Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமான கச்சத்தீவு பகுதியில் கடலில் சங்கு குளிக்கவும், கச்சத்தீவில் அபூர்வ செடி, கொடிகளை எடுத்துக் கொள்ளவும் கடந்த 133 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் குத்தகைக்கு விட்டுள்ளனர். அந்த குத்தகை ஆவணங்களை, ராமநாதபுரம் மன்னரின் வாரிசு தமிழக அரசுக்கு அனுப்பினார். ராமேசுவரத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது, சின்னஞ்சிறிய கச்சத்தீவு. இந்தியாவிடம் இருந்து பெற்ற இந்த தீவுப்பகுதியில் இந்திய மீனவர்களையே மீன்பிடிக்க விடாமல் இலங்கை அடாவடி செய்து வருவதால், கச்சத்தீவு பிரச்சினை இப்பொழுது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த தீவு நீண்ட நெடுங்காலமாக ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கு பூர்வீக பாத…

  2. போயஸ் கார்டன் ஜெ., வீட்டுக்கு விரைந்த தீபா..! போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு ஜெ.தீபா வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனிப்பேரவை தொடங்கி நடத்தி வருகிறார். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான 'வேதா இல்லம்' தனக்குதான் சொந்தம் என தீபா கூறிவந்தார். இந்நிலையில், இன்று திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தார் தீபா. ஆனால், அங்கிருந்த தனியார் நிறுவன செக்யூரிட்டிகள் தீபாவை உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், 'தினகரன் ஆதரவாளர்கள் தங்களை 'வேதா இல்ல'த்துக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கின்றனர். எங்களை உள்ளே செல்லவிடாமல் அவர்கள் தடுக்கின்றனர்', என தீபா ஆதரவாளர்கள…

  3. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்னுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக அதிக இடங்களைப் பிடித்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து இருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தில் அமர ஒரே தேசியக் கட்சி 10 சதவிகித இடங்களைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் அந்த அந்தஸ்தையும் இழந்துள்ள நிலையில், இந்தக் கடிதத்தை சோனியாகாந்தி, சுமித்ரா மகாஜன்னுக்கு எழுதியுள்ளார். கடிதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என்றும், 10 சதவிகிதம் பெரும்பான்மை இருக்க வேண்டும் என்கிற வரையறை எதுவும் இல்லை என்றும் குறி…

  4. இந்தியாவில் ஆளும் திறன் உள்ள ஒரே தலைவர் கருணாநிதி தான் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாளையொட்டி கலைஞர் - 90 பெருங்காவியத்தின் வரலாறு என்ற தலைப்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் 10 நாட்கள் தொடர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று காமராஜர் அரங்கில் முத்தமிழ் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை கருணாநிதி பார்வையாளர்களில் ஒருவராக இருந்து பார்த்தார். கருத்தரங்கிற்கு தலைமையேற்ற கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்தியாவில் ஆளும்திறன் கொண்ட ஒரே தலைவர் கலைஞர் தான். ஒரு காலத்தில் வழிபாடு மற்றும் உணர்வுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த மொழி திராவிட இயக்கம் வந்த பிறகு போர்க்கருவியாக மாறியது. அடக்க…

  5. பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: இன்று ஆரம்பம். பழனியில் கண்காட்சி-கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இம்மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதாக தெரிவக்கப்பட்டுள்ளது.பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து சுமார் 1 இலட்சம் முருக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, பழனியில், உலக அளவில் முருகன் மாநாடு நடப்பதால் பழனியே விழாக்கோலம் பூண்டு…

  6. படக்குறிப்பு, தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தனியார் இடத்தில் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 13 செப்டெம்பர் 2024 காஞ்சிபுரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராகக் காலவரையற்ற போராட்டத்தை அங்கு பணிபுரியும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். தொழிற்சங்கம் தொடங்குவதற்கு நிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும், சம்பள உயர்வு, பணிநேரம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தபோது, நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளானதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். சட்டத்துக்கு உட்பட்டு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை ந…

  7. திருவனந்தபுரம்: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்களம் என்ற மலையாள நாளேட்டுக்கு ருக்ஷனா என்ற பெண் அளித்த ஆடியோ பேட்டியில் கூறியுள்ளதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ்தான் ப.சிதம்பரத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பின்னர் சிதம்பரமே டெல்லியில் இருந்து என்னை அழைக்கத் தொடங்கினார். கே.வி.தாமஸ், ப.சிதம்பரம், நடிகர் கலாபவன் மணி உள்ளிட்ட பலரும் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர். சென்னையைச் சேர்ந்த ரீனா என்ற பெண்தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இவ்வாறு ருக்ஷனா தனது ஆடியோ பேட்டியில் கூறியுள்ளார். Topics: kerala, sex scandal, chidambaram, கேரளா, ப சிதம்பரம் …

