நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
குழந்தைக்கு பால் கொடுக்க முடியாம கஷ்டப்பட்டேன் - Breast Cancer-ல் இருந்து மீண்ட தன்னம்பிக்கை பெண் பாபி ஷகியாவிற்கு மார்பக புற்றுநோய் இருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்ட போது அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து ஒன்பது மாதங்களே ஆகியிருந்தன. ஆனால் மார்பக புற்றுநோயுடன் போராடினால் கூட, முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் குழந்தைகளை வளர்ப்பது சாத்தியம் தான் என்பதை அவரது கதை நிரூபிக்கிறது. பாபி ஷகியா மார்பகங்கள், எலும்பு மற்றும் தோலில் நான்கு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர். அவருக்கு 27 வயதில் முதல்முறையாக மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டது. 2022இல், உலகளவில் 2.3 மில்லியன் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக உலக சு…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
எம்மில் பலருக்கு கோடை காலம், குளிர் காலம், பனிகாலம், மழைக்காலம் என ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ற வகையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் காரணமாக ஆஸ்மா பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறியும் பரிசோதனையை செய்து, அதன் மூலம் ஒவ்வாமையையும் தூண்டும் காரணிகளை தவிர்த்தால் ஆஸ்மா பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம். பொதுவாக கோடை காலங்களில் காற்றில் மாசு பறக்கும். அதிலும் குறிப்பாக வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள புறச்சூழலில் தூசுகள் காற்றில் மிதக்கும். இவற்றை சுவாசிக்கும் பொழுது ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் காரணமாக ஆஸ்மா பாதிப்பு உருவாகிறது. சிலருக்கு கோடையில் மலரும் மலர்களால் அதன் மகரந்தங்களால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் கார…
-
- 1 reply
- 459 views
-
-
விற்றமின் B12 ம் வயதானவர்களின் மூளை சுருங்குதலும்! “ஒரு விற்றமின் B12 ஊசி அடித்துவிடுங்கோ” இவ்வாறு கேட்டு வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு இது உண்மையான மருத்துவத் தேவையாக இருந்த போதும் பலருக்கு அது தேநீர் குடிப்பது போல ஒரு பழக்கமோ என நான் எண்ணுவதுண்டு. “ஒரு தேத்தண்ணி குடிச்சால்தான் உசார் வரும்” என்பது போல ஒரு ஊசி அடித்தால்தான் அவர்களுக்கு மனம் சார்ந்த உற்சாகம் வருவதுண்டு. இது அவ்வாறிருக்க, வயதானவர்களின் இரத்தத்தில் B12 அளவு குறைவாக இருந்தால் மூளையின் கலங்கள் சிதைவடைவதற்கும், மூளையின் அளவு சுருங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது. மூளையின் கலங்கள் சிதைவதானது அறிவார்ந்த செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்…
-
- 1 reply
- 642 views
-
-
உங்களை உறைய வைக்கும்... 20 "எக்ஸ்ரே" படங்கள்.
