Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆய்வில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தில் திருமணமானவர்களில் 5-ல் ஒருவர் வாரத்தில் ஒருமுறை கூட முத்தத்தை பகிர்ந்து கொள்வது கிடையாது. எப்போதாவது அவர்கள் முத்தத்தை பகிர்ந்து கொண்டாலும் அது அழுத்தமாகவோ, நீண்ட நேரம் கொண்டதாகவோ இருப்பதில்லை. அதிகபட்சமாக 5 வினாடிகள் முத்தம் கொடுப்பதே பெரிய விஷயமாக உள்ளது. இளம் ஜோடியினர் வாரத்துக்கு 11 முறை முத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மிகவும் அழுத்தமானதாகவும், அதிக நேரம் கொண்டதாகவும் இருக்கிறது. இளஞ்ஜோடியின…

  2. சிறப்புக் கட்டுரை: சைவம் புனித உணவா? மின்னம்பலம் அ.முத்துக்கிருஷ்ணன் இந்தியர்களின் பெரும்பான்மையானவர்கள் சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் என்கிற தொழில்முறை வதந்தி தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது உண்மை அல்ல என்பதையும் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக ஒரு பயணம் செய்தால் நகரங்களின் தெருக்களில் மனத்தை மயக்கும் உணவின் மனம் இந்த தேசத்தின் உணவுப் பழக்கத்தை சொல்லிவிடும். இந்தியா சைவ உணவு நாடா? இருப்பினும் நீங்கள் எல்லோருமே அசைவம் சாப்பிட்டாலும் இந்த தேசம் சைவ உணவுப்பழக்கம் என்கிற கட்டுக்கதையை நாங்கள் பரப்புவோம். ஏனெனில், நாங்கள் சைவம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், இந்த தேசத்தில் பெரும்பான்மையானவர்கள் எங்களைப் …

  3. Started by வீணா,

    http://www.youtube.com/watch?v=t0Atg6abckw&feature=player_embedded http://www.youtube.com/watch?v=lq1deJ17uZQ&feature=player_embedded http://www.youtube.com/watch?v=g6RodFbC1Ws&feature=player_embedded#! http://www.youtube.com/watch?v=JxG_1z2v8Wc&feature=player_embedded#!

  4. தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்? மு.இராமநாதன் ஆதியில் பான் (PAN) அட்டை வந்தது. அதை ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுத்தது. அடுத்து ஆதார் அட்டை வந்தது. அதைத் தயாரிக்கிற பணி சில உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு புலர் காலைப்பொழுதில் அட்டைகள் இரண்டையும் இணைக்கச் சொல்லி ஆக்ஞை வந்தது. காஷ்மீர் முதல் திருப்பதி வரை புகார் ஒன்றுமில்லை. குடிமக்கள் இணைத்தனர். ஆனால், திருத்தணி முதல் தென்குமரி வரை வாழும் ஜீவராசிகளுக்கு அட்டைகளை ஒட்டவைப்பது எளிதாக இல்லை. பான் அட்டை விண்ணப்பத்தில் இரண்டு பெயர்கள் கேட்டார்கள். முதற்பெயர் (first name) ஒன்று. குடும்பப் பெயர் (surname) மற்றொன்று. தமிழர்களுக்கு ஆக உள்ளது ஒரு பெயர்தான். இரண்டில் ஒன்றிற்கு அதை எழுதினார்கள். மற்ற…

    • 1 reply
    • 1.2k views
  5. ஒழுகு... (சர்வதேச சிறுவர் தினம்) குழல் இனிது யாழ் இனிது என்பர் குழந்தைகளின் மழலை மொழி கேளாதார்... சிறுவர்கள் உலகில் சஞ்சரிப்பது என்பது மிகவும் மகத்தானதொரு செயல். இந்தச் சிறுவர்களுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சர்வதேச சிறுவர் தினம், 1954ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் இன்றைய தினமான ஒக்டோபர், 1ஆம் திகதி சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. (முதியோர் தினமும் இன்றைய நாளிலேயே கொண்டாடப்படுகின்றது) எனினும், இச்சிறுவர்கள் தினமானது ஒவ்வொரு நாடுகளிலும் வௌ;வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் இந்நாளில் நினைவுகூறப்படுக…

