நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
அன்புக்கும் எல்லோரையும் ஆசீர்வதிக்கும் எமது நிலாமதியக்காவுக்கு சிறு சத்திரசிகிச்சை. அவர் நலமடைய பிரார்த்திப்போம் உறவுகளே..... நிலாமதிப்பாட்டி நலமாகி நீடூழி வாழ எனது குடும்பம் சார்பில் எல்லோருக்கும் பொதுவான ஆண்டவரை வேண்டுகின்றேன்...
-
- 45 replies
- 2.6k views
-
-
ஒரு நபர் 13 ஆயிரம் அடிகள் வரை நடந்தால் நல்லது என கூற முடியும், இவை ஒருவரை ஊக்கப்படுத்தப்படுத்த உதவலாம். ஆனால், அனைவருக்கும் இது பொருந்தாது. பொதுவாகவே உடற்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. உடற்பயிற்சியிலேயே குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகள் இதய நலத்தைப் பேணுபவை. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், ரன்னிங் போன்றவையே நல்ல உடற்பயிற்சிகள்தான். இன்றைக்கு நாம் வைக்கிற ஒவ்வோர் அடியையும் கணக்கிடும் செயலிகள் வந்துவிட்டன. இந்நிலையில், தினமும் 9 ஆயிரம் அடிகள் நடக்கும் இளைஞர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் 50 சதவிகிதம் குறைவதாக சில ஆய்வுகள் தெ…
-
- 0 replies
- 167 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் உங்களுக்கு கடைசியாக எப்போது விக்கல் ஏற்பட்டது என்பது நினைவில் இருக்கிறதா? சிலருக்கு அடிக்கடி விக்கல் ஏற்படும், சிலருக்கு எப்போதாவது ஒருமுறை விக்கல் வரும். ஆனால் இந்த விக்கல் ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? விக்கல் என்றால் என்ன? டையபிராம் (diaphragm) என்ற தசையில் ஏற்படும் தன்னியல்பான சுருக்கங்களே மருத்துவ ரீதியாக 'விக்கல்' என்று குறிப்பிடப்படுகிறது. டையபிராம் என்ற இந்த தசை மார்பையும், வயிறையும் பிரிக்கும் இடத்தில் அமைந்திருக்கும். மனிதர்கள் சுவாசிப்பதில் இந்த தசையின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. …
-
- 0 replies
- 533 views
- 1 follower
-
-
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும். இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம். அவரைக்காய இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும் காம உணர்ச்சியைப் பெ…
-
- 2 replies
- 2.7k views
-
-
மலைவேம்பு பூ ஆண்டு முழுவதும் பருவநிலை மாறிக்கொண்டே இருப்பதால், பல்வேறு நோய்கள் தலைதூக்கி மக்களை அச்சுறுத்துகின்றன. மழைக்காலத்தில் அபரிமிதமாகப் பெருகும் கொசுக்களால் உண்டாகும் `டெங்கு’ காய்ச்சல், இப்போது பரபரத்துக் கிடக்கிறது. டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முறைகளையும், நோய் ஏற்பட்டால் அதைப் போக்கும் வழிமுறைகளையும் பார்ப்போம். தற்காப்பு முறைகள் "பகல் நேரத்துல கொசு கடிச்சா, கண்டிப்பா அது டெங்குதான்" என அலறுவதும், உடலின் வெப்பநிலை சற்று அதிகரித்தாலே, "டெங்கு ஜுரமா இருக்குமோ?" என்று சிலர் பீதியைக் கிளப்பிவிடுவதும், அதிக அசதி காரணமாகக் கை, கால்களில் வலி ஏற்பட்டாலும்கூட, "டெங்கு காய்ச்சலின் அறிகுறியோ?" என மக்கள் மனதுக்குள் புலம்புவதையும் அநேக இடங்களில் பார்க்க முடிகி…
-
- 0 replies
- 334 views
-
-
உலக நீரிழிவு தினம்: இந்தியாவில் ஏழை நோயாளிகள் இன்சுலின் வாங்குவதில் உள்ள சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் இரு மகள்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வேலையை விட்டு இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. நீரிழிவு நோய் (வகை 1) இருப்பதால் அவர்களுக்கு இன்சுலினை ஊசி வழியாகச் செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் வழக்கமான செலவுகள் போக, இன்சுலின் ஊசிக்கு மட்டுமே ரூ.20 ஆயிரம் செலவிடுகிறார்கள். மத்திய – மாநில அரசுகள் சில உதவிகளை வழங்கி வந்தாலும், இன்சுலின் தேவைப்படும் ஏராள…
-
- 0 replies
