வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5821 topics in this forum
-
65 வயதான Haim-Swarovski 2010ம் ஆண்டு தன் தலைவிதியை நொந்து கொண்டார். ஒலிம்பியாவில் பங்கு கொள்ள நினைத்த அவரது தீராத ஆசை அந்த ஆண்டில் அழிந்து போயிற்று. யேர்மனியில் மூனிச் மாநிலத்தில் Fritzens என்ற இடத்தில் விவசாய நிலங்களை அண்டிய பகுதியில் ஒரு குதிரைப் பண்ணையை வைத்திருந்தார் ஒஸ்ரியாவைச் சேர்ந்த Haim. அவர் வளர்த்து வந்த 60 குதிரைகளில் முதன்மையானது Donna Asana என்ற குதிரை. பல போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி கொண்ட Donnaவை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக அதற்கு தினமும் Haim பயிற்சி கொடுத்து தயார்படுத்தி வந்தார். திடீரென ஒருநாள் Donna வுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. இடைவிடாத இருமலில் Donna அவதிப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் நி…
-
- 0 replies
- 958 views
-
-
Zeynep யேர்மனியில் Essen நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் குருதீஸ் இனத்தைச் சேர்ந்த ஒரு துருக்கியப் பெண். தனது ஐந்து பிள்ளைகளின் சமீபத்திய புகைப்படத்தைப் பார்த்து “என்னுடைய பெற்ற வயிறு பற்றி எரிகிறது” என்று இப்பொழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். Zeynep 17வயதில் தனது தாயின் உறவினரான தன்னைவிட11 வயது அதிகமான Ali Khalilஐ திருமணம் செய்து கொண்டாள். இன்று 33 வயதில், தனது மணவாழ்வு என்றுமே மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்கிறாள். வாகனங்கள் திருத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்த Ali Khalil பற்றி அவள் குறிப்பிடுகையில், “Aliக்கு சந்தேகம் என்னும் நோய் பயங்கரமாகப் பீடித்திருந்தது. எதுவுமே அவனுடன் பேச முடியாது. வீட்டை விட்டு வெளியே போக முடியாது. அடி, உதை என்று அவனிடம் இர…
-
- 0 replies
- 988 views
-
-
யாழ் இளைஞன், துருக்கியில்.. உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – கரவெட்டி – வதிரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துருக்கியில் உயிரிழந்துள்ளார். மயில்வாகனம் சிவரஞ்சன் என்ற 37 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகவரூடாக பிரான்ஸிற்கு செல்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து புறப்பட்டுச்சென்றதாக உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த இளைஞர் முகவர் ஊடாக பிரான்ஸிற்கு புலம்பெயர முயற்சித்த வேளை துருக்கியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் துருக்கியிலிருந்து சடலத்தினை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளது. http://athavannews.com/யாழ்-இளைஞன்…
-
- 0 replies
- 834 views
-
-
பனிச் சறுக்கலுக்காக யேர்மனியில் இருந்து விடுமுறைக்கு ஒஸ்ரியாவுக்குச் சென்ற பயணிகளுக்கு நடந்த அனர்த்தம் பற்றிய தகவல்கள் இப்பொழுது வெளிவந்திருக்கிறது. ஒஸ்ரியா - இத்தாலி எல்லையில் அமைந்துள்ள Luttach என்ற இடத்தில் 20 தொடக்கம் 25 வயதிலான யேர்மனிய சுற்றுலாப் பயணிகள் 6பேர் இறந்தும் 11 பேர்காயப்பட்டதுமன ஒரு துயரச் சம்பவம் 05.01.2020 அன்று அதிகாலை 1:00 மணிக்கு நடந்திருக்கிறது. மது போதையில் கார் ஓட்டி வந்த Kiens நகரைச் சேர்ந்த 28 வயது Stefan.L. என்ற இளைஞனது கார் மோதியதாலேயே இந்தத் துயரம் நடந்திருக்கிறது. இதில் படுகாயம் அடைந்தவர்களில் இன்னும் ஒரு பெண் நேற்று (06.01.2020) வைத்தியசாலையில் மரணமானார் என்று அறிவித்திருக்கிறார்கள். பஸ்ஸில் இருந்து இறங்கி தாங்கள் தங்கயிரு…
-
- 2 replies
- 916 views
-
-
