உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26622 topics in this forum
-
இந்தோனேசிய சிறையில்... தீ விபத்து :குறைந்தது 41 பேர் உயிரிழப்பு இந்தோனேசியாவில் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகரில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். தங்கெராங் சிறையில் இன்று புதன்கிழமை அதிகாலை, பெரும்பாலான கைதிகள் உறங்கிக்கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்த 122 கைதிகள் அங்கு அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த விபத்திற்கு மின்செயலிழப்பே காரணம் என தெரிவிக்கப்பட்டாலும் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்தோனேசிய சிறைகளில் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளமையானது அங்கு தொடர்ச்சியான பிரச்சனையாக காணப்படுகின்ற…
-
- 0 replies
- 327 views
-
-
இஸ்ரேலிய சிறையில் இருந்து தப்பிய 6 பாலத்தீனர்கள் - துருப்பிடித்த ஸ்பூனால் கழிப்பிடத்தில் சுரங்கம் 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, வெளியே வந்த வழி. அருகே வயல் வெளி. இஸ்ரேலில் உள்ள சிறை ஒன்றில் இருந்து சுரங்கம் தோண்டி ஆறு பாலத்தீனர்கள் இரவோடு இரவாக தப்பியுள்ளனர். தப்பியோடிய ஆறு சிறைக் கைதிகளையும் இஸ்ரேலிய அதிகாரிகள் தற்பொழுது தேடிக் கொண்டிருக்கின்றனர். கில்போ சிறைச்சாலையில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையின் கழிப்பிடத்தில் இருந்து சிறையின் சுற்றுச்ச் சுவருக்கு வெளியே உள்ள சாலை வரை நிலத்துக்கு அடியில் சுரங்கம் தோண்டிய அந்தச் சிறைக் கைதிகள்…
-
- 11 replies
- 651 views
- 1 follower
-
-
தலிபான்களின் அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் உதயம் - புதிய தலைவர், அமைச்சர்கள் நியமனம் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான 20 ஆண்டுகால போரில் ஆதிக்கம் செலுத்திய நபர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி, ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தின் தலைவராக ஐ.நா.-ஒப்புதல் பெற்ற முல்லா முகமது ஹசன் அகுந்த் என்பவரை தலிபான்கள் பெயரிட்டுள்ளனர். அத்தோடு தலிபான்களின் இணை நிறுவனர் அப்துல் கனி பரதர் துணைத் தலைவராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலிபான் நிறுவனர் மற்றும் தலைவரான முல்லா உமரின் மகன் முல்லா யாகூப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் உள்துறை அமைச்சர் பதவி சிராஜுதீன் ஹக்கானிக்கு வழங்கப்பட்டது, ஆப்…
-
- 1 reply
- 360 views
-
-
ஆப்கானில் புதிய அரசாங்கம் விரைவில் அறிவிக்கப்படும் - தலிபான் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான செயல்முறை முடிவடைந்து விட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். அதன்படி "இஸ்லாமிய அரசாங்கத்தின் அறிவிப்புக்கான ஆயத்தங்கள் முடிந்துவிட்டன, எனினும் தொழில்நுட்ப சிக்கல்கள் எஞ்சியுள்ளதாக" முஜாஹித் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் புதிய அரசாங்கம் விரைவில் அறிவிக்கப்படும். இருப்பினும் தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் அப்துல் கனி பரதர் புதிய அரசாங்கத்தை வழிநடத்துவாரா என்பதை அந்த செய்தியில் தலிபான் செய்தித் தொடர்பாளர் குறிப்பிடவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு, தலிபான்கள் அரசாங்கப் படைகளுக்கு எதிரான தாக்குத…
-
- 0 replies
- 208 views
-
-
ஆப்கானிடம் அணுகுண்டு உலகிற்கு புதிய ஆபத்து
-
- 0 replies
- 507 views
-
-
ஆப்கானிஸ்தான்: "பஞ்ஷீர் பள்ளத்தாக்கின் முழு கட்டுப்பாடும் எங்கள் வசம்" - தாலிபன் 6 செப்டெம்பர் 2021, 03:10 GMT பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆளுகையை எதிர்க்கும் என்ஆர்எஃப் கிளர்ச்சிக்குழு ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கின் முழு கட்டுப்பாடும் எங்கள் வசம் வந்து விட்டது என்று தாலிபன் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடக்கே உள்ள எல்லைக்கு அருகே அமைந்துள்ளது பஞ்ஷீர் பள்ளத்தாக்கு. தாலிபன் ஆளுகைக்கு எதிரான நடவடிக்கையில் 20 வருடங்களுக்கு முன்பிருந்த அதே நிலைப்பாட்டை அங்குள்ள ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி (என்ஆப்எஃப்) என்ற கு…
