Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைகள் அதன் மோசடிகள் – சிவபாலன் இளங்கோவன் ஆகஸ்ட் 2022 - சிவபாலன் இளங்கோவன் · கட்டுரை பதினாறு வயதுடைய சிறுமியை அவளது தாயே கட்டாயப்படுத்தி, பல முறை கருமுட்டை தானத்திற்கு உட்படுத்திய சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிச்சத்திற்கு வந்தது. குழந்தைப் பருவத்தையே இன்னும் முழுமையாகத் தாண்டாத ஒரு சிறுமியிடமிருந்து கருமுட்டையை எடுத்துப் பணம் ஈட்டலாம் என்ற எண்ணமே இரக்கமற்ற மன நிலையின் வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும். கொஞ்சமும் மனிதத்தன்மை இல்லாத செயலாகத்தான் அதைப் பார்க்க முடியும். அதுவும் அதை அவளது தாயே செய்வதை நாம் எப்படி புரிந்து கொள்வது? அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், இது முதல் சம்பவம் அல்ல, இது போன்ற ஏராளமான சம்ப…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜானெட் ரோட்ரிக்ஸ் பல்லேரஸ் பதவி,தி கான்வர்சேஷன்* 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம்… அமெரிக்காவின் பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான ராபர்ட் ஜே. ஒயிட், கிளீவ்லேண்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் வழக்கத்திற்கு மாறான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார். குரங்கு ஒன்றின் தலையை எடுத்து மற்றொன்றின் உடலில் பொருத்துவதுதான் அது. சிக்கலான அந்த அறுவை சிகிச்சை, கிட்டத்தட்ட 18 மணி நேரம் நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த குரங்கு கண் விழித்தவுடன் அதனால் பார்க்கவும், நுகரவும், ஏன் கடிக்கவும் கூட முடிந்தது. குரங்கிற்கு மேற்கொள…

  3. இதய நோய் மற்றும் அதன் பராமரிப்பு தொடர்பான Dr K Ranjadayalan, Consultant Cardiologist அவர்களுடனான நேர்காணல்

  4. இனி எப்பொழுதும் எலுமிச்சை தோல் கழிவில்லை. எலுமிச்சை பழம் பொதுவாக Vitamin C சத்து கூடியது என்பது அனைவரும் அறிந்தவையே. எலுமிச்சையிலிருந்து பெறப்படும் தயாரிப்புகள் அதனுடைய சத்…

  5. சோயா உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது ஆண்களில் விந்து உற்பத்தியை பாதிக்கலாம் என அண்மைய ஆராய்சிகள் தெரிவிக்கிறன. சோயா உணவை உட்கொள்ளும் ஆண்களில் காணப்படும் விந்து கலங்களின் எண்ணிக்கை சோயா உணவை உட்கொள்ளாத ஆண்களிலும் குறைவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 15 வகையான சோயா உணவுகளை கொடுத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் சோயா உணவை உட்கொண்ட ஆண்கள் 41 மில்லியன் விந்து கலங்கள் / மில்லி லீற்றர் விந்து பாயத்தில் (திரவத்தில் )காணப்படுவதாகவும் , இது பொதுவாக ஆண்களில் காணப்படும் சராசரி விந்து எண்ணிக்கையான 66 மில்லியன் விந்து கலங்கள்/ மில்லிலீற்றர் விந்து பாயத்திலும் கணிசமான அளவு குறைவாகும். சோயா உணவுகளில் உள்ள ஐசோ பிளேவோன்கள் (isoflavone)இதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது. சோயா உண…

    • 10 replies
    • 2.8k views
  6. கொரோனா – இன்னொரு பிணி நுண்ணி லதா குப்பா மார்ச் 9, 2020 லதா குப்பா டிசம்பர் மாத துவக்கத்தில் சீனாவின் ஒரு நகரத்தில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று, அடுத்தடுத்த நாள்களில் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளினால் சர்வதேச கவனம் பெற்றது. கொஞ்சம் தாமதமாக விழித்துக் கொண்ட சீன அரசு தங்களுடைய தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்குள் நோய்த்தொற்று மாகாணமெங்கும் பரவி இருந்தது. ”COVID-19” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையைச் சீன அரசு மறைத்துவிட்டதாக எழும்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் இதன் தீவிரத்தை உணர்த்தும். மனிதர்களிடையே பரவும் இந்தத் தொற்று நோயின் தீவிரம் கருதிப் “பொது சுகாதார அவசரநிலை”யாக உலக சுகாதா…

