தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
சொல்வது டிஜிட்டல் இந்தியா; கழிவை அள்ளுவது வாளியில்..! கனிமொழி கிண்டல் டிஜிட்டல் இந்தியா என அரசு கூறுகிறது; ஆனால் கழிவை வாளியில் அகற்றம் நிலைதான் உள்ளது என்று திமுக எம்பி கனிமொழி கிண்டல் செய்துள்ளார். எண்ணூர் கடற்பகுதியில் எண்ணெய் படிந்துள்ளதை இன்று திமுக எம்பி கனிமொழி இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலில் படிந்துள்ள எண்ணெய் கழிவுகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார். கடலோர பகுதி மக்கள் நச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்த கனிமொழி, எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும், சில நாட்களில் எண்ணெய் படல…
-
- 1 reply
- 621 views
-
-
எடப்பாடி - 99, தி.மு.க. கூட்டணி - 98, தினகரன் - 25, ஓ.பி.எஸ்-12... தள்ளாடும் தமிழ்நாடு ! மீண்டும் ஒருமுறை பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டத்துக்கு ஆளும் அ.தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், டி.டி.வி. தினகரனின் அரசியல் பிரவேச அறிவிப்பால் எடப்பாடி அரசு தள்ளாடத் தொடங்கியுள்ளது. டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து இதுவரையில் 25 எம்.எல்.ஏ.க்கள் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். ஆக, இந்த நிமிடக் கணக்குப்படி 97 எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஆட்சியாக எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு இருக்கிறது. அடுத்தடுத்த அரசியல் வானிலை மாற்றங்களைப் பொறுத்து 97-ல் கொஞ்சம் …
-
- 1 reply
- 414 views
-
-
ஆன்லைன் ரம்மி திறன்களை வளர்க்கிறதா? நீதிபதி சந்துரு தலைமையில் ஆய்வுக்குழு அமைத்த தமிழ்நாடு அரசு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இணையத்தில் சூதாட்டம் மாதிரிப் படம் ஆன்லைன் ரம்மியில் பணத்தை ஏமாந்து, பலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு அந்த விளையாட்டின் அம்சங்களை ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக தமிழ்நாடு உள்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு உண்மையில…
-
- 1 reply
- 215 views
- 1 follower
-
-
பசுமை வழிச்சாலை.. பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.. நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு உத்தரவு. பசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளும், கிராம மக்களும், சுற்றுசூழல் ஆர்வாளர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் விளைவாக விவசாயிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றன…
-
- 1 reply
- 443 views
-
-
தீய நோக்கோடு உள்ளவன், ஒற்றுமையாய், திட்டமிட்டு, தான் பலமுறை தோற்றாலும் முட்டி மோதுகிறான், "ஏன் ஈழத்தமிழர்களில் தங்கள் இலக்கை அடைவதில் சோர்வுற வேண்டும்?" என்ற நினைவே இன்று இச்செய்தியை படிக்கையில் மனதில் தோன்றியது. முல்லைப் பெரியாறு: புதிய அணை ஆய்வுக்கு அனுமதி: மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம். முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த, கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழக அரசு, இது நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை எழுதிய கடித விவரம்: முல்லைப் பெரியாறு பகுதியில…
-
- 1 reply
- 426 views
-
-
01167b2705ddca8c6cb7d929fe59bfb3
-
- 1 reply
- 800 views
-
-
தமிழை ஆட்சி மொழியாக்கி பெருமைப்படுத்துங்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் தமிழை, இந்தியாவின் ஆட்சி மொழியாக்கி அதனை பெருமைப்படுத்துங்கள் என பிரதமர் நரேந்திரமோடிக்கு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாவின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க.வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “தொன்மைமிக்கதும், பழம்பெரும் இலக்கிய, இலக்கண வளங்கள் செறிந்ததும், மூத்த நாகரிகமும் பண்பாடும் உடையதும், 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவதுமான தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு உள்ளது. ஆகையால் மூத்த மொழியான தமிழை, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும். அந்தவகையில் சென்ன…
-
- 1 reply
- 500 views
-
-
