Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழின அழிப்பை மூடி மறைக்கும் கொழும்பை தளமாக கொண்ட சிவில் அமைப்புகள் – புலம்பெயர் அமைப்பு குற்றச்சாட்டு ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழினஅழிப்பை மூடிமறைக்கும் செயற்பாடுகளை கொழும்பை தளமாக கொண்ட சிவில்சமூக அமைப்புகள் சில மேற்கொண்டுவருகின்றன என உலக தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளர் பொஸ்கோ குற்றம்சாட்டியுள்ளார். சர்வதேச ஊடக அமைப்பு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 2015 இல் எவ்வாறானதொரு சூழல் காணப்பட்டதோ அதேபோன்ற சூழலே தற்போதும் காணப்படுகின்றது. மேற்குலகநாடுகள் இலங்கையில் மீண்டுமொரு ஆட்சிமாற்ற நாடகத்தை அரங்ககேற்ற ஆரம்பித்துள்ளன. அதாவது தமி…

    • 2 replies
    • 607 views
  2. தமிழ்நாட்டு உறவுகள் வஞ்சமற்ற நேசிப்பாலும் அன்பாலும் நெகிழவைக்கிறார்கள்.. என்னை அறியாமலே கண்கலங்கி விட்டேன்.. ரத்த உறவுகள் என்பது சும்மாவா… இனியவன் அண்ணாவின் மற்றும் டீக்கடை அண்ணாவின் வஞ்சமற்ற பேச்சையும் அன்பையும் வாழ்க்கை முழுக்க அவர்களை பேசவிட்டு ரசிக்கவேணும் போல இருக்கு.. எளிய மனிதர்கள் எவ்வளவு இனிமையானவர்கள்.. பாசத்தை அள்ளி அள்ளி வாரி இறைக்கிறார்கள்.. வாழ்வின் நெகிழ்ச்சியான தருணங்கள்…❤️❤️

  3. லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை. லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழரின் தற்கொலைக்கு குறித்த சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களே அதற்கு பொறுப்பு என தற்போது உறுதியாகியுள்ளது. வோர்ம்வுட் ஸ்க்ரப்ஸ் சிறையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் திகதி கேதீஸ்வரன் குணரத்தினம் என்ற இலங்கை தமிழர் தற்கொலை செய்துக் கொண்டார். இறப்பதற்கு சில நாட்களாக உணவு உண்ண மறுத்து பட்டினியாக இருந்து வந்த அவர் தற்கொலை தொடர்பில் பேசி வந்ததாக மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற மனநில…

  4. Started by nunavilan,

    சட்டமூலம் 104: தமிழின அழிப்பு அறிவூட்டல் கிழமைக்கான சட்டத்தினை எதிர்த்து சிறிலாங்கா அரசு ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் ஒன்ராறியோவில் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்பு அறிவூட்டல் கிழமைக்கான சட்டத்தினை எதிர்த்து சிறிலங்கா அரசு ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதால், மேற்படி சட்டத்தினைப் பாதுகாக்கும் போராட்டத்தில் அனைத்துத் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். இதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது ஓர் அவசரமான காலத்தின் தேவையாகும். சிறிலங்கா அரசால் தொடரப்பட்ட தமிழின அழிப்புத் தொடர்பான சட்டமூலம்-104இற்கு எதிரான வழக்கினை எதிர்கொண்டு நடத்தப்படும் சட்டப்போராட்டத்தில் இணைந்துள்ள பல தமிழ் அமைப்புகளின் பட்டி…