  6. ''என் மனைவி வேறொருபெண்ணை விரும்புகிறாள். அவளுடனேயே உறவு வைத்துக் கொண்டுள்ளாள்'' என்று லியோனாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணவன் புலம்புகிறான். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த அவனது ஐந்து நண்பர்கள், ''உனக்கு மனைவியை எவ்வாறு கையாள்வது (உறவுகொள்வது) என்பது தெரியவில்லை. அதுதான் அவள் ஒரு பெண்ணை நாடியுள்ளாள். எங்களிடம் விட்டுவிடு, எப்படி கையாள்வது என்பதை நாம் காண்பிக்கிறோம்'' என்று கூற, வெறுப்பில் இருந்த கணவனும் அதற்கு சம்மதிக்கிறான். ஒரு இரவில் ஐந்து நண்பர்கள், கணவன் முன்னிலையில் அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். இந்தக் கொடுர சம்பவம் நடப்பதற்கு ஒரு …

  7. மணமுறிவுக்கு மனமுறிவு காரணமாகலாமா? சமீபத்தில் மகான் ராகவேந்திரரை தரிசிக்க நண்பர்கள் குழாமுடன் மந்த்ராலயம் சென்றிருந்தேன். அதிஅற்புதமான தரிசனம் கிடைத்தது. பல்வேறு உலக விஷயங்களை பேசிக்கொண்டே சென்றோம். அதில் மிக முக்கியமாக என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது, என்னை அழைத்துச்சென்ற வழக்கறிஞரின் பேச்சுதான். ‘‘என்ன அண்ணா, கோர்ட் கேஸ் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு?’’ என்று அவரிடம் நான் கேட்டதுதான் தாமதம். ‘‘இப்ப எல்லாம் Family courtதான் - குடும்ப நீதிமன்றம்தான் - சோறு போடுது!’’ என்றார். ஒருநாளைக்கு பணக்காரர்களிலிருந்து பரம ஏழைகள்வரை சமூகத்தின் அத்தனை தரப்பினரும் இங்கே படையெடுத்து வருகிறார்கள் என்று தகவல் தந்தார். ‘‘இதற்கு முக்கிய காரணம் Ego-தான். நீயா நானா போட்டிதான்…

  8. ஆண்கள் எதிர்கொள்ளும் அக நெருக்கடிகள். ஆண்கள் எதிர்கொள்ளும் அக நெருக்கடிகள். பெண்கள் தினம் என்றால் மார்ச் 8 என்று கூறிவிடுவோம். அதென்ன ஆண்கள் தினம் ? அப்படி ஒரு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது ? பெண்களுக்கான அக புற நெருக்கடிகளே அவர்களை முன்னேறவிடாமல் இன்னும் தடுக்கும்போது ஆண்களுக்கும் அக நெருக்கடியா? சொல்லப்போனால் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆண்களுக்கும் அக புற நெருக்கடிகள் நிறைந்த சூழல்தான் நிலவுகிறது. முன்புபோல் ஆண் வேலை செய்துவிட்டு வர பெண் வீட்டைக் கவனித்துக் கணவனையும் குடும்பத்தையும் மட்டுமே போஷித்துக் கொண்டிருந்த காலம் மாறி விட்டது. இன்றைய காலகட்டத்தில் பெண்ணும் வேலைக்குச் செல்வதால் ஆண் வீட்டில் சரிபங்கு வேலைகளையும் பொறுப்பேற்றுக் க…

  9. ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது. அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படு…

  10. அன்று தனது முதல் வேலையில் இணைந்து கொண்ட கேட்டிற்கு என்ன சொல்வது என தெரியாத நிலையேற்பட்டது. தற்போது வெற்றிகரமான அதிகாரியாக பணியாற்றி வரும் அவர் அன்று வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பதற்காக எவ்வளவு கடினமான வேலையையும் செய்வதற்கு தயாராகயிருந்தார். ஆனால் அவர் தொடர்ச்சியான -பாலியல் ரீதியிலான மறைமுக கேலிகளை எதிர்பார்க்கவில்லை. அவர் சிவப்பு நிற ஹீல்ஸ் அணிந்த போதெல்லாம் அவரது மேலதிகாரிகளில் ஒருவர் ஆபாசமான கேலிகளில் ஈடுபட்டார். ஏனைய கூட்டங்களில் சிரேஸ்ட ஆண் ஊழியர்கள் இவ்வாறான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபடுவது வழமை. அவர் தான் வேலையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்த பின்னர் மனிதவள பிரிவினரை சந்தித்தவேளை இவ்வகையான பாலியல் கேலிகள் - காரணமாக நான் தற்கொலை செய்ய நின…

