வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5822 topics in this forum
-
அது திசை மாறி போவதுதான் புதுமை அல்லவா ...? ஒவ்வரு நாளும் உலகில் உள்ள ஓவரு மனிதரும் வாழ்விற்காக எதோ ஒருவகையில் போராடி கொண்டுதான் இருக்கிறோம். வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பிடித்தமாக அமைவதில்லை என்று பலரும் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம். பிடித்தமாக ..? என்றால் என்ன ..? வாழ்க்கை பிடிக்காவிட்டால் தற்கொலை செய்து இறந்துபோகும் வசதி எல்லோருக்கும் இருக்கும் என்றுதான் நம்புகிறேன். ஆக தற்கொலை செய்யாது எல்லோரும் வாழ்வதால் ... எல்லோருக்கும் வாழ்க்கை பிடித்திருக்கிறது என்று கொள்ளலாமா ? இப்போதைய காலகட்டம் பிடிக்காது போனாலும் ..... எதிர்கால நாட்களை எமக்கு பிடித்ததாக அமைக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரு போராட்டமாக வாழ்கையை கொண்டிருக்கிறோம். வசதியான வாழ்வு அமைப்பது என்பதற்காக பலரும் …
-
- 6 replies
- 3.8k views
-
-
இங்கிலாந்தில் பிரசன்னா அருட்செல்வத்தின் கொலைக்கு காரணமான மூன்றாவது நபரும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். Michael McInerney என்பவர் வாட்போர்ட் என்ற இடத்தில, தனது cousins மாருடன் சேர்ந்து, அருட்செல்வதின் வானில் உள்ள சிகரெடை பாக்கேட்டுகளை திருடியபோது, அவரை வாகனத்தில் இருந்து தள்ளி விட்டனர். இதனால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, 11 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, மருத்துவம் பலனளிக்காமல் June 6, 2013 மரணமானார்.cousins Patrick and James O'Driscoll ஆகியோர் 10 1/2 மற்றும் 71/2 வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றனர். 4 வருடங்களின் முன்பு மணமான அருட்செல்வதிக்கு ஒரு குழந்தை உண்டு. http://www.watfordobserver.co.uk/news/11827425.Prasanna_Arulchelvam__Man_admits_to_manslaughter_of_Watfo…
-
- 0 replies
- 768 views
-
-
லண்டனில் நேற்று நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லண்டனில் நேற்று மாலை நடந்த விபத்தில் 44 வயதான சுபாஹரி சோதிலிங்கம் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே மரணமடைந்துள்ளார். ஹெம்டனில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது பென்ஸ் கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. மேற்கு ஹெம்டனில் இருந்து றோயல் பார்க் செல்லும் நோக்கில் பஸ்ஸில் ஏறுவதற்காக வீதியை கடந்து செல்லும் போது சுபாஹரி மீது கார் மோதியுள்ளது. அவர் மீது மோதிய கார் நிறுத்தப்படாமல் சென்றுள்ளது. விபத்து காரணமாக தலையில் படுகாயம் ஏற்பட்டதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். சமையல் தொழிலில் ஈடுபட்டு வரும் சுபாஹரி, 2006 ஆம் ஆண்டு தாய் நாடான இல…
-
- 19 replies
- 1.5k views
-
-
இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு இலங்கையிலும், பிரிட்டனிலும் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் சில போராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன. லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக சில தினங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதும் இரண்டு தலைவர்களின் உருவப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் எரிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்னர், இலங்கையின…
-
- 0 replies
- 500 views
-
-
‘‘நம்முடைய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்பா, அம்மா, பாட்டி ஆகியோர் அடிக்கடி கூறுவார்கள். இறுதிப்போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன் என் பெற்றோர், ‘போட்டியில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசை இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுக்கலாமா?’ என்று கேட்டார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற கிடைத்த சந்தர்ப்பமாகத்தான் இதைக் கருதுகிறேன். போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி இங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும் சிறிது நிதியை ஒதுக்கியுள்ளோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜெஸ்ஸிகா. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியான இவர், விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 4’ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கா…
-
- 0 replies
- 783 views
-
-
இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் அகதி ஒருவர் லண்டன் "Heathrow" விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 27 வயது நிரம்பிய முன்னாள் போராளியான நவரத்னராசா நவரஞ்சன்(உயர்ச்சி) என்பவரே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவராவார். இவரை இலங்கைக்கு நாடுகடத்தப்போவதாக இன்று பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலே குறிப்பிடப்பட்ட நபர் "எயிற்றர்" எனப்படும் முத்த போராளியின் மகனாவர். இவருடைய குடும்பம் இலங்கை இராணுவத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவரின் மூன்று உடன்பிறப்புகள் முள்ளிவாய்காலில் இராணுவச் சுற்றிவளைப்பிற்குள் காணாமற் போயுள்ளனர். இது தவிர இவரின் தாயார் சுகையினம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்திருந்த வேளை 2006ம் ஆண்டு இலங்க…
-
- 6 replies
- 812 views
-
-
http://www.padalay.com/ இவருடைய எழுத்துகள் இக்கால சம்பவங்களை நகைச்சுவையுடன் அலசுவதால் வாசிக்கும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது. பல்வேறு பட்ட விடயங்களை எழிய தமிழில் பாமரனுக்கும் விளங்கும் வகையில் எழுதுகிறார். பல அறிவியல் கருத்துக்களை எழிய நடையில் தருகிறார். வாழ்க தமிழ். வாழ்க படலை. இவர் எழுத்துகளுக்கும் யாழில் ஒரு இடம் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.
