வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
BTF இன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு எதிராக புலிகளின் பெயரால் மிரட்டல் பிரசுரம் பிரித்தானிய தமிழர் பேரவை என்ற (BTF) அமைப்பு வழமையாக முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) என்ற அமைப்பும் நடத்துவது வழமை. இந்த இரண்டு அமைப்புக்களும் ஈழத்தில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பதில்லை. பிரித்தானியத் தமிழர் பேரவை ஐ.நாவில் போர்க்குற்ற விசாரணை மேற்கொள்வதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதும், அரசுகளோடு தொடர்புடையவர்களைச் சந்திப்பதும் தமது வேலைத்திட்டம் எனப் பிரகடனப்படுத்தியது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் மாவீரர் தினம் நடத்துவதைத் தவிர வேறு குறிப்பான வேலைத்திட்டங்களும் இல்லை. மக்களை உணர்ச்சிவசப்படுத்தி நடைமுறைப…
-
- 4 replies
- 1.7k views
-
-
இங்கிலாந்தின் பரா-பாட்மிண்டன் வீரர் கோபி ரங்கநாதன் அவர்களுக்கு இருதய சத்திர சிகிச்சை என்று அறிந்தேன். அவர் குணமாகி மீண்டும் போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம். 39 வயதான கோபி பல உள்ளூர்/ சர்வதேச போட்டிகளில் பங்கு பற்றி பதக்கங்கள் பெற்றவர். Gobi Ranganathan, who represents Stevenage, Herts and England in the disability sport discipline, first noticed something was wrong during the 2013 world championships, where he was competing in doubles. http://www.thecomet.net/news/stevenage_disabled_sports_star_gobi_ranganathan_is_on_the_road_to_recovery_after_crucial_surgery_1_4073264
-
- 0 replies
- 554 views
-
-
லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து அறியவருவதாவது: கிழக்கு லண்டனில் வசித்து வந்த புல்லர்கட்டில் ரித்திஸ்குமார், இவரின் மனைவி ஷகி, மற்றும் பிள்ளைகளான நியா, நேகா ஆகியோரே மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். ஷகி, நியா, நேகா ஆகியோர் வீட்டில் இறந்து கிடந்தனர். நியா, நேகா பாடசாலைக்கு செல்லவில்லை. இது குறித்து பாடசாலை நிர்வாகம் பொலிஸுக்கு தெரியப்படுத்தியது. இதையடுத்து பொலிஸார் அங்கு சென்ற போது வீட்டில் மூவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தமையைக் கண்டனர். உடனடியாக விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார் வீட்டில் இருந்து சற்றுத் தொலைவில் ரித்திஸ்குமாரின் சடலத்தையு…
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு! [Tuesday 2015-05-12 19:00] தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது நேரடி அரசவை ஜேர்மனியில் கூடுகின்றது. நாடுகடந்தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது நேரடி அரசவை இது அமையவிருக்கின்றது. மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து மே 22,23,24ம் ஆகிய மூன்று நாட்கள் அமர்வாக ஜேர்மனியின் டோட்மூண்ட் பெருநகரில் இடம்பெறுகின்ற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…
-
- 2 replies
- 523 views
-
-
சுவிஸில் 22 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவையின் 21வது பொதுப்பரீட்சை இன்று நடைபெற்றது. சுவிஸில் நாடுதழுவிய அளவில் நடந்த இந்த பொதுப்பரீட்சை இன்று 58 தேர்வு மையங்களில் நடைபெற்றுள்ளது. இந்த தமிழ்மொழிப் பரீட்சையில், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் 5,297 பேர் தோன்றியுள்ளனர். இந்த தேர்வு நிலையங்களில் மேற்பார்வையாளர்களாக தமிழ் பள்ளிகளின் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன், தமிழ் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை நிறைவு செய்து உதவி ஆசிரியர்களாகக் கடமையாற்றிவரும் 83 இளம்தலைமுறையினரும் இணைந்துள்ளனர். இந்த தேர்வில் அதிகளவில் தமிழ் பிள்ளைகள் பரீட்சைக்குத் தோன்றியிருப்பதும், இளம் தலைமுறையினர் தேர்வு பணிகளில் பங்க…
