நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
இந்தியாவின் மாற்றமடைந்த கொரனா வைரஸ்: கேள்விகளும் பதில்களும் முன்கதை விகாரமடைந்த நவீன கொரனா வைரசுகள் பற்றி ஒரு கட்டுரையை முதலில் எழுதிய போது உலகில் மூன்று பிரதான நவீன கொரனா வைரஸ் விகாரிகள் காணப்பட்டன. பிரிட்டன் விகாரி (B.1.1.7), பிரேசில் விகாரி (P1), தென்னாபிரிக்க விகாரி (B1.351) ஆகிய அந்த ஒவ்வொரு வைரசு வகைக்கும் ஒவ்வொரு சிறப்பியல்பு இருந்தது. பிரேசில், பிரிட்டன் வைரசுகள் ஆரம்பத்தில் பரவிய கொரனா வைரசை விட வேகமாகத் தொற்றுதலை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்தன நேரடியாக இது நோய்த்தீவிரத்தை அதிகரிக்கா விட்டாலும், மருத்துவ சேவைகள் மீது அதிக சுமைகளை ஏற்படுத்துவதன் மூலம் அதிக மரணங்களை ஏற்படுத்தியிருந்தன. தென்னாபிரிக்க விகாரிக்கு, தடுப்பூசிகளினால் உருவாகும் நோய்ப்பாதுகாப்பி…
-
- 4 replies
- 939 views
-
-
ஹாய்! இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க? - Dr. K. முருகானந்தம் Sponsored content சிறுநீரகக் கல் வெயில் காலம் வந்துவிட்டது, இந்நேரத்தில் ஒழுங்காக தண்ணீர் பருகாமல் போனால் அது நம் சிறுநீரகத்தை வெகுவாக பாதிக்கும் என்பது நாம் அறிந்ததே. இதன் நீண்ட கால விளைவுதான் கிட்னியில் தோன்றும் கற்கள். ஆண்கள், பெண்கள், ஏன் ஓடியாடித் திரியும் குழந்தைகளுக்குக் கூட இப்போதெல்லாம் சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்படுகிறது. வெயில் காலத்தில் வியர்வை மற்றும் மூச்சு மூலம் நிறைய நீர்ச்சத்தை இழக்கிறோம். இதனால் உடலின் கழிவுகள் மற்றும் தேவையற்ற தாது உப்புகளை வெளியேற்றத் தேவையான நீர் இல்லாமல் சிறுநீரகம் கஷ்டப்படுகிறது. தாது உப்புகள் சிறுநீர…
-
- 0 replies
- 322 views
-
-
பாம்பெண்ணை மருத்துவம்! 18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய, அமெரிக்க தேசங்களில் ஒரு புது வகையான தொழில் துறை கொடி கட்டிப் பறந்தது. குதிரை வண்டியில் ஊரூராகத் திரிந்து சகல வகையான நோய்களையும் தீர்க்கும் "பாம்பு எண்ணை" என்று பெற்றோலியத்தின் ஒரு பகுதியான கனிம எண்ணையை விற்பதே அந்தத் தொழில். இது ஏன் பாம்பு எண்ணை (snake oil) என அழைக்கப் பட்டது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஆனால், இன்று ஆங்கிலத்தில் "பாம்பு எண்ணை" என்பது எந்தப் பலனுமற்ற போலி மருந்துகளைச் சுட்டப் பயன் படும் ஒரு சொல்லாகி விட்டது. போலி மருந்துகளை விற்கும் வியாபாரி "பாம்பெண்ணை விற்பவர் (snake oil salesman)" எனப் படுகிறார். கோவிட் 19 இற்கு தீர்வினைத் தேடி மருத்துவ விஞ்ஞானம் உழைத்துக் கொண…
-
- 15 replies
- 2.1k views
-
-
கொரோனாவை கட்டுப்படுத்த மருந்தாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் காரத்தன்மை உள்ள உணவுகள் வைரஸ் உடலுக்குள் வாழ்வதைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்த உலகையும் வீட்டுக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கும் நுண்ணுயிரி! ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவி, தொற்றை ஏற்படுத்தும் இதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க தற்போது சமூக விலகலிலும் மற்றவர்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வதிலும் கவனம் செலுத்திவரும் நாம் இந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். "கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அதனை எதிர்த்துப் போராட சத்து மிகுந்த உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். …
