Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. நீரில் இறங்காமல் நீச்சலா? பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு என மூன்றும் கலந்துழலும் பெண் அவள். 5 அடி உயரத்தில் 80 கிலோ எடையும் சேர்ந்ததால் நிலைமை மேலும் மோசமாயிற்று. "நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்" என்றவுடன் அவளது முகத்தில் கோபம் கொப்பளித்தது. "விடிஞ்சு பொழுது சாயு மட்டும் வீட்டிலை வேலை, வேலை... இதுக்கு மேலை என்ன பயிற்சி செய்யுறது." இன்னுமொருவர் தனியார் துறையில் பொறுப்பு வாய்ந்த வேலையில் இருப்பவர். வேளையோடு வேலைக்குப் போனால் இரவான பின்தான் வீட்டிற்கு வர முடியும். உடற்பயிற்சி பற்றி யோசிக்கவே நேரம் இல்லையாம். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை இருவருமே அறிந்திருந்தார்கள். ஆயினும், நேரம் இல்லாததால் பயிற்சி செய்வதில்லை. ஆனால், நீரில் இறங்காமல் நீந்த…

  2. இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும். இந்திய உணவில் இரண்டு வகை உண்டு. தென்னிந்திய உணவு வகை, வட இந்திய உணவு வகை. தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது. இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேவைய…

  3. பித்தப்பை கற்களுக்கு தீர்வு என்ன!!!! முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது. இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது ஒரு வேளை சாப்பிட்டு அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும் இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அவ்வாறு பித்தப் பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால்இ பித்தப…

  4. சளித் தொல்லை பாடாய்ப் படுத்துகிறதா? ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எரிச்சலை ஏற்படுத்தி செய்கிற வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது. முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடரும் பிரச்னையாகவும் ஆகக்கூடும். ஜலதோஷம் பிடிக்கும்போது நிறைய இரசாயனங்களை உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் தும்மல், மூக்கடப்பு, மூக்கொழுகுதல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த இரசாயனங்கள் மூக்கில் உள்ள இரத்த நாளங்களோடு செயல்பட்டு சீரான சுவாசத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மூக்கடைப்பு இருக்கும்பொழுது காற்றை வடிகட்டும் திறன் குறைகிறது. இதனால் கிருமிகள் எளிதில…

    • 1 reply
    • 15.6k views
  5. 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகில் அறியப்பட்டுள்ள, ’இரண்டு மரபணு பிறழ்வுகளை’ கொண்டிருக்கும் ஒரே நபர் ஜோ கேமரூன் ஆவார். இதன் காரணமாக அவர் கிட்டத்தட்ட வலியை உணர்வதில்லை மற்றும் எந்த காயம் ஏற்பட்டாலும் விரைவிலேயே குணமடையும் திறனையும் அவர் பெற்றுள்ளார். பிறழ்வுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களுக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டன. 2013 ஆம் ஆண்டில் அப்போது 65 வயதாக இருந்த அவரது கையில் ஒரு வழக்கமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, ஒரு மரபணு பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டது, இது அவரது வலி உணர்திறன் இல்லாமையை விளக்கியது. "என் கையில் மூட்டுவலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். நான் மயக்க மருந்து நிபுணரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இது …

  6. குளிர்ச்சி உணவான தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட விரைவாகவே ஜீரணமாகிவிடும். வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம். மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.வெண்ணெயை காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். …

