Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19-ம் தேதியிலிருந்து 25-ம் வரை கொண்டப்படுகிறது. நாட்டின் பாரம்பரியச் சின்னங்கள் குறித்த அக்கறையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இதன் முக்கியமான நோக்கம். உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது நீண்ட பாரம்பரியமும் பண்பாட்டுப் பின்புலமும் கொண்ட நாடு இந்தியா. தமிழகமும் அத்தகைய சிறப்புகள் கொண்டது. தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், மாமல்லபுரம் கோயில், தாராசுரம் போன்றவை தமிழ்நாட்டில் யுனெஸ்கோ தேர்ந்தெடுத்த உலகப் பாரம்பரியச் சின்னங்கள். ஆனால் பண்டைய காலம் தொட்டு காலனி ஆதிக்கக் கால கட்டம் வரை நம் பண்பாட்டைப் பறைசாற்றிக் கொண்டிருப்பவற்றுள் பிரதானமானவை கட்டிடங்கள்தான். இந்தியாவைப் பொறுத்தவரை பாரம்பரியக் கட்டிடங்கள் கொல்கத்தாவில்தான் அதிகம். கொல்கத…

  2. "என் பாலினத்தை பலரும் கேலி செய்வார்கள்" - திருநங்கை காவலர் அளித்த புகாரின் பின்னணி என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 19 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் முதல் திருநங்கை காவலராக 2018ஆம் ஆண்டு காவல்துறையில் தனது பணியைத் தொடங்கிய நஸ்ரியா, தன் பாலினம் மற்றும் சாதி குறித்துத் தனது மேல் அதிகாரி இழிவாகப் பேசுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அவரது மேல் அதிகாரி நஸ்ரியாவை இரண்டு, மூன்று முறையே பார்த்துள்ளதாகவும் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை மறைக்கவே பொய்ப் புகார் எழுப்பி வருவதாகவும் திருநங்கை நஸ்…

  3. சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலைய பொலிஸார் இன்று பறிமுதல் செய்துள்ளனர். தெருவுக்குத்தெரு முளைத்துள்ள பிரியாணி கடைகளில் பயன்படுத்தப்படும் இறைச்சியின் தரம் பற்றி நம்மில் பலருக்கு அக்கறை இல்லை. கோழி பிரியாணியில் கோழிக்கறிக்கு பதிலாக காக்கை கறி சேர்க்கப்படுவதாக முன்னர் பரபரப்பாக செய்திகள் வெளியாகின. பின்னர், ஆட்டு பிரியாணி என்ற பெயரில் வெளி மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் வரும் இறந்த ஆடுகளின் தரமற்ற இறைச்சி பயன்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதற்காக அனுப்பப்பட்ட பல் ஆயிரம் கிலோ அளவிலான பழுதடைந்த ஆட்டிறைச்சியை ச…

  4. பட மூலாதாரம்,TWITTER/IYANKARTHIKEYAN கட்டுரை தகவல் எழுதியவர், பாலசுப்ரமணியம் காளிமுத்து பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவானது அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான மற்றும் போலிச் செய்திகளை கண்டறியும் என இதுகுறித்து வெளியான அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மை சரிபார்ப்புக் குழுவின் திட்ட இயக்குநராக 'YOUTURN' யூட்யூப் சேனலின் முன்னாள் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த …

  5. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்த நாம் தமிழர் கட்சி இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடுகிறது. தங்கள் அரசியல் நிலைபாடு, கொள்கைகள், பிற கட்சிகள் மீதான பார்வை, கச்சத்தீவு போன்ற விவகாரங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிபிசி தமிழின் பிரபுராவ் ஆனந்தன் உடனான நேர்காணலில் இருந்து. கேள்வி: 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்தது. ஆனால் அதிமுக-வை ஆதரித்தது. தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுவ…

  6. கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின் இடம்பெறும் முதலாவது தேர்தல் - எவ்வாறு அமையும் : ஓர் ஆய்வு தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் இரு நாட்களே உள்ளன. தமிழகத்தை பொருத்தவரை, மிகப் பெரிய தலைவர்களாக திகழ்ந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் மறைவிற்கு பிறகு நடக்கவுள்ள முதல் தேர்தல் இது. இந்நிலையில், மத்தியில் அடுத்து எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை தமிழகம் தீர்மானிக்க உள்ளது. தமிழக அரசியல் நிலை மற்றும் லோக்சபா தேர்தல் நிலவரங்களை வைத்து, தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் வாக்குப்பதிவு எப்படி இருக்கும் என்பது குறித்து என்.டி.டிவி-யின் குழு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு; இந்தியாவில் 1952 ம…