-
- 0 replies
- 311 views
-
-
ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதும் விலகிய அமெரிக்கா - 20 ஆண்டு போர், 25 முக்கிய தகவல்கள் பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, 2001 முதல் சுமார் 2400 அமெரிக்க படையினர் ஆஃப்கன் மண்ணில் உயிரிழந்துள்ளனர். (கோப்புப்படம்) அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக விலகியுள்ளன. ஆகஸ்டு 31க்குள் வெளியேற்ற நடவடிக்கைளை முடிக்க வேண்டும் என்று அமெரிக்கா வைத்திருந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. சுமார் 3000 பேர் கொல்லப்பட்ட, செப்டம்பர் 11 தாக்குதல் என்று பரவலாக அறியப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் 2001ஆம் ஆண்டு நடந்த பிறகு அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்…
-
- 1 reply
- 627 views
-
-
ஆப்கானில் இன்று அரசாங்கத்தை அமைக்கவுள்ள தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தலிபான்கள் இன்று நாட்டில் அரசாங்கத்தை அமைக்க உள்ளனர். தலிபான்கள் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்குப் பிறகு அரசாங்கத்தை அமைப்பார்கள் என்று சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 15 அன்று காபூலைக் கைப்பற்றிய பிறகு தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். பல தசாப்த கால போருக்குப் பிறகு நாட்டில் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கான உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வெளியேறிய பிறகு இஸ்லாமிய போராளிக் குழுவினர் தங்கள் வெற்றியை வெளிப்படுத்தினர். இந்த வாரம் அமெரிக்கப் பட…
-
- 2 replies
- 531 views
-
-
இடா சூறாவளி தாக்கத்தால் அமெரிக்காவில் 46 பேர் பலி அமெரிக்காவின் நியூயோர்க், நியூ ஜெர்சி மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் இடா சூறாவளியின் தாக்கத்தல் உண்டான பலத்த மழை வீழ்ச்சி மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். இவற்றில் நியூயோர்க் நகரம் மற்றும் புறநகர் வெஸ்ட்செஸ்டர் பகுதியில் வெள்ள நீரில் சிக்கி 16 பேர் வரை உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் கூறுகின்றனர். நியூஜெர்சியில் குறைந்தது 23 பேர் பலியானதாத மாநில ஆளுனர் பில் மர்பி கூறினார். பென்சில்வேனியாவில் குறைந்தது ஐந்து உயிரிழப்புகளும், கனெக்டிகட் மற்றும் மேரிலாந்தில் தலா ஒவ்வொரு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் …
-
- 0 replies
- 270 views
-
-
தலிபான்களின் புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை: தலிபான் அமைப்பு! ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ள தலிபான்கள், புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிய அரசாங்கத்துடனும், மக்கள் பிரதிநிதிகளுடனும் தலிபான்கள் பேசியதற்கு முரண்பட்டதாக உள்ளது. முன்னதாக, ஜனாதிபதி, பிரதமர் தவிர மற்ற அனைத்துப் பதவிகளிலும் பெண்கள் இருப்பார்கள் என்றும் நிறுவனத் தலைவர்களாக இருக்கலாம் என்றும் அப்போது தலிபன்கள் கூறியிருந்தார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் அமையும் என்று கட்டாரில் உள்ள அந்த அமைப்பின் அரசியல் பிரிவு துணைத் தலைவர் அப்பா…
-
- 0 replies
- 383 views
-
-
காட்டுத் தீயால் கலிபோர்னியாவில் அவசரகால நிலை காட்டுத் தீ காரணமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலிபோர்னியாவில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். அதேநேரம் கலிபோர்னியாவின், கால்டோர் தீயை எதிர்த்துப் போராடுவதற்கு உள்ளூர் பதிலளிப்பவர்களின் முயற்சிகளை அதிகரிக்க கூட்டாட்சி உதவிக்கும் பைடன் உத்தரவிட்டார் என்று வெள்ளை மாளிகை புதன்கிழமை கூறியது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் துயரங்களை போக்கவும் மற்றும் தேவையான அவசர நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கவும் அனைத்து பேரிடர் நிவாரண முயற்சிகளையும் ஒருங்கிணைக்க அங்கீகாரம் அளிக்கிறது. கால்டோர் தீ காரணமாக கலிபோர்னியா மற்றும் நெவாடாவில் உள்ள வீடுகளை விட்டு வெளியேற சுமார் 50,000 பேருக்கு உத்தரவிடப்பட்…
