நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
எடை கூடிய சிறுவர் சிறுமியருக்கும் இருதய நோய் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.எடை அதிகமாகவுள்ள மூன்று வயது குழந்தைகளுக்கு கூட எதிர்காலத்தில் இருதய நோய் தாக்கம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். 16000 சிறுவர் சிறுமியரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அனேகமான எடை கூடிய குழந்தைகளுக்கு இருதயத்துடன் தொடர்புடை நோய்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த ஆய்வினை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இன்னமும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் மற்றுமொரு சாரார் கருத்து வெளியிட்டுள்ளனர். குழந்தைப் பருவம் முதல் ஆரோக்கியமான உடல் எடையைப் பேண வ…
-
- 1 reply
- 629 views
-
-
புதிய முறையின் மூலம் லுகேமியா நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடியுமென சுவிட்சர்லாந்து மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். குறிப்பாக லுகேமியா நோயினால் அவதியுறும் சிறுவர் சிறுமியருக்கு சிகிச்சை அளிக்கும் நவீன முறையொன்றை சுவிஸ் விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். வழமையான சிகிச்சை முறைமையின் மூலம் நன்மை அடையாத சிறுவர், சிறுமியர் இந்த நவீன முறையின் மூலம் நன்மை அடையக் கூடிய அதிக சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. லுகேமியா நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிப்பதில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த சிகிச்சை முறைமை குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 776 views
-
-
பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம். இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே. “மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை…
-
- 7 replies
- 1.8k views
-
-
புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும். …
-
- 16 replies
- 13.4k views
-
-
மதுரை வாசகர் ஒருவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ரத்த வங்கிப் பிரிவில், "டெக்னீஷியனா'க பணியாற்றுகிறார். இவரும், இவருடன் பணிபுரியும் சில நண்பர்களும், வித்தியாசமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அதன் முடிவையும் எனக்கு எழுதியுள்ளனர். ஆய்வு: ஒவ்வொருவருடைய ரத்த வகையின் அடிப்படையில் அவர்களுடைய செயல்பாடுகள், குணங்களை கண்டுபிடிப்பதுதான்! ஆய்வின் முடிவு இதுதான்: "ஏ' குரூப் ரத்தம் கொண்டவர்கள்: பிடிவாத குணம் அதிகமாக இருக்கும், காரியம் சாதிக்கத் தெரிந்தவர்கள். கோபம் காட்டத் தயங்கமாட்டார்கள், சென்டிமென்ட் பார்க்கக் கூடியவர்கள். வாக்குவாதம் பிடிக்காது. எங்கே, எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று இவர்களிடம் மற்றவர்கள் கேட்டுக் கொள்ளலாம், தலைக்கனம் அதிகம். 'பி'…
-
- 4 replies
- 4.8k views
-
-
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் வந்து விட்டது. கண்ணாடி கான்டாக்ட் லென்ஸ் லேசர் சிகிச்சை எதுவும் வேண்டாம். புதுமையான முறையில் தீர்வுகாண வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கண் ஆராய்ச்சி மையம் இந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. 551 இளைஞர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் தூரப்பார்வையால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களும் இயல்பானவர்களுக்கும் இடையே உள்ள டி.என்.ஏ. வேறுபாடுகளை ஆராய்ந்ததில் தூரப்பார்வைக்கான ஜீன்கள் இனம் காணப்பட்டன. இவற்றுக்கு ஹெபாடோசைட் குரோத் பேக்டர் (எச்.ஜி.எப்) என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதையடுத்து தூரப் பார்வைக்கு தீர்வு காண முடியும் என்று டாக…
-
- 0 replies
- 668 views
-
-
