நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
உலகை உலுக்கிய கொள்ளைநோய்களில் 1918-ல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலுக்கு வரலாற்றிலேயே முக்கிய இடம் உண்டு. முதலாம் உலகப் போர் முடிவில் அதுவும் தன் பங்குக்குப் பல கோடி உயிர்களைக் காவுவாங்கியது. போர் நடைபெறாத பசிபிக் தீவுகள், ஆர்க்டிக் துருவப் பகுதியின் கிராமங்களில்கூட காய்ச்சல் கோரத் தாண்டவம் ஆடியது. அன்றைய உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினரைக் காய்ச்சல் பீடித்தது. ஐந்து கோடிக்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலில் இறந்தனர். முதலாம் உலகப் போரில் இறந்தவர்களைவிட மூன்று மடங்கு மக்கள் இந்தக் காய்ச்சலில் இறந்தனர். 1918 காய்ச்சலின் முக்கியத்துவம் என்னவென்றால், இருபதுகளின் பிற்பகுதியில் இருந்த வாலிபர்களை அதிகம் அது பலிகொண்டது. குழந்தைகளையும் முதியவர்களையும் அது கொன்றது என்றாலும…
-
- 0 replies
- 824 views
-
-
உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு மருத்துவமனைகளுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் எனப்படும் செயற்கை சுவாச கருவிகளை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அரசுகள் வாங்கி வருகின்றன. கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை இந்த செயற்கை சுவாச கருவிகளே வழங்குகின்றன. வென்டிலேட்டர் என்றால் என்ன? அது என்ன செய்கிறது? சுருக்கமாக சொல்லப்போனால், நோய்த்தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளியின் ஒட்டுமொத்த சுவாச செயல்பாட்டை மேற்கொள்ளும் இயந்திரம்தான் இந்த வென்டிலேட்டர்கள். இது நோயாளிக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடி அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவகாசம் தருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES வ…
-
- 0 replies
- 423 views
-
-
சிறப்புக் கட்டுரை: கொரோனா - அச்சம் தவிர், ஐயம் களை! மின்னம்பலம் -நிலவளம் கு.கதிரவன் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக வதந்திகள், நாளும் சமூக ஊடகங்கள், இணையங்கள் வழியாக வேகமாகப் பரவி வருகின்றன. இப்புனைவிலிருந்து உண்மை பிரித்தறிவது பெரும் சவாலாகவே உள்ளது. ஆனால், இத்தகைய புனைவுகள் உலகெங்கிலும் இவ்வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றும் இதர மக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலையில் இப்போக்கு மிகவும் ஆபத்தானது ஆகும். முகமூடி அணிந்து கொண்டால் வைரஸின் பாதிப்பிலிருந்து முற்றிலும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது முழுதான உண்மையல்ல. காரணம், அறுவை சிகிச்சை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படும் முகமூடிகள் வைரஸ் துகள்களைத் தடுக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை அல்ல. …
-
- 0 replies
- 764 views
-
-
-
- 3 replies
- 510 views
-
-
நுண்ணுயிரியல் ஆய்வின் நெடுமான் Microbiologist Dr. SP. தியாகராஜன் | Prof. S. P. Thyagarajan
-
- 2 replies
- 556 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் முகக் கவசங்களை போட்டிபோட்டு வாங்கும் நிலையில், கண்கள் வழியாகக் கூட உடலுக்குள் நுழையக் கூடிய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இருமல், தும்மல் இருந்தால் மட்டுமே மாஸ்க் அணியுங்கள், மாஸ்க் அணிவது, அடிக்கடி கை கழுவும் பழக்கம் இரண்டையும் சேர்த்து பின்பற்றும்போதுதான் பயன் கிடைக்கும், ஆரோக்கியமான நபர்கள், கொரோனா தொற்று உள்ள நபரை கவனித்துக் கொள்வதாக இருந்தால் மட்டுமே மாஸ்க் அணிந்தால் போதும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். மாஸ்க்குகள் பாதுகாப்பு கவசமாக செயல்படும் என்றே ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன, ஆனால் மாஸ்க் அணிந்து ஊருக்குள் சுற்றிவருபோது அதனால் பெரிய பயன்கள் ஏதுமில்லை, அதாவது அறைகளில்…
-
- 0 replies
- 306 views
