சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
காட்சி 1 அதிகாலை நேரம் இருள் விலகத்துவங்கியிருக்கிறது திருநெல்லி மலைப்பகுதி வயநாடு மாவட்டம் கேரளம் வளைந்து நெளிந்து கரடுமுரடான மலைப் பாதைகளுடன் மல்லுக்கட்டி, முகடுகளை நோக்கி இரைந்துசெல்லும் ஒரு வெள்ளை நிற அம்பாசடர் கார். அதில் ஐந்துபேர் நெரிசலாக அமர்ந்திருக்கிறார்கள். தோ பிகா ஜமீன், மதுமதி, ஆனந்த், செம்மீன் போன்ற இந்திய சினிமாவின் எக்காலத்திற்குமுறிய படங்களுக்கு அதிசய இசையமைத்த மாமேதை சலில் சௌதுரி, பல தேசிய விருதுகள் பெற்ற செம்மீன் திரைப்படத்தின் இயக்குநர் ராமு காரியாட், அவரது துணை இயக்குநர் கே ஜி ஜார்ஜ், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது பெற்ற எஸ் எல் புரம் சதானந்தன். இவர்களுடன் பெஞ்சமின் பாலநாதன் மகேந்திரா எனும் இளைஞன். வரும் காலத்தில் ஒரு சி…
-
- 0 replies
- 673 views
-
-
காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். வியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் , ஞாபகம் வருகிறதா? ) . எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த அறிகுறிகள் என்ன ? -- வியர்க்கும் கைகள், பசியின்மை ( " பாலுங்கசந்ததடி சகியோ படுக்கை நொந்ததடி" ) , முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது , இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை . காதலுக்கு பல கட்டங்கள் உ…
-
- 1 reply
- 605 views
-
-
சாதிக்க துடிப்பவர்களின் வாழ்வில் சிலசமயம் சறுக்கி விழுவது போன்ற விபத்துகள் நேர்கின்றன. அது காலத்தின் கோலமாகவும், கவனக்குறைவின் விளைவாகவும் உடலியல் பின் உபாதைகளாகவும் பலநேரங்களில் உருவெடுத்து நிற்கின்றன நம்மில் பலருக்கும். நாட்டியத் தாரகையாக மின்னவேண்டிய 7 வயதேயான தமிழகத்தின் சுபிக்ஷா சந்திரனுக்கு கல்லீரல் பழுதாக ஆரம்பித்ததால் அவளது உற்சாகம் பாதியில் அறுந்துவிடுகிறது. தடகளப்போட்டியில் தங்கம் வெல்லத்துடிக்கும் 19 வயதேயான பஞ்சாப் வீராங்கனை ரூபிசிங்கின் இதயம் ஏனோ திடீரென செயலிழக்க ஆரம்பித்துவிட வெற்றி, ஆசைகள் வெற்று ஆசைகளாகும் ஆகிவிடுகிற வேதனை. காண்போர் கண்களுக்கு விருந்தளிக்க விரும்பி கனவுகளைக் குழைத்து காட்சிகளாய்த் தீட்டும் 37 வயதான மேற்கு வங்கத்தின் வண்ணத் தூரிகைக் …
-
- 0 replies
- 545 views
-
-
இது, எந்தப் பாடசாலை சீருடை? ஒரு தாய், தனது காணமல் போன மகளை கடந்த அந்து வருடமாக தேடிக் கொண்டுள்ளார். அண்மையில்... அவரின் புகைப்படம் பத்திரிகை ஒன்றில் வெளிவந்ததன் மூலம், சிறு நம்பிக்கை ஒளி தென்பட்டிருக்கின்றது. உறவுகளே.... உங்களுக்கு, இந்தச் சீருடை கொழும்பிலுள்ள எந்தப் பாடசாலைக்கு உரியது என்று தெரிந்தால்..... அறியத் தாருங்களேன். http://www.yarl.com/forum3/index.php?/topic/153230-மைத்திரியுடன்-எனது-மகளைக்-கண்ட/
-
- 3 replies
- 1.3k views
-
-