சென்னையில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை உலக செஸ் சாம்பியன்ஷிப் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், "மனதிலும், உடலிலும் உறுதியுள்ள இளைய தலைமுறையினரை உருவாக்குவதிலும், சர்வதேச அளவில் நமது நாட்டின் பெயரை நிலைநிறுத்துவதிலும் இன்றியமையாத் தன்மையை வகிப்பது விளையாட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இளைய சமுதாயத்திற்குத் தேவையான நற்பண்புகளை புகட்டி அவர்களை பொறுப்புள்ள மனிதர்களாக மலரச் செய்யும் விளையாட்டுத் துறைக்கு எனது தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். இதன் ஒரு பகுதியாக, கடந்த 2011 ஆம் ஆண்டு உலக…
-
- 1 reply
- 564 views
-
-
கறுப்பர் கூட்டம் நாத்திகன், செந்தில்வாசன் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு செய்திப்பிரிவு கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்தரித்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த நாத்திகன் மற்றும் செந்தில்வாசன் ஆகியோர் மீது குண்டர் சட்டம்போடப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கில் இருவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம்ரத்து செய்துள்ளது. கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்தரித்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த நாத்திகன் என்கிற சுரேந்திரன், செந்தில்வாசன், சோமசுந்தரம், குகன் ஆகியோரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் நாத்திகன் மற்றும் செந்தில்வாசன் ஆகியோ…
-
- 1 reply
- 430 views
-
-
செங்கல்பட்டை சேர்ந்த டெல்பின் ஸ்டெபினோ தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு கால்கள் செயல் இழந்தாலும் சக்கர நாற்காலியில் இயங்கியபடியே தன்னம்பிக்கை பேச்சாளராகவும் மனநல ஆலோசகராகவும் செயல்படுகிறார். Muscular Dystrophy என்று அழைக்கப்படும் தசைச்சிதைவு நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுடைய தசைகள் செயல் இழந்து கொண்டே வரும். உடலுக்குள் அதற்கு மிகப்பெரிய போராட்டம் நடக்கும். ஆனாலும் தன்னுடைய தன்னம்பிக்கையால் அதை எதிர்த்து போராடி என்று மற்றவர்களுக்கும் உதாரணமாய் திகழ்கிறார் டெல்பின். தான் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும், அது நாளடைவில் உடலில் உள்ள அத்தனை தசைகளையும் பாதிக்கும் என்பது பற்றியும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்க…
-
- 1 reply
- 329 views
- 1 follower
-
-
கொடைக்குத் தடை: அரசே செய்யும் அரசியலா? மின்னம்பலம் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி, பிரமுகர்கள் ஆகியோர் ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் தனியாக உதவி பொருள் வழங்க அனுமதி இல்லை எனவும், இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான திமுக சார்பில் தூய்மை தொழிலாளர்கள், வெளிமாநிலத்தவர்கள், ஏழை எளியோர், ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகள…
-
- 1 reply
- 806 views
-
-
சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க. உறுப்பினர்கள் இரண்டு நாட்கள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று, தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணையை கட்டி நீரை, 160 ஏரிகளுக்கு திருப்புவதாக தி.மு.க குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் கே.வி.ராமலிங்கம், காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தி.மு.க மீது குற்றச்சாட்டினர். அமைச்சரின் குற்றச்சாட்டை திரும்ப பெற வலியுறுத்தி சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், அவையின் கண்ணியத்தை கெடுக்கும் வகையி்ல் நடந்து கொண்டதாக கூ…
-
- 1 reply
- 432 views
-
-
ஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறார் Details Category: விஜயகுமாரன் 11 Dec 2016 Hits: 1396 அரசியல் தரகன், பார்ப்பனப் பயங்கரவாதி சோ. ராமசாமி மண்டையைப் போட்டு விட்டார் . ஒரு எண்பது வயது மனிதரை, "துக்ளக்" என்னும் தமிழ் இதழின் ஆசிரியரை, நாடக ஆசிரியரை, திரைப்பட நடிகரை மரியாதையில்லாமல் அவன், இவன் என்று எழுதலாமா என்று சில மரியாதை ராமன்கள் கவலைப்படலாம். தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும், ஏழை மக்களிற்கு எதிராக பார்ப்பனிய வெறியைக் கக்கி வந்த இவரிற்கு செருப்பால் அடித்து பாடையிலே ஏற்றுவது தான் சரியான மரியாதை. இவரை நேர்மையானவன் என்றும், நடுநிலையாளன் என்றும், தன் மனதிலே பட்டதை மறைக்காமல் சொல்பவன் என்றும் அர…