- 599 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேஸ்மின் ஃபாக்ஸ்- ஸ்கெல்லி பதவி, 3 மணி நேரங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு ஒரு முறை கழிக்கப்படும் டைப் 3 அல்லது டைப் 4 என வகைப்படுத்தப்படும் சாஸேஜ் வடிவிலான மலமே சிறந்தது எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் கழிக்கும் மனிதரா, அல்லது கழிவறை செல்வதே அபூர்வமான ஒன்றா? இப்படியாக, ஒவ்வொருவரின் மலம் கழிக்கும் இடைவெளியும் எண்ணிக்கையும் வேறுபடும். அவை உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உணர்த்துவது என்ன? மலத்தின் பின்னால் உள்ள அறிவியலை இங்கு தெரிந்துகொள்வோம். ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது ஏன் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்? இந்தியாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்களை அதிகம் பாதிக்கும…
-
-
- 1 reply
- 948 views
- 1 follower
-
-
நம் உடலின் புரதத் தேவையை பூர்த்தி செய்ய இறைச்சி அவசியம் என்பது உண்மையா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சோஃபி மாக்ஃபி பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர் 19 ஜனவரி 2026, 01:52 GMT ஒரு உடற்பயிற்சி நிபுணர் மற்றும் தாவர அடிப்படையிலான உணவு வகைகளை உருவாக்குபவர் என்ற முறையில், அதிக புரதம் கொண்ட தாவர அடிப்படையிலான சமையலின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதே எனது நோக்கம். இது குறித்து 'சோஃப்ஸ் பிளான்ட் கிச்சன்' (Soph's Plant Kitchen) என்ற புத்தகத்தையும் நான் எழுதியுள்ளேன். நீங்கள் அதை வலிமைப் பயிற்சியுடன் (வலிமையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள்) இணைக்கும்போது, புரதம் நமது உடலை உருவாக்கவும், பராமரிக்கவும் மற்றும் சரிசெய்யவும் உதவுகிறது. இது மிகவும் நிறைவான ஊட்டச்சத்தும் கூ…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
முதுமையை ஓட ஓட விரட்டும் ஓட்ஸ் ! உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர். சர்வ ரோக நிவாரணி ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவ…
-
- 0 replies
- 553 views
-
-
கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. எல்லாவித கீரையிலும் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளது. மனிதர்களது உடல் உள வளர்ச்சியில் கீரை பெரிதும் முக்கியத்துவம் வகிக்கின்றது. கீரையானது நாட்டுக்கு நாடு காலநிலைகளின் மாறுதல்களிற்கு ஏற்ப்ப பலவகையாக விழைவிக்கப்படுகின்றது. அவை ஒவ்வொன்றும் தனித்தனி தன்மைகளைக் கொண்டுள்ளன. வெந்தயக்கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்கள், பேதியை குறைக்கும். அதிகமாக இரும்புச்சத்து கொண்டது. முருங்கை கீரை: உடலுக்கு சக்தியையும், வலிமையையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிலக்கின் போது ஏற்படும் வ…
-
- 0 replies
- 647 views
-
-
ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய 10 டிப்ஸ் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள். ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும் உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு டயட் என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம். நடைபயணம், ஓட்டம், நீச்சல், விளையாட்டுகள் என்று வேறு சில முயற்சிகளில் இறங்கி எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்களும் உண…
-
- 7 replies
- 5.3k views
-
-
