நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
-
குறைந்த அளவு மதுபானம் அருந்துவது உடல்நலத்திற்கு நல்லதா? லௌரல் லிவிஸ்பிபிசி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒவ்வொரு நாளும் ஒரு குவளை ஒயின் குடிப்பது ஆரோக்கியமானது என நினைத்துகொண்டு குடிப்பவர்களா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு ஒரு தீய செய்தி. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆல்கஹால் குடிப்பதில் பாதுகாப்பான நிலை என்று எதுவுமே இல்லை என்பதை காட்…
-
- 4 replies
- 937 views
-
-
கர்ப்பினிப் பெண்களின் குறைப்பிரசவத்தை அறிய செய்யும் ரத்தப் பரிசோதனை ஒன்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். படத்தின் காப்புரிமை Getty Images அதி உயர் பிரசவ கால ஆபத்து உள்ள பெண்கள் மத்தியில் இந்த ஆய்வு முடிவுகள் 80 சதவீதம் துல்லியத்தோடு இருப்பதாக 'சயின்ஸ்' சஞ்சிகையில் வெளியான தொடக்க நிலை ஆய்வு தெரிவிக்கிறது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆய்வில் தெரியும் அளவுக்கு இந்த ரத்தப் பரிசோதனை மூலம் குழந்தை பிறக்கின்ற தேதியையும் துல்லியமாக கணிக்க முடிவதாக, அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 487 views
-
-
நம்பினால் நம்புங்கள் அல்லது நம்பாமல் இருங்கள், நீண்ட நாட்கள் வாழ்வதற்கான முக்கிய சூட்சுமம், குறைவான அளவு உணவு சாப்பிடுவதில்தான் உள்ளதாக புதிய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்களுக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ, மிருகங்களிடம் இந்த ஆய்வை நடத்திபார்த்ததில் அவை நூற்றுக்கு இருநூறு விழுக்காடு சரியென நிரூபணமாகி உள்ளதாக அடித்துக் கூறுகின்றனர் பிரிட்டனை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள். இது தொடர்பாக அவர்கள் நடத்திய மருத்துவ ஆய்வில், கடுமையான உணவு கட்டுப்பாடு, அதாவது தேவைக்கு ஏற்ப, கொஞ்சமாக மட்டும் சாப்பிடுவது, முதுமை அடைவதை தள்ளிப்போடுவதாக தெரியவந்துள்ளது. குறைவாக சாப்பிடுவதன் மூலம், உடலின் உயிரணுக்கள் எப்போதும் சக்தியை எதிர்பார்த்து இருக்கும் என்பதால், அவை அதன் ஆ…
-
- 16 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குளிப்பது நம் தோலில் உள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெயை நீக்குகிறது கட்டுரை தகவல் ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி 23 செப்டெம்பர் 2025, 05:01 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் சிலர் காலையில் குளிக்க விரும்புகிறார்கள், சிலர் மாலையில் அல்லது இரவில் குளிக்க விரும்புகிறார்கள். யார் சரியாக செய்கிறார்கள்? இந்த உலகில், ஒரு சிறிய கேள்வி கூட பெரிய விவாதத்தை உருவாக்குகிறது, நீங்கள் காலையில் எழுந்தவுடன் குளிப்பவரா? அல்லது இரவில் படுக்க செல்வதற்கு முன் குளிப்பவரா? அல்லது தினமும் குளிக்காத 34% அமெரிக்கர்களில் ஒருவரா? நீங்கள் எந்தப் பக்கம் இருந்தாலும், உங்கள் தேர்வு உங்கள் உடல்நலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் யோசிக்கலாம…
-
-
- 11 replies
- 664 views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிரேஸ் டிர்ரெல் பதவி, குளித்த பின்னர் துடைப்பதற்காக நாம் அதிகம் பயன்படுத்தும் துண்டுகளில் நுண்ணுயிரிகள் இருக்கும். அப்படியென்றால், அதை துவைப்பதற்கு முன் எவ்வளவு நேரம் நாம் காத்திருக்க வேண்டும்? இன்றைக்கு நீங்கள் ஏற்கனவே ஒரு துண்டின் மூலம் உங்கள் உடலை துடைத்திருப்பீர்கள். ஆனால், அந்த துண்டு உண்மையில் எவ்வளவு சுத்தமாக உள்ளது? நம்மில் பெரும்பாலானோர் வாரத்திற்கு ஒருமுறை துண்டை வாஷிங் மெஷினில் துவைப்போம். ஒரு ஆய்வில் பங்குபெற்ற 100 பேரில், மூன்றில் ஒருபங்கு மக்கள், மாதத்திற்கு ஒருமுறை தங்களது துண்டுகளை துவைப்பதாக தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கணிப்ப…
-
- 0 replies
- 501 views
- 1 follower
-
-
*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்* உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.**அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!**சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?* *குளியல் = குளிர்வித்தல்**குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.* *மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.* *இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.* *காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.* …
