Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் இல. கணேசன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். சேலத்தில் பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்தும், அவரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்தது. அதன்படி இன்று தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போராட்டத…

  2. இதை 'வெறும் இடைத்தேர்தல்' எனக் கடந்து விட முடியாது..! ஆர்.கே.நகர் எழுப்பும் கேள்விகள் கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடவேண்டிய அ.தி.மு.க., இரண்டு, மூன்றாகப் பிளவுபட்டு, எம்.ஜி.ஆர். காட்டிய இரட்டை இலைச் சின்னத்தைத் தொலைத்துவிட்டு பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. அ.தி.மு.க. தேர்தல் சின்னத்தை இழப்பது, இது இரண்டாவது முறை. முதல்முறை எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், கட்சியையும், ஆட்சியையும் யார் வழி நடத்துவது என்பதில் ஏற்பட்ட மோதல், கட்சியில் பிளவை ஏற்படுத்த ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தது. அப்போது, இரு தரப்பும் கட்சிக்கு உரிமை கோரியதால், 1989 பொதுத்தேர்தலின்போது இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு, ஜானகிக்கு இர…

  3. கொரோனா தொற்று : மக்கள் நோயாளர் காவு வண்டிகளிலேயே... உயிரிழக்கும் சோகம்! தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்னபதாகவே உயிரிழக்க நேரிடுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் பெரும்பாளான மக்கள் கொரோனா தொற்றுகான சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக மிக நீண்ட வரிசையில் நோயாளர் காவு வண்டிகளிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு நோயாளர் காவு வண்டிகளில் காத்திருக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கு ஒக்சிஜன் தேவைப்படுவதாகவும், ஒக்சிஜன் கிடைக்கப்பெறாமல் பலர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சும…

  4. பெரியார்தாசன் காலமானார். சென்னையில் பெரியார்தாசன் காலமானார். பெரியார்தாசன் உடல்நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார்தாசன் கேம்பிரிட்ஸ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பச்சையப்பன் கலூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடம் பெற்றார். தீவிர திராவிட கழகத்தைச்சேர்ந்த இவர் ஆத்திகவாதியாக மாறினார். இஸ்லாம் மதத்தில் இணைந்து மெக்கா சென்றார். -நக்கீரன்-

  5. நீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள் ஏ எம் சுதாகர் பிபிசி தமிழுக்காக 36 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மாணவர் தனுஷுக்கு வைக்கப்பட்டுள்ள அஞ்சலி பதாகை நீட் தேர்வில் இரு முறை தோல்வியை கண்ட மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் நேற்று (12-09-2021) நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்தாக காவல்துறை தெரிவிக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூரைச் அடுத்த கூலையூரைச் சேர்ந்த பி.வி.சி பைப் தயாரிக்கும் தனியார் கம்பெனி ஆபரேட்டர் சிவகுமார் இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு நிஷாந…

  6. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ்நாட்டினர் அல்லது தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம் என்கிற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்கலாம் என்று கடந்த 2016ம் ஆண்டு வழிவகை செய்யப்பட்டது. இதன்படி,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்கலாம். தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசுப் பணிகளில் சேரலாம் என்கிற நிலை ஏற்பட்டது. இது தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயல் என்று அதிமுக மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளை தவிர பெரும்பான்மையான அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். …

  7. சாத்தியமே இல்லாதது தமிழீழம்: என்.ராம் சிறப்புப் பேட்டி:- 01 ஜனவரி 2014 உங்கள் மீதான விமர்சனங்களுக்கு வருவோம். தமிழ் மக்கள் பிரச்சினைகளில் நீங்களும் சரி ‘தி இந்து’வும் சரி… தமிழ் விரோத அணுகுமுறையோடே செயல்படுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? இந்தியாவின் முக்கியமான, மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர், அரசியல் விமர்சகர் – பத்தியாளர். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 45 ஆண்டு கால ஆட்சியாளர்களையும் அதிகாரவர்க்கத்தையும் அருகில் இருந்து பார்த்தவர். என். ராமுடன் பேச விஷயங்களா இல்லை? அவருடைய பத்திரிகைத் துறை வருகையில் தொடங்கி தமிழில் 2013-ல் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘தி இந்து’வின் தமிழ் வருகை வரை எல்லாம் பேசினோம்.…

  8. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரிக்கு கடந்த சில நாட்களாக கட்சியில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் மதுரை மாவட்ட தி.மு.க. அமைப்பு ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்பட்டது. புதிய பொறுப்புக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. நீக்கப்பட்டவர்கள் அழகிரி ஆதரவாளர்கள் என்பதும், புதிய பொறுப்புக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் மு.க. ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையில், மு.க.அழகிரி இன்று காலை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விஜயகாந்த் தற்போது எல்லா கட்சிகளுடனும் பேரம் பேசி வருகிறார். விஜயகாந்தை ஒரு அரசியல் தலைவராக நான் மதிக்கவில்லை. அவரிடம் அரச…

