நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
ஆஸ்பிரின் மாத்திரையின் புற்றுநோய்க்கு எதிரான இயல்புகள் குறித்து புதிய நம்பிக்கை தினந்தோறும் சிறிதளவு ஆஸ்பிரினை உட்கொள்வதன்மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்பதுடன் பெரும்பாலும் குணப்படுத்தவும் கூட முடியும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. மருத்துவ சஞ்சிகையான த லான்சட் இல் வெளியாகியுள்ள ஆய்வுகள், அஸ்பிரின் மருந்தின் புற்றுநோய்க்கு எதிரான இயல்புகள் குறித்த புதிய நம்பிக்கையை அளித்துள்ளன. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்காக பலர் தினந்தோறும் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது. ஆனால், இந்த மருந்து புற்றுநோயையும் அதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளையும் தடுக்கக்கூடியது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லையெனவும், அதனால் வயிற்றில் இரத்தப்போக்கு போன…
-
- 17 replies
- 1.8k views
-
-
நவீன காலத்தின் உணவுப் பழக்கங்களால் பெண் குழந்தைகளின் உடல்பருமன் அதிகமாகிறது என்றும் அதனால் சில பெண்கள் 7 வயதிலேயே பூப்படைகின்றனர் என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வெளிப்படையான பார்வைக்கு இது ஒன்றும் பெரிய தவறாக தோன்றாவிடினும் கூட மிகவும் சிறிய வயதில் பூப்படையும் பெண்கள் மருத்துவ ரீதியாக பார்த்தால் பல நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது என்பதால் பெண் குழந்தைகள் விடயத்தில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவில் பத்தில் ஒரு பெண் குழந்தை பூப்படைதலின் முதல் அறிகுறியான மார்புத் தசை வளர்ச்சியுடன் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மிகவும் சிறிய வயதில் பூப்படையும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன் சுரப்பும் வ…
-
- 13 replies
- 1.8k views
-
-
பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம். இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே. “மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை…
-
- 7 replies
- 1.8k views
-
-
இயற்கை வாழ்வியல் உணவு முறைகள் எனும் பதிவில் மதிய உணவிற்கு சிறுதானியங்களினால் சமைத்த உணவை உண்ண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன். சிறுதானியங்கள் குறித்துப் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். சிலர், கேழ்வரகு, கம்பு, நாட்டுச்சோளம் ஆகியவற்றை மட்டுமே சிறுதானியங்கள் என நினைத்திருக்கலாம். சித்த மருத்துவர் திரு.சிவராமன் அவர்கள், ஆனந்த விகடனில் எழுதிய ஆறாம் திணை எனும் கட்டுரைத் தொடரை படிக்கும் வரை, எனக்கும் அதே கருத்து தான் இருந்தது. அந்தத் தொடரைப் படிக்கத் துவங்கியதும், வரகு, திணை, சாமை, குதிரைவாலி மற்றும் பனிவரகு முதலான மற்ற சிறுதானிய வகைகளை அறிந்து கொண்டேன். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வகைகள் அனைத்தும் நமது தாத்தா பாட்டியினரின் இளம்பருவம் வரை, அவர்களின் முக்கிய உண…
-
- 6 replies
- 1.8k views
-
-
இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவதால் ஏற்படும் ஆபத்து என்ன? இரவில் சிறுநீர் கழிக்க தூக்கத்திலிருந்து எழுபவர்கள் தங்கள் உணவில் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்து கொள்ள வேண்டும் என ஜப்பான் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இரவில் அதிகப்படியான சிறுநீர் கழிக்கும் நிலையான நாக்டுரியா, குறிப்பாக 60 வயதை தாண்டியவர்களுக்கு வருகிறது; அதனால் இரவில் தூக்கம் தடைபடுவதால் அது வாழ்க்கை நடைமுறையை பாதிக்கிறது. 300 தன்னார்வலர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வதனால் குறைந்த அளவில் சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சமச்சீர் உணவு, இந்த பிரச…