    • 0 replies
    • 508 views
  11. இந்தியத் திருமணங்களில் ஒரு மாற்றம் வேண்டும்! - பிரீத்தி கும்பரே திருமணம் என்றால் சுபச் செலவுதான். தங்கள் வீட்டுக் கல்யாணத்தை பிறர் வியக்கும் அளவுக்கு நடத்த வேண்டும் என்றுதான் எல்லாரும் விரும்புவர். வரதட்சணை, இலை நிறைய விதம் விதமான அறுசுவை உணவு... பூக்களால் ஜோடனை, மேளம், கச்சேரி அல்லது மெல்லிசை, தாம்பூலம்... மொய் இல்லாமல் இந்தியக் கல்யாணங்கள் நடப்பதில்லை. இவை எதுவும் இன்றி சென்ற ஜுலை 3 ஆம் நாள் நடந்த திருமணம் அகில இந்தியாவுக்கு ஒரு முன்மாதிரியான திருமணமாக அமைந்து விட்டது. திருமணச் செலவை குறைத்து, ஆடம்பரம் ஆரவாரம் இல்லாமல் அந்தத் திருமணம் நடந்ததினால் மட்டும் பிரபலம் அடையவில்லை. திருமணம் முடிந்ததும், கடனை அடைக்க முடியாமல் தற்க…

  12. ஜீரணிக்க முடியாத உண்மை -முகம்மது தம்பி மரைக்கார் அந்தப் பெண்ணுக்கு 42 வயதைத் தாண்டியிருந்தது. பல்கலைக்கழகத்தில் கற்கும் ஆண் மகன், உயர்தரம் படித்து முடித்த பெண் பிள்ளை வீட்டில் இருந்தனர். ஒருநாள் தனது கணவருடன் வைத்தியர் ஒருவரை சந்திக்க வந்திருந்த அந்தப் பெண், தான் கர்ப்பம் தரித்திருப்பதாகக் கூறினார். அந்த வயதுக் கர்ப்பம் தமக்கு அவமானத்தைத் தேடித் தந்துவிடும் என்று அந்தப் பெண்ணும் அவரின் கணவரும் அச்சப்பட்டனர். இந்த வயதில் தனது தாய் கர்ப்பம் தரித்திருக்கின்றமையால், தான் அவமானத்தை உணர்வதாக தங்கள் மகள் கூறியமையை அந்தத் தாய் வருத்தத்துடன் தெரிவித்தார். இதனால், தனது கர்ப்பத்தைக் கலைத்து விடுவதற்குத் தாம் தீர்மானித்துள்ளதாக அந்தப் பெண்ணும்…

  13. சமத்துவத்திற்கொரு முயற்சி - ஆண்களின் சமையல் பயிற்சி காலம் காலமாக, பல நூற்றாண்டுகளாக அடுப்பின் நெருப்பு நம் பெண்களை வேகவைத்துக் கொண்டிருக்கிறது. பெண்களின் உலகம் சமையலறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதை அறியாதவர் எவரும் இல்லை. காலம் மாறி வருகிறது. வான்வெளிக்குக்கூட பெண்கள் செல்லத் தொடங்கிவிட்டார்கள். ஆண்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் பெண்களால் செய்ய முடியும் என நிரூபித்துவிட்டார்கள். ஆனால் பெண்கள் செய்யும் சமையலை மட்டும் ஆண்கள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. இதுவே உண்மை. தொழில்முறை சமையல்காரர்கள் கூட தத்தம் வீடுகளில் தன் மனைவி கையால் சாப்பிடுவதையே விரும்புகிறார்கள். அதை விருப்பம் என்பதை விட ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். அறுசுவை நடராஜன் சொல்கிற…

  14. "முதலாவது எழுதப்பட்ட சட்டம்" ஒரு சட்ட எழுத்துருச் செதுக்கப்பட்ட களிமண் பலகைத் துண்டும் [வில்லையும்] செம்பினால் வடி வமைக்கப்பட்ட உர்-நம்மு [அல்லது ஊர் நம்மு / Ur-Nammu] என்ற சுமேரிய மன்னரின் உருவச் சிலையும் ஈராக்கில் உள்ள நிப்பூரில் கண்டு பிடிக்கப்பட்டது. இது கி மு 2100 ஆண்டை சேர்ந்தது. இந்த உர்-நம்மு என்ற சுமேரிய மன்னரின் குற்றவியல் சட்டம் 17 விதிகளை கொண்டு உள்ளது. அது மேலோட்டமாக பல்வேறு குற்றங்களையும் அதற்கான தண்டனைகளையும் கூறுகிறது. சுமேரியர்களின் கண்டு பிடிப்புகளில் மிகவும் உறுதியானதும் தொலை நோக்கானதும் இந்த உர்-நம்முவின் சட்ட விதித் தொகுப்பு ["The Code of Ur-Nammu"] ஆகும். எல்லா பண்பாடும் அல்லது நாகரிகமும் ஏதாவது சில சமூக ஒ…

