உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26854 topics in this forum
-
வீதிக்கு வந்த குடும்பச் சண்டை 1971 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் வெற்றிபெறும் தி.மு.க. தோல்வியைத் தழுவும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில் மிருக பலத்துடன் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றது தி.மு.க. இதையடுத்து "தி.மு.க.வை இனி யாராலும் அழிக்க முடியாது. தி.மு.க. வினரே அதை செய்ய நினைத்தால் தவிர" என அப்போதைய ஊடகங்கள் விமர்சனம் செய்தன. அந்த விமர்சனத்திற்கு தற்போது வடிவம் கிடைத்துள்ளது. "என் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தொடர்ந்து 24 மணிநேரம் கூட நீடித்ததில்லை. அப்படியே நீடித்தாலும் அதை தீப்பந்தம் கொண்டு சுட்டுப் பொசுக்குபவர்கள் தொலைவில் இருக்கும் எதிரிகளாகவும் இருக்கலாம். அவர்கள் அதனை செய்ய தாமதமானால் அருகிலிருக்கும் அன…
-
- 2 replies
- 1.1k views
-
-
வீதியில் அழுத சிறுமியின் ஒளிப்படத்திற்கு சர்வதேச விருது! அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் சிறுமி அழுது கொண்டிருக்கும் ஒளிப்படத்திற்கு உலக பத்திரிக்கை ஒளிப்பட விருது கிடைத்துள்ளது. கடந்த வருடம் ஜுன் மாதம் 12ஆம் திகதி, மெக்ஸிகோ – அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் சிலரைக் கைது செய்தனர். கைதான பெண் ஒருவர் தன் மகளை அங்கேயே விட்டுவிட்டு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களின் வாகனத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் அக்குழந்தை இரவு முழுவதும் அதே இடத்தில் அழுது கொண்டு இருந்தது. இக்காட்சியை அந்நாட்டு ஒளிப்பட கலைஞர் ஜோன் தன் கேமராவில் படமாக்கினார். உலகெங்கிலுமிருந்து சுமார் 4738 கலைஞர்கள…
-
- 0 replies
- 574 views
-
-
வீதியோர கடைகளில் விற்கப்படும் பூனை கறி பிரியாணி: - அதிர வைக்கும் சம்பவம்! [Monday 2016-10-31 17:00] சென்னை ரோட்டோர கடைகளில் விற்கப்படும் உணவுகளில் பூனை கறி பயன்படுத்தி வருவது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.விலங்கு உரிமை ஆர்வலர்கள் பல்லாவரம் பகுதி இளைஞர்களின் உதவியோடு பூனைகள் இறைச்சிக்காக பயன்படுத்துவதை வீடியோவாக பதிவு செய்து ஆதாரத்துடன் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.குறித்த வீடியோவில் பூனைகளை உயிருடன் கொதிக்கும் தண்ணீரில் முக்கி கொன்று தோலை உரித்து இறைச்சிக்காக பயன்படுத்துவது பதிவாகியுள்ளது. விலங்கு உரிமை ஆர்வலர்கள் கொடுத்த புகாரை தொடர்ந்து பல்லாவரம் பகுதியல் உள்ள ரோட்டோர கடைகளில் பொலிசார்…
-
- 4 replies
- 873 views
-
-
வீதியோர குண்டு வெடித்ததில் 14 பாகிஸ்தான் வீரர்கள் பலி A ROADSIDE bomb has killed at least 14 Pakistani soldiers and injured 25 others in a lawless tribal area bordering Afghanistan, officials say. The improvised explosive device hit a military convoy in Dosali village in the troubled North Waziristan tribal district, a stronghold of Taliban militants, a senior military official said on Sunday. News.com பாகிஸ்தான் வீரர்கள் மீது Waziristan பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கு
-
- 2 replies
- 575 views
-
-
தமிழகத்தை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார். அவருக்கு மத்திய அரசு சுதந்திர தின விழாவில் அசோக் சக்ரா விருது வழங்கி சிறப்பிக்க உள்ளது. சென்னை கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன், கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை ஆஃபீசர்ஸ் அகாடமியில் பயின்று, பின் ராணுவத்தில் சேர்ந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள சோஃபியான் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் ராணுவ மேஜராக நியமிக்கப்பட்டார். தீவிரவாதிகள் அச்சுறுத்தல்களை துச்சமாக எண்ணி திறமையாக போரிட்டு உயரதிகாரிகளின் பாராட்டைப் பெற்றவர். அவர் தனக்கு கீழ் உள்ள படையினரை வழிநடத்துவதில் திறமை மிகுந்தவர். இந்நிலை…
-
- 7 replies
- 474 views
-
-