  7. நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கொரோனா நோய் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் சில வழிமுறைகளை கூறுகிறார். திவ்யா சத்யராஜ் சென்னை: “கொரோனா வைரஸ் முதியவர்களையும், சிறு வயது குழந்தைகளையுமே அதிகமாக தாக்குகிறது. ஏனெனில் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாகவே இருக்கும். அதேசமயம், வழக்கத்தை விட மிக குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடைய நடுத்தர வயதினரையும் கொரோனா வைரஸ் தாக்கும். உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்திருக்கும் கொரோனாவிற்கு முறையான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் தாக்குதலில் இருந்து …

  8. கூன் விழுவதன் காரணம் – மருத்துவர் விளக்கம் September 16, 2025 0 வயதாகும்போது தங்கள் உயரத்தில் சில அங்குலங்கள் குறைவது அல்லது உடலில் கூனல் விழுவது அல்லது குனிந்த முதுகு ஏற்படுவது போன்ற பிரச்னையை சில முதியோர் சந்திக்கின்றனர். ஆனால், இதை பலரும் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. இதை முதுமையின் இயல்பான ஒரு பகுதியாகவே கருதி அலட்சியம் செய்துவிடுவார்கள். ஒரு குறுகிய காலத்தில் 1.5 அங்குலம் (4 செ.மீ) உயரம் குறைந்தால், அது வெறும் முதுமையின் பாதிப்பல்ல. குனிந்த அல்லது கூன் விழுந்த தோற்றத்துடன் கூடிய திடீர் (கவனிக்கத்தக்க அளவிற்கு) உயர இழப்பு ஏற்படுமானால், அது முதுகெலும்பு அழுத்த முறிவின் (VCF) ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம். இந்த முறிவுகள், 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒவ்வொரு …

  9. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் டேவிட் காக்ஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் 15 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி முதல், தினசரி முறையான தூக்கம் வரை - உங்கள் 30களில் சில பழக்கங்களைப் பின்பற்றுவது 70கள் வரை கூட உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உங்கள் வாழ்க்கையில் எழுபதுகளை அடையும் போது, இளமைப் பருவத்துடன் ஒப்பிடுகையில், சற்றே பலவீனமாகவும், சோர்வாகவும், அறிவாற்றல் ரீதியாக பின்னடைவைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளது. உங்களது தூக்கம் சார்ந்த வழக்கங்கள் மாறியிருக்கலாம், இதனால் காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பீர்கள், மாலையில் தூக்க கலக்கத்தை அதிகமாக உணருவீர்கள். மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மக்கள்தொகை சராசரிகளின் அடிப்படையில், உங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாள்ப…

  10. மரப்பு நோய் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை அறிவித்துள்ள கனடா விஞ்ஞானிகள் நம்முடைய வலிமையையும், உள்ளுரத்தையும் பலவீனமாக்கிவிடும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் தண்டுவட மரப்பு நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அளித்துள்ள சிகிச்சை இந்த நோயால் ஏற்படும் நிலைமை மோசமாவதை தடுப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நோய் பெற்றிருந்த சிறியதொரு குழுவினரின் நோய் எதிர்ப்பு அமைப்புகளை அழித்துவிடுவதற்கு கதிரியக்க சிகிச்சையை பயன்படுத்தியதை ‘லேன்செட்’ என்ற மருத்துவ இதழில் ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர். அவ்வாறு அழிக்கப்பட்டவை ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுக்கள…

