வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
Rajessh Kumar Radhakrishnan9 hours ago தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்..... 🙏🙏🙏தயவு செய்து எல்லோரும் கையெழுத்து இட்டு நம் இனப் படு கொலைக்கு தீர்வு காண வலு சேர்ப்போம்...நான் கையெழுத்து போட்டு விட்டேன்.... நன்றி 🙏🙏🙏... NTK https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community
-
- 3 replies
- 2k views
-
-
வியாழக்கிழமை கனடா நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட் வரவுசெலவுத்திட்டத்தின் பிரகாரம் கனடா பிரஜையாவதற்குரிய கட்டணம், தற்காலிக மாணவர் விசா கட்டணம்,உத்தியோகத்தர் மற்றும் விருந்தினர் விசா கட்டணம் அதிகரிக்கப்படலாமெனக் கூறப்படுகின்றது. பிரஜாவுரிமை விண்ணப்பம், தற்காலிக மாணவர் விசா மற்றும் உத்தியோகத்தர் விருந்தினர் விசா சம்பந்தப்பட்ட ஆவணங்களைச்செய்முறைப் படுத்துவதற்குண்டான செலவினங்களை உள்ளடக்கும் நோக்கமே அரசாங்கத்தின் எண்ணமெனக்க கூறப்படுகின்றது. Citizenship and Immigration கனடாவின் கடந்த வருடம் செப்ரம்பர் மாத புள்ளிவிபரப்படி 319,519 பரிசீலனைக்கு இருந்ததாயும் ஆனால் 160 000 விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப்போதுமான நிதியுதவியே கிடைக்கப்பெற்றதாகவும் கூறப்படுகின்றது. CIC ம…
-
- 0 replies
- 484 views
-
-
கனடாவின் டொரென்டோவில் உள்ள இலங்கை தூதரக பிரதிநிதியின் அலுவலகத்தில் ஊடாக இரட்டை குடியுரிமை பெற்று தருவதாக கூறி, கனடாவில் வாழும் சிங்களவர் ஒருவர் அங்குள்ள தமிழர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து வாழும் தமிழர்களை ஏமாற்றி குறித்த நபர் இந்த நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து இலங்கை தூதரக பிரதிநிதியின் அலுலவகம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கனடாவில் வீடுகள் மற்றும் மனைகளை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கனடாவில் வசித்து வரும் சிங்களவரான வசந்த அபேசிறி என்ற நபரே இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அபேசிறி என்ற இந்த நபர் தூதரக அலுலவலகத்தில் பணியாற்றும் அவ…
-
- 5 replies
- 809 views
-
-
இரண்டாம் அமர்வின் இறுதி நாளில் நடந்தது என்ன? நாடு கடந்த தமிழீழ அரசு விளக்கம்.. [sunday, 2010-11-14 19:15:30] சென்ற செப்டம்பர் 29 - அக்டோபர் 1 திகதிகளில் நியூ யார்க் நகரில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாம் அமர்வில் நடைபெற்ற நிகழ்சிகளை சில இணையத்தளங்கள் உண்மைக்குப் புறம்பான வகையில் செய்திகளை வெளியிட்டு வந்ததை பலரும் எமது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். உண்மை நிலையைத் தெளிவுபடுத்தும் முகமாக இவ் அறிக்கையைப் பிரசுரிக்கின்றோம். 29 செப்டம்பர் 2010 கணக்கின்படி நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவையின் மொத்த உறுப்பினர் தொகை 97 பேர் மாத்திரமே. (சில இணையத்தளங்கள் உண்மைக்கு புறம்பான வகையில் வெளியிட்டது போல் 115 பேர் அல்ல. மிகுதி 18 உறுப்பினர்-தேர்தல் தொகுதிகளில்இ சில…
-
- 0 replies
- 465 views
-
-
இரண்டாம் தலைமுறையின் வெற்றியில் முதலாம் தலைமுறையின் பங்கு என்ன? - கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழ் மக்களின் சமூகவெளியை இரண்டாவது தலைமுறையினர் கூடுதலாக நிரப்ப ஆரம்பித்துள்ளனர். இங்கு இரண்டாவது தலைமுறை என்பது 1983 க்குப் பின்னர் புலப்பெயர்வுக்கு உள்ளானவர்களின் பிள்ளைகளையே கூடுதலாகக் குறிக்கிறது. 1980 க்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் மூன்றாம் நான்காம் தலைமுறையினரும் உருவாகி விட்டனர். இருந்தபோதும் 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலப்பெயர்வுக்கு உள்ளானவர்களே புலம்பெயர் தமிழர் சமூகத்தின் பெரும்பான்மையினராக உள்ளனர். தமது பிள்ளைகளை முன்னேற்றுவது குறித்து பெற்றோர்களாகிய முதலாவது தலைமுறையினர் செலுத்திய, செலுத்தி வரும் அக்கறை மிகுந்த கவனத்துக்குரியது…
