Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விக்கிப்பீடியாவில் அசத்தும் ஈழத் தமிழன்.! விருதுகளை அள்ளிய மயூரநாதன்.! இன்று விக்கிபீடியாவில் 85,000-க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாசிக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருப்பது இ.மயூரநாதனின் பெரும் உழைப்பு. 2001-ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது. அதன் எதிர்கால வீச்சை உணர்ந்து, விக்கிப்பீடியாவோடு இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003-ம் ஆண்டில் தொடங்கினார். அதன் அடிப்படைக் கட்டமைப்புக்காக ஒரு வருடம் தனியாளாக உழைத்தார். ஏராளமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி, ஆன்லைன் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இன்று 88,000 தமிழர்கள் விக்கிப்பீடியாவில்…

  2. திருக்குறளை ஜனரஞ்சகப்படுத்தும் சிங்கை இளைஞர்கள்! நம்முடைய வாழ்வின் ஏற்றங்கள், தடுமாற்றங்கள், பிரச்சினைகளில் முடிவெடுக்க திணறும் தருணங்கள்.. இப்படி நம் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உதவுவதற்கு உலகத்தின் பொதுமறையாக மதிக்கப்படும் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு பெரும்பங்கு இருக்கிறது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்? ஒரு நாட்டின் அரசன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்? கல்வியின் முக்கியத்துவம் என்ன? மனிதன் வாழ்வதற்கு செல்வம் எந்தளவுக்கு அவசியம்? நாவடக்கம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்? இப்படி உலகம் முழுவதும் வாழும் ஒட்டுமொத்த மனித குலமும் எதிர்கொள்ளும் கேள்விகளுக்கான பதில்களை சிந்தித்து தீர்வுகளை முன்வைக்கிறது திருக்குறள். நடைமுறை வ…

  3. கனேடியர்கள் சீனாவில் கைதுசெய்யப்பட்ட விவகாரம்: பிரதமரின் குற்றச்சாட்டு பொறுப்பற்றது என சீனா தெரிவிப்பு by : Anojkiyan 18 மாதங்களுக்கும் மேலாக சீனாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இரண்டு கனடியர்கள் தொடர்பாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டு, பொறுப்பற்றது என சீனா மறுத்துள்ளது. ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தக தடைகளை மீறியதாக சீனாவைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டார். இதற்கு பழி வாங்கும் வகையில் சீன அரசு கனடாவைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளது எனும் குற்றச்சாட்டை பிரதமர் ஜஸ்டின் முன்வைத்தார். எனினும், சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின்…

    • 0 replies
    • 826 views
  4. வ‌ண‌க்க‌(ம்) உற‌வுக‌ளே 🙏 நாம் எல்லாம் த‌மிழீழ‌ ம‌ண்ணில் பிற‌ந்து புல‌ம் பெய‌ர் நாட்டில் வாழுகிறோம் , இப்ப‌டி ஒரு திரி யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் இத‌ற்கு முத‌ல் திற‌ந்தின‌ம்மோ தெரியாது , நேர‌ம் இருக்கும் போதெல்லாம் யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் எழுதும் ஆக்க‌ங்க‌ளை வாசிப்பேன் , 12வ‌ருட‌த்துக்கு முத‌ல் ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் எழுதின‌துக‌ளையும் வாசிப்பேன் 💪🙏 சின்ன‌னில் எம் முன்னோர்கள் எம‌க்கு சொல்லி த‌ந்த‌ ப‌ல‌ நூறு ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ளை ம‌ற்றும் எம் க‌ண்ணால் க‌ண்ட‌ ந‌ல்ல‌ நிக‌ழ்வுக‌ளை நாம் ஒரு போதும் ம‌ற‌க்க‌ப் போர‌தும் இல்ல‌ , த‌மிழீழ‌த்தில் திரும‌ண‌ நிக‌ழ்வில் இருந்து சாம‌த்திய‌ வீடு பிற‌ந்த‌ நாள் நிக‌ழ்வுக‌ளில் நாம் க‌ல‌ந்து கொண்டு இருப்போம் , சிறு வ‌ய‌தில் நான் க‌ண…

  5. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபெத்தியர்கள்: ஜெனீவாவில் போராட்டம்.! ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்பாக ஈழத் தமிழர்களுக்காகவும் திபெத்தியர்கள் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். திபெத்திய மக்கள், தங்களது ஜனநாயக உரிமைப் போராட்டத்தினை ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை முன்பாக மேற்கொண்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தின்போது, உலகில் இனப்பாகுபாட்டிற்காகவும் மதரீதியான பாகுபாட்டிற்கும் எதிராகவும் இனவழிப்புக்காகவும் ஐ.நா குரல் எழுப்ப வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் இன்றைய போராட்டத்தின்போது, திபெத்திய போராட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதேவேளை, இராணு…