  8. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற விவகாரம் தொடர்பாக இந்திய அரசு இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் இலங்கை தூதரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில்அழைத்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மனிதாபினத்துடன் இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், கைதான மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=94208

  9. என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 01, 2020 10:53 AM நெய்வேலி, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங் களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக…

  10. பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி! திருப்பத்தூர் அருகே மரத்தின் மீது கார் மோதிக் கொண்ட விபத்தில் பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த டிரைவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை திருநகர் அருகே உள்ள தனக்கன்குளத்தில் வசித்து வருபவர் முத்து. பிரபல நகைச்சுவையாளரான இவர், 'அசத்தபோவது யாரு' என்ற பெயரில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி வையம்மாள் (32). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மதுரை முத்து புதுவீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார். இந்நிலையில், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்…

  11. மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலகுகிறது தேமுதிக: அறிவிப்பு விரைவில் வெளியாகிறது மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக விலகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 104 இடங்களில் போட்டியிட்டது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் உட்பட 104 பேரும் படுதோல்வி அடைந்தனர். தேமுதிகவின் இந்த தோல்விக்கு மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம் என்று நிர்வாகிகள் பலரும் விஜயகாந்திடம் எடுத்துக் கூறினர். சமீபத்தில் நடந்த மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகளின் வலியுறுத்தல் பற்றி பேசிய வைகோ, ‘‘தேமுதிகவும், தமாகாவும் கூட்டணியை விட்டுச் சென்றால் எந்த…

    • 6 replies
    • 694 views
  12. சீமான் கோரிக்கையை ஏற்ற முதல்வர் மின்னம்பலம் தைப்பூச தினத்தில் பொது விடுமுறை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்க் கடவுளாகிய முருகனைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச தினத்தில் பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்பது முருக பக்தர்களின் நெடுங்கால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்து வந்தது. முருகனை தமிழ் நிலத்தின் கடவுள் என வணங்கும் நாம் தமிழர் க…

  13. படத்தின் காப்புரிமை AIADMK/FB மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களை இங்கே பட்டியலிடுகிறோம். 1. மக்கள் எதிர்ப்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் கேபிள்/DTH கட்டணங்களை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம். …

    • 6 replies
    • 1.1k views
  14. டெல்லி போலீஸ்முன் இன்று ஆஜர்.. சென்னையில் இருந்து புறப்பட்டார் டி.டி.வி. தினகரன்! இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார் டி.டி.வி. தினகரன். இன்று டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகிறார். இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். இந்த வழக்கில், கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர். அவரிடமிருந்து ஒருகோடியே 30 லட்சம் ரூபாயும், இரண்டு சொகுசு க…

  15. 57 நிமிடங்களுக்கு முன்னர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 6000 கன அடி நீர் திறக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. இன்று காலை 8 மணி முதல் நீர் திறப்பு அதிகப்படுத்தப் பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டும் எச்சரிக்கை குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாற்றில் 8000 கன அடி நீர் விநாடிக்கு திறந்து விடப்படுவதால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு அந்த குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளது. செம்பரம் ஏரியில் இரண்டு நாட்கள் முன்பு வரை விநாடிக்கு 200 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக 1000 கன அடி, 2500 கன அடி என உயர்த்தப்பட்டு தற்போது 6000 கன அடி திறந்து விடப்படுகிறது. …

  16. 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Tinnakorn Jorruang படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் வேலை தேடிச் சென்ற வடமாநிலப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். என்ன நடந்தது? அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண், தனது கணவரோடு உடுமலைப்பேட்டையில் உள்ள பாக்குமட்டை தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அங்கு பணிபுரியும் ராஜேஷ் என்பவரிடம் வேறு வேலை வாங்கித் …

