தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
நீங்கள் செய்த கர்மம் சீக்கிரம் திரும்பி வந்துவிட்டது: சன் டிவியை சாடிய ஹைகோர்ட் நீதிபதி! சென்னை: கேபிள் டிவி தொழிலில் ஏகாதிபத்தியமாக செயல்பட்டு மற்றவர்களை பாதிப்படைய செய்தீர்கள்...அந்த கர்மம் சீக்கிரம் திரும்பி வந்துவிட்டது என்று சன் டிவி குழுமத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் சாடியுள்ளார். சன் குழுமத்திற்கு சொந்தமான கல் கேபிள்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விட்டல் சம்பத் குமரன் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். அப்போது அவர், கல் கேபிள்ஸ் ந…
-
- 2 replies
- 738 views
-
-
ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அ…
-
- 2 replies
- 899 views
-
-
சசிகலாவுடன் இந்து என். ராம் திடீர் சந்திப்பு! அதிமுக அழியும் என சாபம் கொடுத்தவர்! சசிகலாவை இந்து என் ராம் இன்று திடீரென சந்தித்தார். சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் பேரழிவு ஏற்படும் என எச்சரித்திருந்தார் ராம். சென்னை: மூத்த பத்திரிகையாளரான இந்து என் ராம் இன்று திடீரென சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்து பேசினார். அதிமுகவை சசிகலா கைப்பற்ற நினைத்தால் பேரழிவுதான் ஏற்படும் என கடுமையாக விமர்சித்த இந்து ராம் திடீரென போயஸ் கார்டனுக்கு விசிட் அடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தினார் சசிகலா. இதற்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் இந்து ராம். அரசியல் …
-
- 2 replies
- 724 views
-
-
காரைக்குடி: ஊழல் புகாரினால் தமிழகத்தின் இரண்டு பிரதான திராவிட கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், வரும் தேர்தலில் இந்த பின்னடைவை பா.ஜ.க பயன்படுத்தி கொள்ளும் என்றும் அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். காரைக்குடியில் பா.ஜ.க. சார்பில் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு பிறந்தாள் வாழ்த்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "மோடியின் வெளிநாட்டு பயணம் இந்தியாவை உலக அரங்கில் மதிப்பு மிக்க நாடாக உருவாக்கியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்பது நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனை. அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் அதை காரணமாக வைத்து த…
-
- 2 replies
- 515 views
-
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படம்! முதல்வர் ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல் சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தியதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு பாராட்டு தெரிவித்ததோடு, மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது குறித்தும், சென்னையில் போலீஸ் தடியடி தொடர்பாக முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், 2006-ம் ஆண்டு முதல் பல்வேறு ப…
-
- 2 replies
- 549 views
-
-
"இந்திய ஐக்கிய நாடுகள்" என பெயர் மாற்றம் செய்வோம்: ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி. சென்னை: இந்தியாவின் பெயரை அமெரிக்கா போல 'இந்திய ஐக்கிய நாடுகள்" (United Staes of India) என பெயர் மாற்றம் செய்வோம்; கூடங்குளம் அணு உலைகளை மூடுவோம் என்று மறுமலர்ச்சி திமுகவின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும் என்றும் ம.தி.மு.க தெரிவித்துள்ளது. சென்னையில் லோக்சபா தேர்தலுக்கான ம.தி.மு.க தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு" மீனவர் பிரச்சினை மீனவர் பிரச்னையில் கடுமையான நடவடிக்கை எடுக்க போராடுவோம். மீனவர் ந…
-
- 2 replies
- 721 views
-
-
சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சிறை கொட்டடியில் வாடுகின்றோம்; முருகன், ராபர்ட்பயஸ் தமிழக முதலமைச்சருக்கு கடிதம்; கால வரையறையற்ற உண்ணாவிரதம்! Published By: RAJEEBAN 01 FEB, 2024 | 11:14 AM திருச்சி சிறப்பு முகாமில் உரிமைகளும் உணர்வுகளும் பறிக்கப்படுவதாக கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முருகன் ராபர்ட் பயஸ் அகியோர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த கடிதத்தில் இருவரும் தெரிவித்துள்ளதாவது, "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில்இ ஏறக்குறைய ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிம…
-
- 2 replies
- 578 views
- 1 follower
-
-
விரைவில் வழக்கு...! கோடநாடு எஸ்டேட்டை மீட்க முன்னாள் உரிமையாளர் அதிரடி ''கோடநாடு எஸ்டேட்டை மீட்டெடுப்பது குறித்து, இன்னும் ஒரு வாரத்தில், இறுதி முடிவு எடுப்பேன்,'' என, அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். ஜெ., சசிகலா ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், பட்டியலில் முக்கிய இடம் பிடித்தது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட். இதன் முன்னாள் உரிமையாளர் கிரேக் ஜோன்ஸ், தற்போது உயிருடன் இல்லை; இவரது மகன், பீட்டர் கிரேக் ஜோன்ஸ், கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ரூ. 33 லட்சத்திற்கு வாங…
-
- 2 replies
- 589 views
-
-
எனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளது: கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி புகார்! சென்னை: திரைப்படங்களில் பணியாற்றிய வகையில் கமலஹாசனிடம் இருந்து எனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளது என்று நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ளார். தனது கணவரைப் பிரிந்தவுடன் நடிகை கவுதமி நடிகர் கமலுடன் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2016 அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டு பிரிந்து விட்டார். இப்போது கமலும் கவுதமியும் மீண்டும் சேர்ந்து வாழ இருப்பதாக தகவல்கள் சில ஊடங்கங்களில் வெளியாகின. இதனை நடிகை கவுதமி மறுத்துள்ளார். இது தொடர்பாக அ…
-
- 2 replies
- 579 views
-
-
கொதிப்பில் "கதிராமங்கலம்".... சென்னை மெரீனாவில், திடீர் போலீஸ் குவிப்பு ! சென்னை மெரினாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறாமல் தடுக்க அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடபட்டுள்ளனர். கதிராமங்கலத்தில் 12 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாய்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கதிராமங்கலம் பகுதியில் குழாய்களில் நேற்று எண்ணெய் கசிவு ஏற்பட்டது.இதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்யக்கோரி கிராம மக்கள் நேற்று…
-
- 2 replies
- 381 views
-
-
கட்சிச் சின்னம் சர்ச்சைகளில் தேர்தல் ஆணையம் முடிவெடுப்பது எப்படி?- சில விவரங்கள் பொதுவாக ஒரே கட்சியாக இருந்து பிறகு உடைந்து இரு அணிகள் பிரிந்து அந்தக் கட்சியின் அசல் தேர்தல் சின்னத்துக்கு இருதரப்பினரும் உரிமை கோரும்போது தேர்தல் ஆணையம்தான் எந்த அணிக்கு கட்சியின் அசல் சின்னம் என்பதை முடிவெடுக்கும். அது அந்த முடிவை எப்படி எடுக்கிறது என்பது குறித்த சில விவரங்கள் இதோ: எந்த அதிகாரத்தின் கீழ் தேர்தல் ஆணையம் கட்சிச் சின்ன சர்ச்சைகளில் முடிவெடுக்கிறது? 1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் வழங்கல் உத்தரவு என்பதன்படி தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை அங்கீகரித்து சின்னங்களை ஒதுக்க வேண்டும். உத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் உள்ள செல்போன் கோபுரங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை எட்டுவதால் கடத்தல் கும்பல்களுக்கு கடற்படையினரிடமிருந்து தப்புவதற்கு வசதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1978 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்திலும், தலைமன்னாரிலும் 100 மீட்டர் உயரத்தில் டிரான்ஸ்மிஷன் கோபுரம் அமைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி சேவை அளிக்கப்பட்டது. 1983-ல் இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரமடைந்தபோது இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவையை வழங்குவது தடைபட்டது. பின்னர் 1988-ல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்றபோது மீண்டும் அந்த கோபுரங்கள் செயல்படத் தொடங்கின. இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் தொலைதொடர்பு துறை தனியார் மயமாக்கப்பட்ட பின்னர், பிரபல இந்திய தனியார் செல்ப…