  9. சிறிய நாடான இலங்கை முன்னோடியாகத் திகழ்கிறது: ஆராய்ச்சியில் இந்தியா பின்தங்கியுள்ளது - மத்திய ஆராய்ச்சித் துறை செயலாளர் கவலை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்குகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். உடன் மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளர் சவுமியா சுவாமிநாதன், துணைவேந்தர் கீதாலட்சுமி, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன். (அடுத்த படம்) பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவியர். - படங்கள்: க.ஸ்ரீபரத் …

  10. சத்குரு ஜக்கி வாசுதேவ் மண் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்னைகள் பற்றி பிபிசிக்கு சிறப்பு பேட்டி க.சுபகுணம் பிபிசி தமிழ் 9 ஜூன் 2022, 13:14 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'சேவ் சாயில்' இயக்கத்துக்காக 100 நாள்கள் 27 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட ஈஷா ஃபவுண்டேஷன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பிபிசி தமிழுக்கு அளித்த ஒரு பிரத்யேக பேட்டியில், மண் வளப் பாதுகாப்புக்கான அவரது இயக்கம் பற்றியும் சர்ச்சைக்குரிய பிற பிரச்னைகள் பற்றியும் பேசினார். ஒரு கேள்வி கேட்டபோது, பிபிசியின் கேமராக்களை சுவிட்ச் ஆஃப் செய்யும்படி தனது தன்னார்வலர்களுக்கு …

  11. சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அரிதாரப் பூச்சு இன்றி நேரடியாகச் சொல்லும் ஆண்மையாளன் என்று சொல்லப்படும் 80 வயது எழுத்தாளர் ஜெயகாந்தன், கடந்த மூன்று மாத காலமாகவே நினைவாற்றல் பாதிப்பால் அவதியுற்று வந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவரது நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். 1950-ல் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயகாந்தன், மத்திய அரசின் இலக்கியத்துக்கான மிக உயரிதாகக் கருதப்படும் ஞான பீட விருதைப் பெற்றவர். http://www.dinamani.com/latest_news/2014/02/23/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D…

  12. World Photography Day புகைப்படம்: 5 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம், சென்னையின் நீராதாரம் கொற்றலை ஆறு லட்சுமி காந்த் பாரதி பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2022, 01:50 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LAKSHMI KANTH BHARATHI/BBC படக்குறிப்பு, புள்ளும் சிலம்பின காண்.... கொசஸ்தலை எனப்படும் கொற்றலை ஆறு சென்னையின் முக்கிய நீராதாரம். ஆனால் சென்னையில் இருக்கும் பலருக்கு இது தெரியாது. இந்த ஆற்றை சூழ்ந்த வாழ்வியலை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார் பிபிசி தமிழின் லட்சுமி காந்த் பாரதி. ஆகஸ்ட் - 19 உலகப் புகைப்பட நாளை ஒட்டி அந்தப் ப…

  13. கச்சதீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி இந்திய உயர் நீதிமன்றில் மனு தாக்கல் September 7, 2022 கச்சதீவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக்கோரி மேலும் ஒரு மனு இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் கூறியிருப்பதாவது, கச்சதீவு இராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சமஸ்தான முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சமஸ்தானத்துக்கு சொந்தமான நிலப்பகுதியை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. மீன் வலைகளை உலர்த்தவும், சமையல் செய்யவும் கச்சதீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். இதுபோன்ற சூழலில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே 1974-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானத…

  14. தூத்துக்குடி: சட்டவிரோத கைதுகள், சித்ரவதைகள் - போலீஸுக்கு அதிகாரம் அளித்தது யார்? பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "இளைஞர்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி கைது செய்வதில் தவறில்லை. ஆனால், அவர்களை அடிக்கும் அதிகாரத்தை போலீஸாருக்கு யார் அளித்தது?" என்று கேள்வி எழுப்புகிறார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், தூத்துக்குடியில் இருந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்ரி டிபேனுடன் பிபிசி தமிழ் பேசிய போது, "22ஆம் தேத…

  15. திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தோட்டத்திற்குள் புகுந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 21 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். வரதமா அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று காலை முதலே கணக்கம்பட்டி கிராமத்தில் வெள்ளநீர் புகத்தொடங்கியது. இதனால், கிராம மக்களை பாதுகாப்பான பகுதியில் தங்கவைக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட தொடங்கியது. ஊராட்சிமன்ற அலுவலக கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள காளிப்பட்டியில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள தோட்டம் மற்ற…

