Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழகத்தில் கணிசமான மருத்துவர்கள் தாதியரும் கொரோனாவால் பாதிப்பு! தமிழகத்தில் 8 மருத்துவர்களும், 5 தாதியர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத் துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 8 மருத்துவர்களில் இருவர் மாநில அரசின் மருத்துவர்கள் எனவும் இருவர் ரயில்வே மருத்துவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. 4 மருத்துவர்களும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 5 தாதியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வரவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/தமிழகத்தில்-கணிசமான-மருத/

  2. தமிழகத்தில் தொழிற்சாலைகளைப் படிப்படியாக ஆரம்பிக்கத் திட்டம்- முதல்வர் ஆலோசனை by : Litharsan கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் சிலவற்றைப் படிப்படியாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில் காணொளி தொடர்பாடல் மூலம் தொழில் அதிபர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில் துறை செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இணைந்திருந்தனர்…

    • 0 replies
    • 367 views
  3. அதிமுக வெற்றிக்காக 700 கோடி வாங்கினாரா விஜயகாந்த்? புயலை கிளப்பும் புகார் எல்லாம் தெரிந்தும் அதிமுக வெற்றிக்கு விஜயகாந்த் வழி வகுத்தது ஏன்? அவருக்கும் 700 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. அதனால் கட்சியை கைக்கழுவிவிட்டார் என்று மக்கள் தேமுதிக கட்சி நிர்வாகி சந்திரகுமார் புதிய புகாரை கிளப்பியுள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்லில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்டவர்கள் கட்சியில் இருந்து விலகி 'மக்கள் தேமுதிக' என்ற புதிய கட்சியை தொடங்கியதோடு, திமுகவுடன் கூட்டணி அமைத்து 3 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். இந்த நிலையில், செ…

  4. நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடிக்கச் சென்றனர்.அப்போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 22 மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் கொண்டு வந்த ஜி.பி.எஸ்.கருவிகளை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து டெசோ அமைப்பு சார்பில் இன்றைய தினம் நாகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=780741848819684336

  5. ஜெயலலிதாவுக்கு ஸ்விட்சர்லாந்திலிருந்து உணவுப் பொருள் தருவிக்கப்படுகிறதா? முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் (பொறுப்பு), மத்திய அமைச்சர்கள், தேசியத் தலைவர்கள், தமிழக எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அகில இந்திய பிரபலங்கள் தொடர்ந்து அப்போலோ மருத்துவனைக்கு வருகை புரிந்து மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்துச் செல்கின்றனர். அப்போலோ அறிக்கை மட்டுமே முதல்வரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல் சொல்கிறது. மருத்துவர்களோ, கட்சித் தரப்பினரோ, மருத்துவமனைக்கு வந்து செல்லும் பிரமுகர்களோ ஜெயலலிதா உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளிப்படையாகச் சொ…

  6. அண்மைச்செய்தி: இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில் அர்த்தமில்லை.... - திமுக தலைவர் கருணாநிதி Puthiyathalaimurai

  7. இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உறுப்பினர்களின் அமளி காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை அவை கூடியதும், தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் பிஜேபி., உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். அ.தி,மு.க., தி.மு.க.,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அவையின் மையத்திற்கு சென்று, ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். ஐ.நா., மனித உரிமை சபையில்இந்தியா நடந்து கொண்ட விதம் கண்டனத்திற்க்குரியது எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர்.சபாநாயகர் சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததால், அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார். நண்பகல் 12 மணிக்கு லோக்சபா கூடியபோது, இலங்கை தமிழர் பிரசனை தொ…