-
- 1 reply
- 540 views
-
-
சென்னை வந்துள்ள ஹொலிவூட் நடிகர் ஆனல்ட், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விக்ரம் - எமி ஜக்ஸன் நடித்துள்ள ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். ஆனல்ட் ஷ்வார்ஸ்நெகர் ஒரு நடிகர் மட்டுமல்ல. கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக இரு முறை (2003 - 2011) பதவி வகித்தவர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரமுகர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று அவர் சந்தித்தார். பிற்பகல் 2.45 மணிக்கு இந்தச் சந்திப்பு நடந்தது. தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த…
-
- 1 reply
- 529 views
-
-
பதிவு செய்த நாள் 25 டிச 2014 08:16 சென்னை: இயக்குநர் சிகரம் பாலசந்தரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றபோது, அதை அனைத்து தொலைக்காட்சிகளும் நேரடியாக ஔிபரப்பின. பெசன்ட் நகர் மின் மயானத்தில் ஏராளமானவர்கள் கூடி நின்று மறைந்த திரைஉலக மேதைக்கு அஞ்சலி செலுத்தியதைக் காண முடிந்தது. பல இமாலய படைப்புக்களை படைத்த இயக்குநர் ஒருவருக்கு இறுதி சடங்கு நடந்த வேளையில் எங்கும் சோகம் நிலவியது. கண்ணீருடன் நடிகர், நடிகைகள் சடங்கில் கலந்து கொண்டனர். சிலர் கதறி அழுதனர். எங்கும் சோகம் கப்பிய நிலையில், இறுதி சடங்குகள் முடிந்து, நடிகர், நடிகைகள் அங்கிருந்து வௌியேறினர். அதுவரை சோகமாக இருந்த சூழ்நிலை திடீரென மாறியது. மின்மயானத்தில் திரண்டிருந்த கூட்டம், சோகத்தில் இருந்து விடுபட்டு, தங்களின் அபிமான நடி…
-
- 1 reply
- 585 views
-
-
ஐந்தாவது நாளாகவும் முருகன் உண்ணாவிரதப் போராட்டம்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள முருகன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். வேலூர் மத்திய சிறையில், இன்று (புதன்கிழமை) ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் நீடிக்கிறது. கடந்த 28 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், தன்னையும் தன் மனைவி நளினியையும், விடுதலைச் செய்யக்கோரி முருகன், கடந்த மாதம் 30 ஆம் திகதி தமிழக ஆளுநரிடம் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு மீது இது…
-
- 1 reply
- 491 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் : December 18, 2019 இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து தமிழக அரசின் நிலைபாடு என்ன என கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்h. குடியுரிமை சட்டத்தை பொறுத்தவரைக்கும், இந்தியாவில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. அது எந்த மதத்தினராக இருந்தாலும் சரி. எவருக்கும் பாதிப்பு இல்லை என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தெளிவான கருத்தை தெரிவித்து இருக்கின்றா…
-
- 1 reply
- 575 views
-
-
நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தேர்தலில் தனித்துக் களம் காண்பது ஏன்? மக்கள் நீதி மய்யத்தால் உங்கள் வாக்குகள் சிதறுமா?- சீமான் பதில் சென்னை அனைத்துத் தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்துக் களம் காண்பது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி: ''நாங்கள் தனித்துக் களம் காண்பதற்கு திராவிடக் கட்சிகளுக்கு மாற்று கொண்டுவர வேண்டுமென்பதற்காக மட்டுமல்ல, இந்திய அளவில் ஒற்றைக் கட்சி முறைக்கும் மாற்று ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற கொள்க…
-
- 1 reply
- 593 views
-
-
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் சசிகலா | கோப்புப் படம். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது. அது குறித்த நோட்டீஸுக்கு சசிகலாதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்து தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு பதில் அளித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது. தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணங்களில் அதிமுக நிர்வாகிகள் பட்டியலில் தினகரன் பெயரோ, அவரது பொறுப்பு விவரமோ இல்லை. தினகரன் அதிமுகவில் எந்த ஒரு அத…