  6. கனேடிய- அமெரிக்க எல்லையில் 1.5 டன்னுக்கு மேற்பட்ட கஞ்சாவை கைப்பற்றிய எல்லை அதிகாரிகள்! by : Anojkiyan கனேடிய- அமெரிக்க எல்லையில் 1.5 டன்னுக்கும் மேற்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, அமெரிக்க எல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ஒன்றாரியோவிலிருந்து நியூயோர்க் மாநிலத்திற்குள் செல்ல முயன்ற ஒரு லொரியிலிருந்தே, 58 அட்டை பெட்டிகளில் நிரப்பப்பட்ட 1,517 கிலோகிராம் அளவு கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க கிழக்கு கடற்கரையில் உள்ள முக்கிய நகரங்களின் வீதிகளில் இந்த கஞ்சா விற்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அங்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ளதாக அவர்கள் ம…

    • 0 replies
    • 1.1k views
  7. "முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவாக நான் முகநூலில் பகிர்ந்துகொண்ட காணொலியை நீக்குமாறு கோரி எனக்கும் எனது மனைவிக்கும் குடும்பத்துக்கும் எதிராக மெல்பேர்னிலிருந்தும் சிறிலங்காவிலிருந்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட மரண அச்சுறுத்தல்கள், பாலியல் தாக்குதல் மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்கள்" மாபெரும் இன அழிப்பொன்றை நினைவு கூர்ந்த காரணத்துக்காக மே 18 ஆம் திகதிமுதல் தனக்கு நேர்ந்த அனுபவங்களை இன்று - 17th of June 2020 - நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற அமர்வில் சற்று முன்னர் பகிர்ந்துகொண்ட Parliamentarian Dr Hugh McDermott.Via ப.தெய்வீகன்

    • 4 replies
    • 1.4k views
  8. புகைப்படக் கண்காட்சியுடன் ஆரம்பமாகியது ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் Post Views: 27 June 17, 2020 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், வழமையைவிட மிகவும் குறைந்தளவு வெளிநாட்டவர்களே இந்த முறை சமூகமளித்திருப்பதாக ஜெனீவா செய்திகள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களே பெருமளவுக்கு வந்திருக்கின்றார்கள். கொரோனா பரவல் காரணமாக பெரும்லான சர்வதேச விமான சேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அதனால். வெளிநாட்டவர்கள் அதிகளவில் இதில் கலந்துகொள்ளவில்லை. மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஒரு வ…

  9. Minneapolisல் பொலிசாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட மனிதன்.

  10. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என கனடாவை அங்கீகரிக்க கோரும் கோரிக்கைக்கு உங்கள் ஆதரவை கோரும் இணைப்பு இது. உங்கள் ஆதரவை தந்து, இதனை மற்றவர்களுக்கும் பகிரவும். https://www.change.org/p/the-right-honorable-justin-trudeau-prime-minister-of-canada-canadian-government-to-officially-recognize-sri-lanka-s-genocide-against-tamils?utm_source=share_petition&utm_medium=custom_url&recruited_by_id=684f20c0-ae59-11ea-8a69-6bb59e325db0 நன்றி

  11. நாட்டுப் பற்றாளர் அக்காச்சி அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு! On Jun 12, 2020 டென்மார்க் நாட்டில் கடந்த 08.06.2020 திங்கட்கிழமை மாரடைப்பால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை (அக்காச்சி – வயது 57) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு (11.06.2020) வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் டென்மார்க் VIBORG நகரில் இடம்பெற்றது. நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை அவர்களின் புனித உடலுக்கு தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் அறிக்கையும்வாசித்தளிக்கப்பட்டதுடன் பல முக்கிய செயற்பாட்டளர்களின் இறுதிவணக்க உரைகளும் இடம்பெற்றன. https://www.thaarakam.com/ne…

  12. யாழ். குரும்பசிட்டி நபர் கனடாவில் கொலை On Jun 10, 2020 யாழ் குரும்பசிட்டியை பிறப்பிடமாக் கொண்ட குடும்பஸ்தரான மகாலிங்கம் மதன் என்பவர் கனடாவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த குடும்பஸ்தரின் கொலைக்கு தொழில் போட்டியே காரணமாக இருக்கலாம் என கனேடியப் பொலிசார் கருதுகின்றனர். https://www.thaarakam.com/news/136455