  15. லண்டன் தமிழர் கடைக்குள் நடந்தது தெரியுமா…? முக்கிய எச்சரிக்கை… கடந்த 3 தினங்களுக்கு முன்னர் லிவர்-பூல் பகுதியில் உள்ள ஒரு தமிழரின் கடைக்குள் , கத்தியோடு ஒருவர் புகுந்துவிட்டார். ஆனால் கடைக்குள் Till ல்(கஜானாவில்) நின்ற நபர் யார் தெரியுமா ? ஒரு பெண்ணும் அவரது கைக் குழந்தையும் தான். அங்கே வேறு யாரும் இல்லை. தனியாக ஒரு பெண் கடையில் நிற்பதே ஆபத்து. இதில் வேறு அவர் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு அங்கே நின்றுள்ளார். இதனால் திருடனுக்கு அடித்தது வாசி. உள்ளே புகுந்து பணத்தை திருடிக்கொண்டு சென்றுவிட்டான். பிரித்தானியாவில் பல இடங்களில் தமிழர்கள் கடைகளை வாங்கிக் கொண்டு புறநகர்ப் பகுதிகளுக்கு செல்கிறார்கள். கணவனும் மனைவியுமாக கடைகளில் நிற்கிறார்கள். கணவன் எப்போது காஷ் & கரிக்கு …

    • 0 replies
    • 507 views
  16. மனசு போல வாழ்க்கை 31: பாராட்டு எனும் மூலதனம் நல்ல வார்த்தைகளுக்கு நாம் எல்லோரும் ஏங்குகிறோம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, உங்களுக்கு வந்து சேரும் ஒரு சின்னப் பாராட்டுக் கூட உங்களை ஒரு நொடியாவது சிறு ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? ‘முதல் மரியாதை’ படத்தில் “ பா.. ரா.. ட்ட, மடியில் வச்சு தா..லாட்ட, எனக்கொரு தாய்மடி கிடைக்குமா.. ?” என்று நடிகர் சிவாஜி பாடும்போது உங்கள் கண்களும் கலங்கியிருந்தால் நீங்களும் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் காத்திருக்கிறீர்கள் என்று பொருள். தொடுதலும் உணவே சிசு வளர்வது சுவாசத்தாலும் உணவாலும் மட்டுமா? தாயின் ஸ்பரிசம் தரும் வெப்பத்தினால் தான் அது வளர்கிறது. உளவியல் ஆய்வாளர்கள் ப…

  17. ஒருவருக்குத் தொழில்ரீதியான வளர்ச்சியும் அதற்காக அவர் அவரது பணியைப் பற்றிக் கற்றுக்கொள்ளுவதும் 90 சதவீதம் அவர் செய்கிற வேலையில்தான் நடைபெறுகிறது. வேலையின் அனுபவம் மூலமும், மற்றவர்களின் அனுபவங்களை உள்வாங்குதல் மூலமும் தனது பணிகளின் மீதான கருத்துகளை ஏற்றுக்கொள்வதிலும்தான் ஒருவருக்குப் பணி அனுபவம் கிடைக்கிறது. பொதுவாக, வேலையில்தான் பெரும்பாலும் மனிதர்கள் கற்றுக்கொள்கின்றனர். திறன் வளர்ப்புப் பயிற்சிகளில் சுமார் 10 சதவீதம்தான் கற்றுக்கொள்ளப்படுகிறது. எல்லோருக்கும் ஒரே மதிப்பீடுகள் கிடையாது. சிலருக்கு அவர்களுக்கான தனிப்பட்ட நேரம் மிகவும் முக்கியம். அவர்கள் வார இறுதி நாட்களிலும் வேலைசெய்யும்படி இருக்கிற பணிகளை விரும்ப மாட்டார்க்ள். மன அழுத்தமுள்ள அபாயம் நிரம்பிய வேலைகள் சிலருக்…