  11. இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும் குளிர்பானமாக உள்ள கோக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? முதல் பத்து நிமிடம்: நமது இரத்த மண்டலத்தில் பத்து தேக்கரண்டி அளவிலான சர்க்கரை ஒரே நேரத்தில் பாய்கிறது. (இது ஒருநாள் முழுவதும் ஒரு மனிதர் உட்கொள்ளக் கூடிய அதிகபட்ச சர்க்கரையின் அளவாகும்) இதன்விளைவாக, உங்களுக்கு வாந்தி வரக்கூடும். ஆனால், கோக்க கோலாவில் உள்ள ‘பாஸ்பரிக் ஆஸிட்’ இந்த குமட்டல் அறிகுறியை அடக்கி விடுகிறது. இருபதாவது நிமிடம்: உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாக கூடுகிறது. இதன் விள…

  12. பெப்டிக் அல்சரை தவிர்க்கலாமே..! இன்றைய நவீன வாழ்க்கையில், எம்மில் பலரும் அல்சர் என்ற இரைப்பைப் புண்ணுடனேயே வாழ்கிறோம். அத்துடன் இதணை வயது வேறுபாடின்றி, பாலின வேறுபாடின்றி அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாகவும் இருந்து வருகிறது. எமது, இரைப்பையில், புரத உணவை செரிமானம் செய்ய, இரைப்பை, ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கின்றது. ஒரு நாளில், கிட்டத்தட்ட 1.5 லீற்றர் அளவிற்கு இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. இந்த அமிலம், எமக்கு உணவு செரிமானம், கிருமி எதிர்ப்பு, விற்றமின்கள் உட்கிரகிப்பு என பல வகைகளில் பயன்படுகிறது. இரைப்பையில் இந்தஅமிலம் அதிகமாகச் சுரக்கும்போது இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றிலுள்ள மியூகஸ் என்ற படலம் சேதமடைவதையே இரைப்பை அழற்சி (Gast…

  13. நாம் நம்மை கவனித்துக் கொள்வதில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எனினும், நம்முடைய ஆரோக்கியத்திற்கான சவால்களை எதிர்கொள்வதில், பிரம்மாண்டமான முயற்சிகளை செய்ய வேண்டியுள்ளது. Fruits and Vegetables நாம் ஏன் சில எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி நமது ஆரோக்கியத்தை உடனுக்குடன் பேணிக் கொள்ளக் கூடாது? இதன் மூலம் நமது நெடுநாளைய குறிக்கோள்களும் நிறைவேறும் அல்லவா? இந்த கட்டுரையில், நமது தலை முதல் பாதம் வரையிலான உடலின் பல்வேறு பகுதிளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில வழிமுறைகளை கொடுத்துள்ளோம். மூளைக்கு மீன் வேண்டும் Fish curry ஒமேகா-3 கொழுப்புகள் உள்ள சாலமன் அல்லது மக்கெரல் போன்ற எண்ணைய் மிகுந்த மீன்களை வாரந்திர உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மூளை சுருங்குவதை குறைக்…

  14. தண்ணீர் எனும் மேஜிக் பானம் - கோடை காலத்தில் இதை கண்டிப்பா செய்யுங்க! கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுப்ரியா ராஜசேகர் பதவி,பிபிசி தமிழ் 31 நிமிடங்களுக்கு முன்னர் கோடை காலம் நெருங்குகிறது. ஆனால் இப்போதே வெயிலுக்கு பஞ்சமில்லாமல் சுட்டெரிக்கிறது. 1901ஆம் ஆண்டுக்கு பிறகு பிப்ரவரி மாதம் அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் சராசரியாக அதிகபட்சமாக 29.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மார்ச் மற்றும் மே மாதங்களில் வெப்ப அலை ஏற்படலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெர…