-
- 0 replies
- 453 views
-
-
அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் கையெழுத்து பரப்புரை MAY 08, 2015by நித்தியபாரதிin செய்திகள் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும், கையெழுத்துப் பரப்புரை ஒன்றை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடந்த புதன்கிழமை இணையவழி (skype) மூலம் ஆரம்பித்து வைத்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு தமிழ்நாட்டு மக்களின் முனைப்பான பங்களிப்பு மிகவும் அவசியமானது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது இணையவழி உரையில் தெரிவித்திருந்தார். ஈழத்தமிழ் மக்கள் இனப்…
-
- 0 replies
- 266 views
-
-
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட TCC உறுப்பினர் : விசித்திர வழக்கு 05/04/2015 நெதர்லாந்தில் ஹேக் நீதிமன்றத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பும் அதனைத் தொடர்ந்து குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவர் வழங்கிய வாக்குமூலமும் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக மக்களிடம் பணம் திரட்டியவர்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேரின் மேன் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இதுவரை நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் வெளிப்படையாகவே செயற்பட்டு வந்தனர். அலுவலகங்களை நடத்தி வந…
-
- 3 replies
- 825 views
-
-
திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகும் ஈழத்தமிழ் பெண்கள்: - யேர்மனியில் சர்வதேச பெண்கள் மாநாடு [Friday 2015-05-08 15:00] கிழக்கு மாகாண சபையின் பெண்கள் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மேற்கொண்ட ஆய்வின்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டும் 86,000 விதவைகள் உள்ளனர். அனைவரும் தமிழர்கள். பாதுகாப்புப் படையினரின் பாலியல் வன்கொடுமைகளுக்கும் வல்லுறவுகளுக்கும் இந்த விதவைகளே எளிதாக பலியாகின்றனர். அரசு படையினர் மற்றும் ஒட்டுக் குழுவினரின் பாலியல் வன்செயல்களிலிருந்து விதவை தாய்மார்கள் தங்கள் இளவயது பெண்களை காப்பதற்கு பெரும்பாடுபடும் அதே நேரத்தில் இளம் விதவைகள் தங்களைத் தாங்களே பாதுகாப்பதற்கு பெரும் பாடுபட வேண்டி உள்ளது. இந்த விதவைகள் மற்றும் …
-
- 0 replies
- 506 views
-
-
ரொறன்ரோவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தவுள்ள தேசிய துக்கநாள் - மே 18 [Thursday 2015-05-07 19:00] நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மே 18 ஐ தேசிய துக்கநாளாக அறிவித்து வருடா வருடம் பல்வேறு நாடுகளில் உணர்வு பூர்வமாக கடைப்பிடித்து வருவது அறிந்ததே. கடந்த ஆண்டுகள் போலவே இவ்வருடமும் கனடாவில் இந்நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னேடுக்கப்படவிருக்கின்றது. இவ்வருடம் இந்நிகழ்வு மே 18, 2015 அன்று Peter and Paul Banquet Hall (231 Milner Avenue) இல் 2.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. கனடாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள தமிழ் மக்களும் தமது வசதிக்கேற்ப இந்நிகழ்வை செய்வதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னாலான உதவிகளை செய்ய விரும்புகின்றது. இந்நிகழ்வுகளில…
-
- 0 replies
- 672 views
-
-
நெதர்லாந்து மனித நேய செயற்பாட்டாளர்களின் வழக்கை நேற்று நெதர்லாந்து நீதிமன்று தள்ளுபடி செய்தது. மேலதிக விபரங்கள் விரைவில் ...............
-
- 2 replies
- 921 views
-
-
April 30, 2015 பொதுசன வாக்கெடுப்பே ஈழத்தமிழர்களின் அரசியற்தீர்வுக்கான சிறந்த பொறிமுறை : வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ ! 0by tmdas5@hotmail.com • HDA ஈழத்தமிழர்களது அரசியற்தீர்வுக்கு சிறந்த பொறிமுறையாகவுள்ள பொதுசன வாக்கெடுப்பே இலங்கைத்தீவின் அமைதிக்கு வழிவகுக்கும் என வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் லண்டனில் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தாடல் நிகழ்வொன்றில் பங்கெடுத்திருந்த பொழுதே இக்கருத்தினை கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் முன்வைத்துள்ளார். அனைத்துலக சமூகத்தின் உறுதுணையுடன் தமிழீழத் தாயகத்திலும் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களது …
-
- 0 replies
- 344 views
-
-
தியாகி திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனியில் நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி: [Tuesday 2015-04-28 18:00] தமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் நினைவாக ஆறாவது தடவையாக யேர்மனி பேர்லின் நகரில் உள்ளரங்க உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது . தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது . இவ்வாண்டு உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் உல்லூர் மேற்பிரிவுக்கான 7 கழகங்களும் மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட 4 கழகங்களும் 12 வயதுக்கு உட்பட்ட 3 கழகங்களும் பங்குபெற்றியது. சிறப்பாக நடைபெற்ற இப் போட்டியில் பல விளையாட்டு வீரர்கள் மிக திறமை கொண்டவர்…
-
- 0 replies
- 445 views
-
-
ஒன்றாரியோ மாகாண புரோகிரசிவ் கட்சியின் தலைவரிக்கான தெரிவில் தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் ஓக்ரிட்ஜ் மார்க்கம் (Oak Ridges and Markham) ஏற்படுத்தப்பட்டுள்ள அசௌகரியம் குறித்து தமிழர்கள் பெரும் விசனம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தத் தொகுதியிலுள்ள சுமார் 1,800 அங்கத்துவர்களில் 75 வீதத்திற்கு மேற்பட்ட மேற்படி கட்சி அங்கத்துவர்கள்; பயண சிரமத்திற்குள்ளாவர்கள் என்பதும் இந்தத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட கட்சி அங்கத்துவர்களில் பெரும்பாலானவர்கள் திரு. பற்றிக் பிரவுனிற்காகப் பதிவு செய்யப்பட்டவர்கள் என்பதால் இது குறித்து சமூக அக்கறையுள்ளவர்கள் செயலாற்றி வருகின்றனர். இவர்களிற்கான வாக்களிற்பு நிலையம் பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ள ஒரு தொகுதியான இத்தொகுதியில் வாக்களார்கள் செறிந்து வாழ…
-
- 0 replies
- 300 views
-
-
இன்று ஏப்ரல் 25, 2015 சனிக்கிழமை நாடுகடந்த தமிழீழ அரசு கனடா, Consortium of Tamil Associations, மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் இணைந்து ஒழுங்கமைத்து நாடத்திய '2ம் ஆண்டு மனித உரிமைக் கருத்தரங்கு' நிகழ்வு ஸ்கார்புரோவில் 940 Progress வீதியில் அமைந்துள்ள Centennial College Residence & Conference Centre இல் நடைபெற்றது. "Assimilation or Annihilation" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழீழ மக்களின் எதிர்காலமும் தமிழீழ மக்களுக்கான நீதியை பெறுவது பற்றியும் ஆராயப்பட்டது. இந்த கருத்தரங்கு நிகழ்வு தமிழ் மக்கள் அனைவரும் பயன் பெறும் பொருட்டு இலவச நிகழ்வாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பல முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புரைகள் ஆற்றப்பட்ட இந்த நிகழ்வில் கனடிய தமிழ…
-
- 1 reply
- 500 views
-
-
புலம்பெயர் தமிழ்க்கல்வி – முயற்சிகளும் சவால்களும்: நோர்வேயில் ஆய்வரங்கு APR 25, 2015by புதினப்பணிமனைin செய்திகள் புலம்பெயர் தமிழ்க் கல்வி தொடர்பான ஆரோக்கியமான கருத்தாடலுக்கான ஆய்வரங்கு ஒன்றினை நோர்வே தமிழ் 3 வானொலி எதிர்வரும் மே 1ஆம் நாள் (வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு ஒஸ்லோவில் ஏற்பாடு செய்துள்ளது. இன்றைய புலம்பெயர் சமூக வாழ்வியல் சூழலில் இளைய தலைமுறையினருக்கான தமிழ் மொழிக்கல்வி சார்ந்து பெற்றோர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகின்ற கேள்விகளை முன்னிறுத்திய ஒரு தேடலாக இந்த ஆய்வரங்கு அமையவிருக்கின்றது. நோர்வேயிலும் ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் நீண்ட காலமாகத் தமிழ்க்கல்விக்கு வடிவம் கொடுத்து செயற்பாடுகளை முன்னெடுத்த பல முன்னோடி ஆளுமைகள் இக்கருத்தரங்கி…
