Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அசாம் மற்றும் புதுச்சேரி பா.ஜ.க. வசமானது! இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குகள் எண்ணும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன்படி, தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அசாம் மாநிலத்திலும் யூனீயன் பிரதேசமான புதுச்சேரியிலும் பா.ஜ.க.வுடனான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இதன்படி, அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்குமான இறுதி முடிவுகளின்படி பா.ஜ.க. கூட்டணி 75 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களையும் ஏனைய கட்சிகள் இரு இடங்களையும் கைப்பற்றுகின்றன. அத்துடன், புதுச்சே…

  2. நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்: ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து செய்திப்பிரிவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 149 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 84 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ …

  3. `தமிழக மக்களுக்கு நன்றி!’ - ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மாலை 5.45 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 156 இடங்களில் முன்னிலையில் இருந்தது. திமுக தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்ற நிலையில், காவல்துறை உயரதிகாரிகள், நேரடியாக ஸ்டாலின் வீட்டுக்கு சென்று வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். பிரபலங்கள் ட்விட்டர் மூலமும் தங்களைன் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஸ்டாலின் அதில், ``மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் நம்மை எல்லாம் உருவாக்கிய பேரறிஞர் அண்ணா! 'ஜனநாயகத்தில் …

  4. திமுகவின் பொற்கால ஆட்சியில் வெற்றிகள் தொடரட்டும்; புதிய வரலாறு படைக்கட்டும்: ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து செய்திப்பிரிவு வைகோ - மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 153 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 80 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் …

  5. ஸ்டெர்லைட் ஆலை திறப்பு : சிறப்பு அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. இதில் மாவட்ட கண்காணிப்பாளர்கள், மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1213624

  6. முன்னிலை திமுக - 17 அதிமுக -12 Tamil News - News in Tamil - Tamil News Live - தமிழ் செய்திகள் - Vikatan முன்னிலை திமுக - 18 அதிமுக -12 Tamil News - News in Tamil - Tamil News Live - தமிழ் செய்திகள் - Vikatan

  7. தமிழகத்தில் 234 தொகுதிகள், ஒரு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை; 75 மையங்களில் தொடங்கியது: 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு சென்னை தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணியில் 35,836 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தமிழகத்தில் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 8 மண…

  8. தமிழகத்தின் மூன்றாவது சக்தி யார்? மின்னம்பலம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, நாளை மே 2 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியான எக்சிட் போல் முடிவுகளில் பல திமுகவே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன. யார் ஆட்சியைப் பிடிப்பது என்பது மட்டுமல்ல, பல்வேறு காரணிகளை முன் வைத்து வெவ்வேறு விதமான பகுப்பாய்வுகளையும் இந்த எக்சிட் போல் முடிவுகளில் நிகழ்த்தியுள்ளனர். எந்தக் கட்சி முதலிடம் என்பது மட்டுமல்ல... இரண்டாம் இடம் பெறும் கட்சி எது? தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது இடத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் கட்சி எது என்பது பற்றியெல்லாம் எக்சிட் போல் முடிவுகளில் விவாதங்களை நிகழ்த்தி வருக…

  9. கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் நோக்கி படையெடுக்கும் வட இந்திய கோடீஸ்வரர்கள்! இந்தியாவில் நீங்கள் கோடீஸ்வரராக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு கொரோனா நோயாளியாக இருந்தாலும் பணம் உங்கள் உயிரைக் காப்பாற்றாது. என்பதை கொரோனா மரணங்கள் அனுபவ பாடமாகச் சொல்கின்றன. சிலிண்டருடன் கூடிய ஒரு படுக்கைக்காக கொரோனா நோயாளிகள் அலைபாய்கிறார்கள். இந்தியா முழுக்க கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. ஒரே நாளில் 3,86,452 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. 3,523 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்…

  10. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளன. சில மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என பல்வேறு முறைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக கேரளாவில் கடந்த செவ்வாய் கிழமை முதல் அரசு மற்றும் தனியார் மதுபானக்கடைகள் மூடப்பட்டது. இதனால் கடந்த புதன்கிழமை முதல் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய பக…

  11. கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம்: தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள் வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பின்னரே வெளியே வரவேண்டும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. பதிவு: ஏப்ரல் 30, 2021 16:13 PM சென்னை, வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பின்னரே வெளியே வரவேண்டும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் முடிவு…