அவுஸ்திரேலிய காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி! அவுஸ்திரேலியாவில் சிட்னி காட்டுத்தீயை (bushfires) அணைக்க போராடி வரும் இரண்டு தீயணைப்பு வீரர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா கிழக்கு பகுதிகளில் பல வாரங்களாக காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருகிறது, இதனால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், மற்றும் 700 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஹெக்டேர் நிலம் (3 மில்லியன் ஏக்கர்) அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டபோது, தீயணைப்பு வீரர்களின் லொரி ஒரு மரத்தின் மீது மோத…
-
- 0 replies
- 1.1k views
-
-
வடமராட்சி நெல்லியடி இளைஞர் ஐரோப்பா எல்லை காட்டுப்பகுதியில் வைத்து படுகொலை. ஐரோப்பா நாடு ஒன்றுக்கு முகவர் ஊடாக செல்ல முற்பட்ட நெல்லியடி வதிரியைச் சேர்ந்த மயில்வாகனம் ரஞ்சன் (வயது 38 ) என்ற இளைஞர் ஒருவர் கடந்த 24 ம் திகதி துருக்கியில் இருந்து கிறீஸ்லாந்து நாட்டுக்கு நுழைய முற்பட்ட போது அழைத்து சென்ற மாபீயா குழுவினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியீடப்பட்டுள்ளது . துருக்கி நாட்டில் இருந்து ஐரோப்பா எல்லை நாடான கிறீஸ் நாட்டுகுள் நுழைய நீண்ட தூரம் கடும் குளிரில் நடைப் பயணமாக ஆறு ,மலை, காடுகள் கடந்து கிறீஸ் நாட்டு எல்லைக்குள் நுழைய வேண்டும் குடியோறிகளை ஆள் கடத்தல் மாபீயா குழு அழைத்து செல்வது வழமையான விடயமாகும். இந்நிலையில் குறித்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
கனடாவில் தமிழ் இளைஞன் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்! கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 22 வயதான திருசாந்த் யோகராஜா என்ற இளைஞனவே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காணாமல் போன இளைஞன் பழுப்பு நிற ஜெக்கெட் மற்றும் கணுக்கால் உயரத்தில் குளிர்கால பூட்ஸ் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. இவர் தொடர்பான தகவல்கள் தெரித்தால் ரொறன்றோ பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கனடாவில்-தமிழ்-இளைஞன்-மா/
-
- 0 replies
- 502 views
-
-
நாங்கள் புது வருடத்தை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கும் போது தீயணைப்புப் படைப் பிரிவு, அவசரகால சேவை, காவல்துறை போன்ற பிரிவுகளில் வேலை செய்பவர்கள் தூக்கம் மறந்து ஓடியோடி வேலை செய்து கொண்டிருப்பார்கள். எப்படியோ புது வருடம் பிறக்கும் போது அங்கொன்று இங்கொன்றாக வீடுகள் தீப்பிடிக்கும் சம்பவங்களும் நடந்தேறும். புது வருடக் கொண்டாட்ட மயக்கத்தில் வீட்டில் வசித்தவர்களும் விருந்துக்கு வந்தவர்களும் ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது யேர்மனி Niedersachsen மாநிலத்தில் உள்ள Mueden/Aller. என்ற நகரத்தில் உள்ள வீடு ஒன்று தீப்பிடித்துக் கொண்டது. தீ ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்று இன்னமும் அறியப்படவில்லை. வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட வீட்டின் உரிமையாளரது ஜிம்மி என்ற நாய…
-
- 3 replies
- 855 views
-
-
பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம். கடந்த பகுதியில் பரிதிக்கும் தலைமைச் செயலக தமிழரசனிற்கும் நடந்த பேச்சு வார்த்தைகளின் பின்னர் தலைமைச் செயலக்தினருடனான இணைவிற்கு பரிதி ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிடுவதற்கு முன்னராக அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக லண்டன் தனத்திடம் இருந்தும் சுவிஸ் ரகுபதியியாலும் கொடுக்கப் பட்ட அழுத்தத்தை தொடர்ந்து ஜெர்மனியில் இருந்த இரும்பொறை பிரான்சிற்கு விரைந்து வந்ததும் பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார் என்பதை பார்த்தோம். பரிதி சுட்டுக் கொல்லப் பட்ட சில நிமிடங்களிலேயே அனைத்துலக செயலகம் சார்ந்த இணையத் தளங்கள் இந்தக் கொலையை தலைமைச் செயலகத்தை சேர்ந்தவர்களே செய்ததாக ஒரு தோற்றப் பாட்டை ஏற்படும் கடும் முயற்சியில் இ…