-
-
கொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.! 26-03-2020 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! இன்றைய நிலையில் உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் நம் உடலில் எப்படி நுழைகிறது, பாதிப்பை உண்டு செய்கிறது என தெளிவாய் அறிவோம். கடந்த டிசம்பர் 2019ல் தனது நாட்டின் ஊஹான் நகரில் கொரோனா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக சீனா வெளியுலகுக்கு முதன் முதலாக தெரிவித்தது. இந்த வைரஸ் Severe acute respiratory syndrome (SARS-2) என்ற வகையை சேர்ந்தது. இந்த வைரஸ் உருவாக்கும் நோய்க்குப் பெயர்தான் கோவிட் -19. …
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
மனநோயாகவும் மாறுகிறதா கொரோனா! மின்னம்பலம் தற்போது உலகத்தை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு போன்று, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவும் வைரஸ் தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன. இதுபோன்ற தாக்குதல்கள் மருத்துவத் துறையை மட்டுமல்லாமல் மக்களின் மன நலனையும், சமுகத்தையும், தேசத்தையும் பாதிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பை ஒருவர் எவ்வாறு சமாளிக்கிறார் என்பது மூன்று காரணிகளைப் பொறுத்தது. அவை தனிநபர், சமூகம் மற்றும் சுகாதார அமைப்பு ஆகியவையாகும். சீனாவில் கொரோனா பாதிப்பின் ஆரம்பக் கட்டத்தில் ’வாங்’ என்பவரால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ”53.8 சதவிகித மக்கள் உளவியல் தாக்கத்தை மிதமானது முதல் கடுமையானதாக மதிப்பிட்டதாகவும். 16.5% மக்கள் கடுமையான மனப்பதற்றத்தில…
-
- 4 replies
- 817 views
- 1 follower
-
-
நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கொரோனா நோய் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் சில வழிமுறைகளை கூறுகிறார். திவ்யா சத்யராஜ் சென்னை: “கொரோனா வைரஸ் முதியவர்களையும், சிறு வயது குழந்தைகளையுமே அதிகமாக தாக்குகிறது. ஏனெனில் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாகவே இருக்கும். அதேசமயம், வழக்கத்தை விட மிக குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடைய நடுத்தர வயதினரையும் கொரோனா வைரஸ் தாக்கும். உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்திருக்கும் கொரோனாவிற்கு முறையான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் தாக்குதலில் இருந்து …
-
- 0 replies
- 782 views
-
-
எனது நெருங்கிய நண்பனுக்கு கொரோனா , அவனிடம் நான் கேட்டதை அவன் சொன்னதை இதில் எழுதுகிறேன் உறவுகளே தனக்காம் எப்பவும் இல்லாத அளவுக்கு தலை இடியாம் மற்றும் உடம்புகள் எல்லா இடங்களிலும் அதிக வலியாம் , பாவிக்கிற கைபேசி போன் கூட தன்னால் தூக்க முடிய வில்லையாம் , மூச்சு இழுத்து விட கஸ்ரமாக இருந்ததாம் , தோல் எல்லாம் சுருங்கி போச்சாம் , அவனால் தாங்கி கொள்ளும் சக்தி இருந்த படியால் கொரோனாவில் இருந்து கொஞ்சம் தப்பி விட்டான் , மருத்துவர்களின் ஆலோசனை படி நண்பன் வீட்டை விட்டு வெளியில் போக கூடாதாம் , மருத்துவர்கள் இரண்டு நாளுக்கு ஒருக்கா வந்து பார்த்து உடம்புக்கு ஏதோ தண்ணீர் மாதிரி மருந்தை தடவி போட்டு போகினமாம்…
-
- 49 replies
- 4.9k views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer ஜேம்ஸ் கலேகர், அறிவியல் மற்றும் சுகாதார செய்தியாளர் Getty Images கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது. இந்த வைரஸ் தொற்றால் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் மரணித்து இருக்கிறார்கள். இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. நோயாக உருவாகும் காலம் இது வைரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான காலம். உங்கள் உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட…
-
- 0 replies
- 448 views
-
-
கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி.. கண்டுபிடித்தது அமெரிக்கா.. இன்று முதல் பரிசோதனை! புதிய கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தடுப்பூசியை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. இதை மதிப்பீடு செய்து மருத்துவ சோதனை செய்யும் பணி அமெரிக்காவில் இன்று (திங்கள்கிழமை) தொடங்கும் என அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோவிட் -19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுவது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அதை தடுக்க தடுப்பூசியை உருவாக்கும் பணியில் உலகெங்கிலும் உள்ள டஜன் கணக்கான ஆராய்ச்சி குழுக்கள் போட்டி போட்டு செய்து வருகின்றன. முக்கியமாக, அவர்கள் பல்வேறு வகையான தடுப்பூசிகளைப் பின்பற்றி புதிய தொழில்நுட்பங்களிலிருந்து உருவாக்கி வருகிறார்கள். தற்போத…
-
- 0 replies
- 290 views
-
-
கொரோனா – இன்னொரு பிணி நுண்ணி லதா குப்பா மார்ச் 9, 2020 லதா குப்பா டிசம்பர் மாத துவக்கத்தில் சீனாவின் ஒரு நகரத்தில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று, அடுத்தடுத்த நாள்களில் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளினால் சர்வதேச கவனம் பெற்றது. கொஞ்சம் தாமதமாக விழித்துக் கொண்ட சீன அரசு தங்களுடைய தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்குள் நோய்த்தொற்று மாகாணமெங்கும் பரவி இருந்தது. ”COVID-19” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையைச் சீன அரசு மறைத்துவிட்டதாக எழும்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் இதன் தீவிரத்தை உணர்த்தும். மனிதர்களிடையே பரவும் இந்தத் தொற்று நோயின் தீவிரம் கருதிப் “பொது சுகாதார அவசரநிலை”யாக உலக சுகாதா…
-
- 0 replies
- 584 views
-
-
8 மணி நேரத் தூக்கம் என்பது ஆரோக்கியத்துக்கான ஓர் ஒழுக்கம். இதனுடன் ஒரு மணி நேரத்தைக் கூட்டியோ அல்லது ஒரு மணி நேரத்தைக் குறைத்தோ தூங்குவது உங்கள் உடல்நிலையைப் பொறுத்தது. உயிர் வாழ மூச்சுவிடுதல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தூக்கமும். வயது, பொழுது, நேரம், இருட்டான அறை என்று தூக்கத்துக்கான ஒழுக்கங்கள் பல இருக்கின்றன. அவற்றைப்பற்றி விரிவாகச் சொல்கிறார் தூக்கவியல் மருத்துவர் ஜெயராமன். தூக்கமென்றாலே 8 மணி நேரம்தானா..? ஒரு நல்ல தூக்க ஒழுக்கம் என்பது இரவு 10 மணிக்குப் படுத்து காலை 6 மணிக்கு கண் விழிப்பது. இதுதான் 8 மணி நேரத் தூக்கம். பிறந்த குழந்தைகள் 18 முதல் 20 மணி நேரம்வரை தூங்குவார்கள். 10 வயதில் 12 மணி நேரம், வளர்ந்தபிறகு 6 முதல் 8 மணி நேரம். இப்படி வயதுக்…
-
- 1 reply
- 538 views
-
-
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: இஸ்ரேல் விஞ்ஞானிகளின் முயற்சியில் முன்னேற்றம்! இஸ்ரேலில் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாகவும் இது தொடர்பாக விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை 4,627 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு இலட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸ் முதலில் கால் பதித்த சீனாவில் தற்போது வைரஸ் பரவுவது குறைந்துள்ள போதிலும் ஏனைய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. காய்ச்சல், உடல்வலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற…
-
- 0 replies
- 265 views
-
-
கொரோனா என்பது தற்சமயம் உலகில் அதிகம் வருத்தத்துடனும் வலியுடனும் பயத்துடனும் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாக விளங்குகின்றது. இதற்கு கோவிட்- -19 (civid --19) என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரும் இட்டுவிட்டது. ‘Middle East respiratory Disease, Spanish flu’ என ஊர் பெயரிலோ, ‘Swine flu’ என விலங்கு பெயரிலோ, இனி இந்த வைரஸை அழைக்கக் கூடாது. ‘பழைய பெயர்கள் தேவையின்றி ஊரையும் விலங்கையும் பழித்து, தேவையற்ற சமூக விலக்கலை ஏற்படுத்துகின்றன. வைரஸுக்குக்கூட இன, மொழி, சாதிய அடையாளம் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கிறது. இப்படியான அடையாளங்கள் தேவையற்ற பிரிவினையையும் விலக்கலையும் சமூகத்தில் உண்டாக்கிவிடும் என்பதே இதற்குப் பின்னுள்ள காரணமாகும். கடந்த இரண்டு மாத காலமாக உலகம் ம…