சமீபத்தில் மேலைநாட்டு பெண்களிடம் நீங்கள் உங்கள் நண்பரை காதலனாக ஏற்றுகொள்வீர்களா? என்று ஒரு சர்வே நடத்தபட்டது. அதில் பங்கு எடுத்த பல பெண்கள், 'முடியவே முடியாது, அதற்கு வாய்ப்பே இல்லை எல்லை' என்று பதில் தந்தனர். ஏன் அப்படி சொல்கிறீர்? என்று திருப்பி கேட்டதுக்கு அவர்கள் அத்தனைப் பேரும் கோரசாக சொன்ன பதில் 'ஷெல்லி வொயிட் ஹெட்'. சமீபத்தில் ஷெல்லியிடம் அவரது பால்ய தோழன் இவான் 'உன்னுடன் வாழ்ந்த ஏழு வருட திருமண வாழ்க்கையை இதோடு முடித்து கொள்வோம்' என்று விலகியிருக்கிறார். அவர் விலகிய பின் ஷெல்லிவிட்ட அறிக்கைதான் பெண்களை, இனிமேல் நண்பர்களை நண்பர்களாகவே பார்ப்போம் என்று சொல்ல வைத்திருக்கிறது. இதைப் பற்றி ஷெல்லி பேசுகையில் "நானும் இவானும் திருமணம் செய்து கொண்டு ஏழு வருடம் ஆகிறது. எ…
-
- 12 replies
- 1.8k views
-
-
ஆர்மீனியாவில் வசிக்கும் நியூசிலாந்துகாரரான சாமுவேல் பாரெஸ்ட் நெகிழ்ச்சியாலும், மகிழ்ச்சியாலும் திக்குமுக்காடிப்போயிருக்கிறார். அதற்கு காரணம் முதல் முறை தந்தையான மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் அளவுக்கு சோதனை வந்தபோது இணையம் மூலம் பலர் உதவி செய்திருப்பதுதான். குட்டி லியோவுக்காக அவர் இணையம் மூலம் கோரிக்கை விடுத்ததும் அதை ஏற்று இணையவாசிகள் 4 லட்சம் டாலர்களுக்கு மேல் நிதியை அள்ளிக்கொடுத்திருப்பதும் உண்மையில் நெகிழ வைக்ககூடியது தான். ஆனால் அதற்கு முன் குட்டி லியோவுக்கு ஏற்பட்ட சோதனையும் அதனால் அப்பா சாமுவேல் பாரெஸ்ட்டிற்கு ஏற்பட்ட நெருக்கடியையும் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தை லியோ பிறக்கும் போதே டவுன் சிண்ட்ரோம் எனும் குறைபாட்டுடன் பிறந்தது. இதன் காரணமாக குழந்தைய…
-
- 0 replies
- 962 views
-
-
என்ன தான் நாங்கள் வெளிநாடு வந்தாலும் கொழும்பைத் தாண்டியே வர வேண்டும்.கொழும்பைத் தாண்டி வர வேண்டும் என்றால் ஏதோ முருகண்டியில் இறங்கினமா ஏறினமா என்ற மாதிரி இல்லை.நாள் கணக்காக கிழமைக் கணக்காக மாதக்க கணக்காக ஏன் வருடக் கணக்காக கொழும்பில் தங்கியிருந்தவர்கள் ஏராளம்.நானும் இப்படி வருடக் கணக்காக(76-77) அலைந்தவர்களில் ஒருவன் . இப்படி கொழும்பில் அலைந்த காலங்களில் உறவினர்களின் வீட்டில் நின்றாலும் ஏஜென்டைப் பார்க்க அப்படி இப்படி ஒரு சாட்டு வைத்து திரிவது தான் வேலை.இப்படி திரிந்த காலங்களில் மதிய உணவுக்காக ஜவ்னா கொட்டலுக்கு சாப்பிட போவோம்.கொழும்பில் இருந்தவர்களில் இந்த ஜவ்னா கொட்டலில் சாப்பிடாதவர்களே இருக்கமாட்டார்கள்.இதிலும் ஊரில் இருக்கும் போது ஒரு தரம் சோறு போட்டு இரண்டாம் தரம் …
-
- 17 replies
- 2.4k views
-
-
பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம் - சே.க. அருண் குமார் அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்? உலக அளவில் ‘கல்வியின் உச்சம்’ படித்துப் பாருங்கள் உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை. ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED- organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நா…
-
- 6 replies
- 1.8k views
-
-