மன அழுத்தம் குறைய துணைவரை கட்டிபிடியுங்கள் வாழ்க்கையில் எப்போதும் டென்ஷனா? மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? சிகிச்சை பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா? கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்? ஆம்.. உங்கள் வாழ்க்கைத் துணையிடமே உள்ளது மருந்து. வாழ்க்கைத் துணையை அடிக்கடி கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜூரிச் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட் டிட்சன் தலைமையிலான குழுவினர் சுமார் 51 தம்பதிகளிடம் இது குறித்த ஆய்வை நடத்தினர். எப்படிப்பட்ட பணி அமைப்பை…
-
- 24 replies
- 3.5k views
-
-
உடற்பருமனைக் குறைக்க வழி உடற்பருமனைக் குறைக்க வழி உடல் எடையைக் குறைப்பதற்காக எடுத்த உணவுகளினால் எடைகுறையாமல் விரக்தியா? எல்லா முறைகளிலும் கொழுப்பு உண்பதைக் குறைத்தாலும் எடை இன்னும் போடுகிறதா? நீண்ட காலமாக உணவில் அதிகரித்த வெல்லம அல்லது மாச்சத்து மற்றும் உணவுகளை உண்டுவந்திருப்பதனால், தற்பொழுது உடலானது மாச்சத்து ஆக்கசிதைவுச்செயற்பாடுகளை செவ்வனே செய்ய முடியாது போய்விடுகிறது. அத்துடன் மேலதிக மாச்சத்து கொழுப்பாக உடலில்; குறிப்பாக உடலின் இடைப்பகுதியில் சேமிக்கப்படுகிறது. எமது உணவில் கொழுப்பினளவையும், அது தரும் சக்தியின் கலோரிக் அளவையும் கவனத்தில் கொள்ளும் நாம் எமக்குத் தெரியாமலே அதிகமாக வெல்லம் அல்லது மாச்சத்து உள்ளெடுத்துவிடுகின்றோம். பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் தற்பொ…
-
- 1 reply
- 1.6k views
-
-
இனிய நண்பர்களே !! இந்தத் திரியில், நோய்தீர்க்கும் அரிய யோகாசனங்கள் பற்றி இலகு தமிழில் என் அனுபவங்களையும் சேர்த்து எழுதலாம் என நினைக்கிறேன். யோகாசனங்கள் பயிலுவதற்கு வயது ஒரு தடையல்ல. இளையோர் முதல் முதியோர் வரை வீட்டில் தாங்களாகவே பயில முடியும். உடலையும் உள்ளத்தையும் அழகாக வைத்திருக்க பெரிதும் உதவுவது யோகாசனம். இந்நாளில், இது ஒரு நாகரீக, பணம் செய்யும் ஒரு கலையாக மேற்குலகத்தில் கருதப்பட்டாலும் கூட, ஆன்மீக முன்னேற்றத்திற்காக யோகிகளும் சித்தர்களும் கீழைத்தேயத்தில் இக்கலையை பயன்படுத்தினர். இருந்தபோதிலும், நோயற்ற வாழ்வை கருத்தில் கொண்டு நாமிதை பயிலலாம்.
-
- 19 replies
- 5.8k views
-
-
-
உலகம் முழுவதும் உள்ள மக்கள் இப்போது நீரிழிவு என்னும் மெல்ல கொல்லும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இதனை கட்டுப்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று மருத்துவர்கள் அல்லாடுவது தெரியும். எமது வாழ்க்கை முறை, உணவுப்பழக்கவழக்கங்கள், போதிய உடற்பயிற்சி இல்லாமை , மனஅழுத்தம் எனப்பல காரணங்கள் இந்த நோய் உருவாகுவதற்கான காரணங்களாக சொல்லப்படுகின்றன. எனினும் எமது உணவில் ஏற்பட்ட பெருமாற்றமே இந்த நோய்க்கான மிக பிரதான காரணமாக சொல்லப்படுகின்றது. இந்த ஆவணபடத்தில் எமது உணவு முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் எப்படி இந்த நோய் பூரண கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப்படுகிறது என்பதை பார்க்கலாம். நீரிழிவு நோய்க்கு தீர்வு -ஒரு ஆவணப்படம் thanks: myspace.com
-
- 3 replies
- 1.1k views
-
-
இப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா? ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோய் என்கிறீர்களா? பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்குபின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப்பார்த்திருப்பீர்கள். முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள்இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல்போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் ரத்த ஓட்டம் கடுமையாகபாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள்ஏற்படக்கூடும். நாள் பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏ…
-
- 1 reply
- 1.4k views
-
-