-
- 0 replies
- 804 views
-
-
இன்றைய திகதியில் தெற்காசிய நாடுகளில் முழங்கால் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உலகளவில் முழங்கால் மூட்டுவலியால் 240 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் தெற்காசிய நாடுகளில் 150 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை காட்டிலும், பெண்கள் இரண்டு மடங்கு கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முழங்கால் மூட்டு வலி பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் உடலியல் கோளாறுகளில் நான்காம் இடத்தைப் பிடித்திருப்பதாகவும், இதுகுறித்த முறையான விழிப்புணர்வு இல்லாததால் 20 மில்லியன் மக்களுக்கு மூட்டு மாற்று …
-
- 8 replies
- 1.6k views
-
-
உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய்க்கான தீர்வைத் தேடிக்கொண்டிருக்கையில், பா.ஜ.க பிரமுகர்கள் வழக்கம்போல் பசுவின் சாணத்தையும் கோமியத்தையும் கொரோனா வைரஸுக்கு மருந்தாகப் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டனர். எங்கோ சீனாவில்தானே பாதிப்பு என்றிருந்த கொரோனா வைரஸின் வீரியம் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி விட்டது. இந்தியாவில் மட்டும் 29 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்றைய நிலவரம். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோய்க்கு இன்றுவரை 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 95,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு சீனாவைத் தாண்டியும் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 3,286 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவ…
-
- 0 replies
- 346 views
-
-
கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பு: மனிதர்களிடம் பரிசோதனை செய்ய முடிவு! உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ்க்கு (கோவிட்-19) அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா என்ற நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு, எதிர்வரும் ஜூலையில் வணிகரீதியாக மருந்து விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அரசின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்துக்கு புதிய மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் சார்பில், கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பல் பயணிக்கு மருந்து வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக…
-
- 0 replies
- 288 views
-
-
மனிதனின் உயிரைப் பறிக்கும் நோய்களுள் முக்கியமானது இதய செயலிழப்பாகும். அதிலும், நீரிழிவு நோய்க்கு உள்ளாகியுள்ளவர்களின் இதயமானது சாதாரணமானவர்களின் இதயத்தைவிடவும் மும்மடங்கு பலவீனமானதாகக் காணப்படும். அதன் காரணத்தினால் இதயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவது மிகவும் அவசியம். அதேநேரம், இதயப் பாதிப்புகளானது வயதானவர்களுக்கு மாத்திரமல்லாமல் பிறந்துள்ளவர்களுக்கும் வரலாம். சிறுவயதிலும் வரலாம். நடுத்தர வயதிலும் ஏற்படலாம். இதில், நடுத்தர வயதினருக்கும் முதியவருக்கும் ஏற்படும் இதய நோய்கள் குறித்து தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு இதயப் பாதிப்புக்கள் ஏற்பட உடல்பருமன், உடல் உழைப்பின்மை, நீரிழிவு நோய் கட்டுப்பாடின்மை, தொடர் மனச்சிதைவு நோய், தொடர் மருத்துவப் புறக்…
-
- 0 replies
- 587 views
-
-
