Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எவ்வளவு கஷ்டப்பட்டு இறக்குமதி செய்தால் ... வெளிநாட்டு வெங்காயத்தை வாங்க ஓவரா சிலுத்துக்கிறாங்க மக்கள்..! வெங்காயம் கட்டுப்பாட்டின் காரணமாக நாடு முழுவதும் தொடர் விலை ஏற்றம் தொடர்கிறது. இதன் காரணமாக ஒரு கிலோ வெங்காயம் தற்போது ரூபாய் 200 வரை விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் விரக்தி அடைந்துள்ளனர். மேலும் வெங்காயம் விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசுக்கு பல்வேறு கோரிக்கையையும் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சிகள் குரல் எழுப்பினர். இந்த ஒரு நிலையில் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வரவும் நிலைமையை சமாளிக்கவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தற்போது எகிப்தில் இருந்து 30 டன் பெரிய வெ…

  2. பிரதமர் மோடி, சீன அதிபர் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக தமிழக அரசு உயரதிகாரிகள் 4 பேர் சீனா செல்லவுள்ளனர். மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12ம் தேதிகளில் தலைவர்கள் இருவரும் சந்தித்து பேசினர். அதன் தொடர்ச்சியாக சீன அதிகாரிகள் தமிழகம் வந்தனர். இதையடுத்து தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறையிலுள்ள செலவீன பிரிவு செயலாளர் சித்திக், சிப்காட் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் உள்ளிட்ட 4 பேர் வரும் 15ந் தேதி முதல் 21ஆம் தேதி வரை பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் பயணம் செய்யவுள்ளனர். அப்போது கிரேட்வால் மோட்டார்ஸ், ஆம்பெரக்ஸ் டெக்னாலஜி நிறுவனங்களை பார்வையிடும் அவர்கள், தமிழகத்தில் அந்நிறுவனங்கள் தொழில் தொடங்துவது குறித்து பேச்சு நடத்தவுள்ளனர். ht…

  3. தமிழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட கோனாம்பேடு பகுதியில் ஏராளமான குளங்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் தற்போது ஓரளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. ஆனால் இப்பகுதியில் உள்ள குளங்களில் சிலர் சட்டவிரோதமாக டேங்கர் லாரிகள் கொண்டு தண்ணீரை திருடி அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கான நீராதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதையடுத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாமல் உள்ளன. எனவே கோனாம்பேடு பகுதிகளில் உள்ள குளங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்கவும், ஆக்கிர மிப்புக்களை அகற்றவும் உர…

    • 0 replies
    • 395 views
  4. ரஜினிக்கு 70 வயசாயிருச்சு.. ஒரு தேர்தலைதான் தெம்பாக சந்திக்க முடியும்.. ரங்கராஜ் பாண்டே பரபர பேச்சு "ரஜினிக்கு வயசு 70. அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும்.. திமுக, அதிமுகவை சமாளிக்க நீங்கள்தான் ரஜினிக்கு உறுதி தர வேண்டும்" என்று பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ரஜினி ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ரஜினி அரசியலுக்காகவே ஒரு தனி சேனலை துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. இதற்காக அவர் சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வந்தது. ஆனால் அந்த செய்தி உண்மையானதுதான் என்று ரஜினியே அப்போது ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.இந்த சம்பவத்துக்கு ஒருசில தினங்களுக்கு மு…

  5. தர்பார்’ இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது, ரஜினி எதிர்ப்பாளர்களையும், சீமானையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார் லாரன்ஸ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நேற்று (7) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் ஷங்கர், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் லாரன்ஸ் பேசும் போது, ரஜினியின் அரசியல் வருகையை எதிர்ப்பவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். மேலு…

  6. நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி.. அதுக்கு முதல்வராகிடுங்க ஸ்டாலின்.. ஜெயக்குமார் அறிவுரை! முதல்வராக விரும்பும் ஸ்டாலின், நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி பின் அதன் முதல்வராக தன்னை அறிவித்து கொள்ளலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நித்தியானந்தாவின் கைலாசம் நாடு குறித்த செய்திகள் இணையத்தை மொத்தமாக ஆக்கிரமித்து இருக்கிறது. ஐநாவில் புதிய நாட்டிற்கு அனுமதி அளிக்க கோரி நித்தியானந்தா விண்ணப்பித்து இருக்கிறார். தன்னுடைய தீவுதான் உலகில் முதல் தனி இந்து நாடாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது நித்தியானந்தாவின் இந்த தனி தமிழக அரசியலை யும் ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. இதை வைத்து திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக அமைச்சர் ஜெயக்குமா…

