Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: ரஜினிக்கு 17 சதவீதம் ஆதரவு: இந்தியா டுடே கருத்து கணிப்பு புதுடில்லி: தமிழக சட்டசபைக்கு தற்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்றும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும் என்றும் ரஜினிக்கு 16 சத ஓட்டுக்கள் கிடைக்கும் என்றும் இந்தியா டுடே நடத்திய பரபரப்பு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. …

  2. ஜெயலலிதா சொத்து குவிப்பு பற்றிய கருணாநிதியின் அறிக்கை வீடு வீடாக வினியோகம்! [sunday 2014-11-23 09:00] ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு பற்றி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வீடு வீடாக வினியோகித்தார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை விவரத்தை திமுக தலைவர் கருணாநிதி அறிக்கையாக வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கை திமுக தலைமை கழகம் சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இதை நாடு முழுவதும் திமுகவினர் பொது மக்களிடம் வினியோகம் செய்து வருகிறார்கள். அதன்படி, தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழ கன் எம்.எல்.ஏ. நேற்று சேப்பாக்கம் தொகுதி பார்டர் தோட்டம், தி.நகர் பகுதிகளில் வீடு வீடாக மற்றும் கடைகளில் இந்த புத்தகங்களை வினியோகம் செய்தார். ஜெயலலிதா சொத்து குவ…

  3. இம்ரான் குரேஷி பிபிசிக்காக கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் வருகை, தென்னிந்தியாவில் அதிகமாகவே இருந்தது. சமீபத்தில் கேரளாவில் மீனவர்களோடு படகில் கடலுக்குச் சென்றவர் அரபிக் கடலில் குதித்து அனாயாசமாக நீச்சலடித்தார். தமிழகத்தில் மாணவி ஒருவர் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டு `புஷ் அப்ஸ்` எடுத்தார். மற்றொரு இளைஞரிடம் அகிடோ எனும் தற்காப்புக் கலையைக் காட்டினார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி மீனவர்களோடும், மாணவர்களோடும் உரையாடியதை, தென்னக நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள், வடக்கத்திய ஊடகங்களைப் போல அல்லாமல் நியாயமாகவே செய்திகளை வெளியிட்டன. கடந்த வாரம் கூட தென் இந்தியாவில் சமூக ஊடங்களில் ராகுல் …

  4. படத்தின் காப்புரிமை M K stalin/fb 2019 மக்களவை தேர்தலையொட்டி திராவிட முன்னேற்ற கழகத்தில் தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார். அதில் உள்ள சில அம்சங்களை வாசகர்களுக்கு தொகுத்து வழங்குகிறோம். தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் தமிழில் செயல்படும் வகையில் தமிழ் மொழியை இணை ஆட்சி மொழியாக அறிவிக்க சட்டத்திருத்தங்கள் செய்யப்படும். வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மத்திய அரசின் வரி வருவாயில் 60% மாநில அரசுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி நிதி பங…

  5. ராம மோகன ராவ்... நெக்ஸ்ட் சசிகலா? ‘‘தமிழகத்தின் உச்ச அதிகார மையமான செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்து வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இந்தியாவிலேயே ஒரு அரசாங்கத்தின் தலைமைச்செயலகத்துக்குள் புகுந்து சோதனை நடத்தப்பட்டது இதுதான் முதல்முறை. அப்படிப்பட்ட அவமானகரமான பெருமையைத் தேடித் தந்துள்ளார் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் என்ற வரலாற்றுத் தகவலுடன் வந்தார் கழுகார். ‘‘வருமானவரித் துறையின் இந்த திடீர் ஆர்ப்பரிப்புக்குப் பின்னணி என்ன?’’ ‘‘2016 சட்டமன்றத் தேர்தல் களேபரங்கள் நினைவிருக்கின்றனவா? அப்போது ஓட்டுக்கு நோட்டுக் கொடுப்பதைத் தடுக்க முடியாத அளவுக்கு, தமிழகம் முழுவதும் கரன்ஸி விளையாடியது. எச்சரித்து... எச்சரித…