-
- 0 replies
- 428 views
-
-
ஆயுதங்களை ஒப்படைக்குமாறு தலிபான்கள் மக்களுக்கு உத்தரவு (ஏ.என்.ஐ) வாகனங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற அரசு சொத்துக்களை ஒப்படைக்குமாறு பொது மக்களுக்கு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார். இஸ்லாமிய எமிரேட் பாதுகாப்பு அறிவிப்பு: காபூல் நகரில் வாகனங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது பிற அரசு சொத்துகள் வைத்திருக்கும் அனைவரும், அந்த பொருட்களை ஒரு வாரத்திற்குள் இஸ்லாமிய எமிரேட் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறே இந்த உத்தரவு அமைந்திருந்தது. தலிபான்கள் முன்பும் இதே போன்ற உத்தரவுகளை பிறப்பித்தனர். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வைத்திருந்த ஆயுதங்களை ஒ…
-
- 1 reply
- 545 views
-
-
' Mu' என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டை கண்காணித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தகவல் கொலம்பியாவில் ஜனவரி மாதம் அடையாளம் காணப்பட்ட 'mu' எனப்படும் புதிய கொரோனா வைரஸ் வகையை கண்காணிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 'mu' என்பதன் பதம் அறிவியல் ரீதியாக பி.1.621என அறியப்படுகிறது, இந்த மாறுபாடு தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பின் அபாயத்தைக் குறிக்கும் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறி உள்ளது. மேலும் அதை நன்கு புரிந்துகொள்ள மேலதிக ஆய்வுகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது. தொற்று விகிதங்கள் உலகளவில் மீண்டும் அதிகரித்து வருகின்றமையினால் புதிய வைரஸ் பிறழ்வுகள் தோன்றுவதில் அதிகளவான கவலை கொண்டுள்ளதாகவும்உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள…
-
- 0 replies
- 231 views
-
-
சமீப காலமாக அமெரிக்காவின் வெளிநாட்டு இராணுவ ஆக்கிரமிப்புக்கள் படுதோல்வியை சந்தித்து வரும் நிலையில்.. ஆப்கானிஸ்தானில்.... தான் போரிட்ட எதிரியையே இராணுவ நவீன மயப்படுத்தி விட்டு வெளியேறுகிறது அமெரிக்கா. அமெரிக்க இராணுவ வரலாற்றில்.. இது அமெரிக்காவினதும்.. நேட்டோவினதும்.. மிக மோசமான கொள்கை.. மற்றும் இராணுவத் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. தலிபான்களிடம் போயுள்ள.. அமெரிக்க இராணுவ தளபாடங்கள்.. ஆயுதங்கள்.. வாகனங்கள்.. அதி நவீன சாதனங்கள்.. போர் உலங்கு வானூர்திகள்.. விமானங்கள் என்று தலிபான்.. ஒரு முழுமைப்படுத்தப்பட்ட ஆகாயப் படை கொண்ட கடும்போக்கு முஸ்லிம் பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்திருக்கிறது ஆப்கானிஸ்தானில். இதற்கு அமெரிக்கா பல பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய…
-
- 20 replies
- 1.4k views
-
-
சவுதி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் ; 8 பேர் காயம் சவுதி அரேபியாவின் தென்மேற்கு விமான நிலையம் மீது வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந் நாட்டு அரச தொலைக்காட்சிகள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளதுடன், ஒரு சிவில் விமானமும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அபா விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக நடந்த தாக்குதலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. தற்போதைய தாக்குதலுக்கு ஹவுத்தியினர் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த பல மாதங்களாக, சவுதி அரேபியா அண்டை நாடான யேமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பல தாக்குதல்களுக்கு…
-
- 2 replies
- 525 views
-
-
