வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
ஒன்ராரியோவின் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்கலச்சார விழாவில் 4வது தொடர் வருடமாக கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு கனடிய பிரதமர் மாண்புமிகு யஸ்ரின் ருடோ, எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு ரோனா அம்புரோஸ் ஆகியோருடன் பல மாகாண அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். கனடியப் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று, கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஈழம்சாவடி அமைவது மகிழ்ச்சி தருவதாகவும், கனடிய பல்கலாச்சார வாழ்வை பிராம்டன் பல்கலாச்சார விழா பிரதிபலித்து நிற்பதாகவும் தெரிவித்துள்ள்ளார். அதேவேளை ஈழம் …
-
- 1 reply
- 897 views
-
-
-
கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் மத்தியில் திறமை அடிப்படையில் வழங்கப்படும் ஆர்பிசி 25 உயர் விருதுகளில் இலங்கை வம்சாவளி தமிழர்கள் இருவர் உள்ளடங்கியுள்ளனர். இவர்களுக்கான விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. தமது துறைகளில் சிறப்புக்களை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இந்த உயர்விருதுக்கு தெரிவாகியுள்ளார்கள். இந்த 25 விருது பெறுபவர்கள், இணையம் மூலம் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்றனர். இதில், வீடு, மனை விற்பனையில் ஈடுபட்டு வரும் சந்திரன் பெர்னாண்டோ என்பவரும்தொழில்நுட்பதிட்டம் ஒன்றின் உரிமையாளரான குமரன் தில்லைநடராஜா என்பவருமே இந்த வருடத்துக்கான உயர் விருதைப் பெற்றுள்ளார்கள். …
-
- 0 replies
- 964 views
-
-
பிரித்தானியாவிலுள்ள கடையில் கத்தி முனையில் கொள்ளையிட வந்த கொள்ளையர்களை பேஸ்போல் மட்டையால் தாக்கித் துரத்திய பி.எச்.டி. மாணவரான, இலங்கை இளைஞர் 2016-07-01 14:39:12 பிரிட்டனில் உயர்கல்வி கற்றுவரும் இலங்கை இளை ஞர் ஒருவர், தான் பணியாற்றும் கடையொன்றில் கத்திமுனையில் கொள்ளையிட வந்த இரு நபர்களை தனியாக தாக்கித் துரத்தியதன் மூலம் அக்கொள்ளை முயற்சியை முறியடித்துள்ளார். 28 வயதான லுஷான் வீரசூரிய எனும் இந்த இளைஞர், மன்செஸ்டர் நகரிலுள்ள சல்போர்ட் பல்கலைக்கழகத் தில் பி.எச்.டி. (கலாநிதி) பட்டப்படிப்பை மேற்கொள்கிறார். தனது கல்விச் செலவுகளை சமாளிப்பதற்காக பகுதி நேரமாக சல்போர்ட் கட…
-
- 0 replies
- 601 views
-
-
சுவிஸ் மாநகர சபை கூட்டத்தில் சேலை அணிந்த முதல் தமிழ்பெண் சுவிஸின் தூண் மாநகர சபை உறுப்பினரான திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன், பிராத்ஹவுசில் இடம்பெற்ற கூட்டத்தில் சேலை அணிந்த முதல் தமிழ்ப்பெண்ணாக கலந்து கொண்டார். குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட தர்ஷிகா கருத்துத் தெரிவிக்கையில், எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. வாக்களித்த தூண் வாழ் மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை இன்றிலிருந்து செய்ய கடமைப்பட்டுள்ளேன். சுதந்திரமான வாழ்வுக்கும், சுகாதாரமான வாழ்வுக்கும், கல்வி, பிள்ளைகள் மற்றும் குடும்பம் போன்ற விடயங்களில் கூடுதலாக அழுத்தத்தை கொடுத்து சேவையாற்ற பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார். …
-
- 5 replies
- 1.3k views
-
-
திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பின் தங்கிய புலம்பெயர் தமிழர்கள் நிறவாதக் கட்சிகளின் அடுத்த குறி? The Polish Social and Cultural Association in Hammersmith ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டுமா என்ற கருத்துக்கணிப்பில் வாக்களித்த பிரித்தானிய மக்கள் வெவ்வேறு காரணங்களுக்காக வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற பிரச்சாரத்தைப் பொதுவாக வலதுசாரி நிறவாதக் கட்சிகளே தலைமை தாங்கின. புரட்சிகர இடதுசாரிச் சிந்தனையும், ஏகாதிபத்திய முதலாளித்துவ எதிர்ப்பு முகாமும் பலமடைந்து வரும் சூழலில் அதனை எதிர்கொள்ள நிறவாதக் கட்சிகள் வெளியேற்றத்திற்கான முகாமைத் தலைமை தாங்கின. போலந்து நாட்டுத் தொழிலாளர்களுக்கும் ரூமேனியர்களுக்கும் எதிரான தாக்குதல்களை இக் கட்…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
பிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோப் பகுதியில் வசிக்கும, 35 வயதுடைய கோகுலவதனி மயூரன் காணாமல்போயுள்ளார்: பிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோப் பகுதியில் வசிக்கும, 35 வயதுடைய கோகுலவதனி மயூரன் காணாமல் போயுள்ளதாக பிரித்தானிய காவற்துறையினர் அறிவித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி இறுதியாக காணப்பட்ட கோகுலவதனி, காலை 10 மணிக்கு, தான் பேர்கர் வாங்குவதற்காக வெளியில் செல்வதாக தெரிவித்துள்ளார். mதன் பின் அவரது தொடர்பு அற்றுப் போயிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவரை காண்பவர்கள், அல்லது இவர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள்,101 என்ற இலக்கத்திற்கு அழைத்து, quoting reference: 16MIS025661. ஏன்பதனை குறிப்பிட்டு தகவல் வழங்குமாறு காவற்துறையினர் கேட்டுள்ளனர். …
-
- 0 replies
- 773 views
-
-
3 days agoகல்வி http://news.lankasri.com/ts Topics : #Canada கனடாத் தமிழ்க் கல்லூரியானது தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தோடு இணைந்து நடத்திய இளங்கலைமற்றும் முதுகலைப் பட்டநெறிகளைப் பயின்று, தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்பெற்ற தேர்வுகளுக்குத் தோற்றி, பட்டம் பெறுவதற்கான தகமைசார் நியதிகளை நிறைவு செய்த மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குவதற்கான பட்டமளிப்பு விழா 2016.06.18 ஆம் நாள் ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள றயசன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. சரியாக முற்பகல் 10:45 மணிக்கு கனடாத் தமிழ்க் கல்லூரி இயக்குநர் அவைஉறுப்பினர்கள், கனடாத் தமிழ்க…
-
- 0 replies
- 881 views
-
-
2014 ஆம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Giel Beelen என்பவரால் நிகழ்த்தப்படட 198 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான வானொலி அறிவிப்பு (DJ Marathon) என்னும் கின்னஸ்உலக சாதனையை கனடாவில் வசிக்கும் சுரேஷ் ஜோகிம் என்னும் தமிழ் கலைஞர் இன்று முறியடித்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார், மேலும் அவர் 250 மணித்தியாலங்கள் என்னும் இமாலய இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றார். கடந்த புதன் கிழமை கனேடிய கிழக்கு பிராந்திய நேரம் காலை 7.10 க்கு ஆரம்பித்த அவரின் பயணம் எதிர்வரும் சனிக் கிழமை 250 மணித்தியாலங்களை பூர்த்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனைத் தமிழர் சுரேஷ் ஜோகிமிற்கு செய்தி இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கின்றது. தொடரட்டும் உங்கள் …
-
- 1 reply
- 892 views
-
-
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அகிலன் கருணாகரன் என்ற சிறுவன் 2016ஆம் ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் டப்ளினில் கடந்த 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெற்ற கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். kumiteக்கான போட்டியில் 66 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரிவில் விளையாடி முதலாம் இடத்தைப் பிடித்துக்கொண்டதுடன் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் இந்த ஆண்டுக்கான உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். http://thuliyam.com/?p=31444