தெரிதலும், புரிதலும்..! ஒரு குடும்பம் அவர்களுக்கு ஒரு சிறு குழந்தை.. ஒரு நாள் வேலை விடயமாக அம்மா வெளியே சென்றுவிட, வீட்டில் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை தந்தை ஏற்கிறார். குழந்தையும் சமர்த்தாக தன்னுடைய விளையாட்டு பொம்மைகளை வைத்து விளையாட ஆரம்பித்தது.. அதில் உறவினர் ஒருவர் பரிசளித்த பொம்மை "காஃபி செட்" குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். தந்தை வரவேற்பறையில் அமர்ந்தவாறு தினசரிகளை படிக்கத் தொடங்கினார்.. சிறிது நேரத்தில் குழந்தை பொம்மை "காஃபி செட்டை" தந்தையிடம் நீட்டி, "அப்பா,.! இந்தா..நான் போட்ட டீ., குடி..!" என்றது. அந்த பொம்மையினுள்ளே சிறிது தண்ணீர் இருந்தது. தந்தையும் குழந்தையை கொஞ்சியவாறு " ஆஹா..செல்லம்.., நீ தயாரித்து கொடுத்த டீ மிகப் ப…
-
- 6 replies
- 864 views
-
-
தங்களுக்கு வருகின்ற Boy friend எப்படி எப்படியெல்லாம் இருக்கணும்?? d26fd02743b38688f6bd9a5706320ebe
-
- 0 replies
- 529 views
-
-
குஷி எழுந்திருந்தாள். எழுந்தவுடன் உடனே படுக்கையை விட்டு எழமாட்டாள். சற்றுநேரம் சும்மா படுத்திருப்பாள். ஏதோ யோசிப்பாள். இன்றும் நினைத்ததுபோல் எழுந்துவிட்டாள். மெல்ல நெருங்கினேன். இப்போதெல்லாம் கனமாகிவிட்டாள். ஒன்பது வயது முடியப்போகிறது. மெல்ல தூக்குவது போல் தூக்கி ”இந்தா உன் கிஃப்ட்” என்றேன். “பத்து வருஷமா இதையே சொல்லு. கிஃப்ட்டை மாத்தாதே” அனு சிரித்தாள். ஹேப்பி அன்னிவெர்சரி. பத்து வருடங்கள் போனதே தெரியவில்லை. கல்யாணம், தனிக்குடித்தனம், சிறிய அப்பார்ட்மெண்ட், சினிமா முடிந்து தியேட்டர் வாசலில் “நாள் தள்ளிப்போயிருக்கு”, கையில் பூவாய் குஷி, சுற்றிய ஊர்கள், ஊர்/நாடு நகர்தல்கள், முதல் தனி வீடு என ஒரு புத்தகத்தின் நூற்றுக்கணக்கான பக்கங்களை விரல்களால் விர்ர்ரென …
-
- 4 replies
- 940 views
-
-
பதின்ம வயதினர்க்கு ஏற்படும் மன அழுத்தமும் அதன் பாதிப்பும் பொதுவாக இளம்பராயத்தினரின் மன அழுத்தத்தினை பெரியவர்கள் கண்டறிவது மிகக் கடினமானது. ஆனாலும் பெரும்பாலும் அவர்களின் அன்றாட நடைமுறையும் அதனால் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடுகளுமே அவர்களது மன அழுத்தினை கண்டறிவதற்கான இலகுவான பாரம்பரிய முறையாக இருந்துவருகிறது. இளவயதினரின் பருவமாற்றங்கள் புதிய விடயங்களை தோற்றுவிக்கின்றன. காதல் பிரிவு புதிய உறவுகள் அல்லது பெற்றோரிடமிருந்து ஏற்படும் பிரிவுகள் போன்ற பல்வேறுபட்ட காரணிகள் இளையோரிடம் நம்பிக்கையீனத்தினை தோற்றுவிக்கின்றன. சிலவேளைகளில் அதுவே மன அழுத்தத்தினை தோற்றுவிக்கின்ற காரணியாகவும் அமைகின்றது. சிறார்கள்; இவ்வாறு நெருக்கடியான நிலைமையில் கவலையின் நிமித்தம் சோர்வடைவதற்கு மாறா…
-
- 0 replies
- 638 views
-
-
https://www.youtube.com/watch?v=Ypes1C203Bc வாகனத்தை விட்டு, இறங்க முன்... ஒரு வினாடி சிந்தியுங்கள்!!! அத்துடன், குழந்தைகள் வாகனத்தில் பயணித்தால்..... அவர்களால் உள்ளிருந்து கதவை திறக்க முடியாதவாறு... செய்து விடுங்கள்.