  8. துக்ளக் பத்திரிகையின் முதல் அட்டைப்படம் பின்னணி! #RIPcho "எதிர்காலம்பற்றி நான் என்றைக்குமே யோசித்தது இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். அதன் ஓட்டம் முடிந்தால், ஆட்டம் காலி. அவ்வளவுதான்!'' - ''வழக்கறிஞர், கலைஞர், பத்திரிகையாளர்... சோ அவ்வளவுதானா, இல்லை வேறு ஏதேனும் ரகசியக் கணக்கு வைத்திருக்கிறீர்களா?'' என்ற கேள்விக்குதான் இப்படி பதில் சொன்னார் சோ. ஆமாம். உண்மையில் அவர் சினிமா நடிகராக வர வேண்டும் என்றோ, பத்திரிகையாளராக வர வேண்டும் என்றோ அவர் யோசித்தது இல்லை. நிகழ்காலத்திலே தன் முழு கவனத்தையும் செலுத்தினார். அதுதான் அவரை அடுத்தடுத்த தளத்துக்கு அழைத்துச் சென்று உச்சத்தில் நிறுத்தியது. அரசியல், சினிமா, நாடகம…

  9. சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு: சாமி கோவை: சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாக பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி கோவையில் தெரிவித்தார். கோவையில் ஆயுர்வேத சிகிச்சை முடித்து அவர் டில்லி திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் சாமி கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி கிடைக்கும். மாடுகள் சாகவில்லை. இது பாரம்பரிய விளையாட்டு என்ற விவரத்தை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துரைத்துள்ளேன். சசிகலா கட்சியின் பொதுசெயலர் பதவி என்பது அவர்களது கட்சி விவகாரம். அ…

  10. சசிகலா நேரில் சொல்லட்டும்... பாய்ந்தார் பன்னீர் சென்னை: தன்னிச்சையாகவும்; வேகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, அமைச்சர்கள் சிலர் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, முதல்வராவதற்காக, முதல்வர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வம், விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது, சசிகலா மீது பன்னீர்செல்வத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து, அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகி இருக்கும் பன்னீர்செல்வம், தன்னிச்சையாகவும்; வேகமாகவும் செயல்படுகிறார். அவரை, நிம்மதியாக ஆட்சி செய்ய விடாமல், அ.தி.மு…

    • 4 replies
    • 841 views
  11. Started by நவீனன்,

    அ.தி.மு.க., பொதுச் செயலராக நியமிக்கப் பட்டுள்ள சசிகலாவிற்கு, தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக, சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், முதல்வர் பதவியேற்பை தள்ளிப் போட்டு, 'திக் திக்' மனநிலையில், சசிகலா தரப்பினர் காத்திருக்கின்றனர். அதேபோல, ஜெயலலிதாவின் வாரிசாக உரு வெடுக்க தயாராக இருக்கும், அவரது மருமகள் தீபாவும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின், களம், 'கிளியர்' ஆகும் என்பதால், பொறுத்திருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்துக்கள் சேர்த்ததாக, ஜெ., மீது கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில், 1996ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. க…

  12. கச்சதீவு அருகே, இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்கானதில் தொண்டி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொண்டி அருகே நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கச்சதீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஆறு பேரையும் தாக்கியதோடு அவர்களின் மீன்பிடிவலைகளையும் சேதப்படுத்தி, பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் வீசினர். இந்த சம்பவத்தில், மீனவர் காந்தியின் கை எலும்பு முறிவு ஏற்பட்டு புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ``இலங்கை கடற்படை எங்களை தரக்குறைவாக பேசி தாக்குகிறது. கச்சதீவ…

  13. மதுரை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை, அரசுடமையாக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, இன்று விசாரணைக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை பொது நல வழக்குகள் மைய நிர்வாக அறங்காவலர், ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா, சினிமா, அரசியலில் ஈடுபட்டார். சினிமாத் துறையில், பல கோடி ரூபாய் சம்பாதித்தார். 1989ல், அ.தி.மு.க., பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது, சட்டசபை தேர்தலில், முதன்முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஆர்.கே.நகர் தொகுதி தேர்…