  7. ‘கைலாசா’ நாடு பெயர் மாறியது- நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள நித்யானந்தா ‘கைலாசா’ என்ற பெயரில் சாமியார் நித்யானந்தா உருவாக்கியுள்ள நாட்டின் பெயரை ‘ஸ்ரீகைலாசா’ என மாற்றியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நேரலையில் சத்சங்கம் மூலம் சீடர்களைத் தொடர்பு கொண்ட நித்யானாந்தா இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன் கைலாசா என்ற இணையத் தளத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 8 இலட்சம் பேர் என்ற நிலையில் அதன் சேர்வர் தடைப்பட்டதாகவும் இதனால் வேறு சேர்வர் மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது வரை கைலாசா நாட்டின் குடியுரிமையைப் பெறுவதற்கு 12 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கார்த்தி…

  8. திருவண்ணாமலை தீப திருவிழா - துணிப்பை, சணல் பை கொண்டு வந்தால் தங்கம் பரிசு.! திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 10-ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் மற்றும் அன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் தரிசனம் ஆகியவை நடைபெறவுள்ளது பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு துணிப்பை மற்றும் சணல் பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் எ…

  9. தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில், நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. எனவே ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் மன்றத்தின் கொடியையோ, ரஜினியின் பெயர் மற்றும் புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/91890/உள்ளாட்சி-தேர்தலில்யாருக்கும்ஆதரவள…

    • 0 replies
    • 661 views
  10. கன்னி தீவும்..! நித்தியும்..! கடல்லே இல்லையாம்…! ஈகுவடார் நாடு மறுப்பு..! Dec 06, 2019 0 230 நித்தியானந்தா ஈகுவடார் நாட்டில் எந்த ஒரு இடத்தையோ, அல்லது தீவுகளையோ விலைக்கு வாங்க வில்லை என்று மறுத்துள்ள ஈகுவடார் நாட்டு தூதரகம், சர்வதேச அகதியாக குடியேறுவதற்கு அனுமதி கேட்ட நித்தியின் கோரிக்கையை ஏற்காததால் தங்கள் நாட்டை விட்டு அவர் வெளியேறி விட்டதாக அறிவித்துள்ளது. திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்ட நித்யானந்தாவுக்கு உலகம் முழுவதும் 17 நாடுகளில் 108 ஆசிரமங்கள் உள்ள நிலையில் குஜராத் மாநிலம் அகமதபாத் ஆசிரமத்தில் பாலியல் பலாத்கார புகார் எழுந்தது. சிறுமிகளை ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல், கடத்தல் உள்ளிட்ட வழக்…

    • 3 replies
    • 1.9k views
  11. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண்களிடம் அத்துமீற முயன்றதாகக் கூறப்படும் இருவர், காவலன் செயலி மூலம் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செயலி மூலம் நடைபெற்றுள்ள முதல் கைது நடவடிக்கை இது என்று கூறப்படும் நிலையில், செயலியின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து தற்போது காணலாம்.... சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சி.பி. ரோடு (CB road) பகுதியில் உள்ள “ஓஸ்வால் கார்டன்” (oswal garden) அடுக்குமாடி குடியிருப்பில் அனிதா சுரானா என்பவரும் அவரது மருமகள் பிரீத்தியும் வசித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இவர்களது வீட்டின் கதவு தட்டப்படவே,பிரீத்தி சென்று கதவை திறந்துள்ளார். அப்போது அவரை நெட்டித் தள்ளிவிட்டு 2…

  12. தமிழகத்தில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் திருவள்ளுவர் வேடத்தில் அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கு திருக்குறள் சொல்லிக் கொடுக்கிறார். தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ‘திருக்குறள்’ சுப்புராயன். இவர், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பிரிவு அலுவலக ஊழியராக 31 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருக்குறள் மீது அதிக ஆர்வம் கொண்ட சுப்புராயன், திண்டிவனத்தில் திருவள்ளுவர் இறையானார் கோயில் அமைத்து, அங்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு திருக்குறளை கற்பித்து வருகிறார். அதேபோல், புட்லூர் பகுதியில் திருக்குறள் பயிற்சி மையம் அமைத்து உள்ளார். மேலும் அவர் திருவள்ளுவர் வேடம் அணிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குச் ச…

    • 1 reply
    • 528 views
  13. உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்பாணையை இரத்து செய்யக்கோரி தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு குறித்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது நீதிபதிகள், தேர்தலை இரத்து செய்ய முடியாது ஆனால் விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், தேர்தலை தங்களால் நிறுத்தி வைக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் 9 மாவட்டங்களுக்கான தேர்தலை தள்ளி வைக்கமுடியுமா என்பது குறித்தும், பிர…

  14. ஆறு மாதத்திற்குள் மெரினா கடற்கரையை உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குப்படுத்துவது, நடைப்பாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் ஆயிரத்து 486 கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், லூப் சாலையில் இரண்டு ஏக்கரில் மீன் சந்தை கட்ட இருப்பதாகவும், அதன்பின்னர் கடற்கரை பகுதியில் உள்ள மீன் கடைகள் ஒழங்குபடுத்தப்பட்டு மீன்சந்தைக்கு மாற்றப்படும் என்றும் அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார…

