Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டனில் வசித்து வரும் புஷ்பம் பிரியா சௌத்ரி என்ற பெண், பீகாரின் புதிய முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவித்து பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளார். பீகார் மாநிலத்தில் தற்போது ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகச் செயல்பட்டு வருகிறார். இந்த வருடம் அக்டோபர் மாதம் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல் அங்கு எதிர்க்கட்சியாக உள்ள தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. பீகார் என்றால…

  2. பிற மதத்தவர்களை கட்டாய மத மாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமானது - இம்ரான் கான் மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அதாவது பிற மதத்தவர்களை கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் மதவழிபாட்டு தலங்கள் பாதுகாக்கப்படும். தங்கள் விழாக்களை, பண்டிகைகளை எவ்வித இடையூறும் இன்றி கொண்டாடி மகிழும் வகையில் அவர்…

    • 2 replies
    • 817 views
  3. பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் 629 பேர் திருமணத்திற்காக சீனர்களுக்கு விற்கப்பட்டுள்ளதும், அவர்கள் சீனாவுக்கு அழைத்து செல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 2018 முதல் இவ்வாறு பாகிஸ்தான் பெண்கள் கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. ஆனால், அதிகாரிகளின் விசாரணைக்கு பாதியிலேயே தடை விதிக்கப்பட்டது. சீனாவுடனான உறவு பாதிக்கப்படும் என்பதால், திருமணத்திற்காக பெண்கள் விற்கப்படும் விஷயத்தை விசாரிப்பதற்கு உயரதிகாரிகள் தடை விதித்தனர். இதனால், அக்டோபர் மாதம், பெண்கள் விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 31 சீனர்களை பாகிஸ்தான் கோர்ட் விடுதலை செய்தது. இந்த வழக்கில், தொடர்புடைய பெண்களுக்கு மிரட்டல் விடப்பட்டன. சிலருக்கு பணம் கொ…

  4. மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி. மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி நிகழ்ச்சியில் நிகழ்ந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக திகழும் இந்தியா, தமக்காக மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் சிந்திப்பதாக கூறினார். மேலும் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு நாட்டின் பழமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் தீர்வு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/…

      • Thanks
      • Like
      • Haha
    • 9 replies
    • 816 views
  5. படத்தின் காப்புரிமை Getty Images தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் விஞ்யான் பவனில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தார். ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

  6. பாகிஸ்தானின் ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா – ஆயுதங்களும் மீட்பு! பாகிஸ்தானினுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் கதுவா அருகே இன்று (20) காலை 5.10 மணிக்கு பறந்த போது சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் இருந்து சுமார் 250 மீற்றர் தொலைவில் குறித்த விமானம் பறந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். பலவிதமான ஆயுதங்களை தாங்கிய இந்த விமானத்தில் இருத்து M4-கார்பின் மெசின் துப்பாக்கி, M4-தோட்டாக்கள் இரண்டு, 5.56-எம்எம் வகை தோட்டாக்கள் 60, கைக் குண்டுகள் 7 என்பன மீட்கப்பட்டுள்ளன. …

  7. எனது பாட்டி மற்றும் தந்தையை வன்முறையில் இழந்தவன் நான்: ராகுல்காந்தி ‘எனது பாட்டி மற்றும் தந்தையை வன்முறையில் இழந்தவன் நான், எனவே வன்முறையினால் தனிப்பட்ட முறையில் நான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன். இதில் இருந்து மீண்டு வர எனக்கு கிடைத்த ஒரே வழி தவறு செய்தவர்களை மன்னிப்பது தான்’ என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஜேர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், நேற்று (புதன்கிழமை) ஜேர்மனியை சென்றடைந்தார். அங்கு ஹம்பர்க் நகரில் இடம்பெற்ற கலந்துரையாடல் கூட்டமொன்றில் பங்கேற்று பேசிய ராகுல் மேற்படி தெரிவித்திருந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குற்றவாளிகளான பே…

  8. படத்தின் காப்புரிமை Getty Images இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தாவார் சந்த் கேலாட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். முன்னேறிய வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. …

  9. `1,200 கி.மீ; 7 நாள் சைக்கிள் பயணம்!’ - காயம்பட்ட தந்தையை சொந்த ஊரில் கொண்டுசேர்த்த 15 வயதுச் சிறுமி காயம்பட்ட தனது தந்தையை சைக்கிளில் அமர்த்தி சுமார் 1,200 கி.மீ தூரம் பயணித்து 15 வயதுச் சிறுமி ஒருவர் சொந்த ஊரை அடைந்திருக்கிறார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தற்போது நான்காவது கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வருமானம் ஏதுமின்றித் தினக்கூலி, புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலையில், தங்களைச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட…

