கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
783 topics in this forum
-
எரியும் ரகசியங்கள் ----------------------------- ஒருவருக்குமே சொல்லாத ஒன்றை உங்கள் ஒருவருக்கு மட்டுமே சிலர் சொல்லியிருப்பார்கள் ரகசியம் பத்திரம் என்று நீங்களும் உங்களின் சில ரகசியங்களை சிலருக்கு மட்டும் சொல்லியிருப்பீர்கள் பத்திரம் என்று வீடு ஒன்று வாங்கும் விசயம் கூட ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அந்த வீட்டை வாங்க முன் இன்னார் இன்னாரை கட்டப் போகின்றார் அதுவும் ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அவர்கள் கட்ட முன்னர் எப்போதும் வெளியே சொல்லி விடாதே என்று சத்தியமும் கேட்டிருப்பார்கள் அந்த வீட்டை வா…
-
-
- 2 replies
- 1.3k views
-
-
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே ---------------------------------------------- என்ன சத்தம் அது எலியாக இருக்குமோ இரவிரவாக விறாண்டியதே என்று பல வருடங்களின் பின் பரணுக்குள் ஏறினேன் எலி என்றில்லை ஏழு எட்டு டைனோசர்கள் அங்கே நின்றாலும் கண்டே பிடிக்க முடியாத ஒரு காடு அது என்று அங்கே நான் விக்கித்து நிற்க 'என்ன, மேலே எதுவும் தெரியுதோ............' என்றார் காடு வளர்த்து எலி பிடிக்க என்னை மேலே ஏற்றிய என்னுடைய கங்காணி முப்பது வருடங்களுக்கு முந்தி இருந்த வாழ்க்கையின் அடையாளம் கூட அங்கே தெரிந்தது பழைய சாமான்களாகவும் சட்டி பெட்டிகளாகவும் இந்தப் பூகம்ப தேசத்தில் தலைக்கு மேல கத்தி பரண் தான் போல மொத்தத்தையும் அள்ளி விற்றாலும் சில பணம் கூட தேறாது அள்ளுகிற கூலி நூறு அது அவ்வளவும் நட்டம் ஒர…
-
-
- 3 replies
- 415 views
-
-
எல்லா இரவுகளையும் போல சில இரவுகள் இருப்பதில்லை வானில் அலையும் ஒற்றைக் குருவியின் துயர் அப்பிய குரலை போல சில இரவுகள் காரணமின்றி துயரால் நிரம்புகின்றன எங்கோ அறுந்து போன ஒரு இழை ஞாபகத்தில் வந்திருக்கலாம் என்றோ காணாமல் போன நண்பனின் குரல் மீண்டும் கேட்டு இருக்கலாம் அல்லது எப்போதோ எவருமற்று தனித்து விடப்பட்டதின் துயரம் தீண்டி இருக்கலாம் புரண்டு படுக்கையில் நிரடிப் போகும் ஒரு நொடி நினைவுத் துளியால் சில இரவுகள் காரணமின்றி துயரத்தில் மூழ்கி விடுகின்றன ரயில் பயணங்களில் இரா வேளையில் குளிர் காற்றிடை பாடும் விழியற்ற பாடகனின் குரலில் வழியும் வேதனையைப் போல இருக்கின்றன இந்த இரவுகள் பின்னிரவொன்றில் விளக்கற்ற வீதி ஒன்றில் விற்று முடிந்து செ…
-
- 12 replies
- 3.5k views
-
-
எல்லா மனிதனுக்கும் உரிமைகள் வேண்டும்-பா.உதயன் மக்களின் பணத்தை திருடிய கள்ளர் மானம் இழந்தே போவார்கள் உண்ணக் குடிக்க வளி இல்லை என்றால் மக்கள் தெருவில் இறங்கி எரிப்பார்கள் ஊழல் லஞ்சம் செய்தவன் கூட்டதை இனி ஆளும் கதையை முடிப்பார்கள் உத்தமர் போலே நடித்தவர் வாழ்வை உடைத்தெறியாமல் போகார்கள் மக்களும் இனி மேல் மாறிட வேண்டும் தப்பு செய்தவன் தலைமையில் இருந்தால் எப்பவும் கேள்விகள் கேட்டிட வேண்டும் எதிர் காலம் பற்றி சிந்திக்க வேண்டும் தப்பு செய்தவனை தண்டிக்க வேண்டும் நல்ல தலைமையை மக்கள் தெரியவும் வேண்டும் இனவாதிகள் இனிமேல் இருக்கவும் கூடாது இன மத பேதம் கடந்து போகுதல் வேண்டும் இன்னொரு இனத்தை அழித்தவர் வாழ்வு இறுதி வரைக்கும் நிலைக்காத…