-
- 0 replies
- 562 views
-
-
நமது சமுதாயத்துக்கு ஒரு தமிழ்க் குரல் தேவை! லண்டன் வேட்பாளர் உமா குமரன் [ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 07:20.51 PM GMT ] லண்டனில் எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் களத்தில் ஹரோ பகுதியில் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் அவர்கள் இறங்கியுள்ளார். நமது தமிழ் சமுதாயத்திற்கென ஒரு தமிழ்க் குரல் லண்டன் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டுமாயின் ஹரோ பகுதியில் இருக்கும் அனைத்து தமிழ் மக்களும் உமா குமரன் அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை போடுமாறு அவரே லங்காசிறி க்கு வழங்கிய பேட்டியில் கேட்டுள்ளார். உமா குமரன் அவர்கள் தேர்தலில் வெற்றிபெற லங்காசிறி சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். Facebook.com/uma.kumaran.uk www.umakumaran.com …
-
- 0 replies
- 471 views
-
-
லண்டனில் கோடீஸ்வரராய் இருந்தும் இறைச்சி, மது திருடிய இந்திய வம்சாவளி நபருக்கு ஓராண்டு சிறை பட்டம் எத்தனை உயரம் போனாலும் அதன் நூல் தரையுடனே இருப்பது போல் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தவர்களிடமும் கூட சில சில்லறைத்தனங்கள் இருக்கும் என்பதற்கு லண்டனில் நடந்த சம்பவம் ஒன்று சான்றாகியுள்ளது. இங்கிலாந்தின் பிர்மிங்காம் கவுண்டியில் உள்ள டெஸ்கோ என்ற சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்து பொருட்களைத் திருடும் நபர்களைக் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கண்காணிப்பது வழக்கம். கடந்த பிப்ரவரி மாதம் கண்காணிப்பு பணிகளின் போது 200 பவுண்ட் மதிப்புள்ள (ரூபாய் 18 ஆயிரம்) இ…
-
- 4 replies
- 602 views
-
-
தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் அவுஸ்திரேலியா மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றது ! [Tuesday 2015-04-21 20:00] தமிழீழ விடுதலைப் போராட்ட தடத்தில் சாவினைத்தழுவிக் கொண்ட நாட்டுப்பற்றாளர்களை மாமனிதர்களை நினைவேந்தும் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் அவுஸ்திரேலியா மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. மெல்பேண் ஹைடில்பேர்க் இல் அமைந்துள்ள சென்ற்.ஜோன்ஸ் நிகழ்ச்சி மண்டபத்தில் கடந்த ஏப்ரல் 19ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் குணரட்ணம் அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்களும் ஏற்றிவைக்க, நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களுக்கான ஈகச்சுடர…
-
- 0 replies
- 435 views
-
-
கனடியத் தமிழர்களின் உண்மையான நண்பனாக திகழ்கிற ஒரு அரசியற் தலைவர் யார் என்பதை கனடிய ஆங்கிலப் பத்திரிகையொன்று மக்களைப் பேட்டி கண்டு எழுதியுள்ளது. கடந்த வாரம் மார்க்கம் நகரில் இடம்பெற்ற சமூக விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மேற்படி நிருபர் 36 வயதான திரு. பற்றிக் பிரவுனை சூழ்ந்து கொண்ட கோட்-சூட் அணிந்த தமிழ் ஆண்களும் சாரி அணிந்த தமிழ் பெண்களுமாக பலர் திரு. பற்றிக் அவர்களோடு மிக அன்னியோண்யமாகப் பழகினர் என்றும், சிலர் அவரை “ஹேய் பற்றிக்” என உரிமையோடு அழைத்தனர். வேறு சிலரே அவரைத் தோளில் தழுவி நீர் எங்களில் ஒருவன் என உரிமை பாராட்டிச் சென்றனர், வேறு சிலரோ மிகவும் மரியாதையோடு கைலாகு கொடுத்துச சென்றனர் எனத் தெரிவித்த பத்திரிகையாளர், யாருமே திரு பற்றிக்கை அணுக சம்பிரதாயங்கள…
-
- 0 replies
- 312 views
-
-
தமிழ்த் தேசியத்தின் சொத்துக்கு யேர்மனியில் வெள்ளிவிழா - புறுக்சால் யேர்மனியில் வாழும் 6000 க்கு மேற்பட்ட தமிழ்ப்பிள்ளைகளுக்கு 124 தமிழாலயங்களை அமைத்து 1100 ஆசிரியர்கள் ஊடாக வாரம் தோறும் தமிழ் மொழியையும் பண்பாடுகளையும் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 25 வது அகவை நிறைவை 11.04.2015 சனிக்கிழமை கனோவர் நகரில் ஆரம்பித்து. விழா நாடு முழுவதிலும் 5 அரங்குகளில் நடைபெறு வருகிறது. அந்தவரிசையில் 12.04.2015 வால்ட்றோப் என்ற இடத்திலும் 18.04.2015 ஸ்ருற்காட் (Stuttgart ) நகரிலும் மறுநாளான 19.04.2015 புறுக்சால் ( ப்ருச்சல்) என்ற இடத்திலும் நடைபெறது. நிறைவு விழாவாக 25.04.2015 சனிக்கிழமை கேர்பன் நகரிலும் நடைபெறவுள்ளது. விழாவின் பிரதம விருந்தினர்களாக யேர்மனிய அரசியற் க…
