Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மக்களவையில் கொந்தளித்த நிர்மலா - 'கல்லறை கட்டுவதற்குத்தான் ஜிஎஸ்டி; தகனம், இறுதிச் சடங்குக்கு வரியில்லை' 1 ஆகஸ்ட் 2022 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SANSAD TV - LOK SABHA படக்குறிப்பு, மக்களவையில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்கள் பயன்படுத்தும் பால், தயிர், மோர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி தொடர்பாக மக்களவையில் திங்கட்கிழமை திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விகளுக்கு தமிழில் பதிலளித்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிர்ணயித்த வரியை விட அதிக வரிச்சுமையை மக்கள் மீது திணித்தது திமுக அரசுதான் என்று குற்றம்சாட்டினார். அவர…

  2. அடுத்த முதல்வர் ஸ்ருதிஹாசன் இல்லையா.? கமல் பதில். சென்னை: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், கமல்ஹாசன் தனது வலிமையை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. என்னதான் 2019 மக்களவை தேர்தலை சந்தித்த அனுபவம் இருந்தாலும், தமிழத்தின் தலையெழுத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கும் சட்டமன்ற தேர்தல் களம் என்பது வேறு. அது கமலுக்கும் புதிது. வேட்பாளர்கள் தேர்வு, குழப்பமற்ற கூட்டணி முடிவு, உள்ளடி வேலை இல்லாத கட்சி நிர்வாகம் என்று ஓரளவு சீராகவே இன்று வரை அரசியல் களத்தில் பயணப்பட்டு கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். தேர்தல் அறிக்கை - SEET தேர்வு தற்போது வேட்பாளர்களை அறிவித்து, ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்யும் அளவுக்கு பரபர மோடில் உள்ள கமல், தனது மக்கள் நீதி ம…

  3. தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்!-சீமான் சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்! தமிழீழம் என்கின்ற மாவீரர்களின் புனிதக்கனவு ஈடேறட்டும்! என்று அவர் தனது நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையின் சாரம்சம்: ‘உலக வரலாறு என்பதே சில தனி மனிதர்களின் வரலாறுதான்’ என்கிறார் இரசியப்புரட்சியாளர் லெனின். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடியான தமிழர் என்கிற தேசிய இனத்தின் வரலாறு என்பது ஒப்பாரும் மிக்காரும் இல்லாது மறத்தின்வழி நின்ற…

  4. படத்தின் காப்புரிமை Getty Images Image caption ராஜீவ் காந்தி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் ஏழு பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் தீர்மானத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது உடன் இறந்த ஒருவரது மகனான எஸ்.அப்பாஸ் உள்ளிட்டவர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதா என்…

  5. தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மொத்தம் 690 பேர் கொரோனாவால் பாதிப்பு தமிழகத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முந்தினம் 621 ஆக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண…

    • 1 reply
    • 750 views
  6. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டத்தை சேர்ந்தவர் குணசேகர் மகள் தனலட்சுமி (17). இவர், அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். தனலட்சுமிக்கு தோல் பாதிப்பு காரணமாக சமீபநாட்களாக தலையில் முடி உதிர்வு ஏற்பட்டு வந்தது. தொடர்ச்சியாக அதிகளவில் முடி உதிர்வு ஏற்பட்டதால் கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள கருமலைலோயர் பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டுக்கு வந்தார். பாட்டி வீட்டில் தங்கி அருகேயுள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் தலைமுடி உதிர்வது தொடர்ந்தது. இதனால் மனவேதனை அடைந்த தனலட்சுமி நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள தனது அறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சத்தம் க…

  7. பாஜக போட்ட ரஜினிகாந்த் கணக்கும் தற்போது அதன் முன் உள்ள சவாலும் பத்ரி சேஷாத்ரி அரசியல் விமர்சகர் பட மூலாதாரம், GETTY IMAGES (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.) ரஜினி, யானை போன்றவர். அவர் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொன்னாலும் சரி, கட்சி ஆரம்பிக்கமாட்டேன் என்று சொன்னாலும் சரி, ஊடகங்களும் பிற அரசியல் கட்சியினரும் அவரைப் பற்றி விவாதிப்பதில் குறைவே இல்லை. ரஜினி உண்மையிலேயே ஒரு கட்சியை ஆரம்பித்து மாநிலம் முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்திருந்தாலுமே தமிழக அரசியலில் அவர் எந்த …