  13. “ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்ல, வெறும் ஆயுத மோதலே” என்ற தொனிப்பொருளில் Sri Lankan Canadian Action Coalitionஇனால் நேற்று (Jun 6) Zoom காணொளி மாநாடு நடத்தப்பட்டது. இதில் Dr. சரத் சந்திரசேகர உட்பட நால்வர் கலந்துகொண்டனர். இனப்படுகொலைக்கு ஆதரவாக தமிழ் கனடிய அரசியல் தலைவர்கள் உட்பட ஏனைய அரசியல் தலைவர்கள், பாடசாலை சபைகள் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள், Scarborough Rough Park தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.விஜய் தணிகாசலம் ‘ஈழத்தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம்’ (Tamil Genocide Education Week Act -Bill 104) தொடர்பாக ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்தில் கொண்டுவந்த சட்டமூலம் அனைத்துக்கும் எதிராக மிக விரிவான ஒரு விளக்கத் தொகுப்பாக இது அமைந்தது. இதில் கனடியத் தமி…

    • 12 replies
    • 2.2k views
  14. Rajessh Kumar Radhakrishnan9 hours ago தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்..... 🙏🙏🙏தயவு செய்து எல்லோரும் கையெழுத்து இட்டு நம் இனப் படு கொலைக்கு தீர்வு காண வலு சேர்ப்போம்...நான் கையெழுத்து போட்டு விட்டேன்.... நன்றி 🙏🙏🙏... NTK https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community

  15. லண்டன் குரைடன் நகரில் பிறந்த குழந்தையின் 31 விழாவை வீட்டில் செய்த தமிழ் குடும்பத்திற்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர், வீட்டில் இந்த விழாவை இவர்கள் நடத்தியதால் சுமார் 20 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளார்கள். இதனை அவதானித்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் சொல்லவே, விரைந்து வந்த பொலிசார் அனைவரையும் கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்கள். விழாவை நடத்திய குடும்பத்தாருக்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதித்த பொலிசார், இந்த விதியை மீறிய 20 பேருக்கும் தண்டம் விதித்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது. 2 வாரங்களில் தொகையை கட்டவேண்டும் என்றும் இல்லையென்றால் அது இரட்டிப்பாகும் என்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள். …

    • 12 replies
    • 2.4k views
  16. இமாலய எல்லைப்பகுதியில் படைகளை குவித்து படை தனது வலிமையினை முறுக்கிக் காட்டும் சீனாவின் நடவடிக்கையையும் கண்டிப்பதோடு, ஹொங்கொங் மீது சீனா திணிக்க முனையும் பாதுகாப்புச் சட்டத்தை கண்டிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த திணிப்பு எதிரான போராடத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தனது தோழமையினை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் நாடுகடந்த அரசாங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,ஹொங்கொங் தொடர்பில் 'பாதுகாப்பு' என்ற பெயரில் ஒருதரப்பாகச் சட்டமியற்றும் சீனாவின் திட்டத்தைக் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது. சீன நாடாளுமன்றத்தால் கடந்த மே 28ம் நாள் ஒப்புதலளிக்கப்பெற்ற இச்சட்டமானது ஹொங…

  17. எங்கள் ஊர் நல்ல செம்பாட்டு மண். ஊரெல்லாம் தோட்டமும் துரவும். எல்லா வீடுகளிலும் மா, பலா, தென்னை எண்டு ஒரே சோலையாகவும் இருக்கும். ஆனா அதுக்கு ஏற்றதுபோல மழை காலங்களில உள்ள பூச்சி புழு எல்லாம் வந்திடும். எனக்கு பாம்புக்கு கூட பெரிசாப் பயம் இல்லை ஆனால் உந்த அட்டைகள் என்றாலே பயம். பேனை அட்டை , சரக்கட்டை... சிவப்பட்டை அதிலும் சிவப்பு நிற அட்டை இருக்கே அந்தக் கருமம் எல்லா இடமும் ஏறும். வீடு, சுவர், மரம் ,நிலை, ரொய்லட் ....... அய்யய்யோ அதை நான் துப்பரவா மறந்தே போனன். ஊரில நின்றபொழுது ஒருக்கா என் சட்டையில் கூட ஏறிட்டுது. சட்டையைப் பிடிச்சுக்கொண்டு நான் கத்தின கத்தில கள்ளன் வந்திட்டான் எண்டு அக்கம்பக்கச் சனம் எல்லாம் வந்திட்டிது. அங்க போய் நிக்கிற நேர எல்லாம் எல்லைக் காவல் பட…