    • 0 replies
    • 806 views
  5. பிரான்சில் 93 பிராந்தியத்தில் நடைபெற்ற மாநகர முதல்வருக்கான தேர்தலும் அதில் தமிழரின் பங்களிப்பும்! பிரான்சின் 93 பிராந்தியத்தில் தமிழ் மக்கள் அதிக அளவில் வாழும் பொண்டி மாநகரத்தின் மாநகரமுதல்வருக்கான தேர்தல் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்றிருந்தது இத்தேர்தலில் 61;04 வீதமான வாக்குகளை பெற்று திரு. stephan HERVE வெற்றிபெற்றிருந்தார். கடந்த 23 ஆம் நாளில் முதற்கட்டத் தேர்தலும், போட்டியிட்ட இரண்டு கட்சியினரும் தேர்தல் நடைமுறைக்கு அமைவாக 50 வீதத்திற்கு மேலான வாக்குகள் பெறாத காரணத்தால் 30 ஆம் நாள் 2 ஆம் கட்டத்தேர்தலும் நடைபெற்றது. இதில் பொண்டி முதல்வராக stephan HERVE அவர்கள் தெரிவாகியிருந்தார். முதற்தடவையாக இப்பிரதேசத்தில் இவரின் கட்சியில் இரண்டு தமிழர்களும் வேட்பாளர்க…

    • 1 reply
    • 562 views
  6. அதிவலது “Freedom Convoy” இயக்கம் கனேடிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடுகிறது: கனேடிய ஜனநாயகத்தின் வீழ்ச்சியில் ஒரு திருப்புமுனை Keith Jones, Roger Jordan-wsws. கனடாவின் ஆளும் உயரடுக்கின் சக்தி வாய்ந்த பிரிவுகள் தூண்டிவிட்டுள்ள நாடாளுமன்றத்திற்கு விரோதமான ஓர் அதிவலது இயக்கம் இப்போது அச்சுறுத்தும் விதமாக தேசிய நாடாளுமன்றத்திற்கு வெளியே முற்றுகையிட்டுள்ளதுடன், அதன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் அங்கேயே தங்கியிருக்க சூளுரைத்துள்ளது. கனேடிய தலைநகரில் அரசியல் வன்முறை அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. நேற்றுடன் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக, இந்த அதிவலது Freedom Convoy (சுதந்திர தொடரணி) இய…

    • 0 replies
    • 605 views
  7. Published by T. Saranya on 2022-02-01 16:27:18 (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையினால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கு அவசியமான உளவள ஆலோசனைக்கருத்தரங்குகளை நடாத்துவதற்கென கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் 48,950 அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கீடு செய்திருக்கின்றது. ஒன்டாரியோ மாகாணத்தின் கல்வியமைச்சர் ஸ்டீபன் லெஸியினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் பிரகாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 48,950 அமெரிக்க டொலர் நிதி ஒன்டாரியோ, ஸ்கார்பரோவில் இயங்கிவரும் 'கனேடிய தமிழ் அகடமி' என்ற இலாபநோக்கற்ற அமைப்பிடம் கையளிக்கப்படவுள்ளது. தமிழினப்படுகொலை மற்றும் அதன் நீண்டகால வி…

  8. அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மூவர் மரணம் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு 6 வயதும் சிறுமிக்கு 4 வயதும் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. 40 வயதான இந்திக குணதிலக என்ற இலங்கையர் தனது மகளையும் மகனையும் கொலை செய்துவிட்டு ஹண்டிங்டேலின் தென்கிழக்கு பேர்த் புறநகர் பகுதியான Essington St இல் உள்ள அவர்களது வீட்டின் கேரேஜில் வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக பொலிசார் நம்புகின்றனர். வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் பிள்ளைகள் தங்கள் தாயுடனான சந்திப…

  9. எம். ஆர். ஷோபனா பிபிசி தமிழ் 24 ஜனவரி 2022 பட மூலாதாரம்,SUBI CHARLES படக்குறிப்பு, குடும்பத்தினருடன் சுபி சார்ல்ஸ் "நான் 2018ஆம் ஆண்டு என்னுடைய யூட்யூப் சேனலை தொடங்கினேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் தொடங்கினேன். மக்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறு வயதில், கண்ணாடி முன் நின்று பேசி பார்ப்பது பிடிக்கும். இன்று, எனக்கு ஒரளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று பிபிசி தமிழிடம் தனக்கே உரிய கலகலப்பான குரலில் பேச தொடங்குகிறார் சுபி சார்ல்ஸ். இவர் 'லண்டன் தமிழச்சி' என்ற பிரபல யூட்யூப் சேனலை கடந்த மூன்று …