-
- 0 replies
- 505 views
-
-
சூரிய நமஸ்காரம் செய்யும் அற்புதங்கள்! மின்னம்பலம் சத்குரு காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைக் கேட்டு நாமும் சூரியனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வோம். ஆனால் இதுவல்ல சூரிய நமஸ்காரம். தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம். இதை ஏன் செய்ய வேண்டும், இதை செய்வதனால் என்ன பயன் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை... யோகா என்ற வார்த்தைக்கு "உங்களை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்" என்று அர்த்தம். யோகா என்ற வார்த்தை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தை. அது எந்த ஒரு குறிப்பிட்ட பயிற்சியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் எதைச் செய்தாலும் அது யோகாவாக இருக்கலாம். உங்கள் வளர்ச்சிக…
-
- 0 replies
- 538 views
-
-
பிராண வாயுவை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் எளிய யோக - வர்மப் பயிற்சிகள்! மு.ஹரி காமராஜ் யோகா பூரக, ரேசக, கும்பக, தம்பன எனும் நால்வகை சுவாசப் படி நிலைகளில் கால நிர்ணயத்தோடு செய்யப்படும் சுவாசப் பயிற்சியால் பிராண சக்தி பெருகும். இதனால் நிச்சயம் நம் ஆரோக்கியம் மேம்படும். உடலுக்கு உயிர் ஆதாரம் என்றால், உயிருக்குப் பிராணனே ஆதாரம். வாதம், பித்தம், கபம் என்ற மூன்று அடிப்படை உடல் காரணிகளில் வாதமே ஆன்மாவையும் இயக்கக் கூடியது. நாம் சுவாசிக்கும் காற்றில் பெரும்பங்கு கொண்ட ஆக்சிஜன் நாசியில் தொடங்கி உள்ளே சென்று நலம் பயக்கிறது. பிறகு வெளியேறும் ஆக்சிஜன் நாபியில் எழுந்து நுரையீரல் கடந்து விஷ்ணு பாதம் எனும் வெட்டவெள…
-
- 0 replies
- 562 views
-
-
கறுப்பு, வெள்ளையைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை; முந்தைய இரண்டையும் விட இது ஆபத்தானதா? க.சுபகுணம் Mucormycosis ( AP Photo/Amit Sharma ) சர்க்கரை அளவு அதிகமுள்ளவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். கொரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, கறுப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை பாதிப்புகள் இந்தியாவில் தீவிரமடைந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தற்போது மீண்டும் மஞ்சள் பூஞ்சை என்று மற்றுமொரு பூஞ்சை பாதிப்பு உத்தரப் பிரதேசத்தில் தொடங்கியுள்ளது. இந்த மஞ்சள் தொற்று, கறுப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சைகளைவிட மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். …
-
- 0 replies
- 218 views
-
-
ஹாய்! இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க? - Dr. K. முருகானந்தம் Sponsored content சிறுநீரகக் கல் வெயில் காலம் வந்துவிட்டது, இந்நேரத்தில் ஒழுங்காக தண்ணீர் பருகாமல் போனால் அது நம் சிறுநீரகத்தை வெகுவாக பாதிக்கும் என்பது நாம் அறிந்ததே. இதன் நீண்ட கால விளைவுதான் கிட்னியில் தோன்றும் கற்கள். ஆண்கள், பெண்கள், ஏன் ஓடியாடித் திரியும் குழந்தைகளுக்குக் கூட இப்போதெல்லாம் சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்படுகிறது. வெயில் காலத்தில் வியர்வை மற்றும் மூச்சு மூலம் நிறைய நீர்ச்சத்தை இழக்கிறோம். இதனால் உடலின் கழிவுகள் மற்றும் தேவையற்ற தாது உப்புகளை வெளியேற்றத் தேவையான நீர் இல்லாமல் சிறுநீரகம் கஷ்டப்படுகிறது. தாது உப்புகள் சிறுநீர…