  18. எல்லாரும் தேசம், தேசியம், மண், உரிமை இன்னும் ஏதேதோ எல்லாம் கதைத்து வாய்ச்சவடால் விட்டபடி எம்மையும் ஏமாற்றி மற்றவரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் எமது மண்ணின் மேல் ஆசையும் அக்கறையும் இருந்தால் இப்ப உள்ள நிலைமையில் நாம் எமது மண்ணுக்குப் போய் வாழ எம்மைத் தயார் படுத்தவேண்டும். ஆனால் எம்மால் அங்கு போய் வாழ முடியுமா என்றால் யாரும் தயார் இல்லை. சிலர் போய் வாழ்கிறார்கள் தான். ஆனால் அவர்கள் எம்மைப்போல் வாய்ப்பந்தல் போடாதவர் தான். எமக்குத் தேவை பணம், வசதியான வாழ்வு அவ்வளவே. ஏன் எம் நாட்டில் நாம் வசதியாக வாழ முடியாதா என்ன ?????

  19. மத்திய அமெரிக்காவின் Guyana நாட்டின் ஜனாதிபதி Donald Ramotar , போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் Stephen J. Rapp உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் பங்கெடுக்கின்றனர்.மே22ம் நாள் வெள்ளிக்கிழமை (அமெரிக்கா) நியூ யோர்க் நேரம் காலை 8 மணிக்கு தொடங்க இருக்கின்ற இந்நிகழ்வினை www.tgte.tv வலைக்காட்சி , https://www.facebook.com/tgteofficial சமூகவலைத்தளம் உட்பட தமிழர் ஊடகப்பரப்பெங்கும் உலகத்தமிழர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வணக்கம் சகோதர சகோதரிகளே, கடந்த மே18ம் நாள் இடம்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை கிழக்கு தீமோரின் முன்னாள் ஜனாதிபதி Dr. Jose Ramos-Horta அவர்கள் வழங்கி…

  20. `தனி மனிதராக எதையும் சாதிக்க முடியாது' வைரலாகும் ஒபாமாவின் உரையின் முழுப்பகுதி! #Graduation2020 ஐஷ்வர்யா ஒபாமா ( Instagram ) ஒபாமாவின் பேச்சு இந்தப் பேரிடர் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இதைக் கேட்க வேண்டும் என ட்விட்கள் குவிந்தபடி இருக்கின்றன. கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான 2020 பட்டமளிப்பு தினம் நேற்று அமெரிக்காவில் கொரோனா ஊரடங்குக்கு நடுவே வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 1.2 மில்லியன் பேர் இந்த ஆண்டு பட்டம் பெற்றுள்ளனர். கலிபோர்னியா மாகாணக் கலைக்கல்லூரியிலிருந்து இந்தாண்டு இளங்கலை கவின்கலைப் பட்டம் பெற்றிருக்கும் ரேச்சல் ஹேண்டலினு…

    • 0 replies
    • 1.1k views
  21. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர் விருதைப் பெற்ற இலங்கைப் பெண் தர்சிகா விக்னேஸ்வரன் என்ற இலங்கைப் பெண் அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை பெற்றுள்ளார். கிழக்கிலங்கையில் திருகோணமலை நகரை சேர்ந்த தர்சிகா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதல் வகுப்பில் 2018 இல் சித்தி பெற்றவர். உள்நாட்டு யுத்த நிலைமையால் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக நிச்சயமற்ற நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டது. ஆயினும் யாழ் , பல்கலை கழகத்தில் அவர் பட்டம் பெற்றபோது அவரின் அறிவுக்கூர்மை வெளிச்சத்திற்கு வந்தது. வட இலங்கையில் பொறியியல் பீடத்திற்கு சென்றிருந்த போது தர்சிகாவின் திறமையை சவுத்…

  22. இந்த மாதமாதம்..17..18..19.. ந்திகளில் இரவும் பகலும் எனது வீட்டுத்தொலைபேசி மணிஅடிக்கும் பொழுதெல்லாம் அவை மரணத்தின் மணிச்சந்தங்களாகவே இருந்தது..19 ந்திகதி மதியத்துடன் தொலைபேசி சத்தங்கள் மட்டுமல்ல நானும் சேர்ந்தே சோர்ந்து போனேன்..எங்கள் கனவு..எங்கள் உழைப்பு..எங்கள் தியாகங்கள்..போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..கொஞ்சம் கொஞ்சமாய் கட்டி வளர்த்த இயக்கம்..தளபதிகள் போராளிகள். எல்லவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்று நாங்கள் இறுமாப்பாய் சொன்ன எங்கள் தலைவன்..அவனது குடும்பம்.. என்று அத்தனையையுமே இழந்துவிட்டோம்..இனியென்ன எல்லாம் முடிந்து விட்டது.. இனி பத்திரிகைகளில் மட்டுமல்ல இணையத்தளங்களிலும் எழுதுவதில்லை அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.