  14. துடிக்குது புஜம்,ஜெயிப்பது நிஜம் ஒட்டுமொத்த பார்வையையும் இன்றைக்கு தமிழக இளைஞர்கள் மீதுதான்.எழுந்தது பார் யுகப்புரட்சி என்று மீசைக்கவிஞன் பாரதி பாடியது போல ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒரே குரலில் ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களும் எழுச்சி கொண்டு நிற்பதை பார்த்து மிரண்டு போயிருக்கிறது அதிகாரவட்டம். சென்னை கடற்கரை இரண்டாவது முறையாக சுனாமி எனும் பேரலையை சந்தித்தது, இந்த சுனாமிக்கு காரணம் மாணவர்கள்தான்.ஒரே ஒரு விஷயம் இந்த சுனாமி அழிக்க வரவில்லை அழிவின் விளிம்பில் இருக்கும் ஜல்லிக்கட்டை மீட்க வந்ததாகும். போலீசாரை வேடிக்கை பார்க்கவைத்துவிட்டு மாணவர்களே போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொண்டனர்,போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு குடிதண்ணீர்,உணவு போன்றவைகளை வாங்கிவந்த…

  15. 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது: காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்தூரில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்ட முதல் கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும்…

  16. 30th May 2013 புதுகோட்டை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறையில் இருந்து மீண்டு வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக, மீட்கப்பட்டவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினர் பலர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தோட்ட வேலைக்காக புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளனர். ஆலங்குடி அருகே பணியாற்றிய அவர்கள், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதாக வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், 43 பழங்குடியின மக்களை மீட்டனர். அவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. …

  17. தீபாவை ஏன் பா.ஜ.க முன்னிறுத்துகிறது? சில நண்பர்கள் இது பா.ஜ.கவின் பார்ப்பனிய சதி என்கிறார்கள். ஆனால் எனக்கு பா.ஜ.கவின் நோக்கம் வேறு என படுகிறது. அதிமுகவில் தீபாவுக்கான இடத்தை பா.ஜ.க ஆரம்பத்திலேயே சின்னதாய் கோடிட்டு உருவாக்கி விட்டார்கள். அவரை தயாராக்கி இப்போது சரியான சந்தர்பத்தில் கொணர்ந்திருக்கிறார்கள். முக்கியமான காரணம் கடந்த சில நாட்களில் ஒ.பி.எஸ் பெற்றுள்ள பரவலான மக்கள் ஆதரவு. அவரை எதிர்க்கிறவர்கள் கிட்டத்தட்ட யாரும் இல்லை எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தி.மு.க கூட ஒ.பி.எஸ் பக்கம் என்கிறார்கள் (இதை ஸ்டாலின் மறுத்தாலும் கூட). இப்போது சசிகலா ஜெயிலுக்கு போவது உறுதியாகி விட்ட பின், வரும் நாட்களில் கணிசமான எம்.எல்.ஏக்கள் ஒ.பி.எஸ் அணிக்கு தாவுவார்கள் எனில் அதிமுகவின் ஒ…

  18. நரேந்திர மோதி இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் பரப்புரை பட மூலாதாரம், @BJP4INDIA TWITTERPAGE சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பரப்புரை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி வருகிறார். இன்று காலை விமானம் மூலம் கோயம்புத்தூர் வரும் நரேந்திர மோதி காலை 11 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் பரப்புரை செய்கிறார். கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி வலுவாக உள்ள இடங்களில் ஒன்றாக பாலக்காடு கருதப்படுகிறது. சமீபத்தில் நடந்த கேரளா உள்ளாட்சித் தேர்தலில் பாலக்காடு நகராட்சியை பாஜக கைப்பற்றியது. அடுத்ததாக பகல் 12.50 மணிக்கு தாராபுரம் வரும் நரேந்திர மோதி, அந்தத் தொகுதியில் ப…

    • 1 reply
    • 524 views
  19. சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை! நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காசோலை மோசடி வழக்கில் அவர்கள் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது என்ன மாயம் என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ரேடியண்ட் நிறுவனத்திடம் பணம் பெற்ற விவகாரத்தில், பணத்தை திரும்ப அளிக்காததால், ரேடியண்ட் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. 2014-ம் ஆண்டு ரூ.1.50 கோடி ரேடியன்ஸ் நி…