AIDS : Made in America - பேரழிவு ஆயுதம் - Dr. புகழேந்தி (இந்தியா) (மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதியில் கதிர்வீச்சு அபாயம், குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருப்பது, புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவரது AIDS: A Biological Warfare? நூலைத் தழுவி இக்கட்டுரையை ச.வேலு தொகுத்துள்ளார். ) இன்று வரை நம்மிடையே "பாதுகாப்பான உறவு" எனப் பரப்பப்பட்ட செய்திகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விசுவாசமான பிரச்சாரங்களும் ஒழுக்கம் பற்றிய விளிம்புக்குள்ளேயே சுற்றிவந்தன. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களில் இறக்கிவிடப்பட்ட, இந்த எய்ட்ஸ் பற்றிய மறுபக்க ஆய்வுகள், இன்றுவரை புரிய வைக்கப…
-
- 0 replies
- 1.3k views
-
-
தந்திரம் எண் 07:பகுதி எண் 37:பாடல் எண் 03: மொத்தப் பாடல்களின் வரிசை எண் 2104 ஒன்றே குலமும் ஒரு்வனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்க்கதி இல்லுநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்னினைந் து்ய்மினே. 07:37:03:2104 (திராவிடநாடு கோரிக்கையைக் கைகழுவியபின்,பகுத்தறிவுப் பகலவர்கள் தேர்தலில் ஓட்டுச் சேகரி்த்திட ஏற்றுக்கொண்ட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" திருமூலர் தந்ததுதான்.) திருமூலர் ஓர் சித்தர். தமிழகத்தில் வாழ்ந்தவர். திருமந்திரம் என்ற நூலை இயற்றியவர். திருமந்திரத்தில் 3000-ம் பாடல்கள் இருக்கின்றன. திரு்மந்திரம் கூறும் உடற்கூறு் வாழ்வியல் தத்துவங்கள் அறிவியல் அறி்ஞர்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. திருமூலர், நாகை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை-என்னும் திருத…
-
- 8 replies
- 1.9k views
-
-
நித்திரை இன்மை என்பது மக்களைப் பொறுத்த வரை அதுவும் மன அழுத்தங்கள் நிறைந்த இன்றைய உலகியல் மனித வாழ்வியல் முறையில் பொதுவான பிரச்சனை. இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள பலர் நித்திரை மாத்திரைகளை சாப்பிட்டு நித்திரையை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். ஆனால் அவையோ இவர்களின் ஆயுளை சிறுகச் சிறுக வாங்கிக் கொண்டிருப்பது ஆராய்ச்சிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் சுமார் 33,000 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த மருந்துகளால் ஏற்படும் ஆபத்துக் குறித்த எச்சரிக்கையை நோயாளிகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதே அன்றி முற்றாக மாத்திரியை எடுப்பதை நிறுத்தப் பரிந்துரைக்கவில்லை இந்த ஆய்வுக் குழு. இந்த ஆய்வு பல்வேறுபட்ட …
-
- 7 replies
- 1.8k views
-
-
உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டியவை…. பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது. *மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள். *கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள். *ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள். …
-
- 0 replies
- 435 views
-
-
நாலு கீத்தில் ஒரு பந்தல், அதுக்கு ஒரே கால்-அது என்ன?"இந்த பழமொழிக்கு அர்த்தம் தெரிய இதப் படிங்க! கிராமங்களில் சில புதிர்களை அடிக்கடி சொல்லி, சிறுவர்களிடம் அதன் பதிலைக் கேட்பார்கள், புதிர்களின் காரணம், புதிர்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை, அவர்கள் மனதில் நன்கு இருத்திக்கொள்ளவே. அது போல ஒரு புதிரை, இங்கே நாம் பார்க்கலாமா!? "நாலு கீத்தில் ஒரு பந்தல், அதுக்கு ஒரே கால்" அது என்ன? பந்தலுக்கு எப்படி ஒரே கால் என்று நிறைய யோசித்து, இருக்கும் பல்வேறு சிந்தனைகளில், இதையும் சேர்த்துக்கொண்டு சிரமப்பட வேண்டாம். மேலே இருக்கும் படத்திலேயே, இதற்கான விடை இருக்கிறது. கண்டுபிடித்து விட்டீர்களா? நீராரைக்கீரை, ஆலக்கீரை எனும் ஆரைக்கீரை தான், புதிருக்கான பதில். நான்கு கால்வட்ட இலைகளைத்…
-
- 0 replies
- 386 views
-
-
