உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
இஸ்ரேல் நடத்தும் போர் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் – ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை. காசாவில் இஸ்ரேல் நடத்தும் போர் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ஒருசிலர் செய்யும் குற்றங்களுக்காக பாலஸ்தீன பகுதியில் உள்ள அப்பாவி குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் தண்டிக்கப்படுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் எஇரத்தக்களரி மற்றும் வன்முறையைத் தடுப்பதே அனைவரது நோக்கமாக இருக்க வேண்டும் என விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். நெருக்கடி மேலும் அதிகரித்தல் கடுமையானதும் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். …
-
- 1 reply
- 555 views
-
-
சிரியா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் areசிரியாவின் டமாஸ்காஸ் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இத் தாக்குதல் காரணமாக டமாஸ்காஸ் பகுதியிலுள்ள இராணுவக் கிடங்கொன்று தாக்குதலுக்கிலக்கானதில் மூன்று இராணுவத்தினர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன் இஸ்ரேலின் பெரும்பாலான ஏவுகணைகள் தடுத்து அழிக்கப்பட்டுள்ளதாக சிரிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் இத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மேலும் விமானங்களை வானில் தாக்கி அழிக்கும் ஏவுகணை சிரியாவில் இருந்து ஏவப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் ப…
-
- 0 replies
- 505 views
-
-
2003 இல் சதாம் குசைன் அணுகுண்டு உட்பட மனிதப் பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று கற்பனைக் கதை கட்டிக்கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்து எண்ணை வளத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க, பிரித்தானிய ஆக்கிரமிப்பு இராணுவங்களில் பஸ்ரா என்ற தென் ஈராக்கிய நகரில் நிலை கொண்டிருந்த பிரித்தானிய இராணுவம் அங்கிருந்து முற்றாக வெளியேறிக் கொண்டுள்ளது. பிற இடங்களில் இருந்தும் மெது மெதுவாக வெளியேறி வருகின்றது. பாஸ்ராவை விட்டு ஓடும் பிரித்தானிய இராணுவம். பிரித்தானிய இராணுவ வெளியேற்றத்தை ஈராக்கியப் போராளிகள் தங்கள் வெற்றியாகக் கொண்டாடி வரும் அதேவேளை தாங்கள் வெளியேறி வரும் பகுதிகளில் தங்களால் பயிற்றப்பட்ட ஈராக்கிய கூலிப்படைகளை பிரித்தானிய இராணுவம் நிறுத்தி வருகின்றது. …
-
- 2 replies
- 901 views
-
-
துனிஷீயா, எகிப்து, லிபியா ஆகிய அரபுநாடுகளில் மக்கள் ஒன்று திரண்டு நீண்ட கால சர்வாதிகாரிகளைத் துரத்தியும், வீழ்த்தியும் புரட்சி செய்தனர். இந்தப் புரட்சி ‘அரபு வசந்தம்’ என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. பாக்கிஸ்தானிலும் அத்தகைய மக்கள் புரட்சி காலத் தேவையாக உள்ளது என்று தஹ்ரீக்கெ இன்சாஃப் கட்சித் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் அணித்தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார். லாஹுரில், மினாரே பாக்கிஸ்தான் என்னுமிடத்தில் கூடிய 50,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களிடையே, பேரணியில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். “மாற்றத்தை முன்னெடுப்போம்” என்றொரு முழக்கத்தைப் பற்றிக்கொண்ட இம்ரான்கான், “இந்த நாடு, திருடர்களிடமிருந்தும், சுரண்டல்வாதிகளிடமிருந்தும், ஊழல்பேர்வழிகளிடமிருந்த…
-
- 1 reply
- 764 views
-
-
ஒரு பெண் நான்கு குழந்தைகளின் உயிருடன் விளையாடலாமா? குழந்தை பெற்ற பெண்ணுக்கு கண்டனம் [ வியாழக்கிழமை, 18 யூன் 2015, 08:23.51 மு.ப GMT ] ஜேர்மனியில் 65 வயதில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த அன்கிரட் ரானிக்( 65) என்பவர் கடந்த மாதம் செயற்கை கருத்தரிப்பு மூலம் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பெற்றெடுத்தார். ஏற்கனவே 13 குழந்தைகளை பெற்ற இந்த பெண், உக்ரைன் சென்று கருத்தரிப்பு செய்து கொண்டார். இவருக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே 'சிசேரியன்' மூலம் மூன்று ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தைகளின் எடை 1.4 - 2.1 பவுண்டு வரை இருந்தது. கடந்த ஒரு மாதமாக ஒரு ஆண் கு…