-
- 0 replies
- 1.4k views
-
-
-
கனடாவில் இலங்கையர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை டொரன்டோ பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சீ.பி.சீ செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கனேடிய குடியுரிமையை பெற்ற குறித்த இலங்கையர் தமது இரவு நேர முறைமாற்றல் தொழிலை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் தம்மை, இலங்கையரா? என வினவியதுடன் இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு அச்சுறுத்தியதாகவுதம் தாக்குதலுக்குள்ளான இலங்கையர் குறிப்பிட்டுள்ளார். 20 வயது மதிக்கதக்க சுரேஸ் ஒம்மி என்ற இந்த இலங்கையர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் காவற்துறையினர் விசா…
-
- 4 replies
- 1.1k views
-
-
தற்பொழுது ரொறன்ரோவில் வீடுடைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அப்பகுதி மக்கள் அவதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று ரொறன்ரோ பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த சில வாரங்களாகவே ரொறன்டோவின் பல பகுதிகளிலும் வீடுடைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மிட்டவுன் குடியிருப்பு பகுதிகளில் பல வீடு உடைப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் குறித்த பகுதி மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இரவு வேளைகளில் தமது வீடுகளைப் பூட்டி வைப்பதுடன், வெளியே நிறுத்தும் வாகனங்கள் குறித்தும் அவதானமாக இருக்கவும் வேண்டும்’ என…
-
- 2 replies
- 1k views
-
-
நோர்வேயில் ’புதிய கடவுச்சீட்டு விதி முறை’ காவல்துறை திணைக்களத்தினால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட, அதேவேளை பல பத்து ஆண்டுகளாக ’நோர்வேஜியக் குடியுரிமை’ பெற்றிருந்தவர்களின் ‘பிறந்த இடம்’ கடவுச்சீட்டிலிருந்து நீக்கப்படுகின்றது. ஆபிரிக்கா (20 நாடுகள்), ஆசியா (10 நாடுகள்) மற்றும் ஐரோப்பாவில் கொசோவோ என 31 நாடுகளைப் பிறந்த நாடாகக் கொண்டுள்ளவர்களின் கடவுச்சீட்டுகள் புதுப்பிக்கப்படும் போது ‘பிறந்த இடம்’ என்று குறிக்கப்படும் இடத்தில் ‘தெரியாது – Unknown’ எனப் பதியப்பட்டிருக்கும் என்ற அறிவித்தலுக்கு பல மட்டங்களிலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதில் இலங்கையும் உள்ளடங்குகின்றது. ’Group 2– நாடுகள…
-
- 0 replies
- 845 views
-
-
கனடாநாட்டை விட்டு வெளியேறுபவர்களின் கடவுச்சீட்டு தரவுகள் சேகரிக்கப்படும். நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் கடவுச்சீட்டு தரவுகளை சேகரிக்கும் முயற்சியை கனடா ஆரம்பிக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் றலவ் குட்டேல் அறிவித்துள்ளார். கடவுச் சீட்டின் இரண்டாம் பக்கத்தில் இடமபெறும் முழுப்பெயர், தேசிய இனம், வழங்கும் அதிகாரிகள் மற்றும் பயணிகளின் பால் போன்றன இவற்றில் அடங்கும். கனடாவிற்குள் நுழைபவர்களின் தரவுகள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுவிட்டன. சேகரிக்கப்படும் இத்தகவல்கள் அம்பர் எச்சரிக்கைக்கு-காணாமல் போகும் குழந்தைகளின் விடயத்தில் சிறந்த பயனளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. மனித கடத்தல்களை சமாளிக்க உதவும் என அமைச்ச…
-
- 0 replies
- 577 views
-
-
அகதியாக பொருளாதார நலன் கருதி UK போன என் நண்பன் வெளியே போக விரும்பிறான். காரணம் EU ல் உள்ள தமிழ் ஆக்கள் London வந்து சோசல் (Doll money) எடுக்கினமாம்.