  10. வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்குதல், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு நிதியுதவி, மாநில போக்குவரத்து கழகத்தை அரசே ஏற்று நடத்தும், விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.12,500, சுகாதாரத்துறை ஆஷா பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்டவை ஆகும். நாட்டிலேயே முதல் முறையாக 5 துணை முதலமைச்சர்களை நியமித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இந்த சூழலில் ஆந்திர மாநில போலீசாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி ஜெகன்மோகன் ரெட்டி அசத்தி உள்ளார். இனி தலைமைக் காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைத்து காவலர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன்மூலம் 19 மாடல் விடுமுறை முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள…

    • 0 replies
    • 813 views
  11. நமது விமானத்தை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு – பதாரியா நமது ஹெலிகொப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு என விமானப்படை தளபதி ரகேஷ் சிங் பதாரியா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி பதான்கோட் தாக்குதலுக்குப் பின் நமது விமானப்படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். அப்போது வானில் பறந்த நமது எம்ஐ-17 ரக விமானம் நம்முடைய ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 6 விமானப்படை வீரர்களும் உயிரிழந்தனர். நமது ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவ…

  12. நாயிறைச்சியைத் தடை செய்தது நாகலாந்து அரசு! விலங்குரிமைச் செயற்பாட்டாளார் பெருமிதம் இந்திய மாநிலங்களில் ஒன்றான நாகலாந்து, நாய் இறைச்சி இறக்குமதி, விற்பனை ஆகியவற்றைத் தடைசெய்துள்ளது. விலங்குரிமைச் செயற்ப்ட்டாளர்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக நாகலாந்து மாநில அரசு இம் முடிவை எடுத்துள்ளது. இது ஒரு முக்கியமான திருப்புமுனை என செயற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ஆனாலும் இது மாநிலத்தின் உணவுக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என சில குடிமைச் சமூகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவின் பல மாநிலங்களில் நாய் இறைச்சி உண்பது சட்டவிரோதமானது. எனினும், சில வட கிழக்கு பிரதேசங்களில் அது ஒரு சுவையான உணவெனக் கருதப்படுகிறது. “வர்த்தக நோக்கங்களுக்காக நாயிறை…

    • 1 reply
    • 809 views
  13. இந்தியாவுக்கு சொந்தமான நீர் பாகிஸ்தானுக்கு 70 வருஷமாக போகுது.. அதை மோடியாகிய நானே தடுப்பேன்.! டெல்லி: ஹரியானாவுக்கு வரவேண்டிய தண்ணீர் பாகிஸ்தானுக்கு போய்கொண்டிருக்கிறது அதை ஹரியானா மாநிலத்திற்கே மோடி ஆகிய நான் கொண்டுவருவேன் என ஹரியானா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 21-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்காக அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாஜக மற்றும் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஹரியானாவில் உள்ள சார்கி தாத்ரி எனும் இடத்தில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் …

  14. ஜம்மு காஷ்மீர் மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் (J&K Public Safety Act) அம்மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டிருப்பதற்கு மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி கண்டனம் தெரிவித்துள்ளது. ஃபரூக் அப்துல்லா மீது இந்த சட்டத்தை ஏவியிருப்பது, இந்திய அரசு அப்பட்டமாக சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதை காட்டுவதாக அம்னஸ்டி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் நடந்துவரும் மனித உரிமை மீறல் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இது நடந்துள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. "ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் வீட்டுச் சிறையில் உள்ள ஃபரூக் அப்துல்லா பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்ததாக அவரது கைது ஆணை குறிப்பிடுகிறது. மாற்றம் வரும் என்ற வாக்குறுதிக்கு மாற்றாக, அரசிய…

  15. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள 'பி.எம். நரேந்திர மோடி' எனும் திரைப்படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக இருந்த சூழலில் இந்தத் தடை உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கம் வகையில் 'பி.எம். நரேந்திர மோடி' எனும் திரைப்படத்தை சந்தீப் சிங் என்பவர் தயாரித்துள்ளார். ஓமங்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நரேந்திர மோடி பாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இப்படம் தேர்தல் நேரத்தில் திரைய…

  16. பெண் தலாய் லாமா இன்னொரு ஆச்சரியமான கருத்தாக, "புத்தசாலித்தனம் முக்கியமாக இருப்பதைபோல, பெண் தலாய் லாமாவுக்கு நல்ல அழகும் தேவை" என்று கூறி, தற்போதைய தலாய் லாமா கருத்தை மீண்டும் உறுதி செய்துள்ளார். சிரித்தவாறே பதிலளித்த தலாய் லாமா, "பெண் தலாய் லாமா வருவதாக வந்தால், அதிக அழகோடு இருக்க வேண்டும்" என்ற கூறினார். இந்த கருத்து, சகிப்புத்தன்மை மற்றும் தன்னம்பிக்கையை போதிக்கும் தலாய் லாமாவின் கருத்துகளுக்கு முரணானதாக தோன்றுகிறது. ஆனால், பௌத்த இலக்கியத்தில் உள் மற்றும் வெளி அழகு மிகவும் முக்கியமானது என்று தலாய் லாமா தெளிவாக்கியுள்ளார். சமத்துவம் முக்கியமானது என்று தெரிவித்த தலாய் லாமா, பெண்களின் உரிமைகளை வழங்குவதையும், பணியிடங்களில் பாகுபாடற்ற ஊதியம் வழங்குவதை…