-
- 0 replies
- 288 views
-
-
இரு வாரங்களுக்கு ஒரு மொழி வீதம் வழக்கொழிந்து வரும் உலக மொழிகள் [22 - September - 2007] [Font Size - A - A - A] உலகம் முழுவதிலும் வழக்கத்திலுள்ள 7000 மொழிகளில் இரு வாரங்களுக்கு ஒரு மொழிவீதம் அழிவடைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியா, சேர்பியா மற்றும் அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநில கிராமங்களின் மொழிகள் அழிவடைந்துவரும் அதேவேளை, இதற்கு பாரம்பரியத்திற்கும் வரலாற்றிற்கும் உருக்கொடுக்கும் மக்கள் மரணமடைந்து வருவதே காரணமென ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அருகிவரும் மொழிகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமொன்று அழிவடையும் ஆபத்தை நெருங்கியுள்ள மொழிகளில் மிகவும் முக்கியமான 5 மொழிகள் உள்ளடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. மொழிகளை இ…
-
- 0 replies
- 866 views
-
-
டுபாயில் பிரித்தானிய பெண்ணிற்கு சிறைதண்டனை! டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரிற்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த 55 வயதான லாலெ ஷ்ரவேஷ், தனது கணவரின் இறுதிச்சடங்கிற்காக டுபாய் சென்றுள்ளார். இதன்போது அவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு தனது கணவர் மறுமணம் புரிந்த ஒளிப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட்ட போது, ஷ்ரவேஷ் பகிர்ந்த கருத்துக்கள் குறித்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஷ்ரவேஷிற்கும் அவரது கணவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆனது. இதன்போது ஒரு எட்டு மாத காலம் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஷ்ரவேஷ் இருந்துள்ளார். எனினும் விவாகரத்தானதும் பிரித்தானியாவிற்கு தனது மகளுடன் திரும்பியுள்ளார். இந்தநிலையில் தனது கணவர…
-
- 0 replies
- 448 views
-
-
Published By: RAJEEBAN 17 MAY, 2024 | 12:41 PM ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிடவேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. தென்னாபிரிக்க சட்டத்தரணிகள் எழுத்துமூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏழு மாத காசா யுத்தம் 35000 பேரை கொலை செய்துள்ளதுடன் காசாவை தரைமட்டமாக்கியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். துயரம் என்பது மிகமோசமானதாக காணப்படுவதால் உணவு மருந்து போன்றவற்றை காசாவிற்குள் கொண்டு செல்வதற்கு யுத்தநிறுத்தம் அ…
-
- 1 reply
- 306 views
- 1 follower
-
-
நியூசிலாந்து பிரதமர் தனது காதலரை நிச்சயதார்த்தம் செய்தார் ! நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டேர்னுக்கும் அவரது நீண்ட நாள் காதலரும் தொலைக்காட்சி அறிவிப்பாளருமான கிளார்க் கேபோர்டுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வைப்பவமொன்றில் இருவரும் வைர மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்கள். உயிர்த்த ஞாயிறு விடுமுறையின் போது இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பிரதமர் ஜசிந்தாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களுக்கு பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.குழந்தைக்கு நெவி தி அரோஹா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே பதவியில…
-
- 5 replies
- 954 views
-
-
வியட்நாமில் உருவாக்கப்பட்டு வரும் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை! தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை வியட்நாமில் உருவாக்கப்பட்டு வருகின்றது. சுமார் 72 மீட்டர் உயரத்தில் ‘புத்தா அமிதாபா’ என்ற புத்தர் சிலையே இவ்வாறு உருவாக்கப்பட்டு வருகின்றது. 2015 இல் ஆரம்பமாகியிருந்த குறித்த சிலையின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலையில் மொத்தமாக 13 மாடிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதில் 12 மாடிகளுக்குச் சுற்றுப்பயணிகள் செல்ல முடியும் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை, வெண்கலத்தால் செய்யப்பட்ட மிக உயரமான புத்தர் சிலையும் வியட்நாமிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews…
