வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது. ஏப்ரல் மாதத்தில் வழமையாக பெய்யும் மழை இந்த வசந்தத்தில் ஏனோ இன்னமும் இல்லை. ஆனால் இன்னுமொன்று இருக்கிறது. கோடையில் இருக்க வேண்டிய வெய்யில் வசந்தத்தில் வந்திருக்கிறது. சூரியனுக்கு தாராள மனதா? இல்லை கொரோனாவில் வீடுகளுக்குள் அடைந்து கிடப்பவர்களை வெளியே இழுத்துவிடும் எண்ணமா? தெரியவில்லை. வெறிச்சோடி இருக்கும் வீதிகளில் எல்லாம் சூரியன் வெளிச்சம் ஓடி இருக்கிறான். வெப்பநிலை 25 செல்ஸியசைக் கடந்திருக்கிறது. இந்த நேரத்தில்தான் 800 சதுர மீற்றர் பரப்பளவுக்குள் உள்ள வியாபார நிலையங்களை மீண்டும் திறந்து வியாபாரங்களை ஆரம்பிக்க யேர்மன் அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. அதற்குள்ளும் சலூன்கள், பார்கள், உணவகங்கள் என்று சிலவற்றுக்கான அனுமதி இன்னமும் மறுக்கப் …
-
- 2 replies
- 1.1k views
-
-
24/04 மற்றுமொரு லண்டன் தமிழ் மருத்துவர் கொரோனாவிற்கு பலி! லண்டன் மிட்லேண்டில் பணியாற்றி வந்த மருத்துவர் விஷ்ணு ராசையா (வயது - 48) என்ற இளம் தமிழ் மருத்துவரே இன்று (24.04.2020) கொரோனா தாக்கி பலியானார். மருத்துவர் விஷ்ணு ராசையாவின் குடும்பத்தினர் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். அவர் என்.ஹச்.எஸ். பவுணுடேசன் டிரஸ்டின் பக்கிங்காம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவத்தை கவனித்து வந்துள்ளார். பொதுவாக நோயுற்று வரும் குழந்தைகளையும் அவர்களது குடும்பத்தினரையும் மிகுந்த அக்கரையோடு கவனித்துக் கொள்வது இவரது பண்பு. மருத்துவரைப் பற்றி அவரது மனைவி லிசா கூறும்போது, அவர் ஒரு நல்ல அப்பாவாகவும், நல்ல கணவராகவும் இருந்தார் என்றார். மருத்துவர் விஷ்ணு ராசையாவிற்கு மனைவியு…
-
- 27 replies
- 3.9k views
-
-
கொரோனா வைரஸ்: கனடாவில் ஒரேநாளில் 173பேர் உயிரிழப்பு! by : Anojkiyan உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, கனடாவில் ஒரேநாளில் 173பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2147ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, நேற்று (வியாழக்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1920பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கனடாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,110ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை 14761பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 557பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. மேலும். 25202பேர் சிகிச்சை …
-
- 0 replies
- 653 views
-
-
பிரித்தானியாவில் கொவிட் -19இனால் உயிரிழந்த சிறுபான்மையினரில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள்! by : Anojkiyan பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் பெரும்பான்மையானவர்கள், இந்தியர்கள் என பிரித்தானிய தேசிய சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 17ஆம் திகதி உயிரிழந்த 13,918 பேரின் இனவாரியான புள்ளிவிபர அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கையிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, இவர்களில் 16.2 சதவீதம்பேர், சிறுபான்மையினர் ஆவர். இவர்களில் அதிகபட்சமாக 3 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அடுத்தபடியாக, 2.9 சதவீத கரீபியன் நாட்டினரும், 2…
-
- 1 reply
- 629 views
-
-