  18. http://manaosai.blogspot.com/2006/10/blog-post_26.html குட்டை பாவாடையில் பெண்--- ஆக மொத்ததில் சில ஆண்களும் சில பெண்களும் மேய்ச்சல் விலங்குகளாகத்தான் திரிகின்றனர் எங்கிறீர்கள். அந்த வகையில் பார்க்கும் போது நீங்களும் மேய்ஞ்சிருக்கிறீர்கள். ஏனென்றால் அவனவன் வேலைக்கு படிப்புக்கு போற ரென்சனில தன்னையே கவனிக்க முடிவதில்லை உங்களுக்கெல்லாம் இதுகளுக்கும் நேரமிருக்கே அதுதான் இப்படியும் எழுதச் சொல்லுது. அவள் குட்டையா போட்டால் என்ன ஏன் போடாமல் போனால் தான் என்ன அவளிடமும் மனிதனிடம் உள்ளதுதான் இருக்கிறது. தோலும் தசையும் எலும்பும். பிறகென்ன பார்வை வேண்டி இருக்கிறது. ஏதோ இறைச்சிக் கடையில் இறைச்சியைப் பார்ப்பது போல பெண்ணின் ஆடை அங்கமென்று பார்க்காட்டிலும் …

    • 0 replies
    • 1.4k views
  19. [size=3][size=4]வியர்வை [/size][size=4]நாற்றத்துடன் நடமாடும்ஊழியர்களால், மற்றவர்கள் எரிச்சல் அடைவதாக [/size][size=4]ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[/size][/size] [size=3][size=4]நெதர்லாந்து நாட்டில், சமீபத்தில் ஒரு ஆய்வு [/size][size=4]மேற்கொள்ளப்பட்டது. பணி இடங்களில் சக ஊழியர்களின் சுகாதாரமின்மையால், பல [/size][size=4]ஊழியர்கள் சங்கடப்படுவதாக, இந்த ஆய்வு தெரிவிக்கிறது.வியர்வை நாற்றத்துடன் [/size][size=4]திரியும் ஊழியர்களை கண்டு, பெரும்பாலானவர்கள் எரிச்சல் அடைகின்றனர். [/size][/size] [size=3][size=4]கழிப்பறைக்கு [/size][size=4]சென்று விட்டு, கை கழுவாமல் வருபவர்களை கண்டு, மற்றவர்கள் [/size][size=4]சங்கடப்படுகின்றனர். [/size][/size] [size=3][size=4]வாய் துர்நாற்றமெ…

    • 0 replies
    • 669 views
  20. மனிதர்களுக்குத் தர வேண்டிய மதிப்பை பொருட்களுக்கும், பொருட்களிடம் வைக்க வேண்டிய தூரத்தை மனிதர்களிடம் காண்பிப்பதும் தான் இன்றைய காலகட்டத்தின் சோகம். நம்மைச் சுற்றி குவிந்து கிடக்கும் பொருட்களின் இடையே பரிதாபகரமாகச் சிக்கியிருக்கிறோம் என்பதை தெரியாதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதும் துயரம். ஒரு பொருள் அவசியமா இல்லையோ பக்கத்து வீட்டுக்காரர் வைத்துள்ளார் என்பதற்காகவே தானும் எல்.ஈ.டி டீவியை வாங்கி வீட்டின் வரவேற்பறையில் மாட்டும்வரை சிந்தனை முழுவதும் அதைச் சுற்றித் தானே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்? தப்பித் தவறி நாமே மறந்தாலும், விளம்பரங்களின் வேலை என்ன? நொடிக்கொரு தடவை ஆசைக் கதவுகளைத் தட்ட வைக்கும். நம்முடைய பலவீனங்களை பலூனாக மாற்றி ஊதச் செய்து கடைசியில் வெடிக்கச் செய்த…

    • 0 replies
    • 1.1k views
  21. சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 1-9-2013 அன்று நடைபெற்ற நாத்திகர் விழா பேரணி. http://www.youtube.com/watch?v=FyXavk3tdTA&feature=share&list=UUGJTRElIv1hmK2z2dv_GJdQ