-
- 0 replies
- 1.8k views
-
-
நித்திரை இன்மை என்பது மக்களைப் பொறுத்த வரை அதுவும் மன அழுத்தங்கள் நிறைந்த இன்றைய உலகியல் மனித வாழ்வியல் முறையில் பொதுவான பிரச்சனை. இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள பலர் நித்திரை மாத்திரைகளை சாப்பிட்டு நித்திரையை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். ஆனால் அவையோ இவர்களின் ஆயுளை சிறுகச் சிறுக வாங்கிக் கொண்டிருப்பது ஆராய்ச்சிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் சுமார் 33,000 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த மருந்துகளால் ஏற்படும் ஆபத்துக் குறித்த எச்சரிக்கையை நோயாளிகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதே அன்றி முற்றாக மாத்திரியை எடுப்பதை நிறுத்தப் பரிந்துரைக்கவில்லை இந்த ஆய்வுக் குழு. இந்த ஆய்வு பல்வேறுபட்ட …
-
- 7 replies
- 1.8k views
-
-
பொதுவாக காய்கறி வகைகளில் பல காய்கள் வேக வைக்காமல் எளிமையான வகையில் சாப்பிடக் கூடியவையாக இருக்கும். ஆனால் நூக்கல் சற்று கடினமான காயாகும். எனவே இதனை நன்கு வேகவைத்து தான் சாப்பிட வேண்டும். இதற்கு நூற்கோல் என மற்றொரு பெயரும் உண்டு. இதில் வைட்டமின்களும், புரத சத்தும் நிறைந்துள்ளது. இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும். முற்றிய நூக்கலை வாங்குவதை விட பிஞ்சு நூக்கலை வாங்குவதே சிறந்தது. நூக்கல் காயின் பயன்கள் குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நூக்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண்டது. ஜீரண சக்தியை அதிகரிக்க உதவு…
-
- 8 replies
- 1.8k views
-
-
நாரிபிடிப்பை(முதுகுவலி) தவிர்ப்பதற்கு கவனமாக இருக்க வேண்டியவை... வேலை நிலையங்களிலும் இதனையே பின்பற்றும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்... மேலும் அறிய http://equalityco.blogspot.com உங்கள் நாளாந்த வேலைகளின் போது சற்று கவனமாக இருந்தால் அதனை வராமல் தடுக்க முடியும். ஒரு பொருளைத் தூக்க வேண்டுமாயின், தூக்க இருக்கும் பொருளின் பாரம் உங்கள் சக்திக்கு மேற்பட்டதெனில் அதனை நீங்களே தனியே தூக்க முற்பட வேண்டாம். உதவிக்கு ஒருவரை அழையுங்கள்.
-
- 1 reply
- 1.8k views
-
-
பொன்னான பொன்னாங்கண்ணி *தினமும் உணவில் கீரைகளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் எந்த நோய்களும் வராது.கீரை மிக குறைவான விலைகளிலே கிடைகிறது.கீரைகளை தவிர்த்து மேற்கத்திய உணவுகளை தேடி அலைந்த பலர் இன்று ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் என்று அவதி படுகின்றனர். *கீரைகளின் பயன்களை சித்தர்கள் பல நூல்களில் எழுதியுள்ளனர். உணவே மருந்து.. மருந்தே உணவு என்ற கோட்பாட்டின் கீழ் தினமும் உணவில் சேர்க்க வேண்டிய கீரைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகின்றோம். இம்மாதம் மேனியைப் பொன்னாக்கும் சிவப்புப் பொன்னாங்கண்ணி பற்றி தெரிந்துகொள்வோம். *இதற்கு அகத்தியர் கீரை, பொன்னாங்காணி, சீமை பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் காணப்படும் இது படர்பூண்டு வகையைச் சார்ந்தது.சீமை பொன்…
-
- 11 replies
- 1.8k views
-
-
