Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கொடுங்கையூரில் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடாததால் மனமுடைந்த தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பதிவு: ஜூன் 09, 2021 06:52 AM பெரம்பூர், கொடுங்கையூர் அடுத்த எருக்கஞ்சேரி மேற்கு இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழன் பிரசன்னா (வயது 43). இவர் தி.மு.க. கட்சியின் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி நதியா (35). இந்த தம்பதிக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆன நிலையில், இவர்களுக்கு ஏஞ்சல் பாரதி, ஜெனிபர் பாரதி ஆகிய 2 மகளும், தமிழ் நிரன் என்ற 1 வயது மகனும் உள்ளனர். இந்த நிலையில்…

    • 20 replies
    • 1.8k views
  2. இலங்கையுடனான... உறவினை, துண்டிக்க வேண்டும் – சீமான் இந்தியாவிற்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவினை துண்டித்து சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அருகே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டிருக்கும் இலங்கை அரசின் செயல் பேரதிர்ச்சி தருகிறது. இது இந்தியாவின் எல்லையோரப் பாதுகாப்புக்கு பெருங்கேட்டை விளைவிக்கக் கூடிய பேராபத்து. சீனாவின் ஆதிக்கத்தை கண்டிக்கவும், தடுக்கவும் முற்பட வேண்டும். நட்ப…

  3. `நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வேண்டும்!' - விண்ணப்பித்த டாடா; என்ன செய்வார் ஸ்டாலின்? க.சுபகுணம் நியூட்ரினோ கடந்த மே 20-ம் தேதியன்று நியூட்ரினோ திட்டத்துக்கு காட்டுயிர் வாரிய அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு வனத்துறையிடம் டாடா ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் கொண்டு வந்தே தீருவோம் என்று இந்திய ஒன்றிய அரசு முயன்றுகொண்டிருக்கும் ஒரு திட்டம்தான் நியூட்ரினோ. 2013-ம் ஆண்டுக்குப் பின்னர், எழுந்த சர்ச்சைகள் மற்றும் சூழலியல் சிக்கல்கள் காரணமாக உயர் நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது. அப்போதிலிருந்தே இந்தத் திட்டம் குறித்த பேச்சு எழும்போதெல்லாம், வழக்கு நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும்போதெல்லாம், இ…

  4. டுவிட்டரில் திடீரென கிளம்பிய ‘ஒன்றிய உயிரினங்கள்’ -கலகலக்கும் பதிவுகள் சென்னை: திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்னர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கத் தொடங்கியிருப்பது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. அதேபோல் தமிழகம் என்று அழைக்கக்கூடாது என்றும், தமிழ்நாடு என்று அழைப்பதே சரியானது என்றும் திமுகவினர் கூறுகின்றனர். இதை பாஜகவினர் விமர்சனம் செய்துவருகின்றனர். அந்த வகையில், அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், டைனோசர் கூட தமிழில்தான் பேசியிருந்ததாக சொல்லுவார்கள் போல இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பார்த்ததும் நெட்டிசன்கள் சரமாரியாக பதிலட…

  5. மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக நடவடிக்கை! மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து மக்களின் உயிர்களை காத்திட தமிழக அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களும், அல்லும் பகலும் அயராது தம் உயிரை துச்சமென மதித்து அரும்பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சில நோயாளிகள் உயிர் இழக்க நேரிடும்போது மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களை நோயாளிகளின் உறவ…

  6. கருப்பு பூஞ்சை: அதிகரிக்கும் பாதிப்பு - நீரிழிவு உள்ளவர்கள் செய்ய வேண்டியவை பட மூலாதாரம், Getty Images இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைய தொடங்கிய நிலையில் கருப்பு பூஞ்சை எனும் மியூகார்மைகோஸிஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை 28 மாநிலங்களில் 28,252 பேர் மியூகார்மைகோஸிஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 86 சதவீதம் அதாவது 24,370 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், 62.3 சதவீதம் பேர், அதாவது 17,601 பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது என இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இ…