  22. அவுட்சோர்சிங் செய்யப்படும் கருக்களும் - வாடகை கருப்பைகளும் கடந்த வாரத்தின் ஒரு மதிய வேளையை வீட்டில் செலவழிக்க நேர்ந்தது, அப்படியே ஆயா பார்க்கும் சீரியலையும். ஒரு பெண்ணை காணோமென்று அவளது அப்பாவும், கணவரும் பதைபதைத்ததோடு , அப்பெண்ணை நீதான் துரத்தி விட்டாயென்று இன்னொரு பெண்ணையும் தூற்றிக்கொண்டிருந்தனர். முன்கதை சுருக்கம் கேட்டதில், வாடகைத்தாய் அந்த வீட்டிற்கு வந்துவிட சொந்தத்தாய்(?) வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். (அல்லது சிச்சுவேஷன் மாறியிருக்கலாம்.) வாடகைத்தாய்க்கும் சொந்தத்தாய்(?)க்கும் நடக்கும் பிரச்சினைதான் கதை போலிருக்கிறது. சீரியலின் பெயர் அத்திப்பூக்கள். வாடகைத்தாய் என்பவர் ‍ கருவை வாடகைக்குச் சுமந்து பெற்றெடுத்தவர். சொந்தத்தாய் என்பவர் கருவிற்கான முட்டைய…

  23. விவாகரத்துக்கு ஒப்புதல்: முடிவுக்கு வருகிறது பிரபுதேவா-ரமலத் விவகாரம் பரஸ்பர விவாகரத்து கேட்டு, சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடிகர் பிரபுதேவா, அவரது மனைவி லதா மனு தாக்கல் செய்தனர். பிரபுதேவாவும், ரமலத்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களில் மூத்த மகன் கேன்சரால் இறந்தார். இந்த வருத்தத்தில் இருந்த பிரபுதேவாவுக்கு, வில்லு படத்தின் மூலம் நயன்தாராவின் நட்பு கிடைத்தது. இருவருக்கும் இடையே இருந்த நட்பு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு கட்டத்தில் பிரபுதேவா வீட்டுக்கே செல்லாமல் நயன்தாராவுடன் குடித்தனம் நடத்த ஆரம்பித்தார். தற்போது, பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் சேர்ந்து சுற்றி வ…

  24. காலம் மாற மாற, அதற்கேற்ற வகையில் ஃபேஷன்களும் மாறிக் கொண்டே இருக்கும். உடைகளாகட்டும், நகைகளாகட்டும் ஃபேஷன்களின் அணிவகுப்பு முதன் முதலில் கல்லூரிகளில் தான் களை கட்டும். இளமையில் புதுமை தான் காணச் சலிக்காத அழகு. தங்களில் ரசனைக்கு ஏற்றவகையில் பெண்கள் இன்று தங்களை நன்கு அலங்கரித்துக் கொள்கிறார்கள். அழகுக் கலை பராமரிப்பு தனித்துவம் பெற்றிருக்கும் இந்தக் காலத்தைச் சேர்ந்த இளம் நங்கைகள் என்ன மாதிரியான உடைகளை விரும்பி அணிகிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்தோம். இதோ சில முடிவுகள் – ஜீன்ஸ் கல்லூரி பெண்களுக்கு மட்டுமல்ல பெண்கள் ஆண்கள் என அனைவருக்கும் பிடித்த தேசிய உடையாகி விட்டது ஜீன்ஸ். ஜீன்ஸ் பலவிதமாக இருந்தாலும் காலேஜ் பெண்கள் விரும்பி அணிவது 3/4த் ஜீன்ஸ். இவை டீஷர்…

    • 0 replies
    • 2.2k views
  25. தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும். [தமிழர் அறியவேண்டியது – RP] 14 ஆம் திகதி நாம் அனைவரும் “பொங்கல் திருநாளை (pongal)” கொண்டாடப்போகின்றோம். உண்மையில் புதுவருடப்பிறப்பும் இது தான் என்பதை சிலர் அறிவார்கள் சிலர் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார்கள். ( நகைச்சுவையாக எடுக்கும் வகையிலேயே அரசியல் செய்பவர்கள் நமது நடைமுறையை மாத்தியுள்ளார்கள். 2006-2011 வரை தைப்பொங்கலையே தமிழர் புதுவருடப்பிறப்பாக தமிழக அரசு அறிவித்தது… ஆனால் அடுத்த ஆட்சிமாற்றம் 2011 இல் இருந்து மீண்டும் சித்திரை 1 ஐ புதவருடமாக அறிவித்தது.) இன்று நாம், தைப்பொங்கலை ஏன் கொண்டாடுகின்றோம்… இது புதுவருடப்பிறப்புத்தானா… சித்திரை ஏன் புதுவருடப்பிறப்பானது என்பது பற்றி சுருக்கமாக பார்க்கவுள்ளோம். த…

    • 0 replies
    • 744 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.