-
- 2 replies
- 668 views
-
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள்சபை நோக்கி நேற்று லண்டனிலிருந்து ஆரம்பமான நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது. பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து நேற்று காலை 11.18 மணியளவில் ஆரம்பமான இந்த நடைபயணத்தின்போது மாலை 2:00 மணியளவில் ரூட்டிங் பகுதி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள மாவீரர்கள் நினைவாலயத்திற்குச் சென்று மலர்வணக்கம் செலுத்தி மீண்டும் தமது நடைபயணத்தை தொடர்ந்து சென்ற வழியில் மிச்சம் பகுதியில் வைத்து வல்வை சமூகத்தினர் அவர்களை வரவேற்று மாலை அணிவித்து உபசரித்து வழியனுப்பி வைத்தனர். இந்த மனித நேய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணத்தை ஜெயசங்கர், சிவச்சந்திரன், குமார், மற்றும் வேற்றினத்தவரான paul, shaun உட்ப…
-
- 2 replies
- 481 views
-
-
இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து: அதிர்ச்சியில் சிறிலங்கா !! 0 by tmdas5@hotmail.com • TGTE சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்துக்கள் இரண்டு இலட்சத்தினைக் கடந்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழீழம், புலம், தமிழகம் என தமிழர்கள் பரந்து வாழ்கின்ற தேசமெங்கும் பல்வேறு அமைப்புக்களினாலும் இக்கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் என்ற தரவரிசையில் இரண்டு இலட்சங்களைக் கடந்த இக்கையெழுத்து இயக்கமானது ஒரு மில்லியனை நோக்கி செல்கின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் விசாரண…
-
- 0 replies
- 385 views
-
-
16 Sep, 2025 | 09:02 AM நா.தனுஜா இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச பேரவை ஆகிய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக் கொண்டதில் நால்வர் பலி! அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் வானில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கோல்ட் கோஸ்ட்டின் பிரதான கடற்கரைக்கு அருகில் உள்ள மணல் திட்டில் விமானங்களின் சிதைவுகள் வீழ்ந்ததுடன், இன்று (02) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்தின் போது இரண்டு விமானங்களிலும் 13 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும், 6 பேர் லேசான காயமடைந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
-
- 0 replies
- 496 views
-
-
இரண்டே இரண்டு நிமிடங்கள். கீழே உள்ள இணையத்தை அழுத்தி கீழே போனால் இங்கே ஓன்பது இடங்களுக்கு அனுப்புவதற்கான இணைப்புக்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் அழுத்தி உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி நீங்கள் வசிக்கும் நாடு இவைகளை போட வேண்டும். முதலாவதற்கு செய்வது போல் ஒன்பது இணைப்புகளுக்கும் உரிய இடத்தில் மேற் கூறியவற்றை சரியாக எழுதுங்கள். உங்களுடன் மட்டும் நில்லாமல் நண்பர்கள் தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். http://www.tamilnational.com/campaign/click2send.php
-
- 0 replies
- 1.7k views
-
-
Click to Fax campaign - Urge US, UK and France for an Air Drop of Food, Medicine and Drinking Water. http://www.voiceagainstgenocide.org/vag/node/83
-
- 2 replies
- 2.6k views
-
-
இரதீஸ் யோகநாதன் - பதினைந்து வயதில் அகதியாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழன். "அகதித் தமிழன்" தீண்டத் தகாதவன் எனக் கருதும் மேற்குலகமே.., இந்தத் தமிழனின் கதையையும் பார்..! உனக்கும் புரியும் மொழியிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு வேகமாக வளர்ந்துவரும் நிறுவனத்தின் நிறைவேற்றும் தகுதி கொண்ட அதிகாரி (CEO of Lebara, http://www.lebara-mobile.co.uk/ ). ஆனால், பல இலட்சங்களை கண்டும் தன் மண்ணையும் மக்களையும் மறக்காத தமிழன். ஒவ்வொரு நாட்டிலும் இவ்வாறான தமிழர்களை நூற்றுக்கணக்கில் நாம் உருவாக்கவேண்டும்.