    • 0 replies
    • 562 views
  15. சீமானுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது அரசு அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி பேட்டியளித்த சீமான், அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக அவதூறு வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவதூறு வழக்கு விரைவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் சீமானை தண்டிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/சீமானுக்கு-எதிராக-அவதூறு/

  16. படத்தின் காப்புரிமைThinkstock சென்னையிலிருந்து செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில், பிஎச்டி மாணவர்களுக்கு இந்தி பயிற்சி அளிக்கும் வகுப்புகள் துவங்கப்பட்டிருக்கின்றன. இதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திங்கட்கிழமையன்று இதற்கென நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் இந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிப்பதற்கான சிறப்பு மொழிப் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில், பிஎச்டி ஆகிய ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, விருப்பப்பாடமாக பிரெஞ்சு மற்றும் இந்தி வகுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன. இதற்கென ஆறு லட்ச ரூபாயை தமிழக அரசு சம…

  17. ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பான அமுலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் .மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமுலாக்கத்துறை கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி கைது செய்தது. இந்நிலையில், ப.சிதம்பரம் தொடர்ந்த பிணை மனுவை டில்லி நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று ப.சிதம்பரத்திற்கு நிபந்தனையுடனான பிணை வழங்கியுள்ளது. முன்னதாக, சி.பி.ஐ. தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஒக்டோபர் 22ஆம் திகதி உச்ச நீதிமன்றம் சிதம்பரத்திற்கு பிணை வழங…

    • 0 replies
    • 468 views
  18. நர்சரி தொழில்: "அன்று சாராயம் காய்ச்சினோம்; இன்று வனம் உருவாக்குகிறோம்" - ஒரு கிராமத்தின் வெற்றிக் கதை மு. நியாஸ் அகமதுபிபிசி தமிழ் 12 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அன்று மரம் வெட்டினார்கள்;…

  19. மேட்டுப்பாளையம் விபத்தில் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த கல்லூரி சென்ற மகளும், பள்ளியில் பயின்ற மகனும் உயிரிழந்த சோகத்திலும் அவர்களின் கண்களைத் தானமாக வழங்கியுள்ளார் டீக்கடை தொழிலாளி ஒருவர். தொடர் கனமழை காரணமாக நேற்று அதிகாலையில் மேட்டுப்பாளையம், நடூர் ஆதி திராவிடர் காலனியில் கட்டப்பட்டிருந்த 20 அடி உயர கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் இருந்த வீடுகளில் விழுந்தது. இதில் தூக்கத்தில் இருந்த ஆண், பெண், குழந்தைகள் உட்பட 17 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தமிழகத்தைப் பரபரப்பில் ஆழ்த்திய இந்த விபத்தைப் பலரும் கண்டித்து சுவர் கட்டிய உரிமையாளரைக் கைது செய்ய வலியுறுத்தினர். சம்பவ இடத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுத…

  20. கோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு - அதிர்ச்சி சம்பவம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "கோவையில் பள்ளி மாணவி கூட்ட…

  21. மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு மேட்டுப்பாளையம் அருகே நடூர் – ஏடிக்காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம் அருகே நடூர் – ஏடிக்காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்துள்ளது. இதில் 4 வீடுகளில் இருந்த 12 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனையடுத்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டனர். அ…

  22. ஐஐடி சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, ஐஐடி பேராசிரியர்கள் பலரும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாக சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மானுடவியல் முதுகலை படிப்பில் முதலாமாண்டு மாணவியான பாத்திமா லத்தீப் கடந்த சனிக்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலை அடுத்து, அவருக்கு பாடம் கற்பித்த பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லோரும் விசாரணை செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஊடகத்தினரிடம் பேசுகையில் தற்கொலைச் செய்து…

  23. திரை கவர்ச்சியை மட்டும் வைத்து நேரடியாக முதல்வராகும் கனவில் இருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி, கமலுக்கு செருப்படி கொடுத்த ஆந்திர தொழில்துறை தலைவர்

  24. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! தேசிய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 5ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இதனை முன்னிட்டு மத்திய அரசு டெல்லியில் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இதற்கான விருதினை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் மற்றும் இணை அமைச்சர் அஸ்வின் குமார் சௌபே ஆகியோர் வழங்கி கௌரவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தான சிகிச்சை சிறப்பாக வழங்கும் மருத்துவமனைக்கான விருது சென்னை இராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்தியாவிலேயே முதன்முறையாக இறந்தவரின் கைகளை மற்றவருக்கு வெற்றிகரமாக பொருத்தியதற்காக ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவர் ரமாதேவிக்க…

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.