அமெரிக்க தேசத்தை உலுக்கும் கொரோனா – சர்வதேச ரீதியிலான கொரோனா பாதிப்புகளின் முழுமையான விபரம் by : Yuganthini உலகமெங்கும் பரவும் கொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அமெரிக்கா அதன் உச்சக்கட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல நாடுகள் பாரிய மனித அழிவுகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினமும் வழக்கம் போலவே அமெரிக்காவில் பாரிய மனித உயிரிழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 2,341 பேர் வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்த…
-
- 0 replies
- 659 views
-
-
ஈழத் திரைப்பட நடிகர் ஏ.ரகுநாதன் தனது 85வது வயதில் 22.04.2020 இல் காலமானார் என்ற துயரமான செய்தி வந்திருக்கிறது. ஈழத்து சினிமாவில் இவரது பங்கு அதிகமானது. இவரைப் பற்றி 2004இல் நான் எழுதிய ஈழத் தமிழ் சினிமா பற்றிய ஒரு கட்டுரையின் ஒரு சிறிய பகுதி இது. சினிமாப்படத்தை உருவாக்கும் ஆர்வம் யார் யாருக்கு வருமென்றில்லை. யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம்.வேத நாயகத்துக்கும் வந்திருக்கின்றது. விளைவு 'கடமையின் எல்லை' படம் தயாரானது. இது ஷேக்ஸ்பியரின் Hamlet என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட திரைப்படம். திரைப்படம் சம்பந்தமான நுட்பங்கள் தெரியாமலேயே எம்.வேதநாயகம் இந்தத் திரைப்படத்தை நெறியாண்டார். கூடவே இசை அமைப்பையும் ஏற்றுக் கொண்டார். இசை அமைப்பத…
-
- 8 replies
- 1.4k views
-
-
லண்டனில்... கொரோனாவிற்கு, வெற்றிகரமாக தப்பி பிழைத்த தமிழ்ப் பெண் ஜோதி கேசவன்! லண்டன் நகரில் மட்டும் கிட்டத்தட்ட 10 தமிழர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் நல்ல செய்தியாக ஒரு தமிழ் பெண் ஜோதி கேசவன் தப்பி நல்ல முறையில் வீடு வந்து சேர்ந்தார். கொரோனா தாக்கி கிரோடன் ஹெல்த் சேவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ் பெண் ஜோதி கேசவன் நோயாளியாக சில நாட்கள் இருந்து வந்தார். பின்னர் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவத்தின் பயனாக தற்போது முழு குணமடைந்து அவரது வீட்டிற்கு மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார். அவருக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் கை தட்டி மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தனர். உலகத் தமிழர் பேரவை-யின் சார்பாக நாமும் அவரை வாழ்த்துவோம். …
-
- 3 replies
- 937 views
-
-
அரச தலைவர்கள் சந்திப்புக்களை நிறுத்தி விட்டார்கள். விமானக் குண்டு வீச்சு, ஆட்லறி வீச்சு, போர்கள் இடம்பெறவில்லை, இராணுவங்கள் முடங்கியுள்ளன. போர்க் கப்பல்கள் ஓய்வு எடுக்கின்றன. பயணிகள் கப்பல்கள் ஒதுங்கிக் கொள்கின்றன. ஒவ்வொரு நாடும் ஒன்றன்பின் ஒன்றாக ‘லொக் டவுனை’ ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றது. ஐ.நா கூட தனது சேவைகளை மட்டுப்படுத்திவிட்டது. ‘லொக்டவுன்’ செய்தால் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவு என்று கருதிக் கொண்டிருந்த சிங்கபூர் கூட இன்றிலிருந்து மக்களை முடங்கச் சொல்லிவிட்டது. மது, மாது கூடாரங்கள், உல்லாச விடுதிகள், உணவுச்சாலைகள் வெறிச்சோடிவிட்டன. விழாக்கள், போட்டிகள், ஒன்றுகூடல்கள், வைபவங்கள் என அனைத…
-
- 1 reply
- 814 views
-
-
யேர்மனியில் மார்ச் 16ந் திகதி வந்த அரசாங்க அறிவிப்பின்படி தனிமைப் படுத்தல் மேலும் இரண்டு வாரங்கள் அதிகமாக்கப்பட்டு ஏப்ரல் 3ந்திகதிவரை நீடிக்கப் பட்டிருக்கிறது. ஈஸ்டர், கிறிஸ்மஸ் இரண்டுமே யேர்மனியில் பிரதானமானவை. ஈஸ்டர் திருநாளை ஒட்டி யேர்மனியில் வெள்ளி முதல் திங்கள்வரை நான்கு நாட்கள் பொது விடுமுறை இருக்கிறது. பாடசாலைக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை. யேசுவை சிலுவையில் அறைந்த வெள்ளிக்கிழமையில் அநேக யேர்மனியர்கள் இறைச்சி சாப்பிடுவதில்லை. ஆனால் மீன் சாப்பிடுவார்கள். விருந்தினர்கள் வருகைகள், அன்பளிப்புகள் என்று யேசு உயிர்த்த ஞாயிறில் அவர்கள் களித்திருப்பார்கள். ஈஸ்டர் திருநாளில் முட்டைகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றைத் தோட்டங்களில் ஆங்காங்கு ஒளித்து வைத்து விட்டு பிள்ளைகளிட…
