உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26864 topics in this forum
-
மிக் 21 விமான விபத்தில் விமானி மரணம். 9 மாதத்தில் 7 ஆவது மிக் விமான விபத்தாக இது கருதப்படுகிறது. இவ் விமான விபத்து பஞ்சாப்பில் நடந்தது.
-
- 1 reply
- 1.2k views
-
-
சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளையின் ஏற்பாட்டில் 22-09-2013 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை "சட்டமும் நீங்களும்" இலவச கருத்தரங்கு சிங்கப்பூர் வில்கி சாலையில் அமைந்துள்ள கப்லன் உயர்கல்வி நிலையத்தில் நடைபெற்றது. சிங்கப்பூர் கலைப்பித்தர்கள் கழகத்தின் தலைவரும் வழக்கறிஞருமான நாவரசர் திரு ஆர். கலாமோகன் இக்கருத்தரங்கை நடத்தினார். முதலாளி தொழிலாளி உறவு, வர்த்தக முறைகள், சாலை விபத்து, வேலையிட விபத்து, கடன் விதிமுறைகள், உத்தரவாதக் கையெழுத்து உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை விளக்கினார். கேள்வி பதில் அங்கமும் இடம் பெற்றது. சங்கத்தின் செயலாளர் அப்துல் சுபஹான், வழக்கறிஞர் திரு கலாமோகனுக்கு பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.…
-
- 0 replies
- 345 views
-
-
உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலைப் போலவே நியூசிலாந்தில் ஒரு தாஜ்மஹால் நகலை உருவாக்கும் முயற்சியில் இந்தியர்கள் சிலர் இறங்கியுள்ளனர். 100 கோடி ரூபா செலவில் இந்த 'நகல்' தாஜ்மஹால் உருவாகவுள்ளது. இந்தியாவில் உள்ளதைப் போலவே இந்த தாஜ்மஹால் உருவாகவுள்ளது. நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் இந்த புதிய தாஜ் மஹால் கட்டி எழுப்பப்படவுள்ளது. ஆக்லாந்தின் புறநகரான ஈடன் சே பகுதியிலுள்ள வடக்கு சாலையில்இ அமைந்துள்ள மகாத்மா காந்தி மைய வளாகத்தில் இந்த தாஜ்மஹால் கட்டப்படும். இதுகுறித்து காந்தி மையத்தின் தலைவரான கானு படேல் கூறுகையில்இ "இந்திய கலாசாரம் மற்றும் வரலாற்றின் பிரமாண்டத்தை இந்தப் புதிய தாஜ்மஹால் பிரதிபலிக்கும் இந்தியர்களின் பெருமையையும் இது பறை சாற்றும்" என்றார். இந…
-
- 3 replies
- 917 views
-
-
உபசாரம் பணக்கார கைதிகளுக்கு சிறையில் ‛ராஜ உபசாரம்' கர்நாடகா மாநிலம், பெங்களூருவில், பரபரப்பன அக்ரஹாரா சிறையில், பணக்கார கைதிகளுக்கு ராஜ உபசாரம் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூரு மத்திய சிறை, முதலில், நகரின் மையப்பகுதியான, தற்போதைய சுதந்திர பூங்கா இருக்கும் இடத்தில் தான் அமைக்கப் பட்டிருந்தது. கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, நகருக்குள் போக்குவரத்து நெருக் கடி போன்றவற்றால், 2000 ல், இச்சிறையை, பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு மாற்றினர். சிறையில் முறைகேடு என்பது, காலம், காலமாக சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. சிறைக்கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் பலரும், 'தண்டம்' அழாமல்,…
-
- 1 reply
- 498 views
-
-