-
- 46 replies
- 7.6k views
-
-
லண்டனில் தவறுதலான சிகிச்சையால் உயிரிழந்த தமிழ் குழந்தை: இதனால் ஏற்பட்ட மாற்றம்! லண்டனில் உள்ள பிரபல சிறுவர் வைத்தியசாலை ஒன்றில் குழந்தைக்கு ஒன்றுக்கு சத்திர சிகிச்சை செய்தபோது, மூச்சு குழாயை மாறி உணவு குழாயில் வைத்ததால், குழந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளது. அவசரமற்ற சத்திர சிகிச்சையின் போது, மூன்று மாதக் குழந்தையான அக்சரன் சிவரூபன் என்ற குழந்தையே இந்த தவறு காரணமாக உயிரிழந்துள்ளது. லண்டன் லெம்பேத்தில் உள்ள எவெலினா வைத்தியசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூச்சுக் குழாய் அல்லது காற்றோட்டம் தொடர்பான குழாயை எவ்வாறு பரிசோதிக்க வேண்டும் என்று ஐரோப்பா முழுவதும் விசேட மருத்துவ நிபுணர்களுக்கு வழக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. வயிற்று உணவைக் கொண்டு செல்லும் குழா…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு – விமான நிறுவனம் பெருமிதம் விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்ததற்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் விமானமான ஸ்கூட்டில் விமானியாக பணிபுரியும் சரவணன் அய்யாவு அண்மையில், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தார். இந்த ஓடியோ பதிவை பேஸ்புக்கிலும் அவர் பதிவிட்டுள்ளார். விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்வது தன்னுடைய நீண்டகால எண்ணம் என்றும் அதற்கு அனுமதி கொடுத்த விமானத்தின் கப்டனுக்கு நன்றி தெரிவித்தும் அந்த பதிவில் சரவணன் குறிப்பிட்டுள்ளார். விமானம் தரையிறங்கும் முன்னர் நேரம், பருவநிலை குற…
-
- 0 replies
- 998 views
-
-
அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (National Science Foundation) தலைவராக அதிபர் டிரம்ப் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க தமிழர் திரு. சேதுராமன் பஞ்சநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! பேராசிரியர் பஞ்சநாதன் அவர்களுக்கு 2015-ம் ஆண்டு சான் ஹோசே விழாவில் Tamil American Pioneer (TAP) விருது வழங்கி கவுரவித்ததில் பேரவை பெருமிதம் கொள்கிறது. https://www.nature.com/articles/d41586-019-03924-3 “Dr. Panchanathan′s commitment, creativity, and deep insights will be instrumental in leading the National Science Foundation on its continued path of exploration and discovery,” said Kelvin Droegemeier, Trump′s science adviser and the head of the White House O…
-
- 1 reply
- 705 views
-
-
‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன் ‘புலம்பெயர்தல்’ என்ற சொற்பதம் அன்றுதொட்டு பயன்பாட்டில் இருந்தாலும் தமிழர்கள் போரின் காரணமாக இடம்பெயர்ந்து உலகின் பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்து ஊடகவியலாளர்களால் புலம்பெயரிகள் என்று தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறிப்பிடப்பட்டார்கள். போரின் காரணாமாக உயிரைக் காத்துக் கொள்வதற்காய், வறுமையின் காரணமாக, திருமணத்திற்காய், வெளிநாட்டு மோகத்தில், கல்வி கற்பதற்காய் என பல காரணங்களுக்காக அவர்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் மீண்டும் தாய்நாடு திரும்பி வாழ முடியாத ஒரு பாதுகாப்பற்ற நிலையை போர் தோற்றுவித்திருந்தது. பதினாறு பதினேழு வயதுதொட்டு ஐம்பது கடந்தவர்கள் கூட புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்ச…
-
- 53 replies
- 7.2k views
-
-