-
- 4 replies
- 1.6k views
-
-
சிரியாவில் தொடரும் வன்முறைகளால் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, சிரிய அதிபர் பஷர் அல் அசாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சிரியாவில் அதிபர் அசாத்தை எதிர்த்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மக்கள் போராடி வருகின்றனர். அரபு லீகின் பிரதிநிதிகள், சிரியாவில் உள்ள நிலவரத்தை ஆய்வு செய்து வருகின்றனர். அரபு லீக் குழு வந்த பின்பும் கூட மக்கள் மீதான சிரிய ராணுவத் தாக்குதல்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், லெபனான் எல்லை அருகில் உள்ள ஜபாதானி என்ற இடத்தில், எதிர் தரப்பு வீரர்களுக்கும், சிரிய ராணுவத்திற்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இரு தரப்பினரும் அந்நகரின் தெருக்களில் இருந்து விலக சம்மதித்துள்ளனர். …
-
- 0 replies
- 360 views
-
-
தனது அவமானத்தை மறைக்க பவுத்தனாக மாறிக்கொண்ட தமிழர் இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியில்த்துறையில் பட்டம் பெற்றவர். 1995 யாழ் ரிவிரெச இராணுவ நடவடிக்கையின்போது வன்னிக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்தவர். அங்கிருக்கும் காலத்தில் ஏற்கனவே மணம் முடித்த குடும்பப் பெண் ஒருவருடன் ஏற்பட்ட நெருக்கத்தினால் அவரையும் கூட்டிக்கொண்டு கண்டிக்கே வந்து சேர்ந்துவிட்டார். அப்பெண்ணின் கணவரோ அக்காலத்தில் மத்திய கிழக்கு நாடொன்றில் வேலை செய்துவந்தார். நடந்தது கேள்விப்பட்டு ஓடோடி வந்த அவருக்கு அவமானமும் ஏமாற்றமுமே கிடைத்தது. வேறு வழியின்றி அவர் வந்த வழியே இன்னொரு நாடொன்றிற்குப் போய்ச் சேர்ந்துவிட்டார். முதல் கணவன் மூலம் கிடைத்த இரு பிள்ளைகளுடன் தனது காதலனின் கை ச…
-
- 3 replies
- 992 views
-
-
விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தொடக்கம்! விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் மீதான வழக்கை விசாரிப்பதற்காக பிரிட்டன் நீதிமன்றம் ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இவர் மீது பெண்களை துன்புறுத்தியது உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் பல்வேறு நாடுகளின் ரகசிய தகவல்களை வெளியிட்டதும்... இவர் மீதான குற்றத்திற்கு காரணமாக அமைகின்றது. தன் மீதான வழக்குகள் குறித்து அசாஞ்சே கூறுகையில், அனைத்து குற்றச்சாட்டுகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. எனக்கும், இந்த வழக்குகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. என்னை பிரிட்டனை விட்டு சுவீடனுக்கு நாடு கடத்தியது சட்டவிரோதமான நடவடி…
-
- 0 replies
- 368 views
-
-
பாலத்தீனியர்களின் தலைநகரான ஜெருசேலத்தில் தொடர்மாடி யூதக் குடியிருப்புகளை அமைக்கவுள்ளதாக இல்ரேலிய அரசாங்கம் அறித்துள்ளது. ஜெருசேலத்தின் கிழக்கே உள்ள ஹர் ஹோமா என்ற பகுதியல் 500 வீடுகளையும், மாலேஹ் ஆதுமிம் பகுதியில் 240 வீடுகளைக் கட்டவும் இஸ்ரேலிய அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. கோபத்துக்குகு உள்ளாகிய பாலஸ்தீனிய அரசியல் தலைவர்கள் குடியேற்றத் திட்டங்கள் எதிர்காலத்தில் பேச்சு வார்த்தைகளைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஜெருசேலம் விவகாரகங்களுக்கான அமைச்சர் ஜெருசேலம் பகுதியில் குடியேற்றங்களை இஸ்ரேல் அரசாங்கம் அமைக்காது என ஒருபோதும் கூறியதில்லை எனத் தெரிவித்துள்ளார். pathivu.com
-
- 0 replies
- 695 views
-
-
"துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ எஸ். ராமசாமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை, பிரதமர் மோடி,முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பா.ம.க. தலைவர் ராமதாஸ், விடுதலை. சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் என்.சி.பி.வடிவேல் உள்ளிட்ட முக்கியக் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். கடந்த ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்றுவரும் சோ ராமசாமியின் உடல் நிலை மிகவும…
