சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2256 topics in this forum
-
வயதான தந்தையை, புறக்கணிக்காதீர்கள். பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும்... மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது. இதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர். குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர். வயதான தந்தை தன் குடும்ப…
-
- 3 replies
- 907 views
-
-
ஆலகாலச் செடி – குறியீட்டு எண்: 420 பிரான்ஸ் குகை ஓவியம் 1971ல் கலிபோர்னியாவின் சான் ராஃபெல் பள்ளியின் ஐந்து பேர் கொண்ட அந்தக் குழு தங்களை ’வால்டோஸ்’ என்று அழைத்துக் கொண்டது. அவர்கள் கையில் தற்செயலாக கிடைத்திருந்த ஒரு வரைபடம் பள்ளியின் அருகிலிருக்கும் அடர் காட்டுக்குள் சட்டவிரோதமாக வளர்க்கப்படும் போதைச்செடிகளின் இருப்பிடத்தைக் காட்டியது. ஸ்டீவ், டேவ், ஜெஃப்ரி, லேரி மற்றும் மார்க் ஆகிய ஐவரும் மாலை பள்ளி முடிந்த பின்னர் ரகசியமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று கூடி அந்த செடிகளை தேடிக்கண்டுபிடிக்க முடிவெடுத்தனர். மறுநாள் பள்ளி வளாகத்தின் பின்புறமிருந்த லூயி பாஸ்டரின் வெண்கலச்சிலையின் அருகிலிருந்த பீச் மரப்பொந்திற்குள் 4;20 என்று மட்டும் எழுதியிருந்த நீல…
-
- 1 reply
- 601 views
-
-
19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறைய நிறுவன நிர்வாகிகள் மன அழுத்தத்திலும் கவலையிலும் இருப்பது தெரிய வந்தது. தொழில், நிறுவனம், அமைப்பு, பள்ளி என எதுவாகினும் அதனை நிர்வகிக்கும் போது அது தொடர்பான சிக்கல்கள், பிரச்சினைகள், சவால்கள் நினைவில் வந்து வந்து போகும்தானே? உளவியல் அறிஞர்களை நாடினர். ஓர் ஒழுங்கினைக் கட்டமைத்தார்கள். அன்றாடமும் மாலையில் வீட்டுக்குச் செல்லும் முன்பாக சக அலுவலர்களுடனான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அந்தக் கூட்டத்தில் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் எழுதச் சொன்னார்கள். அவற்றை வரிசைப்படுத்தச் சொன்னார்கள். வரிசையின் அடிப்படையில் அதற்கான தீர்வுகள் இன்னின்னதென அடையாளம் காணப்பட்டு அதற்கான பணிகள் இடம் பெறச் செய்தனர். மனிதனின் மனம் என்பது விநோதமானது. எ…
-
- 0 replies
- 656 views
- 1 follower
-
-
இன்றைக்கு அதிகாலையில் கருப்பண்ணசாமி கோவிலை ஒட்டிய, வறண்டு கிடந்த காட்டோடைக்குள், சிறிது தூரம் ஓட்டப் பயிற்சி செய்து கொண்டிருந்த போது, எதிரே காலைக் கடனுக்காகத் தள்ளாடி நடந்து வந்த பொங்கிமுத்து, "அட்ரா சக்கை. அட்ரா சக்கை. அறிவு வந்திருச்சா" என்ற போது சிரித்துக் கொண்டேன். பிறகு பொங்கிமுத்துவும் நானும் அவருக்குச் சில பொருட்கள் வாங்கவும் எனக்கு கடலை, எள், தேங்காய் எண்ணையை ஆட்டவும் ஒட்டன்சத்திரம் வரை போனோம். பொங்கிமுத்துவிற்கு எண்பது வயதிற்கு மேல் இருக்கலாம். அவரைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறேன் அல்லவா? இப்போது நடை அவருக்கு முற்றிலுமே சுருங்கி விட்டது. பெயரன் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு மட்டும் வண்டியில் வைத்து அழைத்துப் போவதாகச் சொன்னார். வீடு அதைவிட்டால் நந்தினி …
-
- 2 replies
- 918 views
- 1 follower
-
-