-
- 4 replies
- 998 views
-
-
சிறந்த படம் சதுரங்க வேட்டை 'பணம் இருக்கிறவன் என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணும்னாலும் பண்ணக் கூடாது?’- 'சதுரங்க வேட்டை’யின் பொளேர் ஒன்லைன் இது. மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங், எம்.எல்.எம்., ஈமு கோழி... என சமீபகாலத்தில் தமிழர்கள் கடந்த அத்தனை மோசடிகளின் பின்னணி மீதும் பளீர் வெளிச்சமிட்ட படம். 'ஒரு பொய் சொன்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்திருக்கணும். அப்பத்தான் அது பொய்னு தெரியாது’ - மாஸ் ஹீரோ சொல்லாமலேயே பட்டிதொட்டியெங்கும் பரவியது படத்தின் இந்த பன்ச். பெரும் பணம் சம்பாதிக்கப் பேராசைப்படும் தமிழர்களின் மனதைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காண்பித்து, அதில் அறுவடை செய்யத் துடிக்கும் ஜித்தர்களின் குறுக்குவழிகளையும் அம்பலப்பட…
-
- 0 replies
- 2.2k views
-
-
1) இப்பொழுது டிசிஎஸ் நிறுவனம் கைகளில் கோடாரியை எடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரையிலான பணியாளர்களை வெட்டப் போகிறது. ரத்தச் சகதி. மிகச் சமீபத்தில் யாஹூ இதைச் செய்தது. அதற்கு முன்பாக ஐபிஎம். அப்புறம் ஆரக்கிள். இப்படி பெரும்பாலான நிறுவனங்கள் இதைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் டிசிஎஸ் இதுவரைக்கும் தங்களைப் புனித நிறுவனமாகக் காட்டிக் கொண்டிருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பாக டிசிஎஸ்ஸில் சேர்ந்தால் ‘அது கவர்ன்மெண்ட் வேலை மாதிரி’ என்பார்கள். சம்பளத்திலும் பதவி உயர்விலும் தாறுமாறான வளர்ச்சி இருக்காது என்றாலும் கூட முரட்டுத்தனமாக வெளியே தள்ளிவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை அது. முதல் சில வருடங்களுக்கு இந்தியாவில் இருப…
-
- 1 reply
- 1.3k views
-
-
வாழ்க்கையின் ஒரு புறம் நீங்கள் நிற்கிறீர்கள். மறுபுறம் வெற்றி நிற்கிறது. இரண்டிற்கும் இடையே இடைவெளி. இடைவெளியை நிரப்பி வெற்றியை அடைய உறுதுணை புரிவது எது? தலைவிதியா? கடின உழைப்பா? பெரும்பாலானோர் வெற்றி என்பது தலைவிதியையும், கடின உழைப்பையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை அனுபவத்தை வைத்துப் பார்த்தால் வெற்றி பெறபல தன்மைகள் ஒன்றிணைய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய பல தன்மைகள் என்னவென்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆயிரம் மைல் தூரப் பயணம் கூட ஒற்றை, முதல் அடியுடன் தான் தொடங்கும் என்பதைப்போல முதல் அடியை எடுத்து வையுங்கள் உங்கள் வெற்றிக்காக…. பில்கேட்ஸும் கற்பனை சக்தியும்: நிஜத்தில் உணர்ந்திடாத ஓர் அனுப…
-
- 23 replies
- 14.9k views
-
-
2014 இன் ஓர விளிம்பில் நின்று கொண்டு இந்த வருடம் எப்படி இருந்தது, எவையெவை பிடிச்சு இருந்தன, எந்த எந்த விடயங்கள் சரியாக நடந்தன் என்று பார்ப்பமா? 2014 இல் 1. பிடித்த திரைப்படங்கள் எவை? 2. பிடித்த பாடல்கள் எவை? 3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது? 4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா? 5. மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா? 6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது? 7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்? 8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு? 9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது? 10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்? பகிர முடிகின்றவற்றை பகிரவும்.