-
- 70 replies
- 6.7k views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கீழ்சபை மற்றும் செனட் சபைகளுக்கான இரட்டைத்தேர்தலில் போட்டியிடும் சில மெல்பேர்ன் வேட்பாளர்கள் மெல்பேர்ன் தமிழ் சமூகத்தினரை சந்தித்துள்ளனர். அழைப்பு விடுக்கப்பட்டவர்களும் முன்பதிவு செய்து கொண்டவர்களும் மாத்திரம் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த சந்திப்பு தமிழ்தாய் வாழ்த்து, அவுஸ்திரேலிய கீதம் என்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முதலில் லேபர் கட்சியின் வேட்பாளர் ஸ்டெப்னி உரையாற்றுகையில், தனது குடும்பமும் கிறீஸ் நாட்டிலிருந்து இங்கு அகதியாக வந்த குடும்பம் தான். இப்போது இருக்கும் ஆட்சியில் மாற்றம் வேண்டும். அதற்கு லேபர் கட்சியே ஒரு வழி என்றும…
-
- 6 replies
- 1.3k views
-
-
இளங்கலைப் பட்டப்படிப்பிற்காக கனடா வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை, ஐக்கிய இராச்சியத்திற்குச் (UK) செல்லுபவர்களை விட அதிகமாகக் காணப்படுகிறது. சர்வதேச இளங்கலை மாணவர்களை தம்வசம் கவரும் போட்டியில் ஐக்கிய இராச்சியத்தின் பின்னடைவிற்கு அந்நாட்டின் இறுக்கமான குடிவரவு நடைமுறைகளே பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தித்தின் சகல கட்சிப் பாராளுமன்றக் குழு ஒன்றின் ஆய்வின் மூலம் இவ்விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://www.cicnews.com/2016/05/canada-popular-uk-international-undergraduates-058022.html#LmeVFdyPpqk6GT1j.99
-
- 10 replies
- 1.1k views
-
-
நோர்வேயில் வேலையில் இருக்கும் சிறிலங்காவில் பிறந்த தமிழர்களின் சதவீதமானது (70.2%), நாட்டின் சராசரியையும் விட அதிகமானது மட்டுமன்றி, இங்குள்ள நோர்வேஜியாரின் (69.4%) சராசரியையும் விட அதிகமானது. இத்தகவலை நோர்வேயின் மத்திய புள்ளிவிவர திணைக்களம் அறிவித்துள்ளது. இதனை பற்றி கருத்து தெரிவித்த யோகராஜா பாலசிங்கம் "கடின உழைப்பு தமிழரின் கலாசாரம்" என்று கூறினார். எம்மை பொன் குடிவரவாளர்கள் (Golden Immigrants )என்று பத்திரிகைகள் அழைப்பதில் சந்தோசமே. தமிழருக்கு என்று ஒரு குணமுண்டு. தலை நிமிர்ந்து தரணியெங்கும் நிற்போம்.
-
- 8 replies
- 1.5k views
-
-
ஒன்ராரியோவின் அதி-சிறந்த தன்னார்வப் பணியாளர் கௌரவிப்பு ஒன்ராரியோவின் Brantford என்ற நகரைச் சேர்ந்த Austin Fowler, என்ற 19 வயதுடைய இளைஞர், Nova Vita என்ற இடத்தில் உள்ள துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண்களிற்கான புகலிடம் ஒன்றில், குழந்தைகளிற்காக செய்த தன்னலமற்ற தன்னார்வப் பணிக்காக விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டின் இளைய தன்னார்வத் தொண்டர்களுக்கான பதக்கத்தைப் பெற்ற 10 பேர்களுள் இவரும் ஒருவராவார். ஓன்ராரியோவின் குடிவரவுத்துறை அமைச்சர் Michael Chan மற்றும் , மாகாண ஆளுனர் Lt.-Gov. Elizabeth Dowdeswell ஆகியோரிடம் இருந்து இவ் விருதை இவர் பெற்றுக் கொண்டார். http://www.brantfordexpositor.ca/2016/06/01/ontario-honour-for-selfless-volunteer
-
- 0 replies
- 586 views
-
-
கனடாவில் - தென்மராட்சி மக்களிடையே விமர்சனங்களை உண்டுபண்ணியுள்ள தலைமைத்தெரிவு..!! ஒரு பார்வை. கனடாவிலுள்ள யாழ் - தென்மராட்சி பிரதேச மக்கள் மத்தியில் குறிப்பாக தென்மராட்சி பிரமுகா்கள் வர்த்தகர்கள் பிரதேச நலன்விரும்பிகள் மற்றும் ஊர்ச்சங்கங்களது தலைவா்கள் மத்தியில் பெரும் குழப்பநிலை ஒன்று உருவாகியுள்ளது. இந்த குழப்பநிலைக்கான காரணம் அண்மையில் ஐரோப்பியநாடுகளில் இருந்து கனடா வந்திருந்த வைத்தியர் திரு-புவிநாதன் தலைமையிலான குழுவினரது நல்லெண்ண வருகையும் திட்டங்களும் என தெரியவருகிறது. தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி தொடர்ப்பிலான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற பலசுற்று சந்திப்புகளும் - அதனை மையமாகவைத்து கனடாவிலுள்ள சிலர…