  7. அமராவதி ஆறினை நேற்றும் , இன்றும் தூர் வாரி, சமூக சேவை செய்து கொண்டிருக்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். மறுபுறம், அமராவதி ஆற்றில் மண் அள்ள அனுமதி தருமாறு, செந்தில் பாலாஜி MLA, ஜோதிமணி MP இருவரும், மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுத்து உள்ளனர். தேர்தலில் செலவழித்த பணத்தினை எப்படி மீட்பது என்பது அவர்கள் கவலை. நல்ல காலமாக இவர்கள் எதிர்க்கட்சி. https://youtu.be/wy_BQb_HVdI

    • 0 replies
    • 825 views
  8. தமிழ் புதல்வன் திட்டம் இன்று ஆரம்பம். அரசு பாடசாலைகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும், 1000 ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.15 க்கு கோவையில் ஆரம்பித்து வைத்துள்ளார். கோவை அரச கலைக்கல்லூரி மைதானத்தில் இதற்கான பிரமாண்ட விழா இன்று நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் தேர்வான மாணவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.1000 செலுத்தப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதன்மூலம், 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் இத்திட்டத்திற்கு தமிழக அ…

  9. ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்திவருகின்றது. இந்த நவீன முறையின் நன்மைகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு கோடை காலத்தில் தமிழகத்தில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு போன்றவற்றை தவிர்க்க தமிழக அரசு நிர்வாகம் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்க பொதுமக்களின் முயற்சிகள் ஒருபுறமிருக்க சென்னை மாநகராட்சி நிர்வாகமும் பொதுகட்டிடங்கள், சாலைகள், தெருக்கள், விளையாட்டு திடல்கள் , பூங்காக்கள் என மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புதிய முறையில் ஏற்படுத்தி வருகிறது. …

    • 0 replies
    • 484 views
  10. நடிகர் சேதுராமன் மரணம் - "நீ திரும்பி வர மாட்டாயா..." - திரைப்பட நடிகர் சேது மாரடைப்பில் மரணம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்த் திரைப்பட நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று (வியாழக்கிழமை) இரவு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவருக்கு வயது 36. இவர் 2013ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா…

  11. ஜெயலலிதா உடல் நிலை : உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உரிய விவரங்களை, தமிழக அரசு 6 ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22 ஆம் திகதி சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க இலண்டனில் இருந்து வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவருக்கு என்ன நோய்? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டு…

  12. திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு மின்னம்பலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனுதர்மத்தை மேற்கோள் காட்டுவதாக கூறி அனைத்து பெண்களையும் இழிவுபடுத்தி விட்டதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் பெரியார் வலைக்காட்சியின் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், "மனு தர்மத்தின் படி அனைத்து பெண்களும் கீழானவர்கள். அனைத்து பெண்களும் பரத்தையர் களாகவே படைக்கப்பட்டவர்கள். அவர்கள் பிராமண பெண்களாக இருந்தாலும் சரி கீழ்நிலை சாதிகளைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் சரி, மனு தர்மத்தின் படி அனைத்து பெண்களும் விபச்சாரிகள் என்ற அளவிலேயே பார்க்கப்படுகிறார்கள்" என்று பேச…

  13. சசிகலாவுக்கு எதிரான அந்தக் குரல் உச்சநீதிமன்ற வழக்கறிஞருடையதா? சசிகலா மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்ற முயல்வதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் குற்றம் சாட்டும் ஆடியோ என சமூக வலைதளங்களில் ஒரு உரையாடல் பரவி வருகின்றது. அந்த ஆடியோவில், ஜெயலலிதாவின் பல கோடி சொத்துக்களை அபகரிப்பதற்காக சசிகலா முயல்வதாக அவர் குறிப்பிடுகிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். 'சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியே போ' என்கிறார். தேவைப்பட்டால் ஜெயலலிதா அ.தி.மு.க. என்று துவங்கி ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவைக் கொண்டு கட்சி நடத்துவோம் என்கிறார். ஜெயலலிதாவின் சொத்துக்கள் தொடர்பாக நீதிமன…

  14. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலையாக இருக்கின்ற சூழ்நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 காசு எனவும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு எனவும் உயர்த்தி, மக்கள் மீது கூடுதல் சுமையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சுமத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, மார்ச் 16 முதல் பெட்ரோல் விலையை குறைத்துக் கொண்டே வந்துள்ளதோடு மட்டுமல்லாமல், மாதா மாதம் உயர்த்தி வந்த டீசல் விலையையும் மார்ச் இறுதியிலிருந்து கர்நாடக மாநில தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைத்த மத்திய அரசு, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் டீசல் விலையை இரண்டு முறையும், பெட்ர…