-
- 0 replies
- 386 views
-
-
சிகரெட் பிடிப்பதை விடுங்கள்,,, பாலகுமாரனின் அனுபவ பாடம்...! இந்த சிகரெட்தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை. சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்று பத்திரிகை வாயிலாக தெரிந்தபோது, எனக்கெல்லாம் அது நடக்காது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டேன். நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்ற அலட்சியமும் இருந்தது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட்டுகளாக மாறிவ…
-
- 5 replies
- 1.2k views
-
-
பூஞ்சணங்கள் தரும் கிலி: என்ன நடக்கிறது இந்தியாவில்? கோவிட் தொற்றுக்களின் சமகால அல்லது பின்விளைவாக கறுப்புப் பூஞ்சணமும் (தற்போது வெள்ளைப் பூஞ்சணமும்) பரவி வருவதாகச் செய்திகள் வருகின்றன. இவற்றுள் கறுப்புப் பூஞ்சணத்தின் தொற்றுக் காரணமாக இளம் வயதினர் பலர் கண்களை இழக்க வேண்டிய சத்திர சிகிச்சைக்குட்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கறுப்புப் பூஞ்சணம் என்பது என்ன? எங்கள் சூழலில் அழுகல் வளரிகளாக ஏராளமான பூஞ்சண (fungi) இனங்கள் வளர்கின்றன. மண்ணிலும், நீரிலும் வளரும் இந்தப் பூஞ்சண இனங்களில் மிகப் பெரும்பாலானவை மனிதர்களிலோ விலங்குகளிலோ நோய்களை உருவாக்குவதில்லை. தினசரி நாம் சுவாசிக்கும் காற்றின் வழியே இந்தப் பூஞ்சணங்களின் விதைகளுக்கொப்பான மகரந்தங்கள் எங்கள் உடலினுள் சே…
-
- 2 replies
- 659 views
-
-
-
- 0 replies
- 481 views
-
-
நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை கொரோனா பீதி காரணமாக தற்போது உணவு முறைகளில் மக்கள் தீவிரமான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக சென்னைவாசிகள் ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருகிறார்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் மீது தற்போது மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. நோய் திர்ப்பு சக்தியூட்டும் சத்தான ஆகாரங்களை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் உயிர் பெற்று வரும் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளில் கல்யாண முருங்கை இலையும் முக்கியமானதாக இருந்து வருகிறது. முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்று பல பெயர்களிலும் கல்யாண முருங்கை மரங்கள் அழைக…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
மிகவும் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஆண்டுதோறும் லட்சக் கணக்கானவர்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. 2016ஆம் ஆண்டு மட்டும் 7,45,000 பேர் பக்கவாதம் மற்றும் இதய நோய் காரணமாக உயிரிழக்க நீண்ட வேலை நேரம் காரணமாக இருந்தது என்று இத்தகைய பாதிப்புகள் குறித்த முதல் சர்வதேச ஆய்வில் தெரியவந்தது. தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம் மற்றும் மேற்கு பசிஃபிக் பிராந்தியம் ஆகியவற்றில் நீண்ட வேலை நேரம் காரணமாக நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளில் உள்ள எண்ணிக்கையை விடவும் கூடுதலாக உள்ளதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்த நிலை மேலும் மோசமடையக் கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. …