-
- 2 replies
- 849 views
-
-
டாக்ஸி சாரதிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து, வீட்டு உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேற்றியிருந்த நிலையில், கொரொனா தாக்கத்துடன் காருக்குள் தங்கியிருந்து,தன்னுடைய இறுதிநேரத்தை மிகவும் மோசமான நிலையில் கழித்து உயிரிழந்த தமிழர் ஒருவரின் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ராஜேஷ் ஜெயசீலன் என்பவரே கடந்த 11ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மேற்கு லண்டன் பகுதியில் வசித்த இவர், உபேர் டக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே கொரோனா வைரஸின் அறிகுறிகளை உணர்ந்துள்ளார். பின்னர், 11ஆம் திகதி நோர்த்விக் பார்க் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி, …
-
- 7 replies
- 1.6k views
-
-
பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 847 பேர் மரணம் – மொத்த இறப்புகள் 14,576 ஆக உயர்ந்து. by : Kuruparan பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 847 பேர் மரணமடைந்துள்ளதாக NHS தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையுடள் பிரிட்டனின் மொத்த இறப்புகள் 14,576 ஆக உயர்ந்து 15 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளது. அத்துடன் புதிதாக +5,599 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108,692 ஆக உயர்ந்துள்ளது. http://athavannews.com/பிரிட்டனில்-கடந்த-24-மணித்/
-
- 0 replies
- 604 views
-
-
உலக தொற்றான கோவிட் 19னால் உயிர் இழப்புக்கள் உலகம் முழுவதும் தொடர்கின்றது. துரதிஸ்ட்டவசமாக புலம்பெயர் மக்களும் இறந்து வருகிறார்கள். குறிப்பாக, முதலாம் தலைமுறை மக்கள் இறந்து வருகின்றனர். மனைவிமார்கள் கணவரை இழப்பதும், பிள்ளைகளை பெற்றோர் இழப்பதும், பிள்ளைகள் பெற்றோரை இழப்பதும் என பல வடிவங்களில் தாக்கம் தொடர்கின்றது. ஆனால், மறுபக்கம் பொருளாதாரம் சரிந்து ஒரு இருண்ட வர்த்த உலகத்திற்குள் நாம் அனைவரும் சென்றுள்ளோம் இல்லை சென்றுகொண்டு இருக்கின்றோம். இந்த சுனாமியில் இருந்து எவ்வாறு தமிழ் மக்கள் தப்பலாம்? என்ன விதமான அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம்? உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
-
- 7 replies
- 1.3k views
-
-
திரு கந்தையா ஆனந்தநடேசன(London) இன்று 16/04/20 எம்மை எல்லாம் விட்டு கொடிய கொரோனா வைரஸால் இறைவனடி சேர்ந்துவிடடார் மிகவும் சிறந்த மிருதங்க ஆசிரியராக எண்ணற்ற நல்ல மாணவர்களைஉருவாக்கிய மனிதநேயம் மிக்க மாஸ்டரின் இழப்பு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. எல்லோருடனும் அன்பாக பழகும் பண்பாளர். அன்னாரது புனித ஆன்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் . அவரது குடும்பத்தார்,மாணவர்கள், பெற்றோர், உற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரை பற்றிய சிறு குறிப்புகள் முக புத்தகத்தில் இருந்து: Mano Sinnathurai எழுதியதுதூங்காத கண்ணென்று ஒன்று..*****************************************ஆனந்தனிடம் ஒரு கவர்ச்சி இருந்தது. அது எல்லோரையும் கவர்ந்தது. ஆனந்தனிடம் குறும்புத்தன…
-
- 4 replies
- 1.6k views
-
-
கொரோனாவை வெல்லும் பாடசாலைகளின் புதிய யுகம் இன்று ஆரம்பித்தது..!