-
- 2 replies
- 346 views
-
-
இதயத்தில்... குடிகொண்டிருக்கும்.. இதய தேவதையே.... !!! உன் தூக்கம்.... கலையக் கூடாது... என்பதற்காக.... மெதுவாக நடக்கிறேன்....!!! திடுக்கிட்டு... எழுந்துவிடக் கூடாது... என்பதற்காக.... மெதுவாக பேசுகிறேன்...!!! இரத்தச் சுற்றோட்டத்தில் ஓடி விளையாடும்... இதய தேவதையே.... விழுந்து விடாதே....!!! மூச்சுக்காற்று... உன்னை சுட்டு விடக்கூடாது.... என்பதற்காக.. கும்பக மூச்சு விடுகிறேன்......!!! @ எல்லாம் உனக்காகவே அன்புடன் கவிப்புயல் இனியவன்
-
- 7 replies
- 1.2k views
-
-
என் "யாழ்"அன்பு இதயங்களுக்கு! பறந்து வந்த குருவிகள் சொன்ன பாசக் கதையிது.. “எழு எல்லாம் இயலும்” ************************* இயற்கை தந்த அழகிய வாழ்வு ஏன் தான் புரியவில்லை- மனிதா எம்மினம் போல வானில் பறக்க ஏன் தான் முடியவில்லை. துக்க சுமையை சுமந்து சுமந்து சோர்ந்துகிடக்காதே! தூத்துவார் கதையை கேட்டு கேட்டு துணிவை இழக்காதே! பக்கத்துவீட்டைப் பார்த்து பார்த்து பரிதவிக்காதே! படித்த வேலை இல்லை இலையென படுத்துறங்காதே! உண்ண உணவு தேடித் தேடியே ஊரிடம் கெஞ்சாதே! உலகமெல்லாம் கடன் கடனென்று உயிரை மாய்க்காதே! இயற்கை தந்த அழகிய வாழ்வு ஏன் தான் புரியவில்லை- …
-
- 7 replies
- 924 views
-
-
எவரை எவர் ஏமாத்துகின்றனர் வளமை போலவே இந்த முறையும் இந்திய அதிகாரி அதே 13 க் கதையை சொல்லிப் போனார் எத்தனை முறை சொன்னார்கள் என்று எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் முப்பது வருட கதை இது இத்தனை வருடமாக இந்தியாவை ஏமாத்த இலங்கைக்கு மட்டும் தெரியும் இது சிங்கள இராஜதந்திரம் முப்பது வருடமாய் ஈழத் தமிழனை ஏமாத்த இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டும் தெரியும் இது இன்னும் ஒரு இராஜதந்திரம் இனி வரும் காலமும் இன்னும் ஒரு பொருளாதார ஓப்பந்தம் எழுத இந்திய அதிகாரிகள் மீண்டும் வருவார்கள் அப்பவும் இன்னும் ஒரு முறை நினைவூட்டுவர் அந்த 13 க் கதையை சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதை போலே மீண்டும் வேதாள…
-
- 1 reply
- 631 views
-
-
ஏன் இந்த வெறுப்பு..! *************** தெளிந்தோடும் நீரோடை கூட கழிவு நீர் சேறாகிப் போச்சு அழகான.. மலர்த் தோட்டம் கூட கருவேலம் முள்ளாகிப் போச்சு மானுட இதயங்கள் கூட மரத்துப் போய் கல்லாகிப் போச்சு இயற்கையின் ரசனைகள் கூட இருள் சூழ்ந்த புகையாகிப் போச்சு இந்த.. வாழ்க்கையை ரசித்து வாழத்தெரியாத போக்கினை எவன் தான் புகுத்தியது. நாக்கினில் நஞ்சையும் பொய்யையும் கலந்து இளையோர் மூளைக்குள் யாரவன் செலுத்தியது. வானிலே பறக்கின்ற மகிழ்ச்சியின் எல்லையை குறோதக் கூட்டினில் எவனோ குறுக்கியது. உலகத்தில் அழி…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஏமாந்த கடிகாரம் ----------------------------- கையில் கட்டுவதெல்லாம் கடிகாரமே என்னும் பழைய ஒரு பிறவி நான் கடிகாரம் ஒன்றும் இருந்ததும் இல்லை எந்த வேளையிலும் இரவலாகவும் கட்டினதும் இல்லை மாமனார் கொடுத்த ஒன்று தங்கம் போல தகதகத்தது கல்யாணம் முடிந்த அன்றே கழட்டி வைத்தேன் இப்ப அது எங்கேயோ மாமாவிற்கு கடைசிக் காலத்தில் இதுவும் ஒரு கவலை ராத்திரி ஆழ்ந்த தூக்கம் இல்லை என்கின்றான் ஒருவன் எப்படி என்றால் அவனின் கடிகாரம் சொன்னது என்கின்றான் விளையாட்டின் நடுவிலேயே அய்யோ........... இதயம் எக்கச்சக்கமாக துடித்து விட்டது என்று அலறுகின்றான் இன்னொருவன் அதுவும் கடிகாரம் தான் சொன்ன…
-
- 0 replies
- 719 views
-
-
சிறு வயதில், ஊரில் இருந்த நாட்களில், வீட்டிற்கு அப்பாவின் நண்பர்கள் எந்நேரங்களிலும் வருவார்கள். பலர் தேநீர் கேட்பார்கள். கேட்காதவர்களுக்கும் தேநீர் கொடுக்கப்படும், அது ஒரு உபசரிப்பு, மரியாதை போல. சீனியின் அளவு, சாயத்தின் அளவு போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. இப்பொழுது காலம் மாறி, இடமும் மாறிவிட்டது. கேட்பதற்கும் தயக்கம், கொடுப்பதற்கும் தயக்கம், அளவுகள் வேறு தனித்தனியாகிவிட்டது. ** ஒரு கோப்பை தேநீர் -------------------------------- வீட்டுத் தவணைக் கட்டணம் வாகன தவணைக் கட்டணம் வீட்டுக் காப்புறுதி பொருள் காப்புறுதி மருத்துவக் காப்புறுதி கண்ணுக்கு த…
-
-
- 2 replies
- 406 views
-
-
ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 99 எனக்குப் பேய் பிடித்திருக்கிறது அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்கிறார்கள் இருக்கிறதா இல்லையாவென்று தெரியாவிட்டாலும் எனக்கும் பேய் பிடித்திருக்கிறது அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமின்றி, பேய்களுக்குக் கோயில் இல்லை வேளா வேளைக்குப் பூஜை இல்லை அபிஷேகம் அலங்காரம் காணிக்கை உண்டியல் அறவே இல்லை தேர் இல்லை திருவிழா இல்லை சப்பார பவனி கூட இல்லை கடவுளைப் போல் பேய்கள் சாதி மதம் பார்ப்பதில்லை. ஓட்டத்தான் வேண்டுமெனில் கடவுள்களை ஓட்டிவிட்டு பேய்களை ஓட்டுங்கள் ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 98 பாத்திரமறிந்து பிச்சையிடுகிறது தெய்வம் தங்கத்தட்டில் வைரக்கற்களையும் அலுமினியத் தட்டில் சில்லர…
-
- 228 replies
- 34.2k views
-
-
-
- 0 replies
- 402 views
-
-
கடந்த இரண்டு வாரங்களாக இருமல் இருமல் இருமல் தொண்டை கழுத்து முதுகு தலை நுரையீரல் இதயம் எல்லா உறுப்புக்கும் இப்போது வேலை இருமல் இப்போது எனக்குக் கிடைத்த ஒரு நுட்பமான வார்த்தை விளையாட்டு நித்திரை தொலைந்தது மேல் மூச்சு வாங்குகிறது பகலை நீட்டிக்க இருமல் தகுதியானவர்களுக்கு மட்டுமே பரிசளிக்கப்படுகிறது தியா - காண்டீபன்
-
-
- 7 replies
- 731 views
- 1 follower
-
-