-
- 1 reply
- 700 views
-
-
எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி – பிரேமலதா விஜயகாந்த் தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை இப்போதே அரசியல் கட்சியினர் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணிதான் என்றும், தனித்து போட்டியிடுவது என்பது புதிதானது இல்லை எ…
-
- 1 reply
- 725 views
-
-
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது உண்மை அதை நிரப்பவே வந்துள்ளேன்: ரஜினிகாந்த் வேலப்பன்சாவடி எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த் வேலப்பன்சாவடி எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த் சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் பல்கலைக்கழக விழா, கட்சி மாநாடு போல மாறிவிட்டது. அரசியல் பாதை பூ பாதை அல்ல. முள், கல், பாம்புகள் உள்ள பாதை எனக்கும் தெரியும். …
-
- 1 reply
- 741 views
-
-
ரூ. 700-க்கு வழங்கப்படும் மெட்ரோ தண்ணீரை தனியார் டேங்கர் லாரிகளிடம் சுமார் ரூ. 5 ஆயிரம் அளவுக்கு கொடுத்து மக்கள் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னை மக்கள் தனியர் டேங்க் லாரி தண்ணீரை ரூ. 4 ஆயிரம் வரை கொடுத்து வாங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஏப்ரலில் ரூ. 2 ஆயிரமாக இருந்த டேங்கர் லாரி தண்ணீர் விலை தற்போது ரூ. 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் சில இடங்களில் வற்றி விட்ட நிலையில் சில பகுதிகளில் மக்கள் தனியார் டேங்கர் லாரி தண்ணீரை நம்பியுள்ளனர். சென்னையின் தென் பகுயில் இருக்கும் ராம் நகரை சேர்ந்தவர் ஷாஜி மேத்யூஸ் என்பவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை பணியாளராக உள்ளார். அவரது வீட்…
-
- 1 reply
- 845 views
-
-
'சுவாதி கொலையில் எனக்கு எந்த தொடர்புமில்லை...!'- ராம்குமார் பரபரப்பு தகவல்! சென்னை: சுவாதி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ள ராம்குமார், தான் தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்ததாகவும் பரபரப்பு கிளப்பியுள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த 24 ம் தேதி சூளைமேட்டை சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி என்பவர், மர்ம நபரால் கழுத்தில் வெட்டப்பட்டு கொலையானார். இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் கைதுசெய்யப்பட்டார். கைது முயற்சியின்போது, அவர் பிளேடால் தனது…
-
- 1 reply
- 666 views
-
-
இலங்கை விவகாரத்தில், ஐ.நா., சபையில் கொண்டு வரவுள்ள தீர்மான அம்சங்களை பரிசீலித்த பிறகே, தீர்மானத்திற்கு எதிராக ஓட்டு போடுவதா, ஆதரித்து ஓட்டு போடுவதா என்பதை, முடிவு செய்ய முடியும் என, மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. அதே சமயம், இலங்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும், பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு உள்ளது என, வெளியுறவு துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறினார். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை மையமாக வைத்து, அந்நாட்டுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வர, அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளில் உள்ளது. அந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டுமென, தமிழக அரசியல் கட்சிகள், கோரிக்கை விடுத்தபடி உள்ளன. இந்நிலையில்,…
-
- 1 reply
- 824 views
-
-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது - அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் 6 ஜனவரி 2021, 04:17 GMT படக்குறிப்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிதாக கைது செய்யப்பட்டவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான அருளானந்தம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாசியை சேர்ந்த மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் மூவரையும் ஜனவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல…
-
- 1 reply
- 1k views
-
-