  7. திருமூலர் திருமந்திரத்தில் இருந்து; நூறு மிளகு அளவு சிறுநீரை அருந்துங்கள். இதற்கு மாறான மருந்து ஒன்றும் இல்லை. இதைத் தெளிந்த உச்சியில் அப்பினால் அதாவது தேய்த்துக் குளித்தால் நரைமயிர் மாறிக் கறுக்கும்.ஒரு கையளவு சிறு நீரோடு ஒவ்வொரு நாளைக்கும் ஒரு மிளகு வீதம் அதிகப்படுத்தி நூறு மிளகு வரை உண்ணுக என சில சித்த லைத்திய நூல்கள் கூறுகின்றன. இது ஒரு காய கல்ப முறை. சிறு நீரினால் உடலை மாலிஸ் இதற்குக் குறைந்த பட்சம் 7 நாட்கள் பழையதான சிறுநீர் தேவை. இதை ஓவ்வொரு நாளும் ஒரு பாட்டிலில் பிடித்து ஏழு நாட்களில் ஏழு பாட்டில்களில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ…

  8. பலரையும் பாடாய்படுத்தி வரும் மனஅழுத்தத்தை தீர்ப்பதற்கான வழிகள் [Thursday, 2011-09-29 11:44:06] பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு மருத்துவர்கள் வழி சொல்கின்றனர்.வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள். அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உட…

  9. வியர்வை.... ஏன் துர்நாற்றம், வீசுகிறது என்பதற்கான காரணங்கள்!!!வாயுப் பிரச்சனைக்கு பிறகு ஓர் மனிதன் பொது இடங்களில் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாவது இந்த வியர்வை துர்நாற்ற பிரச்சனையின் காரணத்தினால் தான். பொதுவாக வெயிலில் அலைந்து, திரிந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் வியர்க்க வாய்ப்புகள் இருக்கின்றன. வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது? ஆனால், சிலருக்கு சாதாரண வேலைகள் செய்யும் போது கூட அளவிற்கு அதிகமாக வியர்வை வெளிப்படும். வியர்வை வெளிவருவது நல்லது தான், ஆனால் வியர்வையோடு சேர்ந்து அதிகமாக துர்நாற்றம் வெளிப்படுவது தான் இவர்களுக்கு ஏற்படும் சிக்கலே. அதிகமாக வியர்வை வெளிபடுதல் இந்த நோய்களுக்கான அறிகுறிகள் என்று உங்களுக்கு தெரியுமா? அனைவருக்கும் தான் வியக்கிறது…

  10. அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு உயிருக்கு உலை வைக்கும் ஜேம்ஸ் கெலஹர் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் படத்தின் காப்புரிமை Getty Images சிக்கன் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற - அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளத…

    • 1 reply
    • 1.3k views
  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக கல்லீரல் தினம் ஏப்ரல் 19-ஆம் தேதி அனுசரிக்கப்படும் வேளையில் கல்லீரல் ஆரோக்கியம், கல்லீரலுக்கும் குடல் ஆரோக்கியத்துக்கும் இருக்கும் தொடர்பு குறித்து கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன் பிபிசி தமிழிடம் பேசினார் . அவருடனான நேர்காணலின் சில பகுதிகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. கல்லீரலை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய முதல் விசயம் என்ன? உடலில் உள்ள எல்லா உறுப்புகளின் செயல்பாடும் நமக்கு தெரியும். ஆனால், கல்லீரல் குறிப்பாக என்ன செய்கிறது என்று பலருக்கு தெரியாது. ஏனென்றால் கல்லீரல் உடலில் 500 வகையான வேலைகளை செய்கிறது. நாம் சா…

  12. குழந்தை பேறு பெண்ணின் மூளையில் எம்மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு பெண் கர்ப்பமானபோதும் குழந்தை பெற்றெடுத்த பிறகும் அவரின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால் நமக்கு தெரியாத ஒன்றும் உள்ளது. அது குழந்தை பேறு பெண்ணின் மூளை அமைப்பையும் மாற்றும் என்பதுதான். குழந்தையை கருவில் சுமக்காத தாயோ அல்லது தந்தையோ குழந்தையை பார்த்து கொள்வதன் மூலம் அவர்களின் மூளையின் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தை பெறுவது மூளையை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆராய்ந்த நிபுணர் குழுவை நேர்காணல் செய்து பிபிசி அறிவியல் பத்திரிகையாளர் மெலிசா ஹோஜென…