நெற்றியில் குங்குமம் வைப்பது எதற்காக? மங்கையர்கள் திலகம் வைத்து கொள்வது மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது ஆனால் திலகமிடுவது மங்கள குறியீடு மட்டுமல்ல அதனுள் வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளது மனிதனது மூளையின் மையப்புள்ளி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இதன் வழியாக பிரபஞ்ச ஈர்ப்பு விசையும் வேறு மனிதர்களின் என்ன பதிவுகளும் நேரடியாக மூளையில் பதிந்து அதற்கான அதிர்வுகளை உருவாக்குகிறது அந்த அதிர்வுகள் நல்லதாக இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் இல்லை வேறுமாதிரியாக அமைந்தால் பிரச்சனை தான் வேறு மாதிரியான அதாவது எதிர்மறையான பதிவுகள் மூளையை அண்டாமல் புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்படும் திலகமோ விபூதி மற்றும் சந்தனமோ தடுத்துவிடுகிறது இதனால் நமது மூளையானது எப்போத…
-
- 7 replies
- 8.6k views
-
-
பெண்களில் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் தோன்றுவதற்கான காரணங்கள் பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் முதல் இடத்தைப் பிடிப்பது மார்பகப்புற்றுநோய். அடுத்ததாக கர்ப்பப்பை வாசல்புற்றுநோய் உள்ளது. வெளிநாடுகளில் இக்கர்ப்பப்பை வாசல்புற்று நோயின் தீவிரம் ஒழுங்கான பரிசோதனைகள் மற்றும் தடுப்புமுறைகளால் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரையில் தொடர்ந்தும் இந் நோயின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இதற்குப் பிரதான காரணம் மக்கள் மத்தியில் இப்புற்றுநோய் தொடர்பான பொது அறிவும் பரிசோதனைகள் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பான ஆலோசனைகள் ஏனைய வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளமையே ஆகும். எனவே இப்புற்றுநோய்…
-
- 0 replies
- 528 views
-
-
மிகவும் அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது அகால மரணத்துக்கு இட்டுச்செல்லக் கூடும் என்பதைக் காட்டும் கூடுதல் ஆதாரம் வெளிவந்துள்ளது. ஐரோப்பாவில் சுமார் ஐந்து லட்சம் மக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வொன்று, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதால், 30 பேரில் ஒருவர் அகால மரணமடைய நேரிடுகிறது என்று கூறியது. பி.எம்.சி மெடிசின் என்ற சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள், தினசரி 20 கிராம்கள் இறைச்சி என்ற அளவுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதைக் கட்டுப்படுத்துவது ( இது ஒரு துண்டு பன்றி இறைச்சிக்கு சமம்),ஓராண்டில் பல ஆயிரம் மரணங்களைத் தடுக்கக் கூடும் என்று கூறியிருக்கின்றனர். பதப்படுத்தபட்ட இறைச்சிகளை பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் உப்பு மற்றும் ரசாயனப் பொ…
-
- 0 replies
- 516 views
-
-
'லாங் கோவிட்' - நீண்டகாலம் குணமாகாத கொரோனா தொற்றின் அறிகுறிகள் , பாதிப்புகள் என்ன? ரேச்சல் ஷ்ரேர் சுகாதார செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கொரோனாவால் பாதிக்கப்படும் பெரும்பாலான மக்கள் கடுமையாக நோய்வாய்ப்பட மாட்டார்கள். அவர்கள் ஒப்பீட்டளவில் விரைவாக குணமடைந்துவிடுவார்கள். ஆனால் தொற்றுநோய் தாக்கத்திலிருந்து மீண்டபின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நீண்டகால சிக்கல்களைச் எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படாவிட்டாலும் கூட இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சமூகம் மீண்டும்…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
பசுமதி / Basmati அரிசி சோறு உண்டால் குறிப்பிட்ட அரிசியின் மெலிந்த தோற்றம் போன்றே ஆட்களும் உடல் மெலிவார்களாம் என்று கூறுகின்றார்கள். Glycemic index According to the Canadian Diabetes Association, basmati rice has a "medium" glycemic index (between 56 and 69), thus making it more suitable for diabetics as compared to certain other grains and products made from white flour.