  10. இங்கிலாந்தில் ஒரு குட்டி யாழ்ப்பாணம்; உத்தியோக பூர்வ அறிவிப்பு! தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை நேற்று சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார பண்பாடுகளை பிரித்தானியாவிலும் கொண்டாடும் வண்ணம் கடந்த டிசம்பர் (2021) மாதம் பிரித்தானிய பெரு நகர அவை ஜனவரி மாதத்தை பிரித்தானியா…

    • 2 replies
    • 848 views
  11. யேர்மனி டோட்முன்ட் , கம்பேர்க், நகரில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட்ட 10 மாவீரர்களின் வணக்க நிகழ்வு. Posted on January 17, 2022 by சமர்வீரன் 123 0 யேர்மனி டோட்முன்ட் நகரில் கேணல் கிட்டு உட்பட்ட பத்து மாவீரர்களின் 29 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு இன்றைய கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக அனுமதிக்கப்பட்ட மக்கள் தொகையுடன் சிறப்பாக நடைபெற்றது.இந் நிகழ்வில் வருகைதந்திருந்த மக்கள் கேணல் கிட்டு உட்பட்ட பத்து மாவீரர்களுக்கும் தீபம் ஏற்றி, மலர்தூவி வீர வணக்கத்தைச் செலுத்தினர். மற்றும் நடனாஞ்சலி, கவிதாஞ்சலி, சிறுவர்களின் எழுச்சிப்பாடல்கள் என்பனவும் நடைபெற்றது. இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் நம்பிக்கைப் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது. …

    • 0 replies
    • 347 views
  12. யேர்மனியில் தமிழாலயங்களின் தமிழர் திருநாள் 2022 Posted on January 17, 2022 by சமர்வீரன் 572 0 கொறோனா நோய்த்தொற்றின் கரணியமாகக் கூட்டரசின் நோய்ப்பரவற் தடுப்புக் கட்டுப்பாடுகள் மனிதர்கள் இடையேயான இடைவெளியை அதிகரித்துத் தனிமைப்படுத்தி முடக்கநிலையை ஏற்படுத்திவரும் சூழலில், மனிதஇனம் தன்னையே தொலைத்துக்கொண்டிருக்கின்ற ஆரோக்கியமற்ற அவலநிலையானது, பெரும் மனச்சோர்வையும் இடைவெளிகளையும் ஏற்படுத்திவருகின்றது. மனிதர்கள் ஏறக்குறைய ஒருவித நுகர்வாளர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கற் பண்டிகையைத் தமிழினம் எதிர்கொண்டது. தமிழர் தாயகங்களிற் தமிழர்திருநாட் கொண்டாட்டங்கள் இயல்பானபோதும், தம…

    • 0 replies
    • 402 views
  13. 2019 ம் ஆண்டு வெளியான எனது சிறுகதைத் தொகுப்பான "உணர்வுகள் கொன்றுவிடு" 2020 இன் அரச விருதுக்காக மூன்றுக்குள் ஒன்றாகத் தெரிவாக்கியிருந்தது. ஒருபுறம் இது மகிழ்வான விடயமாக, என தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒன்றாகவும் இருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் முதலாவதாகத் தெரிவாகியிருக்காமலேயே முகநூலில் இதைப் பகிர்ந்தபோது நீண்டகாலமாக என்னுடன் நட்புடன் இருந்த ஒருவர் என்னை வாழ்த்தவில்லை. மாறாக வெளிநாட்டு Nationality வைத்திருப்பவர்களுக்கு எப்படி இலங்கை அரச விருதை வளங்கலாம் எனப் பதிவு போட்டிருந்தார். அதைவிட நான் மதிப்பு வைத்திருந்த இன்னொரு சிறந்த எழுத்தாளர், அவர் ஏற்கனவே இந்திய விருதைப் பெற்றிருந்தார். அவர் கூட எனக்குப் போனில் வாழ்த்துச் சொல்லிவிட்டு எப்படி உங்களையும் தெரிவ…