-
- 0 replies
- 349 views
-
-
அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல். இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம். கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது. அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள். கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் …
-
- 6 replies
- 909 views
-
-
அனுப்பி வைத்தவர்: டாக்டர் நளினி சிவப்பிரகாசம் நோய்க்கான பொதுக் காரணிகள் ஒருவருடைய வாழ்கையில் எதிர் பாராது நிகழும் சில சம்பவங்கள், இழக்கப் படாததை இழந்ததால் ஏற்படும் துக்கம், எதிர் பார்த்த சில விடயங்கள் நடைபெறாது போவதால் ஏற்படும் ஏமாற்றம் (பரீட்சையில் சித்தியெய்தமுடியாது போவது, காதலில் தோர்வியடைவது) அல்லது சமூகத்திற்கு முகம் கொடுக்க முடியாத சமூக விரோத செயல்களில் ஏடுபட்டதால் ஏற்பட்ட குற்ற உணர்வு, கடன்பட்டு பின் அதனை செலுத்த முடியாது போவதால் ஏற்படும் மானநஷ்டம், பெரிய எதிபார்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு முடங்கிப் போவதால் ஏற்படும் திடீர் மாற்றம் என்பனவற்றால் ஒருவர் மனதை துன்புறுத்தும் மன வேதனையும், தாழ்வு உணர்வு (Low Mood) நிலையும…
-
- 2 replies
- 9.2k views
-
-
சலரோகம் - நீரழிவு நோய் என்றால் என்ன? இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன? நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள ”குளுக்கோஸ்” வழங்குகின்றது. இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை திசுக்களில் பெற்றுக் கொள்வதற்கு ”இன்சுலின்” என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் என்னும் சுரப்பி அமைந்துள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும்போது, உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெற முடியாது போகின்றது. இதனால் இரத்த ஓட்டத்தில் குளுக்கோசின் அளவு அதிகமாகிறது. இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரையானது இதயம், சிறு நீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நா…
-
- 1 reply
- 8k views
-
-
நவீன காலத்தின் உணவுப் பழக்கங்களால் பெண் குழந்தைகளின் உடல்பருமன் அதிகமாகிறது என்றும் அதனால் சில பெண்கள் 7 வயதிலேயே பூப்படைகின்றனர் என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வெளிப்படையான பார்வைக்கு இது ஒன்றும் பெரிய தவறாக தோன்றாவிடினும் கூட மிகவும் சிறிய வயதில் பூப்படையும் பெண்கள் மருத்துவ ரீதியாக பார்த்தால் பல நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது என்பதால் பெண் குழந்தைகள் விடயத்தில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவில் பத்தில் ஒரு பெண் குழந்தை பூப்படைதலின் முதல் அறிகுறியான மார்புத் தசை வளர்ச்சியுடன் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மிகவும் சிறிய வயதில் பூப்படையும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன் சுரப்பும் வ…
-
- 13 replies
- 1.8k views
-
-