40 வருட அரசியல்... 33 வருட நட்பு... ஓ.பி.எஸ் Vs சசிகலா கடந்து வந்த பாதை #OPSvsSasikala #Infographic ஐந்து முறை முதல்வர்களாக இருந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் கிடைக்காத சலுகை இப்போது சசிகலாவுக்குக் கிடைத்திருக்கிறது. ஒருமுறையாவது முதல்வர் நாற்காலியில் உட்கார மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் ஸ்டாலினுக்கும், அன்புமணிக்கும் கிடைக்காத வாய்ப்பு, 'ஜஸ்ட் லைக் தட்' சசிகலாவுக்கு உருவாகியிருக்கிறது. அதேபோல், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையின்போது... இரண்டு முறை முதல்வர் நாற்காலி ஓ.பி.எஸ்ஸுக்குக் கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா-வின் மறைவுக்குப் பிறகு மீண்டும் அ.தி.மு.க நிர்வாகிகளால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவியில் தற்போது தொடர்ந்தும் வர…
-
- 1 reply
- 544 views
-
-
நாளை சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்: ரசிகர்களை மீண்டும் சந்திக்க முடிவு `காலா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார். ரசிகர்களை மீண்டும் சந்திக்கவும் முடிவு செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் 164-வது படம் ‘காலா’. தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த 28-ந் தேதி மும்பையில் தொடங்கியது. ரஜினியுடன் சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இதில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். இது நெல்லையில் இருந்து மும்பை சென்று வாழ்பவர்கள் தொடர்பான கதை. எனவே, தாராவி உள…
-
- 1 reply
- 474 views
-
-
விற்பனைக்கு வந்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 20 ஜூன் 2022 பட மூலாதாரம்,REUTERS தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யவுள்ளதாகவும், வாங்க விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜூலை 4ம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்பவேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தாமிர உருக்கு வளாகம், கந்தக அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் என10 பிரிவுகள் விற்பனைக்கு வருவதாக விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ…
-
- 1 reply
- 346 views
- 1 follower
-
-
கேள்வி.....! துணை சபாநாயகர் நெறிமுறைகளை காற்றில் பறக்க விடுகிறாரா தம்பிதுரை? பார்லி., புத்தகம் சொல்வது என்ன? 'தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டுவதை தவிர்க்க வேண்டுமென்பது மட்டுமல்ல; தான் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்துக்களிலும், மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்' என்ற, பார்லிமென்ட் நெறிமுறைகளை, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, காற்றில் பறக்க விடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலாவே, தமிழக முதல்வராகவும் ஆக வேண்டுமென வலியுறுத்தி, லோக்சபா துணை சபாநாயகர் பதவியில் உள்ள தம்பிதுரை அறிக்கை வெளியிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், …
-
- 1 reply
- 250 views
-
-
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார்? விசாரணை வெளிப்படுத்துமா ? ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை மெரீனா கடற்கரையில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யார் காரணம்? யார் தாக்குதல் நடத்துமாறு உத்தரவிட்டது? தாக்குதலின் பின்னணியில் விஷமிகள் உள்ளனரா? அல்லது முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான சக்திகளா? என்பது போன்ற கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி தமிழகம் முழுதும் 8 தினங்களுக்கு மேல் போராட்டங்கள் இடம்பெற்றன. இந்தப் போராட்டம் சென்னையில் மட்டுமன்றி வெளி மாவட்டங்களிலும் …
-
- 1 reply
- 643 views
-
-
பன்னீர்செல்வம் வீட்டுக்கு நடிகர் மனோபாலாவுடன் சென்ற அனுபவம்: ஒரு சுவாரசிய பதிவு! தமிழகத்தில் புதிய அரசை அமைப்பதில் அதிமுகவின் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும், பொறுப்பு முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சில தினங்களுக்கு முன்பு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகளுடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் வி.கே.சசிகலா. ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரைச் சந்தித்து, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் பெரும்பன்பான்மையை நிரூபிக்க அனும…
-
- 1 reply
- 469 views
-