    • 0 replies
    • 417 views
  15. அதிமுக எம்.எல்.ஏக்கள் வேறு ரகசிய இடத்திற்கு மாற்றம்! சசிகலா கோஷ்டியினர் தங்களுக்கு ஆதரவு சேர்ப்பதற்காக அதிமுக எம்.எல்.ஏக்களை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்டில் கடந்த இரண்டு நாட்களாக எம்.எல்.ஏக்கள் தங்க வைத்திருந்தனர். ரிசார்ட்டுக்கு வந்துபோகும் வாகனங்களால் எரிச்சலுக்கான ஊர்மக்கள், தங்களது சுதந்திரம் பறிபோகிறது என்று சாலைமறியலில் ஈடுபட்டனர். சசிகலா கோஷ்டியினரே அவர்களை சமாதானப்படுத்திவிட்டனர். இருப்பினும், இந்த இடம் பலருக்கும் தெரிந்துவிட்டதால் வேறு ரகசிய இடத்தில் தங்க வைக்கலாம் என்று முடிவெடுத்து, பழையபடி சொகுசு பேருந்தில் அழைத்துச்சென்றாலும் தெரிந்துவிடும் என்பதால், தனித்தனி காரில் எம்.எல்.ஏக்களை அழைத்துச்செல்ல ஏ…

  16. மதச்சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையிலான மக்கள் யுத்தமே இந்த தேர்தல் – திருமாவளவன் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D.-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-720x450.jpg இந்தத் தேர்தல் மதச்சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையிலான மக்கள் யுத்தம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ 6 வேட்பாளர்கள…

    • 0 replies
    • 322 views
  17. 30 இலட்ச ரூபாய் இருந்தால் போதும் தமிழீழச் சிக்கல் குறித்து படமெடுப்போம் - இயக்குனர் வெற்றிவேல் 2013 மார்ச் மாதத்தில் நடந்த தமிழக மாணவர்களின் ஈழ அதரவுப் போராட்டத்தைப் பற்றி, பத்திரிகையாளர் வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கிய 'அறப்போர்' என்ற ஆவணப்படம், ஜூலை 28 ஞாயிறு அன்று மாலை சென்னை அண்ணாசாலை புக் பாய்ண்ட் அரங்கில் வெளியிடப்பட்டது. உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்குநர்கள் அமீர், ம.செந்தமிழன் ஆகியோர் பேசினர். தலைமையுரையாற்றிய, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்: அண்மையில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மெடலின் ஆல்பிரைட் மற்றும் சூடானுக்கான அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் தனித்தூதர…

  18. தீ விபத்தில் இருந்து தப்பினார் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில், நேற்று நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதையடுத்து ஊழியர்களின் உதவியுடன் அவர் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் ட்வீட் செய்ய, ரசிகர்கள் அவரை நலம் விசாரித்தனர். இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளேன். மூன்றாவது மாடியில் இருந்து இறங்கியுள்ளேன். இப்போது நலமாக உள்ளேன். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உதவிய ஊழியர்களுக்கும், அக்கறையுடன் விசாரித்தவர்களின் அன்புக்கும் நன்றி' எனக்கூறியுள்ளார். Kamal Haasa…

  19. கைவிரித்த உறவுகள்..கடிவாளம் போட்ட பி.ஜே.பி!- திணறும் தினகரன் “அ.தி.மு.கவில் முப்பது ஆண்டுகளாக ஆளுமை செலுத்தி வந்த சசிகலா குடும்பத்திற்கு அந்த கட்சியில் முடிவுரை எழுதப்பட்டு விட்டது” என்கிறார் தமிழக அமைச்சர் ஒருவர். ஆர்.கே நகரில் தொப்பி சின்னத்தில் தினகரனுக்கு வாக்குகேட்ட அமைச்சர்கள் எல்லாம் இன்று தினகரன் குடும்பமே கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று போர்க்கொடி துாக்கியுள்ளார்கள். எந்த குடும்பத்தை சசிகலா பலமாக நினைத்தாரோ அந்த குடும்பத்திலே குழப்பம் உச்சத்துக்கு வந்துள்ளது. திரைமறைவில் திறமையாக கட்சியை கட்டுபாட்டில் வைத்திருந்த சசிகலா குடும்பத்தினரால், திரைக்கு முன்னால் தினகரன் திண்டாடுவதை அவர்கள் குடும்ப உறவுகளே ரசிப்ப…