-
- 7 replies
- 1.2k views
-
-
ஒவ்வொரு நாளும் தன்னை வந்து பார்த்துவிட்டுப் போகும் தனது மகள் கொஞ்ச நாட்களாகத் தன்னை வந்து பார்க்கவில்லையே என்று ஒரு தவிப்பு அந்தத் தாயிடம் இருந்தது. ‘இன்று வருவாள் நாளை வருவாள்’ என்று காத்திருந்து இரண்டு வாரங்களாகியும், மகள் வந்த பாடேயில்லை. யார் யாரோ என்னென்னவோ சொன்னார்கள். எதையுமே அந்தத் தாய் தனது காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவளது நினைப்பு முழுக்கத் தன் மகளிடமே இருந்தது. கொரோனாத் தொற்று யேர்மனியில் பரவிய போது, முதியோர் இல்லங்களில் அதன் தாக்கத்தைத் தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து செயற்படும்படி அரசாங்கம், முதியார் இல்லங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. அப்படி இருந்தும் Wolfsburg என்ற நகரத்தில் இருந்த முதியவர் இல்லத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டு பல முதியவர்கள் இற…
-
- 4 replies
- 898 views
-
-
இரத்தம் தோய்ந்த சிறிலங்காவின் செங்கம்பளத்தில் பிரென்சு அழகுராணி போட்டியின் அணிவகுப்பு ! 2014ம் ஆண்டுக்கான பிரென்சு அழகுராணி போட்டியின் அனுசரணை நாடாக சிறிலங்கா இணைந்துள்ள நிலையில் இதற்கு எதிரான பிரச்சாரங்களும், கண்டனக்குரல்களும் பிரான்சில் எழத்தொடங்கியுள்ளன. வெளிநாட்டு உல்லாசிகளை கவர்ந்திழுக்கும் பொருட்டு சிறிலங்காவின் உல்லாசத்துறை மற்றும் சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் ஆகியன இப்போட்டிக்கு அனுசரனை வழங்கியுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த அழகுராணிப் போட்டியின் தேர்வு இடம்பெறவிருக்கின்ற நிலையில் இதன் முன்நிகழ்வாக பங்குகொள்ளும் பெண்கள் சிறிலங்காவுக்கு சென்று அணிவகுப்பினை செய்யவுள்ளனர். இந்நிலையிலேயே இதற்கு எதிரான பிரச்சாரங்களும் ,கண்டனக்குரல்களும் பிரான்சில் எழத்தொடங்கியு…
-
- 0 replies
- 632 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின், புலம்பெயர் தமிழர்களுக்கான உரை - சித்திரை 30, 2020
-
- 6 replies
- 1.3k views
-
-
இராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் திரும்ப அழைப்பு இராக்கில் இருந்து பெருந்தொகையான துருப்புக்களை திரும்ப அழைத்துக் கொள்வது குறித்து பிரிட்டானியப் பிரதமர் டோனி பிளேயர் முதல் முறையாக அறிவித்துள்ளார். இராக்கின் தென் பகுதி நகரான பாஸ்ராவில் உள்ள 7 ஆயிரத்துக்கும் அதிகமான பிரிட்டிஷ் துருப்புக்கள் அடுத்த சில மாதங்களில் 5 ஆயிரத்து ஐநூறாக குறைக்கப்படுவார்கள் என்று டோனி பிளேயர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனாலும் இராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் இருக்கும் வரை அடுத்த ஆண்டிலும் அவர்கள் அஙக்கு தங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பாஸ்ராவில் உள்ள பாதுகாப்பு நிலை பாக்தாத்தை விட மிகவும் வேறுபட்டது என்றும், கட்டுக்க…
-
- 0 replies
- 762 views
-
-