ரொறென்ரோவில் மூன்று நாட்களாக தமிழ்ப் பெண்ணை காணவில்லை! கனடாவின் ரொறென்ரோ பகுதியில் தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை ரொறென்ரோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சமூகவலைதளமான ருவிற்றரில் பொலிஸார் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ சக்தி குமாரசாமி என்ற 53 வயது பெண் கடந்த 15 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 15 ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்கு கடைசியாக பின்ச் அவெனியூ (Finch Av) ரப்ஸ்கொற் (Tapscott) வீதியில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ சக்தி 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடல்வாகுடன் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போன போது ஸ்ரீசக்தி கருப்பு …
-
- 0 replies
- 968 views
-
-
ஹரி ஆனந்தசங்கரி, சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமனம்! கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா செய்த தவறுகளை சுயநிர்ணயத்தின் அடிப்படையில் கொள்கைகளை அங்கீகரித்து செயல்படுத்துவதன் மூலம் மாத்திரமே அதனை சரிசெய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்…
-
- 0 replies
- 760 views
-
-
-
பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவித்து செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளார் வீடியொவொன்றில் பொறிஸ்ஜோன்சனின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தேர்தலை முன்னிட்டு டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார் வணக்கம் நான் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் எங்கள் நாட்டிற்கு செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தினரின்விழுமியங்களும்,எங்கள் தேசத்தின் தேசிய சுகாதார சேவை தொழில்முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும், அவர்கள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
கனடாவில் உயிரிழந்த இந்தியப் பெண்ணின் மரணம் தொடர்பாக அதிர்ச்சித் தகவல்கள்! கனடாவில் உயிரிழந்த இந்திய இளம்பெண்ணின் மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ச்சியாக சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த பிரப்லீன் மதாரு (வயது 21), கனடாவில் சர்ரே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட்து. அவருடன் 18 வயதான உள்ளூர் இளைஞர் ஒருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. இருந்த போதும் குறித்த இளைஞர் யார் என்பதைத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்தநிலையில், குறித்த யுவதி உயிரிழந்த தகவல் தவிர வேறெந்தத் தகவலும் அளிக்கப்படாத நிலையில், கனடாவுக்குச் சென்ற பிரப்லீனின் தந்தையான குர்தயால் சிங்…
-
- 0 replies
- 960 views
-
-
வடக்கு பிரிட்டனில் உள்ள பிராட்போர்ட் நகரில் காஷ்மீர் பற்றி எதாவது குறிப்பிடாமல், உரையாடலோ அல்லது விவாதமோ முழுமையடையாது. இங்கு, ஆலயமோ, மசூதியோ, ஒருவரின் வீடோ அல்லது தேர்தல் பிரச்சாரமோ எதுவாக இருந்தாலும் காஷ்மீரை புறக்கணிப்பது கடினம். இந்தியாவில் இருந்து 6,500 கி.மீ தொலைவில் உள்ள பிரிட்டனில் தேர்தல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது காஷ்மீர். ஆகஸ்ட் 5 ஆம் தேதி, இந்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் 370 வது பிரிவை அகற்றி அதன் தனித் தன்மையை முடிவுக்கு கொண்டுவந்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் யூனியன் பிரதேசங்களாக ஆக்கியது. இதனால், பிராட்போர்டில் வாழும் இந்திய மற்றும் பாகிஸ்தான் சமூகங்களிடையே, இது பிரச்சனையாக பெரிய அளவில் உருவெடுத்தது மட்ட…
-
- 1 reply
- 698 views
-
-
1967 இல் பிரித்தானியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Trial By Television பகுதி 1.