  15. பாற்பற்கள் முளைத்தல் - வேதனையும் கொண்டாட்டமும் 'பிள்ளைக்கு காய்ச்சல் அடிக்குது. பல்லு முளைக்கிறதுக்கோ தெரியவில்லை' என்றாள் அந்த இளம் தாய். அந்தப் பருவத்தில் வயிற்றோட்டத்துடன் குழந்தையைக் கொண்டு வரும்போது கூட அது பல்லு முளைப்பதற்காக என்றே பல தாய்மார்கள் நினைக்கிறார்கள். உண்மையில் குழந்தைகளில் முதற் பல்லுகள் முளைப்பதற்கும் காய்ச்சலுக்கும் வயிற்றோட்டத்திற்கும் எது வித தொடர்பும் கிடையாது. அதேபோல வாந்தி, மூக்கால் வடிதல். இருமல் போன்றவற்றிற்கும் பல் முளைத்தலுக்கும் தொடர்பில்லை. பல் முளைப்பது ஒரு இயற்கையான நிகழ்வு. அது நோயல்ல. என்றபோதும் அது பற்றி பல்வேறு விதமான தவறான கருத்துக்கள் நம்பிக்கைகள் எமது சமூகத்தில் இருக்கிறன. மறுபக்கத…

  16. சமந்தா சொல்வதுபோல் ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசித்தால் நோய்த்தொற்று குறையுமா? - கொந்தளிக்கும் மருத்துவர்கள் பட மூலாதாரம்,SAMANTHA RUTH PRABHU/INSTAGRAM 3 மணி நேரங்களுக்கு முன்னர் சுவாசக் குழாய் தொடர்பான நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பிக்க, "நடைமுறையில் உள்ள நவீன மருத்துவ சிகிச்சைகளுக்குப் பதிலாக மாற்று அணுகுமுறையைத் தேர்வு செய்யுங்கள்" என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றைப் பதிவு செய்து, நடிகை சமந்தா சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முக்கியமான நடிகையாக அறியப்படும் சமந்தா ரூத்பிரபு, ஜூலை 4ஆம் தேதியன்று, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஸ்டோரியில், "சுவாசத் தொற்றுகளுக்கு நவீன மருந்துகளை எடுத்துக் கொள்வதற்குப் பதிலா…

  17. பித்தப் பை (Gall bladar)எனப்படுவது எமது உடலிலே பித்தத்தை(bile) தற்காலிகமாக சேகரிக்கும் உறுப்பாகும். இவ்வாறு பித்தைப்பையிலே சேகரிக்கப்படும் பித்தமானது ஒரு குழாய் மூலம் சிறுகுடலை வந்தடைந்து உணவு சமிபாட்டிற்கு உதவும். பித்தத்தில் உள்ள சில பதார்த்தங்களின் சேர்க்கையால் கற்கள் உருவாகலாம். இவை பொதுவாக பித்தப்பைக் கற்கள் எனப்படும். இந்தக் கற்கள் பித்தப்பையினுள்ளே காணப்படலாம் அல்லது பித்தக் குழாயினுள்ளே (பித்தத்தை பித்தப் பையிலிருந்து சிறுகுடலுக்கு கொண்டு சேர்க்கும் குழாயினுள்ளே ) காணப்படலாம். பித்தப் பைக் கற்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகமாக கொண்டவர்கள்: 1. பெண்கள் 2. உடற் பருமனானவர்கள் 3. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பித்தப்பைக் கற்கள் உள்ள எல்லோ…

  18. "அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கஞ்சாவை சட்டபூர்வமாக மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் சட்டபூர்வ மருந்தாக ஏன் அது பயன்படுத்தப்படுவதில்லை?" என்று விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியெழுப்பியிருந்தார் வாசகர் நாகராஜன். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது. கஞ்சா ஒரு போதைப் பொருள்; அதைச் சாப்பிட்டால் மூளையில் குழப்பத்தை ஏற்படுத்தி தடுமாற்றத்தை உண்டாக்கும். அதனால், உடலுக்குப் பெரும் கேடு நிகழும். அது முற்றிலும் தவிர்க்கவேண்டிய ஒரு வஸ்து. இதுதான் இங்குள்ள நிலை. ஆனால் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில், கஞ்சா மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை அங்கெல்லாம் எப்படி அனுமதிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்குமுன், கஞ்சா என்றால…