  14. தமிழர்களுக்கு வணக்கம் சொல்லி தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் -காணொளி தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் இன்று (14.01.2022) கொண்டாடுகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் உலக தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். காணொளி காட்சி :- https://www.thaarakam.com/news/949677bf-da1c-443f-9adb-e7c67e420de6

  15. பெல்ஜீயத்தில் கலக்கும் ஈழத்தமிழர்

    • 1 reply
    • 1.3k views
  16. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு லண்டனில் ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் (ஆர்.யசி) தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும் என்ற பெயரில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதத்தை கண்டித்தும், கடிதத்தை கைச்சாத்திட்ட தமிழ் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளை கண்டித்தும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு எதிர்வரும் 16 ஆம் திகதி லண்டனில் எதிர்ப்பு நடவடிகைகளில் ஈடுபவுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கவும் 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தி தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து 'தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒ…

  17. நாட்டை முடக்கிவிட்டு நடந்த விருந்து: மன்னிப்புக் கோருகிறார் ஜோன்சன் பதவியை இழக்கும் இக்கட்டில் அவர் பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா பொது முடக்க காலத்தில் நாட்டு மக்களை வீடுகளில் அடைத்து விட்டுத் தனது டவுணிங் வீதி அலுவல கத்துக்குப் பலரை அழைத்து ஒன்று கூட்டி விருந்துபசாரம் நடத்தினார் எனக் கூறப்படுகின்ற விவகாரம் அவரது பதவிக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. அரசியலில் சூடுபிடித்திருக்கின்ற இந்த விருந்து தொடர்பில் பிரதமர் ஜோன் சன் முதல் முறையாகத் தனது மன்னிப் பை வெளியிட்டிருக்கிறார்.உத்தியோக ரீதியான ஒரு கூட்டம் என்று எண்ணியே பலரை அங்கு அழைத்ததாக அவர் ஒப் புக்கொண்டிருக்கிறார்.நோய்த் தடுப்புப் பணிகளை நிர்வகிக்கின்ற தனது அதிகாரிகளை உற்சாகப்…

  18. அன்று புலிகளின் ஆதரவாளர்கள், இன்று அரச ஆதரவாளர்கள் ("கார்த்திகை மலரல்ல, உள்ளக் கமலமடா ஐயப்பன் வேண்டுவது" ) இலங்கை அரசுகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தில் பல போராளிகள் உயிர்களை துறந்தார்கள். பலர் தமது கல்வியை, வேலைகளை பாதியிலேயே விட்டுவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அவர்கள் தமது பெற்றோர்களை, உடன்பிறப்புகளை, வாழ்க்கைத் துணையரை பிரிந்து சென்றார்கள். சிலர் திரும்பி வந்தார்கள்; சிலர் உடல் உறுப்புகளை இழந்தார்கள்; சிலர் சித்திரவதைகளினாலும், தோல்விகளினாலும் மன நோயாளிகளாக வாழ்வை தொலைத்தார்கள். இவ்வாறு தமிழ் மக்களுக்கான போராட்டத்தில் பெண்களும், ஆண்களுமாக ஆயிரக்கணக்கானவர்கள் தம்மை அர்ப்பணம் செய்து கொண்ட போது ஒரு சுயநலக் கூட்டம் தாமும், தம…