-
- 0 replies
- 542 views
-
-
நடைப்பயிற்சி: ஆர்வலர்களின் குழப்பமும் வல்லுநர்கள் விளக்கமும் மின்னம்பலம் அ.குமரேசன் கொரோனா முதல் அலை ஏற்படுத்திய காயங்களிலிருந்து வடிந்த குருதியின் ஈரம் உலர்வதற்குள்ளாக இரண்டாம் அலை குதறிக்கொண்டிருக்கிறது. மூன்றாவது அலை கூரிய பற்களோடு வர இருப்பதையும், சில நாடுகளில் நான்காம் அலை தன் நகங்களைக் கூர் தீட்டிக்கொண்டிருப்பதையும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளின் தேவை உணரப்படுகிறது. விளையாட்டாகவோ வீம்பாகவோ பொதுமுடக்க விதிகளை மீறக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. வழிபாடு, கொண்டாட்டம் என எந்த வகையிலும் மீறுகிறவர்கள் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாத மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆகவேதான் அணுகுமுறைகளில் மாற்று…
-
- 6 replies
- 892 views
-
-
தடுப்பூசியைத் தவிர்த்து, கொரோனாவிடம் வீழத் தயாராகிறோமா? மே 11, 2021 –ஆதி வள்ளியப்பன் மனித குல வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இயற்கைச் சீற்றங்கள், போர்கள் உள்ளிட்ட எத்தனையோ ஆபத்துகளை எதிர்கொண்டிருந்தாலும், தொடர்ந்து வாழ்வதற்கான யத்தனங்களை மனித குலம் மேற்கொண்டபடியே இருந்துவந்திருக்கிறது. நோயால் மனித குலம் எத்தனை கோடிப் பேரை இழந்தது என்பதை வரலாற்றின் ஓரிரு பக்கங்களைப் புரட்டினாலேயே தெரிந்துகொள்ளலாம். வட அமெரிக்கா-தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் ஐரோப்பியக் காலனியாதிக்கமும் குடியேற்றமும் நிகழ்ந்தபோது, புதிய தொற்றுநோய்களால் பல கோடி உள்ளூர் இனக்குழுக்கள்/பழங்குடிகள் பலியாகினர். அதற்குப் பிறகு அந்த இனக்குழுக்கள்/பழங்குடிகளின் மக்கள்தொகை ப…
-
- 0 replies
- 357 views
-
-
ஜெசிகா பிரவுண் பிபிசி ஊட்டச்சத்து மிக்க உணவுகள் பட்டியலில் நிச்சயம் முட்டைகளும் இடம் பெற்றிருக்கும். அவை உடனடியாகக் கிடைக்கக் கூடியவை, எளிதில் சமைக்கலாம், கட்டுபடியாகும் விலை. புரதம் நிறைந்தது. ``ஓர் உயிரி வளரத் தேவையான சரியான அனைத்து உட்பொருட்களையும் கொண்டதாக முட்டை கருதப்பட…
-
- 23 replies
- 2.7k views
-
-
இன்றைய திகதியில் தெற்காசிய நாடுகளில் முழங்கால் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உலகளவில் முழங்கால் மூட்டுவலியால் 240 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் தெற்காசிய நாடுகளில் 150 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை காட்டிலும், பெண்கள் இரண்டு மடங்கு கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முழங்கால் மூட்டு வலி பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் உடலியல் கோளாறுகளில் நான்காம் இடத்தைப் பிடித்திருப்பதாகவும், இதுகுறித்த முறையான விழிப்புணர்வு இல்லாததால் 20 மில்லியன் மக்களுக்கு மூட்டு மாற்று …
-
- 8 replies
- 1.6k views
-
-
ஒரே நேரத்தில் மலக்கழிவுகள் அனைத்தும் வெளியேறி 3KG எடை 1 நாளில் குறைய இதை குடிங்க.