  17. Started by SUNDHAL,

    ”மதச்சார்பற்றவர் என்று கலைஞர் சொல்லிக்கொண்டு ரம்ஜானுக்கு மட்டும் நோன்புக்கஞ்சி குடிக்கிறாரே? பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை சாப்பிடத் தயரா?” என்று இந்துமுன்னணி இராம. கோபாலன் ஒருமுறை சவால் விட்டார். “இராம. கோபாலன் கொடுத்தால் கொழுக்கட்டை சாப்பிடத் தயார்” என்று கலைஞர் பதிலளித்தார். அடுத்து வந்த விநாயகர் சதுர்த்தியின்போது இராம. கோபாலன் கொழுக்கட்டையோடு அறிவாலயம் சென்றார். கலைஞரும் ஒரு பிடி பிடித்தார். :d

  18. ஆர்.கே. நகரில் போட்டியிட எனக்கு தொல்லை: தீபா சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட எனக்கு தொல்லை கொடுக்கின்றனர் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவது மக்களின் விருப்பமே . சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதாவில் அண்ணன் மகள் தீபா கூறுகையில் : ‛‛இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிடவில்லை. எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பாக போட்டியிடுவேன். பேரவையின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசித்த பின்னரே முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும், ஜ…

  19. சீமானுக்கு குட்நியூஸ்? நடிகை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு.. மார்ச் 3ல் விசாரணை Nantha Kumar RUpdated: Saturday, March 1, 2025, 20:02 [IST] நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர் சீமான். இவர் மீது கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். திருமணம் செய்வதாக கூறி சீமான் ஏமாற்றிவிட்டார். கருக்கலைப்பும் செய்தேன் என்று நடிகை கூறி வருகிறார். மேலும் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு சீமானை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதுதொடர்பாக நடிகை புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்தா…

  20. சட்டப்பேரவையில் அ.தி.மு.க, தி.மு.க, பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் அமளி சட்டப்பேரவையில் திமுக, அதிமுக மற்றும் பன்னீர்செல்வம் அணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த அமளிக்கிடையே முதல்வர் பழனிசாமி, நம்பிக்கை வாக்கு கோரினார். தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்எல்ஏயான செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அப்போது, அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து, திமுக, பன்னீர் ஆதரவு எம்எல்ஏக்களும் முழக்கமிட்டனர். மேலும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக…

  21. இந்திய மாசிக்கருவாடுக்கு இலங்கையில் தடை: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு பிரபுராவ் ஆனந்தன், ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் மாசிக் கருவாடு இறக்குமதிக்கு இலங்கை தடை விதித்துள்ளதால், இந்தியாவில் ரூ.100 கோடி மதிப்பிலான மாசிக் கருவாடு தேக்கம் அடைந்துள்ளது. இதனால் மாசிக் கருவாடு தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல். மீன் பிடி சார்பு தொழில்களான மீன் உணவு உற்பத்தி, கருவாடு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அசைவ உணவு பிரியர்களின் தேவையை பூர்த்தி செய…

  22. மழை வெள்ளத்தினால் சென்னை தனியார் மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி! [Saturday 2015-12-05 09:00] சென்னை மணப்பாக்கத்தில் அடையாற்றின் கரையோரம் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில், பெரும் வெள்ளம் காரணமாக மின்தடை ஏற்பட்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால்,அங்கு சிகிச்சை பெற்று வந்த 18 நோயாளிகள் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களில் 14 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது; உயிரிழந்த எஞ்சிய 4 பேரின் உடல்களை அவர்களது உறவினர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக கடந்த செவ்வாய்க்க…

  23. சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SAVUKKU SHANKAR நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒருவரை சந்தித்த பிறகுதான் யூடியூபர் மாரிதாசுக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்ததாக அவர் ட்விட்டரில் இட்ட பதிவை மேற்கோள்காட்டி ஜூலை மாதம் மதுரை உயர் நீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து ஒரு யுடியூப் சேனலில் பேசிய சங்கர், மேல் மட்ட நீதித்துறை முழ…

  24. 'இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்' - பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள் பட மூலாதாரம்,JAYARAJ S படக்குறிப்பு,பழனியம்மாள் அதிகாலையில் 2 மணிக்கெல்லாம் எழுந்து செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டும் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 17 மார்ச் 2025, 05:55 GMT புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் அதிகாலை 2 மணிக்கெல்லாம் ஜெயராஜின் அம்மா பழனியம்மாளுக்கு விடிந்துவிடும். இரவு எத்தனை மணிக்குத் தூங்கினாலும் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் அவருக்கு ஓர் அனிச்சை செயல். தலைப்பாகை அணிந்து சேறும் சகதியுமான ஆடையுடன் நாள் முழுக்க தன் அம்மா வேலை செய்வதை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.