  8. புதுடில்லி: லோக்சபா சபாநாயகராக, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, சுமித்ரா மகாஜன் இன்று தேர்வு செய்யப்படுகிறார். அதே நேரத்தில், துணை சபாநாயகர் பதவி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, தம்பிதுரைக்கு வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., உடனான உறவுகளை வலுப்படுத்த, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும், பா.ஜ., திட்டமிட்டுள்ளது. பதினாறாவது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரின், இரண்டாவது நாளான நேற்று, புதிய எம்.பி.,க்கள் பதவியேற்றனர். எம்.பி.,க்கள் பதவியேற்பு இன்றுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, லோக்சபாவின் புதிய சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. மனு தாக்கல்:சபாநாயகராக, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, சுமித்ரா மகாஜன், 72, தேர்வு செய்யப்படுகிறார். இதற்காக நேற்ற…

    • 0 replies
    • 749 views
  9. பட மூலாதாரம்,TWITTER @VERTIGOWARRIOR படக்குறிப்பு, ஹைதர் அலி உதவியுடன் ஆங்கிலேயர்களை தோற்கடித்தவர் ராணி வேலுநாச்சியார் கட்டுரை தகவல் எழுதியவர், வக்கார் முஸ்தஃபா பதவி, பத்திரிக்கையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 22 செப்டெம்பர் 2024, 03:00 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வேலு நாச்சியார், ஹைதர் அலியை 18 ஆம் நூற்றாண்டில் திண்டுக்கல் நகரில் சந்தித்தார். பூட்டுகளுக்கும், பிரியாணிக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டின் இந்த நகரம் அப்போது தென்னிந்தியாவின் மைசூர் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வடக்கில் கிருஷ்ணா நதி, கிழக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்கில் அரபிக் க…

  10. பதநீர் விற்று பள்ளிக்கூடம் நடத்தும் கிராம மக்கள் பகிர்க அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகின்ற நிலையில், தூத்துக்குடி அருகே கடந்த 15 ஆண்டுகளாக கல்வி வளர்ச்சிக்காக பதநீர் விற்று வருகின்றனர் ஒரு கிராம மக்கள். தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அந்தோணியார்புரம் கிராமம். சுற்றிலும் பனைமரங்கள் மிகுதியாக காணப்படும் இந்த கிராமத்தில் பனை தொழிலாளர்கள் அதிகம். ஒரு காலத்தில் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரித்து விற்பனை செய்து வந்த இந்த கிராம மக்கள், அதில் போதுமான வருமானம் கிடைக்காததால் தற்போது பதநீராகவே விற்பனை …

  11. மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாயமாக்குங்கள்... மு.க.ஸ்ராலின் அதிரடி..! மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்ராலின் வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த தினத்தையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதேமில்லத்தின் நினைவிடத்தில் மு.க.ஸ்ராலின் மரியாதை செலுத்தினார். அவருடன் தயாநிதி மாறன், அன்பழகன், சுப்பிரமணியன் மற்றும் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்ராலின், ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழிசை கொண்டு வரவேண்டும் என குரல் கொடுத்தவர் காயிதே மில்லத் என்பதை சுட்டிக்காட்டினார். மும்மொழி திட்டம் என்ற பெயரில் இந…

  12. தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: ரஜினிக்கு 17 சதவீதம் ஆதரவு: இந்தியா டுடே கருத்து கணிப்பு புதுடில்லி: தமிழக சட்டசபைக்கு தற்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்றும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும் என்றும் ரஜினிக்கு 16 சத ஓட்டுக்கள் கிடைக்கும் என்றும் இந்தியா டுடே நடத்திய பரபரப்பு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. …

  13. அகத்தி ஆயிரங்காய் காய்த்தாலும்….. தமிழ் நாட்டில் மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சு+டு பிடிக்க ஆரம்பித்து விட்டன. திமுக, அண்ணா திமுக, வைக்கோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விஜயகாந்தின் தேசிய முற்போக்குத் திராவிட கழகம் என்றெல்லாம் திராவிட மாயையை முன்னிறுத்திப பல்வேறு கட்சிகள் களத்தில் செல்வாக்கோடு நிற்கும்போது, தமிழர் தேசியத்தை முன்னிறுத்தி சீமானை தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட “நாம் தமிழர்” கட்சியும் தன்னால் முடிந்தளவு வெற்றி வாய்ப்பைக் கூட்டிக்கொள்ளப் பாடுபடுகிறது. பாக்கு நீரிணைக்கு இருபுறங்களிலுமுள்ள தமிழர் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு, சோஷலிச சித்தாந்தங்களையும், பாரம்பரிய தமிழர் வாழ்வியலையும் முதன்மைப்படுத்தி ஒரு ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை …

    • 0 replies
    • 749 views
  14. அரசியலில் கூட்டாக செயல்பாடு: ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் பேட்டி கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம் முடிவு செய்யும் என ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அந்த கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #Rajinikanth சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். தனது ரசிகர் மன்றம் மூலமாக கட்சி பணிகள் குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிக்கை வ…

    • 9 replies
    • 749 views
  15. தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை January 30, 2019 தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத:துள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஜனவரி 22ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் இறங்கியுள்ள ஆசிரியர்கள் நேற்றைய தினத்துக்குள் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போரா…

  16. தமிழக முதலமைச்சர் சிங்கப்பூர் பயணம். தழிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணித்துள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையில் சிங்கப்பூர் பயணித்துள்ளார். இந்த நிலையில் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் மற்றும் அந்த நாட்டின் முன்னணி தொழில் வல்லுனர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன் சிங்கப்பூர் பயணத்தை தொடர்ந்து நாளை மறுதினம் ஜப்பான் பயணிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2023/1332617 @Kapithan ஆதவன் நியூஸ் தலைப்பு... இப்படி இருந்தது //தழிழக …

  17. சசிகலாவுக்கு எதிராக போயஸ் தோட்டம் எதிரே ராப் பாடல்! (வீடியோ) சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இந்திய ராப் பாடகி சோபியா அஷ்ரப். இவர், சசிகலா முதல்வராக தேர்வானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தன் குழுவினர் நான்கு பேருடன் இணைந்து நேற்று நள்ளிரவு போயஸ் தோட்டத்திற்கு வெளியே கோவமாக ராப் பாடல் இசைத்து எதிர்ப்பை வெளிபடுத்தி உள்ளார். ’நான் உங்களுக்கு ஓட்டு போடவில்லை, நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல’ என்று கடும் கோபத்துடன் ராப் செய்துள்ளார். இதை ஃபேஸ்புக் லைவ் வீடியோவாக பதிவு செய்துள்ளார். http://www.vikatan.com/news/tamilnadu/79910-sofia-ashraf-raps-against-sasikala-infront-of-poes-garden.art

  18. பணமிருக்கும் மனிதரிடம் மனமிருக்கவில்லை!- கரோனா நிவாரணப் பணியில் இருக்கும் எழுத்தாளர் வேதனை எங்கள் வேலை எழுதுவதோடு முடிவதல்ல, செயல்பாட்டிலும் இருக்க வேண்டும் என்று எண்ணும் எழுத்தாளர்களில் ஒருவர் அ.முத்துகிருஷ்ணன். மதுரை யானைமலையை உடைப்பதற்கென்றே அரசு ஒரு திட்டம் கொண்டுவந்தபோது, அதற்கு எதிராக 'பசுமை நடை' என்ற அமைப்பை ஏற்படுத்தி அப்பணியைத் தடுத்து நிறுத்தியவர். வாரந்தோறும் 'பசுமை நடை' எனும் பெயரில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்கு மக்களை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர், தொல்லியல் குறித்த விழிப்புணர்வையும், தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணியையும் செவ்வனே செய்து வருபவர். இந்த பொதுமுடக்கக் காலத்தில் அடித்தட்டு மக்கள் படும் …

  19. மறைந்த முதலமைச்சர் என்று ஒளிபரப்பிய டிவி (வைரல் வீடியோ) தந்தி டிவியில் செய்தி வாசிப்பின் போது மறைந்த முதலமைச்சர் என்று வாசித்து விட்டு பின்னர் வேறு செய்திக்கு தாவியுள்ளார் செய்தி வாசிப்பாளர். இது நேரலையில் நடந்த குளறுபடி என்றாலும், தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது சாதாரண குளறுபடியால் நடந்துள்ளது. செய்தி திரையில் ஓடுவதை தான் செய்தி வாசிப்பாளர்கள் பார்த்து படிப்பார்கள். செய்தி கொடுத்தவர்கள் தவறாக கொடுத்திருக்கலாம். இதுபோன்று நேரலை செய்தியில் தவறு நிகழ்வது வழக்கமான ஒன்றுதான். இருந்தாலும் அதில் முதலமைச்சர் என்ற வார்த்தை வந்ததன் காரணத்தினால், தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகி…