-
- 1 reply
- 565 views
-
-
இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு-இலங்கையிலும் பிரிட்டனிலும் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சம்பந்தன் ஆகியோரின் உருவப்படங்களும் சில போராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன. லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக சில தினங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போதும் இரண்டு தலைவர்களின் உருவப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் எரிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்னர், இலங்கையின் சுதந…
-
- 0 replies
- 491 views
-
-
கனடாவில் சிதைக்கப்படும் தமிழ் மொழி - கண்டு கொள்வாரில்லையோ. உலகின் சில மொழிகள் பன் மைய (Pluricentric) நிலை கொண்டவை, ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டு இயங்குபவை. இதனால் ஒரே மொழிக்கு பல வகையான நடைகள் (Standards) இருக்கின்றன. எடுத்துக் காட்டுக்கு ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம், ஆங்கிலத்தில் பல வகைகள் இருக்கின்றன பிரிட்டன் ஆங்கிலம், அமெரிக்கன் ஆங்கிலம், கனடா ஆங்கிலம், ஆஸ்திரேலியா ஆங்கிலம், இந்தியன் ஆங்கிலம் எனப் பல வகைகள் உள்ளன. இவற்றில் பிரிட்டன் ஆங்கிலம், அமெரிக்கன் ஆங்கிலம் முக்கியமான நடைகள் ஆகும். இவற்றுக்கு எனத் தனித் தனி அகராதிகள், இலக்கணங்கள் கூட உள்ளன. சுவீடன் மொழியில் கூட சுவீடன் சுவீடன், பின்லாந்து சுவீடன் என்ற இருபெரும் நடைகள் உள்ளன. நம் தமிழ் மொழிய…
-
- 3 replies
- 2.8k views
-
-
பிரித்தானியாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் புகைப்படங்களை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். tamilwin.com
-
- 19 replies
- 2k views
-
-
தாத்தா அன்ரு ஒக்டன் பெரிசா அவ்வளவு வயசில்ல. என்ன இன்னும் 8 வருசத்தில 100 அடிக்கப் போறார். இங்கிலாந்தின் கேம்பிரிட்செயர் மாவட்டத்தில் ஸசில்ரன் எனும் இடத்தில் வாழும் இந்த 92 வயது தாத்தா மப்பில கார் ஓடி, மாட்டி, 16 மாதங்கள் கார் ஓட்ட தடை விதிக்கப் பட்டுள்ளார். இவ்வகை தடை விதிக்கப்பட்ட பிரித்தானியாவின் அதிவயதான ஓட்டனர் என்ற 'வீரப் பதக்கத்தை', 88 வயதான டேவிட் பை யிடமிருந்து தட்டிப்பறித்து விட்டார். இன்னைக்கு செத்தா, நாளைக்கு பால், சீ.. விஸ்கி என்ற ரணகள நிலையிலும், பொலீசார் அவரது தள்ளாட்ட ஓட்டத்தை பார்த்து ஓரம் கட்டிய போது, ஜ ஆம் ஸ...ஸ்ரெ....டி..... என்று சொல்லி, அவர்களை அலற வைத்தார்.