  13. மாதவிடாய்: நாப்கினுக்கு பதில் மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்துவது எப்படி? மருத்துவர் பதில்கள் சௌமியா குணசேகரன் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பெண்ணின் வாழ்நாளில் சராசரியாக 400 முறை வரை மாதவிடாய் சுழற்சி நடைபெறுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்துதும் சானிட்டரி நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதற்கு ஒரு தீர்வாக மென்ஸ்ட்ருவல் கப் எனப்படும் மாதவிடாய் கப் இருக்கும் என நம்புகிறார்கள். மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிகக் குறைவே. நா…

  14. மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு ‘ஹெய்ம்லீக் மேன்யூவர்’ என்னும் முதல் உதவியைச் செய்ய வேண்டும். மூச்சுத் திணறலுக்கு ஆளானவரின் பின்பக்கமாக நின்று அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, அதாவது வயிற்றின் மத்தியில் இரண்டு கைகளாலும் உள்நோக்கி அழுத்தியவாறு மேலே தூக்க வேண்டும். இப்படிச் சில முறைகள் செய்ய வேண்டும். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து கிளம்பும் வாயு, தொண்டையில் சிக்கியுள்ள உணவை வாய் வழியாக வெளியேத் தள்ளிவிடும். அந்நிலையிலேயே அவரைத் தூக்க முயற்சிப்பதுபோலச் செய்ய வேண்டும். அப்போது சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் நிவாரணம் கிடைக்கும். ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால்? குழந்தைகள் காசு, பட்டாணி என்று கண்டதையும்…

  15. ஆயுர்வேதம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. அதை யாராலும் மறுக்க முடியாது. ஆம் இந்தியாவின், பிறப்பிடம் தான் ஆயுர்வேதம். பல நோய்களை குணப்படுத்த ஆயுர்வேதம் பெரிதும் உதவுவதை நாம் அனைவரும் அறிவோம். இது மட்டுமல்லாமல் அதில் எண்ணிலடங்கா பயன்கள் உள்ளது. ஆயுர்வேதம் என்றால் நீண்ட காலம் வாழ்வதற்கான அறிவியல் என்பது நிதர்சனமான உண்மை. ஆயுர்வேத சிகிச்சைகள் உங்களை இயற்கைக்கு மிக அருகில் கொண்டு செல்லும். மேலும் ஆரோக்கியமான எளிய வாழ்க்கையையும் ஏற்படுத்தி கொடுக்கும். உடல் பருமன் என்பது வாழ்க்கை முறை நோயாக ஆயுர்வேதத்தில் கருதப்படுகிறது. ஆயுர்வேதத்தில் எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். நல்ல அழகான வாழ்க்கை முறையில் வாழ்ந்திட கீழ்கூறிய ஆயுர்வேத டிப்ஸ்…

  16. மூட்டு வலிக்கு டாடா.. வயதானவர்களுக்கு மட்டும் அல்ல... இன்றைய இளைய தலைமுறையினரையும் மூட்டு வலி துரத்தத் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் தைலம் தடவுவது, வெந்நீர் ஒத்தடம் ஆகியவையே மூட்டு வலிக்கான சிகிச்சையாக இருந்தது. மருத்துவ வளர்ச்சியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது. காரணம், அறுவை சிகிச்சை செய்தாலும், அதன் பயன் 10 முதல் 15 ஆண்டுகள்தான். அதன் பிறகு மீண்டும் ஒரு முறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் இன்று, காலாகாலத்துக்கும் சிக்கல் இல்லாத தீர்வாக புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது. முழங்காலில் உள்ள மூட்டு, இரண்டு பக்க எலும்புகளுக்கு இடையே பந்துபோல உருண்டுகொண்டு இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இரு எலும்புகளுக்கும் …