தினமும் 30-45 நிமிடங்கள் வீதம், வாரத்துக்கு ஐந்து நாட்கள் நடைப்பயிற்சி செய்வோம். நடைப்பயிற்சி செய்வது... உயர் ரத்த அழுத்தத்தைக் தடுக்கிறது... கட்டுப்படுத்துகிறது. டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. சீரான உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது. மன அழுத்தம் குறைகிறது. கொழுப்பை எரிக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பின் (எச்.டி.எல்.) அளவை அதிகரிக்கச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு ஊட்டச்சத்தை இழந்து அடர்த்தி குறையும் பிரச்னையைத் தடுக்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
50 வயதில் மனமும் நினைவுகளும் நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு மூளையாகும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மூளையும் சுறுசுறுப்பாக வேலை செய்யும். பெரும்பாலானவர்கள் எதற்கெடுத்தாலும் "வயதாகிவிட்டது வயதாகிவிட்டது"என்று சொல்லவார்கள். இது ஒரு பிரச்சனையிலிருந்து அல்லது வேலையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்குரிய முயற்சியாகும். வயது என்பது ஒரு பெரிய விடயமல்ல. முயற்சி செய்தால் உலகத்தில் முடியாதது எதுவுமில்லை. ஒரே மாதிரியான வேலையைச் செய்வதால் மூளைக்கு அலுப்புஏற்படும். இதனால் புதிய புதிய உத்திகளைஎண்ணங்களை தினமும் யோசித்து செய்வது மூளைக்கு உற்சாகம் அளிக்கும். புதிய புதிய தேடுதல்களை மேற்கொள்ளுங்கள் ஓய்வு என்பது வேலை செய்யாமல் ஓய்ந்திருப்பது அல்ல. தொடர்ந்து ஏதேனும் ஒரு வேலையைச்…
-
- 11 replies
- 1.7k views
-
-
மனதை உற்சாகப்படுத்தும் உணவுகள். மனம் நல்ல நிலையில் இருப்பதற்கு உணவும் முக்கியமானது.அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை தேர்ந்தெடுத்து உண்ணும்போது உடல் நலம் சிறப்பாக இருக்கும்.உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.ஜலதோஷம் பிடித்தால் கூட சிடுசிடுப்பும் எரிச்சலும் வந்து விடுகிறது.உடலில் ஏற்படும் நோய்கள் மனதையும் மனதில் ஏற்படும் நலக்குறைவு உடலையும் பாதிக்கும்.இந்திய மருத்துவத்தில் குறிப்பிட்ட உணவு உணர்ச்சிகளில் மாறுபாட்டை உண்டாக்கும் என்று சொல்வதுண்டு. பெரும்பாலான வீடுகளில் நடக்கும் ஒரு நிகழ்வை கவனித்திருக்க முடியும்.நண்பர் ஒருவருக்கு அப்பாவுடன் சண்டை.காரசாரமான விவாதம் நடைபெற்று நண்பர் வெறுத்துப்போயிருந்…
-
- 12 replies
- 1.7k views
-
-
இதுக்கு நான் பொறுப்பல்ல. வாசித்ததை இணைக்கின்றேன் ஆனால் தினந்தோரும் இதை நான் கடைப்பிடிக்கின்றேன் DRINK WATER ON EMPTY STOMACH It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven a its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following diseases: Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases,…
-
- 3 replies
- 1.7k views
-
-
கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளிலும் வேப்பம் மரம் இருக்கும். அதனால் தான் கிராமப்பகுதிகளுக்கு சென்றாலேயே, நன்கு குளிர்ச்சியான மற்றும் சுத்தமான காற்றினை சுவாசிக்க முடிகிறது. மேலும் கிராமப்புறங்களில் பற்களை துலக்க வேப்பங்குச்சியைத் தான் பயன்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி, அக்காலத்தில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வேப்பிலை, வேப்பம் விதை, வேப்பம் பூ, வேப்பம் பட்டை என வேப்பம் மரத்தின் அனைத்து பகுதிகளும் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இக்காலத்தில் அந்த இயற்கை வைத்தியங்களெல்லாம் மறந்து போய்விட்டன என்பதை விட நவீன மருத்துவத்தால் மறைந்து போய்விட்டன எனலாம். இருப்பினும் தமிழ் போல்ட் ஸ்கை ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேப்பம் மரத்தினை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று …
-
- 2 replies
- 1.7k views
-
-
