஆண்டுகால வரலாற்றில் தற்போது உருவாகியுள்ள பெங்கால் புயல் கணிக்க முடியாத வேகத்திலும் கணிக்க முடியாத திசை நோக்கியும் காணப்பட்டது. வங்களா விரிகுடாவில் தோற்றம் பெறும் சூறாவளிகள் ஒருபோதும் வடகிழக்கு திசை நோக்கி நகர்வது கிடையாது. கடந்த 300 ஆண்டுகால வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புயலில் தற்போது ஏற்பட்ட புயலே வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்திருக்கின்றது. பொதுவாகவே புயல் கடற்பகுதியில் நிலை கொண்டிருந்தால் அது தன்னை பலப்படுத்தி கொள்வதாக அர்த்தப்படும். இவ்வாறு தெரிவித்தார் யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா. ஐபிசி தமிழ் அகளங்கம் நிகழ்ச்சிகக்கு இன்று (30) அவர் அளித்த நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்தார். இந்த புயலின் தாக்கம் …
-
- 0 replies
- 538 views
- 1 follower
-
-
LTTE பாதுகாத்த இரகசிய பதுங்குக்குழி கண்டுபிடிப்பு, அகழ்வின் பல கண்டுபிடிப்புகளாம்! தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் பாரிய அளவிலான நிலக்கீழ் பதுங்குக்குழி ஒன்றை அகழ்ந்தெடுக்கும் பணிகள் நேற்று (ஜூலை 10, 2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளன. போரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுக்குடியிருப்பு, எட்டாம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் காணியில் அமைந்துள்ள இந்த நிலக்கீழ் பதுங்குக்குழி, விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூற…
-
- 1 reply
- 538 views
-
-
-
"அம்மா பீச் மரங்களின் நிழலில் நிரந்தரமாகச் சாம்பல் நிறக் கல்லறை ஒன்றில் உறங்கிப் போனது பெரும் துயரமென்றால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கல்லறையை உடைத்து அம்மாவின் நினைவுகள் தளும்பிக் கண்ணீராகப் பெருக்கெடுக்க அங்கே நின்றிருப்பது இன்னும் எத்தனை துயரமென்று யோசித்துப் பாருங்கள்..... எங்கள் கிராமத்தைக் கடந்து போகிற புதிய ரயில்பாதை அம்மாவின் கல்லறை வழியாகப் போகிறதென்று அரச சேவகர்கள் எங்களுக்குத் தகவல் சொன்னார்கள். ஆனாலும், வேறு வழியில்லை. அம்மாவின் உறக்கத்தை மீண்டும் ஒருமுறை கலைக்க வேண்டும். குழந்தைகளுக்காக உறக்கமின்றிக் கிடப்பதொன்றும் உலகில் அம்மாக்களுக்குப் புதிதில்லை. இப்போதும் துளி நினைவு கிடைத்து விட்டால் கூடத் தன் …
-
- 1 reply
- 535 views
-
-
எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்! குளியலறையில் வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயம்! மதுரை: பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 66. மதுரை டிவிஎஸ் காலனியில் வசித்து வந்த இந்திரா சௌந்தரராஜன் மர்மதேசம், விடாது கருப்பு, ரகசியம், சொர்ண ரேகை, அத்திப்பூக்கள் போன்ற டிவி தொடர்கள் நாவல்கள், சிறுகதைகள், படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். ஆனந்தபுரத்து வீடு என்ற திரைப்படத்திலும் இந்திரா சௌந்தரராஜன் பணியாற்றியுள்ளார். இவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் அவர் குளியலறைக்கு சென்ற போது வழுக்கி விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயமடைந்தது. உடனடியாக உறவி…
-
- 6 replies
- 534 views
-
-
தாயில்லாமல் நானில்லை 1969இல் வெளிவந்த திரைப்படம் அடிமைப்பெண். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் “தாயில்லாமல் நானில்லை தானா எவரும் பிறந்ததில்லை”. சமீபத்தில் நான் வாசித்த யேர்மனியச் செய்தி ஒன்று இந்தப் பாடலை எனக்கு நினைவூட்டியது. “..மேக வீதியில் நடப்பாள் உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள் மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள் மங்கள வாழ்வுக்குத் துணையிருப்பாள் தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை எனக்கொருதாய் இருக்கின்றாள் என்றும் என்னைக் காக்கின்றாள்..” இத்தாலியில் வெரோனா நாட்டில் இறந்து போன தனது தாயின் உடலோடு ஆறு வருடங்களுக்கு மேலாக ஒரே வீட்டில் அவரது மகன் வசித்து வந்திருக்கிறார். அதுவும் தனது தாயின் உடல் இருந்த கட…