  17. புடலங்காய் நாம் சாதாரணமாக கறியாக சமைத்து உண்ண பயன்படுத்துவோம். மிக்க சுவையான அந்த காயில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்தோம் இல்லை. கறிக்குப் பயன்படுத்தும் புடலங்காயில் பன்றிப்புடல், கொம்புப்புடல், பேய்ப்புடல் என வேறு வகைப் புடலங்காய்களும் உண்டு. புடலங்காய் மேற்புறத்தில் மென்மையான தோலை உடையதாகும். 150 செ.மீ அளவுக்கு இது நீளமாக வளரக்கூடியது ஆகும். உள்ளே நீரோடும் சற்று பிசுபிசுப்பும் கூடிய சதைப்பற்று உடையதாக இருக்கும். இது சற்று கசப்பு சுவையுடைதாக இருப்பினும். சமைக்கும் போது இதன் கசப்புத் தன்மை போய் விடுகின்றது. புடலங்காயை இளசாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு அல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். மேலும…

  18. ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து சேரும் நிலையில், அது ரத்தக் குழாய் பாதைகளை குறுகலாக்கி (அதீரோஸ்குளோரோசிஸ்) அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அறிகுறிகள் ஏற்படுகின்றன. எனவே ரத்தத்தில் கொழுப்பு சத்து சேருவதற்கும் உணவு முறைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. எனவே ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ள இதய நோயாளிகள், உணவு முறையை கீழ்க்கண்டவாறு மாற்றி அமைத்து கொள்வது அவசியம். எண்ணெய், நெய், டால்டா, பன்றிக் கறி, மூளைக் கறி, நண்டு, ஈரல் முதலிய அசைவ உணவு வகைகள், ஊறுகாய், பாலாடை -பால் கட்டி -பால்- கோவா, முந்திரி, உள்ளிட்டவற்றில் கொழுப்புச் சத்து அதிகம். வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் ‘நான்-ஸ்டிக…

  19. எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு வி…

  20. அவர் வந்து உட்கார்ந்ததுபோது கதிரை வேதனையில் கிரீச்சிட்டு அனுங்கியது! தனது வருத்தம் பற்றிக் கூறுவதற்கிடையில் அவரது கண்கள் நகர்ந்து கட்டிலின் கீழ் இருந்த எடைகாட்டியில் தங்கி நிலைத்தன. இவரது நடவடிக்கைகள் எனக்குப் புதினமானவை அல்ல. பல வருடங்களானப் பார்த்துப் பழக்கம். அப் பெண்ணுக்கு தனது எடை பற்றி அக்கறை எப்பொழுதும் உண்டு. எப்பொழுது வந்தாலும் தனது எடையைப் பார்க்காமல் விட மாட்டாள். எடையை எப்படிக் குறைப்பது என்று ஆலோசனையும் தவறாது கேட்பாள். ஐந்து அடி மூன்று அங்குல உயரமுள்ள அவரது தற்போதைய எடை 110 கிலோ ஆகும். அடுத்த முறை வரும்போது நிச்சயம் ஒரு கிலோ ஆவது கூடியிருக்கும் என்பது நிச்சயம். ஒவ்வொரு தடவையும் எடையைக் குறைப்பது பற்றிய ஆலோசனையைக் கேட்பதுடன் சரி. அடுத்த முறை வரும…

  21. அறிவியல் அதிசயம்: கல்லீரல் கொடுத்து சிறுநீரகம் பெற்ற 19 வயது சிறுமி இயான் ரோஸ் பிபிசி வணிகம் 50 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALIANA DEVEZA படக்குறிப்பு, அலியானா டெவெசா மற்றும் அவர் தாய் எரொசலின் வெறும் 19 வயதான அலியானா டெவெசா தன் தாயின் உயிரைக் காப்பாற்ற, மருத்துவ வரலாற்றில் மிக முக்கியமான அறுவை சிகிச்சைக்கு தானே ஏற்பாடு செய்து, அதை எதிர்கொண்டுள்ளார். அலியானா ஒரு மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு, அமெரிக்காவின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உடல் உறுப்புக்கு பதில், மற்றொரு உடல் உறுப்பை மாற்றிக் கொள்ளும் அறுவை சிகிச்சையை மேற்கொள்வது தொடர்பாக விசா…