  7. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம்: காத்திருப்பு முடிவுக்கு வருமா? பட மூலாதாரம், Getty Images தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரையும் கோவில்களில் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் பயிற்சியை முடித்த மாணவர்கள் 12 ஆண்டுகளுக்கு மேலாக கோவில்களில் பணிபுரியும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றனர். தகுதியின் அடிப்படையில் தங்களை கோவில்களில் நியமிக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். 2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்படலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டு, இதற்கென திறக்கப்பட்ட பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்களில் தங்கள் நியமனத்திற்காகக் காத்திருக்கின்ற…

  8. தமிழகத்தில்... 800க்கும் மேற்பட்டவர்களுக்கு, கறுப்பு பூஞ்சை தொற்று! இந்தியாவில் கறுப்பு பூஞ்சையின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் 847 பேர் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள ஆம்போடெரிசின் – பி என்ற மருந்து தற்போதுவரை 2 ஆயிரத்துத்து 470 குப்பிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் கூடுதலாக 30 ஆயிரம் மருந்து குப்பிகளை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்கள் கறுப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு அச்சத்தை ஏற்…

  9. தமிழகத்தில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு... தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்கிறார் ஸ்டாலின்! தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவை செல்லும் அவர், அங்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை ஆரம்பித்துவைக்கவுள்ளார். இதனையடுத்து மதியம் 1.30 மணிக்கு கோவை சுற்றுலா மாளிகைக்கு செல்லும் அவர் அங்கு கொரோனா பணிகளை ஆய்வு செய்யவுள்ளார். தொடர்ச்சியாக அங்கிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர் நாளை காலை 9.45 மணியளவில் அங்கு நடைபெறும் ஆய்வு கூட்டமொன்றில் கலந்துகொள்ளவுள்ளார். …

  10. பாலியல் புகார்: ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! மின்னம்பலம் 2017ல் மீடூ #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகளை வெளிப்படையாகத் தெரிவித்தனர். இதனால் பல குற்றச்சாட்டுகள், பல தீர்வுகள், பல சர்ச்சைகள் ஏற்பட்டது. பல முக்கிய பிரபலங்கள், குறிப்பாக அமைச்சர் பதவியிலிருந்தவர்களின் முகத்திரையும் இதன்மூலம் கிழிந்தது. உலகம் முழுக்க மீடூ ஏற்படுத்திய அதிர்வலைகளைப் போன்று தற்போது தமிழகத்தில் பல பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்து பெற்றோர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சென்னை பத்மசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை தொடர்ந்து கராத்தே பயிற…

  11. தமிழகத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை நோய்: இதுவரை 847 பேர் பாதிப்பு சிகிச்சை முடிந்து குணமடைந்த அனைவருக்கும் கொரோனாவுக்கு பின் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கண்காணித்திட வேண்டும் என்றும், மாவட்ட வாரியாக தேவையான சிகிச்சைகளை வழங்கிடவும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையைத் தொடர்ந்து, கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை குறிவைத்து கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளை இந்த நோய் தாக்கி …

  12. தொடர் மழையால் வற்றாத வைகை; 2 ஆண்டுகளுக்கு நீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் நம்பிக்கை தேனி, தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்து வைகை ஆறு உற்பத்தி ஆகிறது. பழங்காலத்தில் வற்றாத நதியாக இருந்த வைகை, இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டதால் கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டில் 3 மாதங்கள் மட்டுமே நீர்வரத்து உள்ள ஆறாக வைகை மாறியது. இந்த 3 மாதங்கள் மட்டும் ஓடும் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலமாக விவசாயம் செய்து வருகின்றனர். இதுபோகை வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகை ஆற்றில் கடந்த ஓராண்டாக தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ…

  13. தமிழகத்தில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை... இரத்து செய்வதாக முதலமைச்சர் அறிவிப்பு தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வைத்தியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வி வகுப்புகளுக்கான தகுதியாக 102 பொதுத்தேர்வுகள் மாத்திரமே கவனத்தில் கொள்ளப்படும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கின்றது. இருப்பினும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதி…