கப்பல் கவிழ்ந்த பகுதியில் மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக காவல்துறை மந்திரி செர்ஜ் கெல்லே சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் சுமார் 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல், நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. கடலோர காவல் படையினர் உதவியுடன் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். காணாமல் போன 20 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இதற்கிடையே, மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக காவல்துறை மந்திரி செர்ஜ் கெல்லே ஹெலிகாப்டரில் சென்றார். அவருடன் பாதுகாப்புக்கு போலீசார…
-
- 2 replies
- 448 views
-
-
எப்படி இப்படியா தங்கபாலு காங்கிரஸ் கட்சி தமிழர்களை பாதுகாக்கிறது http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24108 தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் கே.வீ.தங்பாலு, இந்தியாவில் தீவிரவாதம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏன் என்றால் இப்போது உள்ள அரசு காந்திய வழியில் நடத்தப்படும் காங்கிரஸ் அரசு. இந்திரா காந்தி, மகாத்மா காந்தியை எப்படியை தீவிரவாதிகள் கொன்றார்களோ, அப்படித்தான் ராஜீவ்காந்தியும் கொல்லப்பட்டார். இலங்கை தமிழர்களுக்காக நாம் பாடுபட்டோம். ஆனால் இலங்கைத் தமிழர்களே நம்ம தலைவரை கொன்றுவிட்டார்கள். இதை காங்கிரஸ் கட்சியினர் எப்போதும் மறக்க மாட்டார்கள். இந்தியால…
-
- 3 replies
- 794 views
-
-
ஆட்டுமந்தை கூட்டத்தை கட்டுபடுத்த வழி கூறுங்கள்... ஈழ பிரச்சனையிலும் சரி இந்த பிராந்தியத்தின் மற்ற பிரச்சனைகளிலும் மற்ற நாடுகள் தலையிடாமல் இருப்பதற்கு காரணம் பொந்தியாவின் அறிவியல் வளர்ச்சி..அணு ஆயுதவளர்ச்சி ..ரசாயண வளர்ச்சி என்று ஒரு மண்ணும் இல்லை.. பன்னி குட்டி போடுவது போல் மக்கள் சந்தை அல்லது மக்கள் கூட்டம்.. விளம்பரங்கள் மூலம் அவிழ்த்து போட்டு ஆடி .. நுகர்வு வெறியை மக்களிடம் தூண்டி வருகிறது கோகோ கோலா முதல் குண்டூசி வரை எவளாவது அரைகுறையோடு சொன்னால் தான் இங்குள்ள மாக்களுக்கு ஏறுகிறது.. இவ்வாறு அடிமைபடுத்த பட்ட மக்கள் சந்தையை இங்கு வைத்திருக்கும் பன்னாட்டு மாமாக்கள் .. இப்பிராந்தியத்தில் எந்த பிரச்சனையிலும் தலையிடதவாறு மனிதாபிமானமுள்ள அந்தாந்த நாட…
-
- 8 replies
- 1.3k views
-
-
சக்திவாய்ந்த அணுஆயுதமொன்றை வட கொரியா உருவாக்கியுள்ளதா? புதிய படங்களால் பரபரப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் மிகவும் நவீனமான மற்றும் சக்திவாய்ந்த அணுஆயுதமொன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும், அதனை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மீது ஏற்றிச் செல்லமுடியும் என்றும் வட கொரியா தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS/KCNA Image captionபுதிய ஹைட்ரஜன் வெடிகுண்டை கிம் ஜோங்-உன் ச…
-
- 0 replies
- 411 views
-
-
காஷ்மீரில் ராணுவம் நீடிப்பது அல்லடு வாபஸ் பெறுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததை பிரஷாந்த் பூஷண் வாபஸ் பெற்றுக்கொண்டார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரி பேட்டியளித்தார். இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி பிரதேச முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், அது பிரஷாந்த் பூஷணின் தனிப்பட்ட நிலைப்பாடு. கட்சியின் கருத்தல்ல” என்று அறிவித்தார். இறுதியில் தனது கருத்தை மாற்றிக்கொண்ட பூஷண், “காஷ்மீர் மாநிலமானது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதே ஆம் ஆத்மியின் கருத்தாகும். நானும் இதை…
