Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கையில் இருந்து, படகு மூலம் ராமேஸ்வரத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த துருக்கி நாட்டவர் கைது!இலங்கையில் இருந்து உரிய ஆவணங்களின்றி, படகு மூலம் ராமேஸ்வரம் வந்த துருக்கி நாட்டை சேர்ந்தவரை உளவு பிரிவு போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரத்தில் உள்ள சேரன்கோட்டையில் அமைந்துள்ளது கடற்படை முகாம். அந்த பகுதியில் கடற்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பைபர் படகில் அங்கு சுற்றித் திரிந்த வெளிநாட்டவர் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில், அவர் துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவரீம் என்பதும், கஜகஸ்தான், மலேசியா ஆகிய நாடுகளில் வசித்துவந்த அவர், கடைசியாக இலங்கை வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. …

  2. இந்திய அரசியல் சாம்ராஜ்யத்தில் கால் பதிக்க, கல்வி அடிப்படைத் தகுதி அல்ல. பாமர மக்களின் பிரதிநிதிகள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதால்தான் இந்திய அரசியல் அமைப்பு, கல்வித் தகுதியைக் கட்டாயமாக்கவில்லை. சாதனை படைத்த பெருந்தலைவர்கள் பலர் படிக்காத மேதைகளாக இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் அரசியல் சாதனைகளைத் திரும்பிப் பார்க்கும் முயற்சி இது. கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும் எனும் கொள்கையோடு தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர்; ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் காமராஜர். காமராஜரின் சிறுபிராயத்திலேயே அவர் தந்தை இறந்துபோனார். இதனால் ஆறாம் வகுப்போடு காமராஜரின் பள்ளி…

    • 2 replies
    • 341 views
  3. 25 ஏப்ரல் 2013 காஞ்சிபுரத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், திமுகவினர் தோல்விகளைக் கண்டு துவண்டு போவதில்லை என்றும், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சனையை மனதில் கொண்டு வரும் தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறினார். அவ்விழாவில் அவர் பேசியதாவது, சீர்திருத்த திருமணங்கள் என்றால் 1967க்கு முன்னர் கேளியாகவும், கிண்டலாகும் பார்த்தனர். அத்திருமணங்களுக்கு அங்கீகாரமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அறிஞர் அண்ணா சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். திமுகவைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் அமைச்சர்களாக முடியும், எம்.பி, எம்.எல்.ஏக…

  4. சென்னை: இந்த ஆட்சியை பாராட்டிக் கொண்டு வந்த பழ நெடுமாறன், முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு, மற்றும் கைதுக்குப் பிறகு திட்ட ஆரம்பித்துள்ளார். தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது, என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கையின் ஒரு பகுதி: கேள்வி: முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்ட சம்பவத்தினையொட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நெடுமாறன் உட்பட சுமார் 80 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்களே, அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று "டெசோ" சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லையே? கலைஞர்: 'டெசோ' சார்பில் நாங்கள் அப்படியொரு தீர்மானத்தை நிறை…

  5. இரவு முழுக்க, என் தொலைபேசி அடித்துக்கொண்டே.... இருக்கிறது. - தமிழிசை குமுறல். இரவு முழுக்க தனது தொலைபேசி அடித்துகொண்டே இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மெர்சல் படத்திற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இதையடுத்து அவரை சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக கிண்டலடித்து மீம்ஸ்களை வெளியிட்டனர். இதேபோல் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச் ராஜா உள்ளிட்டோரையும் கடுமையாக விமர்சித்திருந்தனர். தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் விக்கிப்பீடியா பக்கத்திலும் கைவைத்து சிலர் வேலையை காட்டியுள்ளனர்.இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்வது கருத்துரிமை …

  6. 1 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் திண்டுக்கல் அருகே தமிழ்நாடு அரசு அதிகாரி ஒருவரிடம் ரூ 20 லட்சம் லஞ்சம் பெற்றபோது, கையும் களவுமாகப் பிடிபட்ட அமலாக்கத்ததுறை அதுிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி, கடந்த நான்கு மாதங்களாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும், அதற்கு முன் நாக்பூரில் பணியற்றி வந்ததும் தமிழ்நாடு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில், அங்கீத் திவாரி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு, அவ…

  7. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்தால் மொட்டை அடித்து கொள்கிறேன் என மாற்று கட்சி நண்பர்களிடம் சவால் விட்ட அக்கட்சியின் நிர்வாகி, அண்ணாமலை தோல்வியடைந்ததையடுத்து மொட்டையடித்து கொண்டு பஜாரில் வலம் வந்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உடன்குடி ஒன்றிய பாஜ மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு செயலாளராக ஜெயசங்கர் என்பவர் இருந்து வருகிறார். இவர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என அப்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதிமுக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள், அப்படி வெற்றி பெறவில்லையென்றால்…