“இப்ப மனிசியும் இல்லை. கையிலை காசும் இல்லை. உள்ளதை எல்லாம் பிடுங்கிப் போட்டு பிணமாகத்தான் அனுப்பினாங்கள்.” மனைவியை இழந்த அவர் புலம்பினார். தீடீரென மயங்கி விழுந்த அவளை கொழும்பில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். கடுமையான ஸ்ரோக் (பக்கவாதம்). நினைவில்லை. வாயால் பேச முடியாது. வேண்டியதைக் கேட்க முடியாது. சாப்பிட முடியாது. சலம் மலம் போவது தெரியாது. செத்த பிணம்போலக் கிடந்தாள். நெஞ்சாங் கூடு அசைவதும், இருதயம் துடிப்பதும்தான் இன்னமும் உயிருடன் இருக்கிறாள் என்பதைப் புலப்படுத்தின. நாளங்கள் வழியாக ஊசிகள், குழாய் மூலம் உணவு, மற்றொரு குழாய் மூலம் சிறுநீர் அகற்றல் என சுமார் இரண்டு மாதங்கள் கழிந்தன. ஆனால் காப்பாற்ற முடியவி…
-
- 2 replies
- 677 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
பெண் குழந்தைகள் எப்போதுமே கடவுளுக்கு ஒப்பானவர்கள். தந்தைமார்களுக்கு பெண் குழந்தை என்றாலே எப்போதும் ஒரு தனி பாசம் இருக்கும். தன்னுடைய மகளுக்கென நாள் முழுவதும் அயராது உழைப்பார்கள். கேட்கின்ற பொருளை இல்லை என்று கூறாமல் மகளுக்காக பார்த்து பார்த்து செய்யக்கூடியவர்கள் தந்தை. தந்தையர் தினம், அன்னையர் தினம் போன்றவை அன்னை மற்றும் தந்தையின் அன்பை போற்றும் நாளாக இருப்பது போல், மகள் என்ற புனித உறவின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக குடும்பத்தினருடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் பெண் குழந்தைகளை சுமையாக தான் பார்க்கிறார்கள். ஆண் குழந்தைக்கு கொடுக்கப்படும் சம உரிமை பெண் குழந்தைக்கு கிடைப்பதில்லை. ஆண் – பெண் சம உரிமையை நிலை நாட்டும் வகையில், சில நாடுகளின் அரசுகள் மகள்கள…
-
- 0 replies
- 632 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 15 SEP, 2023 | 04:38 PM ஆண்கள் உடலால் வலிமையானவர்கள் என்றும் ஆண்கள் சிங்கம் போன்றவர்கள் என்றும் உவமைகளால் அலங்கரித்து அலங்கரித்து அவர்களின் உணர்வுகள் இலை மறை காயாகவே காணாமல் போகச் செய்கிறது. அதேபோல் தான் ஆண்கள் தினமும் இலைமறை காயாகவேதான் ஒவ்வொரு வருடமும் தெரியப்படாமல் கலந்து செல்கின்றது. ஆண்களுக்கு நிகர் பெண்கள் பெண்களுக்கு நிகர் ஆண்கள் என்று கூவல்கள் இருந்தாலும் அவை அறைக்கூவல்களாகவே ஒழித்து மறைகின்றன மகளிர் தினம் கொண்டாடப்படும் அளவிற்கு ஆண்கள் தினம் பேசப்படுவது கூட இல்லை. சமூக வலைத்தளங்களாக இருக்கலாம் தொழில்துறை நிறுவனங்களாக இருக்கலாம் இவ்வளவு ஏன் ஒரு சாதாரண அடிப்படை அழகான குடும்பத்தில் கூட இரு…
-
- 1 reply
- 732 views
- 1 follower
-
-
51 வயதில், தீடீரென, திருமதி வோங், வீதியில் தினமும் ஓடத்தொடங்கினார். வீதியால் போவோர், எதுக்கு இந்த மாதிரி உடலை வருத்தி ஓடுகிறார் என்று பேசினார்கள். தினமும் ஓடி, நாளைடைவில் 20 கிலோமீட்டர் ஓடினார். இந்த பெண் எதுக்கு இப்படி உடலை வருத்தி, எடையினை குறைக்கிறார். வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் போது எதுக்கு?. கணவன் இல்லாதால், புதிதாக யாரையும் பிடிக்க முயல்கிறாரோ என்று நினைத்தனர், பேசினர். மூன்று மாதத்தின் பின்னர், டாக்டரிடம் போய் நின்றார் அவர். அவரது எடையினை அளந்து, ஆகா 20 கிலோ குறைத்து விட்டீர்கள். நாளையே அறுவைச்சிகிச்சையினை வைத்துக் கொள்ளலாம். நான்கு மாதங்கள், மட்டுமே வாழ முடியும் என்று சொல்லப் பட்ட மகனுக்கு, சிறுநீரக தானம் செய்ய முன்வந்த தாயிடம், 20 கிலோ குறைத்தால் தான் …
-
- 3 replies