  16. ஆண்களைப் போல “சுகவாசி”யான ஒரு உயிரினம் உலகில் எங்குமே இருக்க முடியாது. பஸ்ஸை விட்டு இறங்கியதும் நேராக பஸ் ஸ்டாண்ட் சுவரை நோக்கி ஓடுவார்கள். சுகமாக இயற்கை உபாதையை கழிப்பார்கள். இந்த “சுதந்திரம்” மனிதர்களில் வேறு எந்தப் பிரிவினருக்கும் இல்லை. அதேபோல வழியில் எங்காவது உச்சா நெருக்கினால், உடனே இடம் பொருள் ஏவல் பார்க்காமல் கிடைக்கும் சுவர், விளக்குக் கம்பம் என ஜாலியாக நின்று விடுவார்கள். இந்த “சுதந்திரமும்” வேறு யாருக்கும் இல்லை. ரோடு, புதர், சுவர் என எல்லா இடத்தையும் ஈரமாக்கும் ஒரு உயிரினம் நாய்களுக்குப் பிறகு ஆண் இனம்தான் என்பதில் எந்த ஆணுக்குமே சந்தேகம் வரக் கூடாது. ஆனால் பெண்களின் நிலை.. சாலையில் போகும்போது இயற்கை அழைத்தால் அவர்கள் படும் பாடு இருக்கிறதே, மிகவும் துயரமானது…

  17. பாம்பாற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்கவேண்டும் என வலியுறுத்தியும், அமராவதி பாசன பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது வைகோ அவர்கள் ஆற்றிய உரை நன்றி: இமயம் தொலைக்காட்சி https://www.facebook.com/video/video.php?v=783273478399267

  18. இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தமிழக அரசு சென்னை மேல்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன் தமக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். லண்டனில் உள்ள தமது மகளுடன் வசிப்பதற்காக தாம் விசா பெற போவதாகவும் அதற்கு விண்ணப்பிக்க வேண்டுமாயின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயமாகும் எனவும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, தமக்கு உரிய அடையாள அட்டையை …

  19. தேர்தல் 2019 - "30 இடங்களில் தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்" - வேல்முருகன்; மீதமுள்ள 10 தொகுதிகள்? முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionவேல்முருகன் 2019 மக்களவை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.மு.கவுக்கு ஆதரவளிக்கப்போவதாக…

  20. இனி வரும் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி இல்லை; சீமான் பேட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்திருந்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கப்போவது கிடையாது. மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் லட்டு பிரச்சினையையும், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்சினையையும் கிளப்புகின்றனர்.நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் ஆதரவை வாபஸ் பெற்றால் இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுமா?. மேற்கு வங்கத்திலும், பீகாரிலும் 7 கட்டமாக தேர்தல் நடத்தியவர்கள், இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர…

  21. அரசியல் ஆதாயத்துக்காக ராஜீவ் கொலையைப் பயன்படுத்துவதா? குஷ்பு ராஜீவ்காந்தி கொலையைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்க கூடாது என அகில இந்தியக் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், முன்னணி தமிழ் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “சில நாட்களாகத் தமிழக அரசியல் களத்தில் ராஜீவ்காந்தியின் படுகொலை சம்பவம் விவாதிக்கப்படும் விதம் வேதனை அளிக்கிறது. நாட்டின் பிரதமர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்திப் பேசும் சீமானுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. கொலை செய்பவர்களும், கொலைக் குற்றவாளிகளும் தங்களுக்குச் சாதகமாக எதையாவது காரணத்தைத் தேடுவது இயல்பு. ஆனால் 7 பேர் விடுதலைக்காகப் பி…

  22. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க முன்னிலை பெறும்: கருத்துக் கணிப்பு! தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்திலில் தி.மு.க முன்னிலை பெறும் என லயோலா கல்லுாரியின் முன்னாள் மாணவர்களின் “பண்பாடு மக்கள் தொடர்பகம்” வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.திருநாவுக்கரசு சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்துகணிப்புகளை வெளியிட்டார். அப்பொழுது அவர் “ தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் கிராமம், நகரம் என களப்பணியில் ஈடுபட்டு, மொத்தம் 5176 பேரிடம் இந்த கருத்துகணிப்பு நடத்தபட்டது. அதில், 'தமிழகத்தில் பிரச்னைகளை தீர்க்கும் திறமையான கட்சியாக எந்த கட்சி வரும் தேர்தலில் ஆட்சிக்கு வரவேண்டும்?' என்ற மக்களிடம்…

  23. காஞ்சிபுரம் தலித் இளம்பெண் மரணம்: வன்கொடுமை வழக்குகள் சரியாக விசாரிக்கப்படுவதில்லையா? 9 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption(கோப்புப்படம்) காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் விவகாரத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டி…

  24. திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்.. டிஆர் பாலு விளக்கம் திமுக எம்பி டி.ஆர்.பாலு சொல்வதை பார்த்தால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது உறுதியாகி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் சீட் பங்கீட்டில் கூட்டணி தர்மத்தை திமுக காப்பாற்றவில்லை என்று கேஎஸ் அழகிரி சொன்னது பெரிய அளவில் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.இதற்கு திமுக தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அதேநேரம் டெல்லியில் குடியுரிமை காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நேற்று நடந்தது. குடியுரிமை திருத்த சட்டம், என்ஆர்சி, ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது, நாடு முழுக்க நடக்கும் போராட்டம் ஆகியவை குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது.எத…

  25. 07 Aug, 2025 | 04:18 PM 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? - என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் நேற்று (05.08.2025) கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை இனவெறி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல லட்சம் மதிப்பிலான அவர்களின் விசைப்படகுகளும் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய மற்றும் தமிழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.