    • 26 replies
    • 2.6k views
  20. வடசென்னையில் உள்ள தண்டையார்பேட்டையில் தண்ணீரில் நெருப்பை கொளுத்தி போட்டால் கபகப என்று பற்றி எரிகிறது. துணியை அலசி போட்டு, அதில் நெருப்பை வைத்தால் அதுவும் எரிகிறது. சென்னை தண்டையார்பேட்டை டிஎச் சாலை பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியின் அருகில் உள்ள பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலைக்கு, துறைமுகத்தில் இருந்து குழாய் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, நிலத்தடி நீரில், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகள் கலந்ததாக கூறப்படுகிறது. அதனால் அந்த பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீர் தீப்பிடித்து எரியும் தன்மையி…

  21. திமுகவின் பொற்கால ஆட்சியில் வெற்றிகள் தொடரட்டும்; புதிய வரலாறு படைக்கட்டும்: ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து செய்திப்பிரிவு வைகோ - மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 153 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 80 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் …

  22. அ.தி.மு.க.,வில், எதிரும் புதிருமாக உள்ள சசிகலா - பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இடையே, திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தில், இரு தரப்பினரும் சகஜமாக பேசி, பழைய நட்பை வெளிப்படுத்தினர். சசிகலா நியமனம், இரட்டை இலை சின்னம் போன்ற விவகாரங்களில், தேர்தல் கமிஷன் தீர்ப்பு நெருங்குவதால், சசி தரப்பினர், பன்னீர் அணியினர் மீது பாசம் காட்ட துவங்கி உள்ளனர். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பால், தினகரன் வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது. சட்டசபையில், நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. கேள்வி நேரத்தின் போது, தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, 'சிட்டுக் குருவிகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' …

  23. நளினி முருகன்: உறவினர்களுடன் வீடியோ காலில் பேச அனுமதி! மின்னம்பலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் இருவரும் உறவினர்களுடன் வாடஸ் அப் காலில் பேச அனுமதி அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக 30 ஆண்டுகளாக நளினி மற்றும் முருகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2020 ஏப்ரல் மாதம் இறுதியில் முருகனின் தந்தை இலங்கையில் உயிரிழந்தபோது இறுதிச் சடங்கைக் கூட வீடியோ காலில் பார்க்கத் தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா, ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் முருகன், நளினி இருவரும்…

  24. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டறிவதற்காக அந்நாட்டிற்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையை வெளியேறக்கோரி பித்த பிக்குகள் நடத்தியுள்ள போராட்டம் சிங்கள பெளத்த இனவெறி அரசியலின் முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. ராவண பலய்யா என்ற அந்த சிங்கள பெளத்த இன வெறி அமைப்பின் பின்னால் இருப்பது மகிந்த ராஜபக்சாவின் இனவெறி அரசுதான் என்பது இலங்கை அரசியலை புரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். கொழும்புவில் உள்ள ஐ.நா. தூதரக அலுவலகத்திற்குள் இந்த அமைப்பைச் சேர்ந்த புத்த பிக்குகளும் சிங்கள இன வெறியர்களும் உள்ளே புகுந்து வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்த முயன்றுள்ளனர். எப்போதெல்லாம் தமிழர்களுக்கு நியாயம் வழங்கும் நிலை உருவாகிறதோ அப்போதெல்லாம்…

  25. கொடநாடு கொலை விவகாரத்தில் தன்னைத் தொடர்புபடுத்த சசி நடப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.கவினர் இரண்டு நாட்களுக்கு சட்டப்பேரவை புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலையில் கூடியதும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கொடநாடு விவகாரம் தொடர்பாக பேசத் தொடங்கினார். ஆனால், இதற்கு சபாநாயகர் அப்பாவு ஒப்புதல் தரவில்லை. இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக பதாகைகளை ஏந்தி அ.தி.மு.கவினர் கோஷங்களை எழுப்பி வெளிநடப்புச் செய்தனர். சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தின் முன்பாக அமர்ந்து கோஷங்களையும் எழுப்பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.