- 867 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "எந்த வேலையும் செல்லாமல் 24 மணிநேரமும் போனிலேயே இருவரும் பேசிக் கொண்டிருப்பது முதிர்ச்சியான காதல் இல்லை." கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம். பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் காதல், திருமணம் போன்ற உறவுகளில் இணை கொலை செய்யப்படும் சம்பவங்கள் இந்திய சமூகத்தில் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் திருப்பூரில் 21 வயதான சத்யஸ்ரீ என்ற பெண் அவர் பணிபுரியும் மருத்துவமனையில் வைத்தே அவரது காதலனால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தையும் அந்தத் தொடர்கதையின் ஓ…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
“கடைசி விவசாயி” படத்தை அண்மையில் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படத்தை ஒவ்வொரு முறைப் பார்க்கும் போது அது எந்தளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக, போலி முற்போக்கு வியாபார உத்திகள் இல்லாமல் இருக்கிறது என்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அதில் ஒரு குறிப்பிட்ட காட்சி என்னை வெகுவாக கவர்ந்தது. கடைசி விவசாயியான மாயாண்டி தாத்தா போலி வழக்கில் சிறையில் விசாரணைக் காவலில் இருப்பார். அவர் குற்றவாளி அல்ல எனத் தெரிந்தும் ஆவணத் தாக்கலில் நேரும் தாமதத்தால் அவரை சிறையில் வைக்க வேண்டிய நிர்பந்தம் நீதிபதிக்கு வருவதை அழகாக காட்டியிருப்பார்கள். இதுதான் நீதிமன்றத்தின் நடைமுறை - அங்கு யாருக்கும் உண்மை, பொய் குறித்து அக்கறை இருப்பதில்லை. சிறையில் கொலை வழக்கில் ஏற்கனவே ஒரு இளைஞ…
-
- 0 replies
- 417 views
- 1 follower
-
-
-
கோபத்தை கட்டுப்படுத்த முடியுமா? Aug 19, 2023 06:41AM சத்குரு சிலர் தங்கள் கோபமே ஒரு உந்து சக்தியாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், பெரும்பாலானோர் கோபத்தினால் பெரும் பாதிப்பையே அடைகிறார்கள். உண்மையில், கோபம் ஒரு உந்து சக்தியா? அல்லது பாதிப்பா? கோபத்தை ஏன் நாம் கைவிட வேண்டும்? தொடர்ந்து படித்தறியலாம் சத்குருவின் பார்வையை! கேள்வி சில சூழ்நிலைகளில், நாம் கோபத்தில் சமநிலை தவறிவிட்டு, அதன்பின்னர் நமது முட்டாள்தனத்தை நினைத்து வருந்துகிறோம். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிடுகிறது. நமது கோபத்தை நாம் எப்படி கட்டுப்படுத்த முடியும்? தற்போது நீங்கள் கோபமாக இருக்கிறீர்களா? இல்லை. உங்களிடம் இப்போது கோபம் இல்லை. இப்போது அது எங்கேயிருக்கிறது என்பது…
-
- 0 replies
- 609 views
-
-
படக்குறிப்பு, தனது குழந்தைகளுடன் பிரித்தேஷ் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெய் சுக்லா பதவி, பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் அரசாங்க வேலை இருந்தால்தான் பெண் கொடுப்போம் என்று தற்போதும் ஒருசிலர் சொல்லிவருவதை நாம் கேட்டிருப்போம். அதுபோன்ற நிலைதான் பிரித்தேஷ் தவேக்கு ஏற்பட்டது. அரசாங்க வேலைக்கு செல்லும் யோகம் கிடைக்காததால் திருமணமும் அவருக்கு ஆகவில்லை. ஆனாலும் குழந்தை பெற்றுகொள்ள வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. எனவே, என்ன செய்யலாம் என்று யோசித்த அவருக்கு வாடகைத் தாய் முறை நினைவுக்கு வந்தது. திருமணம் செய்துகொள்ளாமலேயே வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தை பெற்றுகொண்ட கடை…
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