தக்காளிப் பழங்களின் பிரகாசமான சிவப்பு நிறத்திற்கு காரணமான முக்கிய இரசாயனக் கூறானது ஆண்களில் இனவிருத்தி ஆற்றலை ஊக்குவிப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். லைகோபீன் என்ற மேற்படி இரசாயனப்பொருள் ஆண்களின் இனவிருத்தி ஆற்றலை 70சதவீதத்தால் அதிகரிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஒஹியோ மாநிலத்திலுள்ள கிளேவலானட் மீள்விருத்தி மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு வருட காலமாக உலகெங்கும் மேற்கொள்ளப்பட்ட 12 ஆய்வுகளின் பிரகாரம் மேற்படி லைகோபீன் இரசாயனத்தை தினசரி அதிகளவில் வழங்குவதன் மூலம் ஆண்களின் இனவிருத்தி ஆற்றலைத் தூண்டி குழந்தைப் பேற்றை ஊக்குவிக்க முடியும் என கண்டறிந்துள்ளதாக இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மேற்படி நிலையத்தின் பணிப்பாளர் அசோக் அக…
-
- 2 replies
- 538 views
-
-
சர்க்கரை நோயா? குணமாக்க முடியாது; கட்டுப்படுத்தலாம்... ஆனால் சாகும் வரை மருத்துவம் பார்க்க வேண்டும்... இரத்த அழுத்தமா? குணமாக்க முடியாது; கட்டுப்பாட்டில் வைக்கலாம். அதற்குத் தினந்தோறும் மருந்துகளை நிறுத்ததாமல் சாப்பிட வேண்டும். ஆஸ்துமாவா? குணமாக்க முடியாது; அதன் தீவிரத்தை வேண்டுமானால் குறைக்க முடியும். ஆனால் இறுதி மூச்சு நிற்கும் வரை மருந்துகளின் துணையோடுதான்..... மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி, புற்று நோய், என்று எந்த நோய் வந்தாலும் குணமாதல் என்பது இன்று பொய்யாகிப் போனது. அலோபதி மருத்துவமோ, ஹோமியோபதி மருத்துவமோ, சித்த மருத்துவமோ அல்லது ஆயுர் வேதமோ எதுவாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் மருத்துவம் பார்க்கும் பரிதாப நிலைக்கு வந்துவிட்டோம். இந்த நிலைக்குக் காரணம் மரு…
-
- 0 replies
- 594 views
-
-
விந்து ஒவ்வாமை என்றால் என்ன? இதன் அறிகுறிகள் என்னென்ன? - பாலியல் உடல்நலம் பத்மா மீனாட்சி பிபிசி தெலுங்கு 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 26 வயதான பிரணதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தான் பழகிவந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய திருமண உறவு எதிர்பார்த்த மாதிரி செல்லவில்லை. கணவருடனான முதல் உடலுறவிலேயே பிரணதியின் பிறப்புறுப்பில் எரிச்சலுடன் கூடிய தீவிரமான வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது என்ன பிரச்னை என்பது அவருக்குப் புரியவில்லை. "இதனை என் அம்மாவிடம் தெரிவித்தபோது, பு…
-
- 0 replies
- 318 views
- 1 follower
-
-
வசியம் உண்டாக்கும் காமவர்த்தினி மூலிகை! தொட்ட உடன் தன்னை சுருக்கிக் கொள்ளும் தொட்டாற்சுருங்கி காந்த சக்தி உடைய மூலிகையாகும். இதனை தொடுகின்ற போடு அதனுள் இருக்கும் சக்தி மின்சாரம் போல நம்முள் பாயும். நாற்பத்தெட்டுநாள் தவறாமல் தொட்டு வர மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்குமாம். நினைத்தது நடக்குமாம். இதனை நமஸ்காரி என்றும் அழைக்கின்றனர். மனதில் உணர்ச்சியை அதிகரித்து சிற்றின்பத்தை ஊட்டுவதால் காமவர்த்தினி என்றும் அழைக்கின்றனர். செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் சிட்டோ, ஸ்டிரால், பினிடால்,நார்எபிநெப்ரைன், மிமோலைன், டேனின் உள்ளன. விதைகள் மியூசிலேஜ் கொண்டவை. இதில் குளுக்கோனிக் அமிலம் ஆகியவை காணப்படுகின்றன. மாந்தீரிக மூலிகை தொட்டாற்சுருங்…
-
- 1 reply
- 8.8k views
-
-