-
- 3 replies
- 424 views
-
-
ஞாயிற்றுக்கிழமை காலை டவுன்டவுனில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு பேரைக் கொன்றவர்களைக் கண்டுபிடிப்பதற்கு சாக்ரமென்டோ காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோருகிறது. 10வது மற்றும் கே தெருக்களுக்கு அருகே ஏற்பட்ட கைகலப்பில் மேலும் 10 பேர் காயமடைந்ததாக சாக்ரமென்டோ காவல்துறை தலைவர் கேத்தரின் லெஸ்டர் தெரிவித்தார். "பல பாதிக்கப்பட்டவர்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அதிகாரிகள் விசாரணை செய்வதால், 9வது ஸ்டம்ப் முதல் 13வது செயின்ட் வரை L St & J St இடையே மூடப்பட்டுள்ளது" என்று சேக்ரமெண்டோ காவல்துறை ட்வீட் செய்தது. "இந்த நேரத்தில் தெரியாத நிலைமைகள். பெரிய போலீஸ் என்பதால் அந்த பகுதியை தவிர்க்கவும் CNN)Sacramento police are asking the public's help in findin…
-
- 6 replies
- 536 views
- 1 follower
-
-
சில மாதங்களுக்கு முன்னால் தமிழகத்தின் எல்லையை கடந்து இந்தியா இருக்கிறதா என பார்க்கப்போகிறேன் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்து, அதற்கான ஒரு இயக்கத்தை நடத்தினார். ஆனால் அவர் தமிழ்நாட்டு எல்லைக்குள்ளாக நிறுத்தி வைக்கப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டார். ஒன்று புரிந்தது, கர்நாடகா இந்தியாவிற்குள் இருக்கிறதா? இந்தியா தமிழ்நாட்டிற்குள் இருக்கிறதா? என்ற கேள்விக்கு இரு தேசிய இனங்களின் பிரச்சனையில் இந்திய தேசியம் ஒன்றும் செய்யமுடியாது. காரணம், என்னத்தான் கட்டிப்போட்டாலும், தேசிய ஒருமைப்பாடு குறித்து தொண்டைக்கிழிய கத்தி தீர்த்தாலும், தமக்கான தேசிய அடையாளத்தை காத்துக் கொள்ள, கன்னட தேசிய இனம் முழு மூச்சுடன் எதிர் தரப்பில் நின்றதை காணமுடிந்தது. அதைத்தொடர்ந்த…
-
- 0 replies
- 692 views
-
-
யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததால், எவரெஸ்ட் சிகரத்தை சுற்றி என்ன சிக்கல்? அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ், எவரெஸ்ட் அடி முகாம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBC/ANBARASAN ஆங் சர்க்கி ஷெர்பா செய்யும் வேலை, உலகின் மிகவும் ஆபத்தான வேலைகளில் ஒன்றாகும், ஆனால் அவர் இந்த அபாயத்தை தனது வேலையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்கிறார். உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களுக்கு கயிறுகள் மற்றும் அலுமினிய ஏணிகளை பொருத்தும் "ஐஸ்ஃபால் டாக்டர்கள்" என்று அழைக்கப்படும் நேபாளத்தின் மிகவும் அனுபவம் வாய்ந்த மலை வழிகாட்டிகளில் ஷெர்பாவும் ஒருவர். மலையில…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