  22. ஆழமான காயங்களை ஒரே நிமிடத்தில் குணப்படுத்தும் பசை ஆழமான வெட்டுக் காயங்கள் உள்ளிட்ட பயங்கர காயங்களை இனி தையல் போடாமால் குணப்படுத்தும் அற்புத கண்டுபிடிப்பை மருத்து ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர். பெரிய அளவிலான ஆழமான காயங்களுக்கு தையல் போடுவதற்கு பதிலாக ஒரு ஊசி சிரிஞ்சின் மூலம் இந்த பசையை காயத்துக்குள் செலுத்தி, புறஊதா கதிர் ஒளியின் மூலம் 60 நொடிகளுக்குள் விரைவாக காய வைத்து விட முடியும். விரிந்து, சுருங்கும் எலாஸ்ட்டிக் போன்ற தன்மையுள்ள இந்த பசை, களிம்பு போல திசுக்களுடன் படிந்து, உள்காயத்தை ஆற்றும் மருந்தாகவும் செயல்படக்கூடியது என்பதை சிட்னி மற்றும் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கூட்டாக கண்டுபிடித்தனர். …

  23. இங்கிலாந்தின் சவுத்வேல்ஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஹென்னாகிளார்க். 10 ஆண்டுகளுக்குமுன்பு இவர் சிறுமியாக இருந்த போது இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். ஹென்னா கிளார்க்கின் இருதயம் இயங்க மறுத்ததால் அவருக்கு டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர். இயக்கம் நின்று போன இருதயத்தின் அருகிலேயே தானமாக கொடுத்த இன் னொரு இருதயத்தை பொருத் தினார்கள். 10ஆண்டுகளாக அந்த புதிய இருதயம் செயல்பட்டு வந்தது. ஆனால் திடீர் என்று அந்த இருதயத்தை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. மருந்து மாத்திரைகளும் அவரது உடலுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை. இதுபற்றி டாக்டர்கள் சோதனை செய்து பார்த்த போது 10 ஆண்டுகளுக்கு முன்பு நின்று போன அந்த சிறுமியின் இருதயம் மீண்டும். இயங்க ஆரம்பித்ததே இந்த மாற்றத்துக்கும் கோளா றுகளுக்கும் …

  24. சிறுநீரக செயல் இழப்பு சிலருக்கு திடீரென்று ஏற்படும். சில நேரங்களில் சிலருக்கு நாள்பட்ட நோயின் விளைவால் ஏற்படும். எப்படியிருந்தாலும் சிறுநீரகம் மிக கவனமாக பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு ஆகும். உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரியுங்கள் ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, உயராமல் பார்த்துக் கொள்ளுங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருங்கள் புகைப் பிடிக்காதீர்கள் பொட்டாசியம் அல்லது உப்பு அதிகமாக கலந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக் கொண்டு ஊட்டச்சத்து உணவை எடுத்துக் கொள்ளுங்கள் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள் தினசரி முறையான உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்யுங்கள் சுயமருத்துவம் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். …

  25. வெயில் காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வெப்பத்தில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம். ஆகவே கோடை காலத்திற்கான சில டிப்ஸ் இதோ, 1. இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது. 2. வெண்பூசணியும், பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது கோடைகாலத்தில் இதம் அளிக்கும். 3. டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால் முழுக்கூந்தலையும் மூடிச் செல்லவும். 4. உருளைக்கிழங்கை அரைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் வெம்மை முகத்தைத் தாக்காமல் பளிச்சிடும். 5. எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் வழக்கத்தைவிட விரைவாக எழுந்துவிடுங்கள். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.