சிப்பிக்குள் முத்து (பித்தத்தில் கல்லு!) கூர்ப்பு ஒரு கோட்பாடு என்பதை விட ஆதாரங்கள் நிறைந்த ஒரு உண்மை எனலாம். கூர்ப்பு நிகழ்ந்தமைக்கான பல ஆதாரங்களில் ஒன்று எங்கள் உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள். சில உறுப்புகள், அவசியமின்மை காரணமாக, குறுகிப் போகின்றன (குடல் வால் -appendix ஒரு உதாரணம்). சில உறுப்புகள், பெரும்பகுதி அவசியமில்லாமல் போனாலும் சில உடற்றொழில்களுக்கு அவசியமாக இருப்பதால், தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கின்றன: இதற்கு உதாரணம் எங்கள் பித்தப் பை. எங்கள் மூதாதையர் வேட்டையாடி, பெருமளவு இறைச்சி, கொழுப்பு என்பவற்றை சந்தர்ப்பம் கிடைக்கும் போது மட்டும் வயிறு புடைக்க உண்ண வேண்டிய ஒரு காலம் இருந்தது. அந்த மூதாதையரில் கொழுப்பை இலகுவாகச் சமிக்கச் செய்ய பித்தப் பை உதவி…
-
- 2 replies
- 712 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 12 ஏப்ரல் 2024, 02:03 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் கால்பங்கு மக்கள்தொகை கண்சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் குணப்படுத்தக்கூடிய, சரியே செய்ய முடியாத, தடுத்து நிறுத்தக் கூடிய வகையிலான வெவ்வேறு விதமான கண் சார்ந்த பாதிப்புகள் உள்ளன. அதில் ஒன்றான கிளாக்கோமா சமீபத்தில் பலரையும் அச்சுறுத்தும் ஒரு பாதிப்பாக மாறியுள்ளது. காரணம் இது பல நேரங்களில் எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் தொடங்கி, ஒரு நபர் தனது கண்பார்வையை குறிப்பிட்ட அளவு இழந்த பிறகே தெரிய வருகிறது. இதனால், இழந்த கண்பார்வையை மீட்க முடியாத நிலையும் உருவாகிறது. உண்மையில் இந்த …
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
இனிப்பைக் குறைத்தாலே உடல் பருமன் குறையும்! சனி, 9 பிப்ரவரி 2008( 13:47 IST ) நமது உடலிற்குத் தேவையான சத்துக்களை குறைந்த அளவிற்கே அளிக்கும் உணவு வகைகளையும், பானங்களையும் சாப்பிடுவதன் மூலம் உடல் பருமனைக் குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பெல்ஸ்லி, ஆதம் ட்ரூவோன்ஸ்கி ஆகியோர் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் குறைந்த கலோரி அளவு கொண்ட இனிப்புச் சத்துகள், சக்தியின் அடர்த்தி தன்மை, திருப்தித் தன்மை ஆகியவைத் தொடர்பாக நடத்திய ஆய்வில் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இனிப்பு அளவைக் குறைத்துக் கொண்டாலே உடல் பருமனைக் கட்டுப்படுத்துவது எளிது என்பதைக் கண்டறிந்…
-
- 0 replies
- 2.8k views
-
-
நமது அன்றாட உணவும் காய்கறிகளின் தன்மையும் நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவைகள் உள்ளன. கார்போஹைட்ரேட் இயங்கும் சக்தியை தருகிறது, புரோட்டீன் உடலை வளர்க்கிறது, கொழுப்பு உடல் மாற்றத்தை தருகிறது. ஒரு மனிதன் தன் எடையை தக்க வைத்துக்கொள்ள குறைந்தது 30-35% கலோரி உணவை எடுத்துக் கொள்ள வெண்டும். எடை கூட இன்னும் நிரைய உணவு உட்கொள்ள வெண்டும். ஒரு மனிதன் தினமும் அவனுடைய உடல் எடையில் கிலோவிற்கு 30 மிலி தண்ணீர் பருக வேண்டும். அதே அளவு சிறுநீர் வெளியேர வேண்டும். இனிப்பு, உப்பு, துவர்ப்பு உள்ள பொருட்கள் மனிதனின் எடையை கூட்டும். கசப்பு, காரம், புளிப்பு ஆகிய பொருட்கள் மனிதனின் எடையை குறைக்கும். வாதம் உ…
-
- 1 reply
- 7.4k views
-
-