  12. மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தலாக இது இருக்கிறது. அதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 5 முனை போட்டியாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் , அதிமுகவின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி, திமுகவின் சார்பில் மு.க.ஸ்டாலினும் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு தேர்தலை சந்தித்தனர்.டி.டி.வி தினகரன், ( அமமுக ) சீமான், ( நாம் தமிழர் கட்சி) கமல்ஹாசன் ( மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்டோர் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டு களமிறங்கினர். அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தமாக உட்பட மொத்தம் 10 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்திருக்கின்றன. திமுக-காங்கிரஸ் தலைமையிலா…

  13. அமைச்சரவை பட்டியல்: ஸ்டாலினுக்கு துரைமுருகன் சொன்ன குத்தல் பதில்! மின்னம்பலம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதிக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இந்த நிலையில் திமுகவின் வெவ்வேறு தளங்களில் அமைச்சரவை பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. கொடைக்கானலில் சில நாட்கள் குடும்பத்தோடு ஓய்வெடுத்த திமுக தலைவர் ஸ்டாலின், அடுத்த அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவது என்பது பற்றி தனது மாப்பிள்ளை சபரீசனுடன் பேசி முடிவுசெய்து, தனது கைப்பட வெள்ளைத்தாளில் எழுதி வைத்திருக்கிறார் என்று திமுகவின் உயர் வட்டாரங்களில் தகவல்கள் கசிகின்றன. அந்த வெள்ளைத்தாளில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறியவும், அப்படி இடம்பெறவில்லை எ…

    • 18 replies
    • 1.4k views
  14. தமிழகத்தில் இன்று முதல் அனைத்து திரையரங்கங்களுக்கு பூட்டு தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையால் அனைத்து திரையரங்கங்களை பூட்ட அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் அனைத்து திரையரங்கங்களும் மூடப்பட்டன. மறு அறிவித்தல் வரும் வரை திரையரங்கங்களைத் திறக் கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் திரைக்கு வர உள்ள புதிய படங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. Thinakkural.lk <p>தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையால் அனைத்து திரையரங்கங்களை பூட்ட அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் அனைத்து திரையரங்கங்களும் மூடப்பட்டன. ம…

  15. சசிகலாவை மிரட்டி அரசியலில் இருந்து விலகவைத்த டெல்லி - அம்பலமான அமலாக்கத்துறை ரகசியம்! மின்னம்பலம் பெங்களூரு சிறையில் இருந்தும், கொரோனாவில் இருந்தும் விடுதலையாகி சென்னைக்கு வரும் வழியில், “நான் தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறேன்” என்று அறிவித்தார் சசிகலா. ஆனால் கடந்த மார்ச் 3ஆம் தேதி இரவு, திடீரென, ஒரு வெள்ளை பேப்பரில் வெளியிட்ட அறிக்கையில், “அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போகிறேன்” என்று தெரிவித்தார். இது அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போதே மார்ச் 4ஆம் தேதி மின்னம்பலம் இணைய இதழில், பினாமி சட்டம்: மிரட்டலுக்குப் பணிந்தாரா சசிகலா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் ஒரு வாரமே இருக்கும் …

    • 3 replies
    • 695 views
  16. ஸ்டெர்லைட்டுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி! மின்னம்பலம் நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க, மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் ஆக்ஸிஜன் பிளான்ட்டில் ஆக்ஸிஜன் நான்கு மாதங்களுக்கு தயாரித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தனக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு இன்று (ஏப்ரல் 26) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், அதற்கு முன்னதாகவே காலை 9.30 மணிவாக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இக்கூட்டத்தி…

  17. மீண்டும் வீதிக்கு வந்து சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை! ய்திகள் சீமானை தொடர்ந்து தற்போது ஹரி நாடாரை பஞ்சாயத்தில் இழுத்துவிட்டுள்ளார் நடிகை விஜயலக்ஷ்மி. கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் வலம் வருபவர் ஹரி நாடார். நகைகளுடன் ஆபரண அணிகலன்களாலேயே மிகவும் பிரபலமானவர். இவர் ‘பனங்காட்டுப் படை’ எனும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தவர். சமீபத்தில் கூட இவர் விமான நிலையம் சென்ற போது வருமான வரித்துறையினர் வளைத்து பிடித்து நகைகள் குறித்து விசாரித்த போது 1 கோடியே 52 லட்ச ரூபாய்யை முன்கூட்டியே கட்டி மிரளவைத்தார் ஹரி நாடார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல தற்ப…