இராசயன ஆயுதங்கள் பயன்படுத்துவது தொடர்பான உங்கள் ஆதாரங்கள் உடனடியாக தேவை அனைத்து யாழ் உறவுகளுக்கும் வணக்கம் உங்களிடம் உள்ள ஆவணங்களை இங்கே (யாழ் களத்தில்) இணையுங்கள் அத்துடன் உங்கள் ஆங்கில அபபிப்பிரயங்களை இங்கே பதியுங்கள். இது ஐநா பாதுகாப்பு சபைக்கு அனுப்பும் மடலில் இணைப்பதாக எண்ணியுள்ளோம். நன்றி
-
- 11 replies
- 1.5k views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.vakthaa.tv/v/3533/kolathur-mani-speech
-
- 7 replies
- 1.3k views
-
-
இராணுவ அதிகாரி பிரியங்கரவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு(TYO) ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (15) 9:00 மணிக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் (TGTE) பூரண ஒத்துழைப்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பிரியங்கர பெனாண்டோவுக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்தும் குறித்த நபரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது கடந்த வருடம் பெப்ரவரி 04 ஆம் திகதியன்று அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்த Brigadier Priyanka Fernandoவை பிரித்தானிய பொலிஸ் கைது செய்ய தவறியது. எனினும் In…
-
- 0 replies
- 916 views
-
-
நீங்கள் அவசரத்தில் வந்து இது எனது உறுதிக்காணி தானே அரசாங்கம் இன்னும் விடுவிக்கவில்லை அதனால பதிய வாறன் என்டு பதிய வெளிக்கிட்டால்.ஆம் பதியலாம் உங்கள் கிராம உத்தியோகத்தரும் அதனை உறுதிப்படுத்தி தருவார்.நீங்களும் பதிந்து விட்டோம் என்ற சந்தோசந்தில் சென்றுவிடுவீர்கள் அங்கு தான் அடுத்த கட்ட விடயங்கள் ஆரம்பமாகின்றது. ஏற்கனவே இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபர்களின் காணிகளில் பாவனையற்று அல்லது எந்தவித நடவடிக்கையற்றும் இருக்கும் காணிகள் தொடர்பில் தகவல் திரட்டு தேவையான அளவு உண்டு அதில் வெளிநாடுகளில் உள்ளவர்களின் தகவல் திரட்டும் உண்டு. எவர் ஒருவர் இலங்கையில் எந்தவிதமான பதிவுகளும் அற்று புலம்பெயர் தேசத்தின் பிரஜையாக மட்டும் உள்ளாரோ அவரால்…
-
- 0 replies
- 691 views
-
-
யேர்மனிச் செய்தியாளர் 11/07/2009, 07:50 இராணுவத் தளபதியின் தூதுவர் நியமனத்தைக் கண்டித்து யேர்மனியில் ஆர்ப்பாட்டம் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட சிறீலங்காப் படைத்தளபதிகளுள் ஒருவரான மேஜர் ஜென்ரல் ஜெகத் டயஸ் யேர்மனியில் சிறிலங்காத் துணைத் தூதரகத்தின் பிரத்தித் தூதுவராக நியமனம் பெறுவதைக் கண்டித்தும், ஏதிலிகள் முகாங்களில் பெரும் அவலத்தைத் சந்தித்துக்கொண்டிருக்கும் 3 இலட்சம் மக்களை விடுவிக்கக்கோரியும், அவர்களை சொந்த இடம்களில் குடியேற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சிறீலங்காத் தூதரகம் அமைந்துள்ள தலைநகர் பேர்லினிலும், துணைத் தூதரகம் அமைந்துள்ள பிராங்போட் நகரிலும் இக்கண்டனப் பேரணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (13-07-2009) பேர்லின் (…
-
- 0 replies
- 674 views
-
-