-
- 1 reply
- 533 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கம் தனியான தமிழீழ கோரிக்கையில் இருக்கவில்லை என சிரேஷ்ட ஊடவியலாளர் நந்தன வீரரத்ன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பட்டலந்த வதைமுகாம் நூல் தொடர்பில் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தனியான ஈழம் இல்லை “1993ஆம் ஆண்டு அன்ரன் பாலசிங்கத்தை சந்தித்த போது நான் கேட்ட கேள்வி, “இப்போது உங்களின் தனியான ஈழம் கிடைக்கும் தானே? ஆதலால் பாணமையில் இருந்து மன்னார் வரை எல்லையை நிறுவினால் எவ்வாறு எல்லையில் பாதுகாப்பு வழங்குவீர்கள் மேலும் அதற்கான ஆள்பலம் போதுமா? அதன் தூரம் சுமார் 400 கிலோமீட்டராகும். இந்தியாவில் இருந்து கூலிக்கா ஆட்கள் கொண்டுவரப் …
-
-
- 3 replies
- 532 views
- 1 follower
-
-
அபிவிருத்தி என்றால் என்ன? எம்.பி யாகி அமைச்சுப் பதவி பெறுவதன் மூலம் அபிவிருத்தி அடைய முடியுமென்றால் இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்த பிரதேசங்களாக சிங்களப்பிரதேசங்கள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் சிங்கள பிரதிநிதிகளே அதிகளவு அமைச்சு பதவிகளை இதுவரை கொண்டிருக்கிறார்கள். இனியும் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை என்பதே உண்மை. உண்மை இவ்வாறு இருக்கும்போது அமைச்சு பதவி பெறுவதால் எப்படி தமிழ் பிரதேசம் அபிவிருத்தி அடைய முடியும் என சிலர் நம்புகிறார்கள்? றோட்டு போடுவது, சிலருக்கு வேலை வாய்ப்பு பெறுவதுதான் அபிவிருத்தி என்றால் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே இவை எல்லாம் கிடைத்தனவே. பேசாமல் அவர்களின் கீழ் அடிமையாக இருந்திருக…
-
-
- 2 replies
- 531 views
-
-
ரெய்லர்... தைத்த, சட்டை. ஒருவா், ரெய்லர் கிட்ட சட்டை தைக்கத் துணி எடுத்துகிட்டுப் போனார். ரெய்லர் துணியை அளந்து பாத்துட்டு,துணி பத்தாதுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்துட்டார். அவரும் வேறு ஒரு ரெய்லர் கிட்ட இதே துணியை எடுத்துகிட்டு போனார். ரெய்லர் அளந்து பாத்துட்டு, இவருக்கும் அளவு எடுத்து கிட்டு 5 நாள் கழிச்சு வரச் சொன்னார். 5 நாள் கழிச்சு இவுரு போனார். சட்டை ரெடி.போட்டுப் பாத்தாரு. சரியா இருந்தது. அப்ப ரெய்லரோட மகன் சின்னப் பையன் அங்கு வந்தான், அவனும் இவர் குடுத்த அதே துணியில் சட்டை போட்டிருந்தான். இவரு ஒண்ணும் பேசலை. நேரா விருவிருன்னு பழைய ரெய்லர் கிட்ட வந்தாரு. யோவ், நீ தைக்க.மாட்டேன் , துணி பத்தாதுன்னு சொன்னே இதப்பாருய்யா நான் சட்டை போட்டிருக்கேன்…
-
- 0 replies
- 531 views
-
-
டங்குவார் அறுந்து போவது என்றால் என்ன பொருள்? இரண்டையுமே அறிவோம். Tanga / Tonga என இந்தியில் அழைக்கப்படும் குதிரை வண்டியில் குதிரையை வண்டியுடன் பிணைக்க பயன் பட்ட தோல் வார் தான் (மாட்டுத் தோலால் ஆன பட்டையான கனமான பெல்ட் போன்ற ஒன்று) குதிரையின் முழு பலமும் இந்த டங்குவாரின் மூலமே வண்டிக்கு கிடைக்கும். வண்டியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வளையங்களின் ஊடே இந்த டங்குவார் நுழைக்கப் பட்டு குதிரையின் உடலோடு சேர்த்து கட்டப்பட்டிருக்கும். மேற்கண்ட டோங்கா வண்டிகள் முகலாயர் காலத்தியவை. வண்டியோட்டி முன் புறம் பார்த்தபடி வண்டியோட்ட பயணிப்பவர்கள் பின்னோக்கி பார்த்தபடி அமர்ந்திருப்பர். பின்னர் ஆள வந்த ஆங்கில உயர் அலுவலர்களாலும் ஆங்கில மேட்டுக்குடி மக்களாலும் …
-
- 0 replies
- 531 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. குறித்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது இன்று காலை 11 மணி முதல் பிற்பல் 1 மணி வரையில் இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இதில் அனைரையும் இணைந்து கொள்ளுமாறு சர்வஜன நீதி அமைப்பின் ஊடான அதன் இணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார். இந்தநிலையில் குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹக்கீம், மனோ கணேசன் பங்கேற்றிருந்தனர். அத்துடன், மதத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர…