கட்டுமஸ்தான உடல் கட்டமைப்பை மெருகேற்ற ஆண்களுக்கான உணவு வகை! [Thursday 2016-02-18 07:00] பெண்கள் பொதுவாக அழகை மேம்படுத்த பல அழகு சாதனங்களைப் பயன்படுத்தி தோற்றத்தை மெருகேற்றுவர். ஆனால் ஆண்கள் தங்கள் அழகை வெளிக்காட்ட, உடல் கட்டமைப்பை மெருகேற்ற எண்ணுவார்கள். அதையே தான் பெண்களும் ஆண்களிடம் விரும்புகிறார்கள். அதனால் ஆண்கள் சல்மான் கான் போல், உடம்பை ஏற்ற மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிடுகிறார்கள். நல்ல உடல்கட்டு வேண்டும் என்று எண்ணுபவர்கள் எப்போதும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மட்டும் போதாது. seithy.com உடல் கட்டமைப்பில் உண்ணும் உணவும் முக்கிய இடம் பிடிக்கிறது. ஆகவே போதிய உடற்பயிற்சியுடன், சரியான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். உடற்பயி…
-
- 0 replies
- 546 views
-
-
கொவிட்-19 தடுப்பூசி சோதனைகளில் பங்கேற்குமாறு அரை மில்லியன் பொதுமக்களுக்கு அழைப்பு! எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் கொவிட்-19 தடுப்பூசி சோதனைகளில்,அரை மில்லியன் பேர் பங்கேற்க கையெழுத்திடுவார்கள் என நம்பப்படுகின்றது. பிரித்தானியாவில் குறைந்தது எட்டு பெரிய அளவிலான கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், சோதனைகளில் பங்கேற்பதற்றாக கையெழுத்திடுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் வைட்டி கூறுகையில், ‘எந்த தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளவை என்பதைக் கண்டறிய பொதுமக்களின் தாராள மனப்பான்மையை நாங்கள் மீண்டும் அழைக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசிகள் கிடை…
-
- 0 replies
- 535 views
-
-
இஸ்கிமிக் கார்டியோமயோபதி ( Ischemic Cardiomyopathy)க்குரிய சிகிச்சை இதயத்தில் எந்த கோளாறுகள் ஏற்பட்டாலும் எமக்கு பயம் வருவது இயற்கையே. அது என்னவென்று தெரியவரும் போது தான் நாம் அதனை எதிர்கொள்வதற்குரிய மனதிடத்தை பெறுகிறோம் என்பதும் உண்மை. இந்நிலையில் இதய தசைப் பகுதியில் ஏற்படும் சில பாதிப்புகளைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இதயப்பகுதியில் உள்ள தசைகள் தங்களின் இயல்பான வலுவினை இழ்ந்திருந்தாலோ அல்லது இதய தசை மெலிந்திருந்தாலோ அல்லது ஓரிடத்தில் மெலிந்து பிறகு வேறொரு இடத்தில் பெரிதாக இருந்தாலோ இதயத்திற்கு இரத்தம் சீராக பம்ப் செய்ய இயலாத நிலை உருவாகும். அத்துடன் உடலுக்கு போதிய அளவில் இரத்தம் அனுப்பப்படுவதிலும் சிக்கல்கள் எழக்கூடும். …
-
- 0 replies
- 383 views
-
-
மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு மட்டுமே. ஆனால் அனைவரின் ரத்தமும் ஒரே வகை அல்ல. இரத்த வகைகள் பற்றிய விவரம் அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலவில்லை. அவர்களுக்கு இரத்தம் செலுத்துவது மிகக் கடினமாக இருந்தது. ஏனெனில் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டன. உயிர்களைக் காக்க முடியவில்லை. 1900 ஆம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர் ரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டு பிடித்தார். இரத்தமானது பொதுவாக 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. “A” வகை ரத்தம், 2. “B” வகை ரத்தம், 3. “AB” வகை ரத்தம் 4. “O” வகை ரத்தம். இவற்றில் “A” வகை ரத்தத்தை A1, B2 என்ற துணை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இரத்தப் பிரிவுகளில்... A வகையினர் 42%ம், ஆ வகையினர் 8%ம், AB வகைய…
-
- 1 reply
- 1.5k views
-
-