படிக்கறை - சுப.சோமசுந்தரம் படிப்பில் கரை காண வேண்டியவன் படியில் கறை கண்ட அவலத்தை என்னவென்பது ? நாங்குநேரியில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மாணவன் மற்றும் அவன் தங்கையின் மீது வீடு புகுந்து நிகழ்த்திய கொலை வெறித் தாக்குதல் இன்னும் தமிழ் நிலத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சாதி வெறியின் குறியீடாய் வீட்டில் ரத்தக்கறை தோய்ந்த வாசற்படி சமூக வலைத்தளங்களில் வலம் வருவது ஈரக்குலை நடுங்க வைத்து நம் அடிவயிற்றைப் பிசைகிறது. சமூகப் பொறுப்புள்ள அனைவரும் நிலைகுலைந்து போய் நிற்கையில் சந்துக்குள் புகுந்து சிந்து பாடும் …
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
படக்குறிப்பு, புகைப்படக் கலையிலும், ‘ஈரோடிக்’ எனப்படும் பாலியல் ஈர்ப்பு சார்ந்த கலையிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புவதாகச் சொல்கிறார் யூஷி லீ. கட்டுரை தகவல் எழுதியவர், எலனர் வொய்சார்ட், அன்னா ப்ரெஸ்ஸானின் பதவி, பிபிசி ரீல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு சிறிய அறையில் ஆறு ஆண்கள் படுத்திருக்கின்றனர். ஒருவர் அவர்கள்மீது ரோஜா இதழ்களைத் தூவுகிறார். ஒரு பெண் காமிரா மூலம் இந்தக் காட்சியைப் பார்த்து, நிர்வாணமாகப் படுத்திருக்கும் ஆண்களின் ‘போஸ்’களில் சில மாற்றங்களைச் செய்யச் சொல்கிறார். ஒரு மென்மையான, இணக்கமான ‘ஈரோடிக்’ (erotic) ஃபோட்டோ ஷூட் நடந்துகொண்டிருக்கிறது.…
-
- 38 replies
- 3.7k views
- 2 followers
-
-
படிக்கட்டுகள். நுழைவு குழு. பொருட்கள். கதவுகள். பூட்டுகள். வடிவமைப்பு » காற்றோட்டம் அறிவியல் பார்வையில் காதல் என்றால் என்ன: உணர்வுகளின் வேதியியல். அறிவியலின் பார்வையில் காதல். காதலர்களின் மனதில் என்ன நடக்கிறது? காதல் என்றால் என்ன விஞ்ஞானிகளே அறிவியல் பார்வையில் காதல் என்றால் என்ன: உணர்வுகளின் வேதியியல். அறிவியலின் பார்வையில் காதல். காதலர்களின் மனதில் என்ன நடக்கிறது? காதல் என்றால் என்ன விஞ்ஞானிகளே மிகவும் தெளிவான பதிவுகள் மற்றும் உணர்ச்சிகள் அவர்கள் காதலிக்கும்போது, வெறித்தனமாக காதலிக்கும்போது அவர்களுக்கு வரும். மேலும் காதலில் விழும் இந்த நிலையில், மனித மூளையில் ஒரு …
-
- 0 replies
- 1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் 6 வயது சிறுவன், தனது உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கை-கால் கட்டப்பட்ட நிலையில் நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம், பெண் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, ஆண் குழந்தைகளுக்கும் உடல் எல்லையையும், பாதுகாப்பையும் கற்றுத் தர வேண்டிய தேவையை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர் என்னவெல்லாம் செய்ய வேண்டும், அவர்களோடு உடல் சார்ந்த பாதுகாப்பு கு…
-
- 0 replies
- 752 views
- 1 follower
-
-
வாருங்கள் பேசுவோம் ! இன்றைய கால கடடத்தில் நம் சமுதாயம் தாயகத்தில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பல அதில் இதுவும் மிக முக்கியமான ஒன்று . "போதை காடடும்பாதை ". நம் இளைய சமுதாயம் சீர் கெட்டுப்போகிறது. வெளி நாட்டுக்கு காசு ...பெற்றோரின் கவனிப்பு இன்மை . உடல் உழைப்பின்மை அரச இயந்திரத்தின் திட்ட் மிட்ட் சதி ..போதையூட்டும் மருந்துகளின் தாராளா வரவு. என்பன ,. இதை தடுக்க என்ன செய்யலாம். உளவள ஆற்றுப்படுத்தலின் மையங்கள் ஒரு சில தான் உள்ளன. பணம் இதில் பெரும்பங்கு வகிக்கிறது.