-
- 13 replies
- 2.5k views
-
-
சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா வான் வழி தாக்குதல்: அதிபர் புதினுக்கு நாடாளுமன்றம் அதிகாரம் உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்டுள்ள சிரியாவில் அரசுக்கு ஆதரவாக வான் வழி தாக்குதல் நடத்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அந்நாட்டு நாடாளு மன்றம் நேற்று அதிகாரம் வழங்கியது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக ஐ.எஸ்.தீவிரவாதிகளும் அமெரிக்க ஆதரவு பெற்ற புரட்சிப் படையினரும் கடந்த 4 ஆண்டு களுக்கும் மேலாக போரிட்டு வருகின்றனர். இதில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், சிரியாவில் அரசுக்கு ஆதரவாக வான்வழி தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா தனது ராணுவத்தை அனுப்ப முடிவு செய்துள்ளது.…
-
- 0 replies
- 655 views
-
-
கறுப்பின முதல் விண்வெளி வீரர் – கனவு நனவாவதற்கு முன் விபத்தில் உயிரிழந்தார்! தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 30 வயது மண்டலா மசெக்கோ (Mandla Maseko) என்பவர் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் ஆபிரிக்கர் என்ற பெருமையைப் பெறவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது அந்த விருப்பம் நிறைவேறுவதற்குள் மோட்டார் சைக்கிள் விபத்தில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மசெக்கோ கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தென்னாபிரிக்க வான் படையைச் சேர்ந்த அவர், கடந்த 2013 ஆம் ஆண்டில் 10 லட்சம் பேருடன் போட்டியிட்டு, அமெரிக்காவின் விண்வெளிக் கழகத்தில் இடம்பிடித்தார். 23 பேருக்கு மட்டுமே அந்தக் கழகத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மசெக்கோவ…
-
- 1 reply
- 545 views
-
-
சீனாவுக்கு 'அதியுச்ச திமிர்' என்கிறது அமெரிக்கா சிரியாவின் விவகாரத்தில் சீனா எடுத்த நிலைப்பாட்டை ''அதியுச்ச திமிர்' என்று விமர்சித்த அமெரிக்கக் கருத்தை சீனா மறுதலித்திருக்கிறது. இராக்கில் ஏற்பட்ட அனுபவங்களுக்குப் பிறகு அரபு மக்களுக்காகப் பேச அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தாளில் கருத்து வெளியாகியுள்ளது. சிரியா குறித்த ஐநா தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ வெட்டு வாக்கை பயன்படுத்தியதை, ''வெறுக்கத்தக்கது'' என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கிலாரி கிளிண்டன் ஒரு வெளிப்படையான அறிக்கையில் விமர்சித்ததை அடுத்து இந்தக் கருத்து வந்திருக்கிறது. இரத்தக்களரியை முடிவுக்கு கொண்டுவருவததற்கு சிரிய அதி…
-
- 0 replies
- 657 views
-
-
சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூரில் இன்று காலை ஒரு திருமண விழா நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதா வது:- ஒவ்வொரு மனிதருக்கும் தாயே உயிர். அதனால்தான் நாம் மொழியைக்கூட தாய் மொழி என்கிறோம். என்றும் தாயை மதிக்க வேண்டும். பெண்களை யாரும் அடிமை யாக நடத்தக்கூடாது. பேசும் தெய்வம் தாய் தான். தாய் - தந்தையருக்கு என்றும் அன்பு செலுத்த வேண்டும். குடிப்பழக்கம் மோச மானது. மதுவால் நாட்டுக் கும், வீட்டுக்கும், உயிருக் கும் கேடு என்று எழுதி வைத்துவிட்டு அரசே மதுபான கடைகளை ஏற்று நடத்துகிறது. என் குடும்பத்தில் 2 தம்பிகள் குடிப்பழக்கத்தால் அல்பஆயுசில் போய் சேர்ந்து விட்டார்கள். குடிகாரர்களுக்கு யாரும் பெண் கொடுக்காத…
-
- 15 replies
- 2.7k views
-
-
சைபீரிய விமான விபத்தில்.... 31 பேர் பலி. Beim Absturz einer Turboprop-Maschine in Westsibirien (Russland) sind am Montag mindestens 31 Menschen ums Leben gekommen. Insgesamt waren nach Angaben der Fluggesellschaft Utair 43 Menschen an Bord - zwölf Insassen des Flugzeugs vom Typ ATR-72 sollen das Unglück nahe der Stadt Tjumen rund 2000 Kilometer östlich von Moskau schwer verletzt überlebt haben. T- online இணையத்திலிருந்து.