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பாடசாலையின் இராப்போசன விருந்துக்கு சென்றிருந்தேன். விருந்து மண்டபத்தின் உள்ளே சென்றபோது நான் இருந்த இடத்தில் இருந்து பத்தடி தூரத்தில் உள்ள ஒரு மேசையில் குடிவகைகளும், உணவுவகைகளும் காணப்பட்டது, சுற்றிவர நோட்டம் விட்டால் எந்த ஒரு மேசையிலும் எந்த உணவுவகைகளோ,குடிவகைகளோ காணப்படவில்லை, விழாவே ஆரம்பமாகவில்லை எப்படி அந்த குறிப்பிட்டமேசையில் மாத்திரம் எனக்கேட்டபோது "அது வர்த்தக முதலைகளுக்காக பெரும்தொகை குடுத்துபுக்பண்ணிய மேசையாம் அதானால் தான் விழா ஆரம்பமாவதற்கு முன்பே பிரத்தியேக அவசர கவனிப்பு என்றார்கள்" பக்கத்துக்கு மேசையில் இருந்தவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும். எம்மவர்கள் பணத்துக்காக எதையும் செய்வார்கள், இன்னுமொருவிடயம் விழாவிற்கு வந்தவர்க…
-
- 0 replies
- 465 views
-
-
இராமன் கட்டியதாகக் கதை விடப்படும் சேது அணை தமிழ்நாடு அரசின் திட்டமாகிய சேதுக்கால்வாய்த் திட்டத்தைத் தடுத்து நிறுத்தித் தமிழ்நாடு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து, தமிழ்நாடு அரசுக்கு இடையூறை ஏற்படுத்த விரும்பும் தமிழெதிரிகள், தமது கையில் எடுத்திருக்கும் ஆயுதம் மதமும், இராமன் கட்டியதாகக் கதை விடப்படும் சேது அணையுமாகும். அந்தப் பொய்க்கு மெருகூட்டுவதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையத்தால், விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட, சேது என்றழைக்கப்படும் தொடர்ச்சியான, பாறைகளையும், மணல் திட்டுக்களின் படங்களையும் ஆதாரமாகக் காட்டியது மட்டுமல்ல, carbon dating முறையால் அந்த அணையின் வயது 1.7 மில்லியன் ஆண்டுகள் என்று நாசா கூறியதாகக் கதையும் விட்டனர் பரிவாரங்கள், அவை யா…
-
- 0 replies
- 732 views
-
-
[size=5]நேற்று முழுவதும் தீபாவளி வாழ்த்துக்களே எங்கு பாத்தாலும்.எனது தொலை பேசியில் ஐம்பதுக்கும் அதிகமான மடல்கள். நான் திரும்ப எவருக்கும் வாழ்த்து அனுப்பவில்லை.தொலைபேசியில் நேரில் வாழ்த்தியவர்களுக்கு மட்டும் காரசாரமான சொற்பொழிவு. பலர் பொல்லுக் குடுத்து அடி வாங்கிறது என்றால் இதுதான் என்று கூறி தொலை பேசியை வைத்தும் விட்டனர். ஒருவர் இராவணனின் படத்தோடு நரகாசுரனுக்கு வீரவணக்கம் என அனுப்பினார். இதில் மனவருத்தத்துக்கு உரிய விடயம் என்னவெனில் தமிழ் மன்னன் இராவணன் இராமனால் கொல்லப்பட்ட நாளை, ஆரியர்கள் எம்மைக் கொண்டே கோலாகலமாகக் கொண்டாட வைத்திருப்பது அவர்கள் திறமை தான். இது பற்றி அறிந்தபின் கிட்டத்தட்ட பதினோரு ஆண்டுகளாக நானோ எனது குடும்பத்தவரோ தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. முன்னர்…
-
- 42 replies
- 7.5k views
-
-
2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் இவரின் கணவர் ராசையா ராஜ் மனோகர். இத்தம்பதியினருக்கு நீதுஷா ராஜ் மனோகர், அமிர்தா என இரு குழந்தைகள். நேற்று ராஜினி சுப்பிரமணியம் சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட போது விமான நிலையம் வந்திருந்த சுற்றத்தார் அனைவரும் கண்ணீர் வடிக்க குழந்தைகளையும் , கணவரையும் பார்த்து அந்தப் பெண்மணி கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது. நேற்று இரவில் இந்தப் பெண் நாடு கடத்தப்படவுள்…
-
- 35 replies
- 4k views
-