-
- 1 reply
- 695 views
- 2 followers
-
-
மிக அருமையான பதிவு. நான் கனடாவில் 35 வருடங்களுக்கு மேலாக வாழ்கிறேன். Visitors visaவை work permit ஆக மாற்றுவது ரொம்பக் கடினம். It is easy if you have specific skill. முயற்சி செய்து பாருங்கள். வாழ்த்துக்கள். (கருத்துக் சொன்னவர்.) கனடாவில் உள்ளவர் அழைப்பின்பேரில் வந்து ...அகதி கேடடால் ( " அகதி" என்பதை தை நிரூபிக்க என்ன காரணம் சொல்வீர்கள். நாட்டில் தான்பிரச்சனையே இல்லையே! ) உங்களை அழைத்தவர் மீண்டும் அவரது தேவைக்கு இன்னொருவரை அழைக்க முடியதுபோகும். இதனால் குடும்ப பகை ஏற்பட இடமுண்டு.
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
மனிதர்களை நான் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பிரிப்பதில்லை. மாறாக, கருத்துமுதல்வாதிகள் / லட்சியவாதிகள், பௌதீகவாதிகள் / நடைமுறைவாதிகள் எனப் பிரிக்கிறேன். அரசியல் அடிப்படையில் வெளியில் இருப்பவர்களுக்கு லட்சியவாதமாகவும் உள்ளே இருப்பவர்களுக்கு நடைமுறைவாதமாகவும் உள்ளது. அரசியலில் வெளியே இருப்பவர்கள் ஏழைகளாகவும், அதிகாரமற்றவர்களாகவும், துயருறுபவர்களாகவும், உள்ளே அதிகார மையத்தில் இருப்பவர்கள் பணமும் அதிகாரமும் படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன் - இதில் நல்ல அரசியல்வாதி, மக்கள் தலைவர், கெட்ட அரசியல்வாதி, ஊழல்வாதி எனும் பாகுபாடுகள் அபத்தமானது. காந்தியின் காலத்திலேயே அரசியலை நடத்தியவர்கள் எந்த கலவரத்திலும் சாகவில்லை, மந்திரிகள் பட்டினி கிடக்கவில்லை. இன்னொரு விசயம…
-
- 0 replies
- 690 views
- 1 follower
-
-
தற்போதுள்ள காலத்தில்பலரும் கனடாவுக்கு வர மிகவும் ஆர்வ மாக உள்ளர்கள். ஆனால் கல்வி தகமை உள்ளவர்களுக்குமட்டுமே சாத்தியம். முன்பு போல அகதி அந்தஸ்து கேட்க முடியாது ....அப்படி கேட்ட்டாலும் பத்தாயிரத்தில் ஒருவருக்கு தான் கிடைக்கும். ஏஜென்ட் ...என்ற நபரை நம்பி ஏமாற வேண்டாம் வீண் பணச்செலவு மட்டுமே. இங்குள்ள அரசு வர்த்தமானியில் உள்ளபடி தான் நடக்க வேண்டும். பின் வரும் விபரங்கள் உதவ கூடும். இந்த வேலைக்கு இங்கு மிக்வும் தேவை இருக்கிறது . விரும்பினால் விண்ணப்பிக்கவும். கண்டிப்பாக எதாவது எக்ஸாம் எழுத் வேண்டும். IELTS, TOEFL, PTE. Personal support worker .... How do I get a PSW certificate in Ontario? …
-
- 77 replies
- 7.7k views
- 3 followers
-
-