  20. சசிகலா அணிக்கு அதிர்ச்சி தர ஸ்டாலின்...வியூகம்!:முதல்வர் பழனிசாமி அரசை கவிழ்க்க தீவிரம் அ.தி.மு.க., சசிகலா அணிக்கு அதிர்ச்சி தரும் வகையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் புது வியூகம் வகுத்துள்ளார். எம்.எல்.ஏ.,க்களை வளைக்கும் இந்த வியூகத்தில், ௧௫ பேர் சிக்கியுள்ளனர். இதன் மூலம், முதல்வர் பழனிசாமி அரசை கவிழ்க்க, தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது. ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. எம்.எல்.ஏ.,க்கள், இரு பிரிவாக பிரிவர்; ஆட்சி கலையும் என, தி.மு.க., எதிர்பார்த்தது. ஆனால், சசிகலா அணியினரின் கவனிப்பு காரணமாக, பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர் அணிக்கு வராமல், சசி அணியில் தொடர்ந்தனர். இதன் காரணமாக, ஆட்சி தப்பியது. …

  21. பிணிகள் ஆன அணிகள்... அ.தி.மு.க. இணைப்பில் தொடர் சிக்கல்! விக்கிரமாதித்யனின் வேதாளக் கதையை விட சுவாரஸ்யமாய் நீள்கிறது அ.தி.மு.க இரு அணிகளின் இணைப்பு விவகாரம். இரு அணிகள் என்பதும்கூட கண்ணுக்குத் தெரிகிற பிளவு. இரு அணிகளுக்குள்ளும் தலா நான்கு பிளவுகள் உருவாகியிருப்பதுதான் உண்மை. இந்நாள் எம்.எல்.ஏ-க்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் அணி ஒன்று, 'கூவத்தூர் உறுதிமொழியைக் காப்பாற்ற வலியுறுத்தி கச்சை கட்டுகிறது'. முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமே அடிக்கடி அப்பாயின்ட்மென்ட் கேட்டு பல அதிர்ச்சிகளைத் தருகிறது இந்நாள் அமைச்சர்களில் ஓர் அணி. இந்த இரு அணியினரையும் தெற்றுப்பல் தெரியப் பேசி அனுப்பும் எடப்பாடி, இதில் எந்த அணியைச் சேர்ந்தவர் என்றே அடையாளம்…

  22. டி23 புலி வேட்டை: "காட்டுக்குள் ஜீவகாருண்யம் பார்க்கலாமா?" - வலுக்கும் கேள்விகள் ஆ விஜயானந்த் பிபிசி தமிழ் 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் கும்கி யானைகள், மோப்ப நாய்கள், 150 வனத்துறை ஊழியர்கள் எனக் களமிறங்கியும் பத்து நாள்களாக புலியைப் பிடிக்க முடியாமல் நீலகிரி வனத்துறை திணறி வருகிறது. `புலியை சுடக் கூடாது என்ற எண்ணம் சரியானது. ஆனால், நகரத்தில் இருந்து பேசுகின்ற காட்டுயிர் பாதுகாப்புக்கும் காட்டையொட்டி வாழும் மக்களின் மனநிலைக்கும் இடையே ஏராளமான இடைவெளிகள் உள்ளன' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். என்ன நடக்கிறது…

  23. குடிக்கிறது பெரிய தப்பா... அப்புறம் எதுக்கு தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகள்? - விஜயகாந்த் - சென்னை: குடிக்கிறேன் குடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். யாருமே இங்கு குடிக்கவில்லையா? குடிக்கிறது பெரிய தப்பா என்ன? அப்புறம் எதுக்கு தமிழ்நாடு முழுவதும் கடையை திறந்து வச்சிருக்கீங்க", என்று கேள்வி எழுப்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் விஜயகாந்த் வீட்டில் நடந்தது. இந்த விழாவில் மகனை அறிமுகப்படுத்திவிட்டு விஜயகாந்த் பேசியதாவது: இது அரசியல் விழா அல்ல; இருந்தாலும் சொல்கிறேன், சில பேர் ஜெயலலிதாவுக்கு பயந்துகொண்டு இங்கு வராமல் இருக்கிறார்கள். வாழ்த்தியவர்களுக்கு என் நன்றியை த…

  24. தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்த அதிகாரிகள்: சென்னையில் போராட்டம்! இந்திய குடியரசு தினமான நேற்று சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாடப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க அதிகாரிகள் மறுத்த நிலையில் அவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை பல்வேறு கட்சிகள் சென்னையில் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளன. குடியரசு தின விழாவின் நிறைவாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதன்போது ச…

  25. இலங்கை தமிழர்களுக்கு உதவ இந்திய மத்திய அரசின் அனுமதி கோரி தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் இந்திய மத்திய அரசு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவி செய்யும் அதேநேரத்தில் அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்து வருகின்றது. இந்நிலையில், இதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இது குறித்து இந்திய மத்திய அரசுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அதற்கு இதுவரை இந்திய மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை. இதனால் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவுவதற்கு இந்திய மத்திய அரசின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.