  8. ஆட்சி அமைக்க அதிர்ஷ்டம் தேடி வருகிறது கதவை மூடி திருப்பி அனுப்புகிறார் ஸ்டாலின்? ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு அணிகளாக உடைந்துள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றும் வியூகத்தை அமைக்காமல், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் இழுத்தடிக்கிறார்' என, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குமுறுகின்றனர். இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:சட்டசபையில், கூட்டணி பலத்துடன், தி.மு.க., வுக்கு, 98 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க, 18 எம்.எல். ஏ.,க்களின் ஆதரவு தான் தேவை. இதை மனதில் வைத்து தி.மு.க.,வினர் செயல்பட வேண்டும் என, தன், 93வது பிறந்த நாள் விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். ஆதரவு தர மாட்டோம் மக்களுக்கு விரோதமான ஆட்சியாக, அ.தி…

  9. திராவிடம் என்ற சொல் தமிழர்களை திட்டமிட்டு அழிக்க உருவாக்கப்பட்ட சொல் (தங்கபச்சான்)

  10. மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தங்கையை மீட்ட அக்காவுக்கு குவியும் பாராட்டு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UGC தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை அதன் அக்காவே காப்பாற்றிய சம்பவம் பலருக்கும் நிம்மதியைக் கொடுத்துள்ளதோடு, அந்த அக்காவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறக்கும் சோகம் அவ்வப்போது நடக்கிறது. விழுந்த குழந்தைகளை மீட்பதற்கு அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் பல மணி நேர பெரு முயற்சிகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுவோர் அதனை உரிய முறையில் மூடாமல் செல்வதற்கு தண்டனை விதிக்கவே…

  11. சென்னையில் ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாகச் செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காகக் காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக்கொள்ள வேண்டும். ராஜீவ் காந்தி ``ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள்தான்” என்று நாம் தமிழர் தலைவர் சீமான் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமான் மீது ஒருபுறம் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்து வரும் நிலையில், விடுதலைப்புலிகளே இந்த விவகாரத்தில் அமைதிகாக்கும்போது, எதற்காக சீமான் இப்படி கருத்து சொன்னார் என்று தமிழீழ ஆதரவாளர்களும் கொந்தளித்து வருகிறார்கள். சீமான் தேர்தல் ந…

  12. ஐந்தாண்டுகளுக்கு முன் சசிகலாவுக்கு ஜெயலலிதா ‘குட் பை’ சொன்ன நாள் இன்று! அன்று என்ன நடந்தது? தமிழக அரசியலில் 'அம்மா' என்ற வார்த்தை மெல்ல மெல்ல மறைந்து 'சின்னம்மா' என்ற வார்த்தை அதிகளவில் உச்சரிக்கப்பட்டு வரும் காலகட்டம் இது. 'அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும். தமிழக முதல்வராகவும் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்' என சசிகலாவிடம் அ.தி.மு.க. நிர்வாகிகள் கெஞ்சி வரும் காட்சிகளால் தமிழக அரசியல் பரபரத்துக்கிடக்கிறது. சசிகலா எப்படி இந்த உயரத்துக்கு வந்தார் என்பது புரியாமல் பலரும் திகைத்து நிற்கிறார்கள். 'தாய் தந்த வரம்' என்றும் ஜெயலலிதா தந்து விட்டு சென்ற வாரிசு என்றும் அடையாளம் காட்டப்பட்டு வருகிறார் சசிகலா. இன்று கட்சியையும், ஆட்சியையும…

  13. திருச்சி காவிரி ஆற்றை மையமாகக் கொண்டு தமிழகத்தை இரண்டாகப் பிரித்து சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வட தமிழகம் என்றும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் என்றும் தமிழ்நாட்டைப் பிரிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பரசு கூறியுள்ளார். இதே போலத்தான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், மூமுக தலைவர் டாக்டர் சேதுராமனும் ஏற்கனவே கூறி வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம். தெலுங்கானா பிறப்பதைத் தொடர்ந்து தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் இதுகுறித்து இதுவரை முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக போன்றவை கருத்து தெரிவித்ததில்லை. இந்த நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒரு…

  14. இலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம் இலங்கையில் கடந்த 1983 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் ஒரு இலட்சத்தி இரண்டாயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஆனால் மண்டபம் முகாமில் மட்டும் தற்போது 533 குடும்பங்களில் மொத்தம் 1,673 பேர் வசித்து வருகின்றனர். மண்டபம் முகாமில் வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக உதவித்தொகை வழங்கப்படாததால் குழந்தைகள் முதியவர்கள் உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு கடும் அவதியுற்று வருகி…

  15. துணை முதல்வருக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம் – மத்திய அரசு! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி முக்கிய தலைவர்களுக்கு இசட் பிளஸ், இசட், எக்ஸ், வை ஆகிய பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலை வர், பிரதமர், நீதிபதிகள், மத்திய அமைச்சர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள தனி நபர்களுக்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், டெல்லி பொலிஸார் அல்லது இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ்…