    • 3 replies
    • 1.3k views
  6. மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே... முதல்வர் ஜெ. புறக்கணிப்பு? சென்னை: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்வதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதனால் மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வது சந்தேகமே என்று கூறப்படுகிறது. நரேந்திர மோடி பிரதமராக வரும் 26-ந் தேதியன்று மாலை பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இடம்பெற்றுள்ளார். இந்த தகவல்கள் நேற்று வெளியானது முதலே தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் உருவாகி உள்ளன. பாரதிய ஜனதா…

    • 3 replies
    • 971 views
  7. அப்பல்லோவில் ஜெயலலிதாவை ஓபிஎஸ், தம்பிதுரை நேரில் பார்த்தனர் - சசிகலா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஜெயலலிதாவை அவர் மரணமடைந்த டிசம்பர் 5-ம் தேதி வரை யாரும் சந்திக்க அனுமதிக்கவில்லை என்ற புகார் உள்ள நிலையில், அவரை சந்திதவர்கள் யார் யார்? என விவரத்தை நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தில், சசிகலாவின் வாக்குமூலத்தை அவரது சார்பில் வழக்கறிஞர் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளார். அதில் ஜெயலலிதாவை மருத்துவமனையில் யாரெல்லாம் சந்தித்தனர் என்ற விவரத்தையும் விரிவாக கூறியுள்ளார். …

  8. சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உள்நாட்டுமுனைய மேற்கூரை இடிந்து விழுந்தது.சென்னையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்தமாதம் திறக்கப்பட்ட உள்நாட்டு முனையத்தின் மேற்கூரை இன்று அதிகாலை 4 மணிக்கு இடிந்து விழுந்தது. அந்த நேரம் எந்த விமானமும் தரையிறங்காததால், புறப்படாததால் பயணிகள் தப்பினர். ஆனால் ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை அடுத்து ஹெச்1 மற்றும் ஹெச்2 நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன. மேற்கூரை இடிந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=82591&am…

  9. இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் செய்திப்பிரிவு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 88. நுரையீரல் தொற்று மற்றும் வயோதிகம் காரணமாக தா.பாண்டியன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. வென்டிலேட்டர் மூலம் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மூத்த தலைவர்களாக தமிழகத்தில் சிலரே எஞ்சியுள்ளனர். அதில் …

  10. கொரோனாவுக்கு பிறகு தமிழகத்தில்மாரடைப்பால்தான் அதிக அளவில் உயிரிழப்பு: ஆய்வு நடத்துமாறு மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் Published By: RAJEEBAN 16 MAR, 2023 | 10:26 AM கொரோனாவுக்கு பின்னர் தமிழகத்தில் இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் `எச்3என்2' என்ற இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களைக் கண்டறிந்து, மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையிலோ அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவிலோ அனுமதிக்கும் நிலை இதுவரை ஏ…

  11. ரஜினி + அரசியல் + நேர்மை + கொள்கை = 2.0 பிளாக் டிக்கெட் T3 Lifeஜனவரி 4, 2018 கார்த்திக் ரஜினி தனிக்கட்சி தொடங்கப்போகிறார், ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது அவர் விருப்பம். சீமான் சொல்வதைப்போல தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டுமென்றால், எடப்பாடி கூட தமிழன் தான், வைகுண்டராஜன் கூட தமிழன் தான், சின்னம்மா கூட தமிழச்சி தான் அந்த இனவாதத்திற்குள் இருந்து ரஜினியை எதிர்க்க முடியாது.காவிரி விடயத்தில் கர்நாடத்திடம் மன்னிப்பு கேட்டார் ரஜினி, அது அங்கு பிறந்ததால் அல்ல அவர் படம் அங்கும் ஓட வேண்டும் என்பதால் மட்டுமே. இங்கு இனவாதத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் பண்ண முடியாது. அதன் அரசியல் செல்வாக்கு ஓரளவு தான். ரஜினி பேசிய இரண்டு விடயங்கள் இங்கு முக்கியம…