ரஷ்ய போர்க்கப்பலை அழிக்க... அமெரிக்கா உதவி! ரஷ்ய கடற்படை பலத்தின் சின்னமாகத் திகழ்ந்த மாஸ்க்வா கப்பலை, உக்ரைன் இராணுவம் தாக்கி முழ்கடிப்பதற்கு உளவுத் தகவல் மூலம் அமெரிக்கா உதவியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கார தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மாஸ்க்வா கப்பலின் இருப்பிடத்தை உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்க உளவுத் துihன் தெரியப்படுத்தியது. அந்தத் தகவலின் அடிப்படையில்தான் மாஸ்க்வா கப்பலின் மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி மூழ்கடித்தது. இதில், கப்பலின் இருப்பிடத்தைத் தெரியப்படுத்தியது மட்டும்தான் அமெரிக்காவின் பங்காகும். கப்பல் மீது தாக்குதல் நடத்தி மூழ்கடிப்பதற்கான முழு முடிவும் உக்ரைனால் மட்டுமே எடுக்கப்பட்டது’ என…
-
- 1 reply
- 441 views
-
-
நண்பர்கள் தினம் கொண்டாடிய மாணவிகளுக்கு அடி-உதை பஜ்ரங்தளம் தொண்டர்கள் தாக்குதல் ராய்ப்பூர், ஜூலை.3- காதலர் தினம் போல இப்போது நண்பர்கள் தினமும் பிரபலமாகி வருகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் இளைஞர்கள், நண்பர்கள் தினத்தை விமரிசையாக கொண்டாடினார்கள். காதலர் தினம், நண்பர்கள் தினம் போன்றவற்றை கொண்டாட இந்து அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சத்தீஷ்கர் மாநிலம் ராஞ்சியில் நண்பர்கள் தினம் கொண்டாடியவர்கள் மீது பஜ்ரங்தளம் அமைப்பினர் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு உள்ள ஒரு பூங்கா மற்றும் ஓட்டலில் ஏராளமான மாணவிகள் கூடி நண்பர்கள் தினத்தை உற்சாகமாக கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது பஜ்ரங்தளம் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்க…
-
- 2 replies
- 785 views
-
-
காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடுவதை கைவிடுவதாக அர்ஜென்டினா அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS 44 குழு உறுப்பினர்களுடன், இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியை கைவிட்டு விட்டதாக அர்ஜென்டினா கடற்படை தெரிவித்துள்ளது. "தீவிர முயற்சிக்கு பின்னரும், நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை" என கடற்படை…
-
- 0 replies
- 280 views
-
-
தானைத்தலைவர், தமிழ்த்தாயின் தலைமகன், முன்னவர், மூத்தவர், முதல்வர் டாக்டர் கலைஞர் மார்க்சிஸ்டுகள் மீது வெறுப்பையும் சத்துணவு ஊழியர்கள் மீது நெருப்பையும் கக்கியிருக்கிறார். பணி நிரந்தரம் கோரி சத்துணவு ஊழியர்கள் அறிவித்த கோட்டை முற்றுகைப் போராட்டம்தான் அவரது வெறுப்புக்கு காரணம். “கம்யூனிஸ்டுகள் நடத்தும் கிளர்ச்சி எதுவாயினும் அதற்கு ஒரு போர்க்கள முத்திரையை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள். பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள். அதற்கடுத்து மறியல் என்பார்கள். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக முற்றுகை என்பார்கள்… அவர்கள் வைத்த கொள்ளிதான் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதல், அராஜகம், உயிர்ப்பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு எரிகிற காட்சியைப் பார்க்க…
-
- 0 replies
- 374 views
-
-