-
- 46 replies
- 5.9k views
-
-
இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் பணயம் வைக்கப்பட்டுள்ளது - துரித நடவடிக்கை எடுக்க கோரி பிரித்தானிய தமிழர் பேரவை இந்திய பிரதமருக்கு அவசர கடிதம் இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா உடன் எடுக்காது விட்டது எதிர்காலம் இருள்சூழந்ததாகிவிடும் என்று சுட்டிக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை இந்தியப் பிரதமர் மோடிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களின் நோக்கு எனும் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இல…
-
- 0 replies
- 569 views
-
-
மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்! ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி வதம் செய்யும் ஆட்சி தன்னை.. உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.. உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்…. சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்! துணிந்தெழும் ஞானவான்கள்! (மாவீரர்….) தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீ…
-
- 6 replies
- 1.5k views
-
-
வள்ளுவர் சிலையை திறந்து வைத்து உரையாற்றும் திருமாவளவன்..!! யேர்மனி வரை நீண்ட தமிழ்நாடு பொலிரிக்ஸ்..!! ஐரோப்பாவில் முதன் முறையாக நிறுவப்படும் இரண்டு ஐம்பொன் சிலைகளும் தமிழரின் சிந்தனை மரபுகளையும் பன்முகத் தன்மையினையும் விளக்குவதாக அமைந்திருக்கிறது. யேர்மனியில் ஐயன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துகிறேன் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் தாம் செல்லும் நாடுகளிலெல்லாம் தமது பண்பாட்டையும் அடையாளங்களையும் நிறுவி தனித்தவொரு தேசிய இனம் என்பதை உறுதி செய்து வருகின்றனர். இதனால் வேறுபாடுகளைக் கடந்து தமிழர்கள் என்று ஒரு…
-
- 0 replies
- 899 views
-
-
கல்வியில் தொடர்ந்தும் தமிழ் சிறார்கள் முன்னிலையில் நோர்வே ஆரம்ப பாடசாலை கல்வியில் இலங்கை பின்புலத்தை கொண்ட தமிழ் மாணவர்கள் சராசரி புள்ளி அடிப்படையில் நோர்வேஜிய பெற்றோரின் பிள்ளைகளை விடவும் முன்னிலையில் இருப்பதாக புதிததாக வெளிவந்துள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2012 ஆண்டு தொடக்கமான தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் சில வெளிநாட்டு பின்புலத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் ஆரம்ப பாடசாலை கல்வியில் நோர்வே பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளை விட முன்னணியில் இருப்பதாக Aftenposten செய்தி வெளியிட்டுள்ளது. இதிலும் குறிப்பாக இலங்கை பின்புலத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் ஏனைய நாட்டு பிள்ளைகளையும் விட கல்வியில் முன்னணியில் உள்ள…
-
- 1 reply
- 1.2k views
-
-
லண்டனில் முன்னாள் போராளிகள் சிறப்பாக நடத்திய தேசிய தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு முன்னாள்போராளிகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65வது அகவை நாள்நிகழ்வு மேற்கு லண்டனிலுள்ள பெருவில் ( Perivale) பகுதியில் 26.11.2019 கொண்டாடப்பட்டது. தமிழீழவிடுதலைப்புலிகளின் முன்னாள் மருத்துவப் போராளி உயர்ச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்தமிழீழ தேசிய கொடியினை முன்னாள்கடற்புலி போராளி சுடரொளி ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள்போராளிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த உணவான கோழிப்புக்கை இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது . தலை…
-
- 11 replies
- 2.9k views
-