-
- 0 replies
- 847 views
-
-
http://www.aljazeera.com/news/2015/02/ocean-12-making-waves-australia-150222154013233.html
-
- 3 replies
- 456 views
-
-
இதை பற்றி எழுத வேணும் என பல நாள் ஏக்கம். ஒரு கறுப்பினத்தவருடன் கதைக்கும் பொது அவர் சொன்ன வார்த்தைகள் தான் என்னை இதை எழுத தூண்டியது. அவர் UKல் பிறந்தவர். அவரின் அடி அவருக்கே தெரியாது. அவர் தான் British Citizen என சொல்வதில் பெருமை கொள்கிறார். ஆனால் அவரை ஒரு பொது இடத்தில் மற்ற வெள்ளைகள் கீழ்தரமாக தான் பார்க்கினம். இங்கு லேபர் கவேர்மென்ட் இருந்த பொது, நிதி அமைசர் ஒரு சீன பெண். அவர் ஆஸ்திரேலியாவில் பிறந்தவராயினும், பார்த்தவுடம் அவரை ஒரு சீனத்தவர் என்றுதான் எல்லோரும் சொல்லுவர், வெள்ளைகள் உட்பட. அவரோ தான் ஆஸ்திரேலியன் என பெருமையுடன் சொல்லி கொழ்வார். ஆனால் அதை இங்குள்ள வெள்ளைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதான் முஸ்லிம்களின் நிலை கூட. இந்த நிலை தான் வெளிநாடுகளில் உள்ள எங்க…
-
- 32 replies
- 2.6k views
-
-
10 வருடங்களுக்கு முன் அளித்த தீர்ப்பின் படி இந்தோனேசியா அதிபரும் மன்னிப்பு வழங்க மறுத்ததை அடுத்து இன்னும் சிலநாட்கள் அல்லது வாரங்களில் ஆஸ்திரேலியா தமிழரான மயூரனுக்கு மரணதண்டனை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது......ஆஸ்திரேலியா அரசின் கடைசிக்கட்ட பெரும் முயற்ச்சிகளையும் மீறி அவருக்கான தண்டனையை இந்தோனேசியா முன்னெடுக்கின்றது..... http://www.news.com.au/world/asia/doomed-bali-nine-duo-to-be-transferred-to-nusa-kambangan-island-this-week-ahead-of-their-executions/story-fnh81fz8-1227221756457 இந்த செய்தியை இதுவரை யாரும் யாழில் இணைக்காததும் இதை பற்றி யாரும் பேச பயப்படுவதும் ஆச்சரியம் தருகின்றது.... 2005 முதல் 2015 வரை நடைபெற்றவற்றை இங்கே சென்று பார்க்கலாம்.... h…
-
- 10 replies
- 2.2k views
-
-
Richard de Zoysa இவரை சிலருக்கு ஞாபகம் இருக்கலாம் . அவர் தொடர்பான ஒரு பதிவு http://cargocollective.com/httpsoloflightsofthoughtcom/Radio-The-Last-Time-I-Saw-Richard http://en.wikipedia.org/wiki/Richard_de_Zoysa
-
- 9 replies
- 1.2k views
-
-
-
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிட வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் வரும் 24-02-2015 அன்று ஏற்பாடாகியுள்ள நீதிக்கான போராட்டத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினை தெரிவித்துள்ளது. இந்நாளில் (24-02-2015) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு இனப்படுகொலையாளிகளை பாரட்படுத்துமாறு ஐ.நாசபையினைக் கோரும் ஒருமில்லியன் ஒப்பங்களை பெறும் கையெழுத்துப் போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குவதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரும் செயற்பாட்டில், தாயக தேசமும் புலம்பெயர் சமூகமும் தமிழகமும் கூட்டாக பயணிக்கின்றது என்பதனை உலகிற்கு பறைசாற்றுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ள நா.தமிழீழ …
-
- 0 replies
- 474 views
-
-