மாமன்னன் எனும் மாமனிதன் -சுப. சோமசுந்தரம் இது திரை விமர்சனம் இல்லை; விமர்சனம் இல்லாமலும் இல்லை. 'மாமன்னன்' திரைப்படம் எழுப்பிய சிந்தனைச் சிதறல்கள் எனக் கொள்ளலாம். சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்படுவது சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள திரைப்படமான 'மாமன்னன்'. இயக்குனர் திரு. மாரி செல்வராஜ் அவர்கள் திரைக்கடலில் மூழ்கி எடுத்த மூன்றாவது முத்து இப்படம் - பரியேறும் பெருமாள், கர்ணன், வரிசையில் மாமன்னன். மூன்றுமே சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் நம் செவிப்பறையைத் தாக்குவன; அவர்களது வலியை நமக்குக் கடத்தி சமூகத்தின் மீது சம்மட்டி அடியாய் விழுவன. முதல…
-
- 2 replies
- 1.1k views
- 2 followers
-
-
சனிக்கிழமை ஆடு அடிக்கிறம் பங்கு வேணுமோ?’ என்ற கேள்விகள் அப்போது இருக்கும். இப்படித்தான் சிறு வயதில் எனக்கு ஆட்டிறைச்சி அறிமுகமானது. சந்தைக்குப் போய் பொருட்கள் வாங்கும் வயதுப் பக்குவம் எனக்கு வந்த போது, பருத்தித்துறை மீன் சந்தையில் உள்ள இடது புறமுள்ள கடையில் ஆட்டிறைச்சி கிலோ மூன்று ரூபாவும் சந்தை வாசலுக்கு நேர் எதிரே இருந்த கடையில் மாட்டிறைச்சி ஒரு ரூபாவும் என்று விற்றுக் கொண்டிருந்தன . பருத்தித்துறைக் கடையில் இறைச்சி வாங்குவதாக இருந்தால் ஆட்களைப் பார்த்துத்தான் இறைச்சி தருவார்கள். ஒவ்வொரு தடவையும் இறைச்சி வாங்கிக் கொண்டு போய் வீட்டில் கொடுத்தால், “உன்னை ஏமாத்தி சவ்வுகளையும் எலும்புகளையும் போட்டுத் தந்திருக்கிறான்” என்ற விமர்சனம்தான் மிஞ்சும். ஊரில் யாராவ…
-
- 27 replies
- 3k views
-
-
அண்மைக் காலமாக போதைப்பொருள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வருகின்றது. போதைப் பொருட்களுடன் யாராவது பிடிபட்டால் அல்லது அதன் பாவனையால் பாதிக்கப்பட்டால் மட்டுமே செய்தி ஊடகங்களில் வரும் என்பதைச் சில மாதங்களுக்கு முன்னர் யாழ் சென்றிருந்தபோது காணக் கூடியதாக இருந்தது. மற்றும்படி யாழ் ஊடகங்கள் பெரிதாக இது பற்றி எழுதுவதாகத் தெரியவில்லை. ஊடகங்களில் வரும் செய்தியை வாசித்துவிட்டு இது சிங்கள அரசாங்கத்தினதும் இராணுவத்தினரினதும் திட்டமிட்ட தமிழ் சமுதாய அழிப்பு என்று கூறிவிட்டுக் கடந்து போனோம். இக் கருத்தில் முற்றுமுழுதான உண்மை இல்லை. போதைப் பாவனை தமிழர் பகுதியெங்கும் பரவிக் கொண்டே செல்கிறது. பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருள் பாவனையைப் பழக்குவது, விற்பனை செய்வது யார் போன்ற தகவல்கள…
-
- 16 replies
- 1.8k views
-