    • 2 replies
    • 1.2k views
  19. இங்கிலாந்தில் மோசடிகள் அதிகரிக்கின்றது! தமிழர்கள் தமிழர்களையே மோசடி செய்கின்றனர்!!! இங்கிலாந்தில் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்ந்து வருவதும் இந்த மோசடிகளினால் அப்பாவிகள் பலர் பாரிய இழப்புகளுக்கும் உள்ளாகி வருவதும் தொடர்கதையாகி வருகின்றது. வியாபாரம், இலாப மீட்டுவது என்ற பெயரில் ஊரையடித்து உலையில் போடும் வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். லண்டன் தமிழர்கள் சிலரும் தங்களை சமூகத் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் கூட இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பணத்தை எப்படியாவது ஈட்டலாம் அதுவே தங்களது திறமை எனக்கருதும் இந்த உதவாக்கரைகள் தனிப்பட்ட பலரின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு துணை போகின்றனர். இந்த மோசடிகளில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது வீட்டை வைத்து மேலதிக கட…

  20. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்தவர் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு-தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு. Posted on December 31, 2021 by சமர்வீரன் 40 0 உலக மக்களுடன் சேர்ந்து உலகத் தமிழ்மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்த பேராயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவு மனித நேயத்தின் பெரும் இழப்பாக கருதுகிறோம். உலகளாவிய ரீதியில் இன நிறவெறிக்கெதிராகக் குரல் கொடுத்து வந்த மானுடநேயர் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு் அவர்கள் தனது 90 ஆவது அகவையில் காலமான செய்தி எம்மையெல்லாம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஆன்மீகவழியில் மானுட விடுதலைக்காகப் போராடிய மகத்தான மாமனிதர். தென் ஆப்ரிக்கா மக்கள் இன -நிற வெறி அடக்குமுறைக்குள் இருந்த காலத்தி…

    • 0 replies
    • 654 views
  21. புலம் பெயர் தேசத்தில் வாழும் எம் தமிழ் உறவுகளிற்கு அன்பான, அவசரமான விழிப்புணர்வும்,வேண்டுகோளும் December 25, 2021 “எமது சமூகத்தின் மீது அளப்பரிய அன்பும், அக்கறையும் கொண்டமையினால் மிக முக்கியமான சில தகவல்களை உங்களிற்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்” என நீதியும் சமத்துவத்திற்குமான கனேடியர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் குறித்த அறிக்கையில், “இலங்கை அரசின் பொருளாதாரம் படுமோசமான வங்குரோத்து நிலைக்கு உட்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இந்த மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை அரசு மீள்வதற்கு வெளிப்படையான மற்றும் மறைமுகமான செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது”. மேலும் அறிய கீழ் உள்ள லிங்கை அழுத்தவும், …

  22. இலங்கை படைதரப்பினர் மீதான அமெரிக்காவின் தடை – புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வரவேற்பு! மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயணத்தடை விதிக்கும் அமெரிக்காவின் சமீபத்திய முடிவை சர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் 09 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வரவேற்றுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஏனைய ஜனநாயக நாடுகளும் பின்பற்ற வேண்டுமென புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கோரியுள்ளன. சர்வதேச மனித உரிமை தினத்தை குறிக்கும் விதத்தில் 2021 டிசம்பர் 21 -ஆம் திகதி இலங்கையின் இரு இராணுவ அதிகாரிகள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2008-2009 காலப்பகுதியில் 11 பேர் கடத்தி காணாமலாக்கப்பட்ட விவ…

  23. உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள் லண்டன் சென்ற திருமாவளவனை எதிர்த்து புகைப்படத்தை கிழித்தெறிந்து விரட்டிய ஈழத்தமிழர்கள்... திருமாவளன் தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க்காக லண்டன் சென்றார். அவருக்கு ஜோசப் மெக்கலோ என்பவர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் 100 இலங்கை தமிழர்கள் பங்கேற்றனர்,, அப்போது பேசிய திருமாவளவன் இந்தியாவில் மதவாத சக்திகள் அதிகரித்து விட்டார்கள். தொடர்ந்து பல இன்னல்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம். இதற்க்கு முடிவு கட்டி தமிழ் கலாசாரத்தை காக்க #விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு நிதி அளியுங்கள் என்று கூறினார் அப்போது கூட்டத்திற்கு வந்த ஆறுமுகம் என்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.