    • 0 replies
    • 789 views
  18. விரைவில் தமிழகம் முழுதும் முழு ஊரடங்கு: அதிகாரிகள் குறித்த கெடு! மின்னம்பலம் தமிழகத்தில் முதல் கட்ட கொரோனா பரவலை விட, இரண்டாம் கட்ட கொரோனா பரவல் மிக அதிகமாக இருக்கிறது. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தொடர்ந்து அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் 2020 கொரோனா பரவல் வேகத்தையும், இப்போதைய 2021 கொரோனா பரவல் வேகத்தையும் ஒப்பிட்டு அதற்கேற்ற மாதிரி உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது பற்றியும் விவாதித்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முதன் முதலாக கடந்த 2020 மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதற்கு முன் மார்ச் 22 ஆம…

  19. இன்று 23.04.2021 வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.) தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஊர்வலம் தொடர்பாக ஆவணங்களோ, ஆதாரங்களோ தன்னிடம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த், ஒருநபர் ஆணையத்திடம் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரச…

  20. உ.பி., பீகார் போலவே ஒரு காலத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த தமிழ்நாடு, மருத்துவக் கட்டமைப்பில் இன்று தலைசிறந்து விளங்குகிறது. இதற்கு என்ன காரணம்? கொரோனா 2-வது அலை இந்தியாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏராளமான மரணங்கள் நிகழ்ந்து, 24 மணி நேரமும் இடுகாட்டில் சடங்கள் எரிகின்றன. அங்குள்ள மருத்துவமனைகளில் ஒரு படுக்கையில் இரண்டு மூன்று நோயாளிகள் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு பரிதாபமாகப் படுத்திருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் தினந்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் கொரோனா நோயாளிகளுடன் சாலையோரம் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருப்பதைப் ப…

  21. நாளை முழு ஊரடங்கு: சிந்தாதிரிப்பேட்டை- காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் மீன் மார்க்கெட்டுகளில் திரள்வது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க சமூக இடைவெளி இல்லாமல் திரண்ட பொது மக்கள். சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகி…

  22. இன்று இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் வெளியில் செல்ல தடை! மின்னம்பலம் இன்று (ஏப்ரல் 24) இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை (ஏப்ரல் 26) அதிகாலை 4 மணி வரை வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 30 மணி நேரம் தொடர்ச்சியாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கவேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 20ஆம் தேதி முதல் தினமும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின்போது அவசர தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள…

  23. சேலம்: நீண்ட போராட்டம்; முதல் முறையாக திருமலைகிரி கோயிலுக்குள் நடந்த பட்டியல் சமூக திருமணம் வீ கே.ரமேஷ்எம்.விஜயகுமார் கோயிலுக்குள் திருமணம் ( எம். விஜயகுமார் ) சேலம் திருமலைகிரி கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சாமி வழிபாடு செய்ய முடியாத நிலையில் இருந்து, தற்போது கோயிலுக்குள் திருமணம் நடைபெற்றது வரலாற்று சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது. மிகுந்த சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, முதல் தலைமுறையாக பட்டியல் சமூக மக்கள் சேலம் திருமலைகிரி ஈஸ்வரன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதோடு, முதல்முறையாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஜோடிக்கு அந்த கோயிலில் திருமணமும் நடந்திருப்பது, அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. …

  24. தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்! தமிழகத்தில் மே மாதம் முதலாம் திகதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே மாதம் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில், மே மாதம் முதலாம் திகதி முதல் தடுப்பூசியை வழங்குவதற்காக இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் அனைத்து தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள் என அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/…

  25. மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளது – கமல்ஹாசன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மையங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாகி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையின் அருகில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மடிக்கனணிகள் மற்றும் மர்ம நபர்களின் நடமாட்டமும் அதிகமாகவுள்ளது. இத்தகைய சம்பவங்கள் தேர்தல் விதி மீறல் மட்டுமல்ல. ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை. மின்னணு வாக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.