கருணை மனுவை நிராகரிக்க மிக அதிகமான காலதாமதம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி, இந்திய உச்சநீதிமன்றம் சந்தனக் கடத்தல் வீரப்பன் "கூட்டாளிகள்" நால்வர் உள்பட 15 பேரின் மரண தண்டனையினை இன்று செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது. இதன் விளைவாக மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய அந்நால்வரின் மரணதண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. தலைமை நீதிபதி சதாசிவம் அடங்கிய அமர்வு, இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாலும் சம்பந்தப்பட்டவரின் தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். மேலும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை குற்றவாளிக்கும் அவரது உறவினர்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும், மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை …
-
- 0 replies
- 338 views
-
-
என்னை துப்பாக்கி முனையில் மிரட்டி கல்யாணம் செய்து கொண்டார் வீரப்பன். நான் அவரை விருப்பப்பட்டு கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று அவரது மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார். வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மீது கர்நாடக போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்திருந்தனர். போலீஸ் எஸ்.பி.ஹரிகரன் மற்றும் போலீசார் வெடிகுண்டு வைத்து கொன்ற வழக்கும் இதில் உள்ளன. நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் தொடர்பாக முத்துலட்சுமியை போலீசார் கைது செய்து மைசூர் சிறையில் அடைத்து உள்ளனர். ஒரு வருடமாக அவர் ஜெயிலில் இருக்கிறார். வழக்கு விசாரணைக்காக அவரை சாம்ராஜ்நகர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் வீரப்பனை விரும்பி திருமணம் செய்யவில்லை. …
-
- 3 replies
- 1.8k views
-
-
மைசூர்: சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல வீரப்பனின் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக போலீசார் நேற்று நள்ளிரவு திடீரென கைது செய்தனர். மாதேஸ்வரன் மலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் இன்று அவரை மைசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். முத்துலட்சுமி மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் ஆர்.சி. பிளாண்ட் பகுதியில் வசித்து வருகிறார். மேட்டூர் கொளத்தூர் அருகே புதைக்கப்பட்டுள்ள வீரப்பனுக்கு அங்கு நினைவிடம் கட்ட சில நாட்களுக்கு முன் பூமி பூஜை நடத்தினார் முத்துலட்சுமி. இந் நிலையில் நேற்றிரவு தனது தந்தை அய்யண்ணனுடன் இருந்த முத்துலட்சுமியை கர்நாடகா போலீசார் திடீரென கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்றனர். பழைய வழக்குகளில் மைசூர் கோர்ட்ட பிறப்பித்த பிடி…
-
- 4 replies
- 1.3k views
-
-
பிரபல மலையாள நடிகர் கிஷோர் வீரப்பனாகவும், அவரைச் அதிரடிப் படை மூலம் சுட்டுக்கொண்ட விஜயகுமார் ஐபிஸாக அர்ஜூனும் நடித்துள்ள படம் 'வனயுத்தம்.’ இந்தபடத்தை குப்பி, காவலர் குடியிருப்பு படங்களின் மூலம் உண்மைச் சம்பவங்களை படமாக்கிய ஏ.எம்.ஆர் ரமேஷ் இயக்கியிருகிறார். உண்மையில் இந்தப் படத்துக்கு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிதான் தடை வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் தடைவாங்கியிருப்பது கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வனயுத்தம் படத்தின் கன்னடப் பதிப்பான ‘அட்டகாசத்துக்கும்’ தடைகோரிப்பெற்றிருகிறார் கோபால்! முன்னதாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனுவில், "பல ஆண்டுகளாக வீரப…
-
- 0 replies
- 561 views
-
-
பதான்கோட் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தேசிய பாதுகாப்பு படை அதிகாரியை பேஸ்புக்கில் இழிவுபடுத்திய கேரள வாலிபர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரான தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமார், தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவனின் உடலில் இருந்த வெடிகுண்டை செயல் இழக்க முயன்றபோது, அது வெடித்ததில் நிரஞ்சன் குமார் பலியாகியுள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இவர் பெங்களூரில் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ராதிகா பெங்களூரில் மருத…