-
- 1 reply
- 493 views
-
-
தானியங்கி மூலம் மது விற்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மது விற்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் 21 வயது குறைந்தவர்களுக்கு மது விற்கக்கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் நிலையில், தானியங்கி மூலம் மது விற்பனையை தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் மால்கள் உள்பட 500 இற்கும் மேற்பட்ட இடங்களில் அந்த இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூ…
-
- 1 reply
- 606 views
-
-
ஸ்டாலின் கூட்டத்திற்கு சென்றால் ரூ.200 சம்பளம் - பட்டப்பகலில் பண விநியோகம்
-
- 1 reply
- 629 views
-
-
GOTO அமைப்பு உதயம் உலக தமிழ் வர்த்தக சங்கம், “ உலக தமிழ் வம்சாவளி அமைப்பை ” தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு ஆரம்பித்து உள்ளது. அதில் உலகெங்கும் உள்ள தமிழ் வம்சாவளியினர் ஒன்றிணைந்து செயற்படவும் , தமிழ் வழி கல்வியை ஊக்கு விக்கவும், தமிழ் கலை கலாச்சாரம் பாரம்பரியம் போன்றவைகளை நம் சந்ததினருக்கு அறியும் வகையில் ஏற்பாடுகளை செய்வது இவ் அமைப்பின் கடமையாகும். மேலும், இவ் அமைப்பு 28 நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் , தமிழ் வர்த்தக சங்கங்கள் , ஒன்றிணைக்கவும் தமிழ் இணைய வழி கல்வி, ஊடகம் சார்ந்த நிகழ்வுகள் ஒருங்கிணைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 6 மற்றும் 7ஆம் திகதிகளில் சென்னையில் உலக தமிழர் திருநாள் விழாவும் , உலக தமிழ் வம்சாவளியினர் ஒன்று கூடல்…
-
- 1 reply
- 829 views
-
-
தென்சென்னை மேற்கு மாவட்டத்தில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வு தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக, விருகம்பாக்கத்தில் 21-11-14 அன்று மாவீரர் நாள் நிகழ்வு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது. (Facebook)
-
- 1 reply
- 1.4k views
-
-
தி.மு.க. தலைவராக இன்று 50-வது ஆண்டில் கருணாநிதி... 1969-ல் அண்ணா மறைவுக்குப் பின் என்ன நடந்தது? `கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன். அவருக்கு அடுத்துதான் கருணாநிதி. இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்து விட்டால் பிரச்னைகளோ, நெருக்கடிகளோ இருக்காது.' ``என்னுடைய 44 வயது பிறந்தநாளைத்தான் நான் முக்கியமாகக் கருதுகிறேன். அந்தப் பிறந்தநாள் விழாவில் அண்ணாவின் பேச்சுதான் எனக்குச் சிறந்த பிறந்தநாள் பரிசாக அமைந்தது. 'தண்டவாளாத்தில் தலைவைத்துப் படு என்று சொன்னாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்று சொன்னாலும், இரண்டையும் ஒன்றாக, சமமாக கருதுபவன் கருணாநிதி' …
-
- 1 reply
- 2.2k views
-
-
இந்திய மீனவர்களின் கைது விவகாரம் - எஸ்.ஜெய்சங்கருக்கு மீண்டும் கடிதம் அனுப்பினார் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் 34 பேரையும் விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று அதிகாலை இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர். அவர்களுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளும், கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே எதிர்வரும் 05ஆம் திகதி வரை…
-
- 1 reply
- 164 views
-
-
மர்ம படகில் வந்த மூவர் கைது இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வந்த படகிலிருந்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. அவர்களிடமிருந்து, படகு மற்றும் அதிவேக படகுக்கான இன்ஜின் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் மீனவர்கள் இல்லை என்ற சந்தேகம் வந்ததையடுத்து அவர்களிடம் பொலிஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/184511/மர-ம-படக-ல-வந-த-ம-வர-க-த-
-
- 1 reply
- 527 views
-