வளமைக்கு அடித்தளம் உயிரியல் பன்மயம். கம்பெனி விதைகள் திணிக்கப்பட்டால் உயிரியல் பன்மயம் அழியும். பச்சைப் புரட்சிக் காலத்தில் இப்படி நமது 30 ஆயிரம் நெல் வகைகள் அழிந்ததை யாரும் மறுப்பதற்கு இல்லை. இந்தியாவில் கத்தரி ரகங்களுக்கு பஞ்சமில்லை. 'வரகசிரிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்' என்று அவ்வை பிராட்டி குறிப்பிடுகிற வழுதுணங்காய் நமது கத்தரியே. கத்தரிக்காயின் இனங்களில் பன்மயம் இருப்பது போல அவை பயிரிடப்படும் இடங்களிலும் பயிரிடும் முறைகளிலும் வேறுபாடு நிலவுகிறது. எடுத்துக்காட்டாக நாகை மாவட்டத்தில் பொய்யூர் கத்தரிக்காய், திருச்செங்கோட்டில் பூனைத்தலை கத்தரிக்காய், வேலூரில் முள்ளு கத்தரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம்பாளையம் கத்தரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம்பார் கத்தரிக்காய் த…
-
- 1 reply
- 1.8k views
-
-
நூறு ஆண்டுகள் வாழ இனி ஒரு மாத்திரை நூறு ஆண்டுகள் வாழ இனி ஒரு மாத்திரை போதும் என்கின்றனர் அமெ ரிக்க விஞ்ஞானிகள். நோய்களைத் தடுக்கும் 3 ஜீன்களை பயன்படுத்தி அந்த மாத்திரை தயா ரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி நியூயார்க்கின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவ கல்லூரியில் வயது தொடர்பான ஆராய்ச்சி மையம் சார்பில் ஆராய்ச்சி நடந்தது. அந்த குழுவுக்கு விஞ்ஞானி நிர் பர்ஜிலய் தலைமை வகித்தார். அவர்களது கண்டுபிடிப்பின்படி மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கவும், நோய்களைத் தடுக்கவும் 3 ஜீன்கள் உதவுவது தெரிய வந்தது. அந்த மூன்றில் இரண்டு ஜீன்கள், உடலில் நல்ல கொலஸ்டிராலை உற்பத்தி செய்கின்றன. இது இதய நோய்கள், பக்கவாதம், மூளை செயல்திறன் மாறுபாடு (அல்சமீர்) ஆகியவற்றைத் தடுக்கிறது…
-
- 4 replies
- 799 views
-
-
கோபம் ஏன் ஏற்படுகின்றது? உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும் "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். கோபம் ஏன் ஏற்படுகின்றது? கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது. நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது... நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது... நாம் சொல்வது (தவறாக…
-
- 5 replies
- 3.7k views
-
-
கொலஸ்ட்ரோல் பற்றி சில தகவல்கள் உங்கள் கவனத்திற்கு http://www.youtube.com/watch?v=DdeMJiQ2NO4
-
- 2 replies
- 3.2k views
-
-
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ. 1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள். 2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற…
-
- 0 replies
- 589 views
-
-
நூறாண்டு காலம் வாழ்வது எப்படி நூறாண்டு காலம் வாழுவதற்குரிய மந்திரம் எது ? நீண்ட காலம் உடலை உயிருடன் வைத்திருக்க இரண்டு திசைகளே உள்ளன.. டேனிஸ் மக்களிடையே நூறாண்டு காலம் வாழ்வது எப்படியென்ற தேடல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசும் ஒவ்வொரு தேர்தலிலும் மூன்றாண்டு காலம் உங்கள் உயிர் வாழும் காலத்தை எமது ஆட்சி நீட்டிப்பு செய்யும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. 50 இலட்சம் குடித்தொகை கொண்ட டென்மார்க்கில் தற்போது 867 பேர் நூறு வயதையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 733 பேர் பெண்களாகும். டென்மார்க்கின் சராசரி இறப்பு வயது பெண்கள் 81 ஆகவும், ஆண்கள் 76 ஆகவும் உள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாழ்வதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, ஆனால் அனைத்திலுமே முக்…
-
- 7 replies
- 1.6k views
-
-
அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறு…
-
- 0 replies
- 4.4k views
-
-
பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள் பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும். சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறர…
-
- 0 replies
- 2.2k views
-
-
குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தூங்கும் போது ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் குறட்டை வருவது வழக்கம். குறட்டை அவரவர் உடல் வாகுக்கு தகுந்தபடி இருக்கும். உடல் பருமனானவர்களுக்கு பொதுவாக குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். ஒரு சிலர் விடும் குறட்டை சத்தத்தை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் தூங்க முடியாமல் வெளியில் செல்லவேண்டி வரும். இந்த நிலையை போக்க, பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இது தற்கால விஞ்ஞானத்தில் ஒரு புரட்சி என்று கருதப்படுகிறது. லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தீப்பெட்டி போன்று ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை தூங்குபவர் மார்பில் பொ…