-
- 4 replies
- 479 views
-
-
பிரான்சில் நடைபெற்ற அன்னை பூபதி அம்மா 27 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்! [sunday 2015-04-19 19:00] தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும் தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு ஓள்னேசுபுவா தமிழ் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று (19.04.2015) ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் ஓள்னே சுபா பகுதியில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இந்நிகழ்வில் தியாகி அன்னை பூபதி அவர்களின் திரு உருவப் படத்துக்கான ஈகைச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப் பொறுப்பாளர் திரு. அலெக்ஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து பிரா…
-
- 0 replies
- 326 views
-
-
கனடாவில் போதையின் உச்சத்தில் ….. April 20, 20159:04 am குளிர்நிறைந்த மார்ச் மாதத்தின் நள்ளிரவுப் பொழுதில் போதை தலைக்கேறிய நிலையில் தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுவதும், அதனை தடுக்க முனைந்த தமிழ் யுவதி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் தரையில் வீழ்த்துவதுமான ஒளிப்பதிவு ஒன்றை பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் அண்மையில் கிட்டியது. ஸ்காபுரோவில் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:45 மணியளவில் அரங்கேறிய இந்தக் கைது மற்றும் அதனுடன் தொடர்புடைய காட்சிகளின் ஒளிப்பதிவு அன்று காலை 9 மணியளவில் எனது பார்வைக்கு வந்தது. காவல்துறையினரின் இந்தக் கைதுகளை எதிர்க்கும் வகையில் அங்கு கூடியிருந்த ஏனைய இளைஞர் மற்றும் யுவதிகள் காவல்துறையினருக்கு எதிராக குரல் எழுப்புவத…
-
- 0 replies
- 906 views
-
-
ஒன்ராறியோ ஹொக்கி லீக்கின் Windsor Spitfires அணிக்கு விளையாடுவதற்காக தமிழ் சிறுவன் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அணித் தெரிவில், 16 வயதான வேலன் நந்தகுமாரன் என்ற சிறுவன் வின்ட்சர் அணியில் சேர்க்கப்பட்டார். ஹொக்கி விளையாட்டில் இந்தப் பருவகாலத்திற்கான வேய்ன் கிறெஸ்க்கி (Wayne Gretzky) விருதைப் பெற்றிருக்கும் வேலன், Appleby College இல் பத்தாவது தரத்தில் கல்வி பயில்கின்றார்.
-
- 6 replies
- 668 views
-
-
இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது [ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 01:14.21 PM GMT ] இலங்கையைச் சேர்ந்தவரான கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் (சுந்தரவதனன் மகாலிங்கம்) பொருளறிவியல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக சர்வதேச இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வென்றுள்ளார். மேற்படி விருதானது (Elsevier and Materials Science and Engineering C Young Researcher Award) உயிரியல் விஞ்ஞானம், பொருள்சார் பொறியியல் தொடர்பான ஆய்வியல் மற்றும் கோட்பாடுசார் விடயங்கள் பற்றிய சிறப்பு ஆராய்ச்சிகளை அடையாளங்கண்டு அவற்றை அங்கீகரிக்கும் பொருட்டு, 35 வயது அல்லது அதற்கு குறைவான தனிநபர்களுக்கு லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியினால் வழங்கப்படுகின்றது. சுந்தர் தனது கலாநிதி பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகக் கல…
-
- 8 replies
- 2k views
-
-
எனது மகள் படிக்கும் பாடசாலையில்.... பிரபலங்களின் பேட்டி அடங்கிய புத்தகம் ஒன்று தயாரிப்பதற்காக, அவரின் ஆசிரியர், எனது மகள் உட்பட... நான்கு மாணவர்களை தெரிவு செய்தார். ஒவ்வொருவரும்... ஜேர்மனியில் புகழ் பெற்ற ஐந்து பேரை பேட்டி கண்டு, எழுத வேண்டும். இவர் இருவரை பேட்டி கண்டு விட்டார். முதலாமவர் 2012´ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிப்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற... Marcel Nguyen. (இணையப் பேட்டி) https://www.youtube.com/watch?v=zVtYz0U49ZA ############################################### இரண்டாமவர்... ஜேர்மன் தொலைக்காட்சிகளில் அறிவியல் சம்பந்தமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும்....Ranga Yogeshwar (தொலை பேசி பேட்டி) அவள் கேட்ட கேள்விகளைப் பார்த்து...…
-
- 48 replies
- 7.4k views
-