    • 0 replies
    • 373 views
  19. இரத்தம் என்றாலே அநேகமானோர் ஒருகணம் கலங்கித்தான் போவார்கள். அதுவும் நமது இரத்தத்தை நாமே பார்க்கும் போது ஏற்படுகின்ற உணர்வு இன்னும் கொஞ்சம் பயங்கரமானது நிறையப் பேருக்கு. நமது உடலில் இருந்து அளவுக்கதிகமான இரத்தம் வெளியேறுவதனாலேயே சில மரணங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக விபத்துக்களுக்கு உள்ளான ஒருவர், யுத்த வெடிகுண்டுகளிலே சிக்கிய ஒருவர், அல்லது குழந்தை பிறப்புக்கு பின் அதிகம் ஏற்படும் ரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறப்பதற்கு முக்கிய காரணம் இந்த இரத்தப்போக்காகும். இவ்வாறு இரத்தம் போவது ஆங்கிலத்திலே கீமரேஜ்(haemorrahage) எனப்படுகிறது. இந்த இரத்தப்போக்கு சாதாரணமாக ஒரு காயத்தினால் வெளியிலே எமக்கு தெரியும்படி நடைபெறும்போது வெளிப்புற இரத்தப்போக்கு (external haemorra…

    • 0 replies
    • 482 views
  20. சிறுநீர் பையில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது. இதனால், அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், அத்தகைய சமயங்களில் வலி அல்லது குத்தல், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்பில் அசவுகரியம், ஒரு சிலருக்கு சிறுநீருடன் ரத்தமும் வெளியேறும். பொதுவாக, பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் அழற்சி ஏற்பட காரணம், குறுகிய அளவிலான சிறுநீர்ப்பை நாளம் கொண்டிருப்பது அல்லது தொற்று ஏற்படுவது தான். பெரும்பாலான பெண்கள், வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சை அளிக்காவிடில், சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சிறுநீர்ப்பை அழற்சிக்கான சிகிச்சை முறை: சிறிய அளவிலான சிறுநீர்ப…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனித உடலின் செயல்பாட்டில் தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது 15 பிப்ரவரி 2025, 11:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புனேவில் கியான் பாரே சின்ட்ரோம் (Guillain-Barre syndrome) நோய் குடிநீர் மூலம் பரவுவதாகத் தெரிய வந்துள்ளது. குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது? இவற்றில் குடிப்பதற்குப் பாதுகாப்பான நீர் எது? எந்த நீர் அதிக தூய்மையானது? ஊட்டச் சத்துகள் அதிகமுள்ள நீர் எது? இந்தக் கட்டுரையின் மூலம் புரிந்துகொள்ளலாம். தண்ணீர் என்பது H2O. தண்ணீர் மூலக்கூறு 2 ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒரு ஆக்சிஜன் …

  22. [size=2][size=4]உலகை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்க பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகளை தொடர்ந்து உபயோகித்தால் நோயை குறைக்க முடியுமே தவிர முற்றிலும் குணப்படுத்த முடியாது.[/size][/size] [size=2][size=4]எனவே, தொடர்ந்து மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சர்வதேச விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. கிருமி தாக்குதலை குறைக்கும் திருவாடா என்ற புதிய மாத்திரையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.[/size][/size] [size=2][size=4]இந்த மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் 30 ஆண்டுகளாக எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிட…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காலை உணவாக தானியங்களை உண்ணும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் 53 சதவிகிதம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ் - ஸ்கெல்லி பதவி, 4 மணி நேரங்களுக்கு முன்னர் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமாக இருக்கும் தானியங்களை காலை உணவாக உண்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது. நமது அன்றாட உணவில் காலை உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி அடிக்கடி பேசுகிறோம். காலையில் சிறப்பான உணவை உட்கொண்டால், அன்றைய நாளில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சக்தி உடலுக்குக் கிடைக்கும். இருப்பினும், சரியான காலை உணவு எது? குழந்தைகளுக்கு காலை உணவாக என்ன கொடுப்பது என்பதை முடிவு செய்வது கடினமானதாக இருக்கிறது. காலை உணவாக தானியங்களை உண்ணும்…

  24. உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது. மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும். http://www.seithy.co...&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.