காபூல் விமான நிலையத்தை இலக்கு வைத்த... ஐந்து ரொக்கெட் குண்டுகளையும், இடைமறித்தது அமெரிக்கா! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஐந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதல்களை, அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் முறியடித்துள்ளதாக அவர் மேலும் கூறினார். உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) இந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆனால், இந்த நேரத்தில் உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த ரொக்கெட்டுகளை ஏவியது யார் என்பது தெரியவில்லை என்ற போதிலும், ஐஎஸ்.ஐஎஸ்-கே மூலம் இது ஏவப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார். பெயர் தெ…
-
- 0 replies
- 269 views
-
-
வடகொரியா... தனது யோங்பியோன் அணு உலையை, மீண்டும் தொடங்கியுள்ளது: ஐ.நா. தகவல்! வடகொரியா தனது யோங்பியோன் அணு உலையை மீண்டும் தொடங்கியுள்ளதாக, ஐ.நா. அணு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் புளூட்டோனியம், இந்த அணு உலையின் வளாகத்தில் உற்பத்தி செய்யப்படுவதாக நம்பப்படுகிறது. சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) 2009இல் பியோங்யாங்கால் வெளியேற்றப்பட்டது. ஆனால் மதிப்பீடுகளைச் செய்வதற்கு செயற்கைக்கோள் படங்களை நம்பியுள்ளது. அணு உலை ஜூலை மாதத்திலிருந்து குளிர்ச்சியான நீரை வெளியேற்றுவதாக கண்காணிப்புக் குழு கூறியது. அது செயற்பாட்டைக் குறிக்கிறது. 5 மெகாவாட் உலை கொண்ட அணுசக்தி வளாகமான யோங்பியோன், வட கொரியாவின் அணு திட்டத்தின் …
-
- 0 replies
- 335 views
-
-
20 ஆண்டுகால... இராணுவ நடவடிக்கைக்கு பிறகு, ஆப்கானிலிருந்து பிரித்தானிய படையினர் நாடு திரும்பினர்! ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால நடவடிக்கையை முடித்துக் கொண்டு, அந்த நாட்டிலிருந்து பிரித்தானிய படையினர் முழுமையாக வெளியேறி தாயகம் திரும்பியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்த கடைசி வீரர்களையும் ஏற்றிக் கொண்டு காபூல் விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்ட பிரித்தானியா விமானப் படை விமானம், ஆக்ஸ்ஃபோர்ட்ஷா் நகரிலுள்ள விமானப் படைதளத்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வந்தடைந்தது. இந்த விமானத்தில், ஆப்கானிஸ்தானுக்கான தூதர் சர் லாரி பிரிஸ்டோவும் இருந்தார். இதுகுறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் வெளியிட்டுள்ள காணொளி அறிக்கையில், ‘வாழ்நாளில் இதுவரை காண்டிராத, சிரமம் நிறைந்த வ…
-
- 0 replies
- 249 views
-
-
அமெரிக்காவில் மலைச் சிங்கத்திடம் போராடி குழந்தையைக் காத்த கலிஃபோர்னியா தாய் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மலைச் சிங்கம். (கோப்புப்படம்) தமது ஐந்து வயது மகனைத் தாக்கிய மலைச் சிங்கத்திடம் போராடி குழந்தையை மீட்டுள்ளார் அமெரிக்கத் தாய் ஒருவர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இது நிகழ்ந்துள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேற்கே உள்ள சாண்டா மோனிகா மலைப் பகுதியில் உள்ள கலாபசஸ் எனுமிடத்தில் தமது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அந்த ஐந்து வயது சிறுவனை மலைச் சிங்கம் தாக்கியது. பின்னர் அந்தச் சிறுவனைப் பிடித்து புல்வெளியில் தரத…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
அமெரிக்காவை... புரட்டி போட்ட, ஐடா சூறாவளி: 750,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார தடை! அமெரிக்காவின் லூசியானாவில் ஐடா சூறாவளி தாக்கியதால், 750,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார இணைப்பு தடைப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்கள் மட்டுமே வேலை செய்யும் நிலையில், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரம் இருளில் மூழ்கியுள்ளது. சென்ற வார இறுதியில் மெக்ஸிக்கோ வளைகுடாவில் உருவான ஐடா சூறாவளி அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கரையைக் கடந்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 150MPH (240 கிமீஃமணி) காற்று வீசியது மற்றும் தப்பி ஓடாத மக்கள் அந்த இடத்தில் தங்க வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே பேடன் ரூஜ் பகுதியில், அசென்ஷன் பாரிஷில் உள்ள வீடு மீது மரம் விழுந்ததில் ஒரு…