தமிழீழ மருத்துவ மாணவர்களின் தகவல் http://www.tamilkudil.com/tamilkudil/reala...icine_fever.ram தகவல்: தமிழ்க்குடில் புள்ளி கோம்
-
- 0 replies
- 1.7k views
-
-
போலிக் அசிட் எனப்படுவது ஒருவகை விட்டமின். இது கர்ப்பம் தரிக்கும் நேரத்திலே உடம்பில் போதிய அளவிலே இருக்க வேண்டும். இது குறைபாடாக உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது கருவிலே உள்ள குழந்தையின் மூளை மற்றும் முன்னான் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் கரு அழிந்து போவதற்கோ அல்லது அங்கக் குறைபாடான குழந்தை பிறப்பதற்கோ சந்தர்ப்பம் அதிகம். இதைத் தடுப்பது மிகவும் இலகு. கருத்தரிப்பதற்காக எதிர் பார்த்திருக்கும் பெண்கள் போலிக் அசிட் மாத்திரை ஒன்றை ஒருநாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் உட்கொண்டாலே போதுமானது. கருத்தரிக்க மூன்று மாதத்திற்கு முன்னமே இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த மாத்திரையை வைத்தியரின் அனுமதி இல்லாமலேயே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். விலையும் மிகவும் குறைவு.…
-
- 0 replies
- 1.7k views
-
-
ரத்த அழுத்தம் சீராக சாக்லெட் சாப்பிடுங்க!! சாக்லெட்களை சிறிதளவு தினந்தோறும் சாப்பிட்டால் உடலின் ரத்த அழுத்தம் குறைகிறது என ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கோகோ அதிகம் உள்ள கறுமை நிற சாக்லெட்களை சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லது என முந்தைய ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. ஆனால், அதில் இருக்கும் கூடுதல் சர்க்கரை, கொழுப்புச்சத்து மற்றும் கலோரி ஆகியவற்றால் கோகோவால் ஏற்படும் நன்மை கெட்டுவிடுகிறது என்றும் மற்றொரு ஆய்வு அறிக்கை தெரிவித்தது. ஆனால், சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், அதாவது தினந்தோறும் 7 கிராம் அளவுக்கு சாக்லெட் சாப்பிட்டால், எந்த வித பாதிப்பும் இல்லாமல் ரத்த அழுத்தத்தின் அளவு குறைகிறது என்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் டிர…
-
- 0 replies
- 1.7k views
-
-
உயர் ரத்த அழுத்தத்தை குணமாக்க, புதிய முறையிலான சிகிச்சை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளது, அந்நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.இந்த புதிய சிகிச்சை முறையால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறைந்துள்ளது. இந்த புதிய முறையிலான சிகிச்சைக்கு “ரீனல் சிம்பதடிக் நெர்வ் அப்ளேஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறையில், ஒயர் ஒன்று, சிறுநீரகத்திற்கு அருகில் இருக்கும் ரத்த குழாயினுள் செலுத்தப்பட்டு, மிதமான ஷாக் கொடுக்கப்படுகிறது. இதனால், ரத்த அழுத்தத்தை அதிகரிக்குமாறு, மூளையில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் தடுக்கப்படுகின்றன. பிரிட்டனை சேர்ந்த அந்தோணி ஹென்றி(68) என்பவர் தான், அந்நாட்டில், முதன் முதலில் இந்த சிகி…
-
- 0 replies
- 1.7k views
-
-
இறுக்கமற்ற உள்ளாடை 'விந்து எண்ணிக்கையை அதிகரிக்கிறது' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இறுக்கமற்ற உள்ளாடை (ஜட்டி) அணிவது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையையும், விந்தணுவை கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன்களையும் அதிகரிக்க செய்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் ஹார்வர்டு டிஹெச் சான் பொது சுகாதார கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் 656 ஆண்களிடம் இந்த ஆய்வை…