  17. இலங்கைக்கு உதவிகள் தொடரும்.. அரசியல் நிகழ்வுகளை கவனிக்கிறோம்.. இந்தியா அதிரடி அறிக்கை டெல்லி: இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் தொடரும் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இந்த அதிரடி மாற்றத்துக்கு நிறைய காரணம் சொல்லப்பட்டது. இந்த மாற்றம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. பேசவில்லை அண்டை நாடான இலங்கையில் இத்தனை பிரச்சனைகள் நடக்கும் நிலையில் இந்தியா அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது. இந்திய அரசியல் தலைவர்கள் தனி தனியாக நிறைய …

  18. முகமது நபிக்கு எதிராக இந்திய அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய கருத்து : கட்டார், குவைத், ஈரான், சவுதி கடும் கண்டனம் முகமது நபிக்கு எதிராக இந்திய அரசியல்வாதிகளான பாஜக தலைவர்கள் நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கு அரபு நாடுகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன. இதனை தொடர்ந்து, குவைத், கட்டார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டன. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இந்த மூன்று நாடுகளிலும், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் ஆட்சேபனைக்கு வழிவகுத்தன. இந்த சர்ச்சை விவகாரத்தில் அரபு நாடுளுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. அரபு நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து, பாஜ…

  19. விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பங்கேற்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின் இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மே 14-ம் தேதி அந்த அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அதிகம் இருப்பதாகவும், அவர்கள் தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்திற்கு ஆதரவை பெருக்க முயற்சிப்பதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர்கள் செயல்படலாம் என்ற யூகத்தின் அடி…

    • 3 replies
    • 796 views
  20. இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. இந்தியா - மத்திய பிரதேசம் அருகே மொரேனாவில் விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் இவை. விபத்துக்கான காரணம் என்ன? விமானிகளின் நிலை என்ன? என்பது குறித்து தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அடர்ந்த பனிமூட்…

  21. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 39 நாளில் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்ததின் பின்னணி என்ன?மருத்துவ நிபுணர்கள் அம்பலம் இந்தியாவில் 39 நாளில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்ததின் பின்னணி என்ன என்பதை மருத்துவ நிபுணர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர். பதிவு: ஜூன் 28, 2020 07:20 AM புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி மாதம் வெளிப்படத்தொடங்கியது. ஆனால் இந்த மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் அசுர வேகம் எடுத்து மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. நேற்று தொடர்ந்து 4-வது நாளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தொற்று பாதித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 100 எ…

  22. ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் இன்று May 21, 2019 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூரப்படுகின்ற நிலையில் பல முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர் அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதேவேளை ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று 21ம்திகதி தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்…

  23. ஹரியானா மாநிலம் குருகிராமில் மாநில போக்குவரத்து போலீஸார் புதிய மோட்டார் வாகன சட்டப்படி, வாகன ஓட்டி ஒருவருக்கு 23,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த மாதத் தொடக்கத்திலிருந்து மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுக்க அமலுக்கு வந்துள்ளது. இச்சூழலில், புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று திங்கள்கிழமை காலை சுமார் ஒரு மணியளவில் ஓட்டுநர் உரிமமின்றி,…

  24. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்து ஏலத்துக்கு விடப்பட்டது ஷேகுபுரா மாவட்டத்திலுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சியொன்று தெரிவித்துள்ளது. பி.எம்.எல்-என் மேலாளர் நவாஸ் ஷெரீப்பின் அசையா சொத்துக்களை ஏலம் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு தேசிய நிர்வாக அமைப்பு (என்.ஏ.பி) தாக்கல் செய்திருந்த மனுவினை, நீதிமன்றம் அனுமதித்ததை அடுத்து, ஃபெரோஸ்வாட்டானில் 88.4 ஏக்கர் விவசாய நிலங்கள் ஏலத்திற்கு விடப்பட்டன. இதன்போது வர்த்தகர் முகமது போடா,ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 10.1 மில்லியன் ரூபாய் ஏலம் எடுத்தார். அதாவது ஷேகுபுரா மாநகராட்சியில், ஏலம் ஏக்…

  25. விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் - நெகிழ்ச்சி சம்பவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: 'விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்' சேலம் மாவட்ட ஓமலூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.