  12. ஜெயலலிதா பாதி... கருணாநிதி பாதி..! - இது தினகரன் ஸ்டைல்? டிடிவி தினகரன் | கோப்புப் படம். மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது சத்திய வார்த்தை. மழைக்கு மட்டுமில்லை. இடி, மின்னல், புயல் என சகலத்துக்கும் பொருந்தும். இவற்றுக்கு மட்டுமா? தேர்தல் தொடங்கி, பிரச்சாரம் நடந்து, வெற்றியும் அறிவிக்கப்பட்டுவிட்ட ஆர்.கே.நகர் அதகளம்... அரசியல் அரங்கில்... புதிய அத்தியாயங்களை எழுதும் போல் தெரிகிறது. இதோ... ரிசல்ட் வந்த மறுநாளே... அதிமுகவினர் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வனின் கட்சிப் பதவிகளைப் பறித்துவிட்டதாக அறிவித்துவிட்டனர். ’என்னப்பா இது... இரட்டை இலை நமக்குக் கிடைச்சும் எதுவுமே நடக்கலையே... கனியலை…

  13. முக்கிய விமான நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை வைக்கத் தீர்மானம்! அண்மையில் இடம்பெற்ற சேலம் விமான நிலைய அதிகாரிகளுக்கிடையிலான ஆலோசனைக் கூட்டத்தில், சேலம் விமான நிலையத்திற்கு மறைந்த தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை வைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1359516

  14. சென்னை: முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் வெளிப்படையான செயல்பாடுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும், என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். சேலத்தில் தலைவா படத்தின் திருட்டு விசிடி தயாரித்து விற்றவர்களை போலீசிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். திருட்டு டிவிடி தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளனர் போலீசார். இதற்காக போலீசுக்கு விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: திருட்டு சிடி தயாரிப்பதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும். அன்பு ரசிகர்களே, தமிழ்நாட்டில் இன்னும் தலைவா படம் வெளியிடப்படவில்லை. அதற்குள் யாராவது திருட்டு சிடி விற்றாலோ, தயாரித்தாலோ அவர்களை பற்றி காவல் துறைக்கு தெரிவியுங்கள். சிறப்பான ஆ…

    • 3 replies
    • 374 views
  15. தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர். காலை 10 மணி அளவில் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும், மதுபானசா…

  16. விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தியாகதுருகம் அருகே உள்ள பள்ளகசேரியை சேர்ந்த ராமச்சந்திரன்- அஞ்சலை ஆகியோரின் 3 வயது மகள் மதுமிதா. இன்று காலை 9 மணிக்கு ராமச்சந்திரன் தனது மகள் மதுமிதாவுடன் பழனி என்பவரின் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, தோட்டத்தில் மதுமிதா விளையாட சென்றுவிட்டார். ராமச்சந்திரன் தனது வேலையை பார்க்க சென்று விட்டார். மூடப்படாத ஆழ்துளை கிணறு இந்நிலையில், தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த மதுமிதா, மூடப்படாத நிலையில் இருந்த 500 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். மகளின் அலறல் சத்தம் கேட்டு ராமச்சந்திரன் ஓடிவந்துள்ளார். மகள் ஆழ்து…

  17. இலங்கை தமிழர்களின் நலனைக் காக்க சென்றேன்: மோடி இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழர்களைக் காப்பாற்றினேன். இலங்கை அரசுடன் நல்லுறவை ஏற்படுத்தி தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்க யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான் என்றும் தலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழக பாதிரியாரை மத்திய அரசு மீட்டது என்றும் அவர் கூறினார். சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்…

  18. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். தஞ்சை விளார்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியபோது, ’’பிரபாகரனின் பிறந்த நாளை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடி உள்ளனர். தமிழ் இனம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நான் அவரை 24 வயதில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை, இனியும் அவருடன் உள்ள தொடர்பு மிகச்சிற…

  19. உடனடியாக 1000 கோடி வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை! தமிழ் நாட்டிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 1000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன்களுக்கு 6 மாதம் வரை வட்டித் தள்ளுபடி வழங்கவேண்டும் எனவும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது, இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் பேசாத முதலமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பேசினார்கள். இந்நிலையில் நேரமின்மை காரணமாக, பிற மாநில முதலமைச்சர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பிரதமருக்கு ஃபக்ஸ் மூலம் அனுப்பியுள்ளனர். அந்தவகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன…