-
- 0 replies
- 601 views
-
-
கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச உயிரிழப்பு! by : Litharsan கொரோனா வைரஸின் அதிதீவிரத் தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 383 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 123 பேர் மரணித்துள்ளதுடன் இதுவே அந்நாட்டில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகப் பதிவாகியுள்ளது. மேலும், கனடாவில் மொத்தமாக 27 ஆயிரத்து 63 பேருக்கு இதுவ…
-
- 9 replies
- 1.6k views
-
-
பிரான்ஸில் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது ஊரடங்கு! by : Benitlas பிரான்ஸில் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே பிரான்ஸ் ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நாட்டு மக்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த தொற்று நோய் நிலைப்பெற தொடங்கியுள்ளது. எனினும், நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸினை எதிர்கொள்ள எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. நோய் பரவல் குறைய தொடங்கியபின்பு ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் தொ…
-
- 2 replies
- 868 views
-
-
நாகரிகமான கைது
-
- 6 replies
- 1.3k views
-
-
புலம்பெயர் தமிழர்களின் இழப்பு தேசத்தின் இழப்பு: கவிஞர் தீபச்செல்வன் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக கலங்கி காத்திருக்கும் தாய்மார்களினால் ஆனது ஈழம். போருக்கு பறிகொடுத்த பிள்ளைகளுக்காக துடிதுடிக்கும் தாய்மார்களினால் ஆனது ஈழம். அதைப் போலவே தொலை தூரம் அனுப்பிய பிள்ளைகளுக்காகவும் ஏங்குகின்ற தாய்மார்களினால் ஆனது நம் ஈழ நிலம். கொரோனா அச்சம், புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்ற பிள்ளைகள் குறித்து ஈழத் தாய்மார்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்துகின்றது. அமெரிக்கா, பிரான்ஸ் முதலிய நாடுகளில் ஏற்படும் உயிர்பலி ஈழ வீடுகள் ஒவ்வொன்றையும் உலுக்குகின்றது. எங்கள் நாடு தமிழீழம், எங்கள்மீதான இனப்படுகொலைக்கு விசாரணை நடத்து என்று உலக அரங்கில் முழங்குபவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள். த…
-
- 0 replies
- 694 views
-
-
புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ் இளைஞர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.லண்டனுக்கு அகதி தஞ்சம் கோரி சென்று பத்து ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் இன்னும் அவரது அகதிக் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அவருக்கு, லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும். வாழ்க்கை என்பது கடல் போன்றது. கடலில் அலைகள் காலம் நேரம் மாறி மாறி எழுகின்றன. அது போல் நம் வாழ்க்கையில் இன்பம் துன்பம் மாறி மாறி வரும். அதை எதிர்த்து செல்லும் மன வலிமை எல்லோருக்கும் வேண்டும். எங்கள் பிரதமர் கொரோனா தாக்கத்தின் முதலாம் அலையினை வருகின்ற கோடை காலத்தின் ஆரம்பத்தில் வென்றுவிடலாம். ஆனால் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்தினை முறியடிக்க கனேடிய மருத்துவ விஞ்ஞானிகள் பெரும் ஆராச்சியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். கொரோனவை அடியோடு அழிக்கும் ஊசியினை வெகு சீக்கிரம் கண்டுபிடித்து விடுவோம். எனவே வீட்டில் தொடர்ச்சியாக இருந்து மனத்தைரியதுடன் ஒற்றுமையா…