தாமதிக்கப்படும் நீதிக்கு நியாயம் வேண்டியும், தமிழின அழிப்புக்கு நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரையும் திரளாகப் பங்கேற்குமாறு கனடியத்தமிழர் சமூகம், மாணவர் சமூகத்துடன் இணைந்து கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு, ஈழத்து தமிழினத்தின் மீது இலங்கை அரசு கட்டவிழ்த்த இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலை பற்றி உலகமே அறிந்திருந்தும் ஐ. நா. வினால் மார்ச் மாதம் நடைபெற இருந்த அனைத்துலக விசாரணையை இலங்கை அரசின் வேண்டுதலுக்கு ஏற்ப ஐ.நா. பிற்போட்டு இருப்பது உலகத் தமிழ் மக்களை வேதனையும் ஏமாற்றமும் அதிருப்தியும் கொள்ள வைத்திருக்கின்றது. தமிழின அழிப்புகள், போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்ற…
-
- 0 replies
- 307 views
-
-
நான் இலங்கையில் இருக்கும் போது, என் உறவினன் ஒருவன் UK ல் பெட்ரோல் செட் மேனேஜர் ஆக இருக்கிறான் என கேக்கும்போது அவனை உடனே என் மனம் இலங்கையில் உள்ள ஒரு வங்கி மேனேஜர் உடன் ஒப்பிட்டு பார்த்து அவன் மீது ஒரு வகை பொறுமை கொள்கிறேன். நான் அப்போது ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டு இருந்தேன். அவனுக்கு இரண்டு வயது தான் கூட. அவன் இலங்கையில் இருக்கும் போது படிப்பில் ஒரு மட்டமானவன் தான். எனக்கு வியப்பு. எப்படி இவனால் ஒரு மேனேஜர் ஆக முடிந்தது. இவன் தான் காதலித்த ஒரு பெண்ணை லவ் பண்ணி கலியாணம் கட்டியும் விட்டான். அவள் அவனை இலங்கையில் திரும்பியும் பார்க்கவில்லை. அவள் அவனை விட படிக்க கூடியவள். அவள் படித்து பல்கலைக்கழகம் போக அவன் ஏஜென்ட் மூலம் UK போட்டான். அங்க கிரேடுட் காட் போட்டு ஒரு பெ…
-
- 175 replies
- 18.8k views
-
-
மகா சிவராத்திரி விரதம் யேர்மனி வெஸ்பாலின் மாநிலத்திலுள்ள டோட்முண்ட் மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் 17.02.15 செவ்வாய்க்கிழமை மகாசிவராத்திரி விரதம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் சாமப் பூசையைத் தொடர்ந்து சந்திரமௌலீஸ்வரப் பெருமான் சாந்தநாயகி சமேதரராய் இடபவாகனத்தில் எழுந்தருளிய உள்வீதித் திருவுலாவும் அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் சொற்பொழிவும் நடைபெற்றன. நான்கு சாமப்பூசைகளிலும் அதிகமான பக்தர்கள் கலந்து. சிவராத்திரி விரதத்தைப் மிகச் சிறப்பான முறையில் பக்தியாகக் கடைப்பிடித்தார்கள். இளஞ்சந்ததியினர் இருபாலரும் பங்கேற்றமையைக் காணக் கூடியதாக இருந்தது. ஆலயகுரு சாமி தெய்வேந்திரக்குருக்கள் அவர்கள் சமய அனுஸ்டானங்களுக்கமைவாக நான்கு …
-
- 12 replies
- 1k views
-
-
ஈழ சினிமா என்பதும் ,ஈழத்தை விட்டு வெளியில் சாதிப்பது என்பதும் ,ஈழ திரை அல்லது குறும்பட படைப்பளிகளுக்கு ஒரு பெரும் போராட்டம் என்றே சொல்லலாம் ,வெள்ளித்திரைக்கு கொடுக்கும் அளவு ஆதரவு இந்த ஈழ குறும்பட படைப்பளிகளுக்கு கொடுக்கபடுவதில்லை அவர்கள் எப்படி ஒரு நூறு வீத தரமான படைப்பை கொடுத்தாலும் ,அதை ஓரம் கட்டி தென்னிந்திய சினிமா மேகத்தில் மூழ்கி கிடப்பதும் தென்னிந்திய தொலைக்காட்சி பெட்டிகள் முன் கண்ணீரும் கம்மளையுமா உக்கார்த்து அழுது வடிபதுமா ஈழ மக்களின் கலைத்தாகம் போகுது ... ஆக அவர் திறமையான ஆளா இல்லையா என்பது எல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்லை அவர் இந்திய தொலைக்காட்சியில் ஒருமுறை தலைகாட்டினால் அவர் வாழ்நாள் ஹீரோ அதுக்கு…
-
- 23 replies