-
- 0 replies
- 468 views
-
-
ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களுடன் ஆஸ்திரேலிய நடிகை தானியா சயீட்டா, செக்ஸ் வைத்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய டிவி ஸ்டன்ட் ஷோவான ஹூ டேர்ஸ் வின்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தானியா சயீட்டா. இந்தியில் வெளியான மிஸ்டர் பிளாக், மிஸ்டர் ஒயிட் ஆகிய படங்களிலும் சயீட்டா நடித்துள்ளார். இதனால் அவரை பாலிவுட் நடிகை என்றே ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இதுதவிர பே வாட்ச் தொடரிலும் தலை காட்டியுள்ளார். இங்கிலாந்து டிவி நாடகமான மிஷன் இம்பிளாசிபிள் தொடரிலும் நடித்துள்ளார். சயீட்டா தற்போது பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நாட்டுவதற்காக சென்றுள்ள ஆஸ்திரேல…
-
- 2 replies
- 2.6k views
-
-
இந்தியன் பேட்மிண்டன் லீக் தொடரின்போது டெல்லி ஸ்மாஷர்ஸ் வீராங்கனைகளை ஒரு போட்டியி்ல விளையாட விடாமல் தடுத்தது தொடர்பாக முன்னணி வீராங்கனை ஜுவாலா கட்டாவிடம் விசாரணை நடத்த ஐபிஎல் அமைப்பு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஐபிஎல் அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தவுள்ளது. பெங்களூரில் ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த போட்டியில் விளையாட விடாமல் டெல்லி வீரர்களை ஜுவாலா தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பங்கா பீட்ஸ் அணிக்கு எதிரான போட்டி இது. இதில், காயமடைந்த வீரர் ஹூ யூன்-க்குப் பதில், ஜான் ஓ ஜோர்ஜென்சனை சேர்க்க அந்த அணி முயன்றது. இதற்கு ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் இந்த மாற்றத்தை ஜுவாலா விரும்பவில்லை. மாற்றக் கூடாது என்று கோரிக்கை வைத்தார். மேலும் நமது கோரிக்கை…
-
- 0 replies
- 519 views
-
-
உலகத்தின் நாணயம் வழங்கும் தொகையில் அமெரிக்க நாணயத்தின் அளவு தொடர்ச்சியான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இன்று உலகின் நாணயச் சந்தையில் ஆறு ரில்லியன் டொலர்கள் பெறுமதியான பணத்தொகை புழக்கத்திலுள்ளது. அதன் 62 வீதத்தை இன்றும் அமெரிக்க டொலர்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அமெரிக்க டொலர்களின் தொலை 3.2 ரில்லியன் ஆகும். இருந்த போதும் அமரிக்க டொலர் பதினைந்து வருட தொடர் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஜப்பானிய யென், சீன யுவான், சுவிஸ் பிராங் ஆகிய நாணயங்கள் சந்தையை ஆக்கிரமித்து வரும் அதேவேளை வேறு நாணயங்களும் சந்தையில் அமரிக்க நாணயத்தை நிரப்பி வருவதாக ஐ.எம்.எப் தெரிவிக்கின்றது. அமெரிக்க மக்களின் பெரும்பன்மையினர் நம்பவில்லை என்றாலும் டொ…
-
- 1 reply
- 535 views
-
-
ரூபிளின் மதிப்பில் வீழ்ச்சி, பணவீக்கம் அதிகரிப்பு, நெருக்கடியில் பொருளாதாரம் ரஷ்ய நாணயமான ரூபிலின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக இதுவரை இல்லாத மோசமான வீழ்ச்சி கண்டுள்ளது. 60 ரூபில் சேர்ந்தால்தான் 1 அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு முதல் முறையாக ரூபில் வீழ்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் டாலருக்கு எதிரான ரூபிலின் மதிப்பு 45 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. ரஷ்ய மத்திய வங்கி தனது நாணயத்தை ஸ்திரப்படுத்த முயற்சிகளை எடுத்தாலும், அது சாத்தியப்படவில்லை என்று கூறுகிறார் பிபிசியின் பொருளாதார செய்தியாளர். ரஷ்யாவின் முக்கிய ஏற்றுமதிகளில் ஒன்றான கச்சா எண்ணெயின் விலை உலகளவில் விழுந்துள்ளதும், உக்ரைனில் ஏற்பட்ட மோதல்களால், ரஷ்யாவுக்கு எதிரான சர்வதேசத் தடைகள் காரணமாக பங்குச் ச…
-
- 0 replies
- 565 views
-
-
வீழ்ந்தது ஐ.எஸ் சாம்ராஜ்யம்: அல்-பக்தாதி மரணமடைந்ததாக சிரிய போர் கண்காணிப்பகம் அறிவிப்பு சிரியா மற்றும் ஈராக் நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி ராணுவத்தினரின் வான் ஏவுகணை தாக்குதலில் மரணமடைந்ததாக சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. டமாஸ்கஸ்: சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ (சிரியா மற்றும் ஈராக்கில் நாடு கடந்த இஸ்லாமிய ஆட்சி) என்ற ஆங்கில வார்த்தையின் ச…