-
- 1 reply
- 530 views
-
-
14 நாடுகளை கடந்து செல்லும் உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை. ஒரு வளைவு கூட கிடையாது... 14 நாடுகளை கடந்து செல்லும் உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை எங்க இருக்கு தெரியுமா? ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் நமக்கு பிடித்த பாடலை கேட்டபடி வாகனத்தில் செல்வது எவ்வளவு ரம்மியமாக இருக்கும். இதுபோன்ற பயணங்களை அனுபவிக்க விரும்பும் நபர்களுக்கு ஏற்ற நெடுஞ்சாலை ஒன்றைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம். பான்-அமெரிக்க நெடுஞ்சாலை என்பது மெக்ஸிகோ, குவாத்தமாலா, எல் சால்வடார், ஹோண்டுராஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா மற்றும் பனாமா போன்ற வட அமெரிக்காவின் முக்கிய நாடுகளின் வழியாக செல்லும் தொடர்ச்சியான பாதை ஆகும். இது கொலம்பியா, ஈக்வடார், பெரு, சிலி மற்றும் அர்ஜென்டினா போன்ற தென் அமெரிக்க ந…
-
- 1 reply
- 529 views
-
-
எந்தளவுக்கு உணவுப் பொருளை தேடிக் கொள்ள முடியுமோ... அந்தளவுக்கு தேடி வைத்துக்கொள்ளுங்கள், உயிர் பிழைக்கலாம். நான் ஏலவே சொன்னதுதான். இலங்கை எப்போதோ திவாலாகிவிட்ட நாடு. சில அரசியல் காரணங்களுக்காய் அதை அறிவிக்காமல் மறைத்து வைத்திருக்கின்றனர். அரச மற்றும் அரச சார்பற்ற வங்கிகளில் பணமில்லை, அரச வங்கிகளின் வங்குரோத்து நிலமையினை வெளியில் தெரியவிடாமல் செய்ய அரசாங்கம் பணத்தாள்களை அச்சிட்டு வங்கிகளுக்கு கொடுத்துவருகிறது. இது மோசமான நிலமை. நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் பெரும் தொகை பணம் இருப்பின், அல்லது வங்கிக்கணக்கிற்கு பெரும் தொகை பநம் வந்திருப்பின் அதனை நீங்கள் உடனே பெற்றுக்கொள்ள முடியாது வங்கியில் பல மணிநேரம் காத்திருந்தே அதனை பெற்றுக்கொள்ள முடியும…
-
- 0 replies
- 529 views
-
-
நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் November 16, 2025 1 Minute அண்மைய காலங்களில் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் “மாவா” பாக்கு பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மாவா பாக்கு என்றால் என்ன?, அது எவ்வாறு உடலில் போதையினை ஏற்படுத்துகின்றது?, மாவா பாக்கு உடலில் ஏற்படுத்தும் தீங்கான விளைவுகள் என்ன? மற்றும் அது எவ்வாறு மனிதனை அடிமையாக்குகின்றது என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது. 1. மாவா பாக்கில் என்ன இருக்கின்றது? மாவா பாக்கின் முக்கிய உள்ளடக்கம் மூன்று பொருட்கள்தான்: பாக்கு (Areca Nut): கொட்டைப் பாக்கை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது சீவி பயன்படுத்துகின்றனர். புகையிலை (Tobacco): உலர்ந்த புகையிலை இலைகள். சுண்ணாம்பு (Slaked Li…
-
-
- 2 replies
- 527 views
- 2 followers
-
-
எலோன் மஸ்க் ட்விட்டர் வாக்கெடுப்பு: ரூ. 1.5 லட்சம் கோடி டெஸ்லா பங்குகளை விற்க எலோன் மஸ்க் ட்விட்டரில் வாக்கெடுப்பு 38 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கோடீஸ்வரர்கள் வரி மசோதாவை கடுமையாக எதிர்க்கிறார் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் தன்னிடம் இருக்கும் பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்க வேண்டுமா என்று ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பைத் தொடங்கியிருக்கிறார் கோடீஸ்வரர் எலோன் மஸ்க். அவரை ட்விட்டரில் 6.26 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையும் வாக்கெடுப்பைத் தொடந்து தன்னிடம் இருக்கும் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்க…
-
- 0 replies
- 527 views
- 1 follower
-