  14. கொத்தடிமைத் தொழிலாளர்கள் இல்லாத தமிழகம்: சில முக்கிய ஆலோசனைகள் ப.இளவழகன் கடந்த மே மாதம் 31ஆம் தேதி, தேசிய மனித உரிமை ஆணையம் பெருந்தொற்றுக் காலத்தில், கொத்தடிமைத் தொழிலாளர்களை இனம்காண, விடுவிக்க, மறுவாழ்வு மற்றும் திருப்பி அனுப்புதல் போன்ற செயல்களைச் செய்வதற்காக ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது. இதற்கு முன்பாக கடந்த டிசம்பர் 2020-ல், இதே போல் ஒரு விரிவான வழிகாட்டுதலை எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியிருந்தது. தற்போது இரண்டாவது அலையில் ஏற்பட்ட சவால்களையும், தாக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. தடுப்பு (Prevention) ஊராட்சி…

    • 1 reply
    • 605 views
  15. பாஜக பத்மா சேஷாத்ரி பள்ளியின் பாலியல் தொல்லை | அதிர வைக்கும் உண்மை பின்னணி | மதுவந்தி

  16. அனைத்து துறைகளிலும் தமிழ் யூனிகோடு: தலைமை செயலாளர்! மின்னம்பலம் அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோடு முறையைக் கையாள வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் ஃபாண்ட் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அனைத்து அரசு துறைகளிலும் ஒரே தமிழ் ஃபாண்ட் பயன்படுத்தப்பட்டால் வசதியாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழக இணைய கல்விக்கழகம் மேம்படுத்தியுள்ள தமிழ் யூனிகோடு, அனைத்து வகை தமிழ் குறி அமைவு (TACE16) கொண்ட எழுத்துருக்கள் (Fonts),…

  17. மீண்டும்... அரசியலுக்கு, வருகிறாரா சசிகலா! கடந்த சில நாட்களாக சசிகலா குறித்த செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்த சசிகலா தற்போது விடுதலையாகி உள்ளார். நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் இவரின் ஆதிக்கம் இருக்கும் என்றே பல விமர்சனங்கள் எழுந்திருந்தன. பரபரப்பாக பேசப்பட்ட இந்த விடயங்களுக்கு அரசியலில் இருந்து விலகபோவதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியே மலர வேண்டும் எனவும் கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இதனையடுத்து அவரது அரசியல் வாழ்க்கை நிறைவுக்கு வந்ததாகவே கருதப்பட்டது. இருப்பினும் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி தோல்வியை தழுவவே சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரபோகிறார் என்ற கருத்…

  18. Yasser Arafat ராஜீவ் உயிருக்கு ஆபத்து என அவர் உயிரோடு இருக்கும் போதே சொன்னார்! - பழ நெடுமாறன்

    • 0 replies
    • 806 views
  19. மைதானத்தை வட்டமிடும் கழுகுகள்... வீராங்கனைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?! #SexualHarassment மு.பிரதீப் கிருஷ்ணா Sexual Harassment PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லைகள் கொடுத்ததைப் அப்பள்ளி மாணவிகள் சில தினங்களுக்கு முன் வெளிப்படுத்தினார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், சென்னையின் முன்னணி தடகள பயிற்சியாளர் நாகராஜன் இப்போது போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். புத்தகத்தைக் கிழித்தெறிந்த வகுப்பறையின் கதை படித்த தமிழகம், இப்போது கால்களை வாரிவிட்ட மைதானத்தின் கதை படித்துக்கொண்டிருக்கிறது. பள்ளி ஆசிரியரைத் தொடர்ந்து, தங்கள் தடகள பயிற்சியாளரால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் இப்போது குரல் கொட…

  20. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டத்தை ஈழத் தமிழ்க் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துமாறு து.ரவிக்குமார் வேண்டுகோள் 109 Views கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலவாழ்வுக்கான ஒரு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அந்த நலத்திட்டத்தை இந்தியாவிலிருக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துமாறு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் து.ரவிகரன் அவர்கள் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலவாழ்வுக்கான மிகச் சிறந்த திட்டமொன்றைத் தங்களுடைய தலைமையிலான அரசு அறிவித்திருப்பது பாரா…