-
- 1 reply
- 737 views
-
-
ஒவ்வொரு நாளும் தன்னை வந்து பார்த்துவிட்டுப் போகும் தனது மகள் கொஞ்ச நாட்களாகத் தன்னை வந்து பார்க்கவில்லையே என்று ஒரு தவிப்பு அந்தத் தாயிடம் இருந்தது. ‘இன்று வருவாள் நாளை வருவாள்’ என்று காத்திருந்து இரண்டு வாரங்களாகியும், மகள் வந்த பாடேயில்லை. யார் யாரோ என்னென்னவோ சொன்னார்கள். எதையுமே அந்தத் தாய் தனது காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவளது நினைப்பு முழுக்கத் தன் மகளிடமே இருந்தது. கொரோனாத் தொற்று யேர்மனியில் பரவிய போது, முதியோர் இல்லங்களில் அதன் தாக்கத்தைத் தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து செயற்படும்படி அரசாங்கம், முதியார் இல்லங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. அப்படி இருந்தும் Wolfsburg என்ற நகரத்தில் இருந்த முதியவர் இல்லத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டு பல முதியவர்கள் இற…
-
- 4 replies
- 899 views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
தற்போது உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலை விடுத்த வண்ணம் உள்ளது கொவிட் 19.இதனால் நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா இந்த வைரஸால் திணறிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அமெரிக்காவில் தீவிர கண்காணிப்பில் பலர் வைத்தியசாலைகளில் உள்ளனர். இந்த தகவலை வழங்கும் தமிழ் வைத்தியர் பணியாற்றும் நியு ஜேர்சி வைத்தியசாலைகளில் கூட 250 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். இவ்வாறு அமெரிக்காவில் கொவிட்19 நிலை என்ன என்பதை விளக்குகறார் தமிழ் வைத்தியரான சிறி சுஜந்தி ராஜாராம் https://www.ibctamil.com/usa/80/140895?ref=imp-news
-
- 1 reply
- 595 views
-
-
எனது நண்பி ஒருத்தியின் தந்தை இரு வாரங்களுக்கு முன்னர் பிரான்சில் இறந்துவிட்டார். அவர்கள் குடும்பத்தவர் அனைவரையும் எனக்கு நன்கு தெரிந்திருந்தது. அவரின் வயது 78. விடயத்தைக் கேள்விப்பட்டதும் அவளுக்குப்பின் செய்தேன். எதனால் இறந்தார் என்றேன். அந்தக் கொரோனா தானடி வந்திட்டுது. ஐயோ நாங்கள் போக்க கூட முடியாதடி. எல்லைகளையும் மூடி விட்டார்கள் என்று கூறி அழுதாள். அவளுக்குத் தந்தைமேல் மிகுந்த பாசம் என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்ததால் அவளுக்கு ஒருவாறு ஆறுதல் கூறிவிட்டு போனை வைத்த்துவிடடேன். அடுத்த நாள் மீண்டும் தொடப்பு கொண்டு அவளுடன் கதைத்துவிட்டு மற்றவர்கள் நிலை என்ன என்று கேட்டேன். ஏனெனில் அவளின் தாயும் தந்தையும் ஒரு சகோதரியுடன் தான் வசித்தனர். அவருக்கு கொரோனா என்றால் மற்வர்களுக்கு தொற…
-
- 7 replies
- 1.2k views
-
-
வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகல்! by : Benitlas அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகியுள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனுக்கும், செனட் சபை உறுப்பினர் பெர்ன…
-
- 0 replies
- 408 views
-