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது. ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர். மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது. அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட…
-
- 3 replies
- 1.7k views
-
-
உலகம் முழுவதும் நீரிழிவு நோய் அதிக அளவில் உள்ளது. இதனால் மனிதர்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே இதைக் கட்டுப்படுத்த லணடன் கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு செயற்கை கணையம் தயாரித்து வெற்றியும் கண்டுள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிப்பின் காரணமாக நீரிழிவு ஏற்படுகிறது. இன்சுலின் மற்றும் குளுகான் என்கிற 2 சுரப்பிகள் சரிவர இயங்காததால்தான் இந்த நோய் உருவாகிறது. இவற்றை கணையம் உற்பத்தி செய்கிறது. இன்சுலின் பீட்டா செல்கள் மூலமும், குளுகான் ஆல்பா செல்கள் மூலமும் தயாராகிறது. கணையம் பாதித்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. எனவே, கேம்ப்ரிட்ஜ் பல்கலையின் ரோமன் ஹோவோர்கா தலைமையிலான நிபுணர் குழுவினர் கடந்த ஐந்தரை ஆண…
-
- 1 reply
- 1.7k views
-
-
தடுப்பூசிகள் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றுகின்றன. இப்படித்தான் இவை வந்தன. இதனால் தான் இது மிகவும் முக்கியமானதாகிறது. கடந்த நூற்றாண்டில் தடுப்பூசிகள் கோடிக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளன. இருப்பினும் பல நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் "தடுப்பூசிகள் மீது தயக்கம் காட்டும்" போக்கு அதிகரித்து வருவதையும் சுகாதார நிபுணர்கள் இனங்கண்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் இது குறித்து கவலை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பத்து சுகாதார அச்சுறுத்தல்களில் இதையும் பட்டியலிட்டுள்ளது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? தடுப்பூசிகள் தோன்றுவதற்கு முன், நோய்களா…
-
- 3 replies
- 1.7k views
-
-
இந்து : ஹலோ டொக்டர்! டொக்டர் : ஹலோ இந்து! என்ன இந்த விடிய வெள்ளன என்னத் தேடி வந்திருக்கிறாய்..என்ன விசயம்? இந்து : அது வந்து டொக்டர்... டொக்டர் : கமோன் இந்து என்னட்ட என்ன தயக்கம்? உன் அம்மாட்ட சொல்லாத உன் போய்பிரண்ட் ஐ பற்றியே என்னட்ட சொல்லியிருக்கிறாய் இப்ப என்ன புதுசா தயக்கம்? இந்து : தயக்கம் என்றில்லை..கொஞ்சம் பயம் கொஞ்சம் குழப்பம்..அதான் உங்களிட்ட எப்பிடிக் கேக்கிறதெண்டு.. டொக்டர் : வெளிப்படையாப் பேசினாத்தான் குழப்பம் தீரும். என்ன விசயமம்மா? இந்து : செக்ஸ்ல ஒருக்காலும் ஈடுபடாத ஆக்களுக்கும் ஜெனிற்றல் வார்ட் வருமா டொக்டர்? டொக்டர் : இல்லை! ஜெனிற்றல் வார்ட் வாறதுக்கு தகாத உடலுறவு , கருத்தடை மாத்திரை உட்கொள்ளல் போன்ற பல காரணங்கள் இருக்கு. இ…
-
- 2 replies
- 1.7k views
-
-
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம். தலைவலி : நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி த…
-
- 1 reply
- 1.7k views
-
-
டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்! டாக்டர் வேதமாலிகா Webdunia இன்று நாம் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வே இயந்திரமயமாகிப் போய்.. நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம். நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது. ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம். அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம். இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது. மனமும், உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது. மூளை சரியாக செயல்பட மறுக்கிறது. இப்படி உடலும்,…
-
- 3 replies
- 1.7k views
-