-
- 0 replies
- 689 views
-
-
சீனாவின் வுகான் நகரத்தில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை விட ஐம்பது வீதம் அதிகம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வுகானில் கொரோனா வைரஸ் காரணமாக 2579 பேரே உயிரிழந்தனர் என தெரிவித்திருந்த அதிகாரிகள் இன்று மேலும் 1290பேரை உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதன் காரணமாக வுகானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3869 ஆக அதிகரித்துள்ளது கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய ஆரம்பநாட்களில்வைத்தியசாலைகளில் நிலவிய பற்றாக்குறைகள் மருத்துவ பணியாளர்களின்பற்றாக்குறைகள் காரணமாக சில மருத்துவமனைகள் சீனாவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்துடன் உரிய தொடர்புகளை ஏற்படுத்தவில்லை என சீனாவின் அரச ஒலிபரப்புஸ்தாபனமான சிஜிடின் தெரிவித்துள்…
-
- 4 replies
- 646 views
-
-
வுகான் சந்தையில் உருவாகவில்லையா கொரோனா வைரஸ்?- விஞ்ஞானிகள் கருத்தால் புதிய குழப்பம் கண்ணுக்கு தெரியாத இந்த கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே? சீனாவின் மத்திய நகரமான வுகானில் உள்ள விலங்குகள் சந்தையில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி இந்த வைரஸ் முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த வைரஸ் காட்டுத்தீ போல பரவத்தொடங்கியதும் அந்த சந்தை மூடப்பட்டு விட்டது. இந்த 5 மாத காலத்தில் சுமார் 200 நாடுகளில் இந்த கொடிய வைரஸ் கால் பதித்து விட்டது. அந்த வகையில், ஏறத்தாழ 57 லட்சம் பேரை உலகமெங்கும் இந்த வைரஸ் பாதித்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்றும் பலன் இன்றி 3 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர…
-
- 0 replies
- 460 views
-
-
வுஹானில் மீண்டும் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் கொரோனா வைரஸின் மையமான சீனாவின், ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் இன்று மீண்டும் பாடசாலைகளுக்கு செல் ஆரம்பித்துள்ளனர். வைரஸ் பரவுவதை தடுக்க வுஹான் நகரமானது ஜனவரி மாதம் முதல் கடுமையாக பூட்டப்பட்டிருந்தது. எவருக்கும் உள்ளேயோ அல்லது வெளியிலோ செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் நகரத்திற்குள் இயக்கம் மட்டுப்படுத்தப்பட்டது. இந் நிலையில் சீனாவில் கொரோனா வைரஸின் பரவலானது முற்றாக குறைந்துள்ளதால் ஏப்ரல் மாதம் முதல் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, எல்லைகள் திறத்தல், உள்நாட்டு பயணம் மீண்டும் தொடங்குதல் மற்றும் சில வணிகங்க நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 462 views
-
-
Published By: SETHU 21 SEP, 2023 | 10:21 AM கொவிட்19 வைரஸ் ஆனது, சீனாவின் வுஹான் நகரிலுள்ள ஆய்வுகூடத்திலிருந்து கசிந்தது அல்ல எனக் கூறுவதற்காக தனது சொந்த ஆய்வாளர்களுக்கு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவரகம் (சி.ஐ.ஏ.)'இலஞ்சம்' வழங்கியதாக சி.ஐ.ஏ.யின் சிரேஷ்ட ஒருவர் அமெரிக்கப் பாராளுமன்றக் குழுவிடம் அண்மையில் சாட்சியம் அளித்துள்ளார். சி.ஐ.ஏ பணிப்பாளர் வில்லியம் பர்ன்ஸுக்கு, அமெரிக்கப் பாராளுமன்றத்தின் இரு தெரிவுக்குழுக்களின் தலைவர்கள் எழுதிய கடிதத்தில் இச்சாட்சியம் குறித்து தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பாராளுமன்றத்தின் கொவிட்-19 பெருந்தொற்று தொடர்பான உப தெரிவுக்க…
-
- 1 reply
- 310 views
- 1 follower
-
-
வுஹான் ஆய்வகத்திலிருந்து கொவிட் கசிவு; அமெரிக்க விசாரணையில் தகவல்! கொவிட் தொற்றுநோய் உலகைப் பேரழிவிற்கு உட்படுத்திய பல ஆண்டுகளுக்குப் பின்னர், வைரஸ் சீனவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் தலைமையிலான ஹவுஸ் செலக்ட் துணைக்குழுவானது 1.1 மில்லியன் அமெரிக்கர்களைக் கொன்ற தொற்று நோய் குறித்த இரண்டு ஆண்டு கால விசாரணையை நிறைவு செய்த பின்னர் மேற்கண்ட அறிவிப்பினை திங்களன்று (2) வெளியிட்டது. AFP செய்தி நிறுவனத்தின்படி, குழுவானது 25 கூட்டங்கள், 30 க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களை மதிப்பாய்வு செய்த பின்னர் அதன் முடிவை எட்டியது. 520 பக்க அறிக்க…