என்... கருத்துக்கள்.....!!! சிறுபிள்ளைத்தனமாகவோ ..... குழந்தைத்தனமாகவோ ..... !!! செத்ததாகவோ...... இத்ததாகவோ........ இருக்கலாம்..... !!! என்றாலும் ஒருமுறை பாருங்கள்......! அதிலிருந்து உங்களுக்கு.... புதிய கருத்துக்கள்.. தோன்றலாம்..... !!! @ கவிப்புயல் இனியவன்
-
- 20 replies
- 3.2k views
- 1 follower
-
-
கலிபோர்னியாவில் இடைவிடாமல் மழையும், பனியும் ஆக இருக்கின்றது. போன வருடமும் இவ்வாறே. கொட்டும் பனியிலும், கடும் காற்றிலும் ஒரு சோடி கழுகளின் கூட்டையும், அவைகளின் முட்டைகளையும் இங்கு சிலர் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். இது இங்கு செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றது ************* ஒரு வழிச் சாலை --------------------------- இரண்டு வெண்தலைக் கழுகுகள் அவற்றுக்கு பெயரும் உள்ளது ஒன்று லிபர்ட்டி மற்றது கார்டியன் மூன்று முட்டைகள் போட்டு மாறி மாறி அடைகாக்கின்றன வாழும் நாள் முழுதும் இவை சோடி மாறுவதில்லை கூடும் மாறுவதில்லை ஒவ்வொரு வருடமும் தண்டும் தடியும் கொடியும் புதிதாக அ…
-
-
- 3 replies
- 452 views
-
-
அனந்தியே.... அன்புக்குரிய... அரசியே.... அகிலத்தையும்.... அண்டதையும்.... அதிரவைக்கும்.... அழகியே..... அன்னமே....... அன்பும்... அடக்கமும்.... அங்கங்களாய் .... அமைந்த....... அதீத.... அற்புதமான.... அபூர்வ..... அமுதே..... அன்னையின்..... அனுமதியோடும்... அயலவரின்.... அரவணைப்போடும்... அம்மனின்.... அலங்காரமாய்.... அவையில்.... அமர்ந்திருப்பவளே.... அன்னையானாய்.. அப்பனானேன்.... அருமையான.... அரவிந்தனை.... அவதரித்தாய்... அவனியில்.... அரண்மனை..... அரசரானோம்..... அன்பானவளின் அங்கம்.... அவதியாகி.... அசையாது.... அடங்கிட.... அல்லல்பட்டு... அமைதியானது.... அடிமடியில்.... அவ்வுயிர்..... …
-
- 0 replies
- 782 views
-
-
உ ஒரேயொரு ....................! ஒரேயொரு வானுயர்ந்த கட்டிடம் - உயரத்தில் ஒரேயொரு நீள்சதுர அறை - உச்சியில் ஒரேயொரு சாரளம் கூரைக்குள் அசையும் - ஆங்கே ஒரேயொரு கட்டிலோடு மெத்தையுடன் தலையணை ......! ஒரேயொரு குறுக்கு மறைப்பில் சமையலறை - எதிரே ஒரேயொரு குளியலறை நாலடி நடையில் ஒரேயொரு மீன்தொட்டி ஒரு பொன் மீனோடு ஒரேயொரு நாய்குட்டி கழுத்தில் கயிறோடு .....! ஒரேயொரு அம்மணி அகவையோ எண்பது - காலையில் ஒரேயொரு முறை திறப்பாள் சாரளத்தை ஒரேயொரு தரம் வரும் தென்றல் தங்கி நிக்கும் ஒரேயொரு துளிகளாய் வரும் மழை முகம் நனைக்கும் ....! ஒரேயொரு தடவை அழைப்புமணி எதிரொலிக்கும் ஒரேயொரு க்கால் திறந்த கதவிடுக்கில் உணவிருக்கும் ஒரே…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஓ அமேசான் (Pray for Amazon) உலகத்தின் உடல் தீ பிடித்து எரிகிறது உன்னோடு சேர்த்தே மனிதப் பிழைகளினால் மண்ணில் மனிதனும் இல்லை மரமும் இல்லை என்றாகிப்போய் விடுமோ ஒரு உலகம் தானே உனக்கும் எனக்கும் ஏதோ பயமாக இருக்கிறது உலகக் குழந்தைகளை நினைக்கையிலே ஓ உனக்காகவே ஆமேசூன் ஒவ்வொரு எங்கள் கண்ணீர் துளிகளும் உன்னை வந்து அணைக்கட்டும் .