    • 3 replies
    • 569 views
  20. 'ராஜீவ்காந்தி கொலையின் நேரடி சாட்சி 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்!' -ஆவணப்பட அதிர்ச்சி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. 'படுகொலைக்குக் காரணமானவர்கள்' என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள். ராஜீவ்காந்தி படுகொலையின் மிக முக்கிய ஆவணம் என ஜெயின், வர்மா கமிஷன் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டது சம்பவ இடத்தில் போட்டோகிராபர் ஹரிபாபு எடுத்த புகைப்படங்களைத்தான். சர்வதேச அரங்கையும் இந்தப் புகைப்படங்கள் உலுக்கியது. " ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில் ஹரிபாபு இறந்துவிட்டால…

  21. மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவு by : Dhackshala மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தான இம்ப்ரோவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆயுஷ் அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இம்ப்ரோ மருந்துக்கு கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா? என்பது குறித்து மத்திய ஆயுஷ் …

  22. நெல்லை: பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி. நெல்லை மேலகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பேருந்து நடத்துனர். இவரது மனைவி பிரேம பாக்கியம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சிந்துஜா. 17 வயதான இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ படித்திருந்தார். இந்த பள்ளிதான் நெல்லை மாவட்டத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. நன்கு படிக்கக்கூடியவர் சிந்துஜா. தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற …

  23. Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 10:52 AM இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது திருச்சி விசேட முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தன் என அழைக்கப்படும் ரி சுரேந்திரராஜா திருச்சி முகாமில் தனதுவாழ்க்கைகுறித்து தெரிவிக்கும் கடிதமொன்றை எழுதியுள்ளார் சூரிய ஒளிகூட என் மேல் படுவதில்லை என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன் என அழைக்கப்படும் ரி சுரேந்திரராஜா - 2022 நவம்பர் 11 ம் திகதி அவரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது, எனினும் அவர் பயஸ் முருகன் ஜெயக்குமாருடன் திருச்சி விசேட முகாமில் த…

  24. சிக்கல் இன்னும் முடியவில்லை: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி உச்ச நீதிமன்றம் ஜெயலலி தாவுக்கு விதிக்கப்பட்ட தண்ட னைக்கு இடைக்கால தடை தான் விதித்திருக்கிறது. நிபந்தனை ஜாமீன் மட்டுமே வழங்கப் பட்டிருக்கிறது. அதனால் ஜெய லலிதாவுக்கு இன்னும் சிக்கல் முடியவில்லை என்பதை மறந்து விட வேண்டாம் என பாஜக மூத்த‌ தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சொத்துக்குவிப்பு வழக்கின் மனுதாரரான சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் நீதிபதி கள் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இந்நிலையில் ‘தி இந்து' சார்பாக அவரிடம் பேசிய போது, “இவ்வழக்கில் ஜெய லலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் …

  25. போலீசாரின் வி.வி.ஐ.பி மரியாதையுடன் சிறையில் இருந்து விமான நிலையம் சென்ற ஜெயலலிதா பெங்களூர்: சிறையில் இருந்து பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையம் வரையிலும் ஜெயலலிதா வாகனம் செல்வதற்காக அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. வி.வி.ஐ.பி அந்தஸ்துடனும், பாதுகாப்புடனும் அவர் ஏர்போர்ட் சென்றார். சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அனுமதி வழங்கிய நிலையில், அந்த உத்தரவு பெங்களூர் மத்திய சிறைச்சாலை அதிகாரிகளிடம் கிடைத்த பிறகு நடைமுறைகளை முடித்துக்கொண்டு ஜெயலலிதா ரிலீஸ் செய்யப்பட்டார். இதன்பிறகு, சிறை வளாகத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, எச்.ஏ.எல் விமான நிலையத்துக்கு கார் மூலமாக ஜெயலலிதா பயணித்தார். போலீசாரின் வி.வி.ஐ.பி மரியாதையுடன் சிறையில் இருந்து விமான நிலையம் சென்ற ஜெய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.