-
-
- 1 reply
- 288 views
-
-
வுஹான் கொரோனா வைரஸ் அறிக்கைகளுக்காக சீன பத்திரிகையாளருக்கு 4 ஆண்டுகள் சிறை கொவிட்-19 பரவலின் ஆரம்ப காலக் கட்டத்தில் வுஹானுக்கு விஜயத்தை மேற்கொண்டு பல உண்மை தகவல்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஜாங் ஜான்னுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜாங் ஜான், ஷாங்காய் நீதிமன்றில் ஒரு குறுகிய விசாரணையின் பின்னர் தண்டனை உறுதி செய்யப்பட்டதாக அவரது பாதுகாப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான ரென் குவானியு செய்தியாளர்களிடம் கூறினார். ஜாங் ஜான், வெடிப்பின் குழப்பமான ஆரம்ப கட்டங்களில் அறிக்கை செய்ததற்காக மோதல்கள் மற்றும் சிக்கலைத் தூண்டுவதற்கும் வழியமைத்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்காககே இந் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சீனாவை சேர்ந்த …
-
- 0 replies
- 404 views
-
-
சீனாவில் நான்ஜிங் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தற்போது ஐந்து மாகாணங்களுக்கும் தலைநகர் பெய்ஜிங் நகருக்கும் பரவ தொடங்கியுள்ளது. வுஹானுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் தொற்று பரவுகிறது என அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. முதன்முதலில் நகரின் கூட்ட நெரிசல் மிகுந்த விமான நிலையத்தில் ஜூலை 20ஆம் தேதியன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அப்போதிலிருந்து இதுவரை 200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்ஜிங் நகரிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ஆகஸ்டு 11ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் நகர் முழுவதும் கொரோனா தொற்று பரிசோதனையை மேற்கொள்ளும் முயற்சியை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள…
-
- 0 replies
- 484 views
-
-
முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில், சிகிச்சையில் இருந்த கடைசி நோயாளியும் குணமடைந்ததாக சீனாவின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் சீனா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பள்ளி, கல்லூரிகள் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இணையதளம் வாயிலாக வகுப்புகள் நடைபெற்றன. இந்நிலையில், கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததையடுத்து, பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட, சீனாவின் தலைநகர் பீஜிங், ஷாங்காய் நகரங்களிலுள்ள நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன. கடைசி நோயாளியு…
-
- 5 replies
- 714 views
-
-
வெங்காய விலை உயர்வு குறித்து பெரியாரிடம்தான் கேட்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி நகைச்சுவையாக பதிலளித்தார். திமுகவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. முதலவரும், திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், பரிதிஇளம் வழுதி, சற்குண பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் சட்டசபை தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் திமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழ…
-
- 2 replies
- 475 views
-
-
பட மூலாதாரம்,WIKICOMMONS படக்குறிப்பு, வெசிலி ஆர்க்கிபோவ் ஒரு முக்கிய ரஷ்ய ராணுவ அதிகாரி ஆவார். 27 ஆகஸ்ட் 2023 அது அக்டோபர் 27, 1962. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரின் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கும் ஆபத்தின் விளிம்பில் உலகம் இருந்தது. அமெரிக்க கடற்கரையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், கியூபாவில் அமெரிக்காவை நோக்கி சோவியத் ஒன்றியம் நிறுத்திருந்த அணு ஆயுத ஏவுகணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி அமெரிக்கா ஒரு நெருக்கடியை உருவாக்கியிருந்தது. அப்போது, இரு நாடுகளின் இராணுவக் கப்பல்களும் தங்கள் கட்டுப்பாட்டைத் தக்கவைக்க ஒரு மூலோபாய சண்…
-
- 0 replies
- 387 views
- 1 follower
-