புதுடில்லி: இன்று பிரதமராக பதவியேற்கும் நரேந்திரமோடி அமைச்சரவையில் 24 பேர் காபினட் அந்தஸ்து கொண்ட மொத்தம் 45 பேர் அமைச்சர்களாகின்றனர். இதில் 11 பேர் இணைஅமைச்சர்களாகவும், 10 பேர் தனிப்பொறுப்பு இணைஅமைச்சர்களாகவும் பதவி வகிப்பர். மாலை பொறுப்பேற்கும் மோடி அமைச்சரவையில் இன்னாருக்கு என்ன பொறுப்புகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான பட்டியல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமராகும் மோடி பாதுகாப்பு துறையை கைவசம் வைத்துக்கொள்வார், காபினட் அந்தஸ்து யாருக்கு ? : சுஷ்மா -வெளியுறவு - , ஜெட்லி - நிதி, ராஜ்நாத்- உள்துறை, நிதின்கட்காரி- போக்குவரத்து, ரவிசங்கர் பிரசாத்- தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை, ராம்விலாஸ்பஸ்வான், ( வேளாண் துறை ) , வெங்கைய…
-
- 1 reply
- 619 views
-
-
யுூகோஸ்லாவியாவின..முன்னால் அதிபர் மிலோசவிக். சிறையில் மரணம் அடைந்து இருக்கின்றார்..ரஷ்யா சென்று சிகிச்ச பெற அனுமதி கோரி இருந்தார் அது மறுக்கப்பட்ட நிலையில்..சிறைக் கூன்டிலேயே மரணம் அடைந்து கானப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன...இவருடைய சிகிச்சைக்கு(ரஷ்யா சென்று) அனுமதி மறுக்கப்பட்டது சரியா? தவறா? யாருமற்ற முறையில் அல்லவா அவர் இறந்த இருக்கின்றார் ஒரு முன்;னாள் அதிபர் இப்படி நடத்தப்பட்டது சரியா?
-
- 16 replies
- 1.9k views
-
-
இன்று அதிகாலை சரியாக 2.40க்கு வீடெல்லாம் அதிர்வு சட்டி பானை விழுவது போல் சத்தம்.மனைவி கடைசி மகள் நானும் ஒரு அறை.அடுத்த அறையில் மற்ற மகளும் கணவனும்.வீடு ஆடி சத்தம் கேட்க மகள் அக்கா என்ற சத்தத்துடன் எழும்பி ஓடினாள்.பின்னால் நாங்களும் ஓட மற்ற மகளும் வந்து பயப்படாதங்கோ இது சிறிய பூமி அதிர்ச்சி என்று சொன்னாள்.சட்டி பானை சத்தம் கேட்டது என்ன தான் நடந்திருக்கும் என்று சமையல் அறையை எட்டி பார்த்தேன்.எல்லாம் அப்படியே இருந்தது.இதெல்லாம் அடிக்கடி நடப்பது தான் போய் படுங்கோ என்று சொன்னதும் போய் படுத்துவிட்டோம். குளிரில் கொஞ்சம் தப்பிவிட்டோம் என்று பார்த்தா இது ரொம்பவும் பயமாக இருக்கு. இலங்கையில் புகையிரதம் ஒவ்வொரு நிலையத்திலுமிருந்து புறப்படும் போது சடார் புடார் என்று பெட்டிகள…
-
- 25 replies
- 1.7k views
-
-
ஐரோப்பிய நாடுகளுக்கான... எரிவாயு விநியோகத்தை, 20 சதவீதமாக குறைத்தது ரஷ்யா! ஐரோப்பிய நாடுகளுக்கு நோர்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் வழியாக மேற்கொண்டு வரும் எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாக ரஷ்யா குறைத்துள்ளது. ஏற்கனவே, வெறும் 40 சதவீத கொள்ளளவு மட்டுமே ரஷ்யா எரிவாயு விநியோகம் செய்து வந்த நிலையில், தற்போது அது மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜேர்மனியின் எரிவாயு வழித்தட ஒழுங்காற்று அமைப்பின் தலைவர் க்ளாஸ் முல்லர் கூறுகையில், ‘நோர்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் வழியாக அனுப்பப்படும் எரிவாயுவின் அளவைக் குறைக்கவிருப்பதாக ஏற்கெனவே ரஷ்யா கூறியிருந்தது. அதன்படி, அந்த வழித் தடம் வழியாக ஜேர்மனிக்கு வரும் எரிவாயு, தினசரி கொள்ளளவில் வெறும் 20 சதவீதம…