வயதாகாமல் தடுக்குமா இளைஞர்களின் ரத்தம்? சர்ச்சையை கிளப்பும் புதிய சிகிச்சை முறை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைHBO வயதாவதை தவிர்க்க, இளைஞர்களின் ரத்தத்தை வயதானவர்களின் உடலில் செலுத்தும் புதிய சிகிச்சை முறையை அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் சோதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த ப…
-
- 2 replies
- 416 views
-
-
"ஆண்களுக்கும் அழகு வேண்டும்" பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை.. அது ஏன் என்றும் புரியவில்லை. (இயற்கையிலேயே அவங்க அழகாக இருப்பதாலா?) ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கு. அவர்கள் தான் வெயில், மழை, தூசியிலும் செல்வார்கள். ஆனால் அவங்க அழகின் மீது அக்கறை காட்டமாட்டாங்க.ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை எனபது தான் வருத்தம். ஆண்களும் அழகுக்கென்று நேரம் ஒதுக்கி உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போகனும். வீட்டிலேயே செய்யும் சில சிம்பிளான அழகு குறிப்புகள் சொல்கிறேன்.. வாரம் ஒரு முறையாவது செய்யுங்க…
-
- 16 replies
- 5.3k views
-
-
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ பிரிவு சார்பில் இன்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் குஷ்பு பேசும்போது, ’’நான் கர்ப்பமாகி இருக்கும்போது, குழந்தை பிறந்த 10 நாட்களுக்கு முன்பு வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அதன்பிறகுதான் வீட்டில் ஓய்வாக இருந்தேன். முதல் குழந்தைக்கு இரண்டரை வயது வரையும், 2வது குழந்தைக்கு ஒன்றரை வயது வரையும் தாய்ப்பால் கொடுத்தேன். தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகள் தாய் மீது மிகவும் அன்பாக இருப்பதுடன், …
-
- 13 replies
- 6.9k views
-
-
மருத்துவக் கட்டுரை – மூட்டு அழற்சி நோய் ( OSTEOARTHRITIS ) | திண்ணை வயது ஒரு முக்கிய காரணம் என்றாலும் எல்லா வயதானவர்களுக்கும் இது உண்டாவதில்லை. ஆனால் மூட்டுகளில் உண்டாகும் அழற்சியால் ” கார்டிலேஜ் ” எனும் மூட்டு சவ்வு எலும்புகள் தேய்ந்து வடிவிழக்கும் வேளையில் எலும்புகள் அதை எதிர்த்து சரி செய்யும்போது அங்கு புது கரடு முரடான கூறிய எலும்புகள் உற்பத்தியாவதால் அசையும்போது வலி உண்டாகிறது. இத்தகைய நோய் இயலில் பல்வேறு கூறுகள் பங்கு வகிக்கின்றன.அவை அனைத்துக்கும் அடிப்படையானது இந்த மூட்டு அழற்சியே காரணமாக அமைகின்றது. அறிகுறிகள் * மூட்டு வலி…
-
- 1 reply
- 937 views
-
-
பெண்கள் வேலைக்குச் செல்வதாலும் தாமதத் திருமணங்களாலும் கடந்த பத்தாண்டுகளாகக் கர்ப்பத்துக்குப் பின்னால் மட்டுமல்ல கர்ப்பம் தரிக்கும் முன்னும் செக்கப் செய்துகொள்வது என்பது வழக்கமாகி இருக்கிறது. கர்ப்பம் ஆகுமுன்னே வந்து மருத்துவரை அணுகி தங்களுக்கு உடல் கோளாறு ஏதும் இல்லை என செக்கப் செய்து கொள்வது தாய்க்கும் சேய்க்கும் நலம் பயக்கும். இதயத்தில் மர்மர் சத்தம்., தைராய்ட்., இரத்த அழுத்தம். , ஹீமோக்ளோபின்., ஃபைப்ராயிட் கட்டிகள் இருக்கா என எல்லாம் செக் செய்து கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்த மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல்நலத்தில் கோளாறு இல்லாமலிருக்கிறதா, நீரிழிவு நோய் இருக்கிறதா மேலும் எல்லாத் தடுப்பு ஊசிகளும் ( ஜெர்மன் மீசில்ஸ்) போடப்பட்டிருக்கா என செக்கப் செய்து கொ…
-
- 0 replies
- 2.6k views
- 1 follower
-