-
- 7 replies
- 1.4k views
-
-
உயர் ரத்த அழுத்தத்தை குணமாக்க, புதிய முறையிலான சிகிச்சை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளது, அந்நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.இந்த புதிய சிகிச்சை முறையால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறைந்துள்ளது. இந்த புதிய முறையிலான சிகிச்சைக்கு “ரீனல் சிம்பதடிக் நெர்வ் அப்ளேஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறையில், ஒயர் ஒன்று, சிறுநீரகத்திற்கு அருகில் இருக்கும் ரத்த குழாயினுள் செலுத்தப்பட்டு, மிதமான ஷாக் கொடுக்கப்படுகிறது. இதனால், ரத்த அழுத்தத்தை அதிகரிக்குமாறு, மூளையில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் தடுக்கப்படுகின்றன. பிரிட்டனை சேர்ந்த அந்தோணி ஹென்றி(68) என்பவர் தான், அந்நாட்டில், முதன் முதலில் இந்த சிகி…
-
- 0 replies
- 1.7k views
-
-
மனித வயிற்றுக்கு நிகரான ஓர் கருவியை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நோர்விச்சின் உணவு ஆய்வு நிறுவகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் இந்த புதிய கருவி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கருவி மனித வயிற்றினால் மேற்கொள்ளப்படும் சகல தொழிற்பாடுகளையும் துல்லியமாக மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித சமிபாட்டுத் தொகுதியின் இயக்கம் தொடர்பில் ஆய்வுகளை நடத்தும் நோக்கில் இந்த புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை கண்டு பிடிப்பதற்கு சுமார் பத்து ஆண்டு காலம் தேவைப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மனித வயிறு உணவு சமிபாடு தவிர்ந்த ஏனைய பல தொழிற்பாடுகளை ஆற்றுவதாகவும், இதனால் குறித்த கருவியின் உருவாக்கம் மருத்துவ உலகில் புதிய ம…
-
- 0 replies
- 697 views
-
-
உடற்பயிற்சி செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்தப் பழைய உண்மையை இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மீண்டும் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. இத்துடன் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது டி.வி., தியானம் போன்றவற்றிற்குப் பதிலாக இருபது நிமிடங்கள் உடற்பயிற்சியோ அல்லது துரித நடை ஓட்டமோ செல்வது நல்லது. இதற்காக நன்கு துடிப்பாகச் செயலாற்றும் 34 மாணவர்களை மூன்று குழுவாகப் பிரித்தனர். முதல் குழு ஓர் அறையில் அமைதியாக அமர்ந்தது. இரண்டாவது குழு பரிசோதனைச் சாலைக்குள்ளேயே ‘ஜாக்கிங்’ செய்தது. மூன்றாவது குழு உடற்பயிற்சி செய்தது. இருபது நிமிடங்கள் கழிந்ததும் ஓவ்வொரு குழுவையும் பரிசோதித்தனர். உடற்பயிற்சி செய்தவர்கள் மற்ற இரு குழுவினர்களைவிட 25% அளவில் ஓய்வு நிலையில் இருந்தனர். த…
-
- 1 reply
- 1.2k views
-
-
தைராய்டு என்பது நமது கழுத்தின் முன்பக்கத்தில் குரல்வளைப்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் உள்ள ஒரு சுரப்பி. சாதாரணமாக முழுவளர்ச்சியடைந்த மனிதர் உடலில் உள்ள தைராய்டு சுரப்பி 15 முதல் 25 கிராம் எடையுள்ளதாக இருக்கும். நம் உடலில் உள்ள இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம் இவைபோல் தைராய்டுச் சுரப்பிக்கும் சில முக்கியமான பணிகள் உள்ளன. இச்சுரப்பி, T3, T4 எனும் இரண்டு மிக முக்கியமான ஹார்மோன்களைச் சுரக்கின்றன. நமது உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு இன்றியமையாதவை இவ்விரண்டு ஹார்மோன்கள். இந்த ஹார்மோன்களின் பணி என்ன? இந்த ஹார்மோன்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும், திசுவிற்கும், செல்களுக்கும் தேவையானவை. ஒவ்வொரு நிமிடமும் உடலில் நடக்கும் எல்லாச்செயல்பாடுகளையும், அது ஆற்றலை…
-
- 0 replies
- 2.9k views
-