-
- 1 reply
- 349 views
-
-
புதுடெல்லி: இலங்கையை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு இலங்கை அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்" என்று கூறினார். பா.ஜனதா கட்சி கூட தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு ஒரு தவறை செய்துள்ளது என்றும், தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார் http://news.vikatan.com/article.php?module=news&aid=29189
-
- 14 replies
- 1.1k views
-
-
-
செல்டிக் புலியின் வீழ்ச்சி! எம். மணிகண்டன் சிங்கப்பூர், ஹாங்காங், தென்கொரியா போன்ற நாடுகளையும் தைவானையும் ஆசியப் புலிகள் என்பார்கள். 1980-களில் இந்த நாடுகளில் தொழில் பெருக்கம் விறுவிறுப்பாக இருந்தது. முடங்கிக் கிடந்த பொருளாதாரம், அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. இந்த நான்குகால் பாய்ச்சலின் வேகத்துக்காக கிடைத்ததுதான் பொருளாதாரப் புலிகள் என்கிற பட்டம். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையையும் இப்போதைய நிலையையும் ஓப்பிட்டுப் பார்த்தால், இது உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பதை ஒப்புக் கொள்ள முடியும். 1990-களின் மத்தியில் ஆசியப் புலிகளின் வேகம் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றைத் தொற்றிக் கொண்டது. அவற்றுள் ஒன்றுதான் அயர்லாந்து. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொ…
-
- 1 reply
- 755 views
-
-
ஐதராபாத்: ஆந்திராவில் புதிய அமைச்சரவை பதவியேற்ற முதல் நாளே சிக்கல் ஆரம்பித்து விட்டது. இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்த இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும் 8 அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆந்திர முதல்வராக இருந்த ரோசய்யா கடந்த வாரம் திடீரென ராஜினாமா செய்தார். உடல் நலம் சரியில்லாத காரணத்தால் பதவி விலகுவதாக ரோசய்யா வெளிப்படையாக தெரிவித்தாலும், ஜெகன்மோகன் ரெட்டி விவகாரத்தையும், தெலங்கானா விவகாரத்தையும் சரியாக கையாளவில்லை என மேலிடம் அதிருப்தி தெரிவித்த காரணத்தினால்தான் ராஜினாமா செய்ததாக ஐதராபாத் வட்டாரங்கள் தெரிவித்தன. இதை தொடர்ந்து இந்த இரண்டு பிரச்னைகளையும் …
-
- 0 replies
- 557 views
-
-
மத்திய அமைச்சர் அழகிரியைச் சுற்றி மாநில மந்திரிகள் இரண்டு மூன்று பேர் உட்கார்ந்திருக்க... ஸ்பெக்ட்ரம் விவகாரம் பேச்சாக எழுந்தது. ''இப்படியே போனால் தி.மு.க. எத்தனை ஸீட் ஜெயிக்கும்?'' என்று ஒரு கிடுக்கிப்பிடிக் கேள்வியை அழகிரி எழுப்பினாராம். ஆளாளுக்கு ஓர் எண்ணிக்கையைச் சொல்ல... ''இவ்வளவு ஸீட்டெல்லாம் வரவே வராது. மிகமிக மோசமா சொற்ப இடங்கள்தான் வரும்!'' என்று சொல்லி அவர் சுட்டிக்காட்டிய கணக்கு, வெளியில் சொல்ல முடியாதது! அழகிரி - ஸ்டாலின் தரப்பு வைக்கும் ஒற்றை வரிக் கோரிக்கை, ''சட்டமன்றத் தேர்தலை தி.மு.க. எதிர்கொள்ளும்போது ஆ.ராசா நம்முடைய கட்சியில் இருக்கக் கூடாது'' என்பதுதான். இந்தத் தகவலை இவர்களது ஆதரவாளர்கள் நாலா பக்கமும் பரப்புகிறார்கள். எல்லா விஷயங்களிலும…
-
- 4 replies
- 1.2k views
-