-
- 2 replies
- 1.6k views
-
-
குளிர்காலம் வந்தாலே நம்மை பல தொற்றுநோய்கள் தாக்க தொடங்கி விடும். அதனால், இந்த குளிர்காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தெரிவுசெய்து உட்கொள்ள வேண்டும். இதன் மூலம், குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக உடல்வளத்தை பெறலாம். இஞ்சி சிகிச்சை மருத்துவப் பலன்களை பெற்ற இஞ்சி குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும். இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர்காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை ப…
-
- 12 replies
- 1.1k views
-
-
குளிர்காலத்தில் `புளிப்பு' வேண்டாம்! சனி, 01 ஜனவரி 2011 05:44 குளிர்காலம் என்றாலே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. அந்த நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சட்டென்று வந்து ஒட்டிக்கொண்டு விடுகின்றன. பொதுவாக, கோடைகாலத்தில் குளிர்பானங்களுக்கு எல்லோருமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காரணம், அப்போது வெயில் காரணமாக உடலில் அதிக அளவில் வியர்வை வெளியாகும், சக்தி இழப்பு உடனே ஏற்படும். இதுதவிர, `அல்கலைன் சிட்ரைட்' என்ற அமிலமும் அதிக அளவில் வெளியாகிறது. புளிப்பு சுவை கொண்ட மோர், பானகம் உள்ளிட்ட பானங்களை அப்போது அருந்துவதன் மூலம், அந்த அமில இழப்பை சரி செய்து கொள்ளலாம். இதே புளிப்பு சுவை கொ…
-
- 0 replies
- 626 views
-
-
நோய்த்தடுப்பு மருந்துகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லாவிட்டால் அதன் வீரியம் குறையும், சிகிச்சை பலனளிக்காமலும் போகும். எனவே, குளிர்சாதன வசதி என்பது சில மருந்துகளுக்கு தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. இதற்கு மாற்றுவழியாக ஜெல் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது மக்கள் பயன்பாட்டுக்கு வர தயாராகவும் உள்ளது.குளிர்சாதன பெட்டி வசதியில்லாத இடங்களிலும், பயணங்களிலும் தடுப்பு மருந்துகளை பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய புதிய ஜெல் ஒன்றினை தற்போது கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவின் மெக்மாஸ்டர் வேதி பொறியாளர்களின் குழு.மலைப்பிரதேசங்கள், காட்டுப்பகுதிகள், புறநகர் சிற்றூர்கள் போன்ற போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் நோய் …
-
- 0 replies
- 931 views
-
-
குளிர்ந்த நீரில் நீச்சல்: யுக்ரேன் போரிலிருந்து தப்பித்த பெண்ணின் மனநலனை மேம்படுத்தியது எப்படி? "கடலில் குளிர்ந்த நீரில் நீச்சலடிப்பது, என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது." என்கிறார், யுக்ரேனை சேர்ந்த ஸ்விட்லானா. ரஷ்யா போர் தொடங்கியவுடன் அயர்லாந்துக்கு தப்பித்து வந்தார். 2022-ல் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். "எதுவுமே சாப்பிட முடியாது. வாந்தி எடுத்துவிடுவேன். உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடும் மன அழுத்தம் இருந்தது. என் குழந்தைக்காக தொடர்ந்து பயணித்தேன்." என கூறுகிறார் அவர். அவரை, குளிர்ந்த நீரில் நீச்சலடிக்குமாறு மருத்துவர் கூறியுள்ளார். குளிர்ந்த நீரில் நீச்சலடிப்பது அவருடைய மனநலனை மேம்படுத்தியுள்ளது. எ…
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
நாம் சாப்பிடும் உணவானது நமது உணவுக் குழாயில் குளுகோஸாக மாறி இரத்தத்தில் கலக்கிறது என்று முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இந்த குளுகோஸ் இரத்தத்தின் மூலமாக நமது உடம்பின் ஒவ்வொரு திசுக்களுக்கும் சென்று அடைகிறது. (மனித உடலில் சுமார் 10 லட்சம் கோடி திசுக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்). ஒவ்வொரு திசுவும் ஒரு ரசாயனத் தொழிற்சாலை போல செயல்படுகிறது. இரத்தத்தின் மூலம் இவைகளுக்கு மனிதனின் எரிபொருளான குளுகோஸ் மற்றும் பிராணவாயு சென்று அடைகின்றன. இரத்தத்திற்கு பிராணவாயு நுரையீரலிலிருந்து கிடைக்கிறது என்ற ரகசியம் உங்களுக்கு முன்பே தெரியும். நாம் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விறகு எரிதலைப் பார்த்திருக்கிறோம். அதிலுள்ள ரசாயன மாற்றத்தைப் பற்றி எத்தனை பேர் சிந்தித்திருப்போம? விறக…
-
- 2 replies
- 1.9k views
-
-