-
- 13 replies
- 1.9k views
-
-
ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி தலைமுடியை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இப்போதெல்லாம் இளவயதில் வழுக்கை, வெள்ளை முடி என பல பிரச்னைகள் வருகின்றது. தலைமுடி சீராக வளர எண்ணெய் தேய்ப்பது மிக அவசியமான ஒன்றாகும், மேலும் மசாஜ் செய்வதும் தலையின் இரத்த ஓட்டத்தை சீராக்கும். தலைமுடியை பொதுவாக இவ்வாறு பிரிக்கலாம் - வறண்ட - எண்ணெய் பதமுள்ள - இயல்பான உங்கள் தலைமுடிக்கு ஏற்றவாறு ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் பராமரிப்பு பொருட்களை தெரிவு செய்வது அவசியம். இதனை தெரிவு செய்வதில் குழப்பம் இருந்தால் சரும மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். வாரத்திற்கு இருமுறையாவது ஷாம்பு போட்டு குளிப்பது அவசியம், ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்திய பிறகு அடிக்கடி மாற்றுவது தேவையில்லாத பக்க வி…
-
- 0 replies
- 817 views
-
-
சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு “ சரி நாம் போதிய அளவு தூங்கவில்லை” என்று தெரியும். ஆனால் எது “போதிய அளவு தூக்கம்” ? இதற்கு விடை, "உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது", என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பான்ங்களை அருந்துவது போன்றவியும், அலாரம் கடிகாரங்கள் மற்றும், சூரிய வெளிச்சம் போன்றவை உடலில் தூக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரவழைக்கும் இயல்பான உணர்வுக்கு இடைஞ்சல் தரும் என்கிறது இந்த ஆய்வு. தனிப்பட்ட மனிதர்களின் சொந்த வாழ்க்கை முறைதான் இந்த தூக்கத்துக்கான தேவைகளை புரிந்துகொள்ள…
-
- 0 replies
- 514 views
-
-
சவால்விட்ட வாழ்க்கை - சாதித்துக்காட்டிய ஜெகதீஷ் 25 பிப்ரவரி 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் …
-
- 0 replies
- 452 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 13 செப்டெம்பர் 2024, 04:47 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அப்போது கல்லூரி மாணவியாக இருந்த சாருலாதவிற்கு கண்ணில் மை இட்டுக்கொள்ள மிகவும் பிடிக்கும். தினமும் அவர் கண் இமையின் விளிம்பான வாட்டர்லைனில் (waterline) மை இட்டுக்கொள்வார். சில காலத்திற்குப் பிறகு, அவருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதுடன் கண்ணின் உள்ளே உருண்டையாக கட்டி போல ஒன்று இருப்பது போலத் தோன்றியது. இதற்காக வீட்டிலே கை வைத்தியம் செய்து வந்தார். ஆனால் ஆறு மாத காலமாகியும் அது குணமாகாத காரணத்தால், கண் மருத்துவரிடம் சென்று, அறுவை சிகிச்…
-
- 0 replies
- 562 views
- 1 follower
-