  21. அமுல் நிறுவனத்தை சைவ பால் தயாரிக்க சொன்ன பீட்டா; வலுக்கும் எதிர்ப்பு! செ.சல்மான் பாரிஸ்என்.ஜி.மணிகண்டன் பசு ( Representational Image ) ``தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பீட்டாவிடமிருந்து மீட்டது போல் இந்திய பால்வளத உற்பத்தி செய்யும் விவசாய பெருமக்களுக்கு பொதுமக்கள் எப்போதும் துணை நிற்க வேண்டும்". ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை வரக் காரணமான பீட்டா அமைப்பு தற்போது, சோயா மூலம் சைவ பால் தயாரிக்க வேண்டும் என்று அமுல் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளதைப் பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகிறார்கள். Amul அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பீட்டா அமைப்…

  22. தென்னிந்தியாவை சுற்றி வளைத்தது சீனா- டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை 23 Views தென்னிந்தியாவை சுற்றி வளைத்திருக்கிறது சீனா. இலங்கையில் சீனாவின் அரசியல் சாசனத்துக்குட்பட்ட இறையாண்மை பிரதேசத்தை சீனா பெற்று விட்டது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் அமெரிக்காவால் செய்ய முடியாததை சீனா சாதித்திருக்கிறது. தமிழக எல்லையையொட்டிய அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதையொட்டிய 15,000 ஏக்கர் நிலங்களையும் சீனாவுக்கு தாரை வார்த்துள்ள சிங்கள அரசு, அவற்றை சீன இறையாண்மை கொண்ட பகுதியாக அறிவித்திருக்கிறது. இதன்மூலம் இந்தியப் பாதுகாப்புக்…

  23. `28 வயதில் எம்.பி; 1,000 பள்ளிகளை திறந்து சாதனை’ - 101 வயதில் மறைந்த டி.எம்.காளியண்ணன் கவுண்டர் துரை.வேம்பையன்நா.ராஜமுருகன் காளியண்ணன் கவுண்டர் ( நா.ராஜமுருகன் ) இந்தப் பதவியை வைத்து ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் ஆயிரம் பள்ளிகளை இவர் திறந்தார். 'இங்குள்ள பிள்ளைகள் நாலெழுத்து படிக்கோணும். அதுக்காகதான் ஆயிரம் பள்ளிகள். கடைக்கோடி பிள்ளைக்கும் கல்வி கிடைக்கணும்னா, இன்னும் அதிகம் பள்ளிகளை திறப்பேன்' என்று தெரிவித்தார். 28 வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை எனப்படும் திருச்செங்கோடு முதல் பாராளுமன்ற உறுப்பினர், 1,000 பள்ளிகளை திறந்த கல்வியாளர், 36 முறை தேர்தலைச் சந்தித்தவர், ஜமீன்தார் என்றாலும், தனது சொத்துகளை மக்களுக்காக செலவிட்டவர…

    • 3 replies
    • 828 views
  24. `என் கதையை முடித்துவிட முடியும் என நினைக்கிறீர்களா?' அதிரடிக்கும் மம்தா; மே.வங்கத்தில் நடப்பது என்ன? வருண்.நா மம்தா பானர்ஜி ``மத்திய அரசுப் பணியிலிருக்கும் மேற்கு வங்கப் பிரிவு அதிகாரிகளை, என்னாலும் மாநிலப் பணிகளுக்கு அழைத்துக் கொள்ள முடியும். இப்படியா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நடத்துவது? அவர்கள் என்ன கொத்தடிமை பணியாளர்களா?'' - அதிரடி காட்டும் மம்தா... மே. வங்க அரசியலில் நடப்பது என்ன? மேற்கு வங்க முதல்வராக மூன்றாவது முறையாக மம்தா பதவியேற்றதிலிருந்தே பரபரப்பாக இயங்கி வருகிறது மேற்கு வங்க அரசியல் களம். பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா கலந்து கொள்ளாதது, தலைமைச் செயலாளரை மத்திய அரசு பணிமாற்றம் செய்தது என தற்போது உச்சக்கட்ட பரபரப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.