-
- 24 replies
- 3.3k views
-
-
பெற்றோர்கள் கவனத்திற்கு! Parents – Just a warning! Beware of these Code words! KPC: Keeping Parents Clueless MOS: Mom Over Shoulder P911: Parent Alert PAL: Parents Are Listening PAW: Parents Are Watching PIR: Parent In Room POS: Parent Over Shoulder ASL: Age/Sex/Location F2F: Face to Face. Asking for a meeting or video chat LMIRL: Let's Meet In Real Life NAZ: Name/Address/ZIP MOOS: Member of the Opposite Sex MOSS: Member of the Same Sex MORF or RUMORF: Male or Female, or Are Your Male or Female? RU/18: Are You Over 18? WUF: Where You From? WYCM: Will You Call Me? WYRN: What's Your Real Name? 143, 459 or ILU: I love you 11…
-
- 0 replies
- 958 views
-
-
மருத்துவ படிப்பு – ஒரு சமூக அந்தஸ்துக்காக மட்டுமே சூர்யா பனிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் மாவட்ட அளவில் என அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவ-மாணவிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் பொழுது என்னவோ கருப்பாகவும், மாநிறமாகவும்தான் காணப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளால் தங்கள் மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளைப் பார்த்தால் ஏதோ ஆங்கிலோ இந்தியர்களைப் போல செக்கச் செவேள் என ஜொலிக்கிறார்கள். அவர்களை புதிதாக பார்க்கும் யாரும், “இவர்கள் இந்தப்பகுதி மக்கள் இல்லை போல” என்று கேட்கும் அளவுக்கு தனித்துக் காணப்படுகிறார்கள். வெயில் படாத அந்த வெள்ளைத் தோல் வேந்தர்களைப் பற்றி சற…
-
- 0 replies
- 909 views
-
-
பாலியல் வன்முறை உளவியல் காரணம்? நாம் மனிதர்கள் மத்தியில்தான் வாழ்கிறோமா என்கிற ஐயத்தை அவ்வப்போதைய சம்பவங்கள் உணர்த்துகின்றன. அண்மைக்காலமாக இந்தியாவெங்கிலும் அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிராமங்களில், சிறு நகரங்களில் தொடர்ந்து நடந்துவரும் இத்தகைய வன்முறைகளின் மீது கவனம் கொள்ளாத ஊடகங்கள், தலைநகர் டெல்லியில் நடைபெறும்போது அச்செய்தியை நாடெங்கும் கொண்டுசென்றுவிடுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தேறும்போதெல்லாம் அரசியல் காரணங்களை மட்டுமே பேசிவிட்டு, தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்; சுட்டுக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் கூறும் ஊடகங்கள், சமூகக் காரணங்களைப் பேசுவதில்லை. இன்னும் குறிப்பாக மனநல ரீதியிலோ உளவியல் பார்வையுடனோ சுத்தமாக…
-
- 1 reply
- 841 views
-
-
நான் சில காலங்களுக்கு முன்னர் தமிழ் திருமணங்களில் புலம் பெயெர் நாடுகளில் மணமகள் மணமகனின் காலில் வீழ்ந்து வணங்கும் வழக்கம் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் தாயகத்தில் அங்கே புலம்பெயர் நாடுகளை விட ஒரு படி மேல் அல்லவா செய்கிறார்கள். நான் இணைத்துள்ள காணஒளியில் 5.50 தொடக்கம் 6.00 நிமிடம் வரையிலான பகுதியை கவனிக்கவும், அதை பர்ர்த்து போடு கள உறுப்பினர்கள் தாம் திரும்பவும் திருமணம் செய்ய போகிறோம் என அடம் பிடிக்கக் கூடாது
-
- 12 replies
- 2.3k views
-
-
உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா? கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை. * உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா. * இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன. * இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது. * இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவ…
-
- 3 replies
- 1.8k views
-
-
பிரிட்டனில் ஒரு ஹோட்டலில்.. பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பாலூட்டும் போது மறைப்பிடவில்லை என்று குற்றச்சாட்டி அவர் மறைப்பிட்டு பாலூட்டக் கோரிய சம்பவம் பாலூட்டும் தாய்மார் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. உலகத்தில் உள்ள பாலூட்டும் ஜீவராசிகள் அனைத்தும்.. தனது சொந்தக் குட்டிக்கு பசி எடுக்கும் நேரம் தனக்கு விரும்பிய படி.. பாலூட்டும் உரிமையைக் கொண்டிருக்க.. மனிதப் பெண்ணுக்கு அவள் விரும்பிய இடத்தில் விரும்பியவாறு பாலூட்ட உள்ள உரிமை மறுக்கப்படுவது சரியா..??! பாலூட்டல் என்பது என்ன பாலுறவுத்தூண்டலாவா நோக்கப்படுகிறது.. மனித சமூகத்தில்..????! இது பற்றி உங்கள் கருத்துக்களை.. அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..!! குறித்த பெண் மறைப்பிட முன்னும் நாகரிகமாகத்தானே பாலூட…
-
- 9 replies
- 1.7k views
-
-
கால்நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக்கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய தமிழ்நாட்டில் இன்று பெற்றோர் கொலைகள் நடக்கத்துவங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டின் முதியோர் பராமரிப்பின் மோசமான நிலைமையே இத்தகைய மவுனக்கொலைகள். இந்த நிலைமை உருவானதற்கான சமூக, பொருளாதார, கலாச்சார பின்னணியை ஆராயும் பெட்டகத்தொடரின் முதல் பகுதி. "100 கிராமங்களில் மட்டும் 200 பேர் கொலை?" மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு நிறுவனமான யுரைஸ் என்கிற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் நூறு கிராமங்களில் மட்டும் 150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலைமை வெறும் மதுரைப்பிராந்தியத்தில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு இடங்க…
-
- 0 replies
- 636 views
-
-
"ஆப்ரிக்காவுக்கு மிஷினரிகள் வந்தபோது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தன. எங்களிடம் நிலங்கள் இருந்தன. அவர்கள் சொன்னார்கள்... நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்று. நாங்களும் கண்களை மூடினோம். ஆனால் கண்களை திறந்து பார்த்தபோது, எங்களிடம் பைபிள்கள் இருந்தன, அவர்களிடம் எங்கள் நிலங்கள் இருந்தன.." என்று வேதனையோடு ஆப்பிரிக்காவில் நடந்த மதமாற்ற மோசடியை வெளி உலகத்திற்கு தெரிவித்தார் மறைந்த கென்ய அதிபர் ஜோமோ கென்யத்தா. மிஷினரிகளின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள்தான், மக்களை கும்பலாக மதம்மாற்றுவதில் முக்கிய பங்காற்றுவதாக கூறுகின்றனர் மதம் மாற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளோர். உதாரணத்துக்கு 2000மாவது ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 கோடியே 40 லட்சமாக இருந்தது கிறிஸ்தவர்கள் எண்ணிக…
-
- 0 replies
- 1.2k views
-