-
- 2 replies
- 383 views
-
-
இலக்கு தவறியது ஆளில்லா விமானம்? ஆப்கானில் 30 பொதுமக்கள் பலி ஆப்கானிஸ்தானின் படையினரும் அமெரிக்காவும் இணைந்து மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதல் காரணமாக 30ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஐஎஸ் அமைப்பின் மறைவிடங்களை இலக்குவைத்து புதன்கிழமை இரவு தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் எனினும் தற்செயலாக இவை பைன் தோட்டமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தோட்டமொன்றில் ஆளில்லா விமானங்களின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது இதன் காரணமாக 30ற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்…
-
- 0 replies
- 475 views
-
-
குடியேறிகளுக்கு எதிரான அதிரடியான கருத்துகளை சொல்லிவருபவர் டிரம்ப்.முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதிலிருந்து தடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக வர முயற்சிக்கும் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து, பல தரப்பிலிருந்தும் கண்டனங்களை ஈர்த்துள்ளது.அமெரிக்கா மீதான ஒரு வெறுப்புணர்வை பல முஸ்லிம்கள் பேணுவதாகவும், இந்த அச்சுறுத்தலுக்கான காரணத்தை அதிகாரிகள் கண்டறியும்வரை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்துக்கள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கும் விழுமியங்களுக்கும் முரணானது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இவரது போட்டியாளரான குடியரசு கட்சியின் ஜெஃப் புஷ், இவர…
-
- 2 replies
- 758 views
-
-
அமெரிக்க தடையையும் மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவோம் – துருக்கி அறிவிப்பு அமெரிக்க தடையையும் மீறி ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை துருக்கி தொடர்ந்தும் வாங்கும் என அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார். ஈரானுடன் உறவை முறித்து கொள்வது என்பது எங்களால் முடியாத ஒன்று என்றும் ஈரானிடமிருந்து தொடர்ச்சியாக தாங்கள் கச்சா எண்ணெய்யை வாங்கவுள்ளதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். எனினும் அமெரிக்க அச்சுறுத்தல் காரணமாக தனியார் நிறுவனங்கள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அஞ்சுவதாகவும் எர்டோகன் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவின் அச்சுறுத்தலை மீறியும் துருக்கி தொடர்ந்து ஈரானுக்கு தனது ஆதரவை அளித்து வருகின்றது. அமெரிக்க ஜன…
-
- 0 replies
- 396 views
-
-
ஜப்பானில் இயங்கிவந்த கடைசி அணு உலையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அணு சக்தி இல்லாத ஜப்பானை வரவேற்கும் பேரணியில் 5000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர் 2011 மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமிப் பேரலையால் ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்த அணு உலைகள் உருகிப்போன சம்பவத்தை அடுத்து ஜப்பான் மேற்கொண்டுவரும் பாதுகாப்பு ஏற்பாட்டின் ஓர் அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹொக்கொய்டோ நிர்வாக எல்லையில் அமைந்துள்ள டோமாரி அணுமின் நிலையத்தில் இயங்கிவந்த மூன்றாவது அணு உலைதான் பழுதுபார்க்கும் பணிக்காக இப்போது மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜப்பான் கடந்த 40 ஆண்டுகளில் முதல்தடவையாக அணு மின்சாரமின்றி இயங்குகின்றது. கடந்த ஆண்டுவரை, ஜப்பான் அதன் மின்…
-
- 11 replies
- 1.1k views
-
-
இத்தாலி தனது 2025 வேலை விசா திட்டத்தின் கீழ் 1,65,000 வேலை விசாக்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. கூடுதலாக 10,000 விசாக்கள் பராமரிப்பு பணியாளர்களுக்காக (caregivers) ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் Decreto Flussi திட்டத்தின் கீழ், வேலை விசாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. மேலும், இந்த விசா முறைமையை எளிதாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாலியில் தொழிலாளர் பற்றாக்குறை, முதியோர் அதிகரிப்பு, குறைந்த பிறப்பு விகிதம் போன்ற காரணங்களால் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, பல துறைகளுக்கு வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை ஈர்ப்பதே இத்தாலி அரசின் நோக்கமாகும். தொழிலாளர் தேவை அதிகரித்துள்ள முக்கிய துறைகள்: மருத்துவம்: செவிலியர்கள், மருத்துவ உதவியாளர…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-