- 2.9k views
-
-
நாம் இருக்கும் நாட்டில் அதாவது ஐரோப்பாவில் பெரும்பாலும் அதிகமா எல்லோரும் பாவிக்கும் சொல் ,தேசியம் ,மண்பற்று ,மக்கள் சேவை ,பொது தொண்டு இப்படி ஒரு பட்டியல் நீளும் எனக்கு ஏற்படும் ஆதங்கம் சிலவேளைகளில் உங்களுக்கு தோன்றலாம் அல்லது அந்த நிலமைகளில் வந்து போகலாம் ஒரு நொடி .. இங்கு எல்லா இனங்களிலும் ஒரு செயல்பாடு நான் கவனித்து இருக்கிறேன் ,அது யாதெனில் அகதியா குடிபெயர்த்து ஒருவரோ அல்லது ஒரு குடும்பமோ வந்தால் அந்த இனம் சார்த்த ஒரு அமைப்பு இருக்கு அவர்களிடம் முதலில் போவார்கள் ,அவர்கள் இவர்களுக்கு இப்ப என்ன தேவை என்றும் என்ன என்ன உடனடி அவசியங்கள் என்றும் ஆராய்ந்து அதுக்கான செயலில் இறங்கி முதல் கட்ட உதவிகள் செய்து ,பின்னர் இந்த நாட்டில் சட்டபடி தங்க என்ன செய்…
-
- 13 replies
- 917 views
-
-
இணுவில் மிக நீண்ட காலமாகவே கலைஞர்களால் நிரம்பிய ஊர். அதிலும் தவில் நாதஸ்வர மேதைகளும் நடனக் கலைஞர்களும் சங்கீத வித்துவான்களுமாகப் பெருமை சேர்க்க நாம் பெருமை கொண்ட ஊர். அப்படிப் பெருமை சேர்த்தவர்களுள் முக்கியமானவர் தவில் மேதை திரு தெட்சணாமூர்த்தி அவர்கள். அவர் 26.08.1933 ல் இணுவிலில் விஸ்வலிங்கத்துக்கும் ரத்தினத்துக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது இளமைப் பெயர் ஞானபண்டிதன். பின்னர் காலப்போக்கில் இறைநம்பிக்கை காரணமாக அவரைத் தெட்சணாமூர்த்தி என்று அழைக்க, இவரின் இயற்பெயர் மறைந்து தெட்சணாமூர்த்தியே இவர் பெயரானது. இணுவிலில் கந்தசாமி கோவில் வீதியில் காலையும் மாலையும் தவில், நாதஸ்வரம் வாசிக்கும் சத்தம் கேட்டபடியே இருக்கும். நடனக் கலைஞர்களின் காற்சதங்கை ஓசையும், அதைக…
-
- 18 replies
- 2.2k views
-
-
பிரித்தானியாவில் யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இலங்கையருக்கு ஐந்தரை வருட சிறைத்தண்டனையும் அதன்பின்னர் அவரை இலங்கைக்கு நாடு கடத்தும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 35வயதான தமிழரான இவர் ஸ்டேசன் ரோட், போட்ஸ்லேட் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இரவு கேளிக்கையகம் ஒன்றில் சந்தித்த யுவதியையே இலங்கையரான தமிழர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அதிக மது அருந்தியமையால் குறித்த யுவதிக்கு சுயநினைவு இல்லாத நிலையிலேயே இலங்கையர் அவரை இரவு கேளிக்கையகத்துக்கு பின்னால் உள்ள தொடர்மாடிக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட யுவதியின் உதவியுடனேயே குற்றம்புரிந்த இலங்கையர் கைது செய…
-
- 3 replies
- 918 views
-
-
''ஜெசிக்காவை' தெரிந்த பல பேருக்கு 'விபூசிகாவை' தெரியாது" இவர்கள் இருவருமே எம் தமிழினம் தான், இவர்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம் 'ஜெசிக்கா' super singer மேடையில் பாடுவது இவர் கனவு, 'விபூசிகா' வின் வாழ்க்கையே ஒரு கனவு. 'ஜெசிக்கா' வின் கனவு நினைவாக SSJ10 க்கு வாக்கு அளித்தால் போதும். 'விபூசிகா' வின் வாழ்கை கனவுக்கு எதற்கு வாக்களிப்பது??? யாரிடம் கேட்பது???'' - முகநூல் ஆதங்கம். ஜெசிக்காவுக்கு வாக்குச் சேர்க்கும் கூட்டம் விபூசிகாவின் விடுதலைக்கு வாக்குச் சேர்த்து சர்வதேசத்தின் கவனத்தை சேர்க்குமா..???! - எங்கள் ஆதங்கம்.
-
- 8 replies
- 1.9k views
-