-
- 2 replies
- 1.2k views
-
-
கனடா- விடுமுறைக்கு அரிசோனா சென்ற கீதை தர்மசீலன் குடும்பத்தினர் தங்கியிருந்த ஹொட்டேலில் கடவு சீட்டுக்கள் களவாடப்பட்டு விட்டது. இது குறித்து எயர் கனடாவிடம் தெரிவித்த போது திரும்பி செல்வதற்கான ரிக்கெட்டுக்கள் போதுமென அவர்கள் உறுதியளித்துள்ளனர். திரும்பும் போது அவர்களிற்கு காத்திருந்த சோதனை குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. நால்வர் அடங்கிய குடும்பம் பீனிக்ஸ் விமான நிலைய பாதுகாப்பு பகுதியை கடந்து விட்டனர்.ஆனால் ஏர் கனடா முகவர் இவர்களிடம் போர்டிங் பாசை கையளிக்க சிறிது முன்னர் மற்றொரு முகவர் இவர்களை அணுகி கடவு சீட்டுக்கள் இன்றி கனடிய சட்டத்தின் பிரகாரம் திரும்ப ரொறொன்ரோ செல்வது குற்றமாகும் என தெரிவித்துள்ளார். யு.எஸ் சுங்க மற்றும் பாதுகாப்பு அதிகாரிக…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஸ்காபரோ ரூச்ரிவர் தொகுதிக்கான வேட்பாளராக லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தெரிவு செய்யும் தேர்தலில் திரு. பிரகல் திரு வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் மாகாணசபை உறுப்பினர் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதற்கான இடைத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட ஆறு பேர் முன்வந்திருந்தனர். கட்சியின் சார்பில் அவர்களின் தெரிவிற்கான வாக்கெடுப்பு இன்று ஸ்காபரோ நகரத்தில் இடம்பெற்றது இதன்போது வாக்கெடுப்பில் பிரகல் திரு வெற்றி பெற்றார். கனடியத் தமிழ்க் காங்கிரஸின் இயக்குனர் சபை உறுப்பினர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இயக்குனர் சபை உறுப்பினராக இருந்தவர். 1700க்கும் மேற்பட்ட வாக்களார்கள் கலந்து கொண்ட இந்த…
-
- 0 replies
- 794 views
-
-
சீக்கிய இனத்தவர்கள் உந்துருளி (Motor cycle) செலுத்தும் போது தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்கக் கோரும் பிரேரணை, ஒன்ராரியோ சட்டசபையில் பல தடவைகள் சமர்ப்பிப்க்கப்பட்டுள்ளது. ஆயினும் இது ஒன்ராரியோவில் இன்னமும் சட்டமாக்கப் படவில்லை. பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் மனிடோபா மாகாணங்களில் இவ்வாறு விலக்களிக்கப்படும் சட்டம் அமுல் படுத்தப்பட்டதை அடுத்து, ஒன்ராரியோவிலும் இச்சட்டமூலத்திற்கு உயிரளிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மாகாண சட்டசபைத் தொகுதியான Bramalea—Gore—Malton இன் புதிய சனநாயகக் கட்சி சட்டசபை உறுப்பினர் Jagmeet Singh MPP, அவர்கள் , ஒன்ராரியோவின் பெருந்தெரு வாகனச் சட்டத்தில் (Highway Traffic Act) திருத்தங்களை ஏற்படுத்த விழைகிறார். சீக்கியர்கள் உந்துருளி (Motor cycl…
-
- 0 replies
- 461 views
-
-
கனேடிய அரசு கனடாவின் குடியுரிமைச்சட்டத்தில் மீண்டும் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற குடிவரவுச் செயற்குழுவின் தவிசாளர் (The chair of the House Immigration Committee) Borys Wrzesnewskyj, MP அவர்களின் கூற்றுப்படி, C-6 என்றழைக்கப்படும் இச்சட்டமூலம் ஜூலை மாதம் முதலாம் திகதியளவில் (July 1), கனடா தினத்தையொட்டி அல்லது அதற்கு முன்னதாக, சட்டமாக அங்கீகரிக்கப்பட உள்ளது. முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களில் முக்கியமானவை, 1. நிரந்தர வதிவாளர்களின் தகுதிகாண் வதிவிடக் காலப்பகுதியானது, ஆறு வருட காலப் பகுதியில் நான்கு வருடங்களாக இருந்து, ஐந்து வருட காலப் பகுதியில் மூன்று வருடங்களாகக் குறைக்கப்படல், 2. சில குறிப்பிட்ட வ…
-
- 0 replies
- 733 views
-