உலகம் முழுவதும் பெப்ரவரி 27ஆம் திகதியன்று உலக மோப்ப உணர்வின்மைக்கான விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தற்போது இந்த பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சையும் அறிமுகமாகியிருக்கிறது. உலகில் மிகவும் அரிதாக இருக்கும் பாதிப்புகளில் மோப்ப உணர்வின்மை என்ற பாதிப்பும் ஒன்று. இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்து கூற வேண்டுமென்றால், அண்மையில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான அருவம் என்ற தமிழ் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கேத்தரின் தெரசாவிற்கு இத்தகைய பாதிப்பு இருப்பதாக இயக்குநர் சித்தரித்திருப்பார். தலையில் எதிர்பார விதமாக அடிபடுதல் அல்லது தீவிர வைரஸ் கிருமியின் தொற்று ஆகியவற்றால் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது அனோஸ்மியா எனப…
-
- 11 replies
- 1.2k views
-
-
இரண்டு நாட்களாகச் சிறிது மயக்கமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்த நபரொருவர் வீட்டில் வழமைபோன்று நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டார் அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரது நாடித்துடிப்பு குறைவாக இருந்ததால், ஈ.சி.ஜி எடுத்துப் பார்த்தனர். அப்போது அவரது இதயத் துடிப்பு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அவரது இதயத்தின் வலது மேல் அறையிலிருந்து கீழ் அறைகளுக்கு வருகின்ற இலத்திரன் ஒட்டப் பாதையில் முழுமையாகத் தடை ஏற்பட்டதால் அவர் மயங்கிக் கீழே விழுந்துள்ளார் என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்துள்ளனர். இந்த உபாதை தான் ‘இதயத் துடிப்பு முடக்கம்’ (Comple…
-
- 1 reply
- 823 views
-
-
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் தோல் வங்கி மூலம் இதுவரை 51 பேருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதித்துள்ளனர். உடலின் மற்ற உறுப்புகளை தானம் செய்வது போலவே தோலையும் தானம் செய்வதன் மூலம் பலரது வாழ்வில் ஒளியேற்றலாம் என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..... மனித உடலில் ரத்த நாளங்கள், இதயம், இதயத்தின் வால்வு பகுதிகள், நுரையீரல், சிறுகுடல், சிறுநீரகம், கண், தோல், எலும்பு, முதுகெலும்பு, கல்லீரல், கை என உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தானமாக அளிக்கலாம். இவற்றில், அதிக விழிப்புணர்வின்றி இருப்பது, தோல் தானம்தான். ரத்த வங்கி, கண் வங்கி, எலும்பு வங்கி வரிசையில் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக சென்னை அர…
-
- 1 reply
- 397 views
-
-
நமது உடல் உறுப்புகளிலேயே, தோலும், அதைச் சார்ந்த முடியும், நகங்களும் மட்டுமே, முழுக்க முழுக்க மரபணுக்களைச் சார்ந்தது என்பது, நம்மில் பலர் அறியாத அறிவியல் உண்மை. ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் ஒருவர், தோல், முடி, நகம் போல், இன்னொருவருடைய தோல், முடி, நகம் இருப்பதில்லை. இவ்வுலகில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும், அவர்களுடைய தோலும், முடியும், நகங்களும், அவரவர் மரபணுக்களுக்கேற்ப தனித்துவம் வாய்ந்தவை.எனவே தான், என்றென்றும் கைவிரல் ரேகை, மனிதர்களின் தன்னிகரற்ற, யாராலும் மாற்றவியலாத தனித்துவமிக்க அடையாளமாக, உலகெங்கும் சட்ட ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.கரு உருவான எட்டாவது வாரத்தில் உருவாகி விடும், தோலும், முடியும், நகமும், நம் மரபணுக்களோடு இரண்டறக் கலந்திருப்பத…
-
- 0 replies
- 349 views
-
-
தாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு! மாமிச உணவுகளைக் குறைத்து, தாவர உணவுகளை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் துலானே பல்கலைக்கழக ஆய்வாளர்களினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ‘நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்புகளை உடலில் கலக்காமல் தடுப்பதில், நமது ஜீரணப் பாதையில் உள்ள பக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அசைவ உணவுகளை உண்பதற்குப் பதில், தாவர உணவுகளை உள்கொள்வதன் மூலம், அந்த பக்டீரியாக்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக, உடலில் கொழுப…
-
- 17 replies
- 1.8k views
-