  16. கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான மதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது)30 ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருக்கிறார். 1992, ஜூன் மாதம் 20ம்தேதி தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ளது. அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 பெண்களில் ஒருவர்தான் மதி. சென்னையில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தர்மபுரி மாவட்டம் சித்தேரி மலையடிவாரத்தில் அமைந்து…

  17. தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பதிவு: ஜூலை 02, 2020 15:36 PM தூத்துக்குடி, தூத்துக்குடி செக்காரக்குடி பகுதியில் இன்று கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்தபோது தொட்டிக்குள் இருந்து விஷ வாயு வெளிப்பட்டது. இதனை சுவாசித்த தொழிலாளர்கள் 4 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்த…

  18. ராஜீவ் காந்தி கொலை: தண்டனைக் கைதிகளின் விடுதலையில் புதிய சிக்கல் MAR 05, 2016 | தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரை விடுவிக்கும் தமிழ்நாடு மாநில அரசின் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும்முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான அனுமதி கேட்டு, இந்திய மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் இந்தியமத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தால், அது ரா…

  19. சென்னை: முதல் வரிசையில் இடம் தராததால் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் புறக்கணித்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதான கட்சியான தே.மு.தி.க. 14 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும் தனது கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியாவது பெற்று விட வேண்டும் என்று விஜயகாந்த் டெல்லி சென்றார். மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டதும் அவருக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்தார். மோடியும் வாழ்த்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, மனைவியுடன் சிறந்த முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி பாராட்டினார். மோடியின் பாராட்டை வைத்து தே.மு.தி.க.வுக்கு ஒரு அமைச்சர் பதவி அல்லது மாநிலங்…

  20. சிறார் இல்லத்தில் சிறுவன் இறப்புக்கு அதிகாரிகளின் 'அட்மிசன் அடி' காரணமா? - அதிர்ச்சி தகவல்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் (எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விவரங்கள் உங்களை மனரீதியாக சிரமப்படுத்தலாம்.) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் கடந்த டிசம்பர் மாதம் சிறுவன் கொலையானதாகச் சொல்லப்படும் சம்பவத்தை அடுத்து, அந்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறார்களின் பா…

  21. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் இருந்து வெளியில் வந்த நாம் தமிழர் கட்சி அய்யநாதன் உள்பட 13 மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் முக்கிய நிர்வாகிகள் இன்று அய்யா பழ நெடுமாறன் அய்யாவின் தமிழர் தேசிய முன்னணியோடு இணைந்து கொண்டனர். இவ் நிகழ்வு தஞ்சை முள்ளிவாய்க்கள் முற்றத்தில் நடை பெற்றது. http://www.pathivu.com/news/39564/85//d,article_full.aspx

  22. தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது- பிரதமர் மோடிக்கு, வைகோ கடிதம் 63 Views தெற்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு, தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சீனச் சார்பு மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம், தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடிக்கு வைகோ எழுதிய கடிதத்தில், “தெற்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு, தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது. அ…

  23. சென்னை: தேமுதிகவில் விஜயகாந்துக்கு அடுத்த நிலையில் இருக்கக் கூடிய மூத்த தலைவர் அக்கட்சியை விட்டு விலகி முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் தேமுதிகவின் 29 எம்.எல்.ஏக்களில் 6 பேர் ஏற்கெனவே அதிமுக ஆதரவு அணிக்குப் போய்விட்டனர். மதுரை மத்திய தொகுதி சுந்தர்ராஜ், திட்டக்குடி தமிழழகன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், பேராவூரணி அருண்பாண்டியன், செங்கம் தொகுதி சுரேஷ்குமார், சேந்தமங்கலம் சாந்தி, விருதுநகர் மா.ஃபா பாண்டியராஜன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பகிரங்கமாக விஜயகாந்தை விமர்சிக்கவும் செய்தனர். இந் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு அடுத்த இடத்தில் உள்ளவரும் அரசியலில் பழுத்த பழமாக இருப்பவரும் கூட விரைவில் ஜெயலலித…

  24. கருணாநிதியுடன் மு.க அழகிரி திடீர் சந்திப்பு: மீண்டும் கண்கள் பனிக்குமா... இதயம் இனிக்குமா? சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை மு.க அழகிரி இன்று திடீரென சந்தித்து பேசினார். இது, தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் அழகிரி பிறந்த நாளுக்கு அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் தி.மு.க.வில் சலசப்பை ஏற்படுத்தியது அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் மற்றும் பேட்டிகளை தொடர்ந்து தி.மு.க. தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை, அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார். கட்சிக்கு எதிராக துரோக செயல்களில…

  25. சென்னையில் அதிமுக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை..! சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிமுக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதிமுகவில் இரு அணிகளும் இணைவதற்கான இனக்கமான சுழல் உருவாகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஐ.என்.எஸ் போர்க் கப்பலை பார்க்க வருமாறு எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, தற்போது அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.