-
- 7 replies
- 1.3k views
-
-
வெங்காயத்தின் மருத்துவ குணம்பற்றி:- பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்றுதான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம். இந்தவெங்காயத்தின் மூலம் நமக்குச் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது தான் உண்மை. வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம் 1919 ஆம் ஆண்டு பரவிய ஒரு வித காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வந்தனர். இது எந்த விதமான நோய் என்றும், இதற்கு எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றியும் ஆராய்ந்து வந்தனர். அந்த சூழ்நிலையில் ஒரு ஏழை விவசாயின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் எந்த ஆரோக்கிய சீர் கேடுகளும் இ…
-
- 6 replies
- 1.8k views
-
-
இன்றைய தலைமுறை பச்சைக்காய்கறிகளை சாப்பிடுவதை பெரும்பாலும் தவிர்க்கின்றனர். உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற கலர் காய்கறிகளில் செலுத்தும் ஆர்வத்தை பச்சை காய்கறிகளில் அவர்கள் காட்டுவதில்லை. ஆனால் பீன்ஸ், அவரை போன்ற பச்சைக்காய்கறிகளில் தான் ஏராளமான சத்துக்கள் உள்ளது. அதுபோல் ஒரு பச்சைக்காய்கறி தான் முருங்கைக்காய். முருங்கையை “கற்பகத் தரு” என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வார்கள். முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை. முருங்கையி…
-
- 5 replies
- 5.4k views
-
-
அளவு மீறினால் பாலும் விஷமோ? கடலூர் வாசு கடலூர் வாசு பிறந்த முதல் நாளிலிருந்து இறக்கும் வரை, ஏன் இறந்த பின்னும் நம் வாயினுள் செல்லும் ஒரே பானம் பால்தான் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்காது. இந்து மதம் பாற்கடலையே பரந்தாமனின் இருப்பிடமாக கருதுகிறது. பசுவை மற்ற பிராணிகளை போலல்லாமல் ஒரு தெய்வமாகவே இந்துக்கள் பார்க்கின்றனர். தேவர்களும் அசுரர்களும் மரணத்தை வெல்லும் அமிருதத்தை எடுக்க வேண்டும் என்று பாற்கடலை கடைந்து கொண்டேயிருந்தபோது ஆலஹாலம் எனும் கொடிய விஷம் வெளிக்கிளம்பி அதன் நச்சுத்தன்மையை தாங்க முடியாமால் சிவனிடம் அவர்கள் சரணாகதி அடைய அவ்விஷத்தை விழுங்கி தொண்டையில் நிறுத்தியதால் கழுத்தில் நீலம் பர…
-
- 2 replies
- 1.1k views
-
-
சுத்தமாக சுகாதரமாக தயரிக்கப்பட்ட ஆரோக்கிய குளிசைகள் முருங்கை வல்லரை இலைகளை காய வைத்து பொடியக்கி குளிசைகளை நீங்களே தயாரிக்கலாம் வீட்டில், எந்த விற்றமின் குளிசைகளும் எடுக்க தேவையில்லை, பக்கவிளைவுகளுமில்லை. இதேபோல் நீங்கள் விரும்பிய எந்த இயற்கை பட்டைகளையும் (மாதுளை, எலுமிச்சம் பழ கோதுகள்.......) பொடியாக்கி காலை மாலை எடுக்கலாம். குளிசை செய்யும் இயந்திரத்தையும் இக்கருவிக்கான மருந்து கூட்டுக்குளிகைகளையும் (Vegetable கப்சியுள்) ebay, amazon இல் வாங்கலாம். செய்முறை வீட்டில் மகன் செய்த முருங்கை இலை குளிசைகள்
-
- 1 reply
- 1.3k views
-
-
வழுக்கையை தடுக்கும் பூசணி விதை அடர்ந்த கூந்தல் என்பது பெண்களின் ஆசைக்கனவாக இருக்கிறது. ஆனால் முடி உதிர்வு பிரச்சினை கூந்தல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு விடுகிறது. முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு கூந்தல் வளர்ச்சிக்கு சில வகை விதைகள் துணைபுரிகின்றன. அவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் கூந்தல் நலனும் மேம்படும். கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் இரண்டுமே கூந்தலுக்கு ஆரோக்கியமும், பளபளப்பு தன்மையும் ஏற்படுத்தக்கூடியவை. அவற்றுள் தாதுக்கள், வைட்டமின்கள், பாலி அன்சச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், கொழுப்பை குறைக்கும் பைட்டோஸ்டெரால் போன்றவை இருக்கின்றன. அவை இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. ஹார்மோன்கள…
-
- 1 reply
- 636 views
-
-
மரவள்ளிகிழங்கு சாப்பிடுவதற்கு முன்பு இத பாருங்க - Dr.Asha Lenin
-
- 8 replies
- 1.3k views
-
-
செலவே இல்லாமல் எமது சூழலில் கிடைக்கும் இயற்கை மூலிகை உணவுகள்
-
- 1 reply
- 905 views
-