    • 2 replies
    • 749 views
  20. வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் ஜெயலலிதா தனக்கென சொகுசு வசதிகள் ஏற்படுத்தித் தருமாறு எவ்வித நிபந்தனையும் வைக்கவில்லை என சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெய்சிம்ஹா தகவல் வெளியிடுகையில் --- "மேடம் ஜெயலலிதா எவ்வித வி.ஐ.பி வசதியும் கோரவில்லை. பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள மற்ற கைதிகளைப் போலவே அவரும் நடத்தப்படுகிறார். சிறைக்காவலர்கள், அதிகாரிகளிடம் அவர் மிகவும் நாகரிகமாக நடந்து கொள்கிறார். மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் இரும்புக் கட்டில் வேண்டும் என கேட்டார். அது…

  21. கொரோனா யுத்தம்: தலைமையின்றி தடுமாறும் தமிழக அரசு! மின்னம்பலம் ராஜன் குறை உலகையே அச்சுறுத்தி நிலைகுலைய வைத்திருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலின்போது துரதிர்ஷ்டவசமாக தமிழகம் தலைமைப்பண்பற்ற பலவீனமான மனிதரால் ஆளப்படுவது பெரும் வருத்தத்திற்குரியது, விபரீதமானது. கடந்த சில தினங்களாக தமிழக அரசின் அறிக்கைகளும், நடவடிக்கைகளும் எந்த வித தெளிவும், தொலைநோக்கும் தலைமைப்பண்புமற்ற தடுமாற்றங்களையே காட்டுகின்றது. பிரச்சினைகளை சற்றே விரிவாகக் காண்போம். அதற்குமுன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த சில அடிப்படைத் தகவல்களை நாம் கவனிக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தமிழக அரசியல் எந்த வித தலைமைப் பண்புமின்றி, அதற்கான ஒரு ஆற்றலோ அல்லது அருகதையோ இர…

  22. நெல்லையில் 25–ந்தேதி பிரேமலதா பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல மக்கள் நல கூட்டணியிலும் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காஞ்சீபுரத்தில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்றும், தே.மு.தி.க. தலைமையை ஏற்று கூட்டணியில் இணைபவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்றும் விஜயகாந்த் அறிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் சில அரசியல் விமர்சகர்கள் தே.மு.தி.க கட்சி, தி.மு.க. அல்லது பா.ஜனதாவுடன் சேரும் என்றே கூறி வருகிறார்கள். இந்த நிலையில் வருகிற 25–ந்தேதி (வெ…

  23. ‘அம்மா அப்பா கையால சாப்பிடணும்!’ - அரித்ராவின் ஆசை [ வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2014, 09:35 GMT ] [ அ.எழிலரசன் ] நன்றி : ஆனந்த விகடன் 05 Mar, 2014 டி.அருள் எழிலன், ஓவியம்: ஸ்யாம் உயரமான மதில் சுவர்கள் சூழ்ந்த சிறைச்சாலைக்குள் நிழல் சூழ்ந்த ஒரு மரம். அதன் கீழே ஒரு கரும்பலகை. கைதிகளுக்குப் பாடம் நடத்துகிறார் பேரறிவாளன். சிறையில் பிறந்த ஏதோ ஒரு குழந்தைக்கு அழகாக உடை தைத்துக்கொடுக்கிறார் முருகன். தான் சிறையில் கட்டிக்கொண்டிருக்கும் சாய்பாபா கோயிலை மேலும் எப்படி அழகாக்கலாம் எனக் கழிகிறது சாந்தனின் வாழ்வு. 23 ஆண்டுகால சிறை வாழ்க்கை... காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கம்பிகளுக்கு வெளியே சுவர்களுக்குள் சுழலும் வாழ்வு, இருள் கவியும் நேரத்தில் தனிமைச் சிறைக்குள் சென்ற…

  24. புழல் ஏரி அருகே 25 மூட்டைகளில் வீசப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள். சென்னை புழல் ஏரி அருகே 25 மூட்டைகளில் பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை கத்தை கத்தையாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்புநீக்க நடவடிக்கையை அறிவித்தார். நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டன. பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு, அதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டது. பழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.