-
- 6 replies
- 1.8k views
-
-
ஓடி விளையாடு பாப்பா ஓயாமல் படித்துவிடு பாப்பா கூடி விளையாடு பாப்பா குறைக்கூறலாகாது பாப்பா அகிலத்தில் உயர்ந்தது அன்பு அனைவருக்கும் வேண்டும் நற்பண்பு அன்னைக்கு இணையில்லை எதுவும் ஆசானுக்கு தெய்வமும் பணியும் பசிக்கு உணவிடல் தர்மம் பாவத்தால் தொடரும் கர்மம் பாதகத்தைக் களைத்திடு நீயும் பாருக்குள் செழித்திடும் நேயம் ஆதியில் இல்லையடி சாதி அறவாழ்விற்கு வேண்டுமடி நீதி மெய்க்கு துணையாகும் உயிரும் மெய்ஞானத்திற்கு துணயாகி உயரும் பஞ்சப்பூதத்தின் தனித்துவம் செந்தீ பாரதத்தின் அமரத்துவம் பாரதி பெண்ணுரிமைக்கு வித்திட்டான் மகாகவி பெண்கல்விக்கு அவனே இறைவி அறியாமை அகற்றிடு பாப்பா ஆக்கமாய் உழைத்திடு பாப்பா ஆணவம் நிலைக்காது பாப்பா …
-
- 0 replies
- 555 views
-
-
ஓட்டுப் போட்ட உரிமையில் கேட்டால் என்ன தப்போ..! (05.08.2020) தேர்தல் திருவிழா முடிந்து தேசம் அமைதியாகிறது உங்கள் கட்சி “தேர்களை” ஊர் ஊராய் கொண்டு சென்று வெண்றும், தோற்றும் விழா முடிவாயிற்று. ஒன்றாக நிற்க்காமைல் ஒவ்வொன்றாய் நின்றாலும் வெண்றவர்கள் நீங்கள் நாங்கள்… வேறு வேறு தமிழர் இல்லை தனிப்பட்ட குரோதங்கள் தலை தூக்கி ஆடாமல்-புல் பனிகாய பகலவனின் கதிர் போலே நீங்கள்-நெல் மணியாக அனைவருக்கும் நிதம் சோறு படைப் பீர். உள்ளக் குமுறலினால் உடைபட்டுப் போனாலும் மக்களை.. அள்ளக் குறையாத அன்போடு பாருங்கள். தெள்ளத் தெளிவாக-எம் …
-
- 14 replies
- 2.5k views
-
-
கறுப்பான கல்லில் சாமியை காண வெறுப்பு கறுப்பான தோழனுக்கு - கறுப்புச் சட்டை. கொரோனாவை விடக் கொடுமை இது.
-
- 6 replies
- 1.2k views
-
-
-
வளையற் குவியல் ஒன்றைக்காட்டி வல்லமை கேட்டதோர் கவிதை. என் நெஞ்சிலுதித்ததை அங்கு பகிர்ந்தேன். இது கவிதையல்ல ஓர் ஏழையின் குமுறல். அது கீழே. ஓர் ஏழையின் குமுறல் கைநிறையப் போடக் கலர்கலராக் குவிச்சிருக்கு பைநிறையப் பணமிருந்தாப் பார்த்துப் பார்த்து வாங்கிக்கலாம். ஏழைக நம்பளுக்கு எதுக்கிந்த வளையலெல்லாம் வாழ வழியில்லையாம் வளையலொரு கேடா புதுப் புள்ளத்தாச்சிக்குப் போடுவாங்க வளைகாப்பு எட்டு மாதப் புள்ளத்தாச்சி எம் பொழைப்பு கல்லுடைப்பு கல்லுடைக்கும் கைக்கு காப்பு சரிவருமா? நாட்கூலி வாங்கி நானூத்தும் கஞ்சிலதான் ஆத்தா மனம் மகிழும் அவவயிறும் குள…
-
- 6 replies
- 1.2k views
-
-
வைகறை நேரத்தில் கரை தாண்டி கடல் தீண்டி கட்டுமரம் சென்றதே அந்தி மாலை ஆனதே அந்த ஆதவனும் அரைபாதியாக மேற்கு எல்லையில் நின்றதே கரை திரும்புமா கட்டுமரம் அதில் எனை மணம்முடித்த மணவாளனும் பாதுகாப்பாக திரும்பி வந்திடுவானா என காத்திருக்கும் மனைவியின் கன்னத்தில் கண்ணீர் துளிகளும் தாமத்தின் பதற்றத்தில் மங்கை அவள் மனதில் நடுகடலில் ஆழிசுழல் வந்து களத்தினை பாதித்ததோ அண்டை நாட்டு கள்வர்களால் பாவம் நிகழ்ந்திருக்குமோ என எல்லைக்கடந்ததே எண்ணங்கள் என்னவளின் மனதில் என கூறிடும் அலையின் சலனங்கள் அதை என்றும் கைது செய்திட ஆளில்லை என்னவளின் அச்சத்தினால் அதை நிறைவு செய்திட இயலவில்லை கண்ணெதிர கணவனை காணும் வரை....
-
- 0 replies
- 792 views
-
-
-
- 2 replies
- 691 views
-