-
- 0 replies
- 270 views
-
-
காபூல் விமான நிலையத்தை... இலக்கு வைத்த, ஐந்து ரொக்கெட் குண்டுகளையும் இடைமறித்தது அமெரிக்கா! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஐந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதல்களை, அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் முறியடித்துள்ளதாக அவர் மேலும் கூறினார். உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) இந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆனால், இந்த நேரத்தில் உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த ரொக்கெட்டுகளை ஏவியது யார் என்பது தெரியவில்லை என்ற போதிலும், ஐஎஸ்.ஐஎஸ்-கே மூலம் இது ஏவப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார். பெயர் தெ…
-
- 0 replies
- 268 views
-
-
ஜேர்மனியில்... கொவிட் தொற்று பரவல் குறைந்து வருகின்றது! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பரவல் குறைந்துவருவதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி சமீபத்திய நாட்களாக நாளொன்றில் பாத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை சரி பாதியாக குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 642பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 39இலட்சத்து 40ஆயிரத்து 211பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 92ஆயிரத்து 643பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்ப…
-
- 0 replies
- 208 views
-
-
காபூல் விமான நிலையத்தை... கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் தலிபான்கள் காபூலில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர தயாராகி வருவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் தலிபான்களுக்கு எதிராக போர் நடத்தி வந்த நிலையில், தற்போது அங்கிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிவருகிறது. இது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மேலும் ஆயிரம் பேர் காபூல் விமான நிலையத்தில் மீட்கப்படாமல் உள்ளனர் என மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலேயே, காபூல் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர தயாராக…
-
- 0 replies
- 193 views
-
-
காபூலில் இருந்து... மக்களை மீட்கும், பணியின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா காபூலில் இருந்து மக்களை மீட்கும் பணியின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளது. காபூல் விமான நிலையத்திற்குள் அமெரிக்காவால் மீட்கப்பட வேண்டியவர்களில் இறுதியாக 1000 பேர் மட்டுமே உள்ளனர் எனக் கூறப்படுகிறது. இவர்கள் எப்போது அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது முடிவாகாத நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரும் நாடு திரும்ப வேண்டும் என்பதில் ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க துருப்புகளும் படிப்படியாக வெளியேறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. தற்போது 4 ஆயிரத்திற்கும் குறைவான அமெரிக்க படையினர் மட்டுமே காபூல் விமான நிலையத்…
-
- 0 replies
- 161 views
-
-
ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். புள்ளி மீது "ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்ற" அமெரிக்கா பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்கப் படையினர். காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்கள் முன்பு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐஎஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. நங்கஹார் மாகாணத்தில் வைத்து அந்த நபர் தாக்கப்பட்டார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே வியாழக்கிழமை நடந…
-
- 3 replies
- 498 views
-