குழந்தை ஆரோக்கியம்: சேற்றுக் குளியல் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்கிறது? அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் ㅤ 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைகளுக்கு அழுக்காவது மிகவும் பிடிக்கும். அதனால்தான் சேற்றைப் பார்த்தவுடன் தங்களது செருப்பு, உடை உட்பட எதையும் பொருட்படுத்தாமல் இறங்கி விடுகிறார்கள். குழந்தைகள் அழுக்காவது அவர்கள் உடல் நலத்திற்கும் நன்மை பயக்கலாம். 'அழுக்காகாதே...' என்ற கண்டிப்பு ஒரு காலத்தில் எல்லா குடும்பங்களிலும் இருந்தது. அதற்கு காரணம், தங்கள் குழந்தைகள் சிறந்த ஆடைகளைக் கெடுத்துக் கொள்வதை பெற்றோர்கள் விரக்தியுடன் பார…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் எப்போது தனக்குக் குழந்தை பிறக்கும் என்று அவளின் முதல் எதிர்பார்ப்புத் தொடங்கி விடும். வைத்தியர்களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்போது அவளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறுவார்கள். மருத்துவர்கள் எப்போது குழந்தை பிறக்கும் என்று எவ்வாறு கணிக்கிறார்கள்? இதில் எந்த தந்திரமும் இல்லை மந்திரமும் இல்லை. நீங்களும் இலகுவாக கணித்துவிடலாம். முதலில் உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட திகதியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு அந்த திகதியோடு ஒன்பது மாதங்களையும் ஏழு நாட்களையும் கூட்டி விடுங்கள். அதுதான் உங்கள் குழந்தை பிறக்கும் நாளாகும். உதாரணத்திற்கு உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்டது ஜனவரி மாதம் முதலாம் திகதி என்றால், முதலாம் மாதத…
-
- 3 replies
- 906 views
-
-
குழந்தை பேறு பெண்ணின் மூளையில் எம்மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு பெண் கர்ப்பமானபோதும் குழந்தை பெற்றெடுத்த பிறகும் அவரின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால் நமக்கு தெரியாத ஒன்றும் உள்ளது. அது குழந்தை பேறு பெண்ணின் மூளை அமைப்பையும் மாற்றும் என்பதுதான். குழந்தையை கருவில் சுமக்காத தாயோ அல்லது தந்தையோ குழந்தையை பார்த்து கொள்வதன் மூலம் அவர்களின் மூளையின் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தை பெறுவது மூளையை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆராய்ந்த நிபுணர் குழுவை நேர்காணல் செய்து பிபிசி அறிவியல் பத்திரிகையாளர் மெலிசா ஹோஜென…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
பிரசவத்திற்குப்பின்பு வயிறு உப்பிக்கொண்டே போகிறதே என்று நிறைய பெண்கள் கவலைப்படுவதுண்டு. அப்படிப்பட்ட பெண்களுக்கு அற்புதமான பாட்டி வைத்திய முறை இதோ: "அந்தக் காலத்துல பிரசவத்தப்போ சில மருந்துகளை கட்டாயமா சாப்பிடுவாங்க... இப்பவும் பிரசவ லேகியம்னு விக்கிது... பிரசவத்தின் போது அத வாங்கி சாப்பிடலாம். பிரசவம் ஆகும் போது தச வாயுக்களும் இடம்பெயர்ந்து அங்கங்கே தங்கிக் கொள்ளும். அது வந்து வயிற்றில் இறங்காமல் இறுக துணியால கட்டிக்கணும். இதெல்லாம் அந்தக் காலத்துல இயல்பாகவே செய்யிறதுதான். இந்தக் காலத்து பெண்களுக்குத்தான் அதெல்லாம் பிடிக்க மாட்டேங்குதே..." "பிரசவமான பெண்களுக்கு உணவுக் கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். வாயு பதார்த்தங்கள அறவே ஒதுக்கணும். நார்ச்சத்துள்ள பொருட்களையும் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
குழந்தை வளர்ப்பு - பிறப்பு முதல் பத்து வயது வரை குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம். குழந்தை வளர்ப்பில் அடிப்படையான விஷயங்கள் இங்கே தரப்படுகின்றன. பிறப்பு முதல் ஒரு வயது வரை: பிறந்த குழந்தைக்கு தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் என்ற சந் தேகம் பல தாய்மார்களுக்கும் ஏற்படு கிறது. குழந்தை ஒவ்வொரு முறை அழும் போதும் பசியால்தான் அழுகிறதோ என்று நினைக்கிறார்கள். குழந்தைக்கு தேவையான அளவு உணவு கிடைக்கிறதா என்பதை அறிய பலவழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று குழந்தையின் எடையை கவனிப்பது.…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 710 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 20 மே 2024, 10:46 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நகரங்களில் வாழும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு 'மையோபியா' எனும் கிட்டப்பார்வை கண் குறைபாடு ஏற்படலாம் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறுகின்றனர். உலக அளவில் மே 13 முதல் 19 வரை கிட்டப்பார்வை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. வளரிளம் குழந்தைகளிடையே பெருகி வரும் இந்தக் கண்சார் குறைபாடு சமீப காலமாக ஏற்பட்டுள்ள வாழ்க்கைமுறை மாற்றங்களால் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள்…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அன்பு வாகினி பதவி, உணவுத் தொழில்நுட்ப வல்லுநர் 18 ஜூன் 2025, 08:31 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் உலகளவில், குறிப்பாக இந்தியாவில், உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 Diabetes) ஆகியவை வேகமாக அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய ஆய்வுகளின்படி, 2030க்குள் உலகில் உடல் பருமனாக இருக்கும் பத்து குழந்தைகளில் ஒன்று இந்தியாவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது. இது பெரும்பாலும் வயதானோருக்கு…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
அண்மையில் 3-5 வயதுக்கு உட்பட்ட 1076 சிறுவர்களின் உணவு பழக்கம், அவர்களின் குருதியில் இருக்கும் உயர் அடர்த்தி கொல்ஸ்திரோல் (HDL - cholesterol), குறைந்த அடர்த்தி உடைய கொல்ஸ்திரோல் (LDL - cholesterol) தொடர்புகளை ஆய்வு செய்யப்பட்டது. குருதியில் அதிக அளவில் குறைந்த அடர்த்தி உடைய கொல்ஸ்திரோல் (LDL - cholesterol) இருப்பது இதய வருத்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் காரணி ஆகும். அதிக கொழுப்புள்ள / உடல் நலனுக்கு உதவாத (அதிக சீனி, குறைந்த நார் சத்து) உணவுகள் கொடுக்கப்பட்ட சிறுவர்களின் குருதியில் அதிகரித்த LDL - cholesterol இருப்பது அறியப்பட்டது, இது பின்னாளில் இதய வருத்தங்கள் ஏற்பட காரணமாகலாம். அத்துடன் சிறுவர்களுக்கு தரமான அதிக மரக்கறி, பழ வகைகளை கொடுக்கும் பொது அவர்க…
-
- 0 replies
- 670 views
-
-
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? இதற்கு அவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது. ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும்,போதிய போசாகின்மையாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவர். இவை அனைத்திற…
-
- 1 reply
- 10.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஓம்கார் கர்ம்பேல்கர் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மார்ச் 2024 குடற்புழுக்கள் ஒரு பெரிய பிரச்னை. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மற்றும் பிற காரணங்களால் புழுக்கள் உடலில் நுழையலாம். மலத்தில் நீண்ட புழுக்கள் இருப்பது, வயிற்று வலி மற்றும் ஆசன வாயில் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை ஆய்வு செய்த பிறகு நோய் கண்டறிதல் செய்யப்படுகிறது. வயிற்றில் காணப்படும் இந்த புழுக்கள் இரைப்பை புழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. வட்டப்புழுக்கள், தட்டைப்புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்கள் ஆகியவை இதில் அடங்கும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு குணாதி…
-
- 0 replies
- 605 views
- 1 follower
-
-
குழந்தைகளின் வளர்ச்சிக்கு 16 உணவுகள். 0 வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமை. ஆகவே குழந்தைகள் வளரும் போதே, அவர்களின் உடல் நலனில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமை. ஆகவே குழந்தைகள் வளரும் போதே, அவர்களின் உடல் நலனில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் சரியாக குழந்தைகளை கவனிக்காவிட்டால், குழந்தைகளின் உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை, வைட்டமின் பற்றாக்குறை போன்றவை ஏற்படும். மேலும் குழந்தைகள் வளர்ந்த பின்னர், அவர்களை பள்ளிக்கு அனுப்பும் போது நன்கு புத்திசாலித்தனத்துடனும், சிறந்த அறிவாளியாகவும் இர…
-
- 0 replies
- 1.2k views
-
-
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்தால், அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்க அக்கடமி, குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது. ஆராய்ச்சியின் முடிவில், 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து வருவார்களேயானால் அவர்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அத்தகைய குழந்தைளின் பேச்சுத்திறன் தாமதப்படுவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். இந்தக் குறைபாடுகளைப் போக்க, இந்த வயது வரம்புக்குள்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க அவர்களிடம